தரையெங்கும் அவனின் இரத்த காலடி தடங்கள் பதிந்திருக்க, அப்படியே அதை பதித்து சென்றுக்கொண்டிருந்த அவனின் பாதங்களில் சுற்றியிருந்த வெள்ளை பேண்டேஜ் அடியில் மொத்தமும் சிவப்பாய் மாறி, அவனின் ஒவ்வொரு அடியிலும் அவன் பாதத்தை இரத்தமாய் பதிய வைத்தது.
அதை கவனியாமலேயே சாதாரணமாய் அடியெடுத்து வைத்து கிச்சனுக்குள் நுழைந்தான் ருதன். அங்கே அவளுக்காக ஏற்கனவே செய்து வைத்திருந்த சூப்பை அடுப்பில் வைத்து சூடு செய்தவன், எதையோ எடுக்க திரும்ப, சட்டென்று அவன் காலில் ஏதோ சிக்கியது.
அதில் அவன் திடுக்கிட்டு குனிந்து பார்க்க, அவன் பாதத்தில் சுற்றியிருந்த பேண்டேஜ்தான் அங்கிருந்த மேசை இடுக்கில் சிக்கி அவிழ்ந்து வந்திருக்க, அப்போதே அதில் வழிந்துக்கொண்டிருந்த இரத்தத்தை பார்த்து புருவம் குறுகியவன், அப்படியே நிமிர்ந்து வந்த திசையை கவனிக்க, அது மொத்தமும் இரத்த தடங்கள்.
அதில் கடுப்பாய் தன் காலை ஒரு இழு இழுக்க, சிக்கியது விடுப்பட்டு தரையில் பதிந்தது அவன் பாதம். அடுத்த நொடி அவன் காலடியில் பொத்தென்று விழுந்தாள் அவள்.
அதில் அவன் திடுக்கிட்டு பதறி, “டார்லு!” என்று அவளை தூக்க, அப்போதே மெதுவாய் நிமிர்ந்த அவளின் விழியில் விழுந்ததோ அவன் காலடியில் கசிந்துக்கொண்டிருந்த இரத்தம் மட்டுமே.
அதில் அவள் கண்ணாடி பொருட்களை தள்ளிவிட்டு உடைத்து, அதன் மீது அவன் அடியெடுத்து வைத்து தன்னை நெருங்கிய தருணம் கண்முன் வர, இதுவும் தன்னால்தான் என்று அவள் விழிகள் வேதனையில் கலங்கியது.
அதற்குள் அவளை தூக்கி நிறுத்தியவன், “அடி எதுவும் படலல்ல?” என்று அவள் உடலை பதறி ஆராய, அவளோ கண்ணீர் பெருக அவன் கால்களையே பார்த்தாள்.
அதில் அவளின் தோள்களை அழுத்தி பிடித்து தன்னை பார்க்க செய்தவன், “இங்க எதுக்கு வந்த?” என்று அதட்டி கேட்டான்.
அதில் கண்ணீர் பெருக மீண்டும் அவளின் பார்வை அவனின் பாதத்திற்கே செல்ல, அவள் முகவாயை அழுத்தி பிடித்து தன்னை பார்க்க செய்தான். அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, “எதுக்கு ரூம விட்டு வெளிய வந்த?” என்று மேலும் அழுத்தமாய் அத்தனை இறுக்கமாய் கேட்டான்.
அதில் அவளின் கண்கள் மேலும் கலங்க, “உ..உங்க..” என்றபடி அவள் பார்வை கீழே செல்ல, சட்டென்று அழுத்தம் கொடுத்து தன்னை பார்க்க செய்தவன், “இங்க பாத்து பதில் சொல்லு.” என்றான் அழுத்தமாக.
அதில் கலங்கி நின்றவளுக்கோ வார்த்தை தடுமாற, “உ..உங்க கால்ல ப்ளீட் ஆகுது.” என்றாள் கமறிய குரலில்.
அதில் குனிந்து தன் கால்களை பார்த்தவன், அப்படியே கிச்சன் கதவுக்கு வெளியே எட்டி பார்க்க, அதை தாண்டியுமே அவன் இரத்த தடங்கள் இருக்கவும்தான் புரிந்தது. இங்கு மட்டுமல்ல அறையிலிருந்தே இரத்தம் கசிய ஆரம்பித்துள்ளது என்று.
அதில் அவளோ அழவே ஆரம்பித்தபடி அவன் பாதம் நோக்கி குனிய போக, அவளை இழுத்து தூக்கி இரு கன்னங்களையும் பற்றியவன், “இங்க பாரு.” என்று கூற, அவளும் அழுது தேம்பியபடியே நிமிர்ந்து அவன் விழிகளை பார்க்க, “இந்த இரத்தத்துக்கெல்லாம் என் உயிர் போயிராது புரியுதா?” என்றான்.
அதில் திடுக்கிட்ட அவளின் இதயமே ஒரு நொடி நின்று துடிக்க, அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுத்தி துடைத்தபடியே அவள் முகமெங்கும் பார்வையை படரவிட்டவன், “அழும்போதுக்கூட உன்ன கடிக்கணும் போலதான்டி இருக்கு..” என்றபடியே அவளின் இதழ் நெருங்க, சட்டென்று முகத்தை திருப்பினாள் அவள். அவன் காயம் மட்டுமே இப்போது அவள் எண்ணத்திலிருக்க, அவள் கண்ணீர் பெருகியது.
ஆனால் அவள் இதழ் அடையாது அப்படியே நின்றுவிட்டவனின் முகம் கோவத்தில் இறுக, அவள் தாடையை அழுத்தி பிடித்து தன் பக்கம் திருப்பி சட்டென்று அவள் இதழ்களை சிறை செய்தான். அதில் திடுக்கிட்டு அதிர்ந்த அவளின் கலங்கிய விழிகள் விரிய, அவனோ மிக வன்மையாய் ஆழமாய் அவள் இதழ்களை சுவைத்தான். அதில் அவள் அழுகை மொத்தமும் தொண்டைக்குள்ளே இறங்க, அவனின் வேகத்தில் எச்சிலும் சேர்ந்து இறங்க, அழுத்தம் தாங்காமல் திணறி ஏறி இறங்கிய தொண்டை ஒரு கட்டத்தில் குழிய, மெதுவாய் அவள் இதழைவிட்டு பிரிந்தான்.
அதில் அவள் மூச்சு வாங்க நிமிரும் முன் சட்டென்று அவள் பின் தலையில் கரம் பதித்து தன் பக்கம் இழுத்திருந்தான். அதில் அவள் திடுக்கிட்டு அவன் முகமுரச பதற்றமாய் அவன் விழிகளை பார்க்க, அவனுமே அவள் விழிகளை அழுத்தமாய் பார்த்து, “என் பர்மிஷன் இல்லாம வெலகுனா எனக்கு சுத்தமா பிடிக்காது.” என்றான் அழுத்தமாக.
அதில் அவளின் பதற்றம் அதிகரிக்க, படபடவென்று விழித்தபடி அவன் விழிகளையேதான் பார்த்தாள் அவள்.
“இதுதா கடைசியா இருக்கணும். புரியுதா?” என்று அவன் அழுத்தம் கொடுக்க, அந்த அழுத்தத்தில் இவளின் குழிந்த தொண்டையில் எச்சில் தானாய் இறங்க, சட்டென்று அதை பிடித்திருந்தான் அவன்.
அதில் அவள் திடுக்கிட்டு அதிர்வாய் இமை விரிய அவனை பார்க்க, “புரியுதா?” என்றான் மேலும் அழுத்தமாக.
அதில் அவளும் அத்தனை பதற்றமாய் தலையைக்கூட அசைக்க முடியாது, “ப்..புரிஞ்சது.” என்று கூறி முடித்த நொடி சட்டென்று அவள் தொண்டையை விட்டு அவள் இதழ்களை கவ்வியிருந்தான்.
அதில் திடுக்கிட்டு அதிர்ந்தவளின் இதயம் அத்தனை பலமாய் துடிக்க, அவனோ இம்முறை மிக மென்மையாகதான் அவளிதழை கையாண்டான். அதில் மெல்ல அவள் இதயம் சீராகி மார்ப்பை குறுக்கி விழிகளை மூட, இதழ்கள் மெல்ல அவனுடன் ஒத்துழைத்தது. அவனோ அதே மென்மையில் அவளிதழின் ஆழத்தை தொட, இவள் கால் விரல்கள் கூசியெழுந்து குறுகியது.
அதில் அவளின் விரல்களோ அவன் சட்டை நுனியை இறுக்கி பிடிக்க, அவன் விரல்களோ அவளின் சட்டை நுனியை தாண்டி உள்ளே நுழைந்தது.
அதில் அவள் கூச்சமாய் அவனுள்ளே புகுந்து குறுக, அவளின் தொடை வழியே மெதுவாய் நுழைந்த அவன் கரம் அவள் பின்னழகை அடைய, அதில் இவள் திடுக்கிட்டு விலக முயல, அதற்குள் அவ்விடத்தை இறுக்கி பிடித்தது அவன் கரம். அதில் அவளோ பெரும் அதிர்வாய் அகல விழி விரிக்க, சட்டென்று அவளை தூக்கி அந்த மேசையில் அமர வைத்திருந்தான் அவன்.
அதில் அவள் திடுக்கிட்டு தடுமாறி அவன் மீதே சாய, அவள் சட்டைக்குள்ளே அவள் வெற்றிடையை வளைத்து தன்னுடன் சேர்த்து பிடித்தவன், மெதுவாய் அவள் இதழைவிட்டு பிரிந்தான்.
அதில் மூச்சு வாங்க குனிந்து தன் இடையை பார்க்க முயன்றவளை இழுத்து பிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அவன் ஈரமிட்ட கன்னத்தில் இப்போது மீசையால் கோலமிட்டபடி மெல்லிய குரலில், “உனக்கு பசிக்கலையா?” என்று கேட்டான்.
அதில் அவள் இமைகள் படபடவென்று விழிக்க, அவள் இதழில் மெல்லியதாய் முத்தமிட்டு திரும்பினான். அதில் அவள் திடுக்கிட்டு இறங்கும் முன் அவள் இடையை அழுத்தி பிடித்தது அவன் கரம். அப்போதே அவன் கரம் இன்னும் அவள் சட்டைக்குள்தான் வளைந்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு அவள் குனியும் முன் சூடான ஆவி அவள் முகத்தில் படர்ந்தது.
அதில் அவள் மெதுவாய் நிமிர, அவள் முன் சூப்பை நீட்டியிருந்தது அவன் கரம். அதை பார்த்தவளின் முகம் சுழிய, அதன் வாசனை மூக்கில் ஏறவும் அவளுக்கு குமட்டிக்கொண்டு வர, உடனே அதை விலக்கிவிட்டு அவள் இதழில் இதழ் பதித்தான் அவன். அதில் அவள் திடுக்கிட்டு அவன் விழிகளை பார்க்க, அவனோ மிக மெல்லியதாய் விலகி, “அதையே யோசிக்காத.” என்றான் மெல்லிய குரலில்.
அவள் எங்கே யோசித்தாள். உணவு வாடைக்கு தானாய் குமட்ட, இவனோ மெதுவாய் விலகி மீண்டும் அந்த ஸ்பூனை எடுத்து மெதுவாய் ஊதியபடி மீண்டும் நீட்டினான். அதில் அவளுக்கோ மீண்டும் குமட்டிக்கொண்டு வர, சட்டென்று விலக்கி அதை அவன் குடித்திருந்தான். அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அடுத்த நொடியே அவள் இதழோடு இதழ் புகுத்தி, அந்த சூப்பை அவள் வாயுக்குள் திணித்தான்.
அதில் திடுக்கிட்டு அதிர்ந்தவளின் தொண்டையில் அது சூடாய் இறங்க, அந்த தொண்டையில் ஈரத்தை பதித்தது அவன் இதழ்கள். அதன் பிறகே அவை இதமாய் உள்ளிறங்க, அவளோ மெதுவாய் விழி மூடினாள்.
அதில் அடுத்த கரண்டியை அவன் ஊதியபடி நீட்ட, அவள் திடுக்கிட்டு விழிக்கும் முன் அவள் இதழுள் புகுத்தியிருந்தான். அதில் திடுக்கிட்டு அது வேகமாய் வெளியில் வர போக, அதற்குள் அவள் இதழோடு இதழ் மூடி அதை உள்ளே இறங்க வைத்தது அவன் இதழ்கள்.
அதில் சட்டென்று புறையேறி இருமல் வர, அவள் நெஞ்சை அழுத்தி தேய்த்துவிட்டான் அவன். அதில் அப்படியே புறை இறங்கிவிட, அவள் குமட்டலும் நின்றது.
அதில் அவள் புரியாது விழிக்க, அவனோ மெல்லியதாய் புன்னகைத்து, “இதுல Cumin powder போட்டிருக்கேன். இனி வாமிட் நின்னுரும்.” என்று கூற, அவளோ வியப்பாய் அவனையே பார்த்தாள். தன் உடல்நிலைக்காக மிரட்டி சாப்பிட வைக்கும் அன்பை அம்மாவிடம்கூட உணர்ந்திருக்கிறாள். ஆனால் உடல்நிலையை தாண்டி தன் அசவுகரியத்தையும் சரி செய்யும் ஒரு அதீத அன்பை இன்றே முதன் முதலில் உணர்கிறாள்.
அதிலும் தனக்காக அவன் இதழ்கள் குவிந்து ஊதும் அந்த அழகில் அவள் இமைகளுமே மூட மறுக்க, அடுத்த வாயை அவன் நீட்டவும் தானாய் பிரிந்தது அவளின் இதழ்கள்.
அவ்விதழில் கரண்டியை நுழைத்து சூப்பை ஊட்டியவன், அடுத்தடுத்து அவளுக்கு ஊட்ட, அவளின் இதழ்களுமே மெதுவாய் பிரிந்து வாங்கி சமத்தாய் குடித்தது.
பிறகு முழுவதுமாய் ஊட்டி முடித்து அவள் வாயை டிஷூவால் துடைத்துவிட்டவன், “பெட்டர்?” என்று புருவத்தை நெளித்து கேட்க, அவளும் மெல்ல தலையசைத்தாள்.
அதில் மெல்லியதாய் புன்னகைத்து அவள் கழுத்து நெற்றி என்று தொட்டு பார்த்தான். இப்போது சுத்தமாக காய்ச்சல் இல்லை. சற்று முன் காற்றோட்டமாய் உறங்கியதிலேயே அவள் காய்ச்சல் இறங்கியிருக்க, “தப்பிச்சுட்டான்.” என்றான் ருதன்.
அதில் அவள் புரியாது அவனை பார்க்க, “அந்த டாக்டர்தா.” என்றபடி சாதாரணமாய் தண்ணீரை புகட்டினான். அதில் அவள் இதழோரம் மெல்லியதாய் வளைந்து மறைய, அந்த தண்ணீரை மெல்ல பருகினாள்.
குடித்துவிட்டு அவள் இதழை விலக்கி போதும் என்றதும், க்ளாஸை கீழே வைத்தவன், அவள் கீழ் இதழ் குழியில் வழிந்து வந்த நீர் துளியை கட்டை விரலால் அழுத்தி துடைக்க, அந்த சிறு தீண்டலிலும் அவள் உடலெங்கும் இதமாய் சிலிர்க்க விழி மூடினாள்.
அப்போது அந்த இதழை அவன் விரல்கள் அழுத்தி பிடிக்க, அதில் அவள் விழிகள் திறக்க, அதற்கு மெல்லியதாய் ஒரு முத்தம் வைத்தான் ருதன். அதில் அழகாய் புன்னகைக்க முயன்ற அவளிதழை அவன் பிடித்திருக்க, அவள் இமை குடைகள் வெட்க புன்னகையாய் தாழ்ந்தது.
“ஓய்!” என்றவனின் குரல் மிக அருகில் கேட்கவும் மெதுவாய் இமைகளை நிமிர்த்த, அத்தனை அருகில் இருந்தது அவனின் இரசனை விழிகள்.
அதில் அவள் திடுக்கிட்டு தடுமாறி பின்னால் சாய போக, அதற்குள் அவளிதழில் பதிந்து விலகியது அவன் இதழ்கள். அதில் அவள் கரத்தை ஊன்றி நிதானிக்க, வளைந்த அவள் தேகத்தில் படர்வாய் நெருங்கியவனின் நாசி அவளின் மார்பில் புதைய வர, பொத்தென்று பின்னால் சாய போனவளின் பின்னிடையை வளைத்து இழுத்து பற்றினான் அவன்.
அதில் அவன் கையில் அவள் வில்லாய் வளைந்து விட, அவள் நிமிர முயலும் முன் அவளின் மார்புக்குழியில் உரசியது அவன் நாசி. அதில் அவள் திடுக்கிட்டு மார்பை குறுக்க, அங்கே பட்டும்படாமல் பூட்டியிருந்த பட்டன் அவன் நாசியுரசலில் விடுப்பட்டு திறந்தது.
அதில் அவன் மீசை முழுதாய் அங்கே படர, அந்த மார்போடு அவள் உடலும் சேர்ந்தே குறுகியது. அதில் வாகாய் அவன் இதழ்கள் அவள் மார்பு சட்டைக்குள் பயணிக்க, அவளோ முழுதாய் கூச்சத்தில் குறுகி அவன் பின் சிகைக்குள் விரல்களை நுழைத்து பிடித்தாள்.
அதில் அங்கிருந்த காயம் அவனுக்கு சுள்ளென்று வலிக்க, வலியில் அவள் மார்பை கடித்து வைத்தான் அவன். அதில் அவள் முகம் சுணங்கும் முன்பே, அவன் நாவு அதற்கு மருந்தாகியிருக்க, அந்த குளிர்ச்சியில் குழைவாய் நெளிந்தவளின் தேகம் அவன் கரத்திலிருந்து நழுவி மேசையில் விழுந்தது. அதில் அவனுமே அவள் மீது முழுதாய் படர, அவள் அங்கத்தை ஈரம் செய்தபடியே அங்கிருந்த பட்டன்களை ஒவ்வொன்றாய் கடித்து கழற்றியது அவன் இதழ்கள். அதில் மெதுவாய் பட்டு பட்டு கரைந்த அவனின் இதழ் ஈரத்தில் ஒவ்வொரு முறையும் சிலிர்த்து நெளிந்தவளின் ஒரு கரம் எதையாவது இறுக்கி பிடிக்க பிடிமானம் தேட, மெதுவாய் அவள் விரல்களுள் நுழைந்தது அவன் விரல்கள்.
அதில் இறுக்கி பிடிக்க வந்தவளின் கரம் மெதுவாய் தளர்ந்து அவன் விரல்களுள் புகுந்துவிட, அவளின் மறு கர விரல்களோ அவன் பின்சிசைக்குள் மெதுவாய் ஊர்ந்து பிடிக்க, அதில் மேலும் மோகமேறி அவள் திறந்த அங்கங்களுள் புகுந்தது அவன் இதழ்கள்.
அதில் கூச்சமாய் குறுகியவளின் இரு மார்புக்கு நடுவே அவன் நாசி அழுந்த உரச, அவள் கரம் அவன் பின்சட்டை காலரை இறுக்கி பிடித்து நெளிய, அதில் வளைந்து வழுக்கியபடி வந்து அவள் மணி வயிற்றில் படர்ந்திருந்தது அவனின் இதழ்கள். அதில் அவன் தாடியும் முகமும் சேர்ந்து புதைய, அதில் வேகமாய் அவனை விலக்கிவிட்டு எழ முயன்றாள். அதற்குள் அவள் வெற்று வயிற்றில் அழுத்தி கரத்தை பதித்து மீண்டும் படுக்க வைத்தவன், மெதுவாய் அவள் முகம் நெருங்கி அத்தனை அழுத்தமாய் அவள் விழி பார்த்தபடியே அவள் இதழை கவ்வ வர, சட்டென்று அவன் வாயில் கரத்தை பதித்து தடுத்தாள்.
அதில் அவன் கோபம் தாறுமாறாய் ஏற அவன் விழிகள் அனலானது. அதில் அவளின் விழிகளோ கலங்கி நிற்க, “இது எந்த மாதிரி உறவு?” என்று கேட்டாள் அவள்.
அதில் சட்டென்று அவன் புருவங்கள் விரிய, இவளோ கண்ணீருடன் அவன் பதிலை எதிர்பார்த்தாள்.
இதற்கு முன்புக்கூட இவனின் மோகத்தை மட்டுமே கண்டிருந்தவள், அவனை ஒரு காம கொடூரன் என்றுதான் நினைத்தாள். ஆனால் இப்போது அவன் காட்டும் அக்கறை, அன்பு, தனக்கான தவிப்பு, பதறல் என்று அனைத்தையுமே பார்த்துவிட்ட பிறகு அந்த எண்ணம் பொய்யாகியிருக்க, இப்போது இவனின் இந்த அத்து மீறலிலும் அதிகாரத்திலுமே மோகத்தையும் தாண்டி வேறு ஒன்றை உணர்ந்தாள். ஆனால் அதற்கான பெயரை அவனிடமே எதிர்பார்த்தது அவள் மனது.
– நொடிகள் தொடரும்…