Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 24

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 24

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 24 

அர்ஜுன் ஆடையின்றி கீழே விழுந்து கிடந்த ‌ தேன்மொழியை தூக்கி தன் தோள்களில் போட்டுக் கொண்டு  எழுந்து நின்றான். 

அதனால் பயந்து போன தேன்மொழி அவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்று நினைத்து “ஆஆஆஆ.. என்ன விடுங்க..!!” என்று சத்தமாக அலறினாள்.  

அவளை அப்படியே தூக்கி கட்டிலில் பொத்தென்று போட்ட அர்ஜுன் தனது கோட் கசங்கி விடக் கூடாது என்பதற்காக அதை கழட்டி சைடில் இருந்த ஹேங்கரில் மாட்டிவிட்டு டோரை லாக் செய்தான். 

உடனே பயத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்ட தேன்மொழி ‌ அங்கே மெத்தையில் கிடந்த போர்வை ஒன்றை எடுத்து அவசர அவசரமாக தன்‌ மீது சுற்றிக் கொண்டு,

“ஒழுங்கா இங்க இருந்து வெளிய போயிடுங்க. 

இல்லனா சத்தம் போட்டு நான் யாரையாவது வர சொல்லுவேன். 

நீங்க எவ்ளோ பெரிய ஆளு…

நீங்க இங்க உள்ள இருக்கும்போது நான் ஹெல்ப் ஹெல்ப்ன்னு சத்தமா கத்துனா வெளிய இருக்கிற உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு பாருங்க..!!”  என்று உடல் பயத்தில் நடுங்க திக்கி திணறி சொன்னாள். ‌

வேண்டுமென்றே தனது சட்டையின் முதல் இரண்டு பட்டன்களை கழட்டிய அர்ஜுன் அவளை நோக்கி சென்றவாறு, 

“என்ன பாத்தா உனக்கு அதை எல்லாம் நினைச்சு ஃபீல் பண்ற ஆள் மாதிரியா தெரியுது?

உனக்கு இன்னும் என்ன பத்தி சரியா தெரியல ஹனி பேபி!” என்று சொல்லிவிட்டு லேசாக புன்னகைத்தான். 

அவனது புன்னகை முகம் அத்தனை வசீகரமாக இருந்தது. ஆனால் பாவம் அவள் தான் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. 

தன் மீது கிடந்த போர்வையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருந்த தேன்மொழி,

“சிவனேனு தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்த அப்பாவி பொண்ணை இந்தியாவுல இருந்து கடத்திக் கொண்டு வந்து  உன் ஃபேமிலில இருக்கிறவங்க ‌உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டானுங்க. 

இதுல எனக்கு எப்படி யா உன்ன பத்தி தெரியும்? 

ரெண்டு நாளா அந்த சியாவை கொன்ன மாதிரி நீ என்னையும் கொன்னுடுவியோனு நெனச்சு நான் பயந்து செத்துகிட்டு இருந்தேன். 

இப்ப நீ பண்ற வேலையை எல்லாம் பார்த்தா.. இதுக்கு நீ என்ன கொன்னு போட்டுட்டாலே பரவாயில்லைன்னு தோணுது. 

ஏன்யா இப்படி பண்ணி தொலையுற? 

நீங்க எல்லாரும் குடும்பமா சேர்ந்து விளையாடுவதற்கு உங்களுக்கு என் லைஃப் தான் கிடைச்சுதா? 

நான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் என்ன பாவம் பண்ணேன்?” என்று தன் மனதிற்குள் அவனிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள். 

அவனது ஒற்றை செயலில் அவளுடைய கோபத்தில் வந்த திடீர் தைரியம் எல்லாம் காற்றோடு காற்றாக கற்பூரமாய் எப்போதே கரைந்து போயிருக்க, 

இப்போது அவன் மீது இருந்த பயத்தில் அவளுக்கு அவனிடம் பேச வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வர மறுத்தது.  

அர்ஜுன் கட்டிலில் ஏறி முட்டி போட்டு மெல்ல அவளை நோக்கி செல்ல, 

அவள் இன்னும் அந்த போர்வையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, 

“ப்ளீஸ் என் கிட்ட வராதீங்க..!!‌ ஒழுங்கா எந்திரிச்சு வெளிய போயிடுங்க!

நீங்க என் பக்கத்துல வந்தா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று வார்த்தைகள் தந்தி அடிக்க பயத்தில் உளறினாள் அவள்.

“எனக்கும் என்னென்னமோ பண்ணனும்னு தான் தோணுது. 

பட் இப்ப ஃபர்ஸ்ட் ‌என்ன பண்றதுன்னு தான் தெரியல.

சோ அப்படியே நம்ம ஃப்லோல போலாம்..

நடுவுல என்னென்ன பண்ணனும்னு தோணுதோ அதை எல்லாம் அப்படியே பண்ணிக்கலாம்..!!” 

என்ற அர்ஜுன்  அவள் போர்த்திக் கொண்டு இருந்த போர்வையை ‌ பிடித்து இழுத்தான். 

ஆடைகள் இன்றி அதற்குள் தஞ்சம் புகுந்திருந்த தேன்மொழி, “ஐயோ விடுங்க..

இத பிடிச்சு எதுக்கு இழுக்கறீங்க இப்ப? 

நான் இன்னும் டிரஸ் பண்ணல. இது மட்டும் தான் இருக்கு..

ப்ளீஸ் விட்ருங்க..!!” என்று கண்ணீருடன் கெஞ்ச, 

“அதான் தெரியுமே.. 

நமக்கு தான் மேரேஜ் ஆயிடுச்சில்ல.. உனக்கு டவுட்டா இருந்தா உன் கழுத்துல தொங்குற தாலியை பாரு…

Married couplesக்குள்ள இப்படி நடக்கிறது எல்லாம் யூசுவல் தான். 

உனக்கு இதெல்லாம் ஃபர்ஸ்ட் டைம் நடக்குதுன்னு நினைக்கிறேன். 

அதான் உனக்கு ஒண்ணுமே தெரியல..

பட் எனக்கு இதுல எக்ஸ்பீரியன்ஸ் அதிகம். 

சோ நீ ஒன்னும் கவலைப்படாத பேபி. நான் உனக்கு எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக் கொடுக்கிறேன்.”  

என்ற அர்ஜுன் அவள் போர்த்தி இருந்த போர்வைக்குள் புகுந்துக் கொண்டு மெல்ல அவள் அருகில் சென்று அவளை தனது கை வளைவிற்குள் கொண்டு வந்து அணைத்துக் கொண்டு படுத்தான். 

அவளது சிறிய உடல் அவனுடைய ஆறரை அடி இரும்பு தேகத்திற்குள் மாட்டிக் கொண்டு அசய முடியாமல் கிடந்தது.  

பிறந்த மேனியாக இருக்கும் தேன்மொழியின் உடலின் மீது எந்த தடைகளும் இன்றி நேரடியாக அவனுடைய விரல்கள் பட, 

அவன் சொன்னதைப் போலவே முதல் முறையாக தன் வாழ்வில் இப்படியான அனுபவங்களை அனுபவிக்கும் தேன்மொழி‌ தனது உடல் முழுவதும் எதோ மின்சாரம் பாய்வதைப் போல உணர்ந்தாள்.

பயத்தில் ஏற்பட்ட நடுக்கத்தையும் தாண்டி அந்த பூரிப்பில் அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.‌

அவளது இதயம் வேறு ஒரு பக்கம் ராக்கெட் வேகத்தில் துடித்துக் கொண்டு இருக்க, 

தன்னால் என்ன செய்தும் இவனிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று மட்டும் அவளுக்கு நன்றாக தெரிந்தது.

அதனால் தன் கண்களை இறுக்கமாக மூடிக்‌ கொண்ட தேன்மொழி அட்லீஸ்ட் அவனை அசைய விடாமல் இருக்க ஏதாவது செய்யலாம் என்று நினைத்து அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். 

தன்னை ஆடை இன்றி அவன் அப்படி பார்ப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. 

அவள் சொல்லாமலேயே அவனுக்கும் அது புரிந்தது. அதனால் தானும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு தன் கண்களை மூடினான் அர்ஜுன். 

அப்படியே சில நொடிகள் கிடைக்க, அவன் தன்னை எதுவும் செய்யாததால் நிம்மதி பெருமூச்சு விட்ட தேன்மொழி 

“கொஞ்சம் கூட அசையாம என்ன இவர் இப்படியே படுத்திருக்காரு..

ஒருவேளை மறுபடியும் ‌கோமாவுக்கு போயிட்டாரா?  

ஐயையோ அப்படி ஏதாவது நடந்தா அதுக்கு நான் தான் காரணம்னு நெனச்சுக்கிட்டு இவர் ஃபேமிலில இருக்கிறவங்க என்ன சும்மா விட மாட்டாங்களே..!!” என்று நினைத்து பயந்து மெல்லிய குரலில், 

“நீங்க.. நீங்க தூங்குறீங்களா?” என்று கேட்டாள். 

“ரெண்டு வருஷமா ஒரே இடத்துல படுத்து தூங்கிட்டு தானே டி இருந்தேன்.. 

மறுபடியும் அவ்வளவு சீக்கிரம்லாம் தூங்க மாட்டேன். 

என்ன தூங்க வைக்காம இருக்கிற அளவுக்கு என்ன சுத்தி நிறைய நடந்திருக்கு. 

அது எல்லாத்தையும் சரி பண்ற வரைக்கும் இந்த அர்ஜுனுக்கு தூக்கம் வராது.” என்று அவனும் மென்மையான குரலில் பதில் சொன்னான். 

இப்போது அவனை தலையணை போல அனைத்து கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்து படுத்திருந்ததாலோ என்னவோ அவளால் அவன் குரலை மிக அருகில் தெளிவாக கேட்க முடிந்தது. 

அத்தனை மென்மையாக இருந்த அவனுடைய வசீகர குரல் தேன் அருவியாய் அவள் காதுகளில் பாய, அதில் கொஞ்சம் மெய் மறந்த தேன்மொழி 

“இவர் பாக்குறதுக்கு மட்டும் இல்ல.. பேசினா கூட நல்லா தான் இருக்கு. 

யப்பாபா.. என்ன வாய்ஸ் இது..!! 

இப்படி ஒரு வாய்ஸை நான் என் லைஃப்ல கேட்டதே இல்ல.. 

இவர் பேசுறத கேட்டாலே மனசுக்குள்ள என்னமோ பண்ணுது.” என்று நினைத்து அவன் மீது இருந்த பயத்தை எல்லாம் மறந்துவிட்டு அவனது வசீகர தோற்றத்தை பற்றியும், 

ஆண்மை நிறைந்த அவனது கட்டுடலை பற்றியும், காந்த குரலை பற்றியும், அவனது உடலில் இருந்து வரும் வித்தியாசமான பர்ஃப்ஃபியும் ஸ்மில் பற்றியும் யோசிக்க தொடங்கி விட்டாள். 

என்ன இருந்தாலும் அவளும் ஒரு பெண் தானே..

இப்படி ஆளை மயக்கும் ஆண் மகன்.. அதுவும் அவளது கணவன் என்னும் அதிகாரத்துடன் இருப்பவன் அவளை இந்த மாதிரி ஒரு கோலத்தில் அணைத்துக் கொண்டு படித்திருந்தால், 

அவளால் எப்படி டிஸ்டர்ப் ஆகாமல் இருக்க முடியும்? 

அதனால் அவளது மூளை “இந்த கோபம், பயம் இதெல்லாம் வேற டிபார்ட்மெண்ட். 

ஆசை, காதல், காமம் இதெல்லாம் வேற டிபார்ட்மெண்ட். ரெண்டுக்கும் சம்பந்தம் இல்ல.” என்று நினைத்து மெல்ல அவளை அவன் பக்கம் சாய அனுமதித்தது.

தேன்மொழியின் கூந்தலை மெதுவாக வருடிய அர்ஜுன், 

“I am sorry.” என்று சொல்ல, அதுவரை மூடி இருந்த தனது கண்களை திறந்து குறுகுறுவென்று அவன் முகத்தைப் பார்த்த தேன்மொழி

“இப்ப எதுக்கு சாரி கேக்குறீங்க?” என்று எதுவும் புரியாமல் கேட்டாள். 

“எல்லாத்துக்கும் தான். தெரிஞ்சோ தெரியாமலோ என்னால நீ நிறைய கஷ்டப்பட்டுட்ட. 

பட் ஐ ப்ராமிஸ் யூ, நான் இருந்தாலும் இல்லைன்னாலும் ‌இனிமே உனக்கு எந்த கஷ்டமும் வராம பத்திரமா பாத்துக்குவேன். 

உனக்கு விருப்பம் இல்லாம இங்க நிறைய நடந்துருச்சு. 

அது எதையும் என்னால மாத்த முடியாது. 

But I swear, இந்த செகண்ட்ல இருந்து உனக்கு பிடிக்காத மாதிரி எதுவும் நடக்காது. 

நான் நடக்கவும் விட மாட்டேன். 

நீ எப்படி இருக்கணும்னு ஆசைப்படுறியோ அதே மாதிரி இங்க நீ ஃப்ரீயா ஹேப்பியா இருக்கலாம்.

உனக்கு என்ன வேணும்னாலும் என்‌ கிட்ட கேளு. 

அது எதுவா இருந்தாலும் கண்டிப்பா உனக்காக செய்வேன்.” என்று அர்ஜுன் மனதார சொல்ல, 

பேசுவது அவன் தானா என்று நம்ப முடியாமல் அவனையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டு இருந்த தேன் மொழியின் மூளை,

“ஏய் தேனு.. இது தாண்டி உனக்கு நல்ல சான்ஸ். 

இதை யூஸ் பண்ணி உனக்கு என்ன வேணுமோ கேட்டுரு. 

இவரை மாதிரி பெரிய மனுஷங்க எல்லாம் யாருக்காவது வாக்கு கொடுத்தா அந்த காப்பாத்துறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்கன்னு படத்துல எல்லாம் வரும்ல..

நீ ட்ரை பண்ணி பாரு..

சீக்கிரம் ஏதாவது கேளு..!!” என்று அவளை ஏற்றி விட, 

உடனே தனது ஒட்டுமொத்த தைரியத்தையும் திரட்டி, “எனக்கு ஒன்னே ஒன்னு தான் வேணும். 

நான் அதைக் கேட்டா குடுப்பீங்களா?” என்று அவனிடம் கேட்டாள். 

“என்னால கொடுக்க முடியாததுன்னு இந்த வேர்ல்ட்ல எதுவுமே இல்ல டி. 

நீ உனக்கு என்ன வேணுமோ கேளு. 

அது எதுவா இருந்தாலும், எங்க இருந்தாலும் நான் அதை கொண்டு வந்து உன் கிட்ட சேர்ப்பேன்.” என்ற அர்ஜுன் அவளது நெற்றியில் முத்தமிட, 

திக் திக் இதயத்துடன் “நான் எனக்கு என்ன வேணும்னு கேட்டதுக்கு அப்புறம் நீங்க பேச்சு மாற மாட்டீங்களே..!!” என்று கேட்டாள் அவள். 

“ச்ச்.. என்ன பாத்தா உனக்கு அப்படி ஏமாத்துற ஆள் மாதிரியா தெரியுது? 

அதான் சொல்றேன் இல்ல எதுவா இருந்தாலும் குடுப்பேன்னு.. 

நீ முதல்ல உனக்கு என்ன வேணும்னு கேளு..!! 

என்னால அதை கொடுக்க முடியுமா முடியாதா என்று அப்புறம் பாத்துக்கலாம்.” என்று அவன் கொஞ்சம் கடுப்பாகி சொல்ல, 

ஒரே மூச்சில் அவசரமான குரலில், 

“எனக்கு தேவைப்படுறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான்.. 

என் ஃப்ரீடம். இங்க இந்த பேலஸ்குள்ள கைதி மாதிரி இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல. 

நான் மறுபடியும் என் வீட்டுக்கு போகணும். 

என் ஃபேமிலில இருக்கிறவங்கள பாக்கணும். 

பாவம் அவங்க இத்தனை மாசமா என்ன காணோம்னு எப்படி எல்லாம் தவிச்சு போயிருப்பாங்களோ தெரியல.. 

நான் உயிரோட தான் இருக்கேன். நல்லா இருக்கேன்னு அவங்க கிட்ட சொல்லணும். 

மொத்தத்துல எனக்கு இங்க இருக்கவே புடிக்கல‌‌.

நீங்க எனக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நினைச்சீங்கன்னா, ப்ளீஸ் என்ன இங்க இருந்து அனுப்பி வச்சிடுங்க. 

மறுபடியும் நான் இந்தியாவுக்கு போய் என் ஃபேமிலி கூட சந்தோஷமா வாழனும். 

இது மட்டும் தான் என் ஆசை.” என்று கண்கள் கலங்க சொன்னாள். 

அதுவரை சாந்தமான முகத்துடன் இருந்த அர்ஜுன் அவள் பேசியதை கேட்டவுடன் ஆங்கிரி மோடிற்க்கு மாறினான். 

‌- மீண்டும் வருவாள்.. ❤️

You may also like

Leave a Comment

About Me

Featured