Chapter_49

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
“உனக்கு புடிச்ச கேமை விளையாடலாம். Let's play!” என்று ஹஸ்கி வாய்ஸில் சொல்லிவிட்டு ஷங்கரை பார்த்து கண்ணடித்த யாழினி அவள் அணிந்திருந்த துண்டை கழட்ட போக, அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்த சங்கர் “என்ன பத்தி என்ன டி நினைச்சுட்டு இருக்க நீ? நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன பண்ணிட்டு இருக்க...‌?? நீ பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு, உன் உடம்பைக் காட்டி என்னை கன்வின்ஸ் பண்ணிடலாம்னு நினைக்கிறியா? ஆமா டி... இதுக்கு முன்னாடி உன்னை பார்க்கும்போது எல்லாம் நான் செக்ஸ்க்கு அலைஞ்சவன் தான். அத நான் இல்லைன்னு சொல்லல.

நான் தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி மேல ஆசைப்படுறதுல ஒன்னும் தப்பு இல்லையே.. அதுக்காக நான் வெறும் செக்ஸ்காக மட்டும் தான் உன் கூட இருக்கேன்னு நெனச்சியா? என் மனசுல உன்ன எங்க வச்சிருந்தேன் தெரியுமா டி? உனக்காக நான் செத்துப் போற சூழ்நிலை வந்திருந்தா கூட, சந்தோஷமா நான் செத்துருப்பேன் டி. ஆனா நீ என் கிட்ட பொய் சொல்லி என்னை ஏமாத்தி நான் உயிரோட இருக்கும்போதே என்னையும் என் லவ்வையும் நீ கொன்னுட்டல... முதல்ல லவ்னா என்னனு தெரியுமா உனக்கு? நான் ஒரு பைத்தியக்காரன் டி. நீ என்ன வந்து லவ் பண்றேன்னு சொன்ன உடனே நான் அதை அப்படியே உண்மைன்னு நம்பிட்டேன். இவ நெஜமா தான் சொல்றாளா? இவளுக்கும் நமக்கும் செட் ஆகுமா ஆகாதான்னு நான் யோசிச்சிருக்கணும். ‌ தப்பு பண்ணிட்டேன்.. அப்பவே யோசிக்காம தப்பு பண்ணிட்டேன்.. இது எல்லாமே என் தப்பு தான். என் தப்புதான்..!!” என்று சொல்லிவிட்டு அழுத ஷங்கர் தன் தலையில் தானே அடித்துக் கொண்டான்.



அந்த காட்சியை எல்லாம் பார்த்து அதிர்ந்து சங்கர் தன்னை அடித்ததால் மீரண்டு போய் நின்றிருந்தாள் யாழினி. இதற்கு முன் அவன் எத்தனையோ முறை அவளை கட்டிலில் மோசமாக கையாண்டு வதைத்திருக்கிறான். அது அவன் தன் மீது கொண்ட அதீத காதலின் விளைவால் ஏற்பட்ட காமத்தின் உணர்ச்சி மிகுதி என்று நினைத்து என்றும் யாழினி அதை பர்சனனாக எடுத்துக் கொண்டது இல்லை. ஆனால் இன்று அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் அத்தனை வெறுப்பு தெரிகிறது. முதல் முறையாக இத்தனை வருடத்தில் அவளை அவன் அடித்திருக்கிறான். இதையெல்லாம் உடனே நம்ப அவளுக்கு சிரமமாக இருந்தது.



அதேசமயம் தரையில் அமர்ந்து அப்படி அவன் தலையில் அடித்துக் கொண்டு அழுவதை காணவும் அவளுக்கு கஷ்டமாக இருக்க, அவன் அடித்ததில் கீழே கழண்டு விழுந்த தனது துண்டை எடுத்து கட்டிலின் மீது தூக்கி போட்டுவிட்டு அவள் கைக்கு கிடைத்த ஏதோ ஒரு ஆடையை எடுத்து அணிந்து கொண்டு கலங்கிய கண்களுடன் அவன் அருகில் சென்று தரையில் அமர்ந்த யாழினி “இப்ப என்ன டா பிரச்சனை உனக்கு? நீ ஏதோ ஒரு விஷயத்துல என் மேல கோவமா இருக்கேன்னு மட்டும் எனக்கு புரியுது. ஆனா அது ஏன்னு தான் எனக்கு புரியல. நீ என்ன அடிச்சதுக்கு நான் தான் இப்படி கதறி கதறி அழுகணும்‌.

என்ன அடிச்சிட்டு இப்ப நீ எதுக்கு டா அழுகிற? ஐயோ ‌தயவு செஞ்சு அழுகாத ப்ளீஸ்.. என்ன பிரச்சனைன்னு சொல்லித்தொலை. நீ எதுவும் சொல்லாம என்னை திட்டிக்கிட்டே இருந்தா எனக்கு எப்படி புரியும்?” என்று கேட்டுவிட்டு அழுதாள்.



அதனால் வந்த கோபத்தில் எழுந்து நின்ற ஷங்கர் “இப்ப என்ன.. நான் எதுக்கு அழுகுறேன்னு உனக்கு தெரியனுமா? என் வாழ்க்கை உன்னால நாசமா போயிடுச்சேன்னு நெனச்சு அழுகுறேண்டி. உன்னை எதுக்கு கல்யாணம் பண்ணி தொலஞ்சேனு நினைச்சு அழுகுறேண்டி. என் குழந்தையை காப்பாத்த முடியாத கையாலாகாத அப்பனா இருந்துட்டனேன்னு நினைச்சு செத்துப்போன என் குழந்தைக்காக அழுகிறேன் டி.” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தி சொல்லிவிட்டு மெத்தைக்கு அடியில் அவன் மறைத்து வைத்திருந்த யாழினியின் பிரக்னன்சி ஸ்கேன் ரிப்போர்ட்டை அவள் முகத்தில் வீசி அடித்தான்.



நடுங்கிய கைகளுடனும், கலங்கிய கண்களுடனும் அதை எடுத்து பார்த்த யாழினிக்கு இப்போது தான் உண்மையான பிரச்சனை என்னவென்றே புரிந்தது. இதில் தன் மீதுதான் தவறு இருக்கிறது என்பதால் அவன் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது என்று நினைத்த யாழினி அந்த ரிப்போர்ட்டை தூக்கி எறிந்துவிட்டு “ப்ளீஸ்.. எனக்கு நடந்ததை எக்ஸ்பிளைன் பண்றதுக்கு கொஞ்சம் டைம் குடு சங்கர். நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. நாம் எனக்கே தெரியாம ஒரு நாள் டேப்லட் சாப்பிடாம இருந்துட்டேன். ஒரு நாள்ல பேபி form ஆயிடப்போகுதுன்னு நினைச்சிட்டேன். கடைசில எனக்கே தெரியாம பிரக்னன்ட் ஆகிட்டேன். அப்போ எனக்கு அதை எப்படி ஹாணடில் பண்றதுன்னே தெரியல.

இத பத்தி நான் உன் கிட்ட சொன்னா, இப்ப எப்படி ரியாக்ட் பன்றியோ அதே மாதிரி தான் அன்னைக்கும் ரியாக்ட் பண்ணி இருப்ப‌. இந்த குழந்தை நமக்கு வேணும்னு நீ என்னை கன்வின்ஸ் பண்ணத்தான் பார்த்திருப்ப. கடைசி வரைக்கும் என் மைண்ட் செட் என்னன்னு நீ புரிஞ்சுக்க கொஞ்சம் கூட try பண்ணி இருக்க மாட்ட. அதான் வேற வழி இல்லாம உனக்கு பண்ண பிராமிசையும் மீறி நான் பிரக்னன்ட் ஆன விஷயத்தை யார் கிட்டயும் சொல்லாம நானே ஹாஸ்பிடல் போய் அபார்ஷன் பண்ணிட்டு வந்துட்டேன். அத பண்ணும்போது எனக்கும் கஷ்டமா தான் இருந்துச்சு.

ஆனா எனக்கு வேற வழி தெரியல. இப்ப என்னால ஒரு குழந்தைக்கு அம்மா ஆகுறத பத்தி எல்லாம் யோசிக்கவே முடியல சங்கர். நான் மென்டலி அதுக்கு ரெடியா இல்ல. இந்த டைம்ல என்ன குழந்தை பெத்துக்கோ பெத்துக்கோன்னு சொன்னா, என்னால எப்படி பெத்துக்க முடியும்? அப்படியே பெத்துக்கிட்டாலும் அதை நல்லபடியா வளர்த்த முடியுமா? அதான் எல்லாருக்கும் இதுதான் நல்லதுன்னு நெனச்சு அபார்ஷன் பண்ணிட்டேன். அந்த ரிப்போர்ட்டை டிஸ்போஸ் பண்ணாம விட்டது தான் நான் பண்ண தப்பு.” என்று சொல்லிவிட்டு கீழே கிடந்த ரிப்போர்ட்டை எடுத்து கிழிக்க தொடங்கினாள்.



அவள் தனது குழந்தையின் உருவம் இருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை கூட விட்டு வைக்காமல் கிழித்துப் போடுவதைக் கண்டு அவனுக்கு கோபம் பற்றிக் கொண்டு வர, வேகமாக அவள் அருகில் சென்று அந்த ரிப்போர்ட்டை பிடுங்கிய சங்கர் மீண்டும் பளார் என்று அவள் கன்னத்தில் ஒரு அரை விட்டு “இப்ப கூட நீ பண்ண தப்பு என்னன்னு உனக்கு புரியலல்ல? என் குழந்தையோட ஞாபகமா இந்த ஸ்கேன் ரிப்போர்ட் ஒன்னு தான் இருந்துச்சு. அதான் நான் அத பத்திரமா எடுத்து வச்சிருந்தேன். என் குழந்தையை தான் பெத்துக்க மனசு வராம கொன்னுட்ட.. இப்ப இதையும் எதுக்குடி கிழிக்கிற? ச்சீ.. எப்படி ஒரு பொண்ணால இவ்ளோ செல்ஃபிஸ்ஷா இருக்க முடியுதுன்னே எனக்கு தெரியல. உனக்கு என் கூட வாழ்றது அவ்ளோ கஷ்டமா இருந்துச்சுன்னா இப்படி ஏதாவது பண்ணி கொஞ்சம் கொஞ்சமா என்னை கொல்லுறதுக்கு பதிலா, நீயே விஷம் வச்சு ஒரேடியா கொன்று. நான் சந்தோஷமா செத்து என் குழந்தை கிட்டயே போயிடுறேன். எனக்கு உன் மூஞ்சிய பாத்தாலே எரிச்சலா இருக்கு யாழினி.” என்று கோபத்தில் சிவந்து இறுக்கிப்போன முகத்துடன் தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னான் சங்கர்.



அதுவரை அவனது எமோசனை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்து தனது தப்பை சரி செய்ய ஏதாவது செய்ய முடியுமா? என்ற எண்ணத்தில் அவனிடம் பேசிக் கொண்டு இருந்த யாழினி இப்போது “நீ மட்டும் என்ன பத்தி யோசிக்கிறியா சங்கர்? நான் குழந்தை பெத்துக்கணுமா வேண்டாமான்னு அதை கஷ்டப்பட்டு வலியை தாங்கி பெத்துக்க போற நான் தான் முடிவு பண்ணனும். நான் இப்ப அது எனக்கு வேண்டாம்னு நினைச்சு அபார்ட் பண்ணது தப்புன்னா, உன் ஆசைக்காக நீ குழந்தை வேணும்னு என் கிட்ட கேட்டுகிட்டே இருந்ததும் தப்புதான். இது கூட எனக்கு உன் selfishnessஆ தான் தெரியுது. நீ மட்டும் ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காத. உனக்கு எப்பயுமே உன்னை நல்லவனா காமிக்க ஆப்போசிட்ல இருக்குறவங்கள குறை சொல்லி அவங்க கிட்ட தப்பு கண்டுபிடிச்சு கெட்டவங்களா காமிக்கணும். இப்போ உனக்கு ஒரு ரீசன் கிடைச்சிருச்சு. சோ நீ அதை பிடிச்சுக்கிட்டு என்ன ஒரு கொலைகாரி ரேஞ்சுக்கு frame பண்ண பாக்குறல்ல? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல சங்கர்.” என்று யாழினி கோபமாக சொல்ல, “நான் உனக்கு selfishஆ இருக்கிற மாதிரி தெரியுதா? அப்படி இருந்திருந்தா உன்னை மகாராணி மாதிரி இந்த வீட்ல ஒக்கார வச்சு உனக்கு வேணுங்கறது எல்லாத்தையும் செஞ்சு கொடுத்து குழந்தை மாதிரி உன்னை தாங்கு தாங்குன்னு தாங்கி பார்த்துகிட்டு இருந்திருப்பனா டி?

எந்த விதத்திலயாவது நான் உனக்கு குறை வச்சிருக்கேனா? சொல்லு.. வாயை திறந்து சொல்லு. ஆனா நீ என்னைக்காவது எனக்கு பொண்டாட்டி மாதிரியும், இது உன் வீடுன்னு நினைச்சு இந்த வீட்டுக்காக ஏதாவது ஒரு வேலை செஞ்சிருப்பியா? அட்லீஸ்ட் வீடு வாங்கணும்னு யோசிக்கிறதை தவிர வேற எதைப்பற்றியாவது யோசிச்சிருக்கியா நீ?” என்று பதிலுக்கு அவனும் கோபமாக கேட்டான்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter_49
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.