Chapter-8

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
விடியற்காலையில் ஸ்வாத்திக்கும், தினேஷுக்கும் திருமணம் என்ற நிலையில் அவனைக் காண சுவாதி ஆசை ஆசையாக அவனது ரூமிற்கு செல்ல, முகத்தில் ஃபேஸ் பேக் போட்டிருந்த தினேஷ் துளியும் அங்கே அவளை அப்போது எதிர்பார்த்து இருக்கவில்லை. அவன் கோபமாக “நீ எதுக்கு இங்க வந்த?” என்று கேட்க, தன் மனதில் இருப்பதை எல்லாம் அவனிடம் கொட்டி தீர்த்த சுவாதி “உங்களுக்கு என் மேல லவ் இருக்கா இல்லையா தினேஷ்?” என்று சோகமாக கேட்டுவிட்டு கண் கலங்கினாள்.



அதனால் அவனுக்கும் கஷ்டமாகி போய்விட, உடனே சென்று தன் முகத்தில் இருந்த ஃபேஸ் மாஸ்கை கழுவி விட்டு வந்து அவள் தோள்களைப் பற்றி “அட.. இதுக்கெல்லாம் ஏண்டி அழுகிற? நம்ம ரெண்டு பேரும் சும்மா நின்னு பேசிட்டு இருந்ததை பார்த்ததுக்கே அந்த பாட்டி என்ன பேசினாங்கன்னு உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல! இதனால எனக்கு ஒன்னும் ஆய்டாது சுவாதி. இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துல உனக்கும் எனக்கும் மேரேஜ் ஆயிடும். நீ என் வைஃப்.

இந்த நேரத்துல நீ இப்படி இங்க தனியா வந்துட்டு போறதை யாராவது பார்த்தா உன்னை என்ன நினைப்பாங்க சொல்லு? நான் அதை யோசித்து தான் இந்த நேரத்துல நீ எதுக்கு இங்க வந்தேன்னு கேட்டேன். அதுக்காக எனக்கு உன் மேல லவ் இருக்கா இல்லையா என்ற அளவுக்கு நீ ஏண்டி யோசிக்கிற? உன்ன எனக்கு பிடிக்கலன்னா உன் மேல லவ் இல்லனா நான் எதுக்கு உன்னை மேரேஜ் பண்ணிக்கணும்? ஏன் எனக்கு வேற எந்த பொண்ணும் கிடைக்க மாட்டாளா?” என்று மென் குரலில் கேட்டான்.



தன் கண்ணீரை துடைத்து விட்டு அவனை பாவமாக பார்த்த சுவாதி “இல்லங்க எப்பவுமே நான் தான் உங்ககிட்ட பேசணும், டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு யோசிக்கிற மாதிரி இருக்கு. நானே வந்து பேசினாலும் நீங்க என் கிட்ட சம்டைம்ஸ் சரியா பேச மாட்டேங்கறீங்க. சோ எனக்கு ஒருவேளை நீங்க என்ன அவாய்ட் பண்றிங்களோனு ஃபீல் ஆகும். நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க? சங்கர் யாழினி மாதிரி நீங்களும் நானும் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டா, எனக்கு இந்த மாதிரி டவுட்ஸ் எல்லாம் வந்திருக்காது. இது அரேஞ்ச் மேரேஜ் தானே! அதான் நீங்க சின்னதா எது பண்ணாலும், எனக்கு ரொம்ப யோசிக்க தோணுது.” என்று சொல்லிவிட்டு தலை குனிந்தாள்.



அவள் தாடயை பிடித்து அவளது தலையை மேலே உயர்த்திய தினேஷ், “உனக்கு இப்படி ஒரு தாட் வர்றத்துக்கு நானும் கூட ஒரு ரீசனா இருக்கலாம் சுவாதி. எனக்கு மத்தவங்கள மாதிரி மனசுக்குள்ள இருக்கிற எல்லாத்தையும் வெளிய பெருசா எக்ஸ்பிரஸ் பண்ண பிடிக்காது. பட் நான் இப்ப சொல்றத நல்லா உன் மைண்ட்ல ஏத்திக்கோ..!!

எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீ என் கிட்ட தானே ஒர்க் பண்ற! நான் உன் பக்கத்துலயே இருந்து உன்ன பார்த்திருக்கேன். எனக்கு தெரியாதா உன்ன பத்தி? எங்க வீட்ல திடீர்னு உன் போட்டோவ காட்டி இந்த பொண்ண உனக்கு பார்த்திருக்கோன்னு சொல்லும்போது, எனக்கு ஃபர்ஸட் ஷாக்கிங்கா தான் இருந்துச்சு. இருந்தாலும் எனக்கு உன்னை அப்பவே புடிச்சிருந்தது. அதான் யோசிக்காம உடனே ஓகே சொல்லிட்டேன். But அதுவரைக்குமே நீ என் ரிலேட்டிவ் பொண்ணுன்னு எனக்கு தெரியாது. இப்போ நீ என் வைஃப் ஆக போற ஸ்வாதி. உன் மேல எனக்கு எப்படி பீலிங்ஸ் இல்லாம இருக்கும்? நமக்கு மேரேஜ் ஆனதுக்கப்புறம், நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்கு புரியும். இப்ப போய் எதை பத்தியும் யோசிக்காம, முக்கியமா என்ன சந்தேகப்படாம கம்முனு தூங்கு டி. ஏன்னா, நாளைக்கு நைட் எல்லாம் உனக்கு தூங்குறதுக்கு டைமே இருக்காது.” என்று சொல்லிவிட்டு குறும்பாக சிரித்தான் தனேஷ்.



“இவர் ஃபர்ஸ்ட் நைட்ட பத்தி தான் சொல்றாரா?” என்று நினைக்கும் போதே சுவாதிக்கு உள்ளுக்குள் குறுகுறுவென்று இருக்க, அவனைப் பார்த்து வெட்கத்துடன் அழகாக புன்னகைத்தவள், சட்டென அவனை கட்டிப்பிடித்து “ஐ லவ் யூ தினேஷ்.” என்றாள். தானும் அவளை அணைத்து கொண்ட தினேஷ் “ஐ லவ் யூ டூ பேபி.” என்று காதலுடன் சொல்ல, அவனது நெருக்கம் அவளை ஏதேதோ செய்தது. அதனால் கூச்சத்தில் சட்டென அவனை விட்டு விலகிய சுவாதி “ஓகே நான் போய் தூங்குறேன், பாய் குட் நைட்.” என்று சொல்லிவிட்டு வேகமாக அவன் அறை கதவை திறந்து வெளியேறினாள்.



புதிதாக பூத்த மலர் போல அவளது இதழ்கள் புன்னகையால் பூத்துக் குலுங்க, “அத்தான் வருவாக! ஒரு முத்தம் தருவாக!” என்ற பாடலை லேசாக முனுமுனுத்தபடி தனது ரூமை நோக்கி நடக்க தொடங்கினாள் சுவாதி. அப்போது ஒருவரை ஒருவர் அணைத்தவாறு யாழினியும் ஷங்கரும் படிகளில் ஏறி செல்வது அவள் கண்களில் பட்டது. அதனால் “இவங்களுக்கு தான் தனி ரூம் இருக்கே! அப்புறம் இந்த டைம்ல இவங்க ரெண்டு பேரும் எதுக்கு மொட்டை மாடிக்கு போறாங்க? ஒருவேளை நமக்கே தெரியாம நம்ம மேரேஜ்க்கு ஏதாவது சப்ரைஸ் பிளான் பண்றாங்களா? என்னன்னு போய் பார்ப்போம்.” என்று நினைத்த சுவாதி அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து சத்தம் எழுப்பாமல் மொட்டை மாடிக்கு சென்றாள்.



அவர்கள் இருவரும் மேலே சென்று விட, மறைந்து படிகளின் அருகே நின்று கொண்ட சுவாதி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க தொடங்கினாள். “டேய்.. மிட் நைட்ல பேய் வர்ற டைம்ல ஏன் டா இப்படி எல்லாம் தூங்குறவளை எழுப்பி கூட்டிட்டு வந்து கொடுமைப் படுத்துற? காலைல இருந்து ட்ராவல் பண்ணி அலைஞ்சிட்டு இருந்தது எனக்கு டயர்ட்ல எவ்வளவு தூக்கம் வருது தெரியுமா? என்னை தூங்க விடாம இப்ப இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த? இன்னும் கொஞ்ச நேரத்துல சுவாதிக்கு மேரேஜ் டா. தூங்க கிடைச்சதே ரெண்டு மணி நேரம் டைம் தான். அதுலயும் இப்படி பண்ணா எப்படி? என்னை விடு, நான் கீழ போறேன்.” என்று யாழினி அரைத் தூக்கத்தில் உலர, “ஏய் லூசு இந்த மாதிரி சீனை எல்லாம் நம்ம இதுக்கப்புறம் பார்க்கணும்னு ஆசைப்பட்டாலும் சென்னைக்கு எல்லாம் போய்ட்டா பார்க்க முடியாது டி. அங்க பாரு!” என்ற சங்கர் வானத்தில் அழகாக ஜொலித்து கொண்டிருந்த பௌர்ணமி நிலவை காட்டினான்.



முதலில் அதை சாதாரணமாக பார்த்த யாழினி “ஆமா நான் பிறந்ததில இருந்து நிலாவயே பார்த்தது இல்லை பாரு! ஏன் டா அர்த்த ராத்திரியில தூங்குறவள எழுப்பி கூட்டிட்டு வந்து கடுப்பேத்துற இப்படி?” என்று எரிச்சலுடன் கேட்க, விளையாட்டாக அவள் மண்டையில் கொட்டிய சங்கர் “எருமை நல்லா பாரு. நீ டெய்லியும் பார்க்கிற சாதாரண நிலா இல்ல இது. இன்னைக்கு blue moon day. யூசுவலா இருக்கிறதை விட இன்னைக்கு மூனோட சைஸ் பெருசா இருக்கு பாரு. நம்ம அப்பார்ட்மெண்ட் டெரஸ்ல எப்ப போனாலும் எவனாவது நாலஞ்சு பேர் சேர்ந்து குடிச்சுக்கிட்டே இருப்பானுங்க.

அங்க எல்லாம் உன்ன கூட்டிட்டு போய் உன் கூட சேர்ந்து இந்த மாதிரி நிலாவ பார்த்து என்ஜாய் பண்ண முடியுமா? அதான் நியூஸ்ல இன்னைக்கு ப்ளூ மூன் வருதுன்னு சொன்ன உடனே அத எப்படியாவது உன் கூட சேர்ந்து பார்த்திடனும்னு உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். இதையெல்லாம் ரசிச்சு பார்த்து பழகு டி. Natureஐ புருஷனோட ரசிக்க தெரியல, நீ எல்லாம் என்ன டி பொண்ணு?” என்று கேட்டான்.



அதனால் அவனுக்காக யாழினி ஆசையாக அந்த நிலாவை பார்க்க, அவளுக்கு இப்போது அந்த காட்சி ரம்யமானதாக இருந்தது. அதனால் அவனது தோள்களில் சாய்ந்து கொண்டு அண்ணாந்து வானத்தை பார்த்த யாழினி “ஆமா, இது கூட நல்லா தான் இருக்கு இல்ல! ஆனா என்ன.. இங்க ரொம்ப குளிருது.” என்று சொல்ல, தான் அணிந்திருந்த ஜாக்கெட்டை அவள் மீது போர்த்தி தன்னுடன் சேர்த்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட சங்கர் “இப்ப குளுராது.” என்று காதலுடன் அவளை பார்த்து சொன்னான். பின் அவர்கள் இருவரும் சேர்ந்து நிலவை கண்டு ரசிக்க தொடங்கினார்கள்.



அந்த அழகிய காதல் காட்சியை தூரத்தில் மறைந்து இருந்து பார்த்துக் கொண்டு இருந்த சுவாதி “சங்கர் சொன்னதும் கரெக்ட் தானே! நேச்சர கூட ரசிக்க முடியாத வாழ்க்கை எல்லாம் என்ன வாழ்க்கை? வாவ்.. இவங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்கவே நல்லா இருக்கு. சங்கர் மாதிரி ஒருத்தர் ஹஸ்பண்டா கிடைக்குறதுக்கு யாழினி போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் பண்ணி இருப்பா போல! இதே மாதிரி இங்க நானும் தினேஷும் இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?

ஆனா அவர் இப்படி எல்லாம் என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவாரான்னு தெரியவில்லையே..!! இப்ப கூட அவர் ரூமுக்கு அவர பாக்க நான் எவ்ளோ ஆசையா போனேன்.. என்ன கோபப்பட்டு முதல்ல போக சொன்னாலும், அப்புறம் கடைசியில் என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்திட்டாரு. இருந்தாலும், இவங்க ரெண்டு பேருக்குள்ளயும் இருக்கிற ஏதோ ஒரு ஸ்ட்ராங்கான பாண்ட் எங்களுக்குள்ள இருக்கிற மாதிரி தெரியலையே! நானா தான் அவரை ஹக் பண்ணி லவ் யூ சொன்னேன். அதுக்கு பதிலுக்கு அவர் லவ் யூ டூ சொன்னாரு. ஏன் அவருக்கா இந்த மாதிரி எல்லாம் தோன மாட்டேங்குது? என்னமோ எனக்கு ஒன்னும் புரியல.” என்று யோசித்துக் கொண்டு இருக்க, சுற்றி முற்றி பார்த்த சங்கர் அங்கே யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, யாழினியை தூக்கி அங்கே இருந்த கைப்பிடி சுவற்றில் அமர வைத்து அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்து உணர்ச்சிகள் பொங்க முத்தமிட தொடங்கினான்.

- தொடரும்...

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-8
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.