Chapter-54

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
ஆனால் இப்போது அந்த அழகிய தருணம் அந்த அனைப்பை மேலும் சுகமானதாக்க, அப்போது அவர்கள் இருவரும் தங்களைப் பற்றி யோசிக்க தொடங்கினார்கள். அவர்கள் இருவருக்குமே இந்த நொடி இப்படியே நீண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவனது முரட்டு கைகளுக்கு நடுவில் தன் உடலை குறுக்கிக் கொண்டு இருந்த சுவாதி அத்தனை நெருக்கத்தில் அவன் முகத்தை பார்த்தாள். அவளது ஈர இதழ்கள் அவனிடம் தன் மனதில் இருக்கும் காதலை சொல்ல துடித்துக் கொண்டிருந்தது. அந்த சிரிய ஸ்ட்ராபெர்ரி இதழ்களை பார்த்தவுடன் அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. உடனே தனது இதழ்களால் அவளது இதழ்களை மூடினான் சங்கர்.



அதனால் ஆச்சரியம் பொங்க முதலில் விழிகள் விரிய அவனைப் பார்த்த சுவாதிக்கு கண்கள் கலங்கியது. என்னவோ அவளது பல வருட கனவு இன்று நிஜமானதை போல அவளுக்குள் ஒரு உணர்வு ஏற்பட, முதலில் அதை ஆரம்பித்தது அவனாக இருந்தாலும், ஆர்வ மிகுதியில் உணர்ச்சி பொங்க அவனை முத்தமிட தொடங்கினாள் சுவாதி. அவள் காட்டிய வேகத்திலேயே இந்த தருணத்திற்காக அவள் எத்தனை நாட்கள் காத்திருந்தாளோ என்று நினைத்த சங்கர் அவள் ஆசை தீர அள்ளி அள்ளி தன் இதழ் தேனே அவளுக்கு பரிசாக கொடுத்து, அவளுடையதை அவனும் பருகி இன்புற்றான்.



அப்படி அவர்கள் இருவரும் அந்த எல்லையில்லா பேரின்பத்தில் இன்பத்தில் மிதந்து கொண்டு இருக்க, ஷங்கருக்கு வந்த தொலைபேசி அழைப்பு அவர்கள் இருவரையும் பிரித்தது. சட்டென அவளை விட்டு விலகிய சங்கர் மூச்சு வாங்க அந்த காலை அட்டென்ட் செய்து பேசினான். அவன் புக் செய்து இருந்த கால் டாக்ஸி டிரைவர் தான் அவனுக்கு அங்கே வந்துவிட்டதாக சொல்லி கால் செய்திருந்தார். அதனால் அவர் சொன்ன லொகேஷனுக்கு ஸ்வாதியின் கையை பிடித்து அணைத்துக் கொண்டு சென்றான் ஷங்கர்.




பதட்டத்தில் தன் தலையை குனிந்து கொண்ட சுவாதி, “ஐயோ ஸ்வாதி.. என்ன டி திடீர்னு இப்படி நடந்துருச்சு? அப்ப அவனுக்கும் உன்னை பிடிச்சிருக்கா? இது ரொம்ப பெரிய விஷயம். இது உனக்கு கிடைச்சிருக்கிற லாஸ்ட் சான்ஸ். அவனே உன் கிட்ட வந்தும், நீ இப்பயும் மத்தவங்கள பத்தி யோசிச்சு இதை மிஸ் பண்ணிட்டினா உன்னை விட முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க.

என்னைக்கும் சங்கரோட உண்மையான பாசம் யாழினிக்கு புரியாது. அவளால இவன் சந்தோஷமாகவும் இருக்க முடியாது. எப்படியும் தினேஷ் உன் லைஃப்ல இல்லைன்னு ஆயிடுச்சு. உன் குழந்தைக்கு ஒரு நல்ல அப்பா வேணும். சங்கரால மட்டும் தான் அது முடியும். அவன் மட்டும் எனக்கு கிடைச்சுட்டா, கடவுள் நீ கேட்ட கேட்ட வரத்தை கொடுத்துட்டாருன்னு நெனச்சு அவன அவன் கூட சந்தோஷமா இரு.” என்று நினைத்து கண் கலங்க அவனுடன் சென்றாள்.



அவர்கள் இருவரும் காருக்குள் சென்று அமர்ந்தார்கள். சுவாதியின் முகத்தை பார்க்கவே சங்கடமாக உணர்ந்த சங்கர் தன் தலையை கீழே குனிந்து கொள்ள, அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சுவாதி. இதுவரை இதுதான் இன்பம் என்று அவள் எதையெதையோ நினைத்திருக்கிறாள். இப்போது அவள் மனதில் அவனுக்காக இருக்கும் காதல் இப்படி அவன் அருகில் அமர்ந்து அவன் முகத்தை பார்க்கும் போது கூட, இந்த வாழ்க்கை முழுவதும் இந்த இன்பம் போதும் என்று அவளை நினைக்க வைத்து எல்லையற்ற ஆனந்தத்திற்குள் அவளை மூழ்கடித்தது. உண்மையான காதல் என்றால் எப்படி இருக்கும் என்று அந்த நொடி உணர்ந்த சுவாதிக்கு என்ன ஆனாலும் இனி ஷங்கரை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்று தோன்றியது.



“டேய் என்ன டா பண்ணிட்டு இருக்க நீ? அவ குளிருதுன்னு சொன்னா, உடனே அவளை கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துடுவியா நீ? அப்போ அந்த அளவுக்கு உனக்கு அவளை புடிச்சிருக்கா? நீ அதுக்குள்ள யாழினிய மறந்துட்டியா? அது சரி, நான் போன்னு சொன்ன உடனே என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி மும்பைக்கு கிளம்பி போய் இப்ப வரைக்கும் ஒரு கால் கூட பண்ணாம இருக்கிற அவளை பத்தி யோசிக்க என்ன இருக்கு?

இப்ப எனக்கு யாழினி வேணுமா வேணாமான்றது கேள்வி இல்ல. அவ மொத்தமா ஆல்ரெடி என் லைஃபை விட்டு போயிட்டா. இனிமே அவளைப் பத்தி நான் எனக்கு யோசிக்கணும்? ஆனா சுவாதி.. அவ கூட இருக்கும் போது தான், அந்த வீடு வீடா மாறின மாதிரி இருந்துச்சு. இந்த ஒன்றரை மாசம், அவளும் நானும் என்னவா வாழ்ந்தோம்ன்னு எனக்கு தெரியல. ஆனா இந்த வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கு. இத்தனை வருஷமா நான் யாழினி கூட வாழ்ந்த அந்த வாழ்க்கையில என்ன இல்லையோ அது எல்லாமே சவாதி கூட வாழ்ந்த கொஞ்ச நாள்ல எனக்கு கிடைச்ச மாதிரி இருக்கு. இத்தனைக்கும் எங்களுக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லை. ரொமான்ஸ் இல்ல. ஆனாலும், என்னமோ எப்பயும் எனக்காக அவளும் அவளுக்காக நானும் இருக்கிற மாதிரி ஒரு ஃபீல் மட்டும் இருந்துச்சு. இப்பயும் இருக்கு. நெஜமாவே சுவாதி என் லைஃப்ல வந்த மேஜிக் தான்.” என்று அவளைப் பற்றி தன் மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தான் ஷங்கர். அவளுடன் இருக்கும் போது, அவன் அம்மாவின் ஞாபகம் அவனுக்கு அடிக்கடி வந்தது.



அப்போதும் அதை நேரடியாக அவளிடம் சொல்லவோ, அவள் முகத்தைப் பார்த்து பேசவோ அவனுக்கு தைரியம் வரவில்லை. இப்படியே அவர்களுக்குள் பலத்த அமைதி நிலவ, அவர்களது கேப் அவர்கள் தங்கி இரக்கும் அப்பார்ட்மெண்ட் வாசலில் சென்று நின்றது. ஸ்வாதியுடன் தனது வீட்டிற்கு சென்றான் சங்கர். அவன் அவளிடம் பேசாமல் நேராக அவனது ரூமை நோக்கி செல்ல, “இன்னைக்கு நீ இத இப்படியே விட்டுட்டா உங்களுக்குள்ள இருக்கிற கேப் எப்பயும் சரியாகது சுவாத்தி. ஏற்கனவே அவன் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வச்சுக்கிட்டான். இப்போ இத நெக்ஸ்ட் ஸ்டெப்புக்கு கொண்டு போறது உன் கையில தான் இருக்கு.” என்று நினைத்த சுவாதி அவன் கையைப் பிடித்து தடுத்தாள்.



அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று நினைத்து பயந்த சங்கர் திக் திக் இதயத்துடன் அவளை திரும்பிப் பார்க்க, இனி தான் ஒரு நொடி கூட அவனை விட்டு பிரிந்து இருக்க விரும்பவில்லை என்று சொல்லாமல் சொல்வதைப்போல உடனே அவன் அருகில் சென்று அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் சுவாதி. அவள் கண்களில் இருந்து அறிவிப்போல கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது. அதை உணர்ந்த சங்கர் தானும் அவளை அணைத்துக் கொண்டு “இப்ப எதுக்கு டி அழுகிற? நான் ஏதோ ஒரு வேகத்துல அப்படி பண்ணிட்டேன்.‌ அது உனக்கு தப்புன்னு தோணுச்சுன்னா சொல்லுரு. இனிமே நான் என் லிமிட்ல இருந்துக்கிறேன். அதுக்காக இப்டி அழுகாத ப்ளீஸ். எனக்கு கஷ்டமா இருக்கு.” என்று உடைந்த குரலில் சொன்னான்.



உடனே அவனை விட்டு விலகி அவன் கண்களை காதலுடன் பார்த்த சுவாதி “சேச்சே.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல. இத்தனை வருஷம் கழிச்சு இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல நான் உன் கிட்ட இந்த உண்மைய சொல்லுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல சங்கர். ஆனா இப்ப விட்டுட்டா எப்பயும் என்னால இத சொல்ல முடியாம போயிடுமோன்னு பயமா இருக்கு. நான் உன்னை ஃபர்ஸ்ட் டே காலேஜ்ல மீட் பண்ணும் போதே, நீ எனக்காக யாழினி கூட சேர்ந்து என்ன கிண்டல் பண்ணுவாங்க கூட எல்லாம் சண்டை போட்டியே..

அந்த செகண்ட்டே நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஆனா அப்ப அதை உன் கிட்ட சொல்றதுக்கு எனக்கு தைரியம் வரல. உனக்கு தான் என்ன பத்தி தெரியுமே... எங்க வீட்ல கூண்டுக்குள்ள கிழிய வெச்சு வளர்க்கிற மாதிரி என்ன பொத்தி பொத்தி வளர்த்துட்டாங்க. எனக்கு அந்த வயசுல லவ் பண்ண தெரிந்தாலும், அத உடனே சொல்லணும்.. அடுத்த ஸ்டேஜ்க்கு எல்லாத்தையும் கொண்டு போகனும்ன்னு யோசிக்கிற அளவுக்கு எல்லாம் அறிவில்ல. அதான் எனக்கு முன்னாடி யாழினி முந்திக்கிட்டா.
அதுக்கப்புறம் உங்களுக்கு நடுவுல என்னைக்கும் நான் வந்துட கூடாதுன்னு நினைச்சு ‌ நான் என் மனச மாத்திக்கிட்டேன். நீயும் யாழினியும் என் கண்ணு முன்னாடியே சந்தோஷமா இருக்கிறதை பார்க்க எனக்கு கஷ்டமா இருந்தாலும், நீ நல்லா இருந்தா போதும்னு நினைச்சு நான் உனக்காக சந்தோஷப்பட்டேன். அப்புறம் நீங்க மேரேஜ் பண்ணி செட்டில் ஆயிட்டீங்க. நானும் எல்லாத்தையும் மறந்துட்டேன். தினேஷை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு எங்க வீட்ல கேட்டாங்க.

அவனும் நம்ம ஆபீஸ்ல தானே வேலை பார்க்கிறான்.. அப்போ அவன் கிட்ட எந்த தப்பும் இருக்கிற மாதிரி எனக்கு தோணல. அதனால நான் ஓகே சொல்லிட்டேன். என் ஃபர்ஸ்ட் லவ் பெயிலியர் ஆனதனால, கல்யாணம் பண்ண போறவனையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டு உண்மையா வந்துசோ இல்லையோ அவன் மேல நான் பாசம் வச்சு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா என்னைக்குமே மனசார நான் திருப்தியா தினேஷ் கூட வாழ்ந்ததில்லை. இப்ப மறுபடியும் முதல்ல இருந்து எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்றதுக்கு சான்ஸ் கிடைச்ச மாதிரி இருக்கு. ‌

இப்பயும் உனக்கும் யாழினிக்கும் நடுவுல நான் வந்து நிக்கணும்னு நினைக்கல சங்கர். ஆனா இத என்னால சொல்லாம இருக்க முடியல. என் மனசார நான் உன்ன லவ் பண்றேன். உன் கூட நான் இருந்த இந்த 45, 50 daysல தான் என் டோட்டல் லைஃப்லையும் சந்தோஷமா இருந்ததைவிட அதிகமா ரொம்ப சந்தோஷமா இருந்தேன். எனக்கு இந்த வாழ்க்கை முழுக்க உன் கூட இதே மாதிரி சந்தோஷமா வாழனும்னு ஆசையா இருக்கு.” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் தனது இதழ்களால் அவளது இதழ்களை மீண்டும் சிறை செய்தான் சங்கர்.


ஒரு நீண்ட இதழ் முத்தத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் பிரிய, மூச்சு வாங்க தன் முன்னே நின்று கொண்டு இருந்த சுவாதியை அனைத்தவாறு “ரொம்ப நேரம் ஈரத்தில இருந்தா சளி பிடிச்சுக்கும். சீக்கிரம் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு தலை துவட்டு.” என்று சங்கர் சொல்ல, அவன் கன்னத்தில் கை வைத்து ஆசையுடன் அவனைப் பார்த்த சுவாதி “நீ வீட்ல இருக்கும்போது நான் எந்த வேலையும் செய்யக் கூடாதுன்னு நீதானே சொன்ன.. இப்ப மட்டும் எதுக்கு என்ன வேலை செய்ய சொல்ற?

உனக்கு என் மேல அவ்ளோ அக்கறை இருந்தா எல்லாத்தையும் நீயே பண்ணு. அண்ட் டாக்டர் நம்ம லாஸ்ட்டா செக்கப் போகும்போது டெலிவரி டைம்ல குழந்தை ஈசியா வெளிய வர்றதுக்கு உன்ன எனக்கு ஹெல்ப் பண்ண சொன்னாங்களே.. ஞாபகம் இருக்கா..?? உனக்கு எனக்கு ஹெல்ப் பண்ற ஐடியா இருக்கா இல்லையா?” என்று கேட்டுவிட்டு கண்ணடித்தாள்.‌ அவளது முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.


அதனால் குறும்பாக சிரித்த சங்கர் “ஹெல்ப் தானே.. நான் எப்படி பண்றேன்னு பாரு. என் performanceஐ பார்த்துட்டு இனிமே உன் ஹெல்ப் ஏ வேண்டாம்னு நீயே என்ன பார்த்து கதறி ஓட போற..!!” என்று சொல்ல, சத்தமாக சிரித்த ஸ்வாதி “யாரு..‌நானா..?? வாய்ப்பில்ல ராஜா.” என்று நக்கலாக சொன்னாள்.‌ “அதையும் பார்த்துடலாம்.” என்ற சங்கர் அவளை தூக்கிக் கொண்டு அவளுடைய ரூமிற்கு சென்றான்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-54
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.