தொடர்ச்சி 👉🏻

குறிப்பு

இந்த பகுதியில் சற்று விரும்ப தகாத வன்முறையான சில நிகழ்வுகள் அரங்கேரலாம்.

அது மிக மோசமானதாக இருக்காது, ஆனாலும் முடிந்தவரை இலகுவாகத்தான் எழுதி இருக்கிறேன்.உணர்ச்சி வச படாமல் படிக்கவும்.

ஆனால் இதில் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் கதைகள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை மட்டுமே.

இது யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டவை அல்ல


நான் எந்த விதத்திலும் வன்முறையை
ஆதரிப்பதில்லை மற்றும் ஊக்குவிபத்தும் இல்லை.

பிற உயிர்களை காயப்படுத்துதல் மற்றும் கொலை செய்தல் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

இது முழுக்க முழுக்க கற்பனை என்பதை மனதில்கொண்டு இப்பகுதியை வாசிக்கவும்.

மனது இலகுவானவர்கள் இந்த பகுதியை வாசிக்க வேண்டாம்.

சமூக அக்கறையுடன் உங்கள் நான்.🙏🏻

கடைசியா கேட்கிறேன் உன்னால ஒத்துக்க முடியுமா முடியாதா?

முடியாதுடா நீ என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ.

ஏய் அவன் பொண்டாட்டிய அறுத்து போடுங்கடா.

கண் இமைக்கும் நொடியில் அச்சம்பவம் அரங்கேறியது.

மாறனின் கைகளை அடியாட்கள் இறுக்கி பிடிக்க

டேய் எங்க அம்மாவ விட்டுடுங்க டா.
என்று திமிரினான்.

மாறன் அம்மா நீங்க தப்பிச்சு ஓடிடுங்க. அலறினான் மாறன்.

அதற்குள் ரகுவின் அடியாட்கள் சீதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து இருந்தனர்.

🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸

அம்மா!!!!!!!!!!!!!!!!!!

சீதா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிக்க துடிக்க கிடந்தார்.

சீதாவின் அருகில் சென்ற மாறன்

மா....

சீதாவின் கைகள் துடித்துக்கொண்டு இருந்தன.

கண்கள் மட்டும் மாறனை பார்த்தபடி

கண்ணீரை வடிக்க

சீதா என்று அலறினார் அஷோக்.

மா..... எழுந்திரு மா

எனக்கு பயமா இருக்கு மா.

அம்மா நீ இல்லாம என்னால வாழ முடியாது மா பிளீஸ் மா.

சீதாவிர்க்கு ஒரு 10 நிமிடம் உயிர் இருந்தது ஆனால்

தொண்டை குழி அறுபட்டதால் பேச முடியவில்லை.

அஷோக்கை ஒருமுறை திரும்பி பார்த்த சீதா மாறனை பார்க்க அவர் கண்களால் விடைபெற்றார்.

சிறிது நேரத்தில் உயிர் துடிக்க ஆரம்பித்தது.

சீதாவின் உடல் நடுங்க

மா எண்ணாட்சி என்னாட்சி மா என்று தோலை பிடித்து அழுத்ததினான்.

அப்படியே மாறன் மடியில் தன் தலையை சாய்த்து உயிரை நீர்த்தார் சீதா.

தன் அன்னையின் இரத்தம் மாறன் கைகளில் படிந்து இருக்க

அதை உற்று பார்த்தவன்

ஆ வென அலறினான்.

டேய் உங்களை யாரையும் நான் உயிரோட விட மாட்டேன் டா என்றபடி

கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து அடிக்க துவங்கினான் மாறன்.

அடுக்களைக்குக் சென்றவன் அறுவாமனை எடுத்துக்கொண்டு வந்து அடியாட்களை சரமாரியாக வெட்டி விழ்தினான்

டேய் அவன் பையனையும் அறுத்து பொடுங்கடா அவனுக்கு வாரிசு இருக்க கூடாது.

என்று ரகு கூற

அடியாட்களுக்கு மாறனை கான மனதில் அட்சம் எழுந்தது.

டேய் போங்கடா

பின் வாங்கினார்கள்.

மாறன் சிரித்தான்

அசோக்கிற்கு மாறனை கண்டு பயம் எழுந்தது.

விநோதமாக நடந்துக்கொண்டான்.

பல்லை கடித்துக்கொண்டு ஒவ்வொருவரையும் வெட்டி வீழ்த்தினான் ஒரு வித புன்னகையோடு.

பல்லை இறுக பற்ற பற்களில் இருந்து இரத்தம் வடிய துவங்கியது.

காணவே கொடூரமாக காட்சி அளித்தான் மாறன்.

டேய் வாங்க டா.

என்றிட ரகுக்கு உடல் நடுக்கம் கொடுத்தது.

ரகுவை நோக்கி நெருங்கினான் மாறன்.

இதோ பாரு விட்டுட்டு டா

மேலும் அருகே நெருங்கினான்.

அவன் நெருங்க நெருங்க ரகு பின்னோக்கி நகர தடுமாறி கீழே விழுந்தான்.

அவன் மீது ஏறி அமர்ந்த மாறன்

ரகுவின் தலையை துண்டித்தான் மாறன்
ரகு துடி துடிக்க இறந்தான் .


15 வயதுடைய சிறுவனை போல் அல்லாமல் அனைவரின் கண்ணுக்கும் ஒரு அரக்கனாய் தெரிந்தான் நம் அன்பான மாறன்.

மாறனின் பார்வை கௌதமின் மேல் திரும்பியது.

தலையை சாய்த்து கண்களை சுருக்கி அவன் அருகே வெறி கொண்ட சிங்கமாய் ஒவ்வொரு எட்டாய் எடுத்து வைக்க

வேண்டாம் நான் சொல்றத கேளு கே கே என்று தட்டு தடுமாறி பின்னோக்கி நகர

அம்மா இவன என்ன பண்ணலாம்.

சொல்லு மா.

மாறா அவன விடாத.

அவனை கொண்ணுடு.

சரிம்மா கொல்றேன்.

நடப்பது எதும் புரியாமல்

கெளதம் திரும்பி சீதாவை பார்த்தாள் .

சீதா இறந்த நிலையில் கண்கள் திறந்தபடி ஈக்கள் இரத்தத்தில் மொய்க்க பரிதாபமாக கிடந்தார்.

ஏய் யார்ட டா பேசிட்டு இருக்க.

உங்க அம்மா செத்துட்டா அங்க பாரு டா.

பொணம்.

ஏய்.......

ஆத்திரம் போங்க கையில் இருந்த அறுகாமனையின் கை பிடியை வைத்து தலையிலே விடாமல் அடித்தான்.

எங்க அம்மாவையா பிணம் சொல்ற

என்றபடி வெறிகொண்டு மீண்டும் மீண்டும் சொல்வியா சொல்வியா கூறிக்கொண்டே அடிக்க,

அடியை தாக்கு பிடிக்க முடியாமல் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.


காய்கறி வாங்க சென்று இருந்த சரண்யா வீடு திரும்ப அதிர்ச்சி அடைந்தார்.

உடனே போலீஸுக்கு தகவல் அளித்து வீட்டிற்குள் விரைந்து அசோக்கின் கட்டப்பட்டு இருந்த கையை கழட்டி விட

அஷோக் இடிந்து போய் அமர்ந்தார்.

ஐயோ கடவுளே சீதா அம்மா என்ற படி சீதாவை தன் மடியில் போட்டு கொண்டு அழுதாள் சரண்யா

மாறன் அரக்கர்களை வதம் செய்த ருத்ர மூர்த்தியாய் அமர்ந்திருந்தான்.

கண்ணில் ஒரு துளி நீர் இல்லை அன்னை இங்கு பிணமாய் கிடக்கிறாள் ஆனாலும் ஒரு பதஸ்டம் இன்றி அமர்ந்திருக்கும்

மாறனை கண்டு சற்று அச்சம் பரவ.

தம்பி அம்மா

அம்மாக்கு என்ன இதோ அம்மா என் பக்கத்துல தான் நிக்கராங்க.

அம்மா இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.

அதும் இந்த சிவப்பு பொடவ தலை நிறைய மல்லியப்பூ.அப்படியே தேவதை மாதிரி இருக்கீங்க.

சரண்யாவிற்க் ஒன்றும் புரியவில்லை

மாறன் தம்பி என்றபடி தோலைத்தொட்டு உழுக்கினார் சரண்யா.

சொல்லுங்க சரண்யா அம்மா என்றபடி அசாதாரண புன்னகையில் தோன்ற புரிந்தது அவளுக்கு.

அங்க பாருங்க என்று தோலை பிடித்தபடி சீதாவை கை காட்ட.

தன் அன்னையை கழுத்து அறுபட்டு இரத்த கோலத்தில் கிடப்பதைக் கண்டு மெல்ல எழுந்து நடந்தான்.

அப்படியே மண்டியிட்டு உரைந்தவன்

பின் சுவற்றையே வெறிக்க பார்க்களானன்.

அவன் மனதில் என்ன ஓடுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

போலீஸ் அதிகாரிகள் வீட்டினுள் நுழைய அதிர்ந்தனர் அவர்களும்.

வீடு முழுக்க இரத்த வெள்ளம்.

உள்ளே நுழையவே குமட்டிக்கொண்டு வர மூக்கை பிடித்துக்கொண்டு நுழைந்தனர் போலீசார்.

கன்ஸ்டபிள் மொத்தம் எத்தன பேரு யா?

என்று இன்ஸ்பெக்டர் விசாரிக்க.

8 பேரு சார்.

அதும் அகோரமா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி கொடூர நிலையில செத்துறுக்கான்.

ஒருத்தனுக்கு தலை தனியா முண்டம் தனியா கிடக்கு.

பிரஸ்க்கு சொள்ளியாட்சா

எஸ் சார் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.

எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பதை அசோக்கிடம் கேட்டறிந்தார் இன்ஸ்பெக்டர்.

கேட்ட அவர்க்கே என்ன சொல்றீங்க

8 பேர இப்படி கொடூரமாக கொன்னது இந்த சின்ன பையனா.

என்று மாறனை திரும்பி பார்க்க அவன் சித்த பிரமை பிடித்ததை போலே அமர்ந்து இருந்தான்.

கான்ஸ்டபிள் அவன வண்டிள ஏதுங்க.

சார் சார் அவன் சின்ன பையன் சார்.

ஆமாம் சார் ஆன 8 பேர கொன்னு இருக்கானே.

என் கடமையை செய்ய விடுங்க சார்.
எதா இருந்தாலும் கோர்ட்டில பாத்துக்கலாம்.

அஷோக் ஜிப்பின் பின்னே செல்ல சரண்யா வும் பின்னே ஓடினார்.

உடனே லாயர்க்கு ஃபோன் போட்டார் அஷோக் நிகழ்ந்ததை எல்லாம் கூறி ஜாமின் வாங்க சொன்னார்.

சார் கண்டிப்பா ஜாமின் கிடைக்கிறது கஷ்டம் 8 பேர கொன்னு இருக்காரு மாறன்.அப்பறம் எப்படி

எப்படியாவது கொஞ்சம் ட்ரை பண்ணுங்க.

சீதவோட இறுதி சடங்கு ல கண்டிப்பா மாறன் இருந்தாகனும்.

சரிங்க சார் நான் என்னனு பாக்ரேன்.

ஆனால் ஜாமின் கிடைக்கவில்லை.

வக்கில் நீதிபதி அவர்களிடம் மனு கொடுத்தார்.

சீதாவின்

இறுதி சடங்கிற்கு ஆவது,மாறனை செல்ல அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.


ஷ்யாம் மற்றும் சீதாவின் அன்னை லலிதா ஓடிவந்தார்.

அம்மாடி சீதா.

இப்படி போய்ட்டியே என்றபடி கதறி அழ

அசோக்கின் சட்டையை கோர்த்து பிடித்து ஓங்கி அறைந்தான் ஷ்யாம்
எங்க அக்கா வாழ்க்கைய இப்படி நாசம் ஆகிட்டியே யா.

அப்படி என்னையா தப்பு பண்ணுனா.

உன்ன உண்மையாவே காதலிச்சா

வாழ்ந்தா உன் கூட மட்டும் தான் வாழ்வேன் அப்படின்னு ஒத்த காலுல நிண்ணு உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா.

ஆனா நீ காசு பணம்னு இப்படி கொண்ணுடியே யா.

என்றபடி அழ அஷோக் தலையை தாழ்த்தி நின்றான்.

2 போலீசார் காவலில் வந்து இறங்கினான் மாறன்.

அவன் அழவும் இல்லை, பேசவும் இல்லை .

எல்லா சம்பர்தாயங்களும் முடிய

மாறன் சீதாவின் சடலத்திற்கு கொல்லி வைத்தான்.

மாறனுக்கு எந்த உணர்வும் முகத்தில் கண்டுகொள்ள முடியவில்லை.


சீதாவின் உபகரணங்களை அஷோக் கையில் கொடுத்தனர் உறவினர்கள்

அதில் சீதாவின் கொலுசை மட்டும் வெடுக்கென பிடுங்கினான் மாறன்.

இந்த கொலுசு நீ எப்போதும் கலட்டாதமா

இந்த கொலுசு சத்தம் எப்போதும் கேட்டுட்டே இருக்கணும் மா.

அப்போ தான் நீ என் கூடவே இருக்கர அப்படின்னு நான் நிம்மதியா இருப்பேன் மா.

சரி மாறா என்று அன்னை கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது மாறனுக்கு.

சீதாவின் இறுதி சடங்கிற்கு பின் போலீசார் மீண்டும் மாறனை சிறைக்கு அழைத்து சென்றனர்.

எப்படியாவது மாறனை இந்த கேசுல இருந்து வெளிய கொண்டு வரணும் என்று மீண்டும் வக்கீலுக்கு அழைக்க.

இனி நீங்க இந்த விசயத்துல தலை இடாதிங்க.

எதுவா இருந்தாலும் நாங்க பாதுக்கறோம்.

மாறன் விசயத்துல இனி கொஞ்சம் தள்ளியே இருங்க.

நாங்க எங்க அக்காவா இழந்தவரைக்கும் போதும் என்றான் ஷ்யாம்.



தொடரும்

Shahiabi. Writer ✍🏼
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -42
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.