Chapter-37

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
வெகு நேரமாக தினேஷுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தாள் யாழினி. ஷங்கருடன் ஓரமாக ஒரு டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுவாதி “எனக்கு இங்க இருக்கவே புடிக்கல சங்கர். இந்த அட்மாஸ்பியர்.. இங்க வர்ற ஆல்கஹால் ஸ்மெல்.. இந்த ஹைப்பீட்ச் மியூசிக் சத்தம்.. எதுவுமே பிடிக்கல. எனக்கு இங்க சாப்பிட்டது வேற வாமிட் வர்ற மாதிரி இருக்கு. யாழினிக்கும் சரி.. தினேஷுக்கும் சரி.. இந்த மாதிரி பார்ட்டிக்கு வந்து விடிய விடிய என்ஜாய் பண்றது ரொம்ப பிடிக்கும். அவங்க இங்கயே இருந்து ஆடி பாடிட்டு ஜாலியா அப்புறமா வரட்டும் பொறுமையா. நீங்க வரிங்களா நம்ம வீட்டுக்கு போகலாம்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.



சுவாதி சொன்னதைப் போல சங்கருக்கும் அங்கே இருப்பதில் பெரிதாக விருப்பமில்லை. அதேசமயம் யாழினியை அங்கே விட்டுவிட்டு செல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. அதனால் “ஓகே, நீ வெயிட் பண்ணு. நான் போய் அவங்க வர்றாங்களான்னு எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு எழுந்து அவர்களின் அருகே சென்று “சுவாதி வாமிட் வர்ற மாதிரி இருக்குன்னு சொல்றா. வீட்டுக்கு போலாமான்னு கேக்குறா.. நீங்க வரிங்களாக்ளா?” என்று கேட்டான்.



அங்கே ஒலித்து கொண்டு இருந்த ஹைபீட் மியூசிக் சத்தத்தில் அவன் பேசியதே அவர்கள் இருவருக்கும் கேட்கவில்லை. குடித்துவிட்டு போதையில் வேறு இருந்த யாழினி “என்ன டா சொல்ற எனக்கு ஒண்ணுமே கேக்கல..!!” என்று தன் காதை பிடித்துக் கொண்டு அவனைப் பார்த்து கத்தினாள். அவளை அப்படி பார்க்க பார்க்க ‌ சங்கருக்கு எரிச்சலாக இருந்தது. இருப்பினும் இல்லாத பொறுமையை இறுக்கி பிடித்துக் கொண்டு “நானும் சுவாதியும் வீட்டுக்கு போறோம். நீங்க ரெண்டு பேரும் வரீங்களா இல்லையா டி?” என்று அவனும் வந்த கோபத்தில் கத்தி கேட்க, யாழினியின் அருகே வந்து நின்ற தினேஷ் “பார்ட்டி இன்னும் முடியலையே.. அதுக்குள்ள வீட்டுக்கு போய் என்ன பண்றது? நீங்களும் சுவாதியும் கிளம்பறதுன்னா கேப் புடிச்சு போங்க. நாங்க வர எர்லி மார்னிங் ஆகிடும். இந்த மாதிரி பார்ட்டி எல்லாம் அடிக்கடியா நடக்குது? நடக்கும்போதே என்ஜாய் பண்ணிக்கணும் ஷங்கர்.” என்றான்.



அவனது கருத்திற்கு ஆமோதிப்பதைப் போல தலையாட்டிய யாழினி போதை ஏறிய குரலில் “ஆமா ஆமா.. எல்லாருக்கும் ஒன் லைஃப் தான் சங்கர். அத நம்மளால முடிஞ்ச வரைக்கும் என்ஜாய் பண்ணனும். நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. உங்கள மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இந்த பார்ட்டி செட்டாகாது. நாங்க அப்புறமா வர்றோம்.” என்று அவனைப் பார்த்து சொல்லிவிட்டு தினேஷின் கையை பிடித்து “நீங்க வாங்க.. நம்ம அங்க போய் புதுசா ஏதாவது ஆல்கஹால் பிராண்ட் வந்திருக்கான்னு கேட்டு ட்ரை பண்ணி பார்க்கலாம். நம்ம முன்னாடி குடிச்சோம்ல ஒரு ஷாட்.. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதையாவது இன்னொன்னு ட்ரை பண்ணலாம்.” என்று சொல்லி அவனை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.



தூரத்தில் இருந்து அந்த காட்சியை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்ட சுவாதி “இவங்க இப்படித்தான் பண்ணுவாங்கன்னு நல்லா தெரியும். இருந்தாலும் இந்த‌ சங்கருக்கு யாழினிய விட்டுட்டு வர மனசு வர மாட்டேங்குது. என்ன பண்றது? இவங்கள மாதிரியா அவர்? இவங்க இப்படி பண்ணாலும் பதிலுக்கு நம்மளால அப்படி பண்ண முடியாதே!” என்று நினைத்தாள். இறுகிய முகத்துடன் அங்கே வந்த சங்கர் கேப் புக் செய்து சுவாதியை அழைத்துக் கொண்டு தங்களது அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு சென்றான்.



செல்லும் வழி எல்லாம் சுவாதி ஜன்னலின் மீது சாய்ந்தபடியே வந்திருந்ததை கவனித்த சங்கர் “என்ன இவ யூஸ்வலா இருக்கிறதை விட இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கிற மாதிரி தெரியுறா?” என்று நினைத்து அவளிடம் “ஏன் ஒரு மாதிரி இருக்க? எல்லாம் ஓகேவா? நம்ம அங்க இருக்கும் போதே ஏதோ வாமிட் வர்ற மாதிரி இருக்குன்னு சொன்னியே.. Is everything okay? உடம்பு சரியில்லைன்னா சொல்லு. நம்ம ஹாஸ்பிடல் போகலாம். கேப் புக் பண்ணவா?” என்று அக்கறையுடன் கேட்டபடி சோஃபாவில் அவள் அருகில் அமர்ந்தான். நன்றியுடன் அவனைப் பார்த்த ஸ்வாதி “வேண்டாம் சங்கர், நான் நல்லா தான் இருக்கேன். இரண்டு நாளா நான் சரியா சாப்பிடல.. தூங்கல. அதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு. நான் போய் தூங்குறேன். தூங்குனாலே சரி ஆயிடும்னு நினைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு தன் தலையைப் பிடித்துக் கொண்டு அவளது ரூமை நோக்கி என்றாள்.



“அட்லீஸ்ட் ஒரு டீயாவது குடிச்சிட்டு போறியா? போட்டுத் தரவா? தலை வலிக்கு நல்லா இருக்கும்!” என்று அவன் கேட்க, அவனது அக்கறையில் நெகிழ்ந்து போனாள் சுவாதி. “பேசாம நம்ம அந்த விஷயத்தை முதல்ல இவர் கிட்டயே சொல்லிடலாமா? அது தெரிஞ்சா கண்டிப்பா சங்கர் ரொம்ப சந்தோஷப்படுவாரு.” என்று நினைத்தவள், “ம்ம்.. ஒரு ஏலக்கா டீ ப்ளீஸ்..!!” என்று கேட்டுவிட்டு அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தாள். “Sure, சோஃபால போய் உட்காரு. பைவ் மினிட்ஸ்ல டீயோட வரேன்.” என்று சிரித்த முகமாக சொன்ன சங்கர் அவளுக்கு டீ போடுவதற்காக சென்றான்.



அவன் சொன்னதை போலவே சோஃபாவில் வந்து அமர்ந்த சுவாதி “சங்கர் கிட்ட இப்ப இத பத்தி சொல்லலாமா வேண்டாமா?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் யோசித்து முடிப்பதற்குள் அங்கே டீயுடன் வந்த சங்கர் ஒரு கப் டீயை அவளிடம் கொடுத்துவிட்டு அவனும் அவள் அருகில் அமர்ந்து டீ குடிக்க தொடங்கினான். அவன்‌ முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த சுவாதி அந்த விஷயத்தை பற்றி அவனிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று தொடர்ந்து யோசித்து பார்த்தாள். இறுதியில் “இல்ல வேண்டாம். இத பத்தி நம்ம மொதல்ல தினேஷ் கிட்ட தான் சொல்லனும். அதான் நல்லா இருக்கும். அத முதல்ல தெரிஞ்சிக்குற உரிமை அவருக்கு தான் இருக்கு.” என்று நினைத்து சங்கரிடம் எதுவும் சொல்லாமல் டீயை மட்டும் குடித்துவிட்டு தனது ரூமிற்கு சென்று விட்டாள்.



அவளுக்கு தினேஷ் எப்போது வருவான்? அவனிடம் எப்போது தன் மனதில் இருக்கும் விஷயத்தைப் பற்றி பேசுவது என்று யோசித்தாலே தூக்கமே வரவில்லை. அதேசமயம் இந்த நேரத்தில் அவளுக்கு தூக்கமும் முக்கியமானது என்று நினைத்து தன் கண்களை மூடி படுத்து அவளுக்கு வராத தூக்கத்தை வரவழைத்தாள் சுவாதி. யாழினியை பற்றி யோசித்துக் கொண்டு இருந்த சங்கருக்கும் தூக்கம் வரவில்லை. அவர்கள் விடியற்காலையில் தான் வருவார்கள் என்று அவனுக்கு தெரிந்திருந்தாலும், எப்போது வருவார்கள் என்று அவனால் எதிர்பார்க்காமல் இருக்க முடியவில்லை. நன்றாக குடித்து இருந்த யாழினியை அவளே சொல்லி இருந்தாலும், தினேஷ் உடன் வர சொல்லிவிட்டு கிளம்பி வந்தது அவனுக்கு என்னவோ சரியாக படவில்லை.



அதனால் சுவற்றில் மாற்றப்பட்டு இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான் சங்கர். அதில் இரவு ரெண்டு மணி என்று காட்டியது. அவளை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு வந்து இங்கே அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்பதால் “இங்க அவளை நினைச்சு குழம்பி ஃபீல் பண்ணிட்டு ‌இருக்குறதுக்குக்கு நம்ம பேசாம போய் அவளை கையோட கூட்டிட்டு வந்துடலாம். தினேஷும் குடிச்சிருக்காரு. எப்படி அவரால கார் ஓட்டிட்டு வர முடியும்?” என்று நினைத்து ஸ்வாதியை வீட்டிற்குள் வைத்து வெளியில் பூட்டிவிட்டு மீண்டும் ஒரு டாக்ஸி பிடித்து தங்களது ஆபிஸிற்க்கு சென்றான்‌ சங்கர்.



அவன் பார்ட்டி ஹாலிற்க்கு சென்று பார்க்கும் போது அங்கே குடித்துவிட்டு ஒவ்வொருவராக ஆங்காங்கே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் கண்கள் யாழினியை தேட, அவளும் தினேஷும் ஓரமாக கிடந்த சோஃபாவில் கையில் ஒரு பியர் பாட்டிலை வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட சங்கருக்கு வந்த கோபத்தில் யாழினியின் கன்னத்தில் இரண்டு வைத்து அவளை இங்கே இருந்து இழுத்து செல்லலாம் என்று தோன்றியது. வழக்கம் போல இப்போதும் அவனால் அதை செய்ய முடியவில்லை.



கையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் அவர்கள் அருகில் சென்ற ஷங்கர் அதை அவர்களின் முகத்தில் தெளித்து எழுப்பினான். இருவரும் போதையில் ஒரு குறிப்பிட்ட மதுவின் பெயரைச் சொல்லி “எனக்கு அது வேணும். யோவ் வெயிட்டர்.. சீக்கிரம் கொண்டு வாயா..!! இன்னைக்கு அதை குடிக்காம நாங்க மட்டையாக மாட்டோம்.” என்று சொல்லி போதையில் உளறினார்கள். “ஆமா எனக்கு அது வேணும்.” என்று யாழினி குழந்தை போல மீண்டும் மீண்டும் அதையே சொல்லி அடம் பிடிக்க, “அது‌ தானே.. நான் நாளைக்கு வாங்கி தரேன். வந்து தொலை டி டைம் ஆகுது.” என்று தன் பற்களை கடித்தபடி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவளிடம் சொன்ன சங்கர் அவளை எழுப்பி தனது ஒரு பக்க தோளில் சாய்த்து கொண்டு, மற்றொரு கையால் வலுக்கட்டாயமாக தினேஷையும் இழுத்துக் கொண்டு லிஃப்ட் வழியாக கீழே சென்றான்.


தொடரும்...

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-37
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.