Chapter-34

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
பிரியாணி சமைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொண்டு நால்வரும் தங்களது அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவுடன் ரெப்ரெஷ் ஆகிவிட்டு உடை மாற்றிக் கொண்ட யாழினி தனது மொபைல் ஃபோனில் அவளுக்கு மிகவும் பிடித்த pubg கேமை விளையாடத் தொடங்கிவிட, தினேஷ் டிவியின் முன்னே அமர்ந்து வழக்கம் போல ஸ்போர்ட்ஸ் சேனல் வைத்து அதை பார்க்க தொடங்கினான். சமையல் பொருட்களுடன் கிச்சனுக்கு சென்ற சுவாதி சிங்கிள் அவர்கள் வாங்கி வந்த அசைவ வகைகளை சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துவிட்டு சமைக்க தேவையான பொருட்களை எடுக்கத் தொடங்கினாள்‌.



ரெப்ரெஷ் ஆகிவிட்டு நேராக கிச்சனுக்கு சென்ற சங்கர் அங்கே ஒரு சிறிய chairஐ போட்டு அமர்ந்து கொண்டு சமைக்க தேவையான வெங்காயம் முதல் தக்காளி வரை அனைத்தையும் அவளுக்கு வெட்டி கொடுத்தான். பின் ஏற்கனவே அவன் சொன்னதைப் போல side dish items அனைத்தையும் அவனே செய்தான். அதை அவன் செய்து கொண்டு இருக்கும் கேப்பில் பிரியாணியை செய்து முடித்து அடுப்பில் தம் போட்டு வைத்தாள் சுவாதி. கிட்டத்தட்ட சங்கரும் ஸ்வாதியும் சேர்ந்து அந்த கிச்சனில் நின்று இரண்டு மணி நேரம் வரை சமைத்து இருப்பார்கள்.



அந்த நேரம் முழுவதும் அவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசி சிரிப்பது, ஒன்றாக பாடல் பாடுவது என்று வேலை செய்யும் கலைப்பே தெரியாமல் அதை ரசித்து சந்தோஷமாக செய்தார்கள். அவர்கள் இருவருக்குமே அந்த தருணம் அழகிய தருணங்களாக இருக்க, தங்களது திருமணத்திற்கு முன்பு வரை திருமணம் ஆன பிறகு இப்படி தங்களது பார்ட்னர் உடன் சேர்ந்து ஒரு இனிமையான சமைக்கும் நேரத்தை கிச்சனில் செலவிட வேண்டும் என்ற ஆசை அவர்கள் இருவரின் மனதிற்குள்ளும் இருந்தது. அதனால் அது வேறு விதத்தில் இன்று நிறைவேறிய சந்தோசம் அவர்களுக்குள் இருந்தாலும், அதை உணராமல் சாப்பிடும் ஆர்வத்தில் சமைத்து‌ முடித்துவிட்டு அனைத்தையும் கொண்டு போய் ஷங்கரும் சுவாதியும் டைனிங் டேபிளில் வைத்தார்கள்.



ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்த தினேஷ் பிரியாணி வாசத்தை மோப்பம் பிடித்து கை கழுவி விட்டு சென்று டைனிங் டேபிளில் அமர, சங்கர் யாழினியை சாப்பிடுவதற்காக அழைத்து வந்தான். அப்போது தனது கேமின் முக்கியமான கட்டத்தில் மும்மரமாக விளையாடிக் கொண்டிருந்த யாழினி கையில் மொபைல் ஃபோனுடன் டைனிங் டேபிளிள் வந்து அமர்ந்தாள். “அடிப்பாவி.. எவ்ளோ நேரமா டி விளையாடுவ? சின்ன குழந்தைங்க கூட உன்னை விட பெட்டர் தெரியுமா..?? மணி பத்தாக போகுது. எல்லாம் சூடா இருக்கு சீக்கிரம் சாப்பிடு. நீ சாப்பிட்டு முடிக்கவே ஒரு மணி நேரம் ஆகும்.” என்ற சங்கர் அவள் கையில் இருந்த மொபைல் ஃபோனை பிடுங்க, உடனே தன் முகத்தை சுளித்த யாழினி “ச்ச்.. டேய் மாடு ஃபோனை குடு. எங்க டீம் தான் ஜெயிக்க போகுது. நான் ஒரு நிமிஷம் ஸ்லீப் ஆனாலும் என்னை சுட்டுத் தல்லிடுவாங்க.” என்று கத்திவிட்டு மீண்டும் தன் ஃபோனை அவனிடமிருந்து பிடுங்கி விளையாட தொடங்கினாள்.



“சப்பா.. இவளை எல்லாம் வச்சுக்கிட்டு..!!” என்று நினைத்து மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட சங்கர், ஒரு தட்டில் உணவை போட்டு அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு ஊட்டி விட்டபடி தானும் சாப்பிட்டான். என்ன தான் விளையாட்டில் மும்மரமாக இருந்தாலும் “வயிறுன்னு ஒன்னு இருந்தா பசிக்கும்ல.. எனக்கு சோறும் முக்கியம் தான். பட் கேம் அதைவிட முக்கியம். நானா எடுத்து சாப்பிட மாட்டேன். பட் இப்படி சங்கர் எனக்கு ஊட்டி விட்டா ரொம்ப பிடிக்கும்.” என்று நினைத்த யாழினி சமத்துப் பிள்ளையாக தன் வாயை திறந்து அவன் கொடுக்கும் உணவை வாங்கிக் கொண்டாள்.



தினேஷின் ஃபேவரெட் கிரிக்கெட் டீம் பேட்டிங் செய்ததால் ஒரு தட்டில் தனக்கு தேவையான உணவுகளை எடுத்து போட்டுக் கொண்டு அவன் நேராக சென்று சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்தபடி சாப்பிட, “நான் இவனுக்காக தானே ஆசையா சமைச்சேன்.. இன்னைக்கு தான் நான் சமைச்சதை இவன் ஃபர்ஸ்ட் டைம் சாப்பிடுறான். எப்பயும் செய்றதை விட இன்னைக்கு டேஸ்ட் ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அத சொல்லி பெருசா என்னை அப்ரிஷியேட் பண்ணலைனா கூட பரவால்ல.

சும்மா ஒரு வார்த்தை நல்லா இருக்குனு சொன்னா என்ன? அதுக்கு கூட இவனுக்கு வாய் வலிச்சு போயிடுமா? சரி, இவன் தான் எதுவும் சொல்லல.. இந்த யாழினியும் தானே சுவாதி சமைச்சா சூப்பரா இருக்கும் அப்படி இப்படின்னு சொன்னா.. இப்ப அவ கூட ஒரு வார்த்தை சொல்லாம அவ பாட்டுக்கு சாப்பிட்டுட்டு இருக்கா..!! அது சரி.. நான் இந்த வீட்ல வேலைக்காரி மாதிரி தானே.. சமைச்சு கொடுத்ததோட என் வேலை முடிஞ்சிருச்சு. இதுக்கு மேல யாரும் நம்மள கண்டுக்க மாட்டாங்க.” என்று நினைத்த சுவாதி சாப்பிட மனம் இல்லாமல் தன் தட்டில் இருந்த பிரியாணியை காக்கா கொத்துவதைப் போல கொத்திக் கொண்டிருந்தாள்.



யாழினிக்கு ஊட்டி முடித்துவிட்டு தன் தட்டு நிறைய பிரியாணியை பரப்பி வைத்துக்கொண்டு சாப்பிட தொடங்கிய சங்கர் “வாவ்.. பிரியாணி செம..!! எல்லாரும் செய்ற மாதிரி தான் நீயும் செஞ்ச. ஆனா உன் கையில ஏதோ மேஜிக் இருக்கு மா. என்னா டேஸ்ட்.. என்னா டேஸ்ட்டு.. என்ன விட்டா இருக்கிற மொத்த பிரியாணியும் நானே சாப்பிட்டு காலி பண்ணிடுவேன். அதுவும் அந்த மட்டன் சுக்கா வேற லெவல்.” என்று வாய்க்கு வாய் அவளது சமையலை புகழ்ந்தபடி எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி சாப்பிட்டான். “ம்ம்.. என்ன சாப்பிடுற நீ? நல்லா சமைக்க தெரிஞ்ச மட்டும் பத்தாது. சாப்பிடவும் தெரியனும். இப்படி கொஞ்சம் கொஞ்சமா போட்டு சாப்பிட்டா bodyல strength எப்படி இருக்கும்? நல்லா சாப்பிடு.” என்று சொல்லி சுவாதிக்கும் பரிமாறி அவளையும் நன்றாக சாப்பிட வைத்தான் சங்கர்.



அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளைப் பறக்க வைத்தது. மற்ற அனைவரிடத்திலும் இருந்து கிடைக்காத ஏதோ ஒன்று அவளுக்கு சங்கரிடம் இருந்து கிடைப்பதை போல இருந்தது. அந்த ஒன்றிற்காகத் தான் அவள் மனம் ஏங்கி தவிக்கிறது. அதை அந்த நொடி நன்றாக உணர்ந்த சுவாதி ஷங்கரின் அக்கறை மழையில் விரும்பி நனைந்து எப்போதும் சாப்பிடுவதைவிட மிகுந்த மன நிறையுடன் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே சாப்பிட்டுவிட்டு மீதம் இருந்தவற்றை பிரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டு தனது ரூமிற்கு சென்றாள்.



டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டு இருந்த தினேஷ் அது முடிந்தவுடன் எப்போதோ தனது ரூமிற்கு சென்றிருக்க, யாழினியும் கேம் விளையாடிக் கொண்டே தன் ரூமிற்கு சென்று படுத்திருந்தாள். கிச்சன் லைட்டை ஆஃப் செய்வதற்காக அங்கே சென்ற சங்கர் சிங்கில் ஏராளமான பாத்திரங்கள் கிடப்பதை பார்த்தான். “இன்னைக்கு சுவாதி தான் பாவம் நிறைய வேலை செஞ்சா. இப்ப நம்ம இத வாஸ் பண்ணாம விட்டுட்டா, காலையில அந்த பொண்ணு நமக்கு முன்னாடியே எந்திரிச்சு இத எல்லாம் கழுவிட்டு இருக்கும். எதுக்கு அவளை கஷ்டப்படுத்திக்கிட்டு? நம்மளே விலக்கி வச்சிடலாம்.” என்று நினைத்த சங்கர் அனைத்து பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு கிட்டத்தட்ட 12 மணி அளவில் தூங்குவதற்காக தனது ரூமிற்கு சென்றான்.



அங்கே யாழினி ஏற்கனவே நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். வழக்கம்போல லைட்டை ஆஃப் செய்துவிட்டு அவள் அருகில் சென்ற சங்கர் அவளை அணைத்துக் கொண்டு படுத்து தன் கண்களை மூடினான். கிச்சனில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததால் கால் வலியில் தவித்த சுவாதி தூக்கம் வராமல் அப்படியும் இப்படியுமாக புரண்டு படுத்து கொண்டிருந்தாள். அதைக் கூட உணராமல் தினேஷ் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.



தூக்கம் வராததால் கடுப்பாகி எழுந்து அமர்ந்த சுவாதி தன் மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தாள். ஒன்பது மணியில் இருந்து அவளது அம்மா தொடர்ந்து கால் செய்து அதை அவள் எடுக்காததால் மிஸ்டுகால் ஆகி இருந்தது. அதனால் உடனே தன் அம்மாவிற்கு கால் செய்தாள். தனது வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அப்போது தான் சென்று படுத்திருந்த அவளது அம்மா சுவாதியிடம் இருந்து கால் வரவும், தன் ஃபோனை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டின் முற்றத்திற்கு சென்று காலை அட்டென்ட் செய்து “ஏண்டி.. நான் உனக்கு எப்ப கால் பண்ணேன்.. நீ என்ன டி ராத்திரி 12:00 மணிக்கு கால் பண்ற? நீயாவும் எனக்கு கால் பண்ணி பேச மாட்டேங்குற. நான் ஃபோன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கற. என்ன தான் நெனச்சிட்டு இருக்க நீ?” என்று கோபமாக கேட்டார்.



“சாரி மா.. நான் கிச்சன்ல பிஸியா சமைச்சிட்டு இருந்தேன். அதான் கால் வந்தது தெரியல. நீ எப்படியும் இந்நேரம் தூங்கி இருக்க மாட்டேன்னு தெரியும். அதான் ஃபோன் போட்டேன். நானும் இப்ப தான் வந்து படுத்தேன்.” என்று சுவாதி சலிப்பான குரலில் சொல்ல, “சரி.. சரி.. மாப்ள என்ன பண்றாரு?” என்று அவள் அம்மா இழுக்க, “யாரு உன் மாப்பிள்ளையா.. பொண்டாட்டி எப்ப வந்து படுத்தா நமக்கு என்ன? அவ தூங்கினாலும் தூங்கலைன்னாலும் நமக்கு என்னன்னு நிம்மதியா படுத்து தூங்கிட்டு இருக்காரு.” என்றாள் சுவாதி.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-34
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.