அவள் அழுவதால் ஆதரவாக அவள் கையை பிடித்துக் கொண்ட சங்கர் “இங்க பாரு சுவாதி ஒரு விஷயத்தை நீ முதல்ல தெளிவா புரிஞ்சுக்கோ. நீ ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போது உன்னோட point of viewல இருந்து மட்டும் யோசிக்க கூடாது. உன் பார்ட்னர் மைண்ட்ல என்ன இருக்கு, அவங்க எதை நினைச்சு இத சொல்லி இருப்பாங்கன்னு நீ யோசிச்சு பார்ககணும். நீ வெளிய இருந்து பார்த்தா உன்னால எப்பவும் அவங்கள புரிஞ்சுக்க முடியாது. தினேஷா இருந்தாலும் சரி யாழினியா இருந்தாலும் சரி. அவங்க மனசுக்குள்ள நம்ம மேல அவங்களுக்கு எவ்ளோ பாசம் இருந்தாலும், அத முழுசா வெளியே காட்ட மாட்டாங்க.
நான் இவ கூட பழகி ரொம்ப வருஷம் லவ் பண்ணி அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சோ அவள பத்தி எனக்கு எல்லாமே தெரியும். அதனால எங்களுக்குள்ள பெருசா பிரச்சனை வராது. தினேஷை உனக்கு முன்னாடியே தெரியும் என்றாலும், அவரை ஜஸ்ட் நீ office colleagueஆ மட்டும்தான் பார்த்திருப்ப. பர்சனலி உங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தரை பத்தி ஒருத்தருக்கு தெரியாது. இதுக்கு மேல தான் நீங்க எல்லாத்தையும் புதுசா புரிஞ்சிக்க போறீங்க. நானும் யாழினியும் லவ் பண்ணும் போது கூட, அடிக்கடி ஒருத்தர பத்தி இன்னொருத்தர் புரிஞ்சுக்காம சண்டை போட்டுட்டு தான் இருந்தோம்! அதெல்லாம் உனக்கே தெரியுமே!” என்று சொல்ல, ஆமாம் என்று தலையாட்டினாள் அவள்.
“அதான் உனக்கே எங்களைப் பத்தி நல்லா தெரியுமே.. நாங்க அப்ப சண்டை போட்ட மாதிரி இப்போ நீங்க கல்யாணம் பண்ணிட்டு சண்டை போடுறீங்க. அவ்வளவுதான் வித்தியாசம். அது சரியாகனும்னா, யாழினிக்கு தகுந்த மாதிரி நான் எப்படி என்னை மாத்திக்கிட்டனோ, அந்த மாதிரி தினேஷுக்கு தகுந்த மாதிரி நீ உன்னை மாத்திக்கணும். ஏன்னா அவங்க ரெண்டு பேருமே மத்தவங்களுக்காக தன்னை மாத்திக்கிற கேரக்டர் இல்ல. உனக்கு எடுத்த உடனே இன்னொருத்தருக்காக மாறுவது எல்லாம் பாசிபில் இல்ல.
ஆனா இப்போதைக்கு அவரை புரிஞ்சுக்க ட்ரை பண்ணி பாரு. அவங்கள ஹேண்டில் பண்றது ஒன்னும் கஷ்டம் இல்ல. அது எப்படினு நீ கத்துக்கணும் அவ்ளோ தான்.” என்று சங்கர் சொல்ல, அனைத்தும் புரிந்தது என்பதைப் போல தலையாட்டிய சுவாதி “நம்ம ரொம்ப அவரை judge பண்றோம் போல. இப்ப தானே எங்களுக்கு மேரேஜ் ஆகிருக்கு.. அவருக்கு இந்த நியூ லைஃபை அட்ஜஸ்ட் பண்றதுக்கு நம்மளும் கொஞ்சம் டைம் கொடுக்கணும். சங்கர் சொன்ன மாதிரி நம்மளும் அவரை புரிஞ்சிக்க ட்ரை பண்ணனும்.” என்று நினைத்துக் கொண்டாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு லஞ்ச் டைம் முடிந்துவிட, அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றார்கள். அப்படியே அன்றைய நாள் அவர்கள் அனைவருக்கும் பிஸியாக சென்றது. இரவு வீடு திரும்பும் போதும் தினேஷின் காரில் அவர்கள் நால்வரும் ஒன்றாகத்தான் வந்தார்கள். வழக்கம் போல சங்கர் கதவைத் திறந்து வீட்டின் உள்ளே செல்ல, மற்ற மூவரும் அவனை பின் தொடர்ந்து உள்ளே சென்றார்கள். ரெப்ரெஷ் ஆவதற்காக யாழினி தனது ரூமிற்கு சென்று விட, டிவியை ஆன் செய்துவிட்டு சோஃபாவில் அமர்ந்தான் சங்கர். அதனால் சுவாதி தனது ரூமை நோக்கி செல்ல, அவள் கையைப் பிடித்து தடுத்த தினேஷ் “நான் நமக்கு ஏசியும், wooden dining table setம் ஆர்டர் பண்ணி இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல டோர் டெலிவரி பண்ணிடுவோம்னு ஷோரூம்ல இருந்து மெசேஜ் வந்திருக்கு.
நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன். அதுக்குள்ள அவங்க கிட்ட இருந்து கால் வந்துச்சுன்னா, எடுத்து பேசு. டைனிங் டேபிளை ஹாலிலயே ஒரு ஓரமா போட்டுருங்க. நான் வந்த உடனே கையோட ஏசிய இன்ஸ்டால் பண்ணிடலாம்.” என்றான் அவளிடம். சரி என்பதைப்போல சுவாதி மண்டையை ஆட்ட, அவன் சொன்னதை கவனித்துக் கொண்டிருந்த சங்கர் “நானே டைனிங் டேபிள் வாங்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். பரவால்ல நீங்களே ஆர்டர் பண்ணிட்டீங்க. எவ்வளவுன்னு சொல்லுங்க. நம்ம அமௌன்ட் ஷேர் பண்ணிக்கலாம்.” என்றான்.
“பரவால்ல சங்கர், அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஆல்ரெடி இந்த வீட்ல எல்லாமே இருக்கு. நீங்களும் யாழினியும் தானே செலவு பண்ணி இதெல்லாம் வாங்கி இருப்பீங்க! இதுக்கு மேல நீங்க எதுவும் பண்ண வேண்டாம். அதான் புதுசா என்ன வாங்கணும்னு யோசிச்சு நான் டைனிங் டேபிள் வாங்கினேன். சரி சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு நான் சுவாதி கிட்ட கூட சொல்லல. இன்னும் கொஞ்ச நேரத்துல டெலிவரி பண்ணிடுவாங்க. நீங்க பார்த்து வாங்கி வைங்க. நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடறேன். கசகசன்னு இருக்கு.” என்ற தினேஷ் தனது ரூமை நோக்கி சென்றுவிட, இப்போது டெலிவரி ஆகிவிடும் என்று அவன் சொல்லிவிட்டு சென்றதால் அவனது மொபைல் ஃபோனை கையில் வைத்துக் கொண்டு ஹாலில் உள்ள சோபாவில் ஷங்கரின் அருகில் அமர்ந்தாள் சுவாதி.
அவள் முகம் வாட்டமாக இருப்பதை கவனித்த சங்கர் “டீ போட்டுட்டு வரேன் குடிக்கிறியா?” என்று கேட்க, “இல்ல பரவால்ல விடுங்க.” என்று அவள் சொல்ல, “நீ இன்னும் mood offல தான் இருக்கியா? நீ இவ்ளோ யோசிக்கிற அளவுக்கு எல்லாம் தினேஷ் இல்ல ஸ்வாதி. நம்ம ஒரு நாளைக்கு எத்தனை விதமான ஆளுங்கள பாக்கிறோம்.. அவங்க கூட எல்லாம் compare பண்ணும் போது, தினேஷ் எவ்ளவோ பரவால்ல. நீ ரொம்ப judgementalஆ இருக்கன்னு எனக்கு தோணுது. எதுவா இருந்தாலும், எல்லாமே நார்மல் ஆகறதுக்கு கொஞ்ச நாள் ஆகும். அதுவரைக்கும் நீ வெயிட் பண்ணித்தான் ஆகணும். நீ டிவி பாத்துட்டு இரு. நான் போய் டீ போட்டுட்டு வரேன். ஷோரூம்ல இருந்து டெலிவரிக்காக கால் பண்ணாங்கன்னா, அவங்கள என்ட்ரன்ஸ் கிட்ட வெயிட் பண்ண சொல்லு. நான் கீழ போய் வாட்ச்மேன் கிட்ட சொல்லி அவங்கள கூட்டிட்டு வரேன்.” என்ற சங்கர் டீ போடுவதற்காக கிச்சனுக்கு சென்றான்.
சில நிமிடங்களுக்கு பிறகு ஷங்கர் டீயுடன் அங்கே வர, சரியாக தினேஷின் நம்பருக்கு ஷோரூமில் இருந்து கால் வந்தது. அதை அட்டென்ட் செய்து சுவாதி அவர்களிடம் தங்களது லொகேஷனை சொல்வதற்காக திணறி கொண்டிருக்க, அவள் கையில் இருந்த ஃபோனை வாங்கிய சங்கர் மறுமுனையில் இருந்தவர்களுடன் பேசியபடி கீழே சென்றான். அவன் கொண்டு வந்த சூடான டீயை சோஃபாவில் அமர்ந்து சுவாதி குடித்துக் கொண்டிருக்க, குளித்து முடித்துவிட்டு t-shirt and shortsக்கு மாறி இருந்த தினேஷ் அங்கே வந்து அவளிடம் “கால் வந்துச்சா?” என்று சாதாரணமாக கேட்டான்.
“ம்ம்.. அவங்க பக்கத்துல வந்துட்டாங்களம். கால் பண்ணாங்க. சங்கர் அவங்க எங்க இருக்கிறாங்கன்னு பார்க்க போயிருக்காரு. உங்க ஃபோன் அவர்கிட்ட தான் இருக்கு.” என்று ஸ்வாதி சொல்ல, “ஓகே அவங்க வரட்டும் பாத்துக்கலாம்.” என்ற தினேஷ் அவள் அருகில் சோஃபாவில் அமர்ந்தான். இப்போது அவனை ஓரக்கண்ணால் பார்த்த சுவாதிக்கு சங்கர் சொன்னதெல்லாம் ஞாபகம் வர, அவன் மீது தனக்கு இருந்த கோபம் அனைத்தையும் மறந்து விட்டு அவனது தோள்களில் சாய்ந்து கொண்டாள் சுவாதி. அவளுக்கு அவனிடம் இருந்து கிடைக்கும் அரவணைப்பு தேவையாக இருந்தது.
அது தினேஷுக்கும் புரிய, அவன் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான். டிவியை ஏற்கனவே ஆன் செய்து விட்டு சென்றிருந்த சங்கர் ஒரு மியூசிக் சேனலில் வைத்திருந்ததால், அப்போது சரியாக,
இறைவனாய் தந்த இறைவியே..
இருளினில் காணும் ஓவியமே..
உயிர் வரை உந்தன் மடியிலே..
வலிகளை போக்கும் காதல் பார்வையில் உலகமே காலின் அடியிலே.. என்ற பாடல் ஓடியது. அதனால் காதல் கொண்ட கண்களுடன் சுவாதி தன் கணவனை பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் இருவருக்குமே என்ன தான் இருந்தாலும் இதுதான் தங்களுடைய வாழ்க்கை. தன் அருகில் இருப்பவர் தான் தனது வாழ்க்கை துணை என்ற எண்ணம் ஏற்பட்டது.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
நான் இவ கூட பழகி ரொம்ப வருஷம் லவ் பண்ணி அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சோ அவள பத்தி எனக்கு எல்லாமே தெரியும். அதனால எங்களுக்குள்ள பெருசா பிரச்சனை வராது. தினேஷை உனக்கு முன்னாடியே தெரியும் என்றாலும், அவரை ஜஸ்ட் நீ office colleagueஆ மட்டும்தான் பார்த்திருப்ப. பர்சனலி உங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தரை பத்தி ஒருத்தருக்கு தெரியாது. இதுக்கு மேல தான் நீங்க எல்லாத்தையும் புதுசா புரிஞ்சிக்க போறீங்க. நானும் யாழினியும் லவ் பண்ணும் போது கூட, அடிக்கடி ஒருத்தர பத்தி இன்னொருத்தர் புரிஞ்சுக்காம சண்டை போட்டுட்டு தான் இருந்தோம்! அதெல்லாம் உனக்கே தெரியுமே!” என்று சொல்ல, ஆமாம் என்று தலையாட்டினாள் அவள்.
“அதான் உனக்கே எங்களைப் பத்தி நல்லா தெரியுமே.. நாங்க அப்ப சண்டை போட்ட மாதிரி இப்போ நீங்க கல்யாணம் பண்ணிட்டு சண்டை போடுறீங்க. அவ்வளவுதான் வித்தியாசம். அது சரியாகனும்னா, யாழினிக்கு தகுந்த மாதிரி நான் எப்படி என்னை மாத்திக்கிட்டனோ, அந்த மாதிரி தினேஷுக்கு தகுந்த மாதிரி நீ உன்னை மாத்திக்கணும். ஏன்னா அவங்க ரெண்டு பேருமே மத்தவங்களுக்காக தன்னை மாத்திக்கிற கேரக்டர் இல்ல. உனக்கு எடுத்த உடனே இன்னொருத்தருக்காக மாறுவது எல்லாம் பாசிபில் இல்ல.
ஆனா இப்போதைக்கு அவரை புரிஞ்சுக்க ட்ரை பண்ணி பாரு. அவங்கள ஹேண்டில் பண்றது ஒன்னும் கஷ்டம் இல்ல. அது எப்படினு நீ கத்துக்கணும் அவ்ளோ தான்.” என்று சங்கர் சொல்ல, அனைத்தும் புரிந்தது என்பதைப் போல தலையாட்டிய சுவாதி “நம்ம ரொம்ப அவரை judge பண்றோம் போல. இப்ப தானே எங்களுக்கு மேரேஜ் ஆகிருக்கு.. அவருக்கு இந்த நியூ லைஃபை அட்ஜஸ்ட் பண்றதுக்கு நம்மளும் கொஞ்சம் டைம் கொடுக்கணும். சங்கர் சொன்ன மாதிரி நம்மளும் அவரை புரிஞ்சிக்க ட்ரை பண்ணனும்.” என்று நினைத்துக் கொண்டாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு லஞ்ச் டைம் முடிந்துவிட, அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றார்கள். அப்படியே அன்றைய நாள் அவர்கள் அனைவருக்கும் பிஸியாக சென்றது. இரவு வீடு திரும்பும் போதும் தினேஷின் காரில் அவர்கள் நால்வரும் ஒன்றாகத்தான் வந்தார்கள். வழக்கம் போல சங்கர் கதவைத் திறந்து வீட்டின் உள்ளே செல்ல, மற்ற மூவரும் அவனை பின் தொடர்ந்து உள்ளே சென்றார்கள். ரெப்ரெஷ் ஆவதற்காக யாழினி தனது ரூமிற்கு சென்று விட, டிவியை ஆன் செய்துவிட்டு சோஃபாவில் அமர்ந்தான் சங்கர். அதனால் சுவாதி தனது ரூமை நோக்கி செல்ல, அவள் கையைப் பிடித்து தடுத்த தினேஷ் “நான் நமக்கு ஏசியும், wooden dining table setம் ஆர்டர் பண்ணி இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல டோர் டெலிவரி பண்ணிடுவோம்னு ஷோரூம்ல இருந்து மெசேஜ் வந்திருக்கு.
நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன். அதுக்குள்ள அவங்க கிட்ட இருந்து கால் வந்துச்சுன்னா, எடுத்து பேசு. டைனிங் டேபிளை ஹாலிலயே ஒரு ஓரமா போட்டுருங்க. நான் வந்த உடனே கையோட ஏசிய இன்ஸ்டால் பண்ணிடலாம்.” என்றான் அவளிடம். சரி என்பதைப்போல சுவாதி மண்டையை ஆட்ட, அவன் சொன்னதை கவனித்துக் கொண்டிருந்த சங்கர் “நானே டைனிங் டேபிள் வாங்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். பரவால்ல நீங்களே ஆர்டர் பண்ணிட்டீங்க. எவ்வளவுன்னு சொல்லுங்க. நம்ம அமௌன்ட் ஷேர் பண்ணிக்கலாம்.” என்றான்.
“பரவால்ல சங்கர், அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஆல்ரெடி இந்த வீட்ல எல்லாமே இருக்கு. நீங்களும் யாழினியும் தானே செலவு பண்ணி இதெல்லாம் வாங்கி இருப்பீங்க! இதுக்கு மேல நீங்க எதுவும் பண்ண வேண்டாம். அதான் புதுசா என்ன வாங்கணும்னு யோசிச்சு நான் டைனிங் டேபிள் வாங்கினேன். சரி சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு நான் சுவாதி கிட்ட கூட சொல்லல. இன்னும் கொஞ்ச நேரத்துல டெலிவரி பண்ணிடுவாங்க. நீங்க பார்த்து வாங்கி வைங்க. நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடறேன். கசகசன்னு இருக்கு.” என்ற தினேஷ் தனது ரூமை நோக்கி சென்றுவிட, இப்போது டெலிவரி ஆகிவிடும் என்று அவன் சொல்லிவிட்டு சென்றதால் அவனது மொபைல் ஃபோனை கையில் வைத்துக் கொண்டு ஹாலில் உள்ள சோபாவில் ஷங்கரின் அருகில் அமர்ந்தாள் சுவாதி.
அவள் முகம் வாட்டமாக இருப்பதை கவனித்த சங்கர் “டீ போட்டுட்டு வரேன் குடிக்கிறியா?” என்று கேட்க, “இல்ல பரவால்ல விடுங்க.” என்று அவள் சொல்ல, “நீ இன்னும் mood offல தான் இருக்கியா? நீ இவ்ளோ யோசிக்கிற அளவுக்கு எல்லாம் தினேஷ் இல்ல ஸ்வாதி. நம்ம ஒரு நாளைக்கு எத்தனை விதமான ஆளுங்கள பாக்கிறோம்.. அவங்க கூட எல்லாம் compare பண்ணும் போது, தினேஷ் எவ்ளவோ பரவால்ல. நீ ரொம்ப judgementalஆ இருக்கன்னு எனக்கு தோணுது. எதுவா இருந்தாலும், எல்லாமே நார்மல் ஆகறதுக்கு கொஞ்ச நாள் ஆகும். அதுவரைக்கும் நீ வெயிட் பண்ணித்தான் ஆகணும். நீ டிவி பாத்துட்டு இரு. நான் போய் டீ போட்டுட்டு வரேன். ஷோரூம்ல இருந்து டெலிவரிக்காக கால் பண்ணாங்கன்னா, அவங்கள என்ட்ரன்ஸ் கிட்ட வெயிட் பண்ண சொல்லு. நான் கீழ போய் வாட்ச்மேன் கிட்ட சொல்லி அவங்கள கூட்டிட்டு வரேன்.” என்ற சங்கர் டீ போடுவதற்காக கிச்சனுக்கு சென்றான்.
சில நிமிடங்களுக்கு பிறகு ஷங்கர் டீயுடன் அங்கே வர, சரியாக தினேஷின் நம்பருக்கு ஷோரூமில் இருந்து கால் வந்தது. அதை அட்டென்ட் செய்து சுவாதி அவர்களிடம் தங்களது லொகேஷனை சொல்வதற்காக திணறி கொண்டிருக்க, அவள் கையில் இருந்த ஃபோனை வாங்கிய சங்கர் மறுமுனையில் இருந்தவர்களுடன் பேசியபடி கீழே சென்றான். அவன் கொண்டு வந்த சூடான டீயை சோஃபாவில் அமர்ந்து சுவாதி குடித்துக் கொண்டிருக்க, குளித்து முடித்துவிட்டு t-shirt and shortsக்கு மாறி இருந்த தினேஷ் அங்கே வந்து அவளிடம் “கால் வந்துச்சா?” என்று சாதாரணமாக கேட்டான்.
“ம்ம்.. அவங்க பக்கத்துல வந்துட்டாங்களம். கால் பண்ணாங்க. சங்கர் அவங்க எங்க இருக்கிறாங்கன்னு பார்க்க போயிருக்காரு. உங்க ஃபோன் அவர்கிட்ட தான் இருக்கு.” என்று ஸ்வாதி சொல்ல, “ஓகே அவங்க வரட்டும் பாத்துக்கலாம்.” என்ற தினேஷ் அவள் அருகில் சோஃபாவில் அமர்ந்தான். இப்போது அவனை ஓரக்கண்ணால் பார்த்த சுவாதிக்கு சங்கர் சொன்னதெல்லாம் ஞாபகம் வர, அவன் மீது தனக்கு இருந்த கோபம் அனைத்தையும் மறந்து விட்டு அவனது தோள்களில் சாய்ந்து கொண்டாள் சுவாதி. அவளுக்கு அவனிடம் இருந்து கிடைக்கும் அரவணைப்பு தேவையாக இருந்தது.
அது தினேஷுக்கும் புரிய, அவன் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான். டிவியை ஏற்கனவே ஆன் செய்து விட்டு சென்றிருந்த சங்கர் ஒரு மியூசிக் சேனலில் வைத்திருந்ததால், அப்போது சரியாக,
இறைவனாய் தந்த இறைவியே..
இருளினில் காணும் ஓவியமே..
உயிர் வரை உந்தன் மடியிலே..
வலிகளை போக்கும் காதல் பார்வையில் உலகமே காலின் அடியிலே.. என்ற பாடல் ஓடியது. அதனால் காதல் கொண்ட கண்களுடன் சுவாதி தன் கணவனை பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் இருவருக்குமே என்ன தான் இருந்தாலும் இதுதான் தங்களுடைய வாழ்க்கை. தன் அருகில் இருப்பவர் தான் தனது வாழ்க்கை துணை என்ற எண்ணம் ஏற்பட்டது.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-27
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-27
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.