ஏனோ தெரியவில்லை தெரிந்தோ தெரியாமலோ தினேஷ் செய்யும் ஒவ்வொரு விஷயமும் சுவாதியின் மனதை காயப்படுத்திக் கொண்டே இருந்தது. இப்போது அவன் செய்தது எல்லாம் ரொம்ப அதிகமாகவே அவளுக்கு தோன்ற, “நமக்கு மேரேஜ் ஆனது ஆபீஸ்ல இருக்குறவங்களுக்கு தெரிய வேண்டாம். இனிமே இப்படி வராத. சீக்கிரம் நான் கிளம்பறதுக்குள்ள இதை மாத்துன்னு பொறுமையா ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நானே என் தாலியை dressக்குள்ள வச்சு பின் பண்ணி இருப்பேன்ல.. இவர் கட்டுன தாலிய இவர் கையாலையே கழட்டி போட்டுட்டு போறாரு.. இவர் எல்லாம் என்ன மனுஷனோ தெரியல.
என்னை கல்யாணம் பண்றதுல இவ்ளோ பிரச்சனை இருந்தா, எதுக்கு என்னை கல்யாணம் பண்ணனும்? நானா இவர் பின்னாடி சுத்தி கல்யாணம் பண்ணா இவரை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு இருந்தேன்? இவங்க வீட்ல இருந்து தானே என்னை வந்து பொண்ணு கேட்டாங்க.. ச்சே.. அப்பவே இவரைப் பத்தி யோசிச்சு இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நான் சொல்லி இருக்கணும். எங்களுக்கு மேரேஜ் ஆகி முழுசா ரெண்டு நாள் கூட ஆகல. அதுக்குள்ள இது இங்க வந்து நிக்குது. ஐயோ கடவுளே.. கொஞ்சம் கூட ஒரு விஷயத்தை பொறுமையா பேச மாட்டேங்கிறாரு. இவன மாதிரி ஒரு ஆள் கூட எப்படி தான் வாழ போறேன்னு தெரியல.” என்று நினைத்து சத்தம் இன்றி கண்ணீர் சிந்திய சுவாதி அவன் டேபிளில் வைத்து விட்டு சென்ற தனது புது தாலியை எடுத்துக் கொண்டு போய் அவளது பீரோவில் வைத்து பூட்டினாள்.
பின் அவன் சொன்னதை போலவே முகம் கழுவி விட்டு வந்தாள். இம்முறை அவளுக்கு அழகாக தயாராக வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. அதனால் பேருக்கு தன் முகத்தில் கொஞ்சம் பவுடரை போட்டுவிட்டு நெற்றியில் ஒரு பொட்டை வைத்துவிட்டு துப்பட்டாவை எடுத்து தனது தோள்களில் போட்டுக் கொண்டு வெளியே சென்றாள். ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்த சங்கர் அவர்கள் நால்வருக்கும் லஞ்ச் பாக்ஸ் தயார் செய்து கொண்டு வந்து ஹாலில் வைத்தான். தேவை இன்றி யாரிடமும் எதுவும் பேசாமல் கடமையே கண்ணாக சாப்பிட்டு முடித்த தினேஷ் பேருக்கு மனமே இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஸ்வாதியையும் மற்ற இருவரையும் பார்த்து “நான் கீழ போய் பார்க்கிங்கில இருந்து காரை எடுக்கிறேன். நீங்க கிளம்பி சீக்கிரம் கீழ வாங்க. நான் மெயின் ரோட்டில வெயிட் பண்றேன். நம்ம எல்லாரும் ஒன்னாவே கார்லயே ஆபீஸ் போயிடலாம்.” என்று சொல்லிவிட்டு கீழே சென்று விட்டான்.
அதற்கு மேல் சாப்பிட பிடிக்காமல் பாதியில் எழுந்து கொண்ட சுவாதி தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். “இந்தா லஞ்ச் பாக்ஸ்.. இத மறந்துட்டு போய்டாத.” என்ற சங்கர் அவளிடம் அவளது lunch பாக்ஸை எடுத்துக் கொடுத்தான். தேங்க்ஸ் என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்ன சுவாதி “நான் கீழ போறேன் நீங்க வாங்க.” என்று சொல்லிவிட்டு அவளும் வெளியே சென்று விட்டாள். “காலையில நான் பாக்கும்போது இவ நல்லா தானே இருந்தா.. அதுக்குள்ள என்ன ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி இருக்கா இவ? அவ நம்ம வீட்ல இருக்கான்றதுக்காக அவளோட பர்சனல் விஷயம் எல்லாத்திலயும் நம்ம தலையிட முடியாது. அவளா ஏதாவது நம்ம கிட்ட இல்லனா யாழினி கிட்ட சொன்னா என்னன்னு பாத்துக்கலாம்.” என்று நினைத்த சங்கர் யாழினி உடன் வெளியே சென்று வீட்டை பூட்டினான்.
அவர்கள் வருவதற்கு முன்பாகவே தனது காரை பார்க்கிங் ஏரியாவில் இருந்து எடுத்துக் கொண்டு என்ட்ரன்ஸ் வழியாக வெளியே சென்று சாலையின் ஓரமாக தினேஷ் நின்று கொண்டிருக்க, அதை கவனித்த சுவாதி இறுக்கமான முகத்துடன் சென்று கார் கதவை திறந்து அவன் அருகில் அமர்ந்தாள். அவளை எரிச்சலுடன் பார்த்த தினேஷ் அவளது கழுத்தில் இருந்த துப்பட்டாவை எடுத்து கீழே போட்டுவிட்டு “இப்ப எதுக்கு இதை போட்டு மூடிட்டு இருக்க? நீ என்ன இன்னும் ஸ்கூல் படிக்கிறதா நினைப்பா? வேணா இரண்டா மடிச்சு பின் குத்திட்டு ஆபீஸ்க்கு வாவேன்..
இப்படி உன்ன மாதிரி பட்டிக்காட்டுத்தனமா யாராவது ஆபீஸ்க்கு வர்றாங்களா? யாழினி உன் friend தானே! அவ எவ்ளோ Styleஆ trendyஆ டிரஸ் பண்றா.. உன் கூட இருக்கிறவங்க dressing senseஐ பார்க்கும்போது கூடவா உனக்கு upgrade ஆகணும்னு தோணாது? First of all, shawl எதுக்கு உனக்கு? அங்க என்ன இருக்கு மூடி மறைக்கறதுக்கு? என் கூட ஆபீஸ் வரும்போது, நீ இப்படி எல்லாம் வந்தின்னா நான் உன்னை கூட்டிட்டு போக மாட்டேன். சுடிதார் போட்டாலும் அதை எப்படி ஸ்டைலா போடுறதுன்னு கத்துக்கோ.” என்று அதட்டலாக சொன்னான்.
இதுவரை பல முறை அவள் தினேஷை தன் மனதிற்குள் ஷங்கருடன் ஒப்பிட்டு பார்த்திருக்கிறாள். ஆனால் வெளிப்படையாக தன்னிடம் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லி அவன் அவளை யாழினியுடன் ஒப்பிட்டு பேசுவதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏற்கனவே அவள் அம்மா யாழினியிடம் இருந்து கற்றுக்கொள் என்று சொன்னது வேறு இப்போது அவளுக்கு ஞாபகம் வர, “என்ன பண்ணாலும் இருக்கிறது தான் இருக்கும். அதுக்கு நான் என்ன பண்றது? இருக்குதோ இல்லையோ.. எனக்குன்னு வெட்கம் கூச்சம் எல்லாம் இருக்கு. என்னால மத்தவங்களுக்காக show காட்டிட்டு இருக்க முடியாது. உங்களுக்கு என்னை இப்படி பார்க்க பிடிக்கலைனா பாக்காதீங்க.” என்று வந்த கோபத்தில் அவன் முகத்தில் அறைந்தார் போல் சொல்லி விட்டாள் சுவாதி.
இதுவரை மற்றவர்களை அதிகாரம் செய்தே பழகிய தினேஷிற்கு தன்னைவிட சிறிய பெண் அதுவும் தனது மனைவி தன்னை எதிர்த்து பேசுவது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதனால் அவன் கோபமாக “நான் பாக்கலைனா பரவால்லையா உனக்கு? அப்ப வேற யார் பாக்குறதுக்கு டி நீ இப்படி எல்லாம் டிரஸ் பண்ணிட்டு இருக்க? நான் தாண்டி உன் புருஷன். நீ எனக்கு புடிச்ச மாதிரி தான் டிரஸ் பண்ணனும். நான் நீ இப்படி இருக்கிறது புடிக்கலைன்னு சொன்னா, அதை எனக்காக நீ சேஞ்ச் பண்ணி தான் ஆகணும். புரிஞ்சுதா? இனிமே நான் எது சொன்னாலும், இப்டி பதிலுக்கு பதில் பேசுற வேலை வச்சுக்காத.” என்று தன் விரலை நீட்டி எச்சரித்தான்.
“இவ்வளவு நேரம் நீயும் நானும் husband and wifeஏ இல்லைன்னு நினைச்சுக்கோ. ஆபீஸ் போனா நான் உன்ன கண்டுக்கவே மாட்டேன். அப்படி இப்படின்னு சொல்லிட்டு.. இப்ப நான் உன் புருஷன். நான் பாக்குறதுக்காக தான் நீ டிரஸ் பண்ணனும். இது ஏன் இப்படி இருக்கு.. அது ஏன் அப்படி இருக்குன்னு கேள்வி கேட்கிறான்.. சரியான மாக்கானா இருப்பானா இவன்? இவன் கூட நான் வர்றதுனால, இவனுக்கு கௌரவ கொறச்சல் ஆகுது என்ற அளவுக்கு யோசிக்கிற இவன், என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டான்? தூரத்தில இருந்து இவனை பார்க்கும்போது இவன்கிட்ட எப்படா தனியா பேச டைம் கிடைக்கும்னு ஆசையா இருந்துச்சு.
இப்ப இரண்டு பேரும் பக்கத்திலயே இருக்கோம். பேசுறதுக்கு நிறைய டைம் கிடைக்குது. ஆனா எனக்கு என்னமோ இவன் கிட்ட பேசவே பிடிக்கல. வாய தொறந்தாலே என்னை இரிடேட் பண்ற மாதிரி தான் ஏதாவது பேசுறான்.” என்று நினைத்த ஸ்வாதி அதற்கு மேல் அவனிடம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று நினைத்து எழுந்து பின் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“இப்ப எதுக்கு டி நீ பின்னாடி போன? நம்ம இப்படி தனித்தனியா ஒக்காந்து இரக்கிறத பார்த்தா அவங்க ரெண்டு பேரும் நமக்குள்ள ஏதோ ப்ராப்ளம்னு நினைச்சுக்க மாட்டாங்களா?” என்று தினேஷ் திரும்பிப் பார்த்து கேட்க, “ஓஹோ அப்ப மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு எல்லாம் யோசிச்சு நீங்க கவலைப்படுவீங்க. ஆனா ஒவ்வொரு தடவையும் நமக்குள்ள ஆர்க்யூமென்ட் வரும்போது யோசிக்காம நீங்க என்கிட்ட வார்த்தைய விடுறீங்களே.. அப்போ நான் என்ன நினைப்பேன்னு யோசிச்சு பார்க்க மாட்டீங்களா? நான் உங்க கூட வர்றது உங்களுக்கு கௌரவ கொறச்சலா இருக்குன்னு இப்ப தானே ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வர்றதுன்னா வா இல்லனா வராதுன்னு சொன்னீங்க...
இப்ப நான் உங்க பக்கத்துல உட்க்காராம இருக்கிறது கூட உங்களுக்கு தப்பா தெரியுது. மொத்தத்தில நான் என்ன பண்ணாலும் உங்களுக்கு தப்பா மட்டும் தான் தெரியுது. நீங்க என்ன சரியா புரிஞ்சுக்காததுனால இப்படி பண்றீங்களா, இல்ல சும்மா வேணும்னே ஏதாவது சொல்லி என்னை குறை சொல்லணும் என்பதற்காகவே நீங்க பண்றீங்களான்னு எனக்கு ஒண்ணுமே புரியல தினேஷ். I really don't like it.” என்று கோபமாக சொன்னாள் ஸ்வாதி.
“நான் பண்றது பிடிக்கலையா இல்ல உனக்கு என்னையே பிடிக்கலையா? நமக்கு மேரேஜ் ஆகி முழுசா ஒன் வீக் கூட ஆகல. அதுக்குள்ள என் மேல உனக்கு இவ்ளோ கம்ப்ளைன்டா? நமக்கு மேரேஜ் ஆகுறதுக்கு முன்னாடி வரைக்கும் என் கிட்ட பேசுறதுக்கு பயந்து யோசிச்சு யோசிச்சு பேசுன.. இப்ப என்ன டி வாய் நீளுது? இதெல்லாம் உனக்கு யார் கொடுக்கிற தைரியம்?” என்று தினேஷ் அவளிடம் குத்தலாக கேட்க, சுவாதி அதற்கு பதில் சொல்ல வருவதற்குள் அங்கே ஜோடியாக வந்த ஷங்கரும் யாழினியும் பின் சீட்டில் அவள் அருகில் வந்து அமர்ந்தார்கள். முதலில் காருக்குள் ஏறிய சங்கர் தான் அவள் அருகில் அமர வேண்டியதாயிற்று.
தொடரும்...
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
facebook.com
என்னை கல்யாணம் பண்றதுல இவ்ளோ பிரச்சனை இருந்தா, எதுக்கு என்னை கல்யாணம் பண்ணனும்? நானா இவர் பின்னாடி சுத்தி கல்யாணம் பண்ணா இவரை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு இருந்தேன்? இவங்க வீட்ல இருந்து தானே என்னை வந்து பொண்ணு கேட்டாங்க.. ச்சே.. அப்பவே இவரைப் பத்தி யோசிச்சு இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நான் சொல்லி இருக்கணும். எங்களுக்கு மேரேஜ் ஆகி முழுசா ரெண்டு நாள் கூட ஆகல. அதுக்குள்ள இது இங்க வந்து நிக்குது. ஐயோ கடவுளே.. கொஞ்சம் கூட ஒரு விஷயத்தை பொறுமையா பேச மாட்டேங்கிறாரு. இவன மாதிரி ஒரு ஆள் கூட எப்படி தான் வாழ போறேன்னு தெரியல.” என்று நினைத்து சத்தம் இன்றி கண்ணீர் சிந்திய சுவாதி அவன் டேபிளில் வைத்து விட்டு சென்ற தனது புது தாலியை எடுத்துக் கொண்டு போய் அவளது பீரோவில் வைத்து பூட்டினாள்.
பின் அவன் சொன்னதை போலவே முகம் கழுவி விட்டு வந்தாள். இம்முறை அவளுக்கு அழகாக தயாராக வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. அதனால் பேருக்கு தன் முகத்தில் கொஞ்சம் பவுடரை போட்டுவிட்டு நெற்றியில் ஒரு பொட்டை வைத்துவிட்டு துப்பட்டாவை எடுத்து தனது தோள்களில் போட்டுக் கொண்டு வெளியே சென்றாள். ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்த சங்கர் அவர்கள் நால்வருக்கும் லஞ்ச் பாக்ஸ் தயார் செய்து கொண்டு வந்து ஹாலில் வைத்தான். தேவை இன்றி யாரிடமும் எதுவும் பேசாமல் கடமையே கண்ணாக சாப்பிட்டு முடித்த தினேஷ் பேருக்கு மனமே இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஸ்வாதியையும் மற்ற இருவரையும் பார்த்து “நான் கீழ போய் பார்க்கிங்கில இருந்து காரை எடுக்கிறேன். நீங்க கிளம்பி சீக்கிரம் கீழ வாங்க. நான் மெயின் ரோட்டில வெயிட் பண்றேன். நம்ம எல்லாரும் ஒன்னாவே கார்லயே ஆபீஸ் போயிடலாம்.” என்று சொல்லிவிட்டு கீழே சென்று விட்டான்.
அதற்கு மேல் சாப்பிட பிடிக்காமல் பாதியில் எழுந்து கொண்ட சுவாதி தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். “இந்தா லஞ்ச் பாக்ஸ்.. இத மறந்துட்டு போய்டாத.” என்ற சங்கர் அவளிடம் அவளது lunch பாக்ஸை எடுத்துக் கொடுத்தான். தேங்க்ஸ் என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்ன சுவாதி “நான் கீழ போறேன் நீங்க வாங்க.” என்று சொல்லிவிட்டு அவளும் வெளியே சென்று விட்டாள். “காலையில நான் பாக்கும்போது இவ நல்லா தானே இருந்தா.. அதுக்குள்ள என்ன ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி இருக்கா இவ? அவ நம்ம வீட்ல இருக்கான்றதுக்காக அவளோட பர்சனல் விஷயம் எல்லாத்திலயும் நம்ம தலையிட முடியாது. அவளா ஏதாவது நம்ம கிட்ட இல்லனா யாழினி கிட்ட சொன்னா என்னன்னு பாத்துக்கலாம்.” என்று நினைத்த சங்கர் யாழினி உடன் வெளியே சென்று வீட்டை பூட்டினான்.
அவர்கள் வருவதற்கு முன்பாகவே தனது காரை பார்க்கிங் ஏரியாவில் இருந்து எடுத்துக் கொண்டு என்ட்ரன்ஸ் வழியாக வெளியே சென்று சாலையின் ஓரமாக தினேஷ் நின்று கொண்டிருக்க, அதை கவனித்த சுவாதி இறுக்கமான முகத்துடன் சென்று கார் கதவை திறந்து அவன் அருகில் அமர்ந்தாள். அவளை எரிச்சலுடன் பார்த்த தினேஷ் அவளது கழுத்தில் இருந்த துப்பட்டாவை எடுத்து கீழே போட்டுவிட்டு “இப்ப எதுக்கு இதை போட்டு மூடிட்டு இருக்க? நீ என்ன இன்னும் ஸ்கூல் படிக்கிறதா நினைப்பா? வேணா இரண்டா மடிச்சு பின் குத்திட்டு ஆபீஸ்க்கு வாவேன்..
இப்படி உன்ன மாதிரி பட்டிக்காட்டுத்தனமா யாராவது ஆபீஸ்க்கு வர்றாங்களா? யாழினி உன் friend தானே! அவ எவ்ளோ Styleஆ trendyஆ டிரஸ் பண்றா.. உன் கூட இருக்கிறவங்க dressing senseஐ பார்க்கும்போது கூடவா உனக்கு upgrade ஆகணும்னு தோணாது? First of all, shawl எதுக்கு உனக்கு? அங்க என்ன இருக்கு மூடி மறைக்கறதுக்கு? என் கூட ஆபீஸ் வரும்போது, நீ இப்படி எல்லாம் வந்தின்னா நான் உன்னை கூட்டிட்டு போக மாட்டேன். சுடிதார் போட்டாலும் அதை எப்படி ஸ்டைலா போடுறதுன்னு கத்துக்கோ.” என்று அதட்டலாக சொன்னான்.
இதுவரை பல முறை அவள் தினேஷை தன் மனதிற்குள் ஷங்கருடன் ஒப்பிட்டு பார்த்திருக்கிறாள். ஆனால் வெளிப்படையாக தன்னிடம் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லி அவன் அவளை யாழினியுடன் ஒப்பிட்டு பேசுவதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏற்கனவே அவள் அம்மா யாழினியிடம் இருந்து கற்றுக்கொள் என்று சொன்னது வேறு இப்போது அவளுக்கு ஞாபகம் வர, “என்ன பண்ணாலும் இருக்கிறது தான் இருக்கும். அதுக்கு நான் என்ன பண்றது? இருக்குதோ இல்லையோ.. எனக்குன்னு வெட்கம் கூச்சம் எல்லாம் இருக்கு. என்னால மத்தவங்களுக்காக show காட்டிட்டு இருக்க முடியாது. உங்களுக்கு என்னை இப்படி பார்க்க பிடிக்கலைனா பாக்காதீங்க.” என்று வந்த கோபத்தில் அவன் முகத்தில் அறைந்தார் போல் சொல்லி விட்டாள் சுவாதி.
இதுவரை மற்றவர்களை அதிகாரம் செய்தே பழகிய தினேஷிற்கு தன்னைவிட சிறிய பெண் அதுவும் தனது மனைவி தன்னை எதிர்த்து பேசுவது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதனால் அவன் கோபமாக “நான் பாக்கலைனா பரவால்லையா உனக்கு? அப்ப வேற யார் பாக்குறதுக்கு டி நீ இப்படி எல்லாம் டிரஸ் பண்ணிட்டு இருக்க? நான் தாண்டி உன் புருஷன். நீ எனக்கு புடிச்ச மாதிரி தான் டிரஸ் பண்ணனும். நான் நீ இப்படி இருக்கிறது புடிக்கலைன்னு சொன்னா, அதை எனக்காக நீ சேஞ்ச் பண்ணி தான் ஆகணும். புரிஞ்சுதா? இனிமே நான் எது சொன்னாலும், இப்டி பதிலுக்கு பதில் பேசுற வேலை வச்சுக்காத.” என்று தன் விரலை நீட்டி எச்சரித்தான்.
“இவ்வளவு நேரம் நீயும் நானும் husband and wifeஏ இல்லைன்னு நினைச்சுக்கோ. ஆபீஸ் போனா நான் உன்ன கண்டுக்கவே மாட்டேன். அப்படி இப்படின்னு சொல்லிட்டு.. இப்ப நான் உன் புருஷன். நான் பாக்குறதுக்காக தான் நீ டிரஸ் பண்ணனும். இது ஏன் இப்படி இருக்கு.. அது ஏன் அப்படி இருக்குன்னு கேள்வி கேட்கிறான்.. சரியான மாக்கானா இருப்பானா இவன்? இவன் கூட நான் வர்றதுனால, இவனுக்கு கௌரவ கொறச்சல் ஆகுது என்ற அளவுக்கு யோசிக்கிற இவன், என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டான்? தூரத்தில இருந்து இவனை பார்க்கும்போது இவன்கிட்ட எப்படா தனியா பேச டைம் கிடைக்கும்னு ஆசையா இருந்துச்சு.
இப்ப இரண்டு பேரும் பக்கத்திலயே இருக்கோம். பேசுறதுக்கு நிறைய டைம் கிடைக்குது. ஆனா எனக்கு என்னமோ இவன் கிட்ட பேசவே பிடிக்கல. வாய தொறந்தாலே என்னை இரிடேட் பண்ற மாதிரி தான் ஏதாவது பேசுறான்.” என்று நினைத்த ஸ்வாதி அதற்கு மேல் அவனிடம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று நினைத்து எழுந்து பின் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“இப்ப எதுக்கு டி நீ பின்னாடி போன? நம்ம இப்படி தனித்தனியா ஒக்காந்து இரக்கிறத பார்த்தா அவங்க ரெண்டு பேரும் நமக்குள்ள ஏதோ ப்ராப்ளம்னு நினைச்சுக்க மாட்டாங்களா?” என்று தினேஷ் திரும்பிப் பார்த்து கேட்க, “ஓஹோ அப்ப மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு எல்லாம் யோசிச்சு நீங்க கவலைப்படுவீங்க. ஆனா ஒவ்வொரு தடவையும் நமக்குள்ள ஆர்க்யூமென்ட் வரும்போது யோசிக்காம நீங்க என்கிட்ட வார்த்தைய விடுறீங்களே.. அப்போ நான் என்ன நினைப்பேன்னு யோசிச்சு பார்க்க மாட்டீங்களா? நான் உங்க கூட வர்றது உங்களுக்கு கௌரவ கொறச்சலா இருக்குன்னு இப்ப தானே ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வர்றதுன்னா வா இல்லனா வராதுன்னு சொன்னீங்க...
இப்ப நான் உங்க பக்கத்துல உட்க்காராம இருக்கிறது கூட உங்களுக்கு தப்பா தெரியுது. மொத்தத்தில நான் என்ன பண்ணாலும் உங்களுக்கு தப்பா மட்டும் தான் தெரியுது. நீங்க என்ன சரியா புரிஞ்சுக்காததுனால இப்படி பண்றீங்களா, இல்ல சும்மா வேணும்னே ஏதாவது சொல்லி என்னை குறை சொல்லணும் என்பதற்காகவே நீங்க பண்றீங்களான்னு எனக்கு ஒண்ணுமே புரியல தினேஷ். I really don't like it.” என்று கோபமாக சொன்னாள் ஸ்வாதி.
“நான் பண்றது பிடிக்கலையா இல்ல உனக்கு என்னையே பிடிக்கலையா? நமக்கு மேரேஜ் ஆகி முழுசா ஒன் வீக் கூட ஆகல. அதுக்குள்ள என் மேல உனக்கு இவ்ளோ கம்ப்ளைன்டா? நமக்கு மேரேஜ் ஆகுறதுக்கு முன்னாடி வரைக்கும் என் கிட்ட பேசுறதுக்கு பயந்து யோசிச்சு யோசிச்சு பேசுன.. இப்ப என்ன டி வாய் நீளுது? இதெல்லாம் உனக்கு யார் கொடுக்கிற தைரியம்?” என்று தினேஷ் அவளிடம் குத்தலாக கேட்க, சுவாதி அதற்கு பதில் சொல்ல வருவதற்குள் அங்கே ஜோடியாக வந்த ஷங்கரும் யாழினியும் பின் சீட்டில் அவள் அருகில் வந்து அமர்ந்தார்கள். முதலில் காருக்குள் ஏறிய சங்கர் தான் அவள் அருகில் அமர வேண்டியதாயிற்று.
தொடரும்...
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter- 23
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter- 23
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.