“சரி நான் முதல்ல இந்த வேலையை செய்யுறேன்…. நீ வர்றதுக்குள்ள ரிசல்ட் கூட வந்துடும்” என்று சனந்தா கூறி ஃபோனை வைத்தாள். சனந்தா சரவணனிடம் ஃபோனை கொடுத்து, “கொஞ்சம் வெச்சிருக்கீங்களா?? நான் இந்த பூ இலையை மட்டும் பறிச்சுக்கிறேன்… ம்ம் பறிச்சிக்கலாம்ல” என்று சனந்தா கேட்க, “ம்ம்.. பறிச்சிக்கோ அதுல என்ன இருக்கு” என்று சரவணன் கூறி சனந்தாவின் ஃபோனை வாங்கி வைத்துக் கொண்டான்.
“என்னது அது?? எதுக்கு அத பறிக்கிறா??” என்று விக்ரம் கேட்க, “எனக்கு மட்டும் என்ன தெரியும் டா… அவளே எல்லாத்தையும் முடிச்சிட்டு சொல்லுவா… சரி நீ இங்க இவள பார்த்துக்கோ… அங்க வேலை முடியுது நான் அவங்க கிட்ட பேசிட்டு வந்துடுறேன்” என்று கூறி சரவணன் சென்றான்.
“என்ன இந்த சரவணன் அண்ணா விக்ரம அந்த பொண்ணு கூட விட்டுட்டு இவர் போயிட்டாரு…. என்ன தான் நடக்குது அங்க” என்று கவிதா குழப்பத்தில் இருக்க, அதை கவனித்த வள்ளி “என்ன ஆச்சு கவிதா?” என்று கேட்க, “ஒன்னும் இல்ல அத்தை சும்மா தான் பார்த்துட்டு இருக்கேன்” என்று கவிதா கூறினாள்.
வள்ளி கவிதாவின் பார்வை போன இடத்தை பார்க்க, அங்கே விக்ரம் மற்றும் சனந்தா ஒன்றாக இருப்பதை பார்த்து புன்னகைத்துக் கொள்ள, அதை கண்டதும் கவிதாவுக்கு, “என்ன இவங்க கூட அவங்க ரெண்டு பேருக்கு சப்போர்ட் பண்ணுவாங்க போலயே” என்று மனதில் புலம்பிக் கொண்டாள் கவிதா.
“சரவணன் இந்தாங்க, இந்த பூவ பிடிச்சுக்கோங்க” என்று விக்ரம் இருப்பதை அறியாமல் சனந்தா கூற, விக்ரம் அவள் அருகில் சென்று அவளுடன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு கையை நீட்டவும் சனந்தா அவனை பார்க்காமல் அவன் கையில் பூ மற்றும் இலைகளை கொடுத்தாள்.
“சரவணன் ஒரு சின்ன டவுட், இந்த செடி இங்க மட்டும் தான் இருக்கா இல்ல வேற எங்கேயாவது பார்த்து இருக்காங்களா… நீங்க பார்க்கலன்னாலும் வேற யார் கிட்ட ஆச்சும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க… ஏன்னா இது ரொம்ப நல்ல ஹர்ப்…. இதுல நிறைய ப்ராடக்ட்ஸ் தயாரிக்கலாம்…. அதுலயும் இந்த ஹர்ப் எல்லா இடத்திலும் விளையாது” என்று சனா பேசி கொண்டு இருக்கையில், விக்ரம் அவனையும் அறியாமல் அவளை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“நான் பேசிட்டே இருக்கேன் பதிலே சொல்ல மாட்டேன்றீங்களே?” என்று சனந்தா திரும்பி பார்க்க, விக்ரம் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியில் அவள் சாய்ந்து விழ போகவும், அவளின் முன்கையை பிடித்து இழுத்து நிறுத்தினான் விக்ரம்.
சனந்தாவுக்கு மறுபடியும் ஈர்த்தது அவனுடைய கண்களே… அவளையும் அறியாமல் அவனது கண்களை சிறிது நேரம் அவள் உற்று பார்க்க, இடது கண்ணை ஒட்டி சிறியதோர் மச்சம் தெரிந்தது. அம்மச்சம் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும் என்ற அளவுக்கு தான் இருந்தது. அவள் அதை உன்னிப்பாக கவனிக்கவும், “அடச்சே அவர் என்னை அவ்ளோ கோவமா பேசுறாரு நான் ஏன் அவரை இப்படி பார்த்து ரசிச்சிட்டு இருக்கேன்” என்று சனந்தா அவளுக்குள் அவளே திட்டிக் கொண்டு, அவள் கையை விடுவித்துக் கொண்டு எழுந்து, தேங்க்யூ!! என்று கூறி, விக்ரம் கையில் இருந்த பூவையும் இலைகளையும் வாங்கிக் கொண்டு ஸ்ரீனிவாசன் அருகில் சென்றாள்.
“என்னது சனா இது?” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “இதுக்கு பேரு சேஜ் னு சொல்லுவோம் அங்கிள் நாங்க… நம்ம யூஸ் பண்ற இந்தியன் ஹர்ப்ஸ்ல ஒரு வகை இது…. நம்ம பெருசா பயன்படுத்த மாட்டோம் வெளிநாட்டு சமையல்ல நிறைய பயன்படுத்துவாங்க… இது தமிழ்ல சீமை கற்பூர இலை அப்படி இல்லன்னா முனிவர் இல்லைன்னு சொல்லுவாங்கனு நினைக்கிறேன்…. இது பெருசா எல்லா இடத்துலயும் விளையாது…. அது தான் ஆச்சரியமா இருந்தது இதை பார்த்ததும்… அதான் கொஞ்சம் பறிச்சு இருக்கேன்…. இது பேக் பண்ணி எங்க டீம்கு அனுப்பினேன்னா அவங்க ரீசர்ச் டீம்க்கு அனுப்புவாங்க…. சோ, இத எந்த அளவுக்கு யூஸ் பண்ண முடியும்னு நம்ம தெரிஞ்சுக்கலாம்…. அப்படி தெரிஞ்சுகிட்டோம்னா இங்க நிறைய கிடைக்கும்னா நம்மளே நிறைய ப்ராடக்ட்ஸ் இது வெச்சு தயாரிக்கவும் செய்யலாம்” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா இங்க காட்டு” என்று வள்ளி ஆர்வத்துடன் வாங்கி பார்க்க, “இந்த இலை நிறைய இருக்குமே ஆத்தோரமும் நிறைய பார்த்திருக்கேன்… பாட்டி கூட ஒரு வாட்டி ஏதோ மூலிகை எடுக்க போன அப்பவும் இத நான் பார்த்திருக்கேன் காட்டுக்குள்ள” என்று வள்ளி கூறினார். கவிதாவும் வந்து பார்க்க, “இது இங்கு நிறையவே கிடைக்கும் இது என்னன்னு தெரியாதுன்னு பெரும்பாலும் பறிக்க மாட்டாங்க இங்க யாரும்….. இந்த பூ அழகா இருக்கும்னு அப்பப்போ பறிச்சு வெச்சுப்போமே தவிர இது எப்படி பயன்படுத்தனும்னு கூட யாருக்கும் தெரியாது” என்று கவிதா கூறினாள்.
“அப்படியா…. இந்த இலை தான்னு ஓரளவுக்கு உறுதியா இருக்கு …. வாசனை கூட ஓரளவுக்கு அப்படித் தான் வருது… இதை காய வெச்சு அந்த இலை எல்லாம் டீ பேக்ஸ் மாதிரி வரும், அத டீயா கூட குடிச்சிருக்கேன் நான் வெளிநாட்டில இருக்கும் போது” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா!!! இப்படியும் பண்ணலாமா??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “ஆமா அங்கிள் அது மட்டும் இல்ல, இதுல இந்த பூவ கூட சாப்பிடறதுக்கும் பயன்படுத்துவாங்க… அதே மாதிரி இந்த இலையில மெடிசினல் வேல்யூ கூட ஜாஸ்தி இருக்கு…. இதோட ரிசல்ட்ஸ் எல்லாம் வந்ததுக்கு அப்புறமா என்னன்னு பார்க்கலாம்” என்று சனந்தா கூறினாள்.
“அப்படி ரிசல்ட் எல்லாம் வந்ததுக்கு அப்புறம் நம்மளே தயாரிக்க முடியுமா இந்த பொருட்களை??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “பண்ணலாம் அங்கிள்… என்ன இங்கேயே பண்ணோம்னா எந்த கலப்படமும் நடக்காது… கொஞ்ச நாளைக்கு நம்ம வெச்சிருக்கணும்னா அதுக்கு என்ன பண்ணனும்னு நான் சொல்லித்தரேன்…. அந்த மாதிரி பண்ணோம்னா கலப்படம் இருக்காது, ப்ரோசஸ்ட்டு ஃபுட்டா ஆகாது, நம்ம நேச்சுரலாவே இந்த ப்ராடக்ட்ஸ் மார்க்கெட்டுக்கு கொண்டு போகலாம்” என்று சனந்தா கூறினாள்.
“அப்படி அமைஞ்சுதுன்னா நம்ம மக்களுக்கு இன்னும் வேலையும் வருமானமும் கிடைக்கும் இல்லப்பா” என்று சரவணன் மற்றும் விக்ரம் கூறிக் கொண்டே வரவும், “ஆமாண்டா அது தான் யோசிக்கிறேன்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.
“சரி ஓகே மா… முதல்ல நீ அனுப்பு… என்ன ரிசல்ட் வருதுன்னு பார்க்கலாம் அதுக்கப்புறம் என்ன பண்ணலாம் எப்படி பண்ணலாம்னு நம்ம பார்த்துக்கலாம்” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “கண்டிப்பாக அங்கிள் நாளைக்கே முடிஞ்ச அளவுக்கு இத அனுப்பிடுறேன்” என்று சனந்தா கூறினாள்.
“எப்படி அனுப்புவ??” என்று சரவணன் கேட்க, “நீங்க தான் இருக்கீங்களே… உங்க கிட்ட தான் கொடுக்கணும்… நான் நீட்டா பேக் பண்ணி கொடுத்துடுறேன்… ஊட்டில ஒருத்தரை வர சொல்றேன், நீங்க அவங்க கிட்ட குடுங்க…. அவங்க அதை இன்னும் நல்ல ப்ராப்பரா பேக் பண்ணி கொண்டு போவாங்க…. நம்ம அவர் கிட்ட கொடுத்துட்டோம்னா அவர் மீதி வேலையை பார்த்துப்பாரு” என்று சனந்தா கூறினாள்.
“எல்லாதுக்கும் நான் தான் பலி ஆடா உனக்கு?” என்று சரவணன் கேலியாக கூற, சனந்தா புன்னகைத்து, “ப்ளீஸ்!! கொஞ்சம் செஞ்சு கொடுங்க” என்று கேட்டாள். “அதெல்லாம் செய்வாங்க.. செய்யாம எங்க போயிடப் போறாங்க” என்று வள்ளி கூறவும், “அம்மா!!! நீங்களே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டா அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்” என்று சரவணன் கூறவும் அனைவரும் சிரித்து விட்டனர்.
என்ன தான் கவிதா அவர்களுடன் சேர்ந்து பேசி சிரித்தாலும் அவளுக்கு விக்ரம் சனந்தாவுடன் நடந்து கொள்வது அவளை குடைந்துக் கொண்டே தான் இருந்தது. “வேலை முடிஞ்சுதாப்பா?” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “எல்லாம் முடிஞ்சது பா… இனிமே இப்படியே காட்டுக்குள்ள போகலாம்” என்று விக்ரம் கூறவும், “ம்ம்… சரி வாங்க எல்லாரும் கிளம்பலாம்… இன்னும் கொஞ்ச நேரம் தான் இருட்ட ஆரம்பிச்சிடும்” என்று ஸ்ரீனிவாசன் கூறவும் அனைவரும் நடந்து சென்றனர்.
சனந்தா, ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி ஒன்றாக நடந்து செல்லவும், விக்ரம், கவிதா மற்றும் சரவணன் அவர்களுக்கு பின்னால் நடந்த வந்தனர். சனந்தா, ஸ்ரீனிவாசன் வள்ளி மூவரும் ஏதோ ஒன்று பேசிக் கொண்டே நடந்த செல்ல, விக்ரம் அவளை ரசித்துக் கொண்டு நடந்து வந்தான்.
அதை கவிதா பார்த்து பல முறை விக்ரமை அழைத்து ஏதாவது பேச வேண்டுமே என்று பேசினாலும் விக்ரம் மறுபடியும் சனந்தாவையே தான் பார்த்துக் கொண்டே இருந்தான். இதை உணர்ந்த சரவணன், கவிதாவிடம் ஏதோ பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான். அவளுடைய வீடு வந்ததும் கவிதா விடை பெற்றுக் கொண்டாள்.
சரவணன் கைபேசி ஒலிக்க, “யார்ரா எனக்கு மெசேஜ் பண்றது?” என்று சரவணன் கைபேசியை பார்க்கவும், சனந்தா, “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று மட்டும் அனுப்பி இருந்தாள். அதை விக்ரம் பார்த்து, “உன் கிட்ட என்ன பேசணும் அவ” என்று விக்ரம் கேட்க, “எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் உனக்கு என்னடா?” என்று சரவணன் விக்ரமை வெறுப்பேற்ற கூறவும், “எனக்கு தெரியாது நீ எப்ப அவ கிட்ட பேச போறியோ என்னையும் கூட்டிட்டு போ” என்று விக்ரம் கூறினான்.
சரவணன் தலையில் அடித்துக் கொண்டு, “அவ என்கிட்ட பேசணும்னு நேர்ல கூட சொல்லல, ஒரு மெசேஜ் தான் பண்ணி இருக்கா அப்படின்னா ஏதாவது விஷயம் இருக்கும் பேசிட்டு வந்து சொல்றேன்… உன் கிட்ட சொல்லாம வேற எங்க டா போக போறேன்” என்று சரவணன் கூறவும், “இல்ல நீ பேசும் போது எனக்கு ஃபோன் பண்ணி வெச்சிரு நான் கேட்டுக்கிறேன்” என்ற விக்ரம் கூறினான்.
“சின்ன புள்ள மாதிரி பண்ணாத விக்கி” சரவணன் கூற, “சரி சரி ஓகே நீ பேசிட்டு வந்து சொல்லு…. எனக்கு என்னன்னா ஒரு வேளை என்னை பத்தி பேசுவாளோன்னு” என்று விக்ரம் கூற, “உன்ன பத்தி ஏன் பேச போறா…. அப்படியே உன்ன பத்தி பேசினாலும் கழுவி தான் ஊத்துவா” என்று சரவணன் கேலியாக கூற, விக்ரம் சரவணனின் தலையில் தட்டினான்.
“தலையில அடிக்காத டா…. நீ எப்ப இப்படி அவகிட்ட அடி வாங்க போறியோன்னு நான் காத்திட்டு இருக்கேன்” என்று சரவணன் கேலியாக பேசிக் கொண்டே அவர்கள் வீட்டிற்கு சென்று ஃப்ரஷ் அப் ஆகி சிறிது நேரம் அனைவரும் மொட்டை மாடியில் நின்று பேசி கொண்டிருந்தனர்.
சனந்தாவிற்கு இவர்களுடன் சேர்ந்து உணவருந்த நேரம் வரவும் எப்படியாவது அவளுடைய அறைக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, சரியாக வள்ளி அனைவரையும் இரவு உணவருந்த அழைத்தார்.
“ஹய்யோ!!! நான் இப்ப என்ன சொல்லி தப்பிக்கிறதுன்னு தெரியலையே… இவர் வேற இருக்காரு எனக்கு அது வேற ஒரு மாதிரி இருக்குமே” என்று சனந்தா நினைத்துக் கொண்டிருக்க, “சனா வா சாப்பிடலாம்… மதியம் கூட வரல இப்பயாவது சாப்பிட வா” என்று வள்ளி அழைக்கவும், வேறு வழிய இல்லாமல் அவர்களுடம் சேர்ந்து உணவருந்தினாள்.
சனந்தா எதுவும் பேசாமல், விக்ரமை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவள் உணவருந்தி விட்டு சரவணனுடன் சிறிது நேரம் வெளியில் நடந்து வருவதாக கூறி அவர்கள் இருவரும் மட்டும் நடக்க சென்றனர்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
“என்னது அது?? எதுக்கு அத பறிக்கிறா??” என்று விக்ரம் கேட்க, “எனக்கு மட்டும் என்ன தெரியும் டா… அவளே எல்லாத்தையும் முடிச்சிட்டு சொல்லுவா… சரி நீ இங்க இவள பார்த்துக்கோ… அங்க வேலை முடியுது நான் அவங்க கிட்ட பேசிட்டு வந்துடுறேன்” என்று கூறி சரவணன் சென்றான்.
“என்ன இந்த சரவணன் அண்ணா விக்ரம அந்த பொண்ணு கூட விட்டுட்டு இவர் போயிட்டாரு…. என்ன தான் நடக்குது அங்க” என்று கவிதா குழப்பத்தில் இருக்க, அதை கவனித்த வள்ளி “என்ன ஆச்சு கவிதா?” என்று கேட்க, “ஒன்னும் இல்ல அத்தை சும்மா தான் பார்த்துட்டு இருக்கேன்” என்று கவிதா கூறினாள்.
வள்ளி கவிதாவின் பார்வை போன இடத்தை பார்க்க, அங்கே விக்ரம் மற்றும் சனந்தா ஒன்றாக இருப்பதை பார்த்து புன்னகைத்துக் கொள்ள, அதை கண்டதும் கவிதாவுக்கு, “என்ன இவங்க கூட அவங்க ரெண்டு பேருக்கு சப்போர்ட் பண்ணுவாங்க போலயே” என்று மனதில் புலம்பிக் கொண்டாள் கவிதா.
“சரவணன் இந்தாங்க, இந்த பூவ பிடிச்சுக்கோங்க” என்று விக்ரம் இருப்பதை அறியாமல் சனந்தா கூற, விக்ரம் அவள் அருகில் சென்று அவளுடன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு கையை நீட்டவும் சனந்தா அவனை பார்க்காமல் அவன் கையில் பூ மற்றும் இலைகளை கொடுத்தாள்.
“சரவணன் ஒரு சின்ன டவுட், இந்த செடி இங்க மட்டும் தான் இருக்கா இல்ல வேற எங்கேயாவது பார்த்து இருக்காங்களா… நீங்க பார்க்கலன்னாலும் வேற யார் கிட்ட ஆச்சும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க… ஏன்னா இது ரொம்ப நல்ல ஹர்ப்…. இதுல நிறைய ப்ராடக்ட்ஸ் தயாரிக்கலாம்…. அதுலயும் இந்த ஹர்ப் எல்லா இடத்திலும் விளையாது” என்று சனா பேசி கொண்டு இருக்கையில், விக்ரம் அவனையும் அறியாமல் அவளை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“நான் பேசிட்டே இருக்கேன் பதிலே சொல்ல மாட்டேன்றீங்களே?” என்று சனந்தா திரும்பி பார்க்க, விக்ரம் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியில் அவள் சாய்ந்து விழ போகவும், அவளின் முன்கையை பிடித்து இழுத்து நிறுத்தினான் விக்ரம்.
சனந்தாவுக்கு மறுபடியும் ஈர்த்தது அவனுடைய கண்களே… அவளையும் அறியாமல் அவனது கண்களை சிறிது நேரம் அவள் உற்று பார்க்க, இடது கண்ணை ஒட்டி சிறியதோர் மச்சம் தெரிந்தது. அம்மச்சம் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும் என்ற அளவுக்கு தான் இருந்தது. அவள் அதை உன்னிப்பாக கவனிக்கவும், “அடச்சே அவர் என்னை அவ்ளோ கோவமா பேசுறாரு நான் ஏன் அவரை இப்படி பார்த்து ரசிச்சிட்டு இருக்கேன்” என்று சனந்தா அவளுக்குள் அவளே திட்டிக் கொண்டு, அவள் கையை விடுவித்துக் கொண்டு எழுந்து, தேங்க்யூ!! என்று கூறி, விக்ரம் கையில் இருந்த பூவையும் இலைகளையும் வாங்கிக் கொண்டு ஸ்ரீனிவாசன் அருகில் சென்றாள்.
“என்னது சனா இது?” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “இதுக்கு பேரு சேஜ் னு சொல்லுவோம் அங்கிள் நாங்க… நம்ம யூஸ் பண்ற இந்தியன் ஹர்ப்ஸ்ல ஒரு வகை இது…. நம்ம பெருசா பயன்படுத்த மாட்டோம் வெளிநாட்டு சமையல்ல நிறைய பயன்படுத்துவாங்க… இது தமிழ்ல சீமை கற்பூர இலை அப்படி இல்லன்னா முனிவர் இல்லைன்னு சொல்லுவாங்கனு நினைக்கிறேன்…. இது பெருசா எல்லா இடத்துலயும் விளையாது…. அது தான் ஆச்சரியமா இருந்தது இதை பார்த்ததும்… அதான் கொஞ்சம் பறிச்சு இருக்கேன்…. இது பேக் பண்ணி எங்க டீம்கு அனுப்பினேன்னா அவங்க ரீசர்ச் டீம்க்கு அனுப்புவாங்க…. சோ, இத எந்த அளவுக்கு யூஸ் பண்ண முடியும்னு நம்ம தெரிஞ்சுக்கலாம்…. அப்படி தெரிஞ்சுகிட்டோம்னா இங்க நிறைய கிடைக்கும்னா நம்மளே நிறைய ப்ராடக்ட்ஸ் இது வெச்சு தயாரிக்கவும் செய்யலாம்” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா இங்க காட்டு” என்று வள்ளி ஆர்வத்துடன் வாங்கி பார்க்க, “இந்த இலை நிறைய இருக்குமே ஆத்தோரமும் நிறைய பார்த்திருக்கேன்… பாட்டி கூட ஒரு வாட்டி ஏதோ மூலிகை எடுக்க போன அப்பவும் இத நான் பார்த்திருக்கேன் காட்டுக்குள்ள” என்று வள்ளி கூறினார். கவிதாவும் வந்து பார்க்க, “இது இங்கு நிறையவே கிடைக்கும் இது என்னன்னு தெரியாதுன்னு பெரும்பாலும் பறிக்க மாட்டாங்க இங்க யாரும்….. இந்த பூ அழகா இருக்கும்னு அப்பப்போ பறிச்சு வெச்சுப்போமே தவிர இது எப்படி பயன்படுத்தனும்னு கூட யாருக்கும் தெரியாது” என்று கவிதா கூறினாள்.
“அப்படியா…. இந்த இலை தான்னு ஓரளவுக்கு உறுதியா இருக்கு …. வாசனை கூட ஓரளவுக்கு அப்படித் தான் வருது… இதை காய வெச்சு அந்த இலை எல்லாம் டீ பேக்ஸ் மாதிரி வரும், அத டீயா கூட குடிச்சிருக்கேன் நான் வெளிநாட்டில இருக்கும் போது” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா!!! இப்படியும் பண்ணலாமா??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “ஆமா அங்கிள் அது மட்டும் இல்ல, இதுல இந்த பூவ கூட சாப்பிடறதுக்கும் பயன்படுத்துவாங்க… அதே மாதிரி இந்த இலையில மெடிசினல் வேல்யூ கூட ஜாஸ்தி இருக்கு…. இதோட ரிசல்ட்ஸ் எல்லாம் வந்ததுக்கு அப்புறமா என்னன்னு பார்க்கலாம்” என்று சனந்தா கூறினாள்.
“அப்படி ரிசல்ட் எல்லாம் வந்ததுக்கு அப்புறம் நம்மளே தயாரிக்க முடியுமா இந்த பொருட்களை??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “பண்ணலாம் அங்கிள்… என்ன இங்கேயே பண்ணோம்னா எந்த கலப்படமும் நடக்காது… கொஞ்ச நாளைக்கு நம்ம வெச்சிருக்கணும்னா அதுக்கு என்ன பண்ணனும்னு நான் சொல்லித்தரேன்…. அந்த மாதிரி பண்ணோம்னா கலப்படம் இருக்காது, ப்ரோசஸ்ட்டு ஃபுட்டா ஆகாது, நம்ம நேச்சுரலாவே இந்த ப்ராடக்ட்ஸ் மார்க்கெட்டுக்கு கொண்டு போகலாம்” என்று சனந்தா கூறினாள்.
“அப்படி அமைஞ்சுதுன்னா நம்ம மக்களுக்கு இன்னும் வேலையும் வருமானமும் கிடைக்கும் இல்லப்பா” என்று சரவணன் மற்றும் விக்ரம் கூறிக் கொண்டே வரவும், “ஆமாண்டா அது தான் யோசிக்கிறேன்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.
“சரி ஓகே மா… முதல்ல நீ அனுப்பு… என்ன ரிசல்ட் வருதுன்னு பார்க்கலாம் அதுக்கப்புறம் என்ன பண்ணலாம் எப்படி பண்ணலாம்னு நம்ம பார்த்துக்கலாம்” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “கண்டிப்பாக அங்கிள் நாளைக்கே முடிஞ்ச அளவுக்கு இத அனுப்பிடுறேன்” என்று சனந்தா கூறினாள்.
“எப்படி அனுப்புவ??” என்று சரவணன் கேட்க, “நீங்க தான் இருக்கீங்களே… உங்க கிட்ட தான் கொடுக்கணும்… நான் நீட்டா பேக் பண்ணி கொடுத்துடுறேன்… ஊட்டில ஒருத்தரை வர சொல்றேன், நீங்க அவங்க கிட்ட குடுங்க…. அவங்க அதை இன்னும் நல்ல ப்ராப்பரா பேக் பண்ணி கொண்டு போவாங்க…. நம்ம அவர் கிட்ட கொடுத்துட்டோம்னா அவர் மீதி வேலையை பார்த்துப்பாரு” என்று சனந்தா கூறினாள்.
“எல்லாதுக்கும் நான் தான் பலி ஆடா உனக்கு?” என்று சரவணன் கேலியாக கூற, சனந்தா புன்னகைத்து, “ப்ளீஸ்!! கொஞ்சம் செஞ்சு கொடுங்க” என்று கேட்டாள். “அதெல்லாம் செய்வாங்க.. செய்யாம எங்க போயிடப் போறாங்க” என்று வள்ளி கூறவும், “அம்மா!!! நீங்களே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டா அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்” என்று சரவணன் கூறவும் அனைவரும் சிரித்து விட்டனர்.
என்ன தான் கவிதா அவர்களுடன் சேர்ந்து பேசி சிரித்தாலும் அவளுக்கு விக்ரம் சனந்தாவுடன் நடந்து கொள்வது அவளை குடைந்துக் கொண்டே தான் இருந்தது. “வேலை முடிஞ்சுதாப்பா?” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “எல்லாம் முடிஞ்சது பா… இனிமே இப்படியே காட்டுக்குள்ள போகலாம்” என்று விக்ரம் கூறவும், “ம்ம்… சரி வாங்க எல்லாரும் கிளம்பலாம்… இன்னும் கொஞ்ச நேரம் தான் இருட்ட ஆரம்பிச்சிடும்” என்று ஸ்ரீனிவாசன் கூறவும் அனைவரும் நடந்து சென்றனர்.
சனந்தா, ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி ஒன்றாக நடந்து செல்லவும், விக்ரம், கவிதா மற்றும் சரவணன் அவர்களுக்கு பின்னால் நடந்த வந்தனர். சனந்தா, ஸ்ரீனிவாசன் வள்ளி மூவரும் ஏதோ ஒன்று பேசிக் கொண்டே நடந்த செல்ல, விக்ரம் அவளை ரசித்துக் கொண்டு நடந்து வந்தான்.
அதை கவிதா பார்த்து பல முறை விக்ரமை அழைத்து ஏதாவது பேச வேண்டுமே என்று பேசினாலும் விக்ரம் மறுபடியும் சனந்தாவையே தான் பார்த்துக் கொண்டே இருந்தான். இதை உணர்ந்த சரவணன், கவிதாவிடம் ஏதோ பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான். அவளுடைய வீடு வந்ததும் கவிதா விடை பெற்றுக் கொண்டாள்.
சரவணன் கைபேசி ஒலிக்க, “யார்ரா எனக்கு மெசேஜ் பண்றது?” என்று சரவணன் கைபேசியை பார்க்கவும், சனந்தா, “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று மட்டும் அனுப்பி இருந்தாள். அதை விக்ரம் பார்த்து, “உன் கிட்ட என்ன பேசணும் அவ” என்று விக்ரம் கேட்க, “எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் உனக்கு என்னடா?” என்று சரவணன் விக்ரமை வெறுப்பேற்ற கூறவும், “எனக்கு தெரியாது நீ எப்ப அவ கிட்ட பேச போறியோ என்னையும் கூட்டிட்டு போ” என்று விக்ரம் கூறினான்.
சரவணன் தலையில் அடித்துக் கொண்டு, “அவ என்கிட்ட பேசணும்னு நேர்ல கூட சொல்லல, ஒரு மெசேஜ் தான் பண்ணி இருக்கா அப்படின்னா ஏதாவது விஷயம் இருக்கும் பேசிட்டு வந்து சொல்றேன்… உன் கிட்ட சொல்லாம வேற எங்க டா போக போறேன்” என்று சரவணன் கூறவும், “இல்ல நீ பேசும் போது எனக்கு ஃபோன் பண்ணி வெச்சிரு நான் கேட்டுக்கிறேன்” என்ற விக்ரம் கூறினான்.
“சின்ன புள்ள மாதிரி பண்ணாத விக்கி” சரவணன் கூற, “சரி சரி ஓகே நீ பேசிட்டு வந்து சொல்லு…. எனக்கு என்னன்னா ஒரு வேளை என்னை பத்தி பேசுவாளோன்னு” என்று விக்ரம் கூற, “உன்ன பத்தி ஏன் பேச போறா…. அப்படியே உன்ன பத்தி பேசினாலும் கழுவி தான் ஊத்துவா” என்று சரவணன் கேலியாக கூற, விக்ரம் சரவணனின் தலையில் தட்டினான்.
“தலையில அடிக்காத டா…. நீ எப்ப இப்படி அவகிட்ட அடி வாங்க போறியோன்னு நான் காத்திட்டு இருக்கேன்” என்று சரவணன் கேலியாக பேசிக் கொண்டே அவர்கள் வீட்டிற்கு சென்று ஃப்ரஷ் அப் ஆகி சிறிது நேரம் அனைவரும் மொட்டை மாடியில் நின்று பேசி கொண்டிருந்தனர்.
சனந்தாவிற்கு இவர்களுடன் சேர்ந்து உணவருந்த நேரம் வரவும் எப்படியாவது அவளுடைய அறைக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, சரியாக வள்ளி அனைவரையும் இரவு உணவருந்த அழைத்தார்.
“ஹய்யோ!!! நான் இப்ப என்ன சொல்லி தப்பிக்கிறதுன்னு தெரியலையே… இவர் வேற இருக்காரு எனக்கு அது வேற ஒரு மாதிரி இருக்குமே” என்று சனந்தா நினைத்துக் கொண்டிருக்க, “சனா வா சாப்பிடலாம்… மதியம் கூட வரல இப்பயாவது சாப்பிட வா” என்று வள்ளி அழைக்கவும், வேறு வழிய இல்லாமல் அவர்களுடம் சேர்ந்து உணவருந்தினாள்.
சனந்தா எதுவும் பேசாமல், விக்ரமை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவள் உணவருந்தி விட்டு சரவணனுடன் சிறிது நேரம் வெளியில் நடந்து வருவதாக கூறி அவர்கள் இருவரும் மட்டும் நடக்க சென்றனர்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
Author: Bhavani Varun
Article Title: Chapter 22
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 22
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.