குழந்தைகள் அனைவரும் அவர்களின் விருப்பத்திற்கு போல் சனந்தாவின் வழிகாட்டுதலின்படி வரையவும் சனந்தா அவர்கள் வரைந்த பேப்பரை உடனே லேமினேட் ஷீட்ஸ் வைத்து லேமினேட் செய்து அதில் ஒரு சிறிய ஓட்டை போட்டு அதில் நூல் கட்டி அவர்களிடம் கொடுத்து, “இத நீங்க வீட்ல கொண்டு போய் மாட்டுங்க” என்று கூறினாள்.
குழந்தைகளும் அதை உற்சாகத்துடன் வாங்கிக் கொண்டு, “தேங்க்யூ அக்கா!!!” என்றனர். குழந்தைகளின் பெற்றோர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களை அழைத்துச் செல்லவும் சனந்தா அவர்களிடம் நாளையிலிருந்து மதிய உணவு கொடுத்து அனுப்புமாறு கூறினாள். “இந்த பசங்களோட உட்கார்ந்து சாப்பிடும் போது அவங்க இன்னும் நிறைய பேசுவாங்க விளையாடுவாங்க கத்துப்பாங்க அதனால நாளையில இருந்து சாப்பாடு குடுத்து விடுங்க” என்று ஒவ்வொரு பெற்றோரிடமும் கூறி அனுப்பினாள்.
அதே போல் முரண்டு பிடித்துக் கொண்டு வந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வரவும் அவர்களிடம் குழந்தைகளைப் பற்றி உயர்வாக, அவர்களை ஊக்கவிக்கும் வகையில் பேசி அனுப்பினாள் சனந்தா.
குழந்தைகள் அனைவரையும் அனுப்பிவிட்டு சனந்தா அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு, “சரவணா நான் கீழ ஆஃபீஸ்க்கு போறேன்… நான் இன்னும் சைன் பண்ணவே இல்ல நான் நேரா இங்க கோயிலுக்கு வந்துட்டேன்… அப்படியே பசங்களோட இருந்துட்டேன்” என்று சனந்தா கூறவும், “நில்லு…. உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்… கைய காட்டு முதல்ல” என்று சரவணன் கூற, “இல்ல பசங்க எல்லாரும் சேர்ந்து ஃபர்ஸ்ட் எயிட் பண்ணாங்க ஒன்னும் இல்ல சின்னதா ஒரு கீறல் தான்” என்று சனந்தா கூறினாள்.
“நீ இப்படி தான் சொல்லுவ இரு ஒரு நிமிஷம்…. அபி என்னன்னு பாரு” என்று சரவணன் கூறவும், அபிலாஷ் அவனுக்கு எதிரில் அமருமாறு கூறி கையில் இருக்கும் கட்டை பிரித்து பார்த்தான். “ஐயோ என்ன இப்படி இருக்கு….. அந்த மரக்கட்டையில இருக்கிற சின்ன பீசஸ் எல்லாம் உள்ள போயிட்டு இருக்கு… அது தெரியாம கிளீன் மட்டும் பண்ணிட்டு பசங்க கட்டிட்டு இருக்காங்க…. அதை வெளியில எடுக்கணும், இல்லன்னா இப்ப ரெட்டா இருக்கு, சாயந்திரத்துக்குள்ள வீங்கிரும்” என்று அபிலாஷ் கூறினான்.
விக்ரம் பதற்றத்துடன் எழுந்து போக, சரவணன் அவனைப் பிடித்து, “ஒன்னும் போக வேணாம்… இங்கேயே உட்காரு… எல்லாம் அபி பார்த்துப்பான்” என்று கூறினான்.
“கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க” என்று அபி கூறவும், சனந்தா பயத்தில் கால்களை இறுக்கி பிடித்துக் கொண்டு, அவளது இடது கையால் அவளுடைய பேக்கை இறுக்கிப் பிடித்து கொண்டாள்.
அபிலாஷ் முடிந்த அளவுக்கு மெதுவாக செய்ய முயற்சி செய்தான். இருப்பினும், முதலில் ஒரு மெல்லியதான மரக் குச்சியை வெளியே எடுக்கவும் சனந்தா அலறிவிட்டாள். அதை பார்த்ததும் சரவணன் மற்றும் விக்ரம் இருவரும் ஓடி வந்து அவளுக்கு அருகில் நின்று கொண்டனர்.
“மச்சான் இன்னும் ஒன்னு இருக்கு அத எடுக்கணும்” என்று அபிலாஷ் கூறவும், “இல்ல வேண்டாம்…. இதுவே எனக்கு ரொம்ப வலிக்குது” என்று சனந்தா சிறு பிள்ளை போல் கண்கள் கலங்கி கூறினாள். “அப்படி விட்டோம்னா உள்ளேயே அது இருந்து இன்ஃபெஷன் மாதிரி ஆயிரும் பரவால்லையா?” என்று அபிலாஷ் கேட்க, சனந்தா அமைதியாகிவிட்டாள்.
சனந்தா பயத்தில் கையை அவள் பக்கம் இழுத்துக் கொண்டே இருக்க, அபிலாஷ் சரவணனிடம், “கையை டைட்டா புடிச்சுக்கோ… இழுத்துட்டே இருக்கா…. அப்படி இழுத்துட்டே இருந்தா வேற இடத்துல எங்கேயாவது குத்திடும்… அதனால, டைட்டா புடிச்சுக்கோ” என்று அபிலாஷ் கூற, அதன்படி சரவணன் செய்தான்.
விக்ரம் சனந்தாவுக்கு சமமாக மண்டியிட்டு கொண்டு அவளது இடது கையை இறுக்கி பிடித்துக் கொண்டு அவளைப் பார்க்க அவளும் அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். இதை கவனித்த சரவணன் மெல்லியதாக புன்னகைத்துக் கொண்டான். அபிலாஷ் அவனோட வேலையை முடித்ததும், “கை வலிக்குதா சனா” என்று சரவணன் கேட்க, அப்பொழுது தான் சுயநினைவுக்கு வந்து இல்லை!! என்பது போல் தலையை அசைத்தாள்.
அவளது கை விக்ரம் கையில் இருப்பதை பார்த்து வேகமாக அவன் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு அவளுடைய பையை எடுத்துக் கொண்டு அபிலாஷை பார்த்து, “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்!!! ஹெல்ப் பண்ணதுக்கு” என்று கூறி சென்றாள்.
“ஒரு நிமிஷம் இருங்க நானும் இப்ப ஹாஸ்பிடலுக்கு தான் போறேன்… அப்படியே நீங்களும் வாங்க ஆஃபீஸ் கிட்ட டிராப் பண்ணிடுறேன்” என்று அபிலாஷ் கூற, “இல்ல பரவால்ல டாக்டர் கொஞ்ச தூரம் தானே நடந்தே போறேன்” என்று சனந்தா கூறினாள்.
“நான் எப்படியும் கீழே தாங்க போறேன் வாங்க போலாம்” என்று அபிலாஷ் கூறவும் சரி என்று ஒத்துக் கொண்டாள் சனந்தா. சரவணன் மற்றும் விக்ரமை பார்த்து, “நான் கிளம்புறேன் நீங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க” என்று கூறி சென்றான் அபிலாஷ்.
அபிலாஷ் சனந்தா மற்றும் இருவரும் அபிலாஷ் உடைய பைக்கில் செல்ல, “ம்ம்… உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?? கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே??” என்று அபிலாஷ் கேட்க, “கேளுங்க டாக்டர்… பதில் சொல்ல முடிஞ்சா நான் கண்டிப்பா பதில் சொல்றேன்” என்று சனந்தா கூறினாள்.
“உங்களுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு?” என்று அபிலாஷ் கேட்க, சனந்தா அமைதியாகிவிட்டாள். “இல்ல நீங்க மார்க்கெட்ல கூட தல எல்லாம் வலிச்சு ஒரு மாதிரி ஆயிட்டீங்கனு சொன்னாங்க… இங்க வரும் போது கூட ஒரு அப்படி தானே ஆச்சு… அதான் ஏன் அப்படி ஆகுது?? அதுவும் ஆக்சிடென்டுக்கு அப்புறம் தான் இப்படி ஆகுதுன்னு வேற சொல்லி இருந்தீங்க இல்லையா…. அதான் எப்படி என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்னு வேற ஒன்னும் இல்ல… உங்களுக்கு விருப்பம் இல்லன்னா பரவாயில்ல” என்று அவிலாஷ் கூறினான்.
“அப்படி சொல்ல கூடாதுன்னு ஒன்னும் இல்லை…. என்னோட வேலைக்காக நான் ஊட்டிக்கு வந்திருந்தேன் அங்க என்னோட வேலை முடியல அது எனக்கு கொஞ்சம் ஃபிரஸ்ட்ரேட்டிங்கா இருந்துது…. அப்படியே அதே நினைப்புல தான் கார் ஓட்டிட்டு போனேன்…. கீழே கூட இறங்கிட்டேன் கிட்டத்தட்ட கோயம்புத்தூர் ரீச் ஆகிட்டேன்…. அப்ப தான் ஏதோ லாரி இடிச்சு ஆக்சிடென்ட் ஆச்சு” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்…உங்க கூட யாரும் வரலையா?? நீங்க மட்டும் தான் தனியா இருந்தீங்களா?? என்று அபிலாஷ் கேட்க, “ஆமா!!! எப்பவுமே என் கூட யாராவது ஒருத்தர் வருவாங்க எங்க டீம்ல இருந்து…. ஆனா, அவங்களுக்கும் வேற இடத்துல வேலை எல்லாம் இருந்ததுனால நான் மட்டும் தான் இங்க வந்து பார்த்துட்டு போனேன்…. அதனால அப்போ என் கூட யாரும் இல்லை” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்… கார் ரொம்ப நல்ல ஓட்டுவீங்க போலவே நீங்க” என்று அபிலாஷ் கேலியாக கேட்க, “நல்லா தான் ஓட்டுவேன் டாக்டர்…. ஆக்ஸிடென்ட் ஆனப்போ நைட் வேற…. லாரி லைட் கூட இல்லாம வேணும்னே இடிக்குற மாதிரி வந்தான்” என்று சனந்தா கூற, “சரி சரி சும்மா தான் கேட்டேன்… இப்ப உங்க கார் கொண்டு வந்து இருக்கலாமே?” என்று அபிலாக் கேட்க, “இப்ப என் காரே என்கிட்ட இல்ல… அந்த ஆக்சிடென்ட்னால கார் ரொம்ப டேமேஜ் ஆயிருச்சு அதனால கார டிஸ்போஸ் பண்ணிட்டதா அப்பா சொன்னாங்க” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா!!!! அவ்வளவு டேமேஜ் ஆயிடுச்சா உங்க கார்??” என்று அபிலாஷ் கேட்க, “ஆமா டாக்டர்!!! நானே உயிர் பிழைப்பேனான்னு தெரியலன்ற மாதிரி ஆயிருச்சாம்…. ரொம்ப நாள் கோமால இருந்தேனாம்… அதனால கொஞ்சம் ஏதோ பெரிய ஆக்சிடென்ட் தான் போல…. நான் உயிர் பிழைச்சதே பெருசுன்னு தான் சொன்னாங்க அம்மா” என்று சனந்தா கூறினாள்.
ஒரு நொடி அபிலாஷ் அமைதியாக எதையோ யோசிக்க, “என்ன ஆச்சு டாக்டர் அமைதியாகிட்டீங்க?” என்று சனந்தா கேட்க, “ஒன்னும் இல்ல ஒரு வேளை நீங்க கோமால இருந்ததனால கூட உங்களுக்கு அந்த மாதிரி தலை வலிக்கலாம்… அது தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்று அபிலாஷ் சமாளித்தான்.
“என்னன்னு தெரியல கொஞ்சம் வியர்டா தான் இருக்கு…. ஆனா பார்ப்போம் நாட்கள் போக போக உண்மை ஒரு நாள் கண்டிப்பாக தெரியவரும்ல அப்ப இந்த குழப்பம் எல்லாம் தீர்ந்திடும்னு நானும் நம்புறேன்” என்று சனந்தா கூறினாள்.
இப்படி இருவரும் பேசிக் கொண்டே ஹாஸ்பிடலுக்கு வந்தடையவும் சனந்தா அபிலாஷிடம் விடை பெற்றுக் கொண்டு ஆஃபீஸுக்கு சென்று சைன் போட்டுவிட்டு மெதுவாக வீட்டிற்கு சென்றாள்.
“விக்கி எனக்கு இப்போ உன்ன திட்டணுமா இல்ல நான் அட்வைஸ் ஏதாவது கொடுக்கணுமான்னு கூட எனக்கு தெரியல விக்கி….. ஆனா, ஒன்னு மட்டும் சொல்றேன் உன்னோட எமோஷன்ஸ கட்டுப்படுத்து…. உனக்கு கோபம் வந்தா இஷ்டத்துக்கு பேசுற டா…. எனக்கும் புரியுது உன்னோட கோபம் எதனால வருதுன்னு…. ஆனா, இப்ப வரைக்கும் நமக்கு உண்மை எதுன்னே தெரியாம தான் சனா மேல பழிய போட்டுட்டு சுத்திட்டு இருக்கோம்…. இந்த கொஞ்ச நாள் பழக்கத்திலேயே அவள சந்தேகப்பட எனக்கு மனசு வரல…. அப்படியே அவ தப்பு பண்ணி இருந்தான்ன அப்போ என்னால அதை மன்னிக்கவும் முடியும்”.
“ஆனா, அதுக்காக இப்ப இருக்குற இதே உறவு நீடிக்கும்மான்னு கேட்டா கண்டிப்பா இல்ல விக்கி… இப்படி நான் தெளிவா இருக்கேன்ல உன்கிட்ட அது இல்லாம தான் நீ ரொம்ப கஷ்டப்படுற…. முதல்ல உன்னை நீ சமன்படுத்திக்கோ அப்போ தான் உன்னோட ஃபீலிங்ஸ்ஸ அவளுக்கு நீ எடுத்து சொல்லவாவது முடியும்”.
“மார்க்கெட்ல சனா அப்படி இருக்கான்னு பார்த்த உடனே பதட்டத்துல அப்படியே கைய புடிச்சுட்டே தாங்கிக்கிட்டு வந்த அவளை…. இன்னிக்கும் அவ அலறுனதும் ஓடி போய் அவ கைய புடிச்சுகிட்டு அவளையே பார்த்துட்டே இருக்க….. இது எல்லாத்தையும் நான் உனக்கு எடுத்து மட்டும் தான் சொல்ல முடியும்… இது எல்லாம் நான் விவரிக்கனும்னு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்…. ஏன்னா, அது எல்லாமே உன் மனசுக்கு தெரியும் மச்சான்…. இங்கேயே உக்காந்து இருந்தா எந்த வேலையும் ஆகாது… வா நம்ம போய் சாப்பிட்டுட்டு ஆத்துக்கு போகனும்… அங்க வேலை என்னென்னே தெரியல முடியவே இல்லை” என்று சரவணன் கூறினான்.
“ம்ம்…. என்னால அவ கிட்ட முழு மனசா ஒரு உறவு டெவலப் பண்ண முடியல… ஒரு வேல அவள என்னால மன்னிக்க முடியலன்னா அந்த உறவு, அது ஃபிரண்ஷிப்பா கூட இருக்கட்டுமே அது ஒடஞ்சிரும்… அத நான் எப்படி கையாளுவேன்னு தெரியல டா… பார்ப்போம் டா என்ன ஆகுதுன்னு… ஆனா ஒன்னு யோசிச்சு இருக்கேன்…. நானே விசாரிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் டா…. அப்ப தான் எனக்கும் திருப்பி இருக்கும்” என்று விக்ரம் கூறி இருவரும் புறப்பட்டனர்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
குழந்தைகளும் அதை உற்சாகத்துடன் வாங்கிக் கொண்டு, “தேங்க்யூ அக்கா!!!” என்றனர். குழந்தைகளின் பெற்றோர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களை அழைத்துச் செல்லவும் சனந்தா அவர்களிடம் நாளையிலிருந்து மதிய உணவு கொடுத்து அனுப்புமாறு கூறினாள். “இந்த பசங்களோட உட்கார்ந்து சாப்பிடும் போது அவங்க இன்னும் நிறைய பேசுவாங்க விளையாடுவாங்க கத்துப்பாங்க அதனால நாளையில இருந்து சாப்பாடு குடுத்து விடுங்க” என்று ஒவ்வொரு பெற்றோரிடமும் கூறி அனுப்பினாள்.
அதே போல் முரண்டு பிடித்துக் கொண்டு வந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வரவும் அவர்களிடம் குழந்தைகளைப் பற்றி உயர்வாக, அவர்களை ஊக்கவிக்கும் வகையில் பேசி அனுப்பினாள் சனந்தா.
குழந்தைகள் அனைவரையும் அனுப்பிவிட்டு சனந்தா அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு, “சரவணா நான் கீழ ஆஃபீஸ்க்கு போறேன்… நான் இன்னும் சைன் பண்ணவே இல்ல நான் நேரா இங்க கோயிலுக்கு வந்துட்டேன்… அப்படியே பசங்களோட இருந்துட்டேன்” என்று சனந்தா கூறவும், “நில்லு…. உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்… கைய காட்டு முதல்ல” என்று சரவணன் கூற, “இல்ல பசங்க எல்லாரும் சேர்ந்து ஃபர்ஸ்ட் எயிட் பண்ணாங்க ஒன்னும் இல்ல சின்னதா ஒரு கீறல் தான்” என்று சனந்தா கூறினாள்.
“நீ இப்படி தான் சொல்லுவ இரு ஒரு நிமிஷம்…. அபி என்னன்னு பாரு” என்று சரவணன் கூறவும், அபிலாஷ் அவனுக்கு எதிரில் அமருமாறு கூறி கையில் இருக்கும் கட்டை பிரித்து பார்த்தான். “ஐயோ என்ன இப்படி இருக்கு….. அந்த மரக்கட்டையில இருக்கிற சின்ன பீசஸ் எல்லாம் உள்ள போயிட்டு இருக்கு… அது தெரியாம கிளீன் மட்டும் பண்ணிட்டு பசங்க கட்டிட்டு இருக்காங்க…. அதை வெளியில எடுக்கணும், இல்லன்னா இப்ப ரெட்டா இருக்கு, சாயந்திரத்துக்குள்ள வீங்கிரும்” என்று அபிலாஷ் கூறினான்.
விக்ரம் பதற்றத்துடன் எழுந்து போக, சரவணன் அவனைப் பிடித்து, “ஒன்னும் போக வேணாம்… இங்கேயே உட்காரு… எல்லாம் அபி பார்த்துப்பான்” என்று கூறினான்.
“கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க” என்று அபி கூறவும், சனந்தா பயத்தில் கால்களை இறுக்கி பிடித்துக் கொண்டு, அவளது இடது கையால் அவளுடைய பேக்கை இறுக்கிப் பிடித்து கொண்டாள்.
அபிலாஷ் முடிந்த அளவுக்கு மெதுவாக செய்ய முயற்சி செய்தான். இருப்பினும், முதலில் ஒரு மெல்லியதான மரக் குச்சியை வெளியே எடுக்கவும் சனந்தா அலறிவிட்டாள். அதை பார்த்ததும் சரவணன் மற்றும் விக்ரம் இருவரும் ஓடி வந்து அவளுக்கு அருகில் நின்று கொண்டனர்.
“மச்சான் இன்னும் ஒன்னு இருக்கு அத எடுக்கணும்” என்று அபிலாஷ் கூறவும், “இல்ல வேண்டாம்…. இதுவே எனக்கு ரொம்ப வலிக்குது” என்று சனந்தா சிறு பிள்ளை போல் கண்கள் கலங்கி கூறினாள். “அப்படி விட்டோம்னா உள்ளேயே அது இருந்து இன்ஃபெஷன் மாதிரி ஆயிரும் பரவால்லையா?” என்று அபிலாஷ் கேட்க, சனந்தா அமைதியாகிவிட்டாள்.
சனந்தா பயத்தில் கையை அவள் பக்கம் இழுத்துக் கொண்டே இருக்க, அபிலாஷ் சரவணனிடம், “கையை டைட்டா புடிச்சுக்கோ… இழுத்துட்டே இருக்கா…. அப்படி இழுத்துட்டே இருந்தா வேற இடத்துல எங்கேயாவது குத்திடும்… அதனால, டைட்டா புடிச்சுக்கோ” என்று அபிலாஷ் கூற, அதன்படி சரவணன் செய்தான்.
விக்ரம் சனந்தாவுக்கு சமமாக மண்டியிட்டு கொண்டு அவளது இடது கையை இறுக்கி பிடித்துக் கொண்டு அவளைப் பார்க்க அவளும் அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். இதை கவனித்த சரவணன் மெல்லியதாக புன்னகைத்துக் கொண்டான். அபிலாஷ் அவனோட வேலையை முடித்ததும், “கை வலிக்குதா சனா” என்று சரவணன் கேட்க, அப்பொழுது தான் சுயநினைவுக்கு வந்து இல்லை!! என்பது போல் தலையை அசைத்தாள்.
அவளது கை விக்ரம் கையில் இருப்பதை பார்த்து வேகமாக அவன் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு அவளுடைய பையை எடுத்துக் கொண்டு அபிலாஷை பார்த்து, “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்!!! ஹெல்ப் பண்ணதுக்கு” என்று கூறி சென்றாள்.
“ஒரு நிமிஷம் இருங்க நானும் இப்ப ஹாஸ்பிடலுக்கு தான் போறேன்… அப்படியே நீங்களும் வாங்க ஆஃபீஸ் கிட்ட டிராப் பண்ணிடுறேன்” என்று அபிலாஷ் கூற, “இல்ல பரவால்ல டாக்டர் கொஞ்ச தூரம் தானே நடந்தே போறேன்” என்று சனந்தா கூறினாள்.
“நான் எப்படியும் கீழே தாங்க போறேன் வாங்க போலாம்” என்று அபிலாஷ் கூறவும் சரி என்று ஒத்துக் கொண்டாள் சனந்தா. சரவணன் மற்றும் விக்ரமை பார்த்து, “நான் கிளம்புறேன் நீங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க” என்று கூறி சென்றான் அபிலாஷ்.
அபிலாஷ் சனந்தா மற்றும் இருவரும் அபிலாஷ் உடைய பைக்கில் செல்ல, “ம்ம்… உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?? கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே??” என்று அபிலாஷ் கேட்க, “கேளுங்க டாக்டர்… பதில் சொல்ல முடிஞ்சா நான் கண்டிப்பா பதில் சொல்றேன்” என்று சனந்தா கூறினாள்.
“உங்களுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு?” என்று அபிலாஷ் கேட்க, சனந்தா அமைதியாகிவிட்டாள். “இல்ல நீங்க மார்க்கெட்ல கூட தல எல்லாம் வலிச்சு ஒரு மாதிரி ஆயிட்டீங்கனு சொன்னாங்க… இங்க வரும் போது கூட ஒரு அப்படி தானே ஆச்சு… அதான் ஏன் அப்படி ஆகுது?? அதுவும் ஆக்சிடென்டுக்கு அப்புறம் தான் இப்படி ஆகுதுன்னு வேற சொல்லி இருந்தீங்க இல்லையா…. அதான் எப்படி என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்னு வேற ஒன்னும் இல்ல… உங்களுக்கு விருப்பம் இல்லன்னா பரவாயில்ல” என்று அவிலாஷ் கூறினான்.
“அப்படி சொல்ல கூடாதுன்னு ஒன்னும் இல்லை…. என்னோட வேலைக்காக நான் ஊட்டிக்கு வந்திருந்தேன் அங்க என்னோட வேலை முடியல அது எனக்கு கொஞ்சம் ஃபிரஸ்ட்ரேட்டிங்கா இருந்துது…. அப்படியே அதே நினைப்புல தான் கார் ஓட்டிட்டு போனேன்…. கீழே கூட இறங்கிட்டேன் கிட்டத்தட்ட கோயம்புத்தூர் ரீச் ஆகிட்டேன்…. அப்ப தான் ஏதோ லாரி இடிச்சு ஆக்சிடென்ட் ஆச்சு” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்…உங்க கூட யாரும் வரலையா?? நீங்க மட்டும் தான் தனியா இருந்தீங்களா?? என்று அபிலாஷ் கேட்க, “ஆமா!!! எப்பவுமே என் கூட யாராவது ஒருத்தர் வருவாங்க எங்க டீம்ல இருந்து…. ஆனா, அவங்களுக்கும் வேற இடத்துல வேலை எல்லாம் இருந்ததுனால நான் மட்டும் தான் இங்க வந்து பார்த்துட்டு போனேன்…. அதனால அப்போ என் கூட யாரும் இல்லை” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்… கார் ரொம்ப நல்ல ஓட்டுவீங்க போலவே நீங்க” என்று அபிலாஷ் கேலியாக கேட்க, “நல்லா தான் ஓட்டுவேன் டாக்டர்…. ஆக்ஸிடென்ட் ஆனப்போ நைட் வேற…. லாரி லைட் கூட இல்லாம வேணும்னே இடிக்குற மாதிரி வந்தான்” என்று சனந்தா கூற, “சரி சரி சும்மா தான் கேட்டேன்… இப்ப உங்க கார் கொண்டு வந்து இருக்கலாமே?” என்று அபிலாக் கேட்க, “இப்ப என் காரே என்கிட்ட இல்ல… அந்த ஆக்சிடென்ட்னால கார் ரொம்ப டேமேஜ் ஆயிருச்சு அதனால கார டிஸ்போஸ் பண்ணிட்டதா அப்பா சொன்னாங்க” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா!!!! அவ்வளவு டேமேஜ் ஆயிடுச்சா உங்க கார்??” என்று அபிலாஷ் கேட்க, “ஆமா டாக்டர்!!! நானே உயிர் பிழைப்பேனான்னு தெரியலன்ற மாதிரி ஆயிருச்சாம்…. ரொம்ப நாள் கோமால இருந்தேனாம்… அதனால கொஞ்சம் ஏதோ பெரிய ஆக்சிடென்ட் தான் போல…. நான் உயிர் பிழைச்சதே பெருசுன்னு தான் சொன்னாங்க அம்மா” என்று சனந்தா கூறினாள்.
ஒரு நொடி அபிலாஷ் அமைதியாக எதையோ யோசிக்க, “என்ன ஆச்சு டாக்டர் அமைதியாகிட்டீங்க?” என்று சனந்தா கேட்க, “ஒன்னும் இல்ல ஒரு வேளை நீங்க கோமால இருந்ததனால கூட உங்களுக்கு அந்த மாதிரி தலை வலிக்கலாம்… அது தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்று அபிலாஷ் சமாளித்தான்.
“என்னன்னு தெரியல கொஞ்சம் வியர்டா தான் இருக்கு…. ஆனா பார்ப்போம் நாட்கள் போக போக உண்மை ஒரு நாள் கண்டிப்பாக தெரியவரும்ல அப்ப இந்த குழப்பம் எல்லாம் தீர்ந்திடும்னு நானும் நம்புறேன்” என்று சனந்தா கூறினாள்.
இப்படி இருவரும் பேசிக் கொண்டே ஹாஸ்பிடலுக்கு வந்தடையவும் சனந்தா அபிலாஷிடம் விடை பெற்றுக் கொண்டு ஆஃபீஸுக்கு சென்று சைன் போட்டுவிட்டு மெதுவாக வீட்டிற்கு சென்றாள்.
“விக்கி எனக்கு இப்போ உன்ன திட்டணுமா இல்ல நான் அட்வைஸ் ஏதாவது கொடுக்கணுமான்னு கூட எனக்கு தெரியல விக்கி….. ஆனா, ஒன்னு மட்டும் சொல்றேன் உன்னோட எமோஷன்ஸ கட்டுப்படுத்து…. உனக்கு கோபம் வந்தா இஷ்டத்துக்கு பேசுற டா…. எனக்கும் புரியுது உன்னோட கோபம் எதனால வருதுன்னு…. ஆனா, இப்ப வரைக்கும் நமக்கு உண்மை எதுன்னே தெரியாம தான் சனா மேல பழிய போட்டுட்டு சுத்திட்டு இருக்கோம்…. இந்த கொஞ்ச நாள் பழக்கத்திலேயே அவள சந்தேகப்பட எனக்கு மனசு வரல…. அப்படியே அவ தப்பு பண்ணி இருந்தான்ன அப்போ என்னால அதை மன்னிக்கவும் முடியும்”.
“ஆனா, அதுக்காக இப்ப இருக்குற இதே உறவு நீடிக்கும்மான்னு கேட்டா கண்டிப்பா இல்ல விக்கி… இப்படி நான் தெளிவா இருக்கேன்ல உன்கிட்ட அது இல்லாம தான் நீ ரொம்ப கஷ்டப்படுற…. முதல்ல உன்னை நீ சமன்படுத்திக்கோ அப்போ தான் உன்னோட ஃபீலிங்ஸ்ஸ அவளுக்கு நீ எடுத்து சொல்லவாவது முடியும்”.
“மார்க்கெட்ல சனா அப்படி இருக்கான்னு பார்த்த உடனே பதட்டத்துல அப்படியே கைய புடிச்சுட்டே தாங்கிக்கிட்டு வந்த அவளை…. இன்னிக்கும் அவ அலறுனதும் ஓடி போய் அவ கைய புடிச்சுகிட்டு அவளையே பார்த்துட்டே இருக்க….. இது எல்லாத்தையும் நான் உனக்கு எடுத்து மட்டும் தான் சொல்ல முடியும்… இது எல்லாம் நான் விவரிக்கனும்னு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்…. ஏன்னா, அது எல்லாமே உன் மனசுக்கு தெரியும் மச்சான்…. இங்கேயே உக்காந்து இருந்தா எந்த வேலையும் ஆகாது… வா நம்ம போய் சாப்பிட்டுட்டு ஆத்துக்கு போகனும்… அங்க வேலை என்னென்னே தெரியல முடியவே இல்லை” என்று சரவணன் கூறினான்.
“ம்ம்…. என்னால அவ கிட்ட முழு மனசா ஒரு உறவு டெவலப் பண்ண முடியல… ஒரு வேல அவள என்னால மன்னிக்க முடியலன்னா அந்த உறவு, அது ஃபிரண்ஷிப்பா கூட இருக்கட்டுமே அது ஒடஞ்சிரும்… அத நான் எப்படி கையாளுவேன்னு தெரியல டா… பார்ப்போம் டா என்ன ஆகுதுன்னு… ஆனா ஒன்னு யோசிச்சு இருக்கேன்…. நானே விசாரிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் டா…. அப்ப தான் எனக்கும் திருப்பி இருக்கும்” என்று விக்ரம் கூறி இருவரும் புறப்பட்டனர்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
Author: Bhavani Varun
Article Title: Chapter 19
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 19
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.