Chapter-18

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
அதை பார்த்து தனக்கு இப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லையே என்று நினைத்து வருத்தப்படுவதா, இல்லை யாழினி சொல்வதைப் போல இது எல்லாம் கொடுமையாக இருக்கும் என்று நினைத்து தனக்கு அப்படி நடக்காததால் சந்தோஷப்படுவதா என்றே அவளுக்கு தெரியவில்லை. பின் அவளுக்கு சாப்பாடு பற்றியே ஞாபகம் வர, “இப்பவே ரொம்ப நேரம் ஆகுது. இவ வேற சாப்பிடாம தூங்கிட்டு இருக்கா. முதல்ல இவளை எழுப்பலாம்.” என்று நினைத்த சுவாதி அவளை எழுப்பினாள். அவள் யாழினியின் தோள்களில் தட்டியபடி அவளது பெயரை சொல்லி எழுப்ப, அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த யாழினி அது சங்கர்தான் என்று நினைத்து அந்த தூக்கத்திலும் பயத்தில் “டேய் என்ன விடு. ஒழுங்கா அந்த பக்கம் போயிரு. நான் தூங்கணும். எனக்கு தூக்கம் வருது.” என்று கண்களை கூட திறக்காமல் கத்தினாள்.



அதனால் ஒரு நொடி தானும் பயந்து போன ஸ்வாதி “ஏய் லூசு சங்கர் வெளிய இருக்காரு. நான் சுவாதி வந்திருக்கேன் டி. ஒழுங்கா கண்ணை திறந்து பாரு.” என்று உரத்த குரலில் சொல்ல, அப்போதுதான் அவளும் தங்களுடன் தங்கியிருப்பது யாழினிக்கு ஞாபகம் வந்தது. அதனால் பெருமூச்சுவிட்டு எழுந்து அமர்ந்த யாழினி “நீ தானா.. நான் கூட ஒரு செகண்ட் அவன்தான் வந்துட்டான்னு நெனச்சு ‌பயந்துட்டேன். நான் தான் தூங்கிட்டு இருந்தேன்ல எதுக்கு டி என்னை எழுப்புன?” என்று கொட்டாவி விட்டபடி கேட்க, “சாப்பிடாமயே எப்படி தூங்குவ? நம்ம கிளம்புறதுக்கு முன்னாடி நீ காலையில வீட்ல சாப்பிட்டது. அதுக்கப்புறம் சாப்பிடவே இல்ல. வா.. வந்து சாப்பிட்டு தூங்கு.” என்றாள் சுவாதி.



“அட ஆமா பசிக்குது.” என்ற யாழினி பழக்க தோஷத்தில் அப்படியே தனது நீண்ட கூந்தலை தூக்கி கொண்டை போட்டவாறு வெளியே செல்ல போக, அவள் கையைப் பிடித்து தடுத்த சுவாதி “அடிப்பாவி எங்க டி அப்படியே போற? வெளியே தினேஷ் இருக்கிறாரு. வேற டிரஸ் போட்டுட்டு வா.” என்று அவளுக்கு ஞாபகப்படுத்தினாள். அதனால் வெளியில் கிடந்த பேண்ட் ஒன்றை எடுத்து அரை தூக்கத்தில் அணிந்து கொண்டு அவளுடன் வெளியே சென்றாள் யாழினி. அவர்கள் அருகில் உள்ள உணவகத்தில் இருந்து உணவை ஆர்டர் செய்து இருந்ததால் அது விரைவாகவே வந்துவிட்டது.



கீழே சென்ற சங்கர் அந்த உணவுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். சோர்வாக சென்று சோஃபாவில் அமர்ந்த யாழினி “எனக்கு பசிக்குது. சீக்கிரம் பிளைட்ல போட்டு கொண்டு வா போ.” என்று சொல்ல, அந்த உணவுகளுடன் கிச்சனுக்கு சென்ற சங்கர் அதை வேறு பாத்திரங்களில் மாற்றி கொண்டு வந்து ஹாலில் வைத்துவிட்டு யாழினிக்கு பிடித்தவற்றை தட்டில் வைத்து அவளிடம் கொடுத்தான். யாழினி அதை சாப்பிட தொடங்கி விட, அவள் அருகில் தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு டிவியை ஆன் செய்த சங்கர் அவள் அருகில் அமர்ந்தான்.


தினேஷ் அவன் பாட்டிற்கு டிவியை பார்த்தபடி அமர்ந்துவிட, அவனுக்கும் சங்கருக்கும் தானே உணவுகளை பரிமாறினாள் ஸ்வாதி. அவளை தடுத்த சங்கர் “நீ உக்காந்து சாப்பிடு மா.” என்று சொல்லி அவளுக்கு பரிமாறினான். எதையும் கண்டு கொள்ளாமல் பின் தினேஷ் அவனது மொபைல் ஃபோனை பார்த்துக் கொண்டு இருக்க, யாழினி டிவி பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். ஒரு தாய் தனது குழந்தையை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்வதைப் போல அவள் ஒழுங்காக சாப்பிடுகிறாளா என்று கவனித்தபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் சங்கர்.


அவனை பார்க்கவே சுவாதிக்கு இப்படியும் ஒருத்தன் இருப்பானா என்று ஆச்சரியமாக இருந்தது. யாழினிக்கு சமைக்க தெரியாது என்பதால் சமையல் முதல் மற்ற வீட்டு வேலைகள் அனைத்தையும் ஆபீஸுற்க்கும் சென்று விட்டு வந்து சங்கர் தான் பார்க்கிறான் என்று அவளுக்கு இதற்கு முன்பு கூட தெரியும் தான். ஆனால் தன்னை தனது கணவன் கண்டுகொள்ளாத போது, யாழினியை குழந்தை போல சங்கர் தாங்குவதை பார்க்கும்போது சுவாதியால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை. அதனால் வழக்கம் போல அவள் மனம் தினேஷையும், அவனையும் கம்பேர் செய்து பார்க்க தொடங்கி‌ விட, இறுதியில் எப்படி பார்த்தாலும் சங்கர் தான் பெஸ்ட் என்ற முடிவிற்கு வந்தாள் சுவாதி.‌


“யாழினி அவர் கிட்ட அது பிரச்சனை இது பிரச்சனைன்னு சொல்லிட்டே இருக்கா. ஆனா இப்படி ஒரு loving and carrying husbandகாக எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கிட்டு போகலாம் தப்பில்ல. எனக்கு மட்டும் சங்கர் கிடைச்சிருந்தா, அவருக்காக நான் என்ன வேணாலும் செஞ்சிருப்பேன். இப்ப யாழினி கஷ்டம்னு சொல்றது எல்லாத்தையும் சந்தோஷமா செஞ்சுருப்பேன்.” என்று தன்னையும் மீறி யோசிக்க தொடங்கிய சுவாதி சாப்பிடும்போது கூட மற்ற மூவரும் டிவியை பார்த்துக் கொண்டு இருந்தால், அவள் மட்டும் சங்கர் மற்றும் யாழினியை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

தொடரும்...

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-18
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.