Chapter 17

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
சனந்தா உணவருந்தி முடித்து விட்டு அவளுடைய அறைக்குள் சென்று உருண்டு புரண்டு படுத்தாலும் விக்ரம் கோபத்தில் சென்ற அந்த முகம் தான் அவள் கண் முன் வந்து கொண்டே இருந்தது. அவளுக்கு, வண்டி சத்தம் கேட்கவும் வெளியே வந்து பார்க்க விக்ரம் அப்பொழுது தான் வந்து கொண்டிருந்தான்.

“இவர் கிட்ட போய் பேசலாமா??? பேசினா கேட்பாரா??” என்று தயக்கத்தில் மெதுவாக விக்ரமிடம் சென்று, “சார் உங்க…” என்று தயக்கத்துடன் சனந்தா ஆரம்பிக்கவும், “வந்த வேலை என்னவோ அதை பார்த்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்… ஓ!!! நீங்க வந்த வேலை இங்க வாலண்டியர் இல்லல…. வேற ஏதோ வேலைக்காக தானே இங்க வந்து இருக்கீங்க… இந்த வேலை உங்களுக்கு வெறும் டைம் பாஸ் தானே” என்று நக்கலாக விக்ரம் கேட்க, சனந்தாவுக்கு கண்களில் கண்ணீர் சூழ்ந்து கொண்டது.

வேற என்ன விக்ரமிடம் பேசுவது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு தலையை குனிந்து சனந்தா நின்று கொண்டிருக்க, “போய் படுங்க உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்…. எங்க கிராமத்துக்காக மட்டுமா வந்து இருக்கீங்க…. போய் நல்லா தூங்குங்க…. ரெஸ்ட் எடுங்க அப்ப தான் எல்லா வேலையும் சேர்த்து பார்க்குறதுக்கு” என்று விக்ரம் கோபத்தில் கூறி உள்ளே சென்றான்.

சனந்தா வேகமாக அவளது அறைக்கு சென்று அவளது பாயின் மேல் படுத்துக் கொண்டு அழுது தீர்த்தாள். “அவருக்கு நான் ஏன் இதெல்லாம் எடுத்து சொல்லனும்னு போனேன்…. அவர் என்னை பத்தி தப்பா நினைச்சு கோபப்பட்டா எனக்கு என்ன” என்று சனந்தா அவளையே திட்டிக் கொண்டாள்.

“தெரியலையே….. என் மேல அவர் அவ்ளோ கோபப்பட்டாலும் எனக்கு அது பெருசா தெரியல…. அவர் என்னை தப்பா நினைச்சிட கூடாதுன்னு வேற நான் யோசிக்கிறேன்…. ஏன் இதெல்லாம் எனக்கு நடக்குதுன்னு தெரியல…. எல்லாத்துக்கும் மேல அவர் பேசினதுக்கு நான் அழுகுறேன்…. என்ன இதெல்லாம்” என்று சனந்தா அவளுக்குள் பெரிய போராட்டத்தை நடத்தி உறங்கச் சென்றாள்.

காலையில் சரவணன் விக்ரம் மற்றும் ஸ்ரீனிவாசன் உணவருந்த உட்காரவும், “சனந்தாவையும் கூப்பிடுமா அவளும் சாப்பிட்டு கிளம்ப கரெக்டா இருக்கும்” என்று ஸ்ரீனிவாசன் கூற, “இல்லங்க அவ கிளம்பிட்டா…. காலையில சீக்கிரமா எந்திரிச்சிட்டு அவளே சமைச்சுக்கறேன்னு சொல்லி…. காலையில ஏதோ சாலட்ன்னு சொல்லி ஏதோ ஒன்னு பண்ணிட்டு மத்தியானத்துக்கு சப்பாத்தி ரோல்ன்னு ஒன்னு பண்ணி எடுத்துக்கிட்டா…. அவ செஞ்சது இல்லாம எனக்கும் கொண்டு வந்து குடுத்துட்டு கிளம்பிட்டா” என்று வள்ளி கூறினார்.

“எங்க போனா காலையில?” என்று சரவணன் கேட்க, “கோயில் பக்கத்துல இருக்குற குடிசையில தானே பசங்க எல்லாம் படிக்க வருவாங்க அப்படின்னு கேட்டா… ஆமான்னு சொன்னேன்… சொன்னதும் சரி நான் கோவில்ல கொஞ்ச நேரம் இருக்குறேன்…. அதுக்கப்புறம் பசங்க வந்ததும் நான் அப்படியே என் வேலைய பார்த்துட்டு சாயந்திரமா வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு போயிட்டா டா” என்று வள்ளி கூறினார்.

நேற்று நடந்ததை பற்றி சனந்தா கூறியது இன்று காலையில் விரைவாக சென்றதையும் சரவணன் யோசித்துப் பார்க்க, “ஒரு வேலை இவன் எதுவும் திட்டிருப்பானோ அவள” என்று விக்ரமை பார்க்க, விக்ரம் சரவணனை பார்த்து, “என்ன?? நமக்கு நேரம் ஆகுது சாப்பிடு கிளம்பலாம்” என்று கூறினான்.

“என்னன்னு தெரியலைங்க இன்னிக்கு முகமே ரொம்ப வாடி இருந்தது சனாவுக்கு…. நேத்து எவ்ளோ அழகா வந்து நின்னா.. இன்னிக்கு என்னன்னு தெரியல ரொம்ப டல்லா இருந்தா…. எனக்கே பார்க்க ஒரு மாதிரி கஷ்டமா இருந்துது…. ஒரு வேளை அவங்க வீட்டு ஆளுங்கள எல்லாரையும் நினைச்சு அழுது இருப்பா போல” என்று வள்ளி கூற, “இருக்கும் மா…. சனா வந்ததுக்கு அப்புறம் நம்ம எல்லாரும் ஆத்து கிட்ட கூட்டிட்டு போலாம்… அங்க போனா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் அவளுக்கு” என்று ஸ்ரீனிவாசன் கூற, சரி என்று தலை அசைத்தார் வள்ளி.

அனைவரும் உணவருந்தி விட்டு அவர்களின் வேலையை காண சொல்லவும் சரவணன் மற்றும் விக்ரம் வண்டியில் ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ் ஆஃபீஸுக்கு புறப்பட்டனர்.

விக்கி!! என்று சரவணன் அழைக்க, “என்ன இப்போ எனக்கு கிளாஸ் எடுக்க போறியா?? அவ காலையிலேயே போனதுக்கு நான் தான் காரணம்ன்னு” என்று விக்ரம் கோபத்தில் கேட்க, “அதெல்லாம் இல்ல…. நேத்து நீ கோவமா போனன்னு சனா வந்து என்கிட்ட பேசினா…. அவ ரொம்ப வருத்தப்பட்டா டா… அதே மாதிரி அவ இங்க வந்ததுக்கான காரணத்தையும் சொன்னா.. ஆனா இதெல்லாம் நான் உன்கிட்ட சொல்றதுக்கு இப்ப உன்னை கூப்பிடல டா” என்ற சரவணன் கூறினான்.

“அப்புறம் எதுக்கு கூப்பிட்ட என்னை?” என்று விக்ரம் கேட்க, “நீ கோவப்பட்டது, நீ கோவமா போறேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சனா என் கிட்ட பேசினது இது எல்லாத்தையும் பார்க்கும் போது எனக்கு ஒன்னு நல்லா புரிஞ்சுது விக்கி…. உனக்கு மட்டும் இல்ல அவளுக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு உன் மேல… நீ சொன்னல பார்ட்டில, அவ கூட உன்னை பார்த்தான்னு…. அவளுக்கு ஞாபகம் இல்லாததால நீ யாருன்னு தெரியல….. இருந்தாலும் ஆழமா ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு அவளுக்கும்” என்று சரவணன்.

“இதெல்லாம் கூட விடு…. ஆனா நான் கூட நினைச்சேன்…. நீ ஊட்டியில அவளை பார்த்து சுத்தும் போது சரி பார்த்துட்டு விட்டுவிடுவ அப்படின்னு நினைச்சேன்…. அப்புறம் பார்ட்டில பார்க்கும் போதும் அப்படித் தான் சுத்தின… அது எல்லாத்தையும் விட ஹாஸ்பிடல்ல பார்த்ததும், வாரம் வாரம் போய் அவளை தேடின.. எனக்கு அப்போ கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சுது, உனக்கு அவளை எவ்வளவு பிடிக்குதுன்னு…. ஆனா, இங்க வந்ததுக்கு அப்புறம் அவகிட்ட நீ நேர்ல பார்த்து பேசுறதுக்கான சந்தர்ப்பம் இருந்தும் உன்னால பேச முடியாம இருக்குறதுக்கு காரணம் ஆயிரம் இருக்கலாம்…. ஆனா, உன்னோட ஆழ் மனசுல அவ தப்பு செஞ்சிருக்க கூடாது அவ முழுசா உனக்கானவளாவே இருக்கணும்னு நீ எதிர்பார்க்கிற விக்கி” என்று சரவணன் கூறவும், விக்ரமுக்கு அவனுடைய மனதில் ஓடும் எண்ண ஓட்டத்தை அம்பலப்படுத்தியது போல் உணர்ந்தான்.

“இப்ப கூட பாரு அவ வேற ஏதோ வேலைய காரணமா வெச்சு தான் இங்க வந்திருப்பாளோ அப்படின்னு தெரிஞ்சதும், அவ மேல அவ்ளோ கோபம் வருது உனக்கு… ஏன்னா, அவ முழுசா இங்க தான் இருக்கணும்… உனக்காகவே இருக்கணும்னு யோசிக்குற… அவ்வளவு ஏன் ரெண்டு இன்ஸ்பெக்டர் இங்க வரும் போது கூட அவங்களுக்கு வேற வேற பிளான்ஸ் இருந்து கூட வந்திருக்காங்க… இன்னும் சொல்லப் போனா அந்த பிளான் எல்லாமே நம்ம கிராமத்துக்கு ஆபத்தான பிளானொட எல்லாம் வந்து இருக்காங்க…. அவங்கள எல்லாம் நம்ம விரட்டி அடிச்சு இருக்கோம்…. ஆனா, இந்த பொண்ணு இங்க நமக்கு வாலன்டியரா வந்து இருக்கா அதுக்கூட அவளோட வேலை ஒன்னு இருக்கு அவ்வளவு தான…. அத ஏன் உன்னால ஏத்துக்கவே முடியல விக்கி” என்று சரவணன் கேட்டான்.

விக்ரம் அமைதியாகவே இருக்க, “நீ எனக்கு பதில் சொல்லலனாலும் பரவால்ல…. உனக்கு நீ முதல்ல பதிலை தேடிக்கோ மச்சான்” என்று சரவணன் கூற, “நான் கூட நீ என்னை திட்டுவியோனு நினைச்சேன்…. ஆனா, நீ என்னடான்னா இப்படி கேக்குற” என்று விக்ரம் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“நேத்து சனா கிட்ட கொஞ்ச நேரம் பேசினேன்…. அவ பக்கம் என்ன நியாயம் இருக்கோ அத சொன்னா… அத ஒத்துக்கிறதும் ஒத்துக்காததும் நம்ம விருப்பம் தான்…. ஆனா, இதெல்லாம் நீயே உனக்கு எப்போ கேக்கணும்னு தோணுதோ அப்போ சனா கிட்ட நீயே கேளு விக்கி” என்று சரவணன் கூறினான்.

“ம்ம்….. நைட்டு கொஞ்சம் லேட்டா வந்தேன் நானு…. அவ தூங்கவே இல்ல போல நான் வந்ததும் என்கிட்ட ஏதோ பேச வந்தா…. கொஞ்சம் கோபமா பேசிட்டேன் அவகிட்ட” என்று விக்ரம் தயக்கத்துடன் கூறினான்.

“நீ அப்படி பேசலன்னா தான் ஆச்சரியம்…. ஆனா, ஒன்னு சொல்றேன் டா… உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கோ… தெரிஞ்சுக்கிட்டு அவ மேல தப்பு இருக்குன்னா உன்னால அவளை மன்னிக்க முடியும்னா அவகிட்ட பேசு உன்னுடைய ஃபீலிங்க்ஸ அவகிட்ட சொல்லு… உன்னால மன்னிக்க முடியாதுன்னா அவளை காயப்படுத்தாத அப்படியே விட்டுடு… ஆனா, அவ மேல தப்பு இல்லன்னா இப்ப நீ பண்றதுக்கெல்லாம் அப்ப அவ உன்னை மன்னிக்கலன்னா உனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்….. அது எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சு தான் நான் இப்ப பேசுறேன்” என்று சரவணன் அறிவுரை கூறினான்.

“ம்ம்… சரி ஓகே என்ன பண்ணலாம்னு யோசிப்போம் டா…. ஆனா, அவளுக்கு ஞாபகம் இருந்துச்சுன்னா கூட பரவால்ல…. அவளுக்கு ஞாபகம் இல்லததால கொஞ்சம் வெயிட் பண்ணா அவளுக்கே ஞாபகம் வந்ததும் கூட ஏதாவது தெரியவரும்ல சரவணா” என்று விக்ரம் கேட்க, “கண்டிப்பா வரும்டா…. ஆனா, உண்மை என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நீ என்ன முடிவு எடுக்கப் போறியோ அதுல இப்போ இருந்தே உறுதியா இரு… அவ வேணும்னா இப்போ உன் ஃபீலிங்ஸ்ஸ எப்படியாவது வெளிப்படுத்து, இல்ல அவ பக்கம் தப்பு இருந்தா உன்னால மன்னிக்க முடியாதுன்னா வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு விலகி இருந்துக்கோ அதுதான் நல்லது” என்று சரவணன் கூறினான்.

“எனக்கு இப்ப அந்த முடிவு எடுக்கிற அளவுக்கு என்னுடைய மனநிலை இல்லை… அதனால கொஞ்ச நாள் இப்படியே போகட்டும்…. முடிஞ்ச வரைக்கும் அவகிட்ட கோவத்த காட்டாம இருக்க வேணா நான் முயற்சி பண்றேன்…. மத்தத காலம் பதில் சொல்லட்டும்” என்று விக்ரம் கூறவும், சரவணன் சரி என்று ஆமோதித்தான். இப்படி இருவரும் பேசிக் கொண்டு ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ் ஆஃபீஸுக்கு வந்தடைந்து அவர்களின் வேலையை பார்த்தனர்.

“மச்சான் நமக்கு மதியம் தானே ஆத்து கிட்ட வேலை இருக்கு அதுவரைக்கும் இப்ப நம்ம ஃப்ரீ தானே…. அதனால, நான் சனாவை பார்க்க போறேன்…. பசங்க ஏற்கனவே ரொம்ப குறும்பு பண்ணுவாங்க… நான் எதுக்கும் அங்க போய் ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்” என்று சரவணன் கூறவும், “இரு நானும் உன் கூட வரேன்” என்று விக்ரம் கூற, இருவரும் கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு சென்றனர்.

“இங்க பாரு இந்த குழந்தைக்கு ரத்தமா போய்கிட்டு இருக்கு…. நின்னு சிரிச்சிட்டு இருக்க…. கொஞ்சம் கூட அறிவே இல்லையா உனக்கு… இப்படித் தான் பண்ணுவியா…. யாரு செத்தாலும் பரவாயில்லன்னு நீ நின்னுட்டு சிரிச்சிட்டே இருப்பியா…..ச்சை… மச்சான்!! மச்சான்!!! நீ அபிக்கு ஃபோன் பண்ணு… அவன சீக்கிரம் வர சொல்லு” என்று விக்ரம் கத்தவும், சரவணனும் என்ன செய்வது என்று தெரியாமல் முதலில் அபிலாஷுக்கு ஃபோன் செய்து வருமாறு கூறினான்.

சனந்தா குறுக்கிட்டு, “என்ன ஆச்சுன்னு…” என்று பேசுவதற்குள், “உனக்கு இது என்ன புதுசா… உன்னால ஒரு ஆள ஈஸியா கொல்ல கூட முடியும்…” என்று விக்ரம் பேசுவதற்குள் சரவணன் வந்து விக்ரம் வாயை மூடினான். “சாரி சனா வேற ஏதோ யோசனைல இருக்கான்…. அதான் என்ன என்னவோ பேசுறேன் அவன்” என்று சரவணன் கூறவும், சனந்தா கண்கலங்கி நின்றாள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 17
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.