யாழினி, ஷங்கரையும் சுவாதியையும் அவர்கள் விருப்பப்பட்டால் தங்களது வீட்டில் வந்து தங்கிக் கொள்ளலாம் என்கிறாள். அனைத்தும் தினேஷின் முடிவு தான் என்று சுவாதி சொல்லிவிட, தங்களது கணவன்மார்களின் முடிவை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சுவாதி தினேஷையும், யாழினி ஷங்கரையும் பார்த்தாள். “தெரியாதவங்க யாராவது வந்தா தான் அவங்க கூட தங்குறது கஷ்டம்னு நினைச்சு யோசிச்சிட்டு இருந்தேன். நீங்களும் சுவாதியும் வந்து நம்ம வீட்ல தங்கறதுல எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல தினேஷ். சுவாத்தியும் ஓகே சொல்லிட்டா. இப்ப உங்களுக்கு ஓகேன்னா, எங்க எல்லாருக்கும் ஓகே தான். இன்னைக்கு நம்ம கிளம்பி சென்னை போயிட்டா, உங்க திங்க்ஸ வீட்டில ஷிப்ட் பண்ணிடலாம். From tomorrow as usual, நம்ம நாலு பேரும் கிளம்பி ஆபீஸ் போயிடலாம்.” என்றான் சங்கர்.
“எனக்கும் இந்த ஐடியா பரவாயில்லைன்னு தான் தோணுது. நான் தனியா வீடு பார்த்தாலும் பெருசா தான் பார்க்கணும். எப்படியும் ரெண்ட்டுக்கு 20k மேல வந்துரும். அதுக்கு நம்ம ஷேர் பண்ணி கொடுக்கிறது பெட்டர் தான். நம்ம நாலு பேரும் ஒரே டீம்ல இருக்கிறதுனால, பெண்டிங் ஆபீஸ் வொர்க் இருந்தா கூட வீட்ல வந்து பாத்துக்கலாம். உங்களை மானிட்டர் பண்ண எனக்கும் ஈசியா இருக்கும்.” என்ற தினேஷ் அப்போதும் அவனாக ஒரு முடிவெடுத்து சொல்லாமல் தன் அப்பாவை பார்த்து “உங்களுக்கு ஓகே தானே பா? சுவாதியும் யாழினியும் சின்ன வயசுல இருந்தே ஃபிரண்ட்ஸ். ஒன்னா ஒரே வீட்ல இருந்தா, அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க. நானும் சென்னையில வீடு வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தேன்ல! ரெண்ட்டுல கொஞ்சம் காசு மிச்சம் ஆனா யாழினி சொன்ன மாதிரி இஎம்ஐ போட்டு கட்டறதுக்கு ஈசியா இருக்கும்.” என்றான்.
ஒரு நொடி அமைதியாக இருந்த அவனது அப்பா “உனக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணுச்சுன்னா, நீ தாராளமா பண்ணுப்பா தினேஷ். நீயும் சுவாதியும் தான் அங்க போய் வாழ போறீங்க. உங்களுக்கு வீடு வசதியா இருக்கும்னா, நீங்க அங்க போய் தங்கிக்கோங்க. இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? நீ ஆசைப்பட்ட மாதிரி புது வீடு கட்டி உன் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருந்தா சரி தான். எனக்கும் உங்க அம்மாவுக்கும் வேற சந்தோஷம் என்ன இருக்க போகுது?” என்று கேட்க, தினேஷ் அவருக்கு பதில் சொல்வதற்குள் முந்தி கொண்ட சுவாதி “நான் அவங்க வீட்டுக்கு போயிருக்கேன் மாமா. வீடு நல்லா பெருசா தான் இருக்கும். அது மட்டும் இல்லாம வீட்டுக்கு தேவையான திங்ஸ் எல்லாமே ஏற்கனவே வாங்கி வச்சிருக்காங்க. சோ நமக்கு செலவு பெருசா இருக்காது. தங்குறதுக்கு ஆகிற செலவு, சமைக்கிறதுக்கு பொருள் வாங்குற செலவு மட்டும் தானே! அது ஒன்னும் பிரச்சனை இல்ல மேனேஜ் பண்ணிக்கலாம்.” என்றாள்.
அவள் சொன்னதும் அவர்களுக்கு சரி என்று பட்டதால், அனைவரும் ஒரு சேர தினேஷ் மற்றும் சுவாதியை யாழினியின் வீட்டில் தங்க வைப்பது என்ற முடிவிற்கு வந்தார்கள். “நீங்க இத பத்தி உங்க ஹவுஸ் ஓனர் கிட்ட பேசிட்டீங்களா? ஏன்னா நீங்க ரெண்டு பேர் தான் அங்க இருக்க போறதா சொல்லி வீடு பேசிருப்பீங்க. இப்போ நாங்க வந்து இருக்கிறதுனால எதுவும் பிரச்சனை வந்துராதுல்ல?” என்று தினேஷ் கேட்க, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது ப்ரோ. ஹவுஸ் ஓனர் என் friendடோட அப்பா தான். அவர்கிட்ட நான் பேசிக்கிறேன். அவரெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாரு. Infact எங்களுக்காக முன்னாடி இருந்தவங்க கிட்ட அவங்க வாங்கினதை விட rent கம்மி பண்ணி கொடுத்தாங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல சென்னைக்கு பிளைட் இருக்கு. உங்களுக்கு ஓகேன்னா, நான் டிக்கெட் புக் பண்றேன். இப்பவே கிளம்பிடலாம். நீங்க இன்னைக்குள்ள வீடு செட் பண்ணிட்டா, நாளைக்கு பெருசா பிரஷர் இருக்காது.” என்றான் சங்கர்.
“எந்த பிரச்சினையும் வர்றாதுன்னா ஓகே தான். நீங்க ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிடுங்க. நான் அமௌன்ட் பே பண்ணிடறேன். இன்னைக்கே கிளம்பிடலாம். அங்க அவ்ளோ வேலை இருக்கும்போது, இங்க இருந்து என்ன பண்றது?” என்று தினேஷ் கேட்க, “நீங்க வீடு பார்த்துட்டு சொன்னீங்கன்னா சீறுவரிசை பொருள் எல்லாம் வாங்கி கொண்டு வந்து அங்க இறக்கிடலாம்னு பார்த்தோம். இப்ப உடனே கிளம்புறேன்னு சொல்றீங்களே! நாங்க என்ன பண்றது மாப்ள? வீட்டுக்கு தேவையான கட்டில் பீரோ எல்லாம் சென்னையிலேயே நீங்க ஏதாவது நல்ல படையா பாத்து ஆர்டர் குடுத்துருங்க. நான் ஆன்லைன்ல காசு கட்டிடறேன்.” என்றார் சுவாதியின் அப்பா.
“ஐயோ அதெல்லாம் வேணாம் மாமா. என்னதான் பெரிய வீடா இருந்தாலும், புதுசா கொண்டு போய் அங்க இவ்வளவு திங்ஸ் போட்டா இடைஞ்சல் ஆயிடும். நாங்க முதல்ல அங்க போய் பார்க்கிறோம். எங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா நாங்களே வாங்கிக்கிறோம். நீங்க அவசரப்பட்டு இப்ப எதுவும் வாங்கிடாதீங்க.” என்று தினேஷ் சொல்ல, “அது எப்படி மாப்ள கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு எங்க பொண்ண வெறும் கையோட அனுப்ப முடியும்?” என்று தயக்கத்துடன் கேட்டார் சுவாதியின் அப்பா.
“நீங்க ஏதாவது செய்வீங்கன்னு எதிர்பார்த்து எல்லாம் நான் சுவாதிய கல்யாணம் பண்ணிக்கல மாமா. நான் சொல்றதை மீறியும் உங்களுக்கு அவளுக்காக ஏதாவது செய்யணும்னு தோணுச்சுன்னா, நீங்க விருப்பப்படுற மாதிரி அவளுக்கு என்னென்ன வாங்கணும்னு நினைக்கிறீங்களோ அதுக்கான அமௌன்டை அவ அக்கவுண்ட்ல போட்ருங்க. அவளுக்கு பிடிச்சதை அவளுக்கு தேவைப்படும்போது அவளே வாங்கிக்கட்டும்.” என்று தினேஷ் தாராள மனதுடன் சொல்ல, சுவாதி தன் கணவனை பெருமையாக பார்த்தாள்.
சங்கர் அவர்கள் நால்வருக்கும் பிளைட்டில் டிக்கெட் புக் செய்துவிட, அடுத்த ஒரு மணி நேரத்தில் பிளைட் என்பதால் அனைவரும் அவசர அவசரமாக கிளம்பி தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு சென்றார்கள். யாழினியிடம் பேச வேண்டும் என்று நினைத்த ஸ்வாதி அவள் அருகில் சென்று அமர்ந்து கொள்ள, வேறு வழியில்லாமல் தினேஷும் சங்கரும் அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டார்கள்.
“எப்பயும் நீயும் சங்கரும் ஒன்னாவே இருப்பீங்க. நான் இங்க உன் பக்கத்துல வந்து உக்காந்துட்டதுனால நீ அவரை மிஸ் பண்றியா? அப்படி ஏதாவது இருந்தா சொல்லு. நான் போய் தினேஷ் கூடவே உட்கார்ந்துகிறேன்.” என்று சுவாதி தயக்கத்துடன் சொல்ல, “ச்சேச்சே.. அப்படியெல்லாம் இல்ல. நானே அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். வாலண்டியரா வந்து நீ என்னை காப்பாத்திட்ட. விடு, அவன் தினேஷ் கூடவே இருக்கட்டும்.. கொஞ்ச நேரமாவது நான் நிம்மதியா இருக்கேன்.” என்று சலிப்புடன் சொன்னாள் யாழினி.
“என்ன டி நீ இப்படி இருக்க? புருஷன் நம்ம பின்னாடியே சுத்திட்டு இருந்தா நல்லா தானே இருக்கும்! எங்க அம்மா புருஷனை எப்படி முந்தானைல முடிஞ்சு வச்சுக்கிறதுன்னு உன் கிட்ட கேட்டு கத்துக்க சொல்றாங்க. நீ என்னனா.. அவர் உன் பக்கத்திலேயே வர வேண்டாம்னு சொல்ற.. அவரே வந்தாலும் போடான்னு விரட்டி விட்டுருவ போலயே..!!” என்று ஆச்சரியமாக சுவாதி கேட்க, “ஏய்.. என் நிலைமை தெரியாம பேசாத டி. அவன் சும்மாவே எப்பயும் மூடுல தான் இருப்பான். இதுல நான் பக்கத்துல இருந்தா சொல்லவே வேணாம். என்ன நிம்மதியா கூட உட்கார விடமாட்டான். ஏற்கனவே என்னால ஒழுங்கா உட்கார முடியல. இதுல இவன் வேற நை நைன்னு ஏதாச்சும் பண்ணிக்கிட்டே இருந்தா கடுப்பாகாதா? நேத்து அவன் பண்ண வேலையில உங்க அம்மா நாங்க வரும்போது என்னவெல்லாம் கேட்டாங்க பாத்தியா?
இன்னொருத்தவங்க வீட்டுக்கு போனா, நாலு பேர் சுத்தி இருக்காங்கன்னு யோசிக்கணுமா இல்லையா? ஆன்ட்டி அப்படி கேட்கும்போது, எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா சுவாதி? கொஞ்சமாவது மனுஷன்னா கண்ட்ரோல் இருக்கணும். என்னமோ காஞ்ச மாடு கம்புல பாயுற மாதிரி எப்பயும் அதே நினைப்பாவே இருந்தா என்ன பண்றது? ஏதோ அது உங்க வீடா இருந்ததுனால பரவால்ல. ஆன்ட்டி டீசண்டா கேட்டுட்டு விட்டுட்டாங்க. வேற யாராவது நக்கலா பேசியிருந்தா, உடனே இவன் கோபப்பட்டு இருப்பான். அங்க தேவை இல்லாம ஒரு சண்டை வந்திருக்கும். வர வர எனக்கு அவனை எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல சுவாதி.” என்று கோபம் கலந்த வருத்தத்துடன் சொன்னாள் யாழினி.
“நெஜமாவே நீ எதுக்கு இதுக்கு எல்லாம் இவ்வளவு ஃபீல் பண்றேன்னு எனக்கு புரியவே இல்ல யாழினி. எங்க அம்மா கூட புருஷன் பொண்டாட்டின்னா அப்படித் தான் இருக்கணும். யாழினி சங்கர் மாதிரி இருக்க கத்துக்கோங்கன்னு தான் சொன்னாங்க. சங்கர் மட்டுமா இப்படி இருக்காரு? பொதுவா ஆம்பளைங்கன்னா அப்படித்தானே இருப்பாங்க! அவங்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கும் இல்ல! அவங்களுக்கு மூடு வந்தா பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க? வைஃப் தானே அத புரிஞ்சுகிட்டு அவங்க கூட இருக்கணும்?” என்று சுவாதி கேட்க, “அடியேய்.. எல்லாமே ஓரளவுக்கு தாண்டி. அவன் என் கூட இருக்கும்போது, கொஞ்சம் கூட நான் ஹேப்பியாவே இல்லைன்னு சொன்னா அது பொய் தான். நான் ஒத்துக்கிறேன்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
“எனக்கும் இந்த ஐடியா பரவாயில்லைன்னு தான் தோணுது. நான் தனியா வீடு பார்த்தாலும் பெருசா தான் பார்க்கணும். எப்படியும் ரெண்ட்டுக்கு 20k மேல வந்துரும். அதுக்கு நம்ம ஷேர் பண்ணி கொடுக்கிறது பெட்டர் தான். நம்ம நாலு பேரும் ஒரே டீம்ல இருக்கிறதுனால, பெண்டிங் ஆபீஸ் வொர்க் இருந்தா கூட வீட்ல வந்து பாத்துக்கலாம். உங்களை மானிட்டர் பண்ண எனக்கும் ஈசியா இருக்கும்.” என்ற தினேஷ் அப்போதும் அவனாக ஒரு முடிவெடுத்து சொல்லாமல் தன் அப்பாவை பார்த்து “உங்களுக்கு ஓகே தானே பா? சுவாதியும் யாழினியும் சின்ன வயசுல இருந்தே ஃபிரண்ட்ஸ். ஒன்னா ஒரே வீட்ல இருந்தா, அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க. நானும் சென்னையில வீடு வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தேன்ல! ரெண்ட்டுல கொஞ்சம் காசு மிச்சம் ஆனா யாழினி சொன்ன மாதிரி இஎம்ஐ போட்டு கட்டறதுக்கு ஈசியா இருக்கும்.” என்றான்.
ஒரு நொடி அமைதியாக இருந்த அவனது அப்பா “உனக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணுச்சுன்னா, நீ தாராளமா பண்ணுப்பா தினேஷ். நீயும் சுவாதியும் தான் அங்க போய் வாழ போறீங்க. உங்களுக்கு வீடு வசதியா இருக்கும்னா, நீங்க அங்க போய் தங்கிக்கோங்க. இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? நீ ஆசைப்பட்ட மாதிரி புது வீடு கட்டி உன் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருந்தா சரி தான். எனக்கும் உங்க அம்மாவுக்கும் வேற சந்தோஷம் என்ன இருக்க போகுது?” என்று கேட்க, தினேஷ் அவருக்கு பதில் சொல்வதற்குள் முந்தி கொண்ட சுவாதி “நான் அவங்க வீட்டுக்கு போயிருக்கேன் மாமா. வீடு நல்லா பெருசா தான் இருக்கும். அது மட்டும் இல்லாம வீட்டுக்கு தேவையான திங்ஸ் எல்லாமே ஏற்கனவே வாங்கி வச்சிருக்காங்க. சோ நமக்கு செலவு பெருசா இருக்காது. தங்குறதுக்கு ஆகிற செலவு, சமைக்கிறதுக்கு பொருள் வாங்குற செலவு மட்டும் தானே! அது ஒன்னும் பிரச்சனை இல்ல மேனேஜ் பண்ணிக்கலாம்.” என்றாள்.
அவள் சொன்னதும் அவர்களுக்கு சரி என்று பட்டதால், அனைவரும் ஒரு சேர தினேஷ் மற்றும் சுவாதியை யாழினியின் வீட்டில் தங்க வைப்பது என்ற முடிவிற்கு வந்தார்கள். “நீங்க இத பத்தி உங்க ஹவுஸ் ஓனர் கிட்ட பேசிட்டீங்களா? ஏன்னா நீங்க ரெண்டு பேர் தான் அங்க இருக்க போறதா சொல்லி வீடு பேசிருப்பீங்க. இப்போ நாங்க வந்து இருக்கிறதுனால எதுவும் பிரச்சனை வந்துராதுல்ல?” என்று தினேஷ் கேட்க, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது ப்ரோ. ஹவுஸ் ஓனர் என் friendடோட அப்பா தான். அவர்கிட்ட நான் பேசிக்கிறேன். அவரெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாரு. Infact எங்களுக்காக முன்னாடி இருந்தவங்க கிட்ட அவங்க வாங்கினதை விட rent கம்மி பண்ணி கொடுத்தாங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல சென்னைக்கு பிளைட் இருக்கு. உங்களுக்கு ஓகேன்னா, நான் டிக்கெட் புக் பண்றேன். இப்பவே கிளம்பிடலாம். நீங்க இன்னைக்குள்ள வீடு செட் பண்ணிட்டா, நாளைக்கு பெருசா பிரஷர் இருக்காது.” என்றான் சங்கர்.
“எந்த பிரச்சினையும் வர்றாதுன்னா ஓகே தான். நீங்க ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிடுங்க. நான் அமௌன்ட் பே பண்ணிடறேன். இன்னைக்கே கிளம்பிடலாம். அங்க அவ்ளோ வேலை இருக்கும்போது, இங்க இருந்து என்ன பண்றது?” என்று தினேஷ் கேட்க, “நீங்க வீடு பார்த்துட்டு சொன்னீங்கன்னா சீறுவரிசை பொருள் எல்லாம் வாங்கி கொண்டு வந்து அங்க இறக்கிடலாம்னு பார்த்தோம். இப்ப உடனே கிளம்புறேன்னு சொல்றீங்களே! நாங்க என்ன பண்றது மாப்ள? வீட்டுக்கு தேவையான கட்டில் பீரோ எல்லாம் சென்னையிலேயே நீங்க ஏதாவது நல்ல படையா பாத்து ஆர்டர் குடுத்துருங்க. நான் ஆன்லைன்ல காசு கட்டிடறேன்.” என்றார் சுவாதியின் அப்பா.
“ஐயோ அதெல்லாம் வேணாம் மாமா. என்னதான் பெரிய வீடா இருந்தாலும், புதுசா கொண்டு போய் அங்க இவ்வளவு திங்ஸ் போட்டா இடைஞ்சல் ஆயிடும். நாங்க முதல்ல அங்க போய் பார்க்கிறோம். எங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா நாங்களே வாங்கிக்கிறோம். நீங்க அவசரப்பட்டு இப்ப எதுவும் வாங்கிடாதீங்க.” என்று தினேஷ் சொல்ல, “அது எப்படி மாப்ள கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு எங்க பொண்ண வெறும் கையோட அனுப்ப முடியும்?” என்று தயக்கத்துடன் கேட்டார் சுவாதியின் அப்பா.
“நீங்க ஏதாவது செய்வீங்கன்னு எதிர்பார்த்து எல்லாம் நான் சுவாதிய கல்யாணம் பண்ணிக்கல மாமா. நான் சொல்றதை மீறியும் உங்களுக்கு அவளுக்காக ஏதாவது செய்யணும்னு தோணுச்சுன்னா, நீங்க விருப்பப்படுற மாதிரி அவளுக்கு என்னென்ன வாங்கணும்னு நினைக்கிறீங்களோ அதுக்கான அமௌன்டை அவ அக்கவுண்ட்ல போட்ருங்க. அவளுக்கு பிடிச்சதை அவளுக்கு தேவைப்படும்போது அவளே வாங்கிக்கட்டும்.” என்று தினேஷ் தாராள மனதுடன் சொல்ல, சுவாதி தன் கணவனை பெருமையாக பார்த்தாள்.
சங்கர் அவர்கள் நால்வருக்கும் பிளைட்டில் டிக்கெட் புக் செய்துவிட, அடுத்த ஒரு மணி நேரத்தில் பிளைட் என்பதால் அனைவரும் அவசர அவசரமாக கிளம்பி தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு சென்றார்கள். யாழினியிடம் பேச வேண்டும் என்று நினைத்த ஸ்வாதி அவள் அருகில் சென்று அமர்ந்து கொள்ள, வேறு வழியில்லாமல் தினேஷும் சங்கரும் அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டார்கள்.
“எப்பயும் நீயும் சங்கரும் ஒன்னாவே இருப்பீங்க. நான் இங்க உன் பக்கத்துல வந்து உக்காந்துட்டதுனால நீ அவரை மிஸ் பண்றியா? அப்படி ஏதாவது இருந்தா சொல்லு. நான் போய் தினேஷ் கூடவே உட்கார்ந்துகிறேன்.” என்று சுவாதி தயக்கத்துடன் சொல்ல, “ச்சேச்சே.. அப்படியெல்லாம் இல்ல. நானே அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். வாலண்டியரா வந்து நீ என்னை காப்பாத்திட்ட. விடு, அவன் தினேஷ் கூடவே இருக்கட்டும்.. கொஞ்ச நேரமாவது நான் நிம்மதியா இருக்கேன்.” என்று சலிப்புடன் சொன்னாள் யாழினி.
“என்ன டி நீ இப்படி இருக்க? புருஷன் நம்ம பின்னாடியே சுத்திட்டு இருந்தா நல்லா தானே இருக்கும்! எங்க அம்மா புருஷனை எப்படி முந்தானைல முடிஞ்சு வச்சுக்கிறதுன்னு உன் கிட்ட கேட்டு கத்துக்க சொல்றாங்க. நீ என்னனா.. அவர் உன் பக்கத்திலேயே வர வேண்டாம்னு சொல்ற.. அவரே வந்தாலும் போடான்னு விரட்டி விட்டுருவ போலயே..!!” என்று ஆச்சரியமாக சுவாதி கேட்க, “ஏய்.. என் நிலைமை தெரியாம பேசாத டி. அவன் சும்மாவே எப்பயும் மூடுல தான் இருப்பான். இதுல நான் பக்கத்துல இருந்தா சொல்லவே வேணாம். என்ன நிம்மதியா கூட உட்கார விடமாட்டான். ஏற்கனவே என்னால ஒழுங்கா உட்கார முடியல. இதுல இவன் வேற நை நைன்னு ஏதாச்சும் பண்ணிக்கிட்டே இருந்தா கடுப்பாகாதா? நேத்து அவன் பண்ண வேலையில உங்க அம்மா நாங்க வரும்போது என்னவெல்லாம் கேட்டாங்க பாத்தியா?
இன்னொருத்தவங்க வீட்டுக்கு போனா, நாலு பேர் சுத்தி இருக்காங்கன்னு யோசிக்கணுமா இல்லையா? ஆன்ட்டி அப்படி கேட்கும்போது, எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா சுவாதி? கொஞ்சமாவது மனுஷன்னா கண்ட்ரோல் இருக்கணும். என்னமோ காஞ்ச மாடு கம்புல பாயுற மாதிரி எப்பயும் அதே நினைப்பாவே இருந்தா என்ன பண்றது? ஏதோ அது உங்க வீடா இருந்ததுனால பரவால்ல. ஆன்ட்டி டீசண்டா கேட்டுட்டு விட்டுட்டாங்க. வேற யாராவது நக்கலா பேசியிருந்தா, உடனே இவன் கோபப்பட்டு இருப்பான். அங்க தேவை இல்லாம ஒரு சண்டை வந்திருக்கும். வர வர எனக்கு அவனை எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல சுவாதி.” என்று கோபம் கலந்த வருத்தத்துடன் சொன்னாள் யாழினி.
“நெஜமாவே நீ எதுக்கு இதுக்கு எல்லாம் இவ்வளவு ஃபீல் பண்றேன்னு எனக்கு புரியவே இல்ல யாழினி. எங்க அம்மா கூட புருஷன் பொண்டாட்டின்னா அப்படித் தான் இருக்கணும். யாழினி சங்கர் மாதிரி இருக்க கத்துக்கோங்கன்னு தான் சொன்னாங்க. சங்கர் மட்டுமா இப்படி இருக்காரு? பொதுவா ஆம்பளைங்கன்னா அப்படித்தானே இருப்பாங்க! அவங்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கும் இல்ல! அவங்களுக்கு மூடு வந்தா பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க? வைஃப் தானே அத புரிஞ்சுகிட்டு அவங்க கூட இருக்கணும்?” என்று சுவாதி கேட்க, “அடியேய்.. எல்லாமே ஓரளவுக்கு தாண்டி. அவன் என் கூட இருக்கும்போது, கொஞ்சம் கூட நான் ஹேப்பியாவே இல்லைன்னு சொன்னா அது பொய் தான். நான் ஒத்துக்கிறேன்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.