சாமிஜி, "அது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த கதை." என்றார்.
அதை கேட்டு வியந்த சந்ரா, "ஆயிரம் வருஷமா?" என்று கேட்க,
சாமிஜி, "ஆம் சந்ரா. ஆயிரம் வருடங்களும் முன்பும் நீ பிறந்திருக்கிறாய். அதோடு உன் அர்ஜுனும் பிறந்திருக்கிறான்." என்றார்.
அதை கேட்டு மேலும் வியந்தவள், "அர்ஜுனுமா?" என்று கேட்க,
சாமிஜி, "ஆம். உங்களுடைய இந்த கதை இன்றல்ல, ஆயிரம் வருடத்திற்கு முன்பே அந்த இறைவனால் எழுதப்பட்டது." என்று கூற,
அதை கேட்டு அதிர்ச்சியடைவதா ஆச்சரியப்படுவதா என்று தெரியாமல் விழித்தவள், "என்ன சொல்றீங்க சாமிஜி?" என்று புரியாமல் கேட்க,
சாமிஜி, "பூர்வ ஜென்மத்தில் பூர்த்தியாகாத உங்களின் கதை இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது." என்றார்.
அதை கேட்டு குழம்பியவள், "பூர்த்தி ஆகலையா? அப்பிடின்னா சாமிஜி?" என்று கேட்க,
அதற்கு சாமிஜி பதில் கூற வரும் முன், தூரத்தில் அந்த கோவிலின் மணிகள் ஒலிக்க, அதை இங்கு அறிந்தவர் உடனே சந்ராவை பார்த்து, "இதற்குமேல் நான் கூறக்கூடாது." என்றார்.
அதை கேட்டு அதிர்ச்சியடைந்தவள், "என்ன சாமிஜி சொல்றீங்க? சொல்ல கூடாதின்னா என்ன அர்த்தம்?" என்று கேட்க,
சாமிஜி, "நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது." என்றார்.
சந்ரா, "இல்ல இல்ல சாமிஜி. தயவுசெஞ்சு எனக்கு ஒரு வழி சொல்லிட்டு போங்க. என்னோட நிம்மதியவே நா எழந்து நிக்கிறேன்." என்றாள்.
சாமிஜி, "அதற்கு ஒரே வழி உன் பூர்வ ஜென்மம் உனக்கு நியாபம் வருவது மட்டுமே." என்றார்.
சந்ரா, "அதுக்கு நா என்ன பண்ணணும்? ஏ எனக்கு அது இன்னும் நியாபகம் வராம இருக்கு? எப்போ நியாபகம் வரும்னு சொல்லுங்க." என்று குழப்பத்துடன் கேட்க,
அப்போது மீண்டும் அந்த கோவிலின் மணி சத்தத்தை தனக்குள் உணர்ந்தவர், "உன்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் அந்த ஈசனிடமே பதில் உள்ளது. உடனே செல். இந்த பிரச்சனை எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே செல். அங்கே உனக்கான தீர்வு நிச்சயம் கிடைக்கும்." என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் செல்வதை பார்த்த சந்ரா, "சாமிஜி எங்கன்னு சொல்லுங்க." என்றபடி அவர் பின்னே செல்ல, அவரோ சற்றும் நிற்காமல் சென்றபடியே, "உடனே செல் சந்ரா. அந்த ஈசன் அழைக்கிறான்." என்று கூறியபடியே சென்றுவிட்டார்.
அதில் அதிர்ந்து நின்றவளால் அவர் எங்கு சென்றார் என்று கண்டுப்புடிக்க முடியவில்லை. அங்கேயே நின்று அங்கும் இங்கும் தேட, அப்போதே அந்த கோவிலின் அனைத்து மணிகளும் ஒரு சேர ஒன்றாக ஒலிக்க, அதை நன்றாக உணர்ந்தவளுக்கு மீண்டும் அந்த நினைவுகள் கண்முன் வர, அப்போதே இந்த பிரச்சனையின் ஆரம்பம் எங்கு என்று புரிந்தது. அதோடு "உடனே செல் சந்ரா அந்த ஈசன் அழைக்கிறான்" என்று அவர் கூறிவிட்டு சென்றதை நினைவுப்படுத்தியவளுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.
அவள் இப்பொழுதே அந்த கோவிலுக்கு சென்றாக வேண்டும். அவ்வாறு முடிவெடுத்தவள் எதை பற்றியும் சிந்திக்காதவாறு தன் கண்முன் தெரியும் அந்த நினைவுகளே ஆக்கிரமித்துவிட, வேறு எதையும் யோசிக்காதவள், தன் மனது கூறுவதை மட்டுமே கேட்டு தன் கால்களை தடுக்காமல், அனைத்தையும் மறந்து அந்த கோவிலை நோக்கி சென்றாள். அவளுக்கு என்னவாயிற்றென்று அவளுக்கே தெரியவில்லை. அவளோ தன் மனது மட்டும் கால்களின் பிடியில் சிக்கியிருந்தாள். அவளின் மூளையை முழுதாக ஆட்க்கொண்டது அந்த நினைவுகள் மட்டுமே. இவ்வாறு இவள் எதை பற்றியும் யோசிக்காமல் சென்றுக்கொண்டிருக்க, இங்கு அவை எதையுமே அறியாத அர்ஜுனோ அங்கு நன்றாக உறங்கிக்கொன்டிருந்தான்.
இறுதியில் அந்த கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்தாள் சந்ரா. ஆனால் அவளின் தலையில் அதே காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க, தன் தலையை அழுந்த பற்றியபடி முடியாத நிலையில்தான் அந்த கோவிலுக்குள் நுழைந்தாள்.
அங்கு சென்றதுமே அங்கு வாசலிலிருந்து ஒரு மணியை இவள் கையால் அடிக்க, அப்போதே திரும்ப அனைத்து மணிகளும் காற்றிற்கு தானாய் அசைந்து ஒலி எழுப்ப ஆரம்பித்தது. அதில் மேலும் அவளுக்கு அந்த நினைவுகள் வந்து செல்ல, அவளோ தன் காதுகளை அழுந்த மூடிக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அந்த நினைவுகள் அவளை மிகவும் பலவீனமாக்கியது. ஆனாலும் சமாளித்து நேராக நின்றவள், தன் முன் பிரம்மாண்ட சிலையாய் நிற்கும் சிவப்பெருமானை நோக்கி தன் கண்களை ஏறெடுத்து, தன் கைளை எடுத்து அவர் முன் வணங்கி, "ஈஷ்வரா! ப்ளீஸ் இந்த வேதனையில இருந்து என்ன வெளிய கொண்டு வாங்க. என்னால சுத்தமா முடியல. இதுல இருந்து என்ன வெளிய கொண்டு வாங்க. என் பூர்வ ஜென்மத்த எனக்கு நியாபகப்படுத்துங்க. இல்லன்னா இந்த வேதனைய ஒடனே நிறுத்துங்க." என்று கண்ணீருடன் கெஞ்சி கூற கூறவே அவளின் தலையின் வலி அதிகமாக, அவளோ தள்ளாடியபடிதான் நின்றாள்.
"ப்ளீஸ் ஈஷ்வரா!" என்று வலியில் சத்தமாக கூறிய நொடி, புயலாக மாறிய காற்று, அவள் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் மணியை பேயாய் ஆட்ட, அதுவோ சட்டென்று பிய்ந்து இறங்கி சந்ராவின் தலையில் விழ, அவளோ சங்கரனின் காலடியில் தலை முட்டி விழுந்தாள். அடுத்த நொடி இங்கு உறங்கிக்கொண்டிருந்த அர்ஜுன், "சந்ரா!" என்று திடுக்கிட்டு எழுந்தான்.
அப்போது தன் முன் இருக்கும் மெத்தையை பார்க்க, அங்கே இருந்த சந்ராவை காணவில்லை என்றதும் பதறி எழுந்தான்.
இங்கு அவள் தலையிலோ காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்துக்கொண்டிருக்க, அவளின் இமைகளோ அவளின் கட்டுப்பாட்டை மீறி மெல்ல ஒன்று சேர்ந்தது. அடுத்த நொடி அனைத்தும் இருள் சூழ்ந்துவிட, அவளோ ஆழ்ந்த மயக்கத்திற்கு தள்ளப்பட்டாள்.
ஆனால் அவளின் ஆழ் மனதோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தன்னையே காண துவங்கியது.
அதே இரத்த கரைகள், கலவரம், கதறல் சத்தம் என்று அனைத்தையும் கண்டு திடுகிட்டு விழித்தவள், மேலும் கீழுமாக மூச்சு வாங்கியபடி எழுந்து அமர்ந்து, "என்ன கனவு இது? திரும்ப திரும்ப வருது?" என்று யோசித்தபடி முச்சு வாங்க,
அப்போது அங்கு வந்த அவளின் அக்கா தாமிரா, "அமிர்த்தா!" என்றழைக்க, உடனே அவர் பக்கம் திரும்பினாள் அமிர்த்தா.
அப்போது அவளுடைய முகமேல்லாம் வியர்த்திருக்க, அதை கண்ட அவள் அக்கா தாமிரா, அவள் அருகில் அமர்ந்து, "என்ன அமிர்த்தா, மறுபடியும் அதே கனவா?" என்று கேட்க,
அதற்கு அமிர்த்தா, "ஆமா தாமிராக்கா. அந்த கனவு என்ன விடவே மாட்டிங்குது. என்ன விடாம தொரத்துது." என்று குழம்பியபடி கூற,
அதை கேட்ட தாமிரா, "திரும்ப திரும்ப அதே கனவு தினமும் எப்பிடி வருது? அதோட அந்த கனவுல நீ என்னதா பாக்குற? அதையாவது எங்கிட்ட சொல்லு." என்று கூற,
அதற்கு அமிர்த்தா, "நா எத்தன தெடவ சொல்றது தாமிரா அக்கா? அது வெறும் கனவுதான விடுங்க." என்றாள். ஏனோ அவளுக்கு அதை பற்றி மீண்டும் பேச பிடிக்கவில்லை.
தாமிரா, "நானும் ஒவ்வொரு தெடவையும் கேக்குறேன், ஆனா நீ சொல்லவே மாட்டிங்குற. அப்பிடி என்னதா பிரச்சன?" என்று கேட்க,
அமிர்த்தா, "இல்ல தாமிராக்கா. அந்த கெட்ட கனவ நா திரும்ப ஞாபகப்படுத்திக்க விரும்பல. அது ரொம்ப மோசமான கனவு. அது நம்ப நெனச்சு பாக்க முடியாத அளவு பயங்கரமானது." என்று கூறும்போதே அவளின் முகத்தில் பயமும் பதற்றமும் சூழ்ந்துக்கொண்டது.
அதை பார்த்த தாமிரா, "செரி அமிர்த்தா. அத பத்தி இப்போ பேச வேண்டாம். பட் நீ இன்னிக்கு அவன பாக்க போறதா சொன்னல்ல போகலையா?" என்று பேச்சை திசை திருப்ப,
அமிர்த்தா புரியாமல், "யார?" என்று கேட்க,
அதற்கு தாமிரா குறும்பு புன்னகையுடன், "அதான்டி உன் ஆச காதலன்." என்று கிண்டல் செய்ய,
அமிர்த்தா, "ச் போங்க அக்கா. ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க." என்று கூறி எழுந்தவள், "செரி நா கெளம்புறேன். அம்மா கேட்டா..." என்று கூறும் முன், "அமுதா வீட்டுக்கு போயிருக்கன்னு சொல்லிக்கிறேன்." என்றாள் தாமிரா.
அதை கேட்டு "ம்ம்" என்று புன்னகையுடன் கூறியவள் குளிக்க சென்றாள்.
பிறகு தயாராகி தன் காதலனை பார்க்க அவனுடைய வீட்டிற்கு சென்றாள் அமிர்த்தா.
அங்கு உள்ளே சென்று பார்வையை சுழலவிட்டவள், "ஆதி!" என்று அழைக்க,
அப்போதே உள்ளிருந்து வெளி வந்தான் அவளின் காதலன் ஆதிசேஷன். ஆனால் அவன் கையில் வைத்திருந்த பூங்கொத்து அவனின் முகத்தை மறைத்திருக்க, அதை பார்த்து அவன் அருகில் சென்றவள், "என்ன ஆதி இது?" என்று கேட்க,

அவனோ அந்த பூக்களை தன் முகத்திலிருந்து விலக்கி அவளிடம் கொடுத்து, "இது என் தேவதைக்காக." என்றான்.
அதை கேட்டு வெட்கத்துடன் அந்த பூக்களை வாங்கிக்கொண்டவள், அப்போதே அந்த வீடு முழுக்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை கவனித்து, "என்ன இதெல்லாம்? எதுக்காக இவ்ளோ அழங்காரம்?" என்று கேட்க,
அதற்கு ஆதி, "இன்னியோட நா உன்ன சந்திச்சு 100 நாள் ஆகுது. அத கொண்டாட வேண்டாமா?" என்று கூற,
அதை கேட்டு மிகவும் வியந்த அமிர்த்தா, "100 நாளா? நாம சந்திச்ச நாள அந்தளவு நியாபகம் வெச்சிருக்கியா?" என்று கேட்க,
ஆதி, "ம்ம்" என்று தோள்களை உலுக்கினாள்.
அதை கேட்டு பூரித்தவள், "என்ன நீ அவ்ளோ காதலிகிறயா ஆதி?" என்று கேட்கும்போதே அவள் கண்களில் கண்ணீர் தேங்க,
அவளின் கண்ணீரை துடைத்துவிட்டவன், "இப்பிடியெல்லா கேட்டா எப்பிடி? நீ ஒரு பேரழகி. அதோட கோடியில ஒருத்தி. உன் கூட இருக்கிற ஒவ்வொரு நாளையும் நா கொண்டாடணும். அப்பிடியிருக்கும்போது 100 வது நாள கொண்டாடுறதெல்லா ரொம்பவே கம்மிதா" என்றான்.
அதை கேட்டு புன்னகைத்தவள் தன் கண்ணீரை துடைத்துக்கொள்ள, "செரி இப்பிடியே நிக்க போறியா? இல்ல எனக்கும் எதாவது பரிசு குடுக்க போறியா?" என்று கேட்க,
அமிர்த்தா, "என்ன பரிசு?" என்று புரியாமல் கேட்க,
அதற்கு ஆதி அவளின் இதழ்களை பார்த்தபடி, "கொஞ்சம் இனிப்பா எதாவது கெடச்சா நல்லா இருக்கும்." என்று அவள் இதழ் நோக்கி குனிய,
அவளோ சட்டென அவனைவிட்டு விலகி, "இனிப்புதான? இப்பவே பண்ணி கொண்டு வர்றேன். நீ இங்கயே இரு." என்று கூறி சமையலறை நோக்கி ஓடினாள்.
அதை பார்த்து ஏமாற்றமாய் புன்னகைத்தவன், பிறகு அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து அமிர்த்தா இனிப்பு செய்து எடுத்து வந்து ஆதியை தேட, அவனோ அங்கு இல்லை
அதனால் அந்த இனிப்பை அங்கேயே வைத்துவிட்டு, அவனை தேட அரம்பித்தாள் அமிர்த்தா. "ஆதி...! ஆதி! நீ எங்க போய்ட்ட?" என்று தேடியபடியே வீட்டை விட்டு வெளியேறியவள்,
வீட்டிலிருந்து சற்று தள்ளியே வந்துவிட்டாள்.
எங்கும் ஆதியை காணவில்லை. அவனையே தேடிக்கொண்டு முன்னோக்கி நடந்தவள் திடீரென வழுக்கி சகதியில் விழுந்தாள். அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த கொள்ளைக் கூட்டத்தின் பல்லக்கு நின்றுவிட, அப்போது அதனுள் அமர்ந்திருந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன், கையை வெளியில் நீட்டி பல்லக்கை இறக்க கூறினான்.
அதை கேட்ட நால்வரும் தங்கள் தோள்களில் சுமந்துக்கொண்டிருந்த பல்லக்கை கீழே இறக்கினர்.
இங்கு சகதியில் விழுந்த அமிர்த்தாவோ, மெல்ல எழுந்து தன் முகத்தில், உடையில், உடம்பில் என்று அனைத்திலும் இருந்த சகதியை கைகளால் சுத்தம் செய்தபடியே, எழுந்து அருகிலிருக்கும் அருவிக்கு சென்று, அங்கு தன் உடலில் இடையில் உள்ள கதியை சுத்தம் செய்தாள்.
அதை அந்த பல்லக்கின் திரையை விலக்கி பார்த்துக்கொண்டிருந்தவன், தன்னுடன் இருக்கும் கொள்ளைக்கூட்டத்தை நோக்கி, "நீங்க எல்லாரும் போங்க. நா அப்றம் வர்றேன்." என்று கூறி பல்லக்கைவிட்டு இறங்கினான்.
அதை கேட்ட அனைவரும் பல்லக்கையும் தாங்கள் கொள்ளையடித்ததையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அப்போது அந்த கொள்ளை கூட்ட தலைவன் மெல்ல நடந்து அந்த அருவியின் அருகில் உள்ள மரத்தின் பின்னால் ஒளிந்தபடி, அங்கு அருவிக்கு அருகில் நின்றிருந்த அமிர்த்தாவை அணு அணுவாய் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தான்.
அதை அறியாத அமிர்த்தாவோ தன் உடலில் உள்ள சகதியை சுத்தம் செய்த பின், தன் முகத்தில் இருந்த சகதியை அந்த நீரால் கழுவினாள். அப்போது சகதி விலகி அவளின் பளிச்சிடும் முகம் தெரிய, அவளின் அங்க வளைவுகளை மட்டுமே இரசித்துக் கொண்டிருந்தவனுக்கு, பேரழகின் உருவாய் அவளுடைய முகத்தை பார்த்ததும் அனைத்தையுமே மறந்துவிட்டான்.
அவள் முகம் பார்த்ததும் தன் மனம் ஏன் இவ்வாறு தடுமாறுகிறது என்று அறியாதவன், "யாரு இவ? நம்ப ஊருல இப்பிடி ஒரு அழகியா? இவ இத்தன நாள் எங்க இருந்தா?" என்று யோசித்தபடி அவளின் அழகை அணு அணுவாய் இரசித்துக்கொண்டிருக்க, அவனின் இதயமோ வழக்கத்திற்கு மாறாக வேகமாவே துடித்தது.
அதை உணர்ந்தவன் தன் இதயத்தில் கை வைத்தபடி அவளை பார்த்து, "என்ன மாதிரி உணர்வு இது? இவள பாத்ததும் எனக்குள்ள என்னென்னமோ நடக்குற மாதிரி எனக்கு ஏ தோனுது?" என்று குழம்பி நிற்க,
அப்போது அவனுடைய நிழழை பார்த்த அமிர்த்தா மகிழ்ச்சியடைந்து, "ஆதி ! நீதான? நீ இங்க என்ன பண்ற? நா உன்ன அங்க தேடிட்டு இருக்கேன்." என்று கூறி அவன் அருகில் வர, அவனோ அதைக்கூட உணராமல் அவள் அழகில் தன்னை முற்றிலும் தொலைத்தவனாய் நின்றிருந்தான்.
அப்போது மெல்ல அவனை நெருங்கி வந்தவள், அவன் முகத்தை மறைத்திருந்த மரத்தின் கிளைகளை நகர்த்த, அதில் அவன் முகம் தெரியும் முன், காற்றிற்கு அவளின் தாவணியின் முந்தாணை அவனுடைய முகத்தை முழுவதுமாய் மூடியது. அதைக்கூட அறியாதவனாய் அவளின் அழகை அவன் ஆராய்ந்து இரசித்தபடியே இருக்க, அமிர்த்தாவோ தன் முந்தாணையை அவன் முகத்திலிருந்து மெல்ல விலக்கினாள்.
அப்போதே அவனின் வசீகர முகம் தெரிய அதில் சற்று தமாறியவள், பிறகு அதிர்ச்சியுடன் இவன் ஆதியல்லவென்று உணர்ந்து, "யார் நீ? இங்க நின்னு என்ன பண்ணிகிட்டிருக்க?" என்று முறைத்து கேட்க,
அப்போதும் இரசனை முகம் மாறாமல் அவள் குரலையும் இரசித்தபடி, "உன் அழக ரசிச்சிட்டு இருந்தேன்" என்று பதிலளித்தான்.
அதை கேட்டு கோபமடைந்த அமிர்த்தா, "என்ன தைரியம் உனக்கு?" என்று கேட்க,
அதற்கு அவன் புன்னகைத்தபடி, "உண்மைய சொல்ல எதுக்கு தைரியம்? அழக இரசிக்கிறது ஒன்னும் தப்பில்லையே? உண்மையிலயே நீ ரொம்ப அழகா இருக்க." என்று இரசனையுடன் கூறினான்.
அதை கேட்டு எரிச்சலடைந்த அமிர்த்தா, "போதும். நா கேட்ட கேள்விக்கு பதில். யாரு நீ?" என்று கேட்டாள்.
அவள் கோபத்தையும் புன்னகையுடன் இரசித்தவன், "என்னோட பேரு உதயா." என்றான்.
- ஜென்மம் தொடரும்...
அதை கேட்டு வியந்த சந்ரா, "ஆயிரம் வருஷமா?" என்று கேட்க,
சாமிஜி, "ஆம் சந்ரா. ஆயிரம் வருடங்களும் முன்பும் நீ பிறந்திருக்கிறாய். அதோடு உன் அர்ஜுனும் பிறந்திருக்கிறான்." என்றார்.
அதை கேட்டு மேலும் வியந்தவள், "அர்ஜுனுமா?" என்று கேட்க,
சாமிஜி, "ஆம். உங்களுடைய இந்த கதை இன்றல்ல, ஆயிரம் வருடத்திற்கு முன்பே அந்த இறைவனால் எழுதப்பட்டது." என்று கூற,
அதை கேட்டு அதிர்ச்சியடைவதா ஆச்சரியப்படுவதா என்று தெரியாமல் விழித்தவள், "என்ன சொல்றீங்க சாமிஜி?" என்று புரியாமல் கேட்க,
சாமிஜி, "பூர்வ ஜென்மத்தில் பூர்த்தியாகாத உங்களின் கதை இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது." என்றார்.
அதை கேட்டு குழம்பியவள், "பூர்த்தி ஆகலையா? அப்பிடின்னா சாமிஜி?" என்று கேட்க,
அதற்கு சாமிஜி பதில் கூற வரும் முன், தூரத்தில் அந்த கோவிலின் மணிகள் ஒலிக்க, அதை இங்கு அறிந்தவர் உடனே சந்ராவை பார்த்து, "இதற்குமேல் நான் கூறக்கூடாது." என்றார்.
அதை கேட்டு அதிர்ச்சியடைந்தவள், "என்ன சாமிஜி சொல்றீங்க? சொல்ல கூடாதின்னா என்ன அர்த்தம்?" என்று கேட்க,
சாமிஜி, "நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது." என்றார்.
சந்ரா, "இல்ல இல்ல சாமிஜி. தயவுசெஞ்சு எனக்கு ஒரு வழி சொல்லிட்டு போங்க. என்னோட நிம்மதியவே நா எழந்து நிக்கிறேன்." என்றாள்.
சாமிஜி, "அதற்கு ஒரே வழி உன் பூர்வ ஜென்மம் உனக்கு நியாபம் வருவது மட்டுமே." என்றார்.
சந்ரா, "அதுக்கு நா என்ன பண்ணணும்? ஏ எனக்கு அது இன்னும் நியாபகம் வராம இருக்கு? எப்போ நியாபகம் வரும்னு சொல்லுங்க." என்று குழப்பத்துடன் கேட்க,
அப்போது மீண்டும் அந்த கோவிலின் மணி சத்தத்தை தனக்குள் உணர்ந்தவர், "உன்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் அந்த ஈசனிடமே பதில் உள்ளது. உடனே செல். இந்த பிரச்சனை எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே செல். அங்கே உனக்கான தீர்வு நிச்சயம் கிடைக்கும்." என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் செல்வதை பார்த்த சந்ரா, "சாமிஜி எங்கன்னு சொல்லுங்க." என்றபடி அவர் பின்னே செல்ல, அவரோ சற்றும் நிற்காமல் சென்றபடியே, "உடனே செல் சந்ரா. அந்த ஈசன் அழைக்கிறான்." என்று கூறியபடியே சென்றுவிட்டார்.
அதில் அதிர்ந்து நின்றவளால் அவர் எங்கு சென்றார் என்று கண்டுப்புடிக்க முடியவில்லை. அங்கேயே நின்று அங்கும் இங்கும் தேட, அப்போதே அந்த கோவிலின் அனைத்து மணிகளும் ஒரு சேர ஒன்றாக ஒலிக்க, அதை நன்றாக உணர்ந்தவளுக்கு மீண்டும் அந்த நினைவுகள் கண்முன் வர, அப்போதே இந்த பிரச்சனையின் ஆரம்பம் எங்கு என்று புரிந்தது. அதோடு "உடனே செல் சந்ரா அந்த ஈசன் அழைக்கிறான்" என்று அவர் கூறிவிட்டு சென்றதை நினைவுப்படுத்தியவளுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.
அவள் இப்பொழுதே அந்த கோவிலுக்கு சென்றாக வேண்டும். அவ்வாறு முடிவெடுத்தவள் எதை பற்றியும் சிந்திக்காதவாறு தன் கண்முன் தெரியும் அந்த நினைவுகளே ஆக்கிரமித்துவிட, வேறு எதையும் யோசிக்காதவள், தன் மனது கூறுவதை மட்டுமே கேட்டு தன் கால்களை தடுக்காமல், அனைத்தையும் மறந்து அந்த கோவிலை நோக்கி சென்றாள். அவளுக்கு என்னவாயிற்றென்று அவளுக்கே தெரியவில்லை. அவளோ தன் மனது மட்டும் கால்களின் பிடியில் சிக்கியிருந்தாள். அவளின் மூளையை முழுதாக ஆட்க்கொண்டது அந்த நினைவுகள் மட்டுமே. இவ்வாறு இவள் எதை பற்றியும் யோசிக்காமல் சென்றுக்கொண்டிருக்க, இங்கு அவை எதையுமே அறியாத அர்ஜுனோ அங்கு நன்றாக உறங்கிக்கொன்டிருந்தான்.
இறுதியில் அந்த கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்தாள் சந்ரா. ஆனால் அவளின் தலையில் அதே காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க, தன் தலையை அழுந்த பற்றியபடி முடியாத நிலையில்தான் அந்த கோவிலுக்குள் நுழைந்தாள்.
அங்கு சென்றதுமே அங்கு வாசலிலிருந்து ஒரு மணியை இவள் கையால் அடிக்க, அப்போதே திரும்ப அனைத்து மணிகளும் காற்றிற்கு தானாய் அசைந்து ஒலி எழுப்ப ஆரம்பித்தது. அதில் மேலும் அவளுக்கு அந்த நினைவுகள் வந்து செல்ல, அவளோ தன் காதுகளை அழுந்த மூடிக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அந்த நினைவுகள் அவளை மிகவும் பலவீனமாக்கியது. ஆனாலும் சமாளித்து நேராக நின்றவள், தன் முன் பிரம்மாண்ட சிலையாய் நிற்கும் சிவப்பெருமானை நோக்கி தன் கண்களை ஏறெடுத்து, தன் கைளை எடுத்து அவர் முன் வணங்கி, "ஈஷ்வரா! ப்ளீஸ் இந்த வேதனையில இருந்து என்ன வெளிய கொண்டு வாங்க. என்னால சுத்தமா முடியல. இதுல இருந்து என்ன வெளிய கொண்டு வாங்க. என் பூர்வ ஜென்மத்த எனக்கு நியாபகப்படுத்துங்க. இல்லன்னா இந்த வேதனைய ஒடனே நிறுத்துங்க." என்று கண்ணீருடன் கெஞ்சி கூற கூறவே அவளின் தலையின் வலி அதிகமாக, அவளோ தள்ளாடியபடிதான் நின்றாள்.
"ப்ளீஸ் ஈஷ்வரா!" என்று வலியில் சத்தமாக கூறிய நொடி, புயலாக மாறிய காற்று, அவள் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் மணியை பேயாய் ஆட்ட, அதுவோ சட்டென்று பிய்ந்து இறங்கி சந்ராவின் தலையில் விழ, அவளோ சங்கரனின் காலடியில் தலை முட்டி விழுந்தாள். அடுத்த நொடி இங்கு உறங்கிக்கொண்டிருந்த அர்ஜுன், "சந்ரா!" என்று திடுக்கிட்டு எழுந்தான்.
அப்போது தன் முன் இருக்கும் மெத்தையை பார்க்க, அங்கே இருந்த சந்ராவை காணவில்லை என்றதும் பதறி எழுந்தான்.
இங்கு அவள் தலையிலோ காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்துக்கொண்டிருக்க, அவளின் இமைகளோ அவளின் கட்டுப்பாட்டை மீறி மெல்ல ஒன்று சேர்ந்தது. அடுத்த நொடி அனைத்தும் இருள் சூழ்ந்துவிட, அவளோ ஆழ்ந்த மயக்கத்திற்கு தள்ளப்பட்டாள்.
ஆனால் அவளின் ஆழ் மனதோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தன்னையே காண துவங்கியது.
அதே இரத்த கரைகள், கலவரம், கதறல் சத்தம் என்று அனைத்தையும் கண்டு திடுகிட்டு விழித்தவள், மேலும் கீழுமாக மூச்சு வாங்கியபடி எழுந்து அமர்ந்து, "என்ன கனவு இது? திரும்ப திரும்ப வருது?" என்று யோசித்தபடி முச்சு வாங்க,
அப்போது அங்கு வந்த அவளின் அக்கா தாமிரா, "அமிர்த்தா!" என்றழைக்க, உடனே அவர் பக்கம் திரும்பினாள் அமிர்த்தா.
அப்போது அவளுடைய முகமேல்லாம் வியர்த்திருக்க, அதை கண்ட அவள் அக்கா தாமிரா, அவள் அருகில் அமர்ந்து, "என்ன அமிர்த்தா, மறுபடியும் அதே கனவா?" என்று கேட்க,
அதற்கு அமிர்த்தா, "ஆமா தாமிராக்கா. அந்த கனவு என்ன விடவே மாட்டிங்குது. என்ன விடாம தொரத்துது." என்று குழம்பியபடி கூற,
அதை கேட்ட தாமிரா, "திரும்ப திரும்ப அதே கனவு தினமும் எப்பிடி வருது? அதோட அந்த கனவுல நீ என்னதா பாக்குற? அதையாவது எங்கிட்ட சொல்லு." என்று கூற,
அதற்கு அமிர்த்தா, "நா எத்தன தெடவ சொல்றது தாமிரா அக்கா? அது வெறும் கனவுதான விடுங்க." என்றாள். ஏனோ அவளுக்கு அதை பற்றி மீண்டும் பேச பிடிக்கவில்லை.
தாமிரா, "நானும் ஒவ்வொரு தெடவையும் கேக்குறேன், ஆனா நீ சொல்லவே மாட்டிங்குற. அப்பிடி என்னதா பிரச்சன?" என்று கேட்க,
அமிர்த்தா, "இல்ல தாமிராக்கா. அந்த கெட்ட கனவ நா திரும்ப ஞாபகப்படுத்திக்க விரும்பல. அது ரொம்ப மோசமான கனவு. அது நம்ப நெனச்சு பாக்க முடியாத அளவு பயங்கரமானது." என்று கூறும்போதே அவளின் முகத்தில் பயமும் பதற்றமும் சூழ்ந்துக்கொண்டது.
அதை பார்த்த தாமிரா, "செரி அமிர்த்தா. அத பத்தி இப்போ பேச வேண்டாம். பட் நீ இன்னிக்கு அவன பாக்க போறதா சொன்னல்ல போகலையா?" என்று பேச்சை திசை திருப்ப,
அமிர்த்தா புரியாமல், "யார?" என்று கேட்க,
அதற்கு தாமிரா குறும்பு புன்னகையுடன், "அதான்டி உன் ஆச காதலன்." என்று கிண்டல் செய்ய,
அமிர்த்தா, "ச் போங்க அக்கா. ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க." என்று கூறி எழுந்தவள், "செரி நா கெளம்புறேன். அம்மா கேட்டா..." என்று கூறும் முன், "அமுதா வீட்டுக்கு போயிருக்கன்னு சொல்லிக்கிறேன்." என்றாள் தாமிரா.
அதை கேட்டு "ம்ம்" என்று புன்னகையுடன் கூறியவள் குளிக்க சென்றாள்.
பிறகு தயாராகி தன் காதலனை பார்க்க அவனுடைய வீட்டிற்கு சென்றாள் அமிர்த்தா.
அங்கு உள்ளே சென்று பார்வையை சுழலவிட்டவள், "ஆதி!" என்று அழைக்க,
அப்போதே உள்ளிருந்து வெளி வந்தான் அவளின் காதலன் ஆதிசேஷன். ஆனால் அவன் கையில் வைத்திருந்த பூங்கொத்து அவனின் முகத்தை மறைத்திருக்க, அதை பார்த்து அவன் அருகில் சென்றவள், "என்ன ஆதி இது?" என்று கேட்க,

அவனோ அந்த பூக்களை தன் முகத்திலிருந்து விலக்கி அவளிடம் கொடுத்து, "இது என் தேவதைக்காக." என்றான்.
அதை கேட்டு வெட்கத்துடன் அந்த பூக்களை வாங்கிக்கொண்டவள், அப்போதே அந்த வீடு முழுக்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை கவனித்து, "என்ன இதெல்லாம்? எதுக்காக இவ்ளோ அழங்காரம்?" என்று கேட்க,
அதற்கு ஆதி, "இன்னியோட நா உன்ன சந்திச்சு 100 நாள் ஆகுது. அத கொண்டாட வேண்டாமா?" என்று கூற,
அதை கேட்டு மிகவும் வியந்த அமிர்த்தா, "100 நாளா? நாம சந்திச்ச நாள அந்தளவு நியாபகம் வெச்சிருக்கியா?" என்று கேட்க,
ஆதி, "ம்ம்" என்று தோள்களை உலுக்கினாள்.
அதை கேட்டு பூரித்தவள், "என்ன நீ அவ்ளோ காதலிகிறயா ஆதி?" என்று கேட்கும்போதே அவள் கண்களில் கண்ணீர் தேங்க,
அவளின் கண்ணீரை துடைத்துவிட்டவன், "இப்பிடியெல்லா கேட்டா எப்பிடி? நீ ஒரு பேரழகி. அதோட கோடியில ஒருத்தி. உன் கூட இருக்கிற ஒவ்வொரு நாளையும் நா கொண்டாடணும். அப்பிடியிருக்கும்போது 100 வது நாள கொண்டாடுறதெல்லா ரொம்பவே கம்மிதா" என்றான்.
அதை கேட்டு புன்னகைத்தவள் தன் கண்ணீரை துடைத்துக்கொள்ள, "செரி இப்பிடியே நிக்க போறியா? இல்ல எனக்கும் எதாவது பரிசு குடுக்க போறியா?" என்று கேட்க,
அமிர்த்தா, "என்ன பரிசு?" என்று புரியாமல் கேட்க,
அதற்கு ஆதி அவளின் இதழ்களை பார்த்தபடி, "கொஞ்சம் இனிப்பா எதாவது கெடச்சா நல்லா இருக்கும்." என்று அவள் இதழ் நோக்கி குனிய,
அவளோ சட்டென அவனைவிட்டு விலகி, "இனிப்புதான? இப்பவே பண்ணி கொண்டு வர்றேன். நீ இங்கயே இரு." என்று கூறி சமையலறை நோக்கி ஓடினாள்.
அதை பார்த்து ஏமாற்றமாய் புன்னகைத்தவன், பிறகு அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து அமிர்த்தா இனிப்பு செய்து எடுத்து வந்து ஆதியை தேட, அவனோ அங்கு இல்லை
அதனால் அந்த இனிப்பை அங்கேயே வைத்துவிட்டு, அவனை தேட அரம்பித்தாள் அமிர்த்தா. "ஆதி...! ஆதி! நீ எங்க போய்ட்ட?" என்று தேடியபடியே வீட்டை விட்டு வெளியேறியவள்,
வீட்டிலிருந்து சற்று தள்ளியே வந்துவிட்டாள்.
எங்கும் ஆதியை காணவில்லை. அவனையே தேடிக்கொண்டு முன்னோக்கி நடந்தவள் திடீரென வழுக்கி சகதியில் விழுந்தாள். அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த கொள்ளைக் கூட்டத்தின் பல்லக்கு நின்றுவிட, அப்போது அதனுள் அமர்ந்திருந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன், கையை வெளியில் நீட்டி பல்லக்கை இறக்க கூறினான்.
அதை கேட்ட நால்வரும் தங்கள் தோள்களில் சுமந்துக்கொண்டிருந்த பல்லக்கை கீழே இறக்கினர்.
இங்கு சகதியில் விழுந்த அமிர்த்தாவோ, மெல்ல எழுந்து தன் முகத்தில், உடையில், உடம்பில் என்று அனைத்திலும் இருந்த சகதியை கைகளால் சுத்தம் செய்தபடியே, எழுந்து அருகிலிருக்கும் அருவிக்கு சென்று, அங்கு தன் உடலில் இடையில் உள்ள கதியை சுத்தம் செய்தாள்.
அதை அந்த பல்லக்கின் திரையை விலக்கி பார்த்துக்கொண்டிருந்தவன், தன்னுடன் இருக்கும் கொள்ளைக்கூட்டத்தை நோக்கி, "நீங்க எல்லாரும் போங்க. நா அப்றம் வர்றேன்." என்று கூறி பல்லக்கைவிட்டு இறங்கினான்.
அதை கேட்ட அனைவரும் பல்லக்கையும் தாங்கள் கொள்ளையடித்ததையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அப்போது அந்த கொள்ளை கூட்ட தலைவன் மெல்ல நடந்து அந்த அருவியின் அருகில் உள்ள மரத்தின் பின்னால் ஒளிந்தபடி, அங்கு அருவிக்கு அருகில் நின்றிருந்த அமிர்த்தாவை அணு அணுவாய் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தான்.
அதை அறியாத அமிர்த்தாவோ தன் உடலில் உள்ள சகதியை சுத்தம் செய்த பின், தன் முகத்தில் இருந்த சகதியை அந்த நீரால் கழுவினாள். அப்போது சகதி விலகி அவளின் பளிச்சிடும் முகம் தெரிய, அவளின் அங்க வளைவுகளை மட்டுமே இரசித்துக் கொண்டிருந்தவனுக்கு, பேரழகின் உருவாய் அவளுடைய முகத்தை பார்த்ததும் அனைத்தையுமே மறந்துவிட்டான்.
அவள் முகம் பார்த்ததும் தன் மனம் ஏன் இவ்வாறு தடுமாறுகிறது என்று அறியாதவன், "யாரு இவ? நம்ப ஊருல இப்பிடி ஒரு அழகியா? இவ இத்தன நாள் எங்க இருந்தா?" என்று யோசித்தபடி அவளின் அழகை அணு அணுவாய் இரசித்துக்கொண்டிருக்க, அவனின் இதயமோ வழக்கத்திற்கு மாறாக வேகமாவே துடித்தது.
அதை உணர்ந்தவன் தன் இதயத்தில் கை வைத்தபடி அவளை பார்த்து, "என்ன மாதிரி உணர்வு இது? இவள பாத்ததும் எனக்குள்ள என்னென்னமோ நடக்குற மாதிரி எனக்கு ஏ தோனுது?" என்று குழம்பி நிற்க,
அப்போது அவனுடைய நிழழை பார்த்த அமிர்த்தா மகிழ்ச்சியடைந்து, "ஆதி ! நீதான? நீ இங்க என்ன பண்ற? நா உன்ன அங்க தேடிட்டு இருக்கேன்." என்று கூறி அவன் அருகில் வர, அவனோ அதைக்கூட உணராமல் அவள் அழகில் தன்னை முற்றிலும் தொலைத்தவனாய் நின்றிருந்தான்.
அப்போது மெல்ல அவனை நெருங்கி வந்தவள், அவன் முகத்தை மறைத்திருந்த மரத்தின் கிளைகளை நகர்த்த, அதில் அவன் முகம் தெரியும் முன், காற்றிற்கு அவளின் தாவணியின் முந்தாணை அவனுடைய முகத்தை முழுவதுமாய் மூடியது. அதைக்கூட அறியாதவனாய் அவளின் அழகை அவன் ஆராய்ந்து இரசித்தபடியே இருக்க, அமிர்த்தாவோ தன் முந்தாணையை அவன் முகத்திலிருந்து மெல்ல விலக்கினாள்.
அப்போதே அவனின் வசீகர முகம் தெரிய அதில் சற்று தமாறியவள், பிறகு அதிர்ச்சியுடன் இவன் ஆதியல்லவென்று உணர்ந்து, "யார் நீ? இங்க நின்னு என்ன பண்ணிகிட்டிருக்க?" என்று முறைத்து கேட்க,
அப்போதும் இரசனை முகம் மாறாமல் அவள் குரலையும் இரசித்தபடி, "உன் அழக ரசிச்சிட்டு இருந்தேன்" என்று பதிலளித்தான்.
அதை கேட்டு கோபமடைந்த அமிர்த்தா, "என்ன தைரியம் உனக்கு?" என்று கேட்க,
அதற்கு அவன் புன்னகைத்தபடி, "உண்மைய சொல்ல எதுக்கு தைரியம்? அழக இரசிக்கிறது ஒன்னும் தப்பில்லையே? உண்மையிலயே நீ ரொம்ப அழகா இருக்க." என்று இரசனையுடன் கூறினான்.
அதை கேட்டு எரிச்சலடைந்த அமிர்த்தா, "போதும். நா கேட்ட கேள்விக்கு பதில். யாரு நீ?" என்று கேட்டாள்.
அவள் கோபத்தையும் புன்னகையுடன் இரசித்தவன், "என்னோட பேரு உதயா." என்றான்.
- ஜென்மம் தொடரும்...
Author: Oviya Blessy
Article Title: CHAPTER-13
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: CHAPTER-13
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.