“இன்னைக்கு நம்ம ஊட்டி ஆஃபீஸ்க்கு போய் சைன் போட்டுட்டு வரணும் ஞாபகம் இருக்குல” என்று விக்ரம் கேட்க, “எல்லாம் ஞாபகம் இருக்கு அப்படியே அவளையும் கூட்டிட்டு போனா தேவையானதை வாங்கிட்டு வரப் போறா அவ்வளவு தானே” என்று சரவணன் கூற, “இங்க இருக்கிற மக்கள் போயிட்டு வர்றதுக்கு ரெண்டு ஜீப்பு இருக்கு… நமக்கு ஆஃபீஸுக்கு தனியா ஒரு வண்டி இதெல்லாம் இங்க இருக்குறவங்க பயன்படுத்துறதுக்கு…. வேணும்னா அவள நடந்து போக சொல்லு” என்று விக்ரம் கூறவும், சனந்தா வரவும் சரியாக இருந்தது. அதை சற்றும் எதிர்பாராத விக்ரம் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க, சனந்தா எவ்வித உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் அமைதியாக அவனை பார்த்தாள்.
சரவணன் அதை கலைக்கும் விதமாக, “சனா, இந்தா லேப்டாப் ஃபோன் ரெண்டுமே ஃபுல் சார்ஜ் ஆயிடுச்சு” என்று சரவணன் கொடுக்க சனந்தாவை அதை வாங்கிக் கொண்டு அவளது பேக் பேக்கில் போட்டுக் கொண்டாள். என்ன தான் சனந்தா உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் இருந்தாலும் என்னவோ விக்ரமுக்கு தன்னை பிடிக்கவில்லை என்பது நினைக்க மனசு பாரம் ஆக்கியது.
கிளம்பலாமா?? என்று சனா கேட்க, ம்ம்… சரி என்று சரவணன் தலையை ஆட்டினான். விக்ரமுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் இன்னும் அமைதியாகவே இருக்க, சனா, சரவணனுடன் நடந்து செல்ல விக்ரம் தன்னை சமன்ப்படுத்திக் கொண்டு மெதுவாக அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
என்ன தான் கோபத்தில் விக்ரம் அப்படி பேசினாலும் அதை சனந்தா கேட்டுவிட்டாள் என்று அறிந்தவுடன் அவனுக்கு சங்கடமாகவும் கஷ்டமாகவும் உணர்ந்தான். மூவரும் அமைதியாக நடந்து செல்ல அமைதியை கலைக்கும் விதமாக சரவணன், “ஆமா நீ ஏன் எப்பவும் ஃபுல் ஹேண்ட் இல்லேன்னா த்ரீ ஃபோர்த், காலர் நெக் இப்படியே டிரஸ் போடுற.. பார்த்த ரெண்டு நாள்ல மூனு டிரஸ் அப்படித் தான் போட்டு இருக்க ஏன் அப்படி? என்று சரவணன் கேட்டான்.
“அது அந்த ஆக்சிடென்ட் ஆனதுனால நிறைய தழும்பு இருக்கு… அதை யாராவது பார்த்தா கேப்பாங்க எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இருக்கணும்ல அதனால தான் நான் மோஸ்ட்லி ஃபுல் ஹாண்ட் இல்ல த்ரீ ஃபோர்த் அப்படி போட்டு கவர் பண்ணிடுரேன்” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா… கையெல்லாம் கூட தழும்பு இருக்கா இன்னமும்??” என்று சரவணன் அக்கறையாக கேட்க, “ம்ம்… ஆமா” என்று சனந்தா கூறினாள். சிறிது நேரம் நடக்கவும் சனந்தா சரவணனிடம், “ஒரு ஃபைவ் மினிட்ஸ் நின்னுட்டு அதுக்கப்புறம் போலாமா?” என்று கேட்டாள்.
“என்ன ஆச்சு??? முடியலையா உனக்கு” என்று சரவணன் கேட்க, “இல்ல இந்த மாதிரி நடந்து ட்ராவல் பண்ணி எல்லாம் கொஞ்சம் மாசம் ஆயிடுச்சு அதனால எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு…. வேற ஒன்னும் இல்ல” என்று சனந்தா கூறவும், “சரி ஓகே வா இங்க நிப்போம் மரத்துக்கு கீழ” என்று சரவணன் கூறினான்.
“நீங்க வேணா போங்க சார் நான் ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுறேன்… சரவணன் நீங்களும் போங்க… இந்த வழியா தானே நான் நேத்து வந்தேன்” என்று விக்ரமை பார்த்து கூறவும் விக்ரம் எதுவும் பேசாமல் அவளை பார்க்க, “மச்சான் நீ வேணா போ நான் கூட்டிட்டு வரேன்” என்று சரவணன் கூறினான்.
“இல்ல பரவால்ல வெயிட் பண்றேன்” என்று விக்ரம் முகத்தை திருப்பிக் கொண்டான். “சரி ஓகே வாங்க போலாம்” என்று சனந்தா கூற, “இல்லை இன்னும் கொஞ்ச நேரம் வேணா ரெஸ்ட் எடுக்குறியா?” என்று சரவணன் கேட்கவும், “இல்லை பரவாயில்லை போலாம்” என்று கூறினாள் சனந்தா.
திடீரென்று சனா!!! என்று ஒரு குரல் கேட்க, “இங்க யாரு என்னை கூப்பிடுறா?” என்று சனந்தா திரும்பிப் பார்க்க, ரம்யா ஓடி வந்தாள். “ஓய்!!! நீ இங்க என்ன பண்ற?? எப்படி இருக்க??” என்று சனந்தா விரிவான புன்னகையுடன் ரம்யாவை அணைத்துக் கொண்டு விசாரித்தாள்.
“நான் ரொம்ப நல்லா இருக்கேன் அதுவும் உங்க புண்ணியத்துல ரொம்பவே நல்லா இருக்கேன்” என்று ரம்யா கூறினாள்.
“இது தான் உங்க கிராமமா…. நீ சொல்லும் போது நான் வரணும்னு சொல்லிட்டே இருந்தேன்…. இப்ப எப்படி வந்து இருக்கேன்னு பார்த்தியா?” என்று சனந்தா கூற, “நான் நேத்தே உங்க கிட்ட வந்து பேசணும்னு இருந்தேன்… திடீர்னு நீங்க வேற மயக்கம் போட்டு விழுந்துட்டீங்களா அதான் அதுக்கப்புறம் வரவும் முடியல… விக்ரம் அண்ணா வீட்டில தான் தங்கி இருக்கீங்கன்னு சொன்னாங்க…. வந்து பார்க்கலாம் நினைச்சேன்… ஆனா, இருட்டுரிச்சுன்னு அம்மா போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க….. அதான் இப்ப விக்ரம் அண்ணா வீட்டுக்கு போனேன்… அங்க ஸ்ரீனிவாசன் ஐயா நீங்க இப்ப தான் போனீங்கன்னு சொன்னாரு…. அதனால தான் ஓடி வந்தேன்” என்று ரம்யா கூறினாள்.
“உனக்கு எப்படி இவள தெரியும்” என்று சரவணன் ரம்யாவை பார்த்து கேட்க, “எங்களுடைய ஸ்கூல் ஹாஸ்டல்ல ஃபுட் சரியில்ல நான் வந்து சொல்லிட்டு இருப்பேன்ல…. அந்த ஃபுட் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்து போனது இவங்க தான்” என்று ரம்யா கூறினாள்.
“ஆமா உனக்கு ஸ்கூல் இல்லையா இங்க வந்து இருக்க?” என்று சனந்தா கேட்க, “ஸ்கூல் இருக்கு…. நேத்து தான் அபர்ணா அக்காக்கு பூஜை பண்ணாங்கன்னு சொல்லிட்டு லீவ் போட்டு வந்தேன் இன்னைக்கு சாயந்தரம் கிளம்பிடுவேன்” என்று ரம்யா கூறினாள்.
“ஓ!!! நீ சொன்ன அந்த ஃபுட் இன்ஸ்பெக்ஷனுக்காக வந்தவங்க இவங்க தானா??” என்று சரவணன் கேட்க, “ஆமா அண்ணா நான் கூட சொன்னேன்ல எங்க பக்கத்து ஸ்கூல்ல இன்ஸ்பெக்ஷன் வந்தாங்க…. ஆனா, எங்க ஸ்கூலுக்குள்ள மட்டும் வர விடாம எப்படியோ தடுத்துட்டே இருந்தாங்க…. அப்புறம் எப்படியோ ஒரு நாள் இவங்களுக்கு மெயில் பண்ணேன்.. அத பார்த்துட்டு வருவாங்களோ இல்லையோன்னு ரொம்ப டவுட்லயே தான் இருந்தேன்…. ஆனா, எப்படியோ வந்தாங்க…. வந்தது மட்டும் இல்லாம நான் தான் மெயில் பண்ணேன்னு கூட காட்டிகல… எப்படியோ தப்பிச்சுட்டேன்… அதே மாதிரி சனா, இங்கயும் நான் தான் மெயில் பண்ணேன்னு தயவு செஞ்சு சொல்லிடாதீங்க…. எங்க அம்மாவுக்கு தெரிஞ்சதுன்னா அவ்வளவு தான் என்னை” என்று ரம்யா பயத்துடன் கூறினாள்.
“இன்னும் ஏன் பயப்படுற அது தான் எல்லாருக்கும் ஃபுட் இப்போ மாத்திட்டாங்ல என்று சனா கேட்க, “மாத்திட்டாங்க தான் ஆனா, இருந்தாலும் அந்த காண்ட்ராக்டர் அப்பப்ப வந்து ஸ்கூல்ல பிரச்சனை பண்ணிட்டு தான் இருக்காரு” என்று ரம்யா கூறினாள்.
“இன்னுமா அந்த ஆளு வராரு…. நடந்து மூணு மாசம் ஆகுது இன்னும் எதுக்கு அவர் வந்து பிரச்சனை பண்ணனும்” என்று சனந்தா கூற, “மூணு மாசமா…. அஞ்சு மாசம் ஆகுது எந்த உலகத்தில் இருக்கீங்க சனா நீங்க?” என்று ரம்யா கேட்க, அப்படியா!!! என்று சனந்தா ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் இருந்தாள்.
“என்ன சனா மறந்துட்டீங்களா??? லெவன்த் படிக்கும் போது தானே நான் உங்களுக்கு மெயில் பண்ணேன்….. அப்போ தான் நீங்க வந்து பார்த்தீங்க… அதுக்கு அப்புறம் எங்களுக்கு ஸ்டடி ஹாலிடேஸ் முடிச்சிட்டு நான் லெவன்த் முடிச்சுட்டேன்…. இப்போ நான் டுவல்த் போயிருக்கேன்” என்று ரம்யா கூறினாள்.
சனந்தாவுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இன்னும் குழப்பத்தில் இருக்க, அதை உணர்ந்த விக்ரம், “எங்களுக்கு டைம் ஆகுதுமா நாங்க கிளம்புறோம்…. நீ எங்க கூட வரியா இல்ல வீட்டுக்கு போறியா?” என்று கேட்க, “இல்லை நான் வீட்டுக்கு போறேன் சனாவை பார்க்க தான் வந்தேன் நானு…. ஆமா, உங்க கூட வந்தாருல அவர் இங்க வரலையா?” என்று ரம்யா கேட்டாள்.
“யாரு கௌதமா?? அவனுக்கு ஃபைனல் எக்ஸாம்ஸ் அண்ட் ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு…. முடிச்சிட்டு வருவேன்னு சொன்னான்” என்று சனந்தா கூற, “சரி இப்ப நீங்க போயிட்டு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா நான் வந்து உங்களை பார்க்கிறேன்” என்று கூறி ரம்யா சென்றாள்.
மூவரும் நடக்க ஆரம்பிக்கவும் விக்ரம் சரவணன் கையை பிடித்து கிள்ளி, “என்ன ஆச்சுன்னு கேளு” என்று சைகையில் கூறினான். “அத நீ கேளு என்கிட்ட ஏன் கேட்குற” என்று சரவணன் மெல்லிய குறலில் கூற, “ப்ச்…. கேளுடா” என்றான் விக்ரம்.
“சனா என்ன ஆச்சு??? திடீர்னு ஒரு மாதிரி ஆயிட்ட…. எதுவும் பிரச்சனையா? என்று சரவணன் கேட்க, ஒன்னும் இல்லை என்பது போல் தலையை அசைத்தாள்..
“என்ன இப்ப அந்த பொண்ணு அஞ்சு மாசம் சொன்னது உனக்கு யோசனையா இருக்கா?” என்று சரவணன் கேட்க, அமைதியாகவே இருந்தாள் சனந்தா. “நம்ம தெரியாம ஏதாவது மறந்திருப்போம் அப்படித் தான் இருக்கும்…. அதுக்கு ஏன் இவ்ளோ குழப்பத்திலேயே வந்துட்டு இருக்க” என்று சரவணன் முறையிட, “அப்படி இல்ல ஆக்சிடென்ட் ஆயிட்டு கொஞ்சம் நாள் நான் கோமால இருந்தேன்னு சொன்னாங்க அம்மா…. ஆனா, மாசக் கணக்கா இருந்துட்டேனோ…. ஏன்னா இப்ப தான் இதெல்லாம் நடந்த மாதிரி இருக்கு… ஆனா, இவங்க எல்லாம் பேசும் போது ரொம்ப மாசம் ஆச்சுன்னு சொல்றாங்க வேற…. எனக்கு அதான் ஏதோ குழப்பமா இருக்கு… அதுவும் இல்லாம ரம்யா அனுப்பின மெயில் டெலீட் வேற பண்ணிட்டேன்… சேஃப்டிகாக… என்னோட கேலன்டர் கூட க்ளியர் பண்ணிடுவேன் எல்லாமே சேஃப்டி ரீசன்ஸ்காக” என்று சனந்தா கூறினாள்.
“அதெல்லாம் யோசிச்சிட்டு இருக்காத இப்ப தான் சரி ஆயிட்டு வந்துட்டல…. இங்க இப்ப என்ன பண்ணனுமோ அத பார்க்கலாம் வா” என்று சரவணன் பேச்சை மாற்றும் விதமாக கூறி வேற எதையோ பேசிக் கொண்டு சென்றனர்.
“ஒரு வேளை உண்மையிலேயே இவளுக்கு நடந்தது ஏதுவும் ஞாபகம் இல்லையோ… அதனால தான் இப்படி இருக்காளோ… நடந்தது ஞாபகம் வந்தா மட்டும் தான் என்ன நடந்ததுன்னு கேட்க முடியும்….. இவ ஏன் வற்புறுத்தி அபர்ணாவ கூட்டிட்டு போனான்னே தெரியும்” என்று விக்ரம் அவனுக்குள் பேசிக் கொண்டே சென்றான்.
விக்ரம் வண்டி ஓட்டுவதாக கூறி டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள, சனந்தா ஜீப்பில் பின் இருக்கையில் அமர செல்லவும், சரவணன் அவளை நிறுத்தி, “வேண்டாம் பின்னால ரொம்ப தூக்கிப் போடும்…. இங்க இருந்து மெயின் ரோடு போற வரைக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கும்… அதனால முன்னால உட்கார்ந்துக்கோ” என்று கூறினான்.
சனந்தா விக்ரமை ஒரு நொடி பார்த்து,, “ஐயோ இல்ல இல்ல…. வேண்டாம் நான் பின்னாலயே உக்காந்துக்குறேன் கொஞ்சம் தூரம் தானே சொன்னீங்க… அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல” என்ற சனந்தா கூற, “சொல்றதை கேளு!!” என்று சரவணன் சனந்தாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு கறாராக கூற, “நான் வேணும்னா வண்டி கூட ஓட்டுறேன்… ஆனா…, என்று சனந்தா மெல்லிய குறலில் கூறி முடிப்பதற்க்குள், அது விக்ரம் காதில் விழ, “எதுக்கு இன்னொரு வாட்டி ஆக்சிடென்ட் செய்யவா… நம்ம உயிரோடு இருக்கிறது கூட பிடிக்கலையா என்ன” என்று விக்ரம் கூறவும், “டேய் சும்மா இருடா ஏதாவது ஒன்னு பேசிட்டு இருக்காத” என்று சரவணன் கூறி, “சனா, நீ எதுவும் கண்டுக்காத முதல்ல ஏறு… எங்களுக்கும் போய் சைன் போட டைம் ஆகுது” என்று சரவணன் சனந்தாவை விக்ரம் அருகில் இருக்கும் இருக்கையில் அமர வைத்து சரவணன் பின்னால் அமர்ந்து கொண்டான்.
பயணம் முழுவதும் சரவணன் ஏதாவது பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தாலும் சனந்தா பெரிதாக பதில் கூறாமல் தலையை அசைத்து ஆமாம் இல்லை என்று மட்டுமே கூறிக் கொண்டு வந்தாள்.
“சம்மந்தமே இல்லாம இவரு என் மேல கோவப்படுறாரு…. ஆனாலும் எனக்கு அவர் மேல கோவம் வர மாட்டேங்குது… நான் ஏன் கஷ்டப்படுறேன் அவர் என் மேல கோபப்பட்டா….. எனக்கு யாரோ தானே அவரு… ஏன் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்” என்று சனந்தா அவளுக்குள் இருக்கும் உணர்வுகளை ஆராய்ச்சி செய்து கொண்டே பயணத்தை கழித்தாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
சரவணன் அதை கலைக்கும் விதமாக, “சனா, இந்தா லேப்டாப் ஃபோன் ரெண்டுமே ஃபுல் சார்ஜ் ஆயிடுச்சு” என்று சரவணன் கொடுக்க சனந்தாவை அதை வாங்கிக் கொண்டு அவளது பேக் பேக்கில் போட்டுக் கொண்டாள். என்ன தான் சனந்தா உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் இருந்தாலும் என்னவோ விக்ரமுக்கு தன்னை பிடிக்கவில்லை என்பது நினைக்க மனசு பாரம் ஆக்கியது.
கிளம்பலாமா?? என்று சனா கேட்க, ம்ம்… சரி என்று சரவணன் தலையை ஆட்டினான். விக்ரமுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் இன்னும் அமைதியாகவே இருக்க, சனா, சரவணனுடன் நடந்து செல்ல விக்ரம் தன்னை சமன்ப்படுத்திக் கொண்டு மெதுவாக அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
என்ன தான் கோபத்தில் விக்ரம் அப்படி பேசினாலும் அதை சனந்தா கேட்டுவிட்டாள் என்று அறிந்தவுடன் அவனுக்கு சங்கடமாகவும் கஷ்டமாகவும் உணர்ந்தான். மூவரும் அமைதியாக நடந்து செல்ல அமைதியை கலைக்கும் விதமாக சரவணன், “ஆமா நீ ஏன் எப்பவும் ஃபுல் ஹேண்ட் இல்லேன்னா த்ரீ ஃபோர்த், காலர் நெக் இப்படியே டிரஸ் போடுற.. பார்த்த ரெண்டு நாள்ல மூனு டிரஸ் அப்படித் தான் போட்டு இருக்க ஏன் அப்படி? என்று சரவணன் கேட்டான்.
“அது அந்த ஆக்சிடென்ட் ஆனதுனால நிறைய தழும்பு இருக்கு… அதை யாராவது பார்த்தா கேப்பாங்க எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இருக்கணும்ல அதனால தான் நான் மோஸ்ட்லி ஃபுல் ஹாண்ட் இல்ல த்ரீ ஃபோர்த் அப்படி போட்டு கவர் பண்ணிடுரேன்” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா… கையெல்லாம் கூட தழும்பு இருக்கா இன்னமும்??” என்று சரவணன் அக்கறையாக கேட்க, “ம்ம்… ஆமா” என்று சனந்தா கூறினாள். சிறிது நேரம் நடக்கவும் சனந்தா சரவணனிடம், “ஒரு ஃபைவ் மினிட்ஸ் நின்னுட்டு அதுக்கப்புறம் போலாமா?” என்று கேட்டாள்.
“என்ன ஆச்சு??? முடியலையா உனக்கு” என்று சரவணன் கேட்க, “இல்ல இந்த மாதிரி நடந்து ட்ராவல் பண்ணி எல்லாம் கொஞ்சம் மாசம் ஆயிடுச்சு அதனால எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு…. வேற ஒன்னும் இல்ல” என்று சனந்தா கூறவும், “சரி ஓகே வா இங்க நிப்போம் மரத்துக்கு கீழ” என்று சரவணன் கூறினான்.
“நீங்க வேணா போங்க சார் நான் ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுறேன்… சரவணன் நீங்களும் போங்க… இந்த வழியா தானே நான் நேத்து வந்தேன்” என்று விக்ரமை பார்த்து கூறவும் விக்ரம் எதுவும் பேசாமல் அவளை பார்க்க, “மச்சான் நீ வேணா போ நான் கூட்டிட்டு வரேன்” என்று சரவணன் கூறினான்.
“இல்ல பரவால்ல வெயிட் பண்றேன்” என்று விக்ரம் முகத்தை திருப்பிக் கொண்டான். “சரி ஓகே வாங்க போலாம்” என்று சனந்தா கூற, “இல்லை இன்னும் கொஞ்ச நேரம் வேணா ரெஸ்ட் எடுக்குறியா?” என்று சரவணன் கேட்கவும், “இல்லை பரவாயில்லை போலாம்” என்று கூறினாள் சனந்தா.
திடீரென்று சனா!!! என்று ஒரு குரல் கேட்க, “இங்க யாரு என்னை கூப்பிடுறா?” என்று சனந்தா திரும்பிப் பார்க்க, ரம்யா ஓடி வந்தாள். “ஓய்!!! நீ இங்க என்ன பண்ற?? எப்படி இருக்க??” என்று சனந்தா விரிவான புன்னகையுடன் ரம்யாவை அணைத்துக் கொண்டு விசாரித்தாள்.
“நான் ரொம்ப நல்லா இருக்கேன் அதுவும் உங்க புண்ணியத்துல ரொம்பவே நல்லா இருக்கேன்” என்று ரம்யா கூறினாள்.
“இது தான் உங்க கிராமமா…. நீ சொல்லும் போது நான் வரணும்னு சொல்லிட்டே இருந்தேன்…. இப்ப எப்படி வந்து இருக்கேன்னு பார்த்தியா?” என்று சனந்தா கூற, “நான் நேத்தே உங்க கிட்ட வந்து பேசணும்னு இருந்தேன்… திடீர்னு நீங்க வேற மயக்கம் போட்டு விழுந்துட்டீங்களா அதான் அதுக்கப்புறம் வரவும் முடியல… விக்ரம் அண்ணா வீட்டில தான் தங்கி இருக்கீங்கன்னு சொன்னாங்க…. வந்து பார்க்கலாம் நினைச்சேன்… ஆனா, இருட்டுரிச்சுன்னு அம்மா போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க….. அதான் இப்ப விக்ரம் அண்ணா வீட்டுக்கு போனேன்… அங்க ஸ்ரீனிவாசன் ஐயா நீங்க இப்ப தான் போனீங்கன்னு சொன்னாரு…. அதனால தான் ஓடி வந்தேன்” என்று ரம்யா கூறினாள்.
“உனக்கு எப்படி இவள தெரியும்” என்று சரவணன் ரம்யாவை பார்த்து கேட்க, “எங்களுடைய ஸ்கூல் ஹாஸ்டல்ல ஃபுட் சரியில்ல நான் வந்து சொல்லிட்டு இருப்பேன்ல…. அந்த ஃபுட் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்து போனது இவங்க தான்” என்று ரம்யா கூறினாள்.
“ஆமா உனக்கு ஸ்கூல் இல்லையா இங்க வந்து இருக்க?” என்று சனந்தா கேட்க, “ஸ்கூல் இருக்கு…. நேத்து தான் அபர்ணா அக்காக்கு பூஜை பண்ணாங்கன்னு சொல்லிட்டு லீவ் போட்டு வந்தேன் இன்னைக்கு சாயந்தரம் கிளம்பிடுவேன்” என்று ரம்யா கூறினாள்.
“ஓ!!! நீ சொன்ன அந்த ஃபுட் இன்ஸ்பெக்ஷனுக்காக வந்தவங்க இவங்க தானா??” என்று சரவணன் கேட்க, “ஆமா அண்ணா நான் கூட சொன்னேன்ல எங்க பக்கத்து ஸ்கூல்ல இன்ஸ்பெக்ஷன் வந்தாங்க…. ஆனா, எங்க ஸ்கூலுக்குள்ள மட்டும் வர விடாம எப்படியோ தடுத்துட்டே இருந்தாங்க…. அப்புறம் எப்படியோ ஒரு நாள் இவங்களுக்கு மெயில் பண்ணேன்.. அத பார்த்துட்டு வருவாங்களோ இல்லையோன்னு ரொம்ப டவுட்லயே தான் இருந்தேன்…. ஆனா, எப்படியோ வந்தாங்க…. வந்தது மட்டும் இல்லாம நான் தான் மெயில் பண்ணேன்னு கூட காட்டிகல… எப்படியோ தப்பிச்சுட்டேன்… அதே மாதிரி சனா, இங்கயும் நான் தான் மெயில் பண்ணேன்னு தயவு செஞ்சு சொல்லிடாதீங்க…. எங்க அம்மாவுக்கு தெரிஞ்சதுன்னா அவ்வளவு தான் என்னை” என்று ரம்யா பயத்துடன் கூறினாள்.
“இன்னும் ஏன் பயப்படுற அது தான் எல்லாருக்கும் ஃபுட் இப்போ மாத்திட்டாங்ல என்று சனா கேட்க, “மாத்திட்டாங்க தான் ஆனா, இருந்தாலும் அந்த காண்ட்ராக்டர் அப்பப்ப வந்து ஸ்கூல்ல பிரச்சனை பண்ணிட்டு தான் இருக்காரு” என்று ரம்யா கூறினாள்.
“இன்னுமா அந்த ஆளு வராரு…. நடந்து மூணு மாசம் ஆகுது இன்னும் எதுக்கு அவர் வந்து பிரச்சனை பண்ணனும்” என்று சனந்தா கூற, “மூணு மாசமா…. அஞ்சு மாசம் ஆகுது எந்த உலகத்தில் இருக்கீங்க சனா நீங்க?” என்று ரம்யா கேட்க, அப்படியா!!! என்று சனந்தா ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் இருந்தாள்.
“என்ன சனா மறந்துட்டீங்களா??? லெவன்த் படிக்கும் போது தானே நான் உங்களுக்கு மெயில் பண்ணேன்….. அப்போ தான் நீங்க வந்து பார்த்தீங்க… அதுக்கு அப்புறம் எங்களுக்கு ஸ்டடி ஹாலிடேஸ் முடிச்சிட்டு நான் லெவன்த் முடிச்சுட்டேன்…. இப்போ நான் டுவல்த் போயிருக்கேன்” என்று ரம்யா கூறினாள்.
சனந்தாவுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இன்னும் குழப்பத்தில் இருக்க, அதை உணர்ந்த விக்ரம், “எங்களுக்கு டைம் ஆகுதுமா நாங்க கிளம்புறோம்…. நீ எங்க கூட வரியா இல்ல வீட்டுக்கு போறியா?” என்று கேட்க, “இல்லை நான் வீட்டுக்கு போறேன் சனாவை பார்க்க தான் வந்தேன் நானு…. ஆமா, உங்க கூட வந்தாருல அவர் இங்க வரலையா?” என்று ரம்யா கேட்டாள்.
“யாரு கௌதமா?? அவனுக்கு ஃபைனல் எக்ஸாம்ஸ் அண்ட் ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு…. முடிச்சிட்டு வருவேன்னு சொன்னான்” என்று சனந்தா கூற, “சரி இப்ப நீங்க போயிட்டு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா நான் வந்து உங்களை பார்க்கிறேன்” என்று கூறி ரம்யா சென்றாள்.
மூவரும் நடக்க ஆரம்பிக்கவும் விக்ரம் சரவணன் கையை பிடித்து கிள்ளி, “என்ன ஆச்சுன்னு கேளு” என்று சைகையில் கூறினான். “அத நீ கேளு என்கிட்ட ஏன் கேட்குற” என்று சரவணன் மெல்லிய குறலில் கூற, “ப்ச்…. கேளுடா” என்றான் விக்ரம்.
“சனா என்ன ஆச்சு??? திடீர்னு ஒரு மாதிரி ஆயிட்ட…. எதுவும் பிரச்சனையா? என்று சரவணன் கேட்க, ஒன்னும் இல்லை என்பது போல் தலையை அசைத்தாள்..
“என்ன இப்ப அந்த பொண்ணு அஞ்சு மாசம் சொன்னது உனக்கு யோசனையா இருக்கா?” என்று சரவணன் கேட்க, அமைதியாகவே இருந்தாள் சனந்தா. “நம்ம தெரியாம ஏதாவது மறந்திருப்போம் அப்படித் தான் இருக்கும்…. அதுக்கு ஏன் இவ்ளோ குழப்பத்திலேயே வந்துட்டு இருக்க” என்று சரவணன் முறையிட, “அப்படி இல்ல ஆக்சிடென்ட் ஆயிட்டு கொஞ்சம் நாள் நான் கோமால இருந்தேன்னு சொன்னாங்க அம்மா…. ஆனா, மாசக் கணக்கா இருந்துட்டேனோ…. ஏன்னா இப்ப தான் இதெல்லாம் நடந்த மாதிரி இருக்கு… ஆனா, இவங்க எல்லாம் பேசும் போது ரொம்ப மாசம் ஆச்சுன்னு சொல்றாங்க வேற…. எனக்கு அதான் ஏதோ குழப்பமா இருக்கு… அதுவும் இல்லாம ரம்யா அனுப்பின மெயில் டெலீட் வேற பண்ணிட்டேன்… சேஃப்டிகாக… என்னோட கேலன்டர் கூட க்ளியர் பண்ணிடுவேன் எல்லாமே சேஃப்டி ரீசன்ஸ்காக” என்று சனந்தா கூறினாள்.
“அதெல்லாம் யோசிச்சிட்டு இருக்காத இப்ப தான் சரி ஆயிட்டு வந்துட்டல…. இங்க இப்ப என்ன பண்ணனுமோ அத பார்க்கலாம் வா” என்று சரவணன் பேச்சை மாற்றும் விதமாக கூறி வேற எதையோ பேசிக் கொண்டு சென்றனர்.
“ஒரு வேளை உண்மையிலேயே இவளுக்கு நடந்தது ஏதுவும் ஞாபகம் இல்லையோ… அதனால தான் இப்படி இருக்காளோ… நடந்தது ஞாபகம் வந்தா மட்டும் தான் என்ன நடந்ததுன்னு கேட்க முடியும்….. இவ ஏன் வற்புறுத்தி அபர்ணாவ கூட்டிட்டு போனான்னே தெரியும்” என்று விக்ரம் அவனுக்குள் பேசிக் கொண்டே சென்றான்.
விக்ரம் வண்டி ஓட்டுவதாக கூறி டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள, சனந்தா ஜீப்பில் பின் இருக்கையில் அமர செல்லவும், சரவணன் அவளை நிறுத்தி, “வேண்டாம் பின்னால ரொம்ப தூக்கிப் போடும்…. இங்க இருந்து மெயின் ரோடு போற வரைக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கும்… அதனால முன்னால உட்கார்ந்துக்கோ” என்று கூறினான்.
சனந்தா விக்ரமை ஒரு நொடி பார்த்து,, “ஐயோ இல்ல இல்ல…. வேண்டாம் நான் பின்னாலயே உக்காந்துக்குறேன் கொஞ்சம் தூரம் தானே சொன்னீங்க… அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல” என்ற சனந்தா கூற, “சொல்றதை கேளு!!” என்று சரவணன் சனந்தாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு கறாராக கூற, “நான் வேணும்னா வண்டி கூட ஓட்டுறேன்… ஆனா…, என்று சனந்தா மெல்லிய குறலில் கூறி முடிப்பதற்க்குள், அது விக்ரம் காதில் விழ, “எதுக்கு இன்னொரு வாட்டி ஆக்சிடென்ட் செய்யவா… நம்ம உயிரோடு இருக்கிறது கூட பிடிக்கலையா என்ன” என்று விக்ரம் கூறவும், “டேய் சும்மா இருடா ஏதாவது ஒன்னு பேசிட்டு இருக்காத” என்று சரவணன் கூறி, “சனா, நீ எதுவும் கண்டுக்காத முதல்ல ஏறு… எங்களுக்கும் போய் சைன் போட டைம் ஆகுது” என்று சரவணன் சனந்தாவை விக்ரம் அருகில் இருக்கும் இருக்கையில் அமர வைத்து சரவணன் பின்னால் அமர்ந்து கொண்டான்.
பயணம் முழுவதும் சரவணன் ஏதாவது பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தாலும் சனந்தா பெரிதாக பதில் கூறாமல் தலையை அசைத்து ஆமாம் இல்லை என்று மட்டுமே கூறிக் கொண்டு வந்தாள்.
“சம்மந்தமே இல்லாம இவரு என் மேல கோவப்படுறாரு…. ஆனாலும் எனக்கு அவர் மேல கோவம் வர மாட்டேங்குது… நான் ஏன் கஷ்டப்படுறேன் அவர் என் மேல கோபப்பட்டா….. எனக்கு யாரோ தானே அவரு… ஏன் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்” என்று சனந்தா அவளுக்குள் இருக்கும் உணர்வுகளை ஆராய்ச்சி செய்து கொண்டே பயணத்தை கழித்தாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
Author: Bhavani Varun
Article Title: Chapter 12
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 12
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.