சனந்தா மற்றும் விக்ரமுக்கு எப்படியோ தனிமையான நேரம் கிடைக்கவும் விக்ரம் பேச முயற்சிக்கும் முன் சனந்தாவின் கைப்பேசி ஒலிக்க அதில் சூர்யா என்று காட்டவும், அவள் எடுத்து பேசினாள். “சனா உன்கிட்ட ஒரு ஃபைல் அனுப்பி இருந்தேன்ல எனக்கு அதை திருப்பி மெயில் பண்ண முடியுமா??” என்று சூர்யா கேட்க, இப்படி சூர்யா மற்றும் சனந்தா இருவரும் அவர்களுடைய வேலை நிமித்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.
சனந்தாவும் அவனுடன் உரையாடலை துண்டிப்பதற்காக பலமுறை முயற்சி செய்தும் பலனின்றி வேலை நிமித்தமாக பேசிக் கொண்டு தான் வந்தாள். “சனந்தாவே ஃபோனை கட் பண்றதுக்கு இவ்வளவு முயற்சி பண்றானா அப்போ என்னை கண்டிப்பா பேச விடுவா” என்று விக்ரம் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
இருந்தாலும், “யார்ரா இவன்… ஒருத்தர் போன ஒருத்தர் வருவீங்களா எனக்குன்னே… எவ்வளவு நேரம் டா பேசுவ” என்று விக்ரம் சூர்யாவை மனதில் திட்டிக் கொண்டான்.
கிட்டதட்ட முப்பது நிமிடங்களாக சூர்யா பேசிவிட்டு ஃபோனை வைத்தான். சனந்தாவோ சூர்யா கேட்ட அனைத்து ஃபைலையும் ஒவ்வொன்றாக பார்த்து அவனுக்கு மெயில் அனுப்பி முடிக்கவும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ள, இருவர் முகத்திலுமே ஏமாற்றம் இருந்ததை இருவரும் கண்டு கொண்டனர். இருப்பினும் அதை சனந்தா வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
சனந்தா வரவும் அனைவரும் சனந்தாவை நன்றாக கவனித்து ஊருக்கு அனுப்பினர். இதுவே சனந்தாவுக்கு மன நிறைவை கொடுத்தது. அதனால் மனதில் உள்ள பாரத்தை அவள் ஒவ்வொன்றாக இறக்கி வைக்க ஆரம்பித்தாள். இன்னும் மீதி இருப்பது விக்ரமிடம் பேசினால் மட்டுமே தீரும் என்பதை அவள் நன்றாக புரிந்து கொண்டிருந்தாள்.
அங்கே விக்ரம் மற்றும் சனந்தாவுக்கு தனியாக பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை அதனுடைய ஏக்கம் விக்ரம் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. சனந்தா முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தாள். பின் அனைவரும் கோயம்புத்தூருக்கு புறப்பட சனந்தா முதல் முறையாக விக்ரமை நேராக ஒரு நொடி பார்த்துவிட்டு புறப்பட்டாள். அந்த பார்வைக்கான அர்த்தம் விக்ரம் மட்டுமே அறிந்த ஒன்னாகும். இவ்வளவு நேரம் ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு அவள் ஒற்றை பார்வையே போதுமானதாக இருந்தது. அந்த பார்வையை மனதில் படம் எடுத்துக் கொண்டான் விக்ரம்.
யார் பேச்சும் கேட்காமல் நாட்கள் அதன் வேகத்திற்கு சென்று கொண்டிருந்தது. தினமும் விக்ரம் சனந்தாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிட்டு உறங்குவது இருவருக்கும் பழக்கம் ஆகிவிட்டது. மேலும் அவள் பூஜைக்கு சென்று வந்த பின் விக்ரமிடமிருந்து உற்சாகமான குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. அது சனந்தாவிற்கு நிம்மதியை அளித்தது. அது வரைக்கும் விக்ரமிடமிருந்து எப்பொழுதும் சோகமான குறுஞ்செய்திகளே வரும் ஆனால் தற்போது அவனுடைய அன்றாட வேலைகளும் உற்சாகமான செய்திகளையும் நிறைய பகிர்ந்து கொண்டான் அதுவே சனந்தாவுக்கும் சந்தோஷத்தை கொடுத்தது.
சனந்தா அவள் ஆசைப்பட்டதை போலவே அவளுடைய தீதிஸ் பேப்பரை தயார் செய்ய ஆரம்பித்தாள். எப்படியும் அதை முடிக்க இரண்டு வருடங்கள் ஆவது ஆகும் என்பது அவள் அறிந்த ஒன்றே அதனால் ஒரு வருட காலம் முழுவதும் அவள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்து தீதிஸை தயார் செய்ய ஆரம்பித்தாள்.
இது போக கவர்மெண்ட் எக்ஸாமுக்கும் தயார் செய்து கொண்டு தான் இருந்தாள் சில காலமாகவே. இவை அனைத்தும் அவள் முழு ஈடுபாடுடன் செய்ய தொடங்கினாள். விக்ரம் முடிந்தவரை வாரம் ஒரு முறையாவது வந்து சனந்தாவை பார்த்து விட்டு சென்றான். அவன் வரும் பொழுது முன்கூடிய குறுஞ்செய்தியை அனுப்பி இருப்பான் அதனால் சனந்தாவும் அவனின் வருகைக்காக காத்திருந்து அவனைப் பார்த்துவிட்ட பின்னே அவளுடைய வேலையை காண செல்வாள்.
அவளது படிப்படியான மாற்றம் அனைவருக்கும் நிம்மதியே கொடுத்தது. இதை முதலிலேயே செய்திருக்கலாமோ என்ற எண்ணம் விக்ரமுக்கு அப்பொழுது தான் எழ தொடங்கியது. அவன் ஒவ்வொரு படியாக முயற்சி எடுக்கவும் சனந்தாவின் மாற்றங்களும் படிப்படியாக காணப்பட்டது.
இப்படி நாட்கள் வேகமாக ஓடவும் கௌதம் கல்யாண ஷாப்பிங் நாளையும் தொட்டது. ஆனால் சனந்தாவுக்கோ துளியும் நேரம் இல்லாமல் வேலை, தீசிஸ் இன்ஸ்பெக்ஷன், படிப்பு என ஓடிக் கொண்டிருந்தது. அதனால் முதல் நாளே வள்ளிக்கு ஃபோன் செய்து தன்னால் வர இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்தாள். அதையே கவிதாவிடமும் தெரிவித்தாள்.
எப்படியும் இவர்கள் விக்ரமுக்கு சொல்லிவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அன்று இரவு விக்ரம் வழக்கம் போல் குறுஞ்செய்தி அனுப்பவும் “ஐ எம் சாரி நாளைக்கு என்னால வர முடியாது” என்ற குறுஞ்செய்தியை பதிலாக அனுப்பினாள் சனந்தா. அவன் அவளை பார்க்க தான் வருகிறான் என்பது அவளுக்கு புரிந்திருந்தது அதனால் முடிந்த அளவுக்கு அவன் வரும் பொழுது எல்லாம் அவள் அவனை பார்த்து விட்டு தான் செல்வாள்.
ஆனால் இம்முறை அவளால் இருக்க இயலாது அந்த ஏமாற்றம் அவனுக்கு இருக்க கூடும் என்பதால் முன்கூடிய குறுஞ்செய்தியை அனுப்பினாள். அந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் விக்ரமுக்கு என்றுமில்லாத ஆனந்தம் கிடைத்தது. கண்களில் கண்ணீருடன் குறுஞ்செய்தியே பலமுறை படித்து படித்து பார்த்தான். குறுஞ்செய்தியில் பெரிதாக விஷயம் எதுவும் இல்லை தன்னால் வர இயலாது என்று மட்டுமே கூறியிருந்தாள் இருப்பினும் அவன் அக்குறுஞ்செய்தியை அத்தனை வாட்டி படித்து படித்து பார்த்தான்.
அவன் பதிலுக்கு தேங்க்யூ என்று மட்டுமே அனுப்பினான். அதற்கான அர்த்தம் சனந்தாவுக்கு புரிந்தது. அவனுடைய ஏமாற்றமே அவளால் தாங்கிக்க முடியாமல் தான் குறுஞ்செய்தியின் வழியாக அவளது அக்கறையை காட்டினாள் என்று விக்ரம் அவளுக்கு நன்றியை தெரிவித்தான்.
கல்யாணம் வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தது. அப்படியே நாட்கள் போனதும் தெரியாமல் இதோ வந்து விட்டது கௌதமின் கல்யாண நாளும். அனைவரின் வேலையையும் ஒரு வார நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவிட்டு அனைவரும் இதோ வண்ணம் கிராமத்திற்கு புறப்பட்டனர்.
பூஜைக்கு வந்திருந்த போது சனந்தாவுக்கு ஒரு பக்கம் தயக்கமும் மறு பக்கம் படபடப்பும் இருந்தது. ஆனால், இம்முறையோ உற்சாகத்துடன் வந்திருந்தாள். அது அவள் முகத்திலேயே தெரியவும் இம்முறை அனைவருக்குமே நம்பிக்கை இருந்தது ஏதேனும் நற்செய்தி கிடைத்து விடும் என்று.
சனந்தா முதலில் இறங்கியதும் அவளது கண்கள் தானாகவே விக்ரமை தான் தேட ஆரம்பித்தது. அதை உணர்ந்த சரவணன் விகாஷிடம் பேசுவது போல், “விக்ரம் தானே எல்லாம் எடுத்து பண்றான் கவிதாவுக்கு… அது தான் ஒரே பிசியா இருக்கான்… நீங்க வந்தது கூட இன்னும் அவனுக்கு தெரியுமான்னு எனக்கு தெரியல… வேலை முடிஞ்சதும் வந்திருவான்” என்று சரவணன் கூறவும் சனந்தாவுக்கு நன்றாகவே அது அவளுக்கு சொல்லும் தகவல் தான் என்று. அதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக அவள் கொண்டு வந்த பேக் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
பெரியவர்கள் அனைவரும் விக்ரம் வீட்டிலும் இளம் வயதினர்கள் அனைவரும் சரவணன் வீட்டிலும் தங்கு கொள்வதாக முடிவு எடுத்திருந்தனர். சனந்தாவுக்கோ விக்ரம் வீட்டிலும் அதிலும் அவள் இருந்த அறையில் தங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அங்கே இப்பொழுது விக்ரம் இருப்பதனால் அவள் எதுவும் பேசாமல் சரவணன் வீட்டிலேயே தங்கிக் கொள்வதாக முடிவு எடுத்திருந்தாள்.
சரவணனின் பெற்றோரும் வந்து விட அவர்களும் விக்ரம் வீட்டில் தங்கிக் கொண்டனர்.
“டேய் இப்ப போய் சுத்தி என்னை திட்டு வாங்க வெச்சிறாத உங்க அப்பா கிட்டையும் அங்கிள் கிட்டயும்” என்று லக்ஷ்மி கௌதம்மிடம் கூறிக் கொண்டிருக்கவும், “ஆமா நீங்க அப்படி சொன்னா மட்டும் என்ன போவாமலா இருக்க போறான்… அவன் போயிட்டு வருவான் தான் அண்ணிய பார்க்குறதுக்கு” என்று விகாஷ் கூறினான்.
“அவன் இவன்னு சொல்லாதன்னு சொல்லி இருக்கேன்ல…. கல்யாணம் ஆகப்போகுது அவனுக்கு… ஒன்னு பேர் வெச்சு கூப்பிடு இல்லனா அண்ணன்னு கூப்பிடு” என்று லக்ஷ்மி கூறவும், “அண்ணியே கண்டுக்கல உங்களுக்கு என்னம்மா பிரச்சனை விடுங்க” என்று விகாஷ் கூறினான்.
கௌதம் துடித்துக் கொண்டிருந்தான் எப்படியாவது கவிதாவை பார்க்க வேண்டும் என்று ஆனால் பெரியவர்களோ அவனை அனுப்பவே முடியாது என்று உறுதியாக கூறினார். அங்கே கவிதாவோ வீட்டை விட்டு கூட வெளியே வரும் நிலைமையில் கூட இல்லை. இருவருக்கும் அதே நிலைமை தான்.
“நாளைக்கு சாயந்திரம் நிச்சயம் டா அதுக்கடுத்த நாள் கல்யாணம் டா ஏண்டா இப்படி மானத்த வாங்குற” என்று லக்ஷ்மி கௌதமை திட்டி கொண்டு இருக்க, “சரி சரி நான் போகல” என்று கௌதம் சலித்துக் கொள்ள, “நம்ம ஊர்ல நீங்க போயிட்டு வந்தா தெரியாது கௌதம்… ஆனா இங்க அப்படி இல்ல இல்ல யாராவது பார்த்து ஏதாவது சின்னதா சொல்லிட்டாங்கன்னா கூட அந்த சங்கடம் நமக்கு இருக்கிறத விட கவிதாக்கு எப்படி இருக்கும் அதை யோசி” என்று லக்ஷ்மி அறிவுரை கூறவும், “சரி ஓகேமா நான் போகல நான் ஃபோன்லயே பேசிக்கிறேன்” என்று கௌதம் அவனுக்கும் சேர்த்து சமாதானம் கூறினான்.
“ஆமா இவ என்ன உம்முன்னு இருக்கா??” என்று சனந்தாவை பார்த்து மெல்லிய குரலில் லக்ஷ்மி கேட்க, “விக்ரம் இன்னும் வரல மா ஏதோ வேலையா போய் இருக்காரு அதனால தான் மேடம் மூஞ்சு அப்படி இருக்கு” என்று கௌதம் கூறினான். “ஆமா அப்படியே இல்லனாலும் சிரிச்சிட்டாலும் அவ” என்று லக்ஷ்மி கூறினார்.
“பாவம்மா அவ… அவளைப் பத்தி தெரிஞ்சு ஏன் இப்படி அவளை பண்றீங்க” என்று விகாஷ் சனந்தாவுக்கு வக்காலத்து வாங்க, “இவன் வந்துருவானே அக்காவுக்கு சப்போர்ட் பன்ன” என்று லக்ஷ்மி கூறவும், “சரி உங்களுக்கெல்லாம் வேலை இருக்குல போய் வேலையை பாருங்க எதுக்கு எங்களோட உக்காந்துட்டு இருக்கீங்க…. நாங்க ஏதோ சின்ன பசங்க அரட்டை அடிச்சிட்டு இருக்கோம் உங்களுக்கு என்ன நீங்க போய் வேலையை பாருங்க போங்க” என்று லக்ஷ்மியை துரத்தாத குறையாய் துரத்தி விட்டான் விகாஷ்.
அன்று மாலை வரை சனந்தா விக்ரமை பார்க்கவே இல்லை. மத்திய உணவு அருந்தும் போதும் சரி மாலை டீ குடிக்கும் போதும் சரி அவன் வருவான் என்று சிறிய எதிர்பார்ப்போடு இருந்தாலும் அது ஏமாற்றத்தில் தான் முடிந்தது. கௌதம் விகாஷ் மொட்டை மாடிக்கு செல்லலாம் என்று சனந்தாவை அழைக்கவும், அங்கே செல்ல அவளுக்கு தயக்கமும் இருந்தது ஆனாலும் அங்கே சென்று அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.
ஏன் என்றால் அப்பொழுதெல்லாம் தினமும் விக்ரமும் சனந்தவும் மாடியில் தான் அவர்களுக்கான தனிமையான நேரத்தை செலவழித்தனர். அவளுக்கு மாடிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும் இருந்ததால் அமைதியாக அவர்களுடன் சென்றாள். அங்கு சென்று மாடியை பார்க்கவும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே போல பாதி தூரத்திற்கு ஷீட்…. அங்கு எப்பவும் போடப்பட்டிருக்கும் கட்டில் என்று அது போலவே இருந்தது.
ஏனோ மாடிக்கு வந்து பார்த்ததும் சனந்தாவின் மனம் சற்று பாரமாகவே இருந்தது அது விக்ரமுடனான நினைவுகளா அல்லது இப்பொழுது இங்கே அவளுடன் விக்ரம் இல்லாமல் இருப்பதா என்று அவளுக்கும் தெரியவில்லை தான்.
சரவணன் கீழே இருந்து விகாஷ் மற்றும் கௌதமை வேலை இருப்பதாக அழைக்கவும் இருவரும் சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் சனந்தா அவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த அழுகை பீறிட்டு வந்தது. அழுது முடித்து சிறிது நேரம் கழித்து அவளை சமாதானப்படுத்திக் கொண்டு சனந்தா மேல இருந்து கீழே அவள் தங்கி இருந்த அறையை நோக்கி பார்க்கவும், அப்பொழுது தான் விக்ரம் வந்து முகத்தை கழுவிக் கொண்டு துடைத்துக் கொண்டு இருந்தான், அவன் எதையோ உணர்ந்தவன் போல் சட்டென்று மேலே பார்க்கவும் சனந்தாவும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
சனந்தாவும் அவனுடன் உரையாடலை துண்டிப்பதற்காக பலமுறை முயற்சி செய்தும் பலனின்றி வேலை நிமித்தமாக பேசிக் கொண்டு தான் வந்தாள். “சனந்தாவே ஃபோனை கட் பண்றதுக்கு இவ்வளவு முயற்சி பண்றானா அப்போ என்னை கண்டிப்பா பேச விடுவா” என்று விக்ரம் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
இருந்தாலும், “யார்ரா இவன்… ஒருத்தர் போன ஒருத்தர் வருவீங்களா எனக்குன்னே… எவ்வளவு நேரம் டா பேசுவ” என்று விக்ரம் சூர்யாவை மனதில் திட்டிக் கொண்டான்.
கிட்டதட்ட முப்பது நிமிடங்களாக சூர்யா பேசிவிட்டு ஃபோனை வைத்தான். சனந்தாவோ சூர்யா கேட்ட அனைத்து ஃபைலையும் ஒவ்வொன்றாக பார்த்து அவனுக்கு மெயில் அனுப்பி முடிக்கவும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ள, இருவர் முகத்திலுமே ஏமாற்றம் இருந்ததை இருவரும் கண்டு கொண்டனர். இருப்பினும் அதை சனந்தா வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
சனந்தா வரவும் அனைவரும் சனந்தாவை நன்றாக கவனித்து ஊருக்கு அனுப்பினர். இதுவே சனந்தாவுக்கு மன நிறைவை கொடுத்தது. அதனால் மனதில் உள்ள பாரத்தை அவள் ஒவ்வொன்றாக இறக்கி வைக்க ஆரம்பித்தாள். இன்னும் மீதி இருப்பது விக்ரமிடம் பேசினால் மட்டுமே தீரும் என்பதை அவள் நன்றாக புரிந்து கொண்டிருந்தாள்.
அங்கே விக்ரம் மற்றும் சனந்தாவுக்கு தனியாக பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை அதனுடைய ஏக்கம் விக்ரம் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. சனந்தா முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தாள். பின் அனைவரும் கோயம்புத்தூருக்கு புறப்பட சனந்தா முதல் முறையாக விக்ரமை நேராக ஒரு நொடி பார்த்துவிட்டு புறப்பட்டாள். அந்த பார்வைக்கான அர்த்தம் விக்ரம் மட்டுமே அறிந்த ஒன்னாகும். இவ்வளவு நேரம் ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு அவள் ஒற்றை பார்வையே போதுமானதாக இருந்தது. அந்த பார்வையை மனதில் படம் எடுத்துக் கொண்டான் விக்ரம்.
யார் பேச்சும் கேட்காமல் நாட்கள் அதன் வேகத்திற்கு சென்று கொண்டிருந்தது. தினமும் விக்ரம் சனந்தாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிட்டு உறங்குவது இருவருக்கும் பழக்கம் ஆகிவிட்டது. மேலும் அவள் பூஜைக்கு சென்று வந்த பின் விக்ரமிடமிருந்து உற்சாகமான குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. அது சனந்தாவிற்கு நிம்மதியை அளித்தது. அது வரைக்கும் விக்ரமிடமிருந்து எப்பொழுதும் சோகமான குறுஞ்செய்திகளே வரும் ஆனால் தற்போது அவனுடைய அன்றாட வேலைகளும் உற்சாகமான செய்திகளையும் நிறைய பகிர்ந்து கொண்டான் அதுவே சனந்தாவுக்கும் சந்தோஷத்தை கொடுத்தது.
சனந்தா அவள் ஆசைப்பட்டதை போலவே அவளுடைய தீதிஸ் பேப்பரை தயார் செய்ய ஆரம்பித்தாள். எப்படியும் அதை முடிக்க இரண்டு வருடங்கள் ஆவது ஆகும் என்பது அவள் அறிந்த ஒன்றே அதனால் ஒரு வருட காலம் முழுவதும் அவள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்து தீதிஸை தயார் செய்ய ஆரம்பித்தாள்.
இது போக கவர்மெண்ட் எக்ஸாமுக்கும் தயார் செய்து கொண்டு தான் இருந்தாள் சில காலமாகவே. இவை அனைத்தும் அவள் முழு ஈடுபாடுடன் செய்ய தொடங்கினாள். விக்ரம் முடிந்தவரை வாரம் ஒரு முறையாவது வந்து சனந்தாவை பார்த்து விட்டு சென்றான். அவன் வரும் பொழுது முன்கூடிய குறுஞ்செய்தியை அனுப்பி இருப்பான் அதனால் சனந்தாவும் அவனின் வருகைக்காக காத்திருந்து அவனைப் பார்த்துவிட்ட பின்னே அவளுடைய வேலையை காண செல்வாள்.
அவளது படிப்படியான மாற்றம் அனைவருக்கும் நிம்மதியே கொடுத்தது. இதை முதலிலேயே செய்திருக்கலாமோ என்ற எண்ணம் விக்ரமுக்கு அப்பொழுது தான் எழ தொடங்கியது. அவன் ஒவ்வொரு படியாக முயற்சி எடுக்கவும் சனந்தாவின் மாற்றங்களும் படிப்படியாக காணப்பட்டது.
இப்படி நாட்கள் வேகமாக ஓடவும் கௌதம் கல்யாண ஷாப்பிங் நாளையும் தொட்டது. ஆனால் சனந்தாவுக்கோ துளியும் நேரம் இல்லாமல் வேலை, தீசிஸ் இன்ஸ்பெக்ஷன், படிப்பு என ஓடிக் கொண்டிருந்தது. அதனால் முதல் நாளே வள்ளிக்கு ஃபோன் செய்து தன்னால் வர இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்தாள். அதையே கவிதாவிடமும் தெரிவித்தாள்.
எப்படியும் இவர்கள் விக்ரமுக்கு சொல்லிவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அன்று இரவு விக்ரம் வழக்கம் போல் குறுஞ்செய்தி அனுப்பவும் “ஐ எம் சாரி நாளைக்கு என்னால வர முடியாது” என்ற குறுஞ்செய்தியை பதிலாக அனுப்பினாள் சனந்தா. அவன் அவளை பார்க்க தான் வருகிறான் என்பது அவளுக்கு புரிந்திருந்தது அதனால் முடிந்த அளவுக்கு அவன் வரும் பொழுது எல்லாம் அவள் அவனை பார்த்து விட்டு தான் செல்வாள்.
ஆனால் இம்முறை அவளால் இருக்க இயலாது அந்த ஏமாற்றம் அவனுக்கு இருக்க கூடும் என்பதால் முன்கூடிய குறுஞ்செய்தியை அனுப்பினாள். அந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் விக்ரமுக்கு என்றுமில்லாத ஆனந்தம் கிடைத்தது. கண்களில் கண்ணீருடன் குறுஞ்செய்தியே பலமுறை படித்து படித்து பார்த்தான். குறுஞ்செய்தியில் பெரிதாக விஷயம் எதுவும் இல்லை தன்னால் வர இயலாது என்று மட்டுமே கூறியிருந்தாள் இருப்பினும் அவன் அக்குறுஞ்செய்தியை அத்தனை வாட்டி படித்து படித்து பார்த்தான்.
அவன் பதிலுக்கு தேங்க்யூ என்று மட்டுமே அனுப்பினான். அதற்கான அர்த்தம் சனந்தாவுக்கு புரிந்தது. அவனுடைய ஏமாற்றமே அவளால் தாங்கிக்க முடியாமல் தான் குறுஞ்செய்தியின் வழியாக அவளது அக்கறையை காட்டினாள் என்று விக்ரம் அவளுக்கு நன்றியை தெரிவித்தான்.
கல்யாணம் வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தது. அப்படியே நாட்கள் போனதும் தெரியாமல் இதோ வந்து விட்டது கௌதமின் கல்யாண நாளும். அனைவரின் வேலையையும் ஒரு வார நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவிட்டு அனைவரும் இதோ வண்ணம் கிராமத்திற்கு புறப்பட்டனர்.
பூஜைக்கு வந்திருந்த போது சனந்தாவுக்கு ஒரு பக்கம் தயக்கமும் மறு பக்கம் படபடப்பும் இருந்தது. ஆனால், இம்முறையோ உற்சாகத்துடன் வந்திருந்தாள். அது அவள் முகத்திலேயே தெரியவும் இம்முறை அனைவருக்குமே நம்பிக்கை இருந்தது ஏதேனும் நற்செய்தி கிடைத்து விடும் என்று.
சனந்தா முதலில் இறங்கியதும் அவளது கண்கள் தானாகவே விக்ரமை தான் தேட ஆரம்பித்தது. அதை உணர்ந்த சரவணன் விகாஷிடம் பேசுவது போல், “விக்ரம் தானே எல்லாம் எடுத்து பண்றான் கவிதாவுக்கு… அது தான் ஒரே பிசியா இருக்கான்… நீங்க வந்தது கூட இன்னும் அவனுக்கு தெரியுமான்னு எனக்கு தெரியல… வேலை முடிஞ்சதும் வந்திருவான்” என்று சரவணன் கூறவும் சனந்தாவுக்கு நன்றாகவே அது அவளுக்கு சொல்லும் தகவல் தான் என்று. அதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக அவள் கொண்டு வந்த பேக் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
பெரியவர்கள் அனைவரும் விக்ரம் வீட்டிலும் இளம் வயதினர்கள் அனைவரும் சரவணன் வீட்டிலும் தங்கு கொள்வதாக முடிவு எடுத்திருந்தனர். சனந்தாவுக்கோ விக்ரம் வீட்டிலும் அதிலும் அவள் இருந்த அறையில் தங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அங்கே இப்பொழுது விக்ரம் இருப்பதனால் அவள் எதுவும் பேசாமல் சரவணன் வீட்டிலேயே தங்கிக் கொள்வதாக முடிவு எடுத்திருந்தாள்.
சரவணனின் பெற்றோரும் வந்து விட அவர்களும் விக்ரம் வீட்டில் தங்கிக் கொண்டனர்.
“டேய் இப்ப போய் சுத்தி என்னை திட்டு வாங்க வெச்சிறாத உங்க அப்பா கிட்டையும் அங்கிள் கிட்டயும்” என்று லக்ஷ்மி கௌதம்மிடம் கூறிக் கொண்டிருக்கவும், “ஆமா நீங்க அப்படி சொன்னா மட்டும் என்ன போவாமலா இருக்க போறான்… அவன் போயிட்டு வருவான் தான் அண்ணிய பார்க்குறதுக்கு” என்று விகாஷ் கூறினான்.
“அவன் இவன்னு சொல்லாதன்னு சொல்லி இருக்கேன்ல…. கல்யாணம் ஆகப்போகுது அவனுக்கு… ஒன்னு பேர் வெச்சு கூப்பிடு இல்லனா அண்ணன்னு கூப்பிடு” என்று லக்ஷ்மி கூறவும், “அண்ணியே கண்டுக்கல உங்களுக்கு என்னம்மா பிரச்சனை விடுங்க” என்று விகாஷ் கூறினான்.
கௌதம் துடித்துக் கொண்டிருந்தான் எப்படியாவது கவிதாவை பார்க்க வேண்டும் என்று ஆனால் பெரியவர்களோ அவனை அனுப்பவே முடியாது என்று உறுதியாக கூறினார். அங்கே கவிதாவோ வீட்டை விட்டு கூட வெளியே வரும் நிலைமையில் கூட இல்லை. இருவருக்கும் அதே நிலைமை தான்.
“நாளைக்கு சாயந்திரம் நிச்சயம் டா அதுக்கடுத்த நாள் கல்யாணம் டா ஏண்டா இப்படி மானத்த வாங்குற” என்று லக்ஷ்மி கௌதமை திட்டி கொண்டு இருக்க, “சரி சரி நான் போகல” என்று கௌதம் சலித்துக் கொள்ள, “நம்ம ஊர்ல நீங்க போயிட்டு வந்தா தெரியாது கௌதம்… ஆனா இங்க அப்படி இல்ல இல்ல யாராவது பார்த்து ஏதாவது சின்னதா சொல்லிட்டாங்கன்னா கூட அந்த சங்கடம் நமக்கு இருக்கிறத விட கவிதாக்கு எப்படி இருக்கும் அதை யோசி” என்று லக்ஷ்மி அறிவுரை கூறவும், “சரி ஓகேமா நான் போகல நான் ஃபோன்லயே பேசிக்கிறேன்” என்று கௌதம் அவனுக்கும் சேர்த்து சமாதானம் கூறினான்.
“ஆமா இவ என்ன உம்முன்னு இருக்கா??” என்று சனந்தாவை பார்த்து மெல்லிய குரலில் லக்ஷ்மி கேட்க, “விக்ரம் இன்னும் வரல மா ஏதோ வேலையா போய் இருக்காரு அதனால தான் மேடம் மூஞ்சு அப்படி இருக்கு” என்று கௌதம் கூறினான். “ஆமா அப்படியே இல்லனாலும் சிரிச்சிட்டாலும் அவ” என்று லக்ஷ்மி கூறினார்.
“பாவம்மா அவ… அவளைப் பத்தி தெரிஞ்சு ஏன் இப்படி அவளை பண்றீங்க” என்று விகாஷ் சனந்தாவுக்கு வக்காலத்து வாங்க, “இவன் வந்துருவானே அக்காவுக்கு சப்போர்ட் பன்ன” என்று லக்ஷ்மி கூறவும், “சரி உங்களுக்கெல்லாம் வேலை இருக்குல போய் வேலையை பாருங்க எதுக்கு எங்களோட உக்காந்துட்டு இருக்கீங்க…. நாங்க ஏதோ சின்ன பசங்க அரட்டை அடிச்சிட்டு இருக்கோம் உங்களுக்கு என்ன நீங்க போய் வேலையை பாருங்க போங்க” என்று லக்ஷ்மியை துரத்தாத குறையாய் துரத்தி விட்டான் விகாஷ்.
அன்று மாலை வரை சனந்தா விக்ரமை பார்க்கவே இல்லை. மத்திய உணவு அருந்தும் போதும் சரி மாலை டீ குடிக்கும் போதும் சரி அவன் வருவான் என்று சிறிய எதிர்பார்ப்போடு இருந்தாலும் அது ஏமாற்றத்தில் தான் முடிந்தது. கௌதம் விகாஷ் மொட்டை மாடிக்கு செல்லலாம் என்று சனந்தாவை அழைக்கவும், அங்கே செல்ல அவளுக்கு தயக்கமும் இருந்தது ஆனாலும் அங்கே சென்று அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.
ஏன் என்றால் அப்பொழுதெல்லாம் தினமும் விக்ரமும் சனந்தவும் மாடியில் தான் அவர்களுக்கான தனிமையான நேரத்தை செலவழித்தனர். அவளுக்கு மாடிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும் இருந்ததால் அமைதியாக அவர்களுடன் சென்றாள். அங்கு சென்று மாடியை பார்க்கவும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே போல பாதி தூரத்திற்கு ஷீட்…. அங்கு எப்பவும் போடப்பட்டிருக்கும் கட்டில் என்று அது போலவே இருந்தது.
ஏனோ மாடிக்கு வந்து பார்த்ததும் சனந்தாவின் மனம் சற்று பாரமாகவே இருந்தது அது விக்ரமுடனான நினைவுகளா அல்லது இப்பொழுது இங்கே அவளுடன் விக்ரம் இல்லாமல் இருப்பதா என்று அவளுக்கும் தெரியவில்லை தான்.
சரவணன் கீழே இருந்து விகாஷ் மற்றும் கௌதமை வேலை இருப்பதாக அழைக்கவும் இருவரும் சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் சனந்தா அவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த அழுகை பீறிட்டு வந்தது. அழுது முடித்து சிறிது நேரம் கழித்து அவளை சமாதானப்படுத்திக் கொண்டு சனந்தா மேல இருந்து கீழே அவள் தங்கி இருந்த அறையை நோக்கி பார்க்கவும், அப்பொழுது தான் விக்ரம் வந்து முகத்தை கழுவிக் கொண்டு துடைத்துக் கொண்டு இருந்தான், அவன் எதையோ உணர்ந்தவன் போல் சட்டென்று மேலே பார்க்கவும் சனந்தாவும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 111
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 111
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.