கோவிலில் அனைத்து தேதிகளையும் குறித்து விட்டு ஐயருக்கு தட்சனை கொடுத்து அனுப்பினர். பின் சனந்தா லக்ஷ்மிடம், “அம்மா அடுத்து என்ன பிளான்??” என்று கேட்க, “ஏன் ஏதாவது வேலையா??” என்று முறைத்துக் கொண்டே லக்ஷ்மி கேட்டார்.
“ப்ச்… அதெல்லாம் இல்ல… என்கிட்ட ரீசர்ச் ஃபைல் இருக்கு அது சூர்யாக்கு வேணும்…. அவர் வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னாரு… எங்க இருக்கியோ அங்கயே வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னாரு… அப்படி இல்லன்னா நானாவது கொண்டு போய் கொடுத்துட்டு வருவேன் அதுக்கு தான் கேட்டேன் அதுக்குள்ள முறைக்காதீங்க” என்று சனந்தா கூறினாள்.
“அடுத்து எல்லாரும் சாப்பிட வெளியே போறோம் அங்க வேணா சூர்யாவ வர சொல்லு அவ்வளவு தானே” என்று லக்ஷ்மி கூறவும் சரி என்று சூர்யாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் சனந்தா.
கௌதம் வந்து சனந்தாவின் காதை கடிக்க என்ன வேணும் உனக்கு?? என்று சனந்தா கேட்கவும், “என் கூட பைக்ல கவிதாவ கூட்டிட்டு வரேன்… எப்படியாவது ப்ளீஸ் அம்மா கிட்ட கேளு” என்று கௌதம் கேட்கவும், “உன்னோட வேலையில நீ குறியா இருப்பல” என்று கௌதமை திட்டி, லக்ஷ்மிடம் கூறவும், “நான் கேட்டு பார்க்கிறேன்” என்று லக்ஷ்மி கூறினார்.
அதை மெதுவாக வந்து வள்ளியிடம் கேட்க, வள்ளி, முத்து மற்றும் ஸ்ரீனிவாசனிடம் கேட்டு அனுமதி வாங்கி கொடுத்தார். “சரி நான் கவிதாவ கூட்டிட்டு நான் முன்னாடி போறேன் நீங்க எங்க லொகேஷன்னு பார்த்துட்டு எனக்கு அனுப்புங்க” என்று கூறி கௌதம் கவிதாவை அழைத்துக் கொண்டு சென்றான்.
“இங்க இருந்து கொஞ்சம் தூரம் தான் நம்ம ஹோட்டல்… நாம எல்லாரும் போய் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் கிளம்பலாம்” என்று சந்திரசேகர் கூறவும், சரி என்று அமோத்தித்னர்.
“அப்பா நானும் சனாவும் சனாவோட வண்டில வந்திடுறோம்” என்று விகாஷ் கூறவும், “இல்லடா நம்ம பெரிய வண்டி தான் கொண்டு வந்தோம்… அதுல நாங்க எல்லாரும் போறோம்… நீ சனாவோட கார கொண்டு வந்த இல்ல அதுல நீ சனா விக்ரம் எல்லாம் வந்துருங்க” என்று லட்சுமி கூறவும், சனந்தாவுக்கு அவளுடைய தாய் என்ன திட்டம் தீட்டுகிறாள் என்பது புரிய திரும்பி லக்ஷ்மியை பார்க்கவும், “நீ கார் ஓட்டிட்டு வந்துரு விகாஷ் உனக்கு இடம் கரெக்டா சொல்லிடுவான்” என்று கூறினார் லக்ஷ்மி.
“அப்போ வண்டி இங்கேயே இருக்கட்டுமா??” என்று தயக்கத்துடன் ஸ்ரீனிவாசன் கேட்க, “இந்த பார்க்கிங்ல இருக்கட்டும்…. யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க அதுவும் இல்லாம திருப்பி எப்படியும் இந்த வழியா தான் நம்ம போய் ஆகணும் அதனால எல்லாரும் ஒன்னாவே போலாம்” என்று பிரகாஷ் கூறினார்.
சந்திரசேகர் கார் ஓட்ட அதில், ஸ்ரீனிவாசன், பிரகாஷ், முத்து, வள்ளி மற்றும் லக்ஷ்மி அமர்ந்து கொண்டனர். அது ஏழு சீட்டர் கொண்ட பெரிய இனோவா என்பதால் அனைவரும் சென்று விட்டனர். “விக்கி சாவி கொடு” என்று சனா கேட்கவும், “நான் வேணா ஓட்டவா சனா” என்று விகாஷ் கேட்க, “இல்ல பரவால்ல கொடு” என்று சனா காரின் சாவியை வாங்கிக் கொண்டாள்.
விக்ரம் மெதுவாக விகாஷை அழைத்து, “நீயும் அந்த வண்டில போக வேண்டியது தானே” என்று கேட்க, “நான் போய் இருப்பான்… ஆனா அதுக்கப்புறம் உங்கள நடு ரோட்டுல விட்டுட்டு வந்துட்டா என்ன பண்றது… அதான் அம்மா இவ்வளவு பிளான் பண்ணவங்க இத யோசிக்காமலா இருப்பாங்க…. அதனால தான் முதல்ல என் கூட வாங்க அதுக்கப்புறம் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் அப்ப தனியா பேசுங்க” என்று விகாஷ் கூறவும், அதுவும் சரி என்று தான் தோன்றியது விக்ரமுக்கு.
சனந்தா கார் ஓட்ட அருகில் விக்ரமை அமர வைத்து விட்டு விகாஷ் பின் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ளவும் சனந்தா கண்ணாடி வாயிலாக அவனை முறைத்து விட்டு காரை ஆன் செய்தால்.
கார் ஓட்ட ஆரம்பிக்கவும் இன்னும் கீன் கீன் என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருக்க, சனந்தா கண்ணாடி வாயிலாக விகாஷை பார்க்கவும், அதை புரிந்துக் கொண்டு, “அத்தான் பெல்ட் போடுங்க நீங்க பெல்ட் போடலனா கூட இந்த கார் சத்தம் போட்டுட்டே இருக்கும்” என்று விகாஷ் கூறினான். அதன்படி விக்ரமும் சீட் பெல்ட் அணிவித்துக் கொண்டு சனந்தாவையே பார்க்க, அவனது பார்வை தீண்டுவதை சனந்தா உணராமல் இல்லை.
சனந்தா அதை உணர்ந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் வண்டியை ஓட்டுவதிலே கவனமாக இருந்தாள். சனந்தாவின் கைபேசி அழைக்க, “விக்கி யாருன்னு பாரு” என்று சனந்தா கூறவும், உன்னோட ஃபோன் ப்ளூடூத்ல கனெக்ட் ஆகிடுச்சு அப்படியே அடென்ட் பண்ணி பேசு” என்று விகாஷ் கூறவும், கௌதமிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. என்னடா என்று சனந்தா கேட்க, ஒன்னும் இல்ல ஹோட்டல் லொகேஷன் மட்டும் எனக்கு அனுப்பு என்று கௌதம் கேட்கவும், “சரி ஓகே நேரத்துக்கு வந்து சேரு” என்று கூறி சனந்தா ஃபோனை கட் செய்தாள்.
“விக்கி, கௌதமுக்கு ஹோட்டல் லொகேஷன் அனுப்பிடு… அவன் ஒரு பிராஞ்ச் சொன்னா இன்னொரு பிராஞ்சுக்கு போய் நிக்க போறான்… அதனால தான் லொக்கேஷன் அனுப்ப சொல்லுறான் டா” என்று சனந்தா கூறினாள்.
பயணம் முழுவதும் சனந்தாவின் கவனம் ரோட்டிலேயே இருப்பதாக அனைவரும் உணர்ந்தனர். ஆனால் சனந்தாவின் மனதில் அவ்வளவு படபடப்பு இருந்தது. விக்ரமை சந்தித்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி…. ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தமும் கோபமும் இருந்தது…. எல்லாம் போக அவனுடைய பார்வை தீண்டலும் அவளை துளைத்து எடுத்துக் கொண்டு தான் இருந்தது.
விகாஷ் தான் ஏதோ பேச்சு கொடுக்க வேண்டும் என்பதற்காக விக்ரமிடம் பேசிக் கொண்டே வந்தான். விக்ரமும் இது தான் சாக்கு என்று சனந்தாவுக்கு எதிராக நன்றாக அவளை பார்க்கும் படி திரும்பி அமர்ந்து அவளை ரசித்துக் கொண்டும் இருந்தான்.
“எவ்ளோ மாசம் ஆச்சு… கள்ளி.. பூனைக்குட்டி.. எத்தனை மாசம் என்னை தவிக்க விட்டுட்ட… உன்ன பார்க்க கூட விடாம இவ்வளவு கஷ்டப்படுத்திட்டல…. எல்லாம் சரியாகி வா உன்னை என்ன பண்றேன் பாரு” என்று விக்ரம் மனத்திற்குள் அவளை திட்டிக் கொண்டான்.
ஹோட்டலை நெருங்கவும் சூர்யாவிடம் இருந்து ஃபோன் வந்தது அதை ஆன் செய்து, சொல்லுங்க சூர்யா என்று சனந்தா பேசவும், இவ்வளவு நேரம் சந்தோஷமாக இருந்த விக்ரமின் முகம் மாறியது.
“நான் அந்த ஹோட்டல் கிட்ட வந்துட்டேன்” என்று சூர்யா கூறவும், “நானும் வந்துட்டே இருக்கேன்… ஒரு டூ மினிட்ஸ்ல ரீச் ஆயிடுவேன்” என்று சனந்தா கூறினாள். “சரி ஓகே நான் வெயிட் பண்றேன் சனா… வெளியவே இருக்கேன்” என்று கூறி சூர்யா ஃபோனை வைத்தான்.
அவ்வளவு நேரம் உற்சாகமாக இருந்த விக்ரமின் முகம் மாறிவிட்டதை சனந்தா ஓர கண்ணால் பார்த்து ஏனோ அவள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள், ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
“இவளை விட சின்ன பையன் கார்த்திக் அவன் வந்து பேசினாலே நான் மூஞ்ச தூக்கி வெச்சிப்பேன்…. இப்போ இவ கூட சேர்ந்து படிக்கிற பையன் கிட்ட பேசுறா அப்ப எனக்கு எவ்வளவு கடுப்பா இருக்கும்னு அவளுக்கு தெரிஞ்சும் அவ மூஞ்சில ஒன்னு கூட காட்ட மாட்டேங்குறல” என்று விக்ரம் அவளை திட்டி தீர்த்தான் மனதில்.
அனைவரும் ஹோட்டல் வந்து சேர்ந்து பெரியவர்கள் அனைவரும் உள்ளே சென்று அமர்ந்து இருக்கவும், சனந்தா அவளுடைய பேக்கை வாங்கிக் கொண்டு, “நீங்க உள்ள போங்க நான் சூர்யா கிட்ட ஃபைல் கொடுத்துட்டு வரேன்” என்று சனந்தா கூறி இறங்கவும்,
விக்ரம் விகாஷை பார்த்து, “இல்ல நம்மளும் இருந்து அவளை கூட்டிட்டு போலாம்” என்று மெல்லிய குரலில் கூறி இறங்கினர். விகாஷ் விக்ரமின் செய்கையை நினைத்து சிரித்துக் கொண்டான். சனந்தா செல்லவும் அவளுக்கு பின்னால் பாடிகார்ட் போல விக்ரம் மற்றும் விகாஷ் வந்து நின்றுக் கொண்டனர்.
சனந்தா அவளது பையில் இருந்து எடுத்து ஃபைலை நீட்டவும், “ரொம்ப தேங்க்ஸ் சனா…. இங்க இல்லனா திருப்பி நான் ஒன்னு வீட்டுக்கு வந்து தான் வாங்கி இருக்கணும்ல…. இல்ல நாளைக்கு தான் வாங்கி இருக்கணும்… உன்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன் சாரி சனா” என்று சூர்யா கூறவும், சனந்தா புன்னகையுடன், “அதுல என்ன இருக்கு பரவால்ல நீங்களும் வாங்க சாப்பிடலாம்” என்று மரியாதை நிமித்தமாக சனந்தா அழைத்தாள்.
“ஆமா ரொம்ப முக்கியம் இவனுக்கு சாப்பாடு” என்று விக்ரம் மனதில் நினைத்துக் கொண்டான். “இல்ல சனா நான் இப்ப தான் வெளியில போயிட்டு வரேன்… வேணா நம்ம ரெண்டு பேரும் இன்னொரு நாள் லஞ்ச் சாப்பிட போலாம்” என்று சூர்யா கூறவும் விக்ரமுக்கு எங்கும் இல்லாத கோபம் வந்த விட விக்ரம் விகாஷின் கையை கிள்ளி விடவும், “அய்யோ இவங்க ரெண்டு பேர் நடுவுல என்னை சாவடிக்கிறாங்களே” என்று விகாஷ் மனதில் நினைத்துக் கொண்டு, “சூர்யா பரவால்ல வாங்க சாப்பிடலாம்” என்று விகாஷ் அழைக்கவும் விக்ரம் விகாஷை முறைத்தான்.
“பரவாயில்லை நீங்க ஏதோ ஃபேமிலியா இருக்கீங்க போல” என்று சூர்யா விக்ரமை பார்க்கவும், “இவரை அறிமுகப்படுத்த மறந்துட்டேன்ல… இவர் பெயர் விக்ரம்… ஃபாரஸ்ட் ரேஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர்… என்னோட அத்தான்” என்று அறிமுகப்படுத்தவும், சனந்தா சட்டென்று விகாஷை பார்க்க விகாஷோ என்ன என்பது போல் தோளை குளிக்கினான்.
விக்ரமுக்கு அப்போது தான் ஹப்பாடா என்று இருந்தது. விக்ரம் கையை நீட்டி சூர்யாவிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ள சூர்யாவும் விக்ரமிடம் அறிமுகம் செய்து கொண்டான். சூர்யாவின் முகம் வாடியதை கண்ட விக்ரமுக்கு மிகவும் சந்தோஷமாகி போனது. பின் வேலை இருப்பதாக கூறிவிட்டு சூர்யா சென்ற பின் அனைவரும் உள்ளே சென்றனர்.
சிறிது நேரத்தில் கௌதம் மற்றும் கவிதாவும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள அனைவரும் சந்தோஷமாக பேசி உணவருந்தி விட்டு அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
என்ன தான் சனந்தா மற்றவர்கள் பேசுவதில் கவனம் கொண்டாலும் அவளது மனது முழுக்க விக்ரம் என்ன செய்கிறான் அவன் சாப்பிட்டானா அவன் வருத்தப்படுகிறானோ என்ன ஏது என்று அவனைப் பற்றிய நினைப்பு தான் முழுதாக இருந்தது. அதுவும் போக அவனின் முகத்தை பார்த்ததும், சரியாக சவரம் செய்யாத முகம், வாடிப் போன கண்களும் அவளை மிகவும் கஷ்டத்துக்கு உள்ளாகியது.
எப்பொழுதும் சுத்தமாக சவரம் செய்து கொண்டு திரியும் அவன் இப்பொழுது இப்படி கலை இழந்து காணப்பட்டது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேலும் அவனது கண்கள் அவனுடைய சோர்வையும் வலியையும் தான் அதிகமாக காட்டியது. அதிலும் சனந்தாவுக்கு மிகவும் பிடித்த அவன் கண்களின் ஓரமாக இருக்கும் மச்சம் அவனுடைய கருவளையத்தினால் லேசாக மறையப்பட்டிருந்தது. அதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இவை அனைத்தும் அவளது பால்கனியில் அமர்ந்து அங்கு நடந்த அனைத்தையும் யோசித்து கொண்டு இருந்தாள் முக்கியமாக வள்ளி கூறியதை. வழக்கம் போல அவனிடமிருந்து குறுஞ்செய்தியும் வந்துவிட அதை படித்து விட்டு உறங்கிப் போனாள் சனந்தா.
“எவ்வளவு நாள் கழிச்சு உன்ன பார்க்குறேன் பூனைக்குட்டி…. நீ ஏன்டா இப்படி டல்லா இருக்க… எனக்கு உன்ன பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு…. நீ எப்பவும் போல சிரிச்சிட்டே இரு பூனை குட்டி…. எனக்கு உன்ன முதல்ல பார்த்ததும் உன்னை அப்படியே தூக்கி கொஞ்சனும்னு ஆசையா இருந்துது டா… இதுக்கெல்லாம் நீ என்கிட்ட பேசுடா…. நீ என்னை பார்த்ததே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துது…. நம்ம அடுத்த வாட்டி மீட் பண்ணும் போது கண்டிப்பா என்கிட்ட பேசு சனந்தா நான் காத்துட்டு இருக்கேன்” என்று விக்ரம் குறுஞ்செய்தியை அனுப்பினான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
“ப்ச்… அதெல்லாம் இல்ல… என்கிட்ட ரீசர்ச் ஃபைல் இருக்கு அது சூர்யாக்கு வேணும்…. அவர் வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னாரு… எங்க இருக்கியோ அங்கயே வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னாரு… அப்படி இல்லன்னா நானாவது கொண்டு போய் கொடுத்துட்டு வருவேன் அதுக்கு தான் கேட்டேன் அதுக்குள்ள முறைக்காதீங்க” என்று சனந்தா கூறினாள்.
“அடுத்து எல்லாரும் சாப்பிட வெளியே போறோம் அங்க வேணா சூர்யாவ வர சொல்லு அவ்வளவு தானே” என்று லக்ஷ்மி கூறவும் சரி என்று சூர்யாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் சனந்தா.
கௌதம் வந்து சனந்தாவின் காதை கடிக்க என்ன வேணும் உனக்கு?? என்று சனந்தா கேட்கவும், “என் கூட பைக்ல கவிதாவ கூட்டிட்டு வரேன்… எப்படியாவது ப்ளீஸ் அம்மா கிட்ட கேளு” என்று கௌதம் கேட்கவும், “உன்னோட வேலையில நீ குறியா இருப்பல” என்று கௌதமை திட்டி, லக்ஷ்மிடம் கூறவும், “நான் கேட்டு பார்க்கிறேன்” என்று லக்ஷ்மி கூறினார்.
அதை மெதுவாக வந்து வள்ளியிடம் கேட்க, வள்ளி, முத்து மற்றும் ஸ்ரீனிவாசனிடம் கேட்டு அனுமதி வாங்கி கொடுத்தார். “சரி நான் கவிதாவ கூட்டிட்டு நான் முன்னாடி போறேன் நீங்க எங்க லொகேஷன்னு பார்த்துட்டு எனக்கு அனுப்புங்க” என்று கூறி கௌதம் கவிதாவை அழைத்துக் கொண்டு சென்றான்.
“இங்க இருந்து கொஞ்சம் தூரம் தான் நம்ம ஹோட்டல்… நாம எல்லாரும் போய் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் கிளம்பலாம்” என்று சந்திரசேகர் கூறவும், சரி என்று அமோத்தித்னர்.
“அப்பா நானும் சனாவும் சனாவோட வண்டில வந்திடுறோம்” என்று விகாஷ் கூறவும், “இல்லடா நம்ம பெரிய வண்டி தான் கொண்டு வந்தோம்… அதுல நாங்க எல்லாரும் போறோம்… நீ சனாவோட கார கொண்டு வந்த இல்ல அதுல நீ சனா விக்ரம் எல்லாம் வந்துருங்க” என்று லட்சுமி கூறவும், சனந்தாவுக்கு அவளுடைய தாய் என்ன திட்டம் தீட்டுகிறாள் என்பது புரிய திரும்பி லக்ஷ்மியை பார்க்கவும், “நீ கார் ஓட்டிட்டு வந்துரு விகாஷ் உனக்கு இடம் கரெக்டா சொல்லிடுவான்” என்று கூறினார் லக்ஷ்மி.
“அப்போ வண்டி இங்கேயே இருக்கட்டுமா??” என்று தயக்கத்துடன் ஸ்ரீனிவாசன் கேட்க, “இந்த பார்க்கிங்ல இருக்கட்டும்…. யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க அதுவும் இல்லாம திருப்பி எப்படியும் இந்த வழியா தான் நம்ம போய் ஆகணும் அதனால எல்லாரும் ஒன்னாவே போலாம்” என்று பிரகாஷ் கூறினார்.
சந்திரசேகர் கார் ஓட்ட அதில், ஸ்ரீனிவாசன், பிரகாஷ், முத்து, வள்ளி மற்றும் லக்ஷ்மி அமர்ந்து கொண்டனர். அது ஏழு சீட்டர் கொண்ட பெரிய இனோவா என்பதால் அனைவரும் சென்று விட்டனர். “விக்கி சாவி கொடு” என்று சனா கேட்கவும், “நான் வேணா ஓட்டவா சனா” என்று விகாஷ் கேட்க, “இல்ல பரவால்ல கொடு” என்று சனா காரின் சாவியை வாங்கிக் கொண்டாள்.
விக்ரம் மெதுவாக விகாஷை அழைத்து, “நீயும் அந்த வண்டில போக வேண்டியது தானே” என்று கேட்க, “நான் போய் இருப்பான்… ஆனா அதுக்கப்புறம் உங்கள நடு ரோட்டுல விட்டுட்டு வந்துட்டா என்ன பண்றது… அதான் அம்மா இவ்வளவு பிளான் பண்ணவங்க இத யோசிக்காமலா இருப்பாங்க…. அதனால தான் முதல்ல என் கூட வாங்க அதுக்கப்புறம் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் அப்ப தனியா பேசுங்க” என்று விகாஷ் கூறவும், அதுவும் சரி என்று தான் தோன்றியது விக்ரமுக்கு.
சனந்தா கார் ஓட்ட அருகில் விக்ரமை அமர வைத்து விட்டு விகாஷ் பின் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ளவும் சனந்தா கண்ணாடி வாயிலாக அவனை முறைத்து விட்டு காரை ஆன் செய்தால்.
கார் ஓட்ட ஆரம்பிக்கவும் இன்னும் கீன் கீன் என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருக்க, சனந்தா கண்ணாடி வாயிலாக விகாஷை பார்க்கவும், அதை புரிந்துக் கொண்டு, “அத்தான் பெல்ட் போடுங்க நீங்க பெல்ட் போடலனா கூட இந்த கார் சத்தம் போட்டுட்டே இருக்கும்” என்று விகாஷ் கூறினான். அதன்படி விக்ரமும் சீட் பெல்ட் அணிவித்துக் கொண்டு சனந்தாவையே பார்க்க, அவனது பார்வை தீண்டுவதை சனந்தா உணராமல் இல்லை.
சனந்தா அதை உணர்ந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் வண்டியை ஓட்டுவதிலே கவனமாக இருந்தாள். சனந்தாவின் கைபேசி அழைக்க, “விக்கி யாருன்னு பாரு” என்று சனந்தா கூறவும், உன்னோட ஃபோன் ப்ளூடூத்ல கனெக்ட் ஆகிடுச்சு அப்படியே அடென்ட் பண்ணி பேசு” என்று விகாஷ் கூறவும், கௌதமிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. என்னடா என்று சனந்தா கேட்க, ஒன்னும் இல்ல ஹோட்டல் லொகேஷன் மட்டும் எனக்கு அனுப்பு என்று கௌதம் கேட்கவும், “சரி ஓகே நேரத்துக்கு வந்து சேரு” என்று கூறி சனந்தா ஃபோனை கட் செய்தாள்.
“விக்கி, கௌதமுக்கு ஹோட்டல் லொகேஷன் அனுப்பிடு… அவன் ஒரு பிராஞ்ச் சொன்னா இன்னொரு பிராஞ்சுக்கு போய் நிக்க போறான்… அதனால தான் லொக்கேஷன் அனுப்ப சொல்லுறான் டா” என்று சனந்தா கூறினாள்.
பயணம் முழுவதும் சனந்தாவின் கவனம் ரோட்டிலேயே இருப்பதாக அனைவரும் உணர்ந்தனர். ஆனால் சனந்தாவின் மனதில் அவ்வளவு படபடப்பு இருந்தது. விக்ரமை சந்தித்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி…. ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தமும் கோபமும் இருந்தது…. எல்லாம் போக அவனுடைய பார்வை தீண்டலும் அவளை துளைத்து எடுத்துக் கொண்டு தான் இருந்தது.
விகாஷ் தான் ஏதோ பேச்சு கொடுக்க வேண்டும் என்பதற்காக விக்ரமிடம் பேசிக் கொண்டே வந்தான். விக்ரமும் இது தான் சாக்கு என்று சனந்தாவுக்கு எதிராக நன்றாக அவளை பார்க்கும் படி திரும்பி அமர்ந்து அவளை ரசித்துக் கொண்டும் இருந்தான்.
“எவ்ளோ மாசம் ஆச்சு… கள்ளி.. பூனைக்குட்டி.. எத்தனை மாசம் என்னை தவிக்க விட்டுட்ட… உன்ன பார்க்க கூட விடாம இவ்வளவு கஷ்டப்படுத்திட்டல…. எல்லாம் சரியாகி வா உன்னை என்ன பண்றேன் பாரு” என்று விக்ரம் மனத்திற்குள் அவளை திட்டிக் கொண்டான்.
ஹோட்டலை நெருங்கவும் சூர்யாவிடம் இருந்து ஃபோன் வந்தது அதை ஆன் செய்து, சொல்லுங்க சூர்யா என்று சனந்தா பேசவும், இவ்வளவு நேரம் சந்தோஷமாக இருந்த விக்ரமின் முகம் மாறியது.
“நான் அந்த ஹோட்டல் கிட்ட வந்துட்டேன்” என்று சூர்யா கூறவும், “நானும் வந்துட்டே இருக்கேன்… ஒரு டூ மினிட்ஸ்ல ரீச் ஆயிடுவேன்” என்று சனந்தா கூறினாள். “சரி ஓகே நான் வெயிட் பண்றேன் சனா… வெளியவே இருக்கேன்” என்று கூறி சூர்யா ஃபோனை வைத்தான்.
அவ்வளவு நேரம் உற்சாகமாக இருந்த விக்ரமின் முகம் மாறிவிட்டதை சனந்தா ஓர கண்ணால் பார்த்து ஏனோ அவள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள், ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
“இவளை விட சின்ன பையன் கார்த்திக் அவன் வந்து பேசினாலே நான் மூஞ்ச தூக்கி வெச்சிப்பேன்…. இப்போ இவ கூட சேர்ந்து படிக்கிற பையன் கிட்ட பேசுறா அப்ப எனக்கு எவ்வளவு கடுப்பா இருக்கும்னு அவளுக்கு தெரிஞ்சும் அவ மூஞ்சில ஒன்னு கூட காட்ட மாட்டேங்குறல” என்று விக்ரம் அவளை திட்டி தீர்த்தான் மனதில்.
அனைவரும் ஹோட்டல் வந்து சேர்ந்து பெரியவர்கள் அனைவரும் உள்ளே சென்று அமர்ந்து இருக்கவும், சனந்தா அவளுடைய பேக்கை வாங்கிக் கொண்டு, “நீங்க உள்ள போங்க நான் சூர்யா கிட்ட ஃபைல் கொடுத்துட்டு வரேன்” என்று சனந்தா கூறி இறங்கவும்,
விக்ரம் விகாஷை பார்த்து, “இல்ல நம்மளும் இருந்து அவளை கூட்டிட்டு போலாம்” என்று மெல்லிய குரலில் கூறி இறங்கினர். விகாஷ் விக்ரமின் செய்கையை நினைத்து சிரித்துக் கொண்டான். சனந்தா செல்லவும் அவளுக்கு பின்னால் பாடிகார்ட் போல விக்ரம் மற்றும் விகாஷ் வந்து நின்றுக் கொண்டனர்.
சனந்தா அவளது பையில் இருந்து எடுத்து ஃபைலை நீட்டவும், “ரொம்ப தேங்க்ஸ் சனா…. இங்க இல்லனா திருப்பி நான் ஒன்னு வீட்டுக்கு வந்து தான் வாங்கி இருக்கணும்ல…. இல்ல நாளைக்கு தான் வாங்கி இருக்கணும்… உன்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன் சாரி சனா” என்று சூர்யா கூறவும், சனந்தா புன்னகையுடன், “அதுல என்ன இருக்கு பரவால்ல நீங்களும் வாங்க சாப்பிடலாம்” என்று மரியாதை நிமித்தமாக சனந்தா அழைத்தாள்.
“ஆமா ரொம்ப முக்கியம் இவனுக்கு சாப்பாடு” என்று விக்ரம் மனதில் நினைத்துக் கொண்டான். “இல்ல சனா நான் இப்ப தான் வெளியில போயிட்டு வரேன்… வேணா நம்ம ரெண்டு பேரும் இன்னொரு நாள் லஞ்ச் சாப்பிட போலாம்” என்று சூர்யா கூறவும் விக்ரமுக்கு எங்கும் இல்லாத கோபம் வந்த விட விக்ரம் விகாஷின் கையை கிள்ளி விடவும், “அய்யோ இவங்க ரெண்டு பேர் நடுவுல என்னை சாவடிக்கிறாங்களே” என்று விகாஷ் மனதில் நினைத்துக் கொண்டு, “சூர்யா பரவால்ல வாங்க சாப்பிடலாம்” என்று விகாஷ் அழைக்கவும் விக்ரம் விகாஷை முறைத்தான்.
“பரவாயில்லை நீங்க ஏதோ ஃபேமிலியா இருக்கீங்க போல” என்று சூர்யா விக்ரமை பார்க்கவும், “இவரை அறிமுகப்படுத்த மறந்துட்டேன்ல… இவர் பெயர் விக்ரம்… ஃபாரஸ்ட் ரேஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர்… என்னோட அத்தான்” என்று அறிமுகப்படுத்தவும், சனந்தா சட்டென்று விகாஷை பார்க்க விகாஷோ என்ன என்பது போல் தோளை குளிக்கினான்.
விக்ரமுக்கு அப்போது தான் ஹப்பாடா என்று இருந்தது. விக்ரம் கையை நீட்டி சூர்யாவிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ள சூர்யாவும் விக்ரமிடம் அறிமுகம் செய்து கொண்டான். சூர்யாவின் முகம் வாடியதை கண்ட விக்ரமுக்கு மிகவும் சந்தோஷமாகி போனது. பின் வேலை இருப்பதாக கூறிவிட்டு சூர்யா சென்ற பின் அனைவரும் உள்ளே சென்றனர்.
சிறிது நேரத்தில் கௌதம் மற்றும் கவிதாவும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள அனைவரும் சந்தோஷமாக பேசி உணவருந்தி விட்டு அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
என்ன தான் சனந்தா மற்றவர்கள் பேசுவதில் கவனம் கொண்டாலும் அவளது மனது முழுக்க விக்ரம் என்ன செய்கிறான் அவன் சாப்பிட்டானா அவன் வருத்தப்படுகிறானோ என்ன ஏது என்று அவனைப் பற்றிய நினைப்பு தான் முழுதாக இருந்தது. அதுவும் போக அவனின் முகத்தை பார்த்ததும், சரியாக சவரம் செய்யாத முகம், வாடிப் போன கண்களும் அவளை மிகவும் கஷ்டத்துக்கு உள்ளாகியது.
எப்பொழுதும் சுத்தமாக சவரம் செய்து கொண்டு திரியும் அவன் இப்பொழுது இப்படி கலை இழந்து காணப்பட்டது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேலும் அவனது கண்கள் அவனுடைய சோர்வையும் வலியையும் தான் அதிகமாக காட்டியது. அதிலும் சனந்தாவுக்கு மிகவும் பிடித்த அவன் கண்களின் ஓரமாக இருக்கும் மச்சம் அவனுடைய கருவளையத்தினால் லேசாக மறையப்பட்டிருந்தது. அதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இவை அனைத்தும் அவளது பால்கனியில் அமர்ந்து அங்கு நடந்த அனைத்தையும் யோசித்து கொண்டு இருந்தாள் முக்கியமாக வள்ளி கூறியதை. வழக்கம் போல அவனிடமிருந்து குறுஞ்செய்தியும் வந்துவிட அதை படித்து விட்டு உறங்கிப் போனாள் சனந்தா.
“எவ்வளவு நாள் கழிச்சு உன்ன பார்க்குறேன் பூனைக்குட்டி…. நீ ஏன்டா இப்படி டல்லா இருக்க… எனக்கு உன்ன பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு…. நீ எப்பவும் போல சிரிச்சிட்டே இரு பூனை குட்டி…. எனக்கு உன்ன முதல்ல பார்த்ததும் உன்னை அப்படியே தூக்கி கொஞ்சனும்னு ஆசையா இருந்துது டா… இதுக்கெல்லாம் நீ என்கிட்ட பேசுடா…. நீ என்னை பார்த்ததே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துது…. நம்ம அடுத்த வாட்டி மீட் பண்ணும் போது கண்டிப்பா என்கிட்ட பேசு சனந்தா நான் காத்துட்டு இருக்கேன்” என்று விக்ரம் குறுஞ்செய்தியை அனுப்பினான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 108
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 108
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.