அனைவரும் அவரவர்களின் வேலையில் மூழ்கி இருக்கவும் நாட்கள் அதன் பாட்டுக்கு ஓடி சென்றது. சனந்தாவிற்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் தினமும் ஒரு முறையாவது கோயிலுக்கு சென்று வருவது அல்லது அவள் செல்ல முடியாத நாட்களில் கூட சிறிது நேரம் வண்டியை வெளியே நிறுத்திவிட்டு அங்கேயே வெளியே வண்டியின் மீது அமர்ந்து விட்டு அதன் பிறகு அவளது வேலையை காண செல்வாள்.
“சனா சீக்கிரமா வர பாரு சரியா” என்று லக்ஷ்மி கூறவும், “சரி மா வேலை முடிஞ்ச உடனே வரேன் போதுமா” என்று சனந்தா கூறினாள்.
“இப்படித் தான் சனா சொல்ற… ஆனா, கடைசி நிமிஷத்துல வர மாட்டேங்குற நீ” என்று லக்ஷ்மி ஆதங்கத்துடன் கூற, “அம்மா நான் வேணும்னு பண்றது இல்லம்மா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…. இன்னிக்கு எங்க சீனியர் கூட இன்ஸ்பெக்ஷன் போக வேண்டியது, நான் அதை விட்டுட்டு என் காலேஜ் வேலைய மட்டும் பார்த்துட்டு நான் வரேன்னு ஒத்துக்கிட்டேன்ல” என்று சனந்தாவும் அவள் பக்கம் நியாயத்தை கூறவும், பேச்சை மாற்றும் விதமாக, “நீ டூவீலர்ல போறியா எப்படி?” என்று சந்திரசேகர் கேட்கவும், ம்ம் ஆமாம் பா என்று கூறினாள் சனந்தா.
லக்ஷ்மி, சந்திரசேகர் மற்றும் பிரகாஷ் கோயிலில் சென்று காத்திருக்கவும் சிறிது நேரத்தில் வள்ளி, ஸ்ரீனிவாசன், முத்து, கவிதா மற்றும் விக்ரம் வந்தனர். விக்ரமுக்கு முதலில் அந்த கோயிலுக்குள் நுழையவும் சனந்தாவுடன் அவன் வந்து போனது நினைவுக்கு வந்தது. அன்று எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் என்று நினைக்கவே அவனுடைய மனது பாரமாகியது.
அனைவரும் வந்து சேரவும் பரஸ்பர நலம் விசாரிப்பு நடந்து முடிந்தது. “ம்ம்… மாப்பிள்ளைய காணோம்னு பார்க்குறீங்களா…. இன்னும் கொஞ்ச நேரத்துல கௌதம் வந்துருவான்” என்று பிரகாஷ் கூறவும், “இதோ வந்துட்டேன் பா” என்று கௌதம் வந்து சேர்ந்தான்.
முதலில் கௌதம் கவிதாவை பார்த்து புன்னகைத்து ஹாய் என்று கூறவும் கவிதா வெட்க்கத்துடன் குனிந்து கொண்டாள். பின்பு அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கவும், “எப்படி ஐயர வர சொல்லி பேச ஆரம்பிச்சிடலாமா??” என்று சந்திரசேகர் கேட்க, கவிதா வள்ளியின் கையை பிடிக்கவும் வள்ளி கவிதாவை அர்த்தமாக பார்த்து, “நான் சொல்றேன் இரு டா” என்றார்.
“அது ஒன்னும் இல்ல அண்ணா… கவிதாவுக்கு சனாவும் வரணும்னு ஆசைபடுறா அது தான்” என்று வள்ளி தயக்கத்துடன் கூற, “அவளும் வந்துடுவா இப்போ” என்று லக்ஷ்மி கூறினார்.
“கௌதம் சனாவுக்கு ஃபோன் பண்ணு” என்று பிரகாஷ் கூறவும், “நான் கிளம்பும் போதே பண்ணிட்டேன் பா அவளும் காலேஜ்ல இருந்து கிளம்பிட்டேன் அப்படின்னு சொன்னா… இங்க அரை மணி நேரம் தான் இப்போ வந்துருவா” என்று கௌதம் கூற, “ம்ம்… சரி விகாஷ் எங்க??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “ஒரு சின்ன வேலை இருந்துது ஹோட்டல்ல அதை முடிச்சிட்டு அவனும் வர நேரம் தான்” என்று சந்திரசேகர் கூறினார்.
“அப்ப பிள்ளைங்க எல்லாரும் வந்திடட்டும் அதுக்கப்புறம் ஆரம்பிக்கலாம் நமக்கு இன்னும் நேரம் இருக்கு தானே” என்று முத்து கேட்கவும், “ஆமா முத்து நேரம் இருக்கு தான் இருந்தாலும்….” என்று பிரகாஷ் தயக்கத்துடன் இருக்க, “என்ன சம்மந்தி இருந்தாலும்ன்றீங்க… நம்ம பிள்ளைங்க எல்லாம் ஒன்னா கூடி இருக்கிறது தான் நமக்கு சந்தோஷமே அதனால எல்லாருமே வரட்டும்” என்று முத்து கூறவும், சரி என்று அனைவரும் சிறிது நேரம் பொதுப் படையாக பேசிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் விகாஷும் வந்து சேர்ந்தான். “சனாவுக்கு ஃபோன் பண்ணு” என்று லக்ஷ்மி சைகையில் கூறவும், “அம்மா அவ டிரைவிங்ல இருந்தா ஃபோன் எடுக்க மாட்டா…. நான் ஏற்கனவே பண்ணிட்டேன் அவளுக்கு அவ எடுக்கல… வந்துட்டு இருப்பா” என்று விகாஷ் கூறினான்.
சனந்தா அவளது இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு, அவள் எப்பொழுதும் வண்டியில் செல்லும் போது முகம் முழுவதும் மூடிக் கொண்டு வெறும் கண்கள் மட்டுமே தெரியும் படி துப்பட்டாவை போட்டு செல்வாள்.
அதே போல் இன்றும் முகத்தில் துப்பட்டாவுடன் அவளுடைய பேக்கை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு அடி எடுத்து வைக்கவும், உள்ளே விக்ரம் இருக்கிறான் அவனை சந்திக்க வேண்டும் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும்…. மறுபக்கம் அவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்… இவ்வளவு மாதங்கள் அவனை எங்கேயும் சந்திக்கவே இல்லை இப்பொழுது அவனை எப்படி பார்ப்பேன் அதை நான் எப்படி எதிர்க் கொள்வேன் என்று பல குழப்பத்துடன் மெதுவாக அடி மீது அடி வைத்துக் கொண்டு செல்லவும், அவளை முதலில் கண்டது விக்ரம் தான்.
எத்தனை மாதங்கள் ஆயிற்று அவளை பார்த்து, அவளது குரலைக் கேட்டு… அவனுக்கு அப்படியே அவளை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. சனந்தாவும் பல யோசனைகளுடன் மெதுவாக நடந்து, அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தலையை நிமிர்ந்து பார்க்கவும் எதிரில் விக்ரம் தான் நின்று கொண்டிருந்தான்.
பல மாதங்களுக்குப் பிறகு இருவரின் பார்வையும் தீண்டிக் கொண்டன. அப்பார்வையில் சனந்தா முதலில் கண்கலங்கவும், கண்ணீரை அடக்கிக் கொள்ள அவள் கண்களை சிமிட்டி பெரும் பாடுபட்டாள். பின் அவளை சமாதானப்படுத்திக் கொண்டு விக்ரமை கண்டு கொள்ளாமல் அனைவரிடமும் நலம் விசாரித்தாள்.
வள்ளி எழுந்து சனந்தாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டார். பின் ஸ்ரீனிவாசனும் சனந்தாவின் தலையில் கையை வைத்து, எப்படி இருக்க சனா?? என்று கேட்க, “நான் நல்லா இருக்கேன் அங்கிள்” என்று மட்டும் கூறினாள் சனநதா.
பின்பு கவிதாவும் வந்து அணைத்து கொண்டு, “உங்கள நானும் ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று கவிதா கூறவும் சனந்தாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. சனந்தா கவிதாவிடம், “ரொம்ப சாரி என்னால தான் உங்களோட கல்யாணம் டிலே ஆயிருச்சு” என்று கூற, “அதெல்லாம் ஒன்னும் இல்ல உங்களுக்காக தான் வெயிட்டிங் வாங்க” என்று கவிதா கூறினாள்.
இவ்வளவு நேரம் அங்கு நடந்த அனைத்தையும் விக்ரம் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் தவறியும் விக்ரம் திசையை திரும்பி கூட பார்க்கவே இல்லை. அந்த ஏக்கம் விக்ரம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
அதை பார்த்த விகாஷ், சனந்தாவிடம் சென்று அவளை தலையில் தட்டி, “மூஞ்சில இருக்க துணியை கழட்டு சனா அப்படியே வந்துட்ட” என்று விகாஷ் கூறவும், அப்பொழுது தான் இன்னும் துணியை கழட்டாமல் ஏதோ யோசனையிலேயே நடந்து வந்து விட்டோம் என்பதை உணர்ந்து மெதுவாக அவள் முகத்தில் துணியை கழட்டினாள் சனந்தா.
அவளை முழுதாக பார்க்க விக்ரம் சற்று நோந்து தான் போனான். எவ்வளவு அழகாகவும் உற்சாகத்துடன் இருக்கும் முகம் இவ்வளவு வாட்டமாக காணப்பட்டது அவனுக்கு பெரும் வலியை கொடுத்தது. அதற்கான காரணமும் அவன் தான் என்று நினைக்கும் போது அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் போனது.
வள்ளி சனந்தாவின் கையை பிடித்துக் கொண்டு, “என் பக்கத்துல உக்காந்துக்கோ” என்று கூறவும், சனந்தா தட்ட முடியாமல் சரி என்று அமைதியாக அமர்ந்து கொண்டாள். ஐயரும் வந்து விட திருமணத்திற்கான நாட்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். விக்ரமுக்கு அங்க என்ன பேசுகிறார்கள் என்ன நடக்கிறது என்பது எதுவும் அவனது மனதில் நிற்கவில்லை அவன் கண் முன் தெரிந்தது சனந்தா மட்டுமே. அதுவும் அவளது வாடிப் போன முகமும் நெற்றியில் ஏற்பட்டிருந்த காயம் தான்.
“அடிபட்டுது இப்ப சரியாயிடுச்சா??” என்று வள்ளி கேட்க, லேசான புன்னகையுடன் பரவால்ல அன்ட்டி என்று கூறினாள் சனந்தா. “ஆனா, எங்கள எல்லாம் மறந்துட்ட இல்ல சனா” என்று வள்ளி அடங்கத்துடன் கேட்க, சனந்தா லேசாக புன்னகையும் கண்களில் கண்ணீருடனும், “என் வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன் அங்க இருந்த நாட்கள… அப்புறம் எப்படி ஆன்ட்டி உங்கள மறப்பேன் நானு” என்று சனந்தா கூறியதும், பின் நின்று கொண்டிருந்த விக்ரமுக்கு அது நன்றாகவே கேட்டது.
“உன்னைத் தேடாத நாளே இல்ல சனா… உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்னு எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துது” என்ற வள்ளி கூறவும், சனந்தா வள்ளியின் கையை இறுக்கிப் பிடித்து, “அப்படி எல்லாம் இல்ல ஆன்ட்டி நீங்க என்னை உண்மையிலே ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டீங்க…. நானும் நம்ம கிராமத்தை ரொம்ப மிஸ் பண்றேன்…. எல்லாரையுமே ரொம்ப மிஸ் பண்றேன்” என்று சனந்தா மனம் திறந்து பேசினாள்.
“அப்புறம் ஏன் சனா ஒரு நாள் கூட எங்க கிட்ட பேசவே இல்ல… ஒரு வாட்டி கூட ஊருக்கு வரவே இல்லை” என்று வள்ளி ஆதங்கத்துடன் கேட்க, “வரக்கூடாதுன்னு இல்ல பேசக்கூடாதுன்னு இல்ல ஆன்ட்டி… வேலையும் ஒரு காரணம் தான் அது போக சந்தர்ப்ப சூழ்நிலையும் சரியா அமையல அதான் வேற எதுவும் இல்லை” என்று சனந்தா கூறினாள்.
“சந்தர்ப்ப சூழ்நிலை தானா சரி ஆகலன்னா நம்ம தான் சரி பண்ணனும் சரியா” என்று வள்ளி கூறவும், சனந்தா தலையை மட்டும் அசைத்தாள்.
“இப்ப இங்க கௌதமுக்கும் கவிதாவுக்கும் நடக்கிற மாதிரியே உனக்கும் விக்ரம்கும் நடக்கும்னு ஆசைப்பட்டேன்….. என்னடா இந்த நேரத்துல நான் இத பேசுறேன்னு நீ தப்பா நினைச்சுக்காத…. எனக்கு இப்ப விட்டா திருப்பி நான் எப்ப உன்ன நேர்ல பார்ப்பேன்னு தெரியல… அதனால சொல்லிட்டேன் இதுக்கு அப்புறம் நீங்க தான் சீக்கிரம் முடிவெடுத்து எங்க கிட்ட சொல்லணும்” என்று வள்ளி கூறினார்.
“எப்படியோ நேரம் கிடைக்கும் போது இதை சொல்லிட்டேன் இல்லன்னா இவகிட்ட இது எப்படி நான் பேச முடியும்” என்று வள்ளி மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
சனந்தா ஏதேனும் பதில் பேசுவாள் என்று விக்ரமும் வள்ளியும் எதிர்பார்க்க சனந்தாவின் கைப்பேசி அழைக்கவும் அதை எடுத்து பார்த்து சூர்யா என்று இருக்க, “ஆன்ட்டி நான் ஃபோன் பேசிட்டு வரேன்” என்று மட்டும் கூறி ஓரமாக சென்று பேசினாள்.
“அப்படியா என் பேக்ல தான் இருக்கு நீங்க இன்னிக்கு காலேஜுக்கு வரவே இல்ல… இல்லன்னா அப்பவே நான் கொடுத்துட்டு இருப்பனே” என்று சனந்தா கூறவும், “நான் நாளைக்கு தான் போகணும் காலேஜுக்கு அதனால எனக்கு இப்ப அந்த ஃபைல் மட்டும் கொடுக்க முடியுமா??” என்று சூர்யா கேட்கவும், “சரி எங்க வரணும்னு சொல்லுங்க நான் கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்று சனந்தா கூறினாள்.
“இல்ல சனா அப்படி வேண்டாம்…. நான் ஒரு மணிக்கு மேல தான் ஃப்ரீ ஆவேன் அந்த டைம்ல நீ எங்க இருப்பன்னு சொல்லு நான் வந்து வாங்கிக்கிறேன்” என்று சூர்யா கூறவும், “சரி நான் இப்ப வெளியே இருக்கேன்… வீட்டுல கேட்டுட்டு நான் உங்களுக்கு சொல்றேன் ஓகேவா” என்று சனந்தா கேட்க, “சரி ஓகே சனா” என்று சூர்யா கூறி ஃபோனை வைத்தான்.
சனந்தா பி.ஹெச்.டியை அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள். பின் யோசித்து, அவள் வேலையில் மூழ்கினால் மட்டுமே வேற சிந்தனை இருக்காது என்று தோன்றியது. அப்படி காலேஜில் அவளுக்கு கிடைத்த நட்பு தான் சூர்யா.
அவளுடைய வயதிற்கு ஏற்ப அங்கே சூர்யா மட்டுமே இருந்தான். அவளும் அவனுடன் நட்பாகவே பழகுவாள். ஆனால், அவனுக்கோ சனந்தாவை பிடித்திருந்தது. அதை அவன் பலமுறை சொல்ல முயற்சி செய்தும் அவள் எதுக்கும் பிடி கொடுக்காமல் இருக்க அவன் தோற்று தான் போனான். மேலும் இருவருக்கும் அட்வைசர் முரளி தான் என்பதால் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து ரீசர்ச் சென்டருக்கு செல்வது ப்ராக்டிஸ் பண்ணுவது என இருவர் நட்பும் வலுவானது.
சூர்யாவை சனந்தா வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு நாள் அறிமுகம் செய்தும் வைத்தாள். அதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் சூர்யாவை நன்றாகவே தெரியும். இது விக்ரமும் அறிந்த ஒன்றே அவளது கைபேசியில் சூர்யா என்ற பெயரை பார்த்ததும் விக்ரமின் முகம் மாறிவிட்டது.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
“சனா சீக்கிரமா வர பாரு சரியா” என்று லக்ஷ்மி கூறவும், “சரி மா வேலை முடிஞ்ச உடனே வரேன் போதுமா” என்று சனந்தா கூறினாள்.
“இப்படித் தான் சனா சொல்ற… ஆனா, கடைசி நிமிஷத்துல வர மாட்டேங்குற நீ” என்று லக்ஷ்மி ஆதங்கத்துடன் கூற, “அம்மா நான் வேணும்னு பண்றது இல்லம்மா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…. இன்னிக்கு எங்க சீனியர் கூட இன்ஸ்பெக்ஷன் போக வேண்டியது, நான் அதை விட்டுட்டு என் காலேஜ் வேலைய மட்டும் பார்த்துட்டு நான் வரேன்னு ஒத்துக்கிட்டேன்ல” என்று சனந்தாவும் அவள் பக்கம் நியாயத்தை கூறவும், பேச்சை மாற்றும் விதமாக, “நீ டூவீலர்ல போறியா எப்படி?” என்று சந்திரசேகர் கேட்கவும், ம்ம் ஆமாம் பா என்று கூறினாள் சனந்தா.
லக்ஷ்மி, சந்திரசேகர் மற்றும் பிரகாஷ் கோயிலில் சென்று காத்திருக்கவும் சிறிது நேரத்தில் வள்ளி, ஸ்ரீனிவாசன், முத்து, கவிதா மற்றும் விக்ரம் வந்தனர். விக்ரமுக்கு முதலில் அந்த கோயிலுக்குள் நுழையவும் சனந்தாவுடன் அவன் வந்து போனது நினைவுக்கு வந்தது. அன்று எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் என்று நினைக்கவே அவனுடைய மனது பாரமாகியது.
அனைவரும் வந்து சேரவும் பரஸ்பர நலம் விசாரிப்பு நடந்து முடிந்தது. “ம்ம்… மாப்பிள்ளைய காணோம்னு பார்க்குறீங்களா…. இன்னும் கொஞ்ச நேரத்துல கௌதம் வந்துருவான்” என்று பிரகாஷ் கூறவும், “இதோ வந்துட்டேன் பா” என்று கௌதம் வந்து சேர்ந்தான்.
முதலில் கௌதம் கவிதாவை பார்த்து புன்னகைத்து ஹாய் என்று கூறவும் கவிதா வெட்க்கத்துடன் குனிந்து கொண்டாள். பின்பு அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கவும், “எப்படி ஐயர வர சொல்லி பேச ஆரம்பிச்சிடலாமா??” என்று சந்திரசேகர் கேட்க, கவிதா வள்ளியின் கையை பிடிக்கவும் வள்ளி கவிதாவை அர்த்தமாக பார்த்து, “நான் சொல்றேன் இரு டா” என்றார்.
“அது ஒன்னும் இல்ல அண்ணா… கவிதாவுக்கு சனாவும் வரணும்னு ஆசைபடுறா அது தான்” என்று வள்ளி தயக்கத்துடன் கூற, “அவளும் வந்துடுவா இப்போ” என்று லக்ஷ்மி கூறினார்.
“கௌதம் சனாவுக்கு ஃபோன் பண்ணு” என்று பிரகாஷ் கூறவும், “நான் கிளம்பும் போதே பண்ணிட்டேன் பா அவளும் காலேஜ்ல இருந்து கிளம்பிட்டேன் அப்படின்னு சொன்னா… இங்க அரை மணி நேரம் தான் இப்போ வந்துருவா” என்று கௌதம் கூற, “ம்ம்… சரி விகாஷ் எங்க??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “ஒரு சின்ன வேலை இருந்துது ஹோட்டல்ல அதை முடிச்சிட்டு அவனும் வர நேரம் தான்” என்று சந்திரசேகர் கூறினார்.
“அப்ப பிள்ளைங்க எல்லாரும் வந்திடட்டும் அதுக்கப்புறம் ஆரம்பிக்கலாம் நமக்கு இன்னும் நேரம் இருக்கு தானே” என்று முத்து கேட்கவும், “ஆமா முத்து நேரம் இருக்கு தான் இருந்தாலும்….” என்று பிரகாஷ் தயக்கத்துடன் இருக்க, “என்ன சம்மந்தி இருந்தாலும்ன்றீங்க… நம்ம பிள்ளைங்க எல்லாம் ஒன்னா கூடி இருக்கிறது தான் நமக்கு சந்தோஷமே அதனால எல்லாருமே வரட்டும்” என்று முத்து கூறவும், சரி என்று அனைவரும் சிறிது நேரம் பொதுப் படையாக பேசிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் விகாஷும் வந்து சேர்ந்தான். “சனாவுக்கு ஃபோன் பண்ணு” என்று லக்ஷ்மி சைகையில் கூறவும், “அம்மா அவ டிரைவிங்ல இருந்தா ஃபோன் எடுக்க மாட்டா…. நான் ஏற்கனவே பண்ணிட்டேன் அவளுக்கு அவ எடுக்கல… வந்துட்டு இருப்பா” என்று விகாஷ் கூறினான்.
சனந்தா அவளது இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு, அவள் எப்பொழுதும் வண்டியில் செல்லும் போது முகம் முழுவதும் மூடிக் கொண்டு வெறும் கண்கள் மட்டுமே தெரியும் படி துப்பட்டாவை போட்டு செல்வாள்.
அதே போல் இன்றும் முகத்தில் துப்பட்டாவுடன் அவளுடைய பேக்கை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு அடி எடுத்து வைக்கவும், உள்ளே விக்ரம் இருக்கிறான் அவனை சந்திக்க வேண்டும் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும்…. மறுபக்கம் அவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்… இவ்வளவு மாதங்கள் அவனை எங்கேயும் சந்திக்கவே இல்லை இப்பொழுது அவனை எப்படி பார்ப்பேன் அதை நான் எப்படி எதிர்க் கொள்வேன் என்று பல குழப்பத்துடன் மெதுவாக அடி மீது அடி வைத்துக் கொண்டு செல்லவும், அவளை முதலில் கண்டது விக்ரம் தான்.
எத்தனை மாதங்கள் ஆயிற்று அவளை பார்த்து, அவளது குரலைக் கேட்டு… அவனுக்கு அப்படியே அவளை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. சனந்தாவும் பல யோசனைகளுடன் மெதுவாக நடந்து, அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தலையை நிமிர்ந்து பார்க்கவும் எதிரில் விக்ரம் தான் நின்று கொண்டிருந்தான்.
பல மாதங்களுக்குப் பிறகு இருவரின் பார்வையும் தீண்டிக் கொண்டன. அப்பார்வையில் சனந்தா முதலில் கண்கலங்கவும், கண்ணீரை அடக்கிக் கொள்ள அவள் கண்களை சிமிட்டி பெரும் பாடுபட்டாள். பின் அவளை சமாதானப்படுத்திக் கொண்டு விக்ரமை கண்டு கொள்ளாமல் அனைவரிடமும் நலம் விசாரித்தாள்.
வள்ளி எழுந்து சனந்தாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டார். பின் ஸ்ரீனிவாசனும் சனந்தாவின் தலையில் கையை வைத்து, எப்படி இருக்க சனா?? என்று கேட்க, “நான் நல்லா இருக்கேன் அங்கிள்” என்று மட்டும் கூறினாள் சனநதா.
பின்பு கவிதாவும் வந்து அணைத்து கொண்டு, “உங்கள நானும் ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று கவிதா கூறவும் சனந்தாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. சனந்தா கவிதாவிடம், “ரொம்ப சாரி என்னால தான் உங்களோட கல்யாணம் டிலே ஆயிருச்சு” என்று கூற, “அதெல்லாம் ஒன்னும் இல்ல உங்களுக்காக தான் வெயிட்டிங் வாங்க” என்று கவிதா கூறினாள்.
இவ்வளவு நேரம் அங்கு நடந்த அனைத்தையும் விக்ரம் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் தவறியும் விக்ரம் திசையை திரும்பி கூட பார்க்கவே இல்லை. அந்த ஏக்கம் விக்ரம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
அதை பார்த்த விகாஷ், சனந்தாவிடம் சென்று அவளை தலையில் தட்டி, “மூஞ்சில இருக்க துணியை கழட்டு சனா அப்படியே வந்துட்ட” என்று விகாஷ் கூறவும், அப்பொழுது தான் இன்னும் துணியை கழட்டாமல் ஏதோ யோசனையிலேயே நடந்து வந்து விட்டோம் என்பதை உணர்ந்து மெதுவாக அவள் முகத்தில் துணியை கழட்டினாள் சனந்தா.
அவளை முழுதாக பார்க்க விக்ரம் சற்று நோந்து தான் போனான். எவ்வளவு அழகாகவும் உற்சாகத்துடன் இருக்கும் முகம் இவ்வளவு வாட்டமாக காணப்பட்டது அவனுக்கு பெரும் வலியை கொடுத்தது. அதற்கான காரணமும் அவன் தான் என்று நினைக்கும் போது அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் போனது.
வள்ளி சனந்தாவின் கையை பிடித்துக் கொண்டு, “என் பக்கத்துல உக்காந்துக்கோ” என்று கூறவும், சனந்தா தட்ட முடியாமல் சரி என்று அமைதியாக அமர்ந்து கொண்டாள். ஐயரும் வந்து விட திருமணத்திற்கான நாட்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். விக்ரமுக்கு அங்க என்ன பேசுகிறார்கள் என்ன நடக்கிறது என்பது எதுவும் அவனது மனதில் நிற்கவில்லை அவன் கண் முன் தெரிந்தது சனந்தா மட்டுமே. அதுவும் அவளது வாடிப் போன முகமும் நெற்றியில் ஏற்பட்டிருந்த காயம் தான்.
“அடிபட்டுது இப்ப சரியாயிடுச்சா??” என்று வள்ளி கேட்க, லேசான புன்னகையுடன் பரவால்ல அன்ட்டி என்று கூறினாள் சனந்தா. “ஆனா, எங்கள எல்லாம் மறந்துட்ட இல்ல சனா” என்று வள்ளி அடங்கத்துடன் கேட்க, சனந்தா லேசாக புன்னகையும் கண்களில் கண்ணீருடனும், “என் வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன் அங்க இருந்த நாட்கள… அப்புறம் எப்படி ஆன்ட்டி உங்கள மறப்பேன் நானு” என்று சனந்தா கூறியதும், பின் நின்று கொண்டிருந்த விக்ரமுக்கு அது நன்றாகவே கேட்டது.
“உன்னைத் தேடாத நாளே இல்ல சனா… உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்னு எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துது” என்ற வள்ளி கூறவும், சனந்தா வள்ளியின் கையை இறுக்கிப் பிடித்து, “அப்படி எல்லாம் இல்ல ஆன்ட்டி நீங்க என்னை உண்மையிலே ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டீங்க…. நானும் நம்ம கிராமத்தை ரொம்ப மிஸ் பண்றேன்…. எல்லாரையுமே ரொம்ப மிஸ் பண்றேன்” என்று சனந்தா மனம் திறந்து பேசினாள்.
“அப்புறம் ஏன் சனா ஒரு நாள் கூட எங்க கிட்ட பேசவே இல்ல… ஒரு வாட்டி கூட ஊருக்கு வரவே இல்லை” என்று வள்ளி ஆதங்கத்துடன் கேட்க, “வரக்கூடாதுன்னு இல்ல பேசக்கூடாதுன்னு இல்ல ஆன்ட்டி… வேலையும் ஒரு காரணம் தான் அது போக சந்தர்ப்ப சூழ்நிலையும் சரியா அமையல அதான் வேற எதுவும் இல்லை” என்று சனந்தா கூறினாள்.
“சந்தர்ப்ப சூழ்நிலை தானா சரி ஆகலன்னா நம்ம தான் சரி பண்ணனும் சரியா” என்று வள்ளி கூறவும், சனந்தா தலையை மட்டும் அசைத்தாள்.
“இப்ப இங்க கௌதமுக்கும் கவிதாவுக்கும் நடக்கிற மாதிரியே உனக்கும் விக்ரம்கும் நடக்கும்னு ஆசைப்பட்டேன்….. என்னடா இந்த நேரத்துல நான் இத பேசுறேன்னு நீ தப்பா நினைச்சுக்காத…. எனக்கு இப்ப விட்டா திருப்பி நான் எப்ப உன்ன நேர்ல பார்ப்பேன்னு தெரியல… அதனால சொல்லிட்டேன் இதுக்கு அப்புறம் நீங்க தான் சீக்கிரம் முடிவெடுத்து எங்க கிட்ட சொல்லணும்” என்று வள்ளி கூறினார்.
“எப்படியோ நேரம் கிடைக்கும் போது இதை சொல்லிட்டேன் இல்லன்னா இவகிட்ட இது எப்படி நான் பேச முடியும்” என்று வள்ளி மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
சனந்தா ஏதேனும் பதில் பேசுவாள் என்று விக்ரமும் வள்ளியும் எதிர்பார்க்க சனந்தாவின் கைப்பேசி அழைக்கவும் அதை எடுத்து பார்த்து சூர்யா என்று இருக்க, “ஆன்ட்டி நான் ஃபோன் பேசிட்டு வரேன்” என்று மட்டும் கூறி ஓரமாக சென்று பேசினாள்.
“அப்படியா என் பேக்ல தான் இருக்கு நீங்க இன்னிக்கு காலேஜுக்கு வரவே இல்ல… இல்லன்னா அப்பவே நான் கொடுத்துட்டு இருப்பனே” என்று சனந்தா கூறவும், “நான் நாளைக்கு தான் போகணும் காலேஜுக்கு அதனால எனக்கு இப்ப அந்த ஃபைல் மட்டும் கொடுக்க முடியுமா??” என்று சூர்யா கேட்கவும், “சரி எங்க வரணும்னு சொல்லுங்க நான் கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்று சனந்தா கூறினாள்.
“இல்ல சனா அப்படி வேண்டாம்…. நான் ஒரு மணிக்கு மேல தான் ஃப்ரீ ஆவேன் அந்த டைம்ல நீ எங்க இருப்பன்னு சொல்லு நான் வந்து வாங்கிக்கிறேன்” என்று சூர்யா கூறவும், “சரி நான் இப்ப வெளியே இருக்கேன்… வீட்டுல கேட்டுட்டு நான் உங்களுக்கு சொல்றேன் ஓகேவா” என்று சனந்தா கேட்க, “சரி ஓகே சனா” என்று சூர்யா கூறி ஃபோனை வைத்தான்.
சனந்தா பி.ஹெச்.டியை அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள். பின் யோசித்து, அவள் வேலையில் மூழ்கினால் மட்டுமே வேற சிந்தனை இருக்காது என்று தோன்றியது. அப்படி காலேஜில் அவளுக்கு கிடைத்த நட்பு தான் சூர்யா.
அவளுடைய வயதிற்கு ஏற்ப அங்கே சூர்யா மட்டுமே இருந்தான். அவளும் அவனுடன் நட்பாகவே பழகுவாள். ஆனால், அவனுக்கோ சனந்தாவை பிடித்திருந்தது. அதை அவன் பலமுறை சொல்ல முயற்சி செய்தும் அவள் எதுக்கும் பிடி கொடுக்காமல் இருக்க அவன் தோற்று தான் போனான். மேலும் இருவருக்கும் அட்வைசர் முரளி தான் என்பதால் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து ரீசர்ச் சென்டருக்கு செல்வது ப்ராக்டிஸ் பண்ணுவது என இருவர் நட்பும் வலுவானது.
சூர்யாவை சனந்தா வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு நாள் அறிமுகம் செய்தும் வைத்தாள். அதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் சூர்யாவை நன்றாகவே தெரியும். இது விக்ரமும் அறிந்த ஒன்றே அவளது கைபேசியில் சூர்யா என்ற பெயரை பார்த்ததும் விக்ரமின் முகம் மாறிவிட்டது.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 107
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 107
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.