Chapter 106

Bhavani Varun

Member
Jan 23, 2025
118
0
16
விகாஷ் மற்றும் சனந்தா அவளது அறையின் பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“நீ தான் இவ்வளோ லவ் பண்றல அத்தான… அப்போ ஏன் சனா இப்படி பண்ற…. நீ அவர் கிட்ட பேச கூட வேணாம் ஆனா, அவரு உன் கிட்ட பேச முயற்சி பண்றதயாவது காது கொடுத்து கேட்கலாமே” என்று விகாஷ் ஆதங்கத்துடன் கேட்டான்.

“எனக்கு உண்மையிலே ஆசையா இருக்கு அவர் கிட்ட பேச…. அவர் ஒவ்வொரு வாட்டியும் நைட் மெசேஜ் பண்றத பண்ணலன்னா அவ்வளவு ஏங்குறேன் ரொம்ப தவிப்பா இருக்கும்… அவர் மெசேஜ் வர வரைக்கும் என்னால தூங்கவே முடியாது”…

“எப்படியும் அவர் கிட்ட இருந்து வெறும் ஒரு குட் நைட் மெசேஜ் ஆவது வந்துரும்… இதுல ஹைலைட் என்னன்னா, அதை நான் எதிப்பார்க்கிறேன்னு தெரிஞ்சு தான் அவரும் அனுப்புறாரு… ஆனா, திருப்பி என்னால தான் பதில் சொல்ல முடியல விக்கி”….

“எனக்குள்ள இவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கினது விக்ரம் தான்… உண்மையா சொல்லனும்னா அவர் எனக்கு கொடுத்த மாதிரி ஒரு சந்தோஷத்தை இதுவரைக்கும் நான் அனுபவிச்சதே இல்ல என் வாழ்க்கையில….. அது போக என்னை நிறைய இடத்துல அவ்ளோ பாதுகாப்பாவும் பார்த்துக்கிட்டாரு…. அதே மாதிரி ஒரு சின்ன குழந்தைய பார்த்துக்குற மாதிரியும் பார்த்துக்கிட்டாரு”…

“என்னோட வேலைக்கும் அவ்வளவு மரியாதையும் முக்கியதுவமும் கொடுப்பாரு…. இது எல்லாமே அவர் கிட்ட இருந்து நான் அனுபவிச்சேன்… ஆனா, ஏன்னு தெரில இப்ப நான் இப்படி இருக்க காரணம், அவர் என் கிட்ட உண்மைய சொல்லலன்ற கோவமா என்னன்னு எனக்கு சொல்ல தெரியல விக்கி” என்று சனந்தா அழுதுக் கொண்டே கூறினாள்.

விகாஷுக்கு சனந்தா இவ்வளவு பேசினாள் என்பதே பெருசு தான்… அதுலயும் அவள் எவ்வளவு ஆழமாக விக்ரமை காதலிக்கிறாள் என்பதை உணரும் போது விகாஷுக்கு சனந்தாவின் வலி புரியாமல் இல்ல.

விகாஷ் சனந்தாவின் கண்களை துடைத்து விட்டு அவளின் இரு கைகளையும் பற்றி கொண்டு, “இங்க பாரு நான் சொல்றதை கேளு சரியா… ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணு அவர் எப்போ பேச முயற்சி பண்ணினாலும் கொஞ்சம் இடம் கொடு அது தான் உன்ன சமாதானப்படுத்தும்னு நினைக்கிறேன் சனா”….

“ஏன்னா நாங்க என்ன பண்ணாலும் உன்னை சமாதானம் பண்ணவே முடியல…. அவ்வளவு ஏன் ஊர்ல அந்த பாட்டி பேசி கூட உன்னால சமாதானம் ஆக முடியலன்னா அதுக்கு ஒரே வழி விக்ரம் அத்தான் மட்டும் தான்…. அத முதல்ல நீ புரிஞ்சுக்கோ”…

“ஆமா, அவர் தான் உன்ன சமாதானம் பண்ண முடியும்னு இப்ப நீ பேசினதுல தெளிவா தெரியுது…. அப்ப அதுக்கு நீ இடம் கொடு அப்ப தான் உன்னை நீ பழையபடி மாத்திக்க முடியும்…. உனக்கு சந்தோஷமா இருக்கணும்னு தானே ஆசை??” என்று விகாஷ் கேட்க, ஆமாம் என்பது போல் தலையை அசைத்தாள் சனந்தா.

“அப்போ உன்னோட சந்தோஷத்துக்கான ஒரே பதில் விக்ரம் அத்தான் மட்டும் தான்…. நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்… அடுத்த வாரத்தில ஊரிலிருந்து அவங்களை வர சொல்லி இங்க ஃபார்மலா தேதியை குறிச்சுக்கலாம்னு இருக்காங்க…. அந்த ஃபங்ஷனுக்கு வர பாரு” என்று விகாஷ் கூறவும், சனந்தா மௌனமாகவே இருந்தாள்.

“நான் உன்ன ஃபோர்ஸ் பண்ணல ஆனா, புரிஞ்சுக்க ட்ரை பண்ணு…. நீ இப்படியே இருக்குறதால எங்க எல்லாருக்கும் தான் கஷ்டமா இருக்கு” என்று விகாஷ் கூறினான்.

“என்னால ஆன்ட்டி அங்கிள் கிட்ட கூட சகஜமா பேச முடியல… அதுக்கான ஒரே காரணம், அவங்க அவங்களையே ரொம்ப தப்பா நினைச்சுக்கிட்டு என்கிட்ட அவ்வளவு சாரி கேக்குறாங்க… அது எனக்கு கஷ்டமா இருக்கு… இதெல்லாம் போக கடைசியா அவங்களோட பேச்சு விக்ரம் கிட்ட தான் போய் நிற்கும் அதுவும் இன்னொரு காரணம் தான்” என்று சனந்தா கூறினாள்.

“எனக்கு தெரியுது சனா உன்னோட நிலைமை…. நான் போன வருஷம் அங்க பூஜை அப்போலிருந்து விக்ரம அத்தான்னு தான் கூப்பிடுறேன்…. அது உனக்கும் நல்லா தெரியும் அதுக்கப்புறம் நீ ஒரு வாட்டி கூட அவர அப்படி கூடாதுன்னு சொன்னதே இல்ல…. உனக்கு அவர் மேல அப்படி ஒரு கோபம் இருந்தா கண்டிப்பா இதை நீ சொல்லி இருப்ப சனா…. அப்போ உனக்கு கோபம் எங்கன்னு மட்டும் யோசி… முதல்ல நீ உன்ன சரி பண்ணு அதுக்கப்புறம் மத்ததெல்லாம் தானா சரியாகும் என்னை நம்பு” என்று விகாஷ் கூறவும்.

சனந்தா விகாஷின் தலை முடியை ஆட்டிவிட்டு, “ரொம்ப பெரிய ஆள் ஆயிட்ட” என்று லேசான புன்னகையுடன் கூறினாள். “இதுல என்ன சனா சின்னவங்க பெரியவங்கனு இருக்கு… நீ இங்க இவ்வளவு கஷ்டப்படுறேனா அங்க அத்தானும் அதே மாதிரி தான் கஷ்டப்பட்டு இருக்காங்க…. ஏன் ரெண்டு பேரும் கஷ்டப்படணும் சந்தோஷமா வாழலாம்ல…. அப்ப அதுக்கு எது தடையா இருக்கோ அது தானே நம்ம யோசிக்கனும்” என்று விகாஷ் கூறவும், “ம்ம்… சரி நான் முயற்சி பண்றேன்” என்று சனந்தா கூறினாள்.

“ம்ம்.. சரி நான் போய் தூங்குறேன் நாளைக்கு காலைல ஏதோ மீட்டிங் இருக்குன்னு அப்பா சொன்னாரு…. நீயும் போய் தூங்கு அழாம தூங்கு சரியா” என்று அறிவுரையும் கூறி சென்றான் விகாஷ்.

பல மாதங்கள் கழித்து சனந்தாவின் மனது சற்று லேசானது போல் உணர்ந்து அன்று தான் படுத்ததும் உறங்கியும் போனாள்.

விகாஷ் சரவணனுக்கு ஃபோன் செய்து சனந்தாவுடன் நடந்த உரையாடலை கூறவும், “இத தான் விக்ரம் சொல்லிட்டே இருந்தான் சனா இப்படித் தான் யோசிப்பான்னு…. அவளும் அப்படித் தான் யோசிக்கிறா…. அவளுக்கே என்ன வேணும்னு தெரியாது அது ஒரு சின்ன குழந்தை டான்னு சொல்லிட்டே இருப்பான் விக்ரம்…. இப்ப பாரு அவளும் அப்படித் தான் தவிச்சிட்டு இருக்கா… என்ன கோபம்??? ஏது கோபம்??? யார் மேல கோபம்?? எதுவுமே தெரியல அவளுக்கு” என்று சரவணன் வருத்தத்துடன் கூறினான்.

“ஆமா அவ கொஞ்சம் அப்படித் தான்… ஆனா, அவளுடைய ரொம்ப கம்ஃபர்ட் பிளேஸ் விக்ரம் அத்தானா தான் இருந்திருக்காங்க…. இப்போ இந்த மாதிரி ஒரு நிலைமையில அவ தோள் சாய்ந்து அழுகுறத்துக்கு கூட ஆள் இல்லை என்றது கூட அவளுக்கு ரொம்ப பெரிய கோபமா இருக்கலாம்…. அவளுக்கு எல்லாமே விக்ரம் அத்தான் தான்னு நினைச்சிட்டு இருக்கா” என்று விகாஷ் கூறினான்.

“ம்ம்… புரியுது… சனா எப்பவுமே அப்படி தான்… இங்க இருக்கும் போதே பிரச்சனைனா யாருக்குமே சொல்ல மாட்டா…. முகத்துல கூட காட்ட மாட்டா… அதெல்லாம் விக்ரமுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்… குறைஞ்சது மூஞ்சில காட்டினாலாவது என்ன ஏதுன்னு தெரியும்… அது கூட இருக்காது அவ கிட்ட அப்படி இறுக்கமாக தான் இருப்பா… ஆனா விக்ரம் எல்லாமே மாத்தினான்…. பார்க்கலாம் இனிமே எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இப்ப தான் வருது” என்று சரவணன் கூறினான்.

“கண்டிப்பா மாறும் நான் சொன்ன மாதிரி நீங்க விக்ரம் அத்தான அடுத்த வாரமும் வர சொல்லுங்க…. அதுக்கப்புறம் எப்ப எல்லாம் அவர் ஃப்ரீயா இருக்காரோ அப்ப எல்லாம் வந்து சனாவை பார்க்க சொல்லுங்க… அவ இனிமே கண்டிப்பா பேச இடம் கொடுப்பா” என்று விகாஷ் கூறவும், “நான் கண்டிப்பா சொல்றேன்…. ஏற்கனவே சொன்னேன்…. இப்ப நீ சொன்னதையும் சேர்த்து நான் உடனே அவனுக்கு ஃபோன் பண்ணி சொல்றேன்” என்று சரவணன் உற்சாகத்துடன் கூறினான்.

இருவரும் சிறிது நேரம் பொதுப்படையாக பேசிவிட்டு ஃபோனை வைத்ததும், சரவணன் உடனே விக்ரமுக்கு ஃபோன் செய்தான். விக்ரம் கொல்லை பக்கம் இருக்கும் தனி அறையில் படுத்துக் கொண்டு அவனது கைபேசியில் சனந்தாவுடன் எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கவும் சரவணன் அழைத்தான்.

“சொல்லுடா என்ன இந்த நேரத்துல??” என்ற விக்ரம் கேட்க, சரவணன் விகாஷுடன் நடந்த உரையாடலை கூறவும் விக்ரமுக்கு கஷ்டமாகி தான் போனது. “அவ இப்ப கூட அவங்க கஷ்டப்படுவாங்கன்னு யோசிக்கிறா…. ஆனா, அவ அவ்வளவு கஷ்டப்படுறா அது தெரியவே இல்லல அவளுக்கு…. பாவம் டா அவ” என்று விக்ரம் கூறவும்,

“அதெல்லாம் இருக்கட்டும் விகாஷ் திரும்பவும் இதை தான் சொல்றான்… நீ அப்பப்ப போய் அவளை பாருன்னு…. இனிமே அதுக்கு தயாரா இரு நான் இங்க எல்லாம் ஊர்ல பார்த்துக்கிறேன் நீ போ மச்சான்” என்று சரவணன் தைரியம் கொடுக்க, “ம்ம்… தேங்க்ஸ் டா நான் கண்டிப்பா போய் அவளை பேசி சரி பண்ண பார்க்கிறேன்” என்று விக்ரம் கூறினான்.


போன வருடம் பூஜை நடந்து முடிந்து கலவரங்கள் அனைத்தும் ஓரளவுக்கு அடங்கிய பின் அபிலாஷ் அவனுடைய ஊருக்கு சென்றான். அங்கே அவனது பெற்றோர் பெண் பார்த்து இருப்பதாக கூறி அனுவின் புகைப்படத்தையும் அவளுடைய பயோ டேட்டாவையும் கொடுக்க அவனுக்கு அதிர்ச்சியாகி போனது.

அவனது பெற்றோரிடம் எதைப் பற்றியும் கூறாமல் அனுவுக்கு முதலில் ஃபோன் செய்தான். அபிலாஷ் ஃபோன் செய்து அனுவிடம் பேசுவதற்கு முன், அனுவே பேசத் தொடங்கினாள்.

“எனக்கு உங்களை இப்போ இல்ல எப்பவோ தெரியும்…. இந்த அலையன்ஸ் இப்ப வந்தது கிடையாது என்னோட ஆப்ரேஷனுக்கு முன்னாடியே வந்தது தான்…. அப்போ உடல் நலம் சரியில்லாததுனால எங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லன்னு தான் சொல்லி வெச்சிருந்தோம்”….

“அப்பவே எனக்கு உங்கள பிடிச்சிருந்தது!!! என்னோட ஹெல்த் கண்டீஷனை நான் மைண்ட்ல வெச்சு தான் நான் எதுவும் வெளில சொல்லல….. அதுக்கப்புறம் நான் குணமாகி வந்து அபர்ணாவ பத்தி தெரிஞ்சுக்கிட்டு தான் அந்த ஊருக்கு வந்தேன்”…..

“அங்க தான் திருப்பி நான் உங்களை பார்த்தேன்… ஆனா, உங்களுக்கு என்னை சுத்தமா தெரியல அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டதுமே எனக்கு புரிஞ்சது உங்களோட பர்மிஷன் இல்லாம தான் வீட்ல அலையன்ஸ் பார்க்குறாங்கன்னு…. அதனால நானும் உங்களை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல”….

“இதெல்லாம் போக திருப்பியும் உங்க வீட்ல இருந்து அலையன்ஸ் கேட்டு ஃபோன் பண்ணாங்கனு தரகர் மூலமா தெரிஞ்சுது…. அப்போ அப்பா கிட்ட நான் சொன்னது, ஊர்ல போய் உண்மை எல்லாம் சொல்லிட்ட அப்புறமா என்ன முடிவு பண்றாருன்னு பார்க்கலாம்னு தான் சொன்னேன்…. அதனால இப்ப நீங்க என்ன முடிவு எடுக்கிறீங்களோ அது தான் ஃபைனல்” என்று அனு கூறினாள்.

அனு தன்மையாகவே அனைத்தையும் கூறி முடித்ததாள். அபிலாஷுக்கு அவளிடம் கத்தி பேச மனம் வரவில்லை. மேலும் அபிலாஷ் அபர்ணாவை விரும்பியத்தை பற்றியும், அவள் மறுத்ததையும் கூறினான். முதலில் அபர்ணா தான் காரணம் ஊரை விட்டு வராமல் இருந்ததற்கு… பின் பழக பழக ஊரிலேயே அவனுக்கு நிம்மதியான உணர்வு இருந்ததால் அங்கேயே இப்பொழுதும் வேலை செய்து கொண்டு வருவதாகவும் அனுவிடம் கூறினான்.

அபிலாஷ் அனைத்தும் கூறிவிட்டு, “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்று மட்டும் கூறி ஃபோனை வைத்தான். அபிலாஷ் பல நாட்கள் கழித்து ஒரு நாள் அபர்ணாவின் இடத்திற்கு சென்று அங்கே அவளிடம் நடந்த அனைத்தையும் கூறி விட்டு வந்து, அவனுடைய வீட்டிற்கு கல்யாணத்தில் சம்மதம் என்பதை தெரிவித்தான்.

மேலும் அவன் இங்கே தான் வேலை செய்யப் போகிறான் அதற்கு சம்மதமா என்று கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் கூறவும், “அனுவும் அங்க தான் வேலை செய்யப் போறா” என்று அபிலாஷின் அம்மாவும் உறுதி அளித்தார்.

பின் அவர்களுடைய திருமண நாளையும் அடுத்த வருடம் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தனர். கல்யாணம் கோயம்புத்தூரில் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்திருந்தனர்.


கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 106
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.