Chapter 102

Bhavani Varun

Member
Jan 23, 2025
118
0
16
விநாயகர் பூஜையில் ஐந்தாவது நாள், அன்று பெரிய பிரச்சனை ஆகவும் அதுலிருந்து சனந்தா விக்ரமின் முகத்தையும் பாராமல் அவனிடம் சொல்லிக் கொள்ளாமலும் கிளம்பி விட்டாள். விக்ரம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவளிடம் பேச முடியாமல் தான் போனது.

“வீட்டுக்கு வர நேரமா சனா இது, எவ்வளவு நேரம் தெரியுமா உனக்காக காத்திருந்து இப்ப தான் கிளம்பினாங்க… அவங்க ஊருக்கு போகவே எவ்ளோ நேரம் ஆகும்” என்று லக்ஷ்மி சனந்தா வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவருடைய சுப்ரபாதத்தை ஆரம்பித்தார்.

சனந்தா எதுவும் பேசாமல் அமைதியாகவே நிற்க, “என்ன சனா இப்படி பண்ணிட்ட… அவங்க கூட என்ன மனஸ்தாபம் இருந்தாலும் நீ ஒரு எட்டு வந்து பார்த்திருக்க வேண்டாமா??” என்று சந்திரசேகர் கூறவும், கௌதம் இருந்த கோபத்தில் வந்து சனாவின் கையை பிடித்து இழுத்து, “என்ன தாண்டி உன் பிரச்சனை” என்று கேட்கவும் அவள் கத்தி விட்டாள்.

“ஹே… ஏன் கத்துற… நான் எதுவுமே பண்ணல சும்மா தான் கையை பிடிச்சேன் என்ன ஆச்சு” என்று கௌதம் பதற்றத்துடன் கேட்டு அவளின் கையை பார்க்கவும் அதில் அடிபட்டு இருந்தது. மேலும் விகாஷ் வந்து அவளுடைய முகத்தில் கட்டி இருந்த துணியையும் எடுக்க சொல்லி வற்புறுத்தவும் வேறு வழி இன்றி எடுக்கவும் நெத்தியிலும் அடிபட்டிருந்தது சனந்தாவுக்கு.

அவ்வளவு நேரம் அவளை ஏசி கொண்டிருந்த அவளுடைய தாய் ஓடி வந்து என்னாச்சு சனா?? என்று பதற்றத்துடன் அவளை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்து, “இப்ப சொல்லு என்ன ஆச்சு??” என்று லக்ஷ்மி கேட்கவும்,

“கௌதம் மதியமா ஃபோன் பண்ணதும் நான் கிளம்பலாம்னு கிளம்பிட்டேன்… சூர்யா இருக்காருல அவர் என்னை கூட்டிட்டு வரேன்னு சொன்னாரு… சரின்னு நாங்க கிளம்பினோம்… காலேஜ் விட்டு கொஞ்ச தூரம் வந்ததே அங்க மணல் நிறைய போட்டு இருந்தாங்க ரோடு சரி பண்றதுக்காக அதுல பேலன்ஸ் இல்லாம ரெண்டு பேரும் விழுந்துட்டோம்…. அதுல அடிபட்டது தான் இது” என்று சனந்தா கூறினாள்.

“எத்தனை வாட்டி ஃபோன் பண்ணேன் உனக்கு அப்பவே அதை எடுத்து சொல்லி இருக்க வேண்டியது தானே” என்று கௌதமும் விகாஷும் அவளை கத்தவும், “என்னோட ஃபோன் நான் பேக்ல போட்டுட்டேன் டா… அப்போ எனக்கும் சூர்யாவுக்கும் ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருந்தது….. எல்லாம் முடிய இவ்வளவு நேரம் ஆயிருச்சு…. அதுக்கப்புறம் நான் கூப்பிட்டேன் திருப்பி, நீ எடுக்கல சரி எல்லாம் பிசியா இருக்கீங்க போலன்னு நினைச்சுட்டு தான் நானே ஆட்டோ பிடிச்சு வந்துட்டேன்” என்று சனந்தா கூறினாள்.

“எனக்கு எப்போ ஃபோன் பண்ண… நான் பார்க்கவே இல்லையே” என்று கௌதம் அவனுடைய கைபேசியை எடுத்து பார்க்க சனந்தா விடமிருந்து அழைப்பு வந்ததை அவன் கவனிக்காமல் விட்டு விட்டான். “ஐயோ சாரி சனா நான் எப்படி கவனிக்காம விட்டேன்னு தெரியல” என்று கௌதம் கூறவும், பரவால்ல!!! என்று சனந்தா கூறினாள்.

சனந்தா பிரகாஷை பார்த்து, “ரொம்ப சாரி அங்கிள் என்னால இன்னைக்கு வர முடியாம போனதுக்கு…. வரக்கூடாதுன்னு உண்மையிலேயே நினைக்கல…. இந்த வொர்க் ரொம்ப நாளா பென்டிங் இருந்துது இன்னிக்கு தான் காலேஜ்ல முடிஞ்சுது…. அதுக்காக நான் கண்டிப்பா போக வேண்டியதா தான் இருந்தது தப்பா எடுத்துக்காதீங்க” என்று சனந்தா கூறவும்,

“என்ன சனா எனக்கு தெரியாதா உன்ன பத்தி நீ அப்படி எல்லாம் பண்ணக் கூடிய ஆள் இல்ல…. முடியாதுன்னா முடியாதுன்னு நேரா சொல்ல கூடிய ஆள் தானே அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல யாரும் உன்ன பத்தி ஒன்னும் தப்பா எடுத்துக்கல” என்று பிரகாஷ் கூறினார்.

“நான் மேல போய் கொஞ்சம் ஃபிரஷ் ஆயிட்டு நைட்டு சாப்பிட வரேன்” என்று சனந்தா கூறி அவளுடைய அறைக்குள் சென்றாள். “ஏதாவது ஹெல்ப் வேணுமா” என்று கௌதம் மற்றும் விகாஷ் அவளிடம் கேட்க, “இல்ல பரவால்ல நான் பார்த்துக்குறேன்” என்று சனந்தா கூறினாள்.

சூர்யா ஓகேவா இப்போ?? என்று கௌதம் கேட்க, “அவருக்கு தான் கொஞ்சம் கையிலயும் கால்லயும் சேர்ந்து அடி” என்று சனந்தா கூறி, “நீங்க போங்க நான் கொஞ்ச நேரம் படுத்துக்கணும்” என்று இருவரையும் வெளியே அனுப்பி விட்டாள். சனந்தா ஃபிரஷ் அப் ஆகி வந்து உறங்கிவிட்டு பின் இரவு உணவு நேரம் ஆகவும் லக்ஷ்மி குரல் கொடுக்கவும் சனந்தா கீழே இறங்கி வந்து அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினாள்.

அந்நேரத்தில் சரியாக வள்ளி ஃபோன் செய்து தாங்கள் கிராமத்திற்கு சென்று விட்டதாக கூறி பின் சனந்தாவை பற்றி விசாரித்தார். “ம்ம்… வந்துட்டா பா… ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அவளுக்கு…. அதனால தான் நீங்க இருக்கும் போது வர முடியல ஹாஸ்பிடல் போயிட்டு வர நேரம் ஆயிடுச்சு…. வந்ததும் ரொம்ப டயர்டா இருக்கேன்னு தூங்கிட்டா… இதோ இப்ப இங்க தான் இருக்கா… இருங்க நான் ஃபோன கொடுக்கிறேன்” என்று லக்ஷ்மி கூறி, சனந்தாவிடம் ஃபோனை கொடுக்க, சனந்தா லக்ஷ்மியை முறைத்துக் கொண்டே ஃபோனை வாங்கி கொண்டு வெளியே லாபிக்கு சென்று விட்டாள்.

“ஹலோ… ஆன்ட்டி…” என்று தயக்கத்துடன் சனந்தா பேசவும், “என்ன ஆச்சு சனா ரொம்ப அடி எதுவும் பட்டுதா” என்று வள்ளி அக்கறையாய் கேட்க, “இல்ல ஆன்ட்டி பரவால்ல இப்போ… சின்னதா தான் அடிபட்டு இருக்கு” என்று சனந்தா கூறி, “ஆன்ட்டி நீங்க இருக்கும் போது என்னால வர முடியல தப்பா எடுத்துக்காதீங்க” என்று சனந்தா ஒரு வழியாக கூறி முடித்தாள்.

“ஐயோ பரவால்ல சனா எதுக்கு சாரி எல்லாம் கேட்டுட்டு…. உனக்கு அத்தனை வாட்டி ஃபோன் பண்ணி எடுக்கவே இல்ல நீ… கௌதம் பண்ணான் விகாஷும் பண்ணான்… சரி என்னவோ பிஸியா இருக்கேன்னு நினைச்சு தான் நாங்களும் கிளம்பிட்டோம் மா… இப்ப தான் அடிபட்டு இருக்குன்னு சொல்றாங்க, ரொம்ப வலிக்குதாடா??” என்ற வள்ளி அக்கறையுடன் கேட்க, சனந்தாவின் கண்ணில் அவளை அறியாமலே கண்ணீர் வழிய, அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “இல்ல ஆன்ட்டி பரவால்ல நான் நல்லா தான் இருக்கேன்…. அங்கிள் கிட்டயும் சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க” என்று சனந்தா கூறினாள்.

“அதை நீயே சொல்லு அவர் கிட்ட ஃபோன் தரேன்” என்று கூறி சனந்தாவின் பதிலுக்கும் கூட காத்திராமல் ஸ்ரீனிவாசனிடம் ஃபோனை கொடுத்து விட்டார் வள்ளி. “ஹலோ சனா மா எப்படி இருக்க??? ஏதோ ஆக்சிடென்ட்ன்னு சொல்றா வள்ளி என்ன ஆச்சு??” என்று ஸ்ரீனிவாசன் அக்கறையாக கேட்கவும், “ஒன்னும் இல்ல அங்கிள் சின்ன ஆக்சிடென்ட் தான் பரவால்ல இப்போ” என்று சனந்தா பட்டும் படாமலும் கூறிவிட்டு, “சாரி அங்கிள் என்னால இன்னிக்கு வர முடியல தப்பா எடுத்துக்காதீங்க” என்று சனந்தா கூறினாள்.

“அதெல்லாம் ஒன்னும் பரவால்ல மா அடுத்த வாட்டி வரும் போது நம்ம மீட் பண்ணலாம் டா…. எங்களுக்கு உண்மையிலேயே உன்ன பார்க்கணும்னு ஆசையா இருக்கு சனா” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், மீண்டும் சனந்தா அழுதுவிட்டாள். “சனா… ஹலோ லைன்ல இருக்கியா?? என்று ஸ்ரீனிவாசன் கேட்கவும், சனந்தா அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “ம்ம்… இருக்கேன் அங்கிள்” என்று கூறிவிட்டு, “அடுத்த வட்டி கட்டாயம் நான் உங்களை பார்க்கிற மாதிரி என் வேலையை ஸ்கேடியூல் பண்ணிக்கிறேன்” என்று சனந்தா கூறினாள்.

“ம்ம் சரி மா உடம்ப பார்த்துக்கோ” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “சரிங்க அங்கிள் ஃபோனை வெக்கிறேன்” என்று கூறி சனந்தா ஃபோனை வைத்து விட்டாள். ஃபோனை எடுத்துக் கொண்டு லக்ஷ்மியிடம் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் அவளுடைய அறைக்கு சென்று பால்கனியில் அமர்ந்து கொண்டு அழுது தீர்த்தாள்.

இது அவளுடைய வழக்கமாகிவிட்டது பழைய நினைவுகளில் இருந்து மீள முடியாமலும் மன்னிக்கவும் முடியாமலும் நினைவுகளிலேயே சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டு தான் இருக்கிறாள். தினமும் அவளது கைபேசியை எடுத்து அதில் விக்ரமின் புகைப்படங்களை பார்த்து, அழுது, திட்டி, தீர்த்து விட்டு தான் உறங்க செல்வாள்.

அங்கே விக்ரமோ, சனந்தா தங்கி இருந்த அந்த அறையை தான் அவனுடைய அறை ஆக்கிக் கொண்டான். அவளது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் அவளிடம் பேசவும் அவள் தன்னிடமிருந்து விலகிக் கொண்டு தான் இருக்கிறாள் என்பதை எடுத்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். அவளுடன் செலவழித்த நேரத்தை நினைத்துக் கொண்டே அவனுடைய இரவு பொழுது கழியும்.

“என்னமா ஆச்சி அவளுக்கு??” என்று விக்ரம் பதற்றமாக கேட்க, “நம்ம வந்து இருக்கோம் அப்படின்னு கௌதம் ஃபோன் பண்ணதும் காலேஜ்ல இருந்து கூட படிக்கிற பையன் கூட பைக்ல வரும் போது ஆக்சிடென்ட் ஆகிருச்சாம் டா” என்று வள்ளி வருத்தத்துடன் கூறினார்.

“இப்ப எப்படிம்மா இருக்கா ரொம்ப பெரிய அடியா??” என்று விக்ரம் கேட்க, “இல்ல சின்னதா தான் இருக்கு அப்படின்னு சொல்றா…. நான் அவகிட்ட பேசுனதுல எனக்கு என்னமோ அடி பெருசா தான் இருக்கும்னு தோணுது” என்று வள்ளி கூறவும், “சரி ஓகே நான் விகாஷ் கிட்டயோ இல்ல கௌதம் கிட்டயோ கேட்டுக்குறேன்” என்று விக்ரம் கூறி கொல்ல பக்கம் இருக்கும் சனந்தா தங்கிய அறை தற்போது விக்ரமின் அறையாக மாறிவிட்டது அங்கே சென்று தாளிட்டு கொண்டான்.

“அடுத்த விநாயகர் பூஜைக்கான ஏற்பாடுகளையே நம்ம ஆரம்பிக்கப் போறோம்…. ஆனா, இன்னும் போன வருஷ பூஜைல நடந்த தாக்கமே நமக்கு குறைஞ்ச மாதிரி எனக்கு தெரியலங்க” என்று வள்ளி வருத்தத்துடன் கூறினார்.

“ஆமாம்மா விக்ரமும் இன்னும் சனாவையே தான் நினைச்சுட்டு இருக்கான்… அவன் பக்கம் காரணத்தை சொல்ல முடியாம போராடிட்டு இருக்கான்… அப்படித் தான் சனாவும் இருக்கா…. ரெண்டு பேரும் ஒரு வாட்டி பார்த்து பேசிக்கிட்டாங்கனாலே எல்லாமே சரியாயிடும்னு தோணுது….. ஆனா, அந்த சமயம் எப்ப அமையும்னு தெரியலையே” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.

“ஒண்ணுமே பேசாதவ இன்னிக்கி நம்ம கிட்ட இவ்வளவு பேசி இருக்கா இல்ல இதுக்கு அப்புறமா நேரம் கிடைக்கும் போது எல்லாம் பேசு…. நானும் அவகிட்ட பேசுறேன்… அவ கண்டிப்பா மனசு மாறுவான்னு எனக்கு தோணுது”…..

“அதுவும் போக இந்த ஏற்றுமதி விஷயமா கூட எல்லாத்தையுமே முரளி சார் தான் என்கிட்ட ஃபோன் பண்ணி பேசுவாரு… கேட்டா அவளுக்கு நேரம் இல்லை காலேஜ் வேலை அப்படின்னு சொல்லி ஏதோ ஒரு காரணத்தை சொல்லுவாங்க நானும் சரின்னு விட்டேன்…. ஆனா, போன ரெண்டு வாட்டி சனாவே தான் என்கிட்ட பேசினா”…

“அதனால தான் நான் சொல்றேன் அவ கொஞ்சம் கொஞ்சமா அவள சமாதானம் பண்ணிக்கிறா போல… அவங்க வீட்டில சொன்ன மாதிரி தான் நம்ம அவள ரொம்ப தொந்தரவு பண்ணாம அப்பப்போ போய் அவகிட்ட பேசினா சரியாகும்னு நம்பிக்கை இருக்கு எனக்கு…. அதனால நீ ரொம்ப வருத்தப்படாத எல்லாம் கண்டிப்பா நல்லதா நடக்கும்” என்று ஸ்ரீனிவாசன் ஆறுதல் அளித்தார்.

“விகாஷ் என்ன ஆச்சு சனந்தாவுக்கு???” என்று விக்ரம் பதற்றத்துடன் கேட்க, “அத்தான் அது ஒரு சின்ன பைக் ஆக்சிடென்ட் தான்… கையில கொஞ்சம் சராச்சி இருக்கு…. நெத்தில அடிபட்டு இருக்கு அவளுக்கு…. அது போக காலையும் லைட்டா சராச்சி இருக்கு… சூர்யா கூட வண்டில வரும் போது மணலா இருந்ததுனால ஸ்கிட் ஆச்சின்னு சொன்னா…. வேற ஒன்னும் இல்ல அவ நல்லா தான் இருக்கா” என்று விகாஷ் கூறினான்.

“ஏதாவது ஹெல்ப் வேணும்னா பார்த்துக்கோ விகாஷ்” என்று விக்ரம் தேய்ந்த குரலில் கூறவும், “நாங்க கண்டிப்பா அவள பார்த்துக்கிறோம் அத்தான்… நீங்களும் உங்கள பார்த்துக்கோங்க ரொம்ப டல்லாயிட்டே போறீங்க… சரவணன் சொன்னாரு சரியா சாப்பிட மாட்டேங்கறீங்க தூங்க மாட்டேங்கறீங்கன்னு… அப்படியெல்லாம் இருக்காதீங்க…. எவ்வளவு நாளைக்கு உங்களை நீங்களே வருத்திக்க போறீங்க…. அவ கண்டிப்பா உங்க பக்கம் பேசறதுக்கு ஒரு நாள் டைம் கொடுப்பா…. அந்த நம்பிக்கையில் இருங்க…. அதே மாதிரி அப்பப்போ நீங்க இருக்கீங்கனு அவளுக்கு தெரிய படுத்துங்க” என்று விகாஷ் அறிவுரை கூறவும், சரி என்று கூறி ஃபோனை வைத்தான் விக்ரம்.


கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 102
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.