பூஜைக்கான முதல் நாளை கோலாகலமாக தொடங்கினர் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து. ஒரு பக்கம் விநாயகர் பாடல்கள் ஒலிக்க, அனைத்து தெருக்களிலும் சீரியல் லைட் போடப்பட்டு வண்ணம் கிராமம் முழுவதும் வண்ணமயமாக காணப்பட்டது.
விக்ரம் வள்ளியிடம் சனந்தாவை கோவிலுக்கு தான் அழைத்து வருவதாக கூறவும் வள்ளியும் அமோதித்தார்.
“நீயே கூட்டிட்டு வா டா…. ஆனா, அவ என்ன இன்னும் ஆளையே காணோம்… அவ தான் முதல்ல எந்திரிச்சு குளிச்சிட்டா இன்னும் ரூம விட்டு வரவே இல்ல என்னன்னே தெரியல” என்று வள்ளி கூறவும், “அவ ரெடி ஆயிட்டு இருப்பா… ரெடி ஆகிட்டா அவளே வருவா” என்று விக்ரம் கூறினான்.
“சரி டா அப்பா வந்ததும் நீ அடுத்து குளிச்சிட்டு வந்து ரெடியா இரு…. அப்பா வந்ததுக்கப்புறம் நானும் அப்பாவும் கிளம்புறோம் சரியா” என்று வள்ளி கூறவும் சரி என்று கூறினான் விக்ரம். ஸ்ரீனிவாசன் வந்ததும் அவர் தயாராக சொல்லவும் விக்ரமும் குளிக்க சென்றான்.
சனந்தா தயாராகி தயக்கத்துடன் வீட்டிற்குள் வரவும் ஹாலில் வள்ளி அமர்ந்திருக்கவும், சனந்தாவை பார்த்ததும் ஓடி சென்று அவளிடம், “ஹே சனா!! அழகா இருக்க” என்று திருஷ்டி கழித்தார் வள்ளி.
ஸ்ரீனிவாசன் தயாராகி வெளியே வரவும் சனந்தாவை பார்த்து புன்னகைத்து, லட்சணமா இருக்க சனா என்று கூறவும் சனந்தா புன்னகைத்தாள். “இதுக்கு தான் வெளியில வர தயக்கமா உனக்கு” என்று வள்ளி கேட்க, “ஆமா ஆன்ட்டி…. இல்ல டிரஸ் மாத்திரலாம்னு கூட முடிவு பண்ணிட்டேன்…. அம்மா பூஜைக்காக தான் முக்கியமா இந்த டிரஸ் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தாங்க…. அதான் தாவணி போட்டுக்கிட்டேன்” என்று தயக்கத்துடன் சனந்தா கூறினாள்.
மஞ்சள் மற்றும் நீல நிற பேஸ்டல்ஸ் கலர்ஸ் காம்பினேஷனில் ஜார்ஜெட் துணியில் சனந்தா தாவணியை உடுத்தி இருந்தாள். மேலும் அளவான ஒப்பனை செய்து இன்று அழகு பதுமையாக காணப்பட்டாள் சனந்தா.
“நீ ஃபுல் டிரஸ் போட்டுட்டு இருக்கும் போது எல்லாம் நினைச்சி இருக்கேன் நீ கொஞ்சம் பூசினாப்புல இருக்கேன்னு…. ஆனா அப்படி இல்ல டா நீ…. பார்க்க ரொம்ப குட்டியா இருக்க” என்று வள்ளி கூறவும், விக்ரம் அவளை பூனை குட்டி என்று கூறுவது தான் நினைவுக்கு வந்தது சனந்தாவுக்கு.
“அப்படி இல்ல ஆன்ட்டி இங்க க்ளைமேட்க்கு ஏத்த மாதிரி தான் டிரஸ் பண்ணேன்…. அது போக இந்த கைல பார்த்தீங்களா அந்த தழும்பு எல்லாம் இருக்கு அதுக்காக தான் ஃபுல் டிரஸ் போட்டுட்டு சுத்திட்டு இருப்பேன்” என்று சனந்தா தயக்கத்துடன் கூறவும், “அப்படி ஒன்னும் பெருசா தெரியலையே இப்போ” என்று வள்ளி கூறவும், “இப்போ கொஞ்சம் நல்லாவே மறைஞ்சிருச்சு ஆன்ட்டி” என்று சனந்தா கூறினாள்.
விக்ரம் குளித்து வரவும் சனந்தா வள்ளியிடம் பேசிக் கொண்டிருக்க அவளின் பின்புறம் மட்டுமே தெரிந்தது அவனுக்கு. “யார் இது கவிதாவா இருக்குமோ… இல்லையே கவிதா கொஞ்சம் ஹைட்டா இருப்பா கொஞ்சம் பூசுனாப்புலயும் இருப்பா… இது குட்டியா இருக்கே ஒரு வேள நம்ம ஆளோ” என்று அவன் தலையை துவட்டிக் கொண்டே அவளை பார்த்துக் கொண்டே யோசனையுடன் அவனுடைய அறைக்கு சென்று திரும்பி கதவை மூடவும், அப்பொழுது தான் தெரிந்துது அவனுக்கு, “அட நம்ம ஆளு தான்” என்று வைத்த கண்ணை எடுக்காமல் சனந்தாவை பார்த்துக் கொண்டே கதவை மூடினான்.
சனந்தா அவனை கவனித்தாலும், ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி இருக்கும் காரணத்தினால் அவனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. “சரிம்மா நீங்க வாங்க நாங்க முன்னாடி போய்கிட்டு இருக்கோம்” என்று கூறி வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் புறப்பட்டனர்.
பின் சனந்தா அவளுடைய அறைக்கு சென்று காலையில் எடுத்து போட்ட அவளுடைய துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டு, வெறும் ஃபோன் மட்டும் போதும்ல என்று அவளுக்குள் கேட்டுக் கொண்டு எடுத்து வைத்துக் கொண்டிருக்கவும், விக்ரம் சனந்தா!!! என்று அழைக்க,
இதோ வந்துட்டேன் என்று கூறி கதவை திறந்து, “என் ஃபோன் மட்டும் எடுத்துக்கிறேன்… வேற ஏதாவது எடுத்துக்கணுமா???” என்று சனந்தா கேட்க, “வேற எதுவும் வேணாம்” என்பது போல் தலையை மட்டும் விக்ரம் அசைத்து சனந்தாவை தலை முதல் கால் வரை அவன் முழுங்கி கொண்டு இருந்தான்.
அவனுடைய பார்வையை எதிர்க் கொள்ள முடியாமல், “ஃபோன் மட்டும் கொண்டு வரேன்” என்று வேற எங்கேயோ பார்த்துக் கொண்டே சனந்தா கூறி உள்ளே செல்லவும், விக்ரமும் அவளை பின்தொடர்ந்து அவளின் அறைக்குள் சென்று கதவை தாளிட்டான்.
இதை சற்றும் எதிர்பாராத சனந்தா அதிர்ந்து, “என்ன பண்றீங்க??” என்று கேட்க, விக்ரம் எதுவும் பேசாமல் அவளை இழுத்து சுவரின் மீது சாய வைத்து இரு பக்கமும் அவன் கைகளால் அரண் அமைத்து அவளைப் பார்வையிலையே துளைத்து எடுத்தான்.
சனந்தாவிற்கு அவனின் பார்வை புரிய, “டைம் ஆகுது வாங்க போலாம்” என்று சனந்தா அவன் தோள் மீது கையை வைத்து நகர முயற்சிக்கவும் அது பலனின்றி தான் போனது.
விக்ரம் மெதுவாக அவளின் முகத்தை அவன் ஒரு கையால் ஏந்தியும் மறு கையால் அவளின் இடது தோளிலிருந்து கோலம் போட்டுக் கொண்டே அவளது இடையே நெருங்கி, அவளை ஒரு முறை உற்று பார்த்து பின் அவளின் இடையை இறுக்கி பிடிக்க, சனந்தா அதிர்ந்து கண்களை விரித்து பேசுவதற்குள் அவளின் இதழ்களை சிறைப் பிடித்தான்.
சிறிது நேரத்தில் அவளையும் மீறி அவனுடைய கழுத்தில் அவள் இரு கைகளை மாலையாக போட்டுக் கொண்டு அவனுடைய முடியில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தாள். பின் நீண்ட நேர முத்தத்திற்கு இடைவேளை விட, விக்ரம் அவளுடைய கழுத்து வளையத்தில் அவன் முகத்தை புதைத்து அவன் மீசையுடன் சேர்ந்து அவ்விடத்தை உரசி விட்டு அழுத்தமாக முத்தத்தை பதிக்கவும் சனந்தாவும் அவனுடைய கழுத்து வளையத்தில் அழுத்தமாக முத்தத்தை பதித்தாள்.
பூனை குட்டி!!!! என்று கிறக்கமாக விக்ரம் அழைக்கவும், ம்ம்!!!! மட்டும் கொட்டினாள் சனந்தா. “எவ்வளவு அழகா இருக்க தெரியுமா டி…. பின்னாடி இருந்து பார்க்கும் போது யாரோன்னு நினைச்சேன்…. அப்புறமா பார்த்தா அது நீ தான்… அழகா இருக்க பூனைக்குட்டி” என்று அவளுடைய கழுத்து வளையத்தில் அவனுடைய கன்னத்தை வைத்து தேய்த்துக் கொண்டே அவள் காதில் கிசுகிசுத்தான்.
அவனது செயலால் ஏற்கனவே அவள் செயலிழந்து தான் இருந்தாள். இப்போது அவன் பேசியதில் மேலும் உடல் முழுவதும் சிலிர்த்தது அவளுக்கு. “நீங்க இன்னும் எவ்ளோ ஹான்ட்ஸமா இருக்கீங்க தெரியுமா… இது நான் வாங்கி கொடுத்த ஷர்ட் தானே… அதை போட்டுட்டு வேஷ்டி கட்டிட்டு…. ஷர்ட் ஹேண்ட்ஸ் த்ரீ ஃபோர்த் மடிச்சு விட்டுட்டு… நீட்டா ஷேவ் பண்ணிட்டு… மீசைய அழகா ட்ரிம் பண்ணிட்டு அப்படி இருக்கீங்க விக்ரம் நீங்க” என்று சனந்தாகவும் அவனை வர்ணித்தாள்.
விக்ரம் அவளை மேலும் இறுக்கமாக அணைத்து அவளது இடையை இன்னும் அழுத்தி அவளது இதழ்களை நோக்கி செல்லவும் விக்ரமின் கைபேசி அழைத்தது. “ப்ச்… யார்ரா இந்த நேரத்துல” என்று கடுப்புடன் விக்ரம் எடுத்து பார்க்க சரவணன் என்று இருந்தது.
“என்னடா வேணும் உனக்கு” என்று விக்ரம் கடுப்புடன் பேசவும், “உன்ன தான் இங்க ஊரே தேடிட்டு இருக்கு எப்ப வர??” என்று சரவணன் கேலியாக கூற, “சரி வரேன் நீ ஃபோனை வை” என்றான் விக்ரம் கடுப்புடன். “நம்ம போலாம்…. எல்லாரும் இருப்பாங்க வேற” என்று சனந்தா கூறவும், விக்ரம் திரும்பவும் சனந்தாவை ஒரு முறை இறுக்கமாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, இப்ப போலாம்!!! என்று விக்ரம் கூறினான்.
சனந்தா அவளது உடையை சரி செய்து கொண்ட பின் அவளது கைபேசியை எடுத்துக் கொண்டு விக்ரமுடன் பைக்கில் சென்றாள். இருவரும் ஒரு சேர வரவும் ஊர் மக்கள் அனைவரும் அவர்களை பார்த்து திருஷ்டி எடுக்காத குறை தான். அனைவருக்கும், இருவரும் ஜோடி ஆனால் அம்சமாக இருக்கும் என்ற எண்ணமும் தோன்ற தான் செய்தது.
ஊர் மக்கள் அரசல் புரசலாக பேசவும் அது சனந்தாவின் அம்மா லக்ஷ்மியின் காதில் விழவும் அவரும் புன்னகைத்துக் கொண்டார். பெண்ணை பெற்றவள் ஆச்சே அதிலும் காதல் திருமணம் முடித்தவளாச்சே, சனந்தாவின் பார்வைக்கு அர்த்தம் தெரியாமலா இருக்கும் லக்ஷ்மிக்கு. இருப்பினும் சனந்தாவே லக்ஷ்மியிடம் வந்து பேசட்டும் என்று லக்ஷ்மி சனந்தாவிடம் எதையும் கேட்கவில்லை.
சனந்தா மற்றும் விக்ரம் வந்தடையவும், “நானே ஊர்ல இருந்து கிளம்பி வந்துட்டேன், உனக்கென்ன…. இங்க பாரு என் மருமக கூட வந்து முதல்ல என்கிட்ட தான் பேசினா” என்று கவிதாவை காட்டி என்று லக்ஷ்மி கேலியாக கேட்கவும், “இல்லமா நான்…” என்று சனந்தா ஆரம்பிக்கவும், “இல்ல அத்தை அவ ரெடி ஆயிட்டா…. நான் தான் லேட் இன்னிக்கி… அப்புறம் எப்ப வந்தீங்க எப்படி இருக்கீங்க அத்தை??” என்று விக்ரம் சனந்தாவுக்கு பரிந்து பேசி நலம் விசாரித்தான்.
லக்ஷ்மி புன்னகையுடன் விக்ரமிடம் நலம் விசாரித்தார். “மாமா வரலையா அத்தை??” என்று விக்ரம் கேட்கவும், “இல்லப்பா நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு” என்று லக்ஷ்மி கூறினார். “இங்க பார்த்தியா எவ்ளோ வாய் நிறைய அத்தை மாமானு கூப்பிடுறான்னு…. நீயும் தான் இருக்க இன்னும் ஆன்ட்டி ஆன்ட்டின்னு சொல்லிட்டு” என்று வள்ளி குறை கூறினார்.
“இன்னுமாடி அப்படி கூப்பிட்டு இருக்க??” என்று லக்ஷ்மி கேட்க, “அது தானா வரணும்மா” என்று சனந்தா கூறவும், “அதெல்லாம் எனக்கு தெரியாது இப்பவே அத்தைன்னு கூப்பிடுற அவ்வளவு தான்” என்று வள்ளி ஒற்றை காலில் நிற்கவும்,
“சரிங்க அத்தை இனிமே உங்கள அத்தைன்னு கூப்பிடுறேன் அத்தை… போதுமா அத்தை” என்று சனந்தா கேலியாக கூறவும், “இப்படி விளையாட்டா இல்ல சனா… நிஜமா கூப்பிடு” என்று வள்ளி ஆசையுடன் கேட்க, “கண்டிப்பா கூப்பிடுறேன் அத்தை” என்று சனந்தா உறுதி அளித்தாள்.
ஊரில் உள்ளவர்களின் உற்றார் உறவினர் என அனைவரும் ஒன்று சேர்ந்து திரண்டு இருந்தனர். படிப்பிற்காக வெளியூர் சென்றிருக்கும் அனைவரும் அப்போது பூஜையின் காரணமாக விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தனர் ரம்யா உட்பட.
கார்த்திக் சனந்தாவிடம் வந்து, “அழகா இருக்கீங்க சனா… ரம்யா சொன்ன மாதிரி குட்டியா தான் இருக்கீங்க” என்று கார்த்திக் கூறவும், “ஐயோ ப்ளீஸ் அதையே எல்லாரும் சொல்லாதீங்க” என்று சனந்தா கூறவும், வள்ளியும் கார்த்திக் மற்றும் ரம்யாவுடன் சேர்ந்து சனந்தாவை கேலி செய்தனர்.
பின்பு திலோ பாட்டியை சனந்தா லக்ஷ்மிக்கு அறிமுகப்படுத்தவும் லக்ஷ்மி சிறிது நேரம் பாட்டியிடம் பேசினார்.
“உங்க பொண்ண இங்க அனுப்பி வெச்சிடுறீங்களா??” என்று பாட்டி கேட்க, லக்ஷ்மிக்கு அவர் என்ன கேட்கிறார் என்பது புரியவும், “அவளுக்கு சம்மதம்னா எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லமா…. அவளோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்” என்று லக்ஷ்மி கூறவும்,
“அவளே கூடிய சீக்கிரம் வந்து உங்க கிட்ட சொல்லுவா…. எங்க ஊர காக்க வந்த தேவதை சனா” என்று பாட்டி கூறவும், “நீங்க சொல்லும் போது எனக்கு உண்மையிலே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று லக்ஷ்மி பெருமையுடன் கூறினார்.
சரவணன் பெற்றோரும் வந்துடைந்து அனைவரிடமும் பேசி இடமே கலகலப்பாக இருந்தது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமைத்து உணவருந்தி பாட்டு பாடி ஆட்டம் ஆடி என்று நான்கு நாட்களும் எப்படி போனது என்று தெரியாமல் இருந்தது அங்கிருந்த அனைவருக்கும்.
சனந்தாவின் பெற்றோரும் வந்து முடிந்த அளவுக்கு அனைத்திலும் கலந்து கொண்டு பின் வேலை இருப்பதாக கூறி சென்று விட்டனர். கௌதம் விடுப்பு எடுக்க முடியாத காரணத்தினால் அவனால் வர இயலாமல் போனது அது கவிதாவுக்கு வருத்தமே. பின்பு இதற்கு முன் அந்த கிராமத்தில் வேலை செய்த அதிகாரிகள், டாக்டர்கள் என அனைவரும் வந்து விட்டு சென்றனர்.
இப்படி கோலாகலமாக ஊரே சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது அடுத்த நாள் அவர்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி என்னவென்று தெரியாமல்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
விக்ரம் வள்ளியிடம் சனந்தாவை கோவிலுக்கு தான் அழைத்து வருவதாக கூறவும் வள்ளியும் அமோதித்தார்.
“நீயே கூட்டிட்டு வா டா…. ஆனா, அவ என்ன இன்னும் ஆளையே காணோம்… அவ தான் முதல்ல எந்திரிச்சு குளிச்சிட்டா இன்னும் ரூம விட்டு வரவே இல்ல என்னன்னே தெரியல” என்று வள்ளி கூறவும், “அவ ரெடி ஆயிட்டு இருப்பா… ரெடி ஆகிட்டா அவளே வருவா” என்று விக்ரம் கூறினான்.
“சரி டா அப்பா வந்ததும் நீ அடுத்து குளிச்சிட்டு வந்து ரெடியா இரு…. அப்பா வந்ததுக்கப்புறம் நானும் அப்பாவும் கிளம்புறோம் சரியா” என்று வள்ளி கூறவும் சரி என்று கூறினான் விக்ரம். ஸ்ரீனிவாசன் வந்ததும் அவர் தயாராக சொல்லவும் விக்ரமும் குளிக்க சென்றான்.
சனந்தா தயாராகி தயக்கத்துடன் வீட்டிற்குள் வரவும் ஹாலில் வள்ளி அமர்ந்திருக்கவும், சனந்தாவை பார்த்ததும் ஓடி சென்று அவளிடம், “ஹே சனா!! அழகா இருக்க” என்று திருஷ்டி கழித்தார் வள்ளி.
ஸ்ரீனிவாசன் தயாராகி வெளியே வரவும் சனந்தாவை பார்த்து புன்னகைத்து, லட்சணமா இருக்க சனா என்று கூறவும் சனந்தா புன்னகைத்தாள். “இதுக்கு தான் வெளியில வர தயக்கமா உனக்கு” என்று வள்ளி கேட்க, “ஆமா ஆன்ட்டி…. இல்ல டிரஸ் மாத்திரலாம்னு கூட முடிவு பண்ணிட்டேன்…. அம்மா பூஜைக்காக தான் முக்கியமா இந்த டிரஸ் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தாங்க…. அதான் தாவணி போட்டுக்கிட்டேன்” என்று தயக்கத்துடன் சனந்தா கூறினாள்.
மஞ்சள் மற்றும் நீல நிற பேஸ்டல்ஸ் கலர்ஸ் காம்பினேஷனில் ஜார்ஜெட் துணியில் சனந்தா தாவணியை உடுத்தி இருந்தாள். மேலும் அளவான ஒப்பனை செய்து இன்று அழகு பதுமையாக காணப்பட்டாள் சனந்தா.
“நீ ஃபுல் டிரஸ் போட்டுட்டு இருக்கும் போது எல்லாம் நினைச்சி இருக்கேன் நீ கொஞ்சம் பூசினாப்புல இருக்கேன்னு…. ஆனா அப்படி இல்ல டா நீ…. பார்க்க ரொம்ப குட்டியா இருக்க” என்று வள்ளி கூறவும், விக்ரம் அவளை பூனை குட்டி என்று கூறுவது தான் நினைவுக்கு வந்தது சனந்தாவுக்கு.
“அப்படி இல்ல ஆன்ட்டி இங்க க்ளைமேட்க்கு ஏத்த மாதிரி தான் டிரஸ் பண்ணேன்…. அது போக இந்த கைல பார்த்தீங்களா அந்த தழும்பு எல்லாம் இருக்கு அதுக்காக தான் ஃபுல் டிரஸ் போட்டுட்டு சுத்திட்டு இருப்பேன்” என்று சனந்தா தயக்கத்துடன் கூறவும், “அப்படி ஒன்னும் பெருசா தெரியலையே இப்போ” என்று வள்ளி கூறவும், “இப்போ கொஞ்சம் நல்லாவே மறைஞ்சிருச்சு ஆன்ட்டி” என்று சனந்தா கூறினாள்.
விக்ரம் குளித்து வரவும் சனந்தா வள்ளியிடம் பேசிக் கொண்டிருக்க அவளின் பின்புறம் மட்டுமே தெரிந்தது அவனுக்கு. “யார் இது கவிதாவா இருக்குமோ… இல்லையே கவிதா கொஞ்சம் ஹைட்டா இருப்பா கொஞ்சம் பூசுனாப்புலயும் இருப்பா… இது குட்டியா இருக்கே ஒரு வேள நம்ம ஆளோ” என்று அவன் தலையை துவட்டிக் கொண்டே அவளை பார்த்துக் கொண்டே யோசனையுடன் அவனுடைய அறைக்கு சென்று திரும்பி கதவை மூடவும், அப்பொழுது தான் தெரிந்துது அவனுக்கு, “அட நம்ம ஆளு தான்” என்று வைத்த கண்ணை எடுக்காமல் சனந்தாவை பார்த்துக் கொண்டே கதவை மூடினான்.
சனந்தா அவனை கவனித்தாலும், ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி இருக்கும் காரணத்தினால் அவனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. “சரிம்மா நீங்க வாங்க நாங்க முன்னாடி போய்கிட்டு இருக்கோம்” என்று கூறி வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் புறப்பட்டனர்.
பின் சனந்தா அவளுடைய அறைக்கு சென்று காலையில் எடுத்து போட்ட அவளுடைய துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டு, வெறும் ஃபோன் மட்டும் போதும்ல என்று அவளுக்குள் கேட்டுக் கொண்டு எடுத்து வைத்துக் கொண்டிருக்கவும், விக்ரம் சனந்தா!!! என்று அழைக்க,
இதோ வந்துட்டேன் என்று கூறி கதவை திறந்து, “என் ஃபோன் மட்டும் எடுத்துக்கிறேன்… வேற ஏதாவது எடுத்துக்கணுமா???” என்று சனந்தா கேட்க, “வேற எதுவும் வேணாம்” என்பது போல் தலையை மட்டும் விக்ரம் அசைத்து சனந்தாவை தலை முதல் கால் வரை அவன் முழுங்கி கொண்டு இருந்தான்.
அவனுடைய பார்வையை எதிர்க் கொள்ள முடியாமல், “ஃபோன் மட்டும் கொண்டு வரேன்” என்று வேற எங்கேயோ பார்த்துக் கொண்டே சனந்தா கூறி உள்ளே செல்லவும், விக்ரமும் அவளை பின்தொடர்ந்து அவளின் அறைக்குள் சென்று கதவை தாளிட்டான்.
இதை சற்றும் எதிர்பாராத சனந்தா அதிர்ந்து, “என்ன பண்றீங்க??” என்று கேட்க, விக்ரம் எதுவும் பேசாமல் அவளை இழுத்து சுவரின் மீது சாய வைத்து இரு பக்கமும் அவன் கைகளால் அரண் அமைத்து அவளைப் பார்வையிலையே துளைத்து எடுத்தான்.
சனந்தாவிற்கு அவனின் பார்வை புரிய, “டைம் ஆகுது வாங்க போலாம்” என்று சனந்தா அவன் தோள் மீது கையை வைத்து நகர முயற்சிக்கவும் அது பலனின்றி தான் போனது.
விக்ரம் மெதுவாக அவளின் முகத்தை அவன் ஒரு கையால் ஏந்தியும் மறு கையால் அவளின் இடது தோளிலிருந்து கோலம் போட்டுக் கொண்டே அவளது இடையே நெருங்கி, அவளை ஒரு முறை உற்று பார்த்து பின் அவளின் இடையை இறுக்கி பிடிக்க, சனந்தா அதிர்ந்து கண்களை விரித்து பேசுவதற்குள் அவளின் இதழ்களை சிறைப் பிடித்தான்.
சிறிது நேரத்தில் அவளையும் மீறி அவனுடைய கழுத்தில் அவள் இரு கைகளை மாலையாக போட்டுக் கொண்டு அவனுடைய முடியில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தாள். பின் நீண்ட நேர முத்தத்திற்கு இடைவேளை விட, விக்ரம் அவளுடைய கழுத்து வளையத்தில் அவன் முகத்தை புதைத்து அவன் மீசையுடன் சேர்ந்து அவ்விடத்தை உரசி விட்டு அழுத்தமாக முத்தத்தை பதிக்கவும் சனந்தாவும் அவனுடைய கழுத்து வளையத்தில் அழுத்தமாக முத்தத்தை பதித்தாள்.
பூனை குட்டி!!!! என்று கிறக்கமாக விக்ரம் அழைக்கவும், ம்ம்!!!! மட்டும் கொட்டினாள் சனந்தா. “எவ்வளவு அழகா இருக்க தெரியுமா டி…. பின்னாடி இருந்து பார்க்கும் போது யாரோன்னு நினைச்சேன்…. அப்புறமா பார்த்தா அது நீ தான்… அழகா இருக்க பூனைக்குட்டி” என்று அவளுடைய கழுத்து வளையத்தில் அவனுடைய கன்னத்தை வைத்து தேய்த்துக் கொண்டே அவள் காதில் கிசுகிசுத்தான்.
அவனது செயலால் ஏற்கனவே அவள் செயலிழந்து தான் இருந்தாள். இப்போது அவன் பேசியதில் மேலும் உடல் முழுவதும் சிலிர்த்தது அவளுக்கு. “நீங்க இன்னும் எவ்ளோ ஹான்ட்ஸமா இருக்கீங்க தெரியுமா… இது நான் வாங்கி கொடுத்த ஷர்ட் தானே… அதை போட்டுட்டு வேஷ்டி கட்டிட்டு…. ஷர்ட் ஹேண்ட்ஸ் த்ரீ ஃபோர்த் மடிச்சு விட்டுட்டு… நீட்டா ஷேவ் பண்ணிட்டு… மீசைய அழகா ட்ரிம் பண்ணிட்டு அப்படி இருக்கீங்க விக்ரம் நீங்க” என்று சனந்தாகவும் அவனை வர்ணித்தாள்.
விக்ரம் அவளை மேலும் இறுக்கமாக அணைத்து அவளது இடையை இன்னும் அழுத்தி அவளது இதழ்களை நோக்கி செல்லவும் விக்ரமின் கைபேசி அழைத்தது. “ப்ச்… யார்ரா இந்த நேரத்துல” என்று கடுப்புடன் விக்ரம் எடுத்து பார்க்க சரவணன் என்று இருந்தது.
“என்னடா வேணும் உனக்கு” என்று விக்ரம் கடுப்புடன் பேசவும், “உன்ன தான் இங்க ஊரே தேடிட்டு இருக்கு எப்ப வர??” என்று சரவணன் கேலியாக கூற, “சரி வரேன் நீ ஃபோனை வை” என்றான் விக்ரம் கடுப்புடன். “நம்ம போலாம்…. எல்லாரும் இருப்பாங்க வேற” என்று சனந்தா கூறவும், விக்ரம் திரும்பவும் சனந்தாவை ஒரு முறை இறுக்கமாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, இப்ப போலாம்!!! என்று விக்ரம் கூறினான்.
சனந்தா அவளது உடையை சரி செய்து கொண்ட பின் அவளது கைபேசியை எடுத்துக் கொண்டு விக்ரமுடன் பைக்கில் சென்றாள். இருவரும் ஒரு சேர வரவும் ஊர் மக்கள் அனைவரும் அவர்களை பார்த்து திருஷ்டி எடுக்காத குறை தான். அனைவருக்கும், இருவரும் ஜோடி ஆனால் அம்சமாக இருக்கும் என்ற எண்ணமும் தோன்ற தான் செய்தது.
ஊர் மக்கள் அரசல் புரசலாக பேசவும் அது சனந்தாவின் அம்மா லக்ஷ்மியின் காதில் விழவும் அவரும் புன்னகைத்துக் கொண்டார். பெண்ணை பெற்றவள் ஆச்சே அதிலும் காதல் திருமணம் முடித்தவளாச்சே, சனந்தாவின் பார்வைக்கு அர்த்தம் தெரியாமலா இருக்கும் லக்ஷ்மிக்கு. இருப்பினும் சனந்தாவே லக்ஷ்மியிடம் வந்து பேசட்டும் என்று லக்ஷ்மி சனந்தாவிடம் எதையும் கேட்கவில்லை.
சனந்தா மற்றும் விக்ரம் வந்தடையவும், “நானே ஊர்ல இருந்து கிளம்பி வந்துட்டேன், உனக்கென்ன…. இங்க பாரு என் மருமக கூட வந்து முதல்ல என்கிட்ட தான் பேசினா” என்று கவிதாவை காட்டி என்று லக்ஷ்மி கேலியாக கேட்கவும், “இல்லமா நான்…” என்று சனந்தா ஆரம்பிக்கவும், “இல்ல அத்தை அவ ரெடி ஆயிட்டா…. நான் தான் லேட் இன்னிக்கி… அப்புறம் எப்ப வந்தீங்க எப்படி இருக்கீங்க அத்தை??” என்று விக்ரம் சனந்தாவுக்கு பரிந்து பேசி நலம் விசாரித்தான்.
லக்ஷ்மி புன்னகையுடன் விக்ரமிடம் நலம் விசாரித்தார். “மாமா வரலையா அத்தை??” என்று விக்ரம் கேட்கவும், “இல்லப்பா நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு” என்று லக்ஷ்மி கூறினார். “இங்க பார்த்தியா எவ்ளோ வாய் நிறைய அத்தை மாமானு கூப்பிடுறான்னு…. நீயும் தான் இருக்க இன்னும் ஆன்ட்டி ஆன்ட்டின்னு சொல்லிட்டு” என்று வள்ளி குறை கூறினார்.
“இன்னுமாடி அப்படி கூப்பிட்டு இருக்க??” என்று லக்ஷ்மி கேட்க, “அது தானா வரணும்மா” என்று சனந்தா கூறவும், “அதெல்லாம் எனக்கு தெரியாது இப்பவே அத்தைன்னு கூப்பிடுற அவ்வளவு தான்” என்று வள்ளி ஒற்றை காலில் நிற்கவும்,
“சரிங்க அத்தை இனிமே உங்கள அத்தைன்னு கூப்பிடுறேன் அத்தை… போதுமா அத்தை” என்று சனந்தா கேலியாக கூறவும், “இப்படி விளையாட்டா இல்ல சனா… நிஜமா கூப்பிடு” என்று வள்ளி ஆசையுடன் கேட்க, “கண்டிப்பா கூப்பிடுறேன் அத்தை” என்று சனந்தா உறுதி அளித்தாள்.
ஊரில் உள்ளவர்களின் உற்றார் உறவினர் என அனைவரும் ஒன்று சேர்ந்து திரண்டு இருந்தனர். படிப்பிற்காக வெளியூர் சென்றிருக்கும் அனைவரும் அப்போது பூஜையின் காரணமாக விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தனர் ரம்யா உட்பட.
கார்த்திக் சனந்தாவிடம் வந்து, “அழகா இருக்கீங்க சனா… ரம்யா சொன்ன மாதிரி குட்டியா தான் இருக்கீங்க” என்று கார்த்திக் கூறவும், “ஐயோ ப்ளீஸ் அதையே எல்லாரும் சொல்லாதீங்க” என்று சனந்தா கூறவும், வள்ளியும் கார்த்திக் மற்றும் ரம்யாவுடன் சேர்ந்து சனந்தாவை கேலி செய்தனர்.
பின்பு திலோ பாட்டியை சனந்தா லக்ஷ்மிக்கு அறிமுகப்படுத்தவும் லக்ஷ்மி சிறிது நேரம் பாட்டியிடம் பேசினார்.
“உங்க பொண்ண இங்க அனுப்பி வெச்சிடுறீங்களா??” என்று பாட்டி கேட்க, லக்ஷ்மிக்கு அவர் என்ன கேட்கிறார் என்பது புரியவும், “அவளுக்கு சம்மதம்னா எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லமா…. அவளோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்” என்று லக்ஷ்மி கூறவும்,
“அவளே கூடிய சீக்கிரம் வந்து உங்க கிட்ட சொல்லுவா…. எங்க ஊர காக்க வந்த தேவதை சனா” என்று பாட்டி கூறவும், “நீங்க சொல்லும் போது எனக்கு உண்மையிலே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று லக்ஷ்மி பெருமையுடன் கூறினார்.
சரவணன் பெற்றோரும் வந்துடைந்து அனைவரிடமும் பேசி இடமே கலகலப்பாக இருந்தது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமைத்து உணவருந்தி பாட்டு பாடி ஆட்டம் ஆடி என்று நான்கு நாட்களும் எப்படி போனது என்று தெரியாமல் இருந்தது அங்கிருந்த அனைவருக்கும்.
சனந்தாவின் பெற்றோரும் வந்து முடிந்த அளவுக்கு அனைத்திலும் கலந்து கொண்டு பின் வேலை இருப்பதாக கூறி சென்று விட்டனர். கௌதம் விடுப்பு எடுக்க முடியாத காரணத்தினால் அவனால் வர இயலாமல் போனது அது கவிதாவுக்கு வருத்தமே. பின்பு இதற்கு முன் அந்த கிராமத்தில் வேலை செய்த அதிகாரிகள், டாக்டர்கள் என அனைவரும் வந்து விட்டு சென்றனர்.
இப்படி கோலாகலமாக ஊரே சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது அடுத்த நாள் அவர்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி என்னவென்று தெரியாமல்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 100
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 100
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.