மறுநாள் சந்திரசேகர், பிரகாஷ் இருவரும் அனைத்து பூஜைகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அங்கு வேலை செய்து சென்ற பழைய அதிகாரிகள் டாக்டர்கள் என அனைவரும் வந்து விழாவை சிறப்பித்து சென்றனர். லக்ஷ்மி மேலோட்டமாக சனந்தா மற்றும் விக்ரமை பற்றி சந்திரசேகரிடம் கூறவும், அதற்கு அவருக்கும் சனந்தாவின் முடிவு மீது தான் முழு நம்பிக்கை… அதுவும் அவள் என்ன முடிவு எடுக்கிறாளோ அது தான் உறுதி என்று கூறிவிட்டார்.
“இது தாங்க நானும் வள்ளி கிட்ட சொன்னேன் அவளோட முடிவு தான் அப்படின்னு… அவங்களுக்கு என்ன தயக்கம்னா இங்க கிராமம்ல அப்படின்னு யோசிக்கிறாங்க” என்று லக்ஷ்மி கூறவும், “இதெல்லாம் ஒன்னும் இல்ல பார்த்துக்கலாம்…. அவளுக்கு ஓகேன்னா எல்லாருக்கும் ஓகே தான்” என்று சந்திரசேகர் கூறினார்.
சந்திரசேகர், லக்ஷ்மி மற்றும் பிரகாஷ் மூவரும் விழாவை சிறப்பித்து முடித்து நான்காவது நாளில் ஊருக்கு புறப்பட்டனர் வேலை இருப்பதாக கூறி. அப்படியே நான்காவது நாளும் மிகவும் கோலாகலமாகவே இருந்தது ஐந்தாவது நாள் காத்திருக்கும் பேரதிர்ச்சி யாருக்கும் தெரியாமல்.
அப்படி பழைய நினைவுகளை அசைப் போட்டு கொண்டு பால்கனியில் இருந்து எழுந்து கண்களை துடைத்துக் கொண்டு அவளது படுக்கை மீது சரிந்து உறங்கிவிட்டாள் சனந்தா.
“எல்லாரும் சொல்றாங்க இல்லடா கொஞ்சம் பொறுமையா இரு…. ஏன்னா அவ யார் கிட்டயும் மனசு விட்டு இன்னும் பேசவே இல்ல டா… அப்படி பேசுற ஆள் கூட கிடையாது” என்று சரவணன் கூறவும்,
“எனக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கணும்னு தோணுது தாண்டா….. ஆனா, என்கிட்ட பேசல அப்படின்னு நினைக்கும் போதே எனக்கு மனசு எல்லாம் கஷ்டமா இருக்குடா…. இந்த எக்ஸ்போர்ட் விஷயத்துல கூட பாரேன், நானும் அவளும் சேர்ந்து இன்ஸ்பெக்ஷனுக்கு போகணும்…. ஆனா, அவ கோயம்புத்தூரில இருந்தே முரளி சார் வெச்சு எல்லாமே அங்கேயே முடிச்சு அனுப்பிடுறா….. அதையும் தாண்டி ஊட்டிக்கு வரணும் அப்படின்னாலும் கூட எப்படியும் என்னை பார்க்காமலே போயிடுறா…. எனக்கு அவ மேல கோபமே இல்ல… என்னையே வெறுக்கிறேன் டா அது எனக்கு ரொம்ப வலிக்குது டா” என்று விக்ரம் அழுது கொண்டே கூறினான்.
“ஏன் டா இப்படி தினமும் அழுகுற… உன்னை பார்க்கவே கஷ்டமா இருக்கு” என்று சரவணன் கூறவும், “அப்படி இல்ல சரவணா உனக்கு ஞாபகம் இருக்குல அவ இந்த ஊருக்கு வரும் போது ஊட்டியில அந்த இன்ஸ்பெக்ஷன் வேலையும் சேர்த்து முடிக்கலாம்னு பிளான் பண்ணி வந்தா அப்படின்னு தெரிஞ்ச உடனே என்னால ஏத்துக்கவே முடியல”....
“ஏன்னா அவ முழுசா இங்க எனக்காக தான் இருக்கணும்னு அப்பவே எனக்கு கோவம் வந்தது…. அப்படி இருக்கும் போது அவளுக்கும் இப்ப அப்படித் தானே இருக்கும்….. அவளை இங்க நம்மளோட கோபத்துல, ஏதோ பண்ணிட்டான்னு தான் பழிவாங்க தான் கூட்டிட்டு வந்து இருக்காங்கன்னு தானே அவளுக்கு தோணும்…. அதுக்கு நான் அவ கிட்ட சாரி கேட்கணும்டா…. நான் சாரி கேட்டா அவ கண்டிப்பா புரிஞ்சுப்பா…. ஆனா, அந்த சாரி கேக்குறதுக்கு கூட வழி இல்லாம தவிச்சுக்கிட்டு இருக்கேன் டா” என்று விக்ரம் வருத்தத்துடன் கூறினான்.
சரவணன் விக்ரம் தோளை தட்டி, “எனக்கு புரியுது மச்சான் உன் நிலைமை… என்கிட்ட விகாஷ் சொன்னத திரும்பவும் உன்கிட்ட சொல்றேன்… முடிஞ்சா இத ட்ரை பண்ணி பாரு…. அப்பப்போ அவளுக்கு உன்னை ஞாபகப்படுத்திட்டே இரு… எனக்கு தெரியும் நீ டெய்லி ஃபோன் பண்ற மெசேஜ் பண்றன்னு… இன்னும் சொல்லப் போனா அவளும் அதெல்லாம் படிக்கிறான்னு தெரியும்… அதே மாதிரி உன்னோட பர்த்டேக்காக கிஃப்ட் எல்லாம் கூட வாங்கி வெச்சிருக்களாம்….
“அவளுக்கும் அந்த ஆசை இருக்கு ஆனா, அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுத்தா அவ தானா சரியாயிருவா…. ஆனா, அந்த டைம் கிடைக்குற கேப்ல முடிஞ்ச அளவுக்கு நீ அப்பப்போ போய் அவளை பார்த்துட்டு வா…. அவ உன்னை முகத்துக்கு நேரா பார்க்கலனா கூட பரவால்ல நீ அங்க இருக்க என்ற ஃபீல் அவளுக்கு குடு…. அப்ப தான் நீ அவளை தேடி வர முயற்சி பண்ணிட்டு இருக்க இவ்ளோ எஃபர்ட் போடுறேன்னு அவளுக்கு தெரியும்….. அதுல ஏதோ ஒரு நாள்ல கண்டிப்பா அவ மனசு இறங்கிடுவா அப்படின்னு விகாஷ் ஒரு வாட்டி சொல்லி இருக்கான்… அத ட்ரை பண்ணு” என்ற சரவணன் கூறினான்.
“கண்டிப்பா பண்றேன் டா… ஏதாவது ஒரு வழி கிடைச்சுராதான்னு தான் நானும் ஏங்கிட்டு இருக்கேன்…. கண்டிப்பா நீ சொல்றத பண்றேன் மச்சான்” என்று விக்ரம் உறுதி அளித்தான். பின் இருவரும் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தனர்.
“சரி அபிலாஷ் வந்துட்டானா??” என்று விக்ரம் கேட்க, “இல்லடா அவன் நாளைக்கு வந்துருவான்னு நினைக்கிறேன்” என்று சரவணன் கூறினான். “எப்படியோ டா அவன் இந்த கல்யாணதுக்கு சம்மதிச்சதே பெருசு… எங்க இன்னும் குழப்பத்திலேயே இருக்குறானோன்னு நான் பயந்துட்டேன்” என்று விக்ரம் கூறினான்.
“நானும் அப்படித் தான் நினைச்சேன்… வீட்ல பார்த்த பொண்ணு என்னடான்ன நமக்கு இங்க வர டாக்டர் அனுவா இருந்தது…. அது போக அவங்களும் வந்து அவங்க பக்கம் உண்மை எல்லாம் சொன்ன உடனே கண்டிப்பா அவன் அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிருவான்னு தான் நினைச்சேன்… ஆனா, அவங்க பக்கம் இருந்த சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு எதுவும் பேசாம அனுப்பி வெச்சதே பெருசு…. கடைசியில பார்த்தா அந்த பொண்ணு தான் அவங்க வீட்ல பார்த்து வெச்சிருக்க பொண்ணா இருக்க போக அவ்ளோ தான் அவன் கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்னு தான் நினைச்சேன்” என்று சரவணன் கூறினான்.
“ஆமா அவன் எங்க ஒத்துக்கிட்டான்… நீ பேசி எடுத்து சொல்லி அப்படித் தான் அனு கிட்டயே பேச ஆரம்பிச்சான்… அதுக்கப்புறம் கல்யாணத்துக்கு எப்படியோ சம்மதிச்சான்….. அடுத்த மாசத்துல கல்யாணமும் கூட அவனுக்கு” என்று விக்ரம் கூறினான்.
“ம்ம்…. என்ன இருந்தாலும் அந்த பாட்டி சொல்றது ஓரளவுக்கு நடந்துருச்சுடா…. இப்ப கூட பாரேன் அபர்ணா ஏதோ ஒரு ரூபத்துல கண்டிப்பா இங்க வந்து வாழ்வா அப்படின்னு அவங்க ரொம்ப உறுதியாக சொன்னாங்க…. அபிக்கு கல்யாணம் ஆயிட்டா அனுவும் இங்க தான் இருக்க போறேன்னு ஒத்த கால்ல நிக்கிறா… அதுவும் நடந்துருச்சு… அது போக சனந்தாக்கும் அப்படித் தான் சொல்லி இருக்காங்க பாட்டி கண்டிப்பா அவளும் இந்த ஊருக்கு வந்துருவான்னு… அதுவும் நடக்கும் விக்ரம் அது நம்பு” என்று சரவணன் கூறினான்.
“எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…. ஆனா, நேத்து போயிட்டு வந்ததுக்கு அப்புறமா கொஞ்சம் மனசு லேசான மாதிரி தான் இருக்கு எனக்கு…. அவள பார்க்க இந்த வாரத்துல நான் போயிட்டு வர பார்க்கிறேன்” என்று விக்ரம் கூறினான்.
அன்று, பூஜையின் ஐந்தாம் நாள் காலையிலும் கோலகலமாகவே இருந்தது. அன்று அனு, அனுவின் அப்பா ராஜ்மோகன் இருவரும் வந்து சாமி கும்பிட்டு விட்டு அபிலாஷிடமும், விக்ரம் பெற்றோர்களிடம் பேச வேண்டும் அதுவும் தனியாக பேச வேண்டும் என்று ராஜ்மோகன் கூறிய பின் விக்ரமின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
“ஒரு சின்ன வேலைடா நான் பார்த்துட்டு வந்துடுறேன் அதுவரைக்கும் நீ இங்கேயே இரு எல்லாம் பார்த்துக்கோ” என்று விக்ரம் சனந்தாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றான். ஆனால் சனந்தா விக்ரமின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரியவும், அவனை அழைத்து, “தைரியமா இருங்க உங்க மூஞ்சி சரியில்ல…. அது ஒன்னும் இருக்காது தைரியமா போயிட்டு வாங்க” என்று சனந்தா கூற விக்ரம் புன்னகைத்து தலையை அசைத்து சென்றான்.
விக்ரமின் வீட்டில், அபிலாஷ், சரவணன், விக்ரம், ஸ்ரீனிவாசன், வள்ளி, அனு மற்றும் ராஜ்மோகன் இருந்தனர். அவர் அபர்ணாவை பத்தி தான் பேச போகிறார் என்பது ஓரளவுக்கு அபிலாஷ், விக்ரம் மற்றும் சரவணனுக்கு தெரிந்து இருந்தது.
“என்னப்பா திடீர்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்ன ஏதாவது பேசணுமா??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, ராஷ்மோகன் முதலில் ஸ்ரீனிவாசனின் கைகளை பிடித்துக் கொண்டு, “எங்கள மன்னிச்சிடுங்க சார்” என்று கூறினார்.
“நீங்க ஏன் மன்னிப்பு கேக்குறீங்க எனக்கு புரியலையே…. நாங்க தான் உங்களுக்கு நன்றியை சொல்லணும் உங்க பொண்ண இங்க அனுப்புறதுக்கு” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “உங்க எல்லார் கிட்டயும் நான் ஒரு உண்மையை சொல்லணும் அபர்ணாவோட லிவர் இப்போ அனுவோட உடம்புல தான் இருக்கு” என்று ராஜ்மோகன் கூறவும் அனைவரும் அதிர்ச்சியாகினர்.
அபிலாஷ் ஏற்கனவே அபர்ணாவின் உடல் உறுப்பு சனந்தாவிடம் இல்ல என்ற சந்தேகத்தில் இருந்ததை தான் அனுவிடம் அவனுடைய அனுமானத்தை கூறவும் அவன் சனந்தாவின் பெயரையும் அபர்ணாவின் பெயரையும் வெளியே கூறாமலே வெறும் சந்தேகத்தை மட்டுமே கூறினான். அதனால் அனு அவளுடைய அப்பாவிடம் பெயர்களை சொல்ல வேண்டாம், முக்கியமாக சனந்தாவின் பெயரை வெளியே எடுக்க வேண்டாம் என்று கூறியே அழைத்து வந்தாள்.
“அபர்ணா கூட இன்னொரு பொண்ணு ஆக்சிடென்ட் ஆனப்போ இருந்தாங்கல… அந்த பொண்ணுக்கு தான் அபர்ணாவோட உடல் உறுப்பு இருக்குன்னு தான் நீங்க எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க…. ஆனா அது உண்மை இல்ல…. அனு ஒரு வருஷமா லிவர் டிசிஸ்ல பாதிக்கப்பட்டிருக்கா அவளுக்கு கண்டிப்பா டிரான்ஸ்பிளான்ட் தான் பண்ணனும்னு இருந்துது… அவளுக்காக நாங்க டோனர் எல்லாமே கேட்டு வெச்சிருந்தோம்…. அந்த சமயம் கரெக்டா அபர்ணாவோடது வந்ததும் நானும் ஹாஸ்பிடல்ல தான் இருந்தேன்” என்று ராஜ்மோகன் பேசிக் கொண்டிருக்கையில், “அதை நீங்க எங்க கிட்ட சொல்லிட்டு செஞ்சுருக்கலாமே சார்” என்று அபிலாஷ் ஆதங்கத்துடன் கேட்டான்.
“இல்லப்பா நான் உங்க கிட்ட கேட்க தான் நான் வந்தேன்… ஆனா அப்போ விக்ரம் தம்பி தான் அபர்ணா கூட இருந்த ஆளுக்கு தான் கொடுக்க சொன்னா அதனால அவங்களுக்கு கொடுக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டு இருந்ததை நான் கேட்டேன்…. நீங்க ஒரு வேலை அனுமதிக்காம போயிட்டீங்கன்னா திருப்பி இதே மாதிரி டோனர் அமைஞ்சு அனுவை நான் எப்ப காப்பாத்த முடியும் என்ற பயம் தான் எனக்குள்ள ரொம்ப சூழ்ந்துருச்சு…. அதனால தான் கூட வந்த அந்த பொண்ணு பேருலயே தான் அனு ஆப்ரேஷன் பண்ணி முடிச்சேன்… இது ஹாஸ்பிடல்ல என்னோட அசிஸ்டன்ட் டாக்டர் ஒரே ஒரு நர்ஸ் தவிர வேற யாருக்கும் தெரியாது…. இது ரொம்ப பெரிய தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க” என்று ராஜ்மோகன் கைகளை கூப்பி கூறினார்.
பெரும் அமைதி நிலவியது அங்கு. முதலில் வள்ளி வந்து அனுவைத் தொட்டு பார்த்து, “உடம்ப பத்திரமா பார்த்துக்கோ அபர்ணாவையும் பத்திரமா பாருத்துக்கோ…. முடிஞ்சா அப்பப்ப வந்து எங்கள பார்த்துட்டு போ” என்று கண்கள் கலங்க கூறினார்.
இதைப் பார்க்க அங்க இருந்த அனைவருக்குமே சங்கடம் ஆகிவிட்டது. “இல்லம்மா அனு தேர்னதுக்கு அப்புறமா அவ சொன்னது ஒன்னே ஒன்னு தான் அபர்ணாவ பத்தி விசாரிக்க சொன்னா…. அவங்க என்ன பண்ணிட்டு இருந்தாங்க ஏதுன்னு கேட்டா அப்புறம் நான் சொன்னதும் அந்த கிராமத்துக்கு கண்டிப்பா நான் போகணும்னு முடிவு பண்ணிட்டா….. இது என்னோட தப்பு தான் அதனால நீங்க அவள எதுவும் சொல்லிடாதீங்க” என்று ஒரு தந்தைக்கு உரித்தான பயத்தையும் சேர்த்து கூறினார் ராஜ்மோகன்.
“இல்ல இல்ல சார்…. ஏதோ ஒன்னு ஒரு நல்ல இடத்துக்கு போய் என் பொண்ணு ஒரு உயிரை காப்பாத்திருக்கா அப்படின்னு நினைக்கும் போது எங்களுக்கு சந்தோஷம் தான்…. ஆனா இது முன் கூட்டியே தெரிஞ்சி இருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணுது தானே தவிர உங்க மேல கோபம் எல்லாம் இல்லை சார்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
“இது தாங்க நானும் வள்ளி கிட்ட சொன்னேன் அவளோட முடிவு தான் அப்படின்னு… அவங்களுக்கு என்ன தயக்கம்னா இங்க கிராமம்ல அப்படின்னு யோசிக்கிறாங்க” என்று லக்ஷ்மி கூறவும், “இதெல்லாம் ஒன்னும் இல்ல பார்த்துக்கலாம்…. அவளுக்கு ஓகேன்னா எல்லாருக்கும் ஓகே தான்” என்று சந்திரசேகர் கூறினார்.
சந்திரசேகர், லக்ஷ்மி மற்றும் பிரகாஷ் மூவரும் விழாவை சிறப்பித்து முடித்து நான்காவது நாளில் ஊருக்கு புறப்பட்டனர் வேலை இருப்பதாக கூறி. அப்படியே நான்காவது நாளும் மிகவும் கோலாகலமாகவே இருந்தது ஐந்தாவது நாள் காத்திருக்கும் பேரதிர்ச்சி யாருக்கும் தெரியாமல்.
அப்படி பழைய நினைவுகளை அசைப் போட்டு கொண்டு பால்கனியில் இருந்து எழுந்து கண்களை துடைத்துக் கொண்டு அவளது படுக்கை மீது சரிந்து உறங்கிவிட்டாள் சனந்தா.
“எல்லாரும் சொல்றாங்க இல்லடா கொஞ்சம் பொறுமையா இரு…. ஏன்னா அவ யார் கிட்டயும் மனசு விட்டு இன்னும் பேசவே இல்ல டா… அப்படி பேசுற ஆள் கூட கிடையாது” என்று சரவணன் கூறவும்,
“எனக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கணும்னு தோணுது தாண்டா….. ஆனா, என்கிட்ட பேசல அப்படின்னு நினைக்கும் போதே எனக்கு மனசு எல்லாம் கஷ்டமா இருக்குடா…. இந்த எக்ஸ்போர்ட் விஷயத்துல கூட பாரேன், நானும் அவளும் சேர்ந்து இன்ஸ்பெக்ஷனுக்கு போகணும்…. ஆனா, அவ கோயம்புத்தூரில இருந்தே முரளி சார் வெச்சு எல்லாமே அங்கேயே முடிச்சு அனுப்பிடுறா….. அதையும் தாண்டி ஊட்டிக்கு வரணும் அப்படின்னாலும் கூட எப்படியும் என்னை பார்க்காமலே போயிடுறா…. எனக்கு அவ மேல கோபமே இல்ல… என்னையே வெறுக்கிறேன் டா அது எனக்கு ரொம்ப வலிக்குது டா” என்று விக்ரம் அழுது கொண்டே கூறினான்.
“ஏன் டா இப்படி தினமும் அழுகுற… உன்னை பார்க்கவே கஷ்டமா இருக்கு” என்று சரவணன் கூறவும், “அப்படி இல்ல சரவணா உனக்கு ஞாபகம் இருக்குல அவ இந்த ஊருக்கு வரும் போது ஊட்டியில அந்த இன்ஸ்பெக்ஷன் வேலையும் சேர்த்து முடிக்கலாம்னு பிளான் பண்ணி வந்தா அப்படின்னு தெரிஞ்ச உடனே என்னால ஏத்துக்கவே முடியல”....
“ஏன்னா அவ முழுசா இங்க எனக்காக தான் இருக்கணும்னு அப்பவே எனக்கு கோவம் வந்தது…. அப்படி இருக்கும் போது அவளுக்கும் இப்ப அப்படித் தானே இருக்கும்….. அவளை இங்க நம்மளோட கோபத்துல, ஏதோ பண்ணிட்டான்னு தான் பழிவாங்க தான் கூட்டிட்டு வந்து இருக்காங்கன்னு தானே அவளுக்கு தோணும்…. அதுக்கு நான் அவ கிட்ட சாரி கேட்கணும்டா…. நான் சாரி கேட்டா அவ கண்டிப்பா புரிஞ்சுப்பா…. ஆனா, அந்த சாரி கேக்குறதுக்கு கூட வழி இல்லாம தவிச்சுக்கிட்டு இருக்கேன் டா” என்று விக்ரம் வருத்தத்துடன் கூறினான்.
சரவணன் விக்ரம் தோளை தட்டி, “எனக்கு புரியுது மச்சான் உன் நிலைமை… என்கிட்ட விகாஷ் சொன்னத திரும்பவும் உன்கிட்ட சொல்றேன்… முடிஞ்சா இத ட்ரை பண்ணி பாரு…. அப்பப்போ அவளுக்கு உன்னை ஞாபகப்படுத்திட்டே இரு… எனக்கு தெரியும் நீ டெய்லி ஃபோன் பண்ற மெசேஜ் பண்றன்னு… இன்னும் சொல்லப் போனா அவளும் அதெல்லாம் படிக்கிறான்னு தெரியும்… அதே மாதிரி உன்னோட பர்த்டேக்காக கிஃப்ட் எல்லாம் கூட வாங்கி வெச்சிருக்களாம்….
“அவளுக்கும் அந்த ஆசை இருக்கு ஆனா, அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுத்தா அவ தானா சரியாயிருவா…. ஆனா, அந்த டைம் கிடைக்குற கேப்ல முடிஞ்ச அளவுக்கு நீ அப்பப்போ போய் அவளை பார்த்துட்டு வா…. அவ உன்னை முகத்துக்கு நேரா பார்க்கலனா கூட பரவால்ல நீ அங்க இருக்க என்ற ஃபீல் அவளுக்கு குடு…. அப்ப தான் நீ அவளை தேடி வர முயற்சி பண்ணிட்டு இருக்க இவ்ளோ எஃபர்ட் போடுறேன்னு அவளுக்கு தெரியும்….. அதுல ஏதோ ஒரு நாள்ல கண்டிப்பா அவ மனசு இறங்கிடுவா அப்படின்னு விகாஷ் ஒரு வாட்டி சொல்லி இருக்கான்… அத ட்ரை பண்ணு” என்ற சரவணன் கூறினான்.
“கண்டிப்பா பண்றேன் டா… ஏதாவது ஒரு வழி கிடைச்சுராதான்னு தான் நானும் ஏங்கிட்டு இருக்கேன்…. கண்டிப்பா நீ சொல்றத பண்றேன் மச்சான்” என்று விக்ரம் உறுதி அளித்தான். பின் இருவரும் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தனர்.
“சரி அபிலாஷ் வந்துட்டானா??” என்று விக்ரம் கேட்க, “இல்லடா அவன் நாளைக்கு வந்துருவான்னு நினைக்கிறேன்” என்று சரவணன் கூறினான். “எப்படியோ டா அவன் இந்த கல்யாணதுக்கு சம்மதிச்சதே பெருசு… எங்க இன்னும் குழப்பத்திலேயே இருக்குறானோன்னு நான் பயந்துட்டேன்” என்று விக்ரம் கூறினான்.
“நானும் அப்படித் தான் நினைச்சேன்… வீட்ல பார்த்த பொண்ணு என்னடான்ன நமக்கு இங்க வர டாக்டர் அனுவா இருந்தது…. அது போக அவங்களும் வந்து அவங்க பக்கம் உண்மை எல்லாம் சொன்ன உடனே கண்டிப்பா அவன் அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிருவான்னு தான் நினைச்சேன்… ஆனா, அவங்க பக்கம் இருந்த சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு எதுவும் பேசாம அனுப்பி வெச்சதே பெருசு…. கடைசியில பார்த்தா அந்த பொண்ணு தான் அவங்க வீட்ல பார்த்து வெச்சிருக்க பொண்ணா இருக்க போக அவ்ளோ தான் அவன் கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்னு தான் நினைச்சேன்” என்று சரவணன் கூறினான்.
“ஆமா அவன் எங்க ஒத்துக்கிட்டான்… நீ பேசி எடுத்து சொல்லி அப்படித் தான் அனு கிட்டயே பேச ஆரம்பிச்சான்… அதுக்கப்புறம் கல்யாணத்துக்கு எப்படியோ சம்மதிச்சான்….. அடுத்த மாசத்துல கல்யாணமும் கூட அவனுக்கு” என்று விக்ரம் கூறினான்.
“ம்ம்…. என்ன இருந்தாலும் அந்த பாட்டி சொல்றது ஓரளவுக்கு நடந்துருச்சுடா…. இப்ப கூட பாரேன் அபர்ணா ஏதோ ஒரு ரூபத்துல கண்டிப்பா இங்க வந்து வாழ்வா அப்படின்னு அவங்க ரொம்ப உறுதியாக சொன்னாங்க…. அபிக்கு கல்யாணம் ஆயிட்டா அனுவும் இங்க தான் இருக்க போறேன்னு ஒத்த கால்ல நிக்கிறா… அதுவும் நடந்துருச்சு… அது போக சனந்தாக்கும் அப்படித் தான் சொல்லி இருக்காங்க பாட்டி கண்டிப்பா அவளும் இந்த ஊருக்கு வந்துருவான்னு… அதுவும் நடக்கும் விக்ரம் அது நம்பு” என்று சரவணன் கூறினான்.
“எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…. ஆனா, நேத்து போயிட்டு வந்ததுக்கு அப்புறமா கொஞ்சம் மனசு லேசான மாதிரி தான் இருக்கு எனக்கு…. அவள பார்க்க இந்த வாரத்துல நான் போயிட்டு வர பார்க்கிறேன்” என்று விக்ரம் கூறினான்.
அன்று, பூஜையின் ஐந்தாம் நாள் காலையிலும் கோலகலமாகவே இருந்தது. அன்று அனு, அனுவின் அப்பா ராஜ்மோகன் இருவரும் வந்து சாமி கும்பிட்டு விட்டு அபிலாஷிடமும், விக்ரம் பெற்றோர்களிடம் பேச வேண்டும் அதுவும் தனியாக பேச வேண்டும் என்று ராஜ்மோகன் கூறிய பின் விக்ரமின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
“ஒரு சின்ன வேலைடா நான் பார்த்துட்டு வந்துடுறேன் அதுவரைக்கும் நீ இங்கேயே இரு எல்லாம் பார்த்துக்கோ” என்று விக்ரம் சனந்தாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றான். ஆனால் சனந்தா விக்ரமின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரியவும், அவனை அழைத்து, “தைரியமா இருங்க உங்க மூஞ்சி சரியில்ல…. அது ஒன்னும் இருக்காது தைரியமா போயிட்டு வாங்க” என்று சனந்தா கூற விக்ரம் புன்னகைத்து தலையை அசைத்து சென்றான்.
விக்ரமின் வீட்டில், அபிலாஷ், சரவணன், விக்ரம், ஸ்ரீனிவாசன், வள்ளி, அனு மற்றும் ராஜ்மோகன் இருந்தனர். அவர் அபர்ணாவை பத்தி தான் பேச போகிறார் என்பது ஓரளவுக்கு அபிலாஷ், விக்ரம் மற்றும் சரவணனுக்கு தெரிந்து இருந்தது.
“என்னப்பா திடீர்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்ன ஏதாவது பேசணுமா??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, ராஷ்மோகன் முதலில் ஸ்ரீனிவாசனின் கைகளை பிடித்துக் கொண்டு, “எங்கள மன்னிச்சிடுங்க சார்” என்று கூறினார்.
“நீங்க ஏன் மன்னிப்பு கேக்குறீங்க எனக்கு புரியலையே…. நாங்க தான் உங்களுக்கு நன்றியை சொல்லணும் உங்க பொண்ண இங்க அனுப்புறதுக்கு” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “உங்க எல்லார் கிட்டயும் நான் ஒரு உண்மையை சொல்லணும் அபர்ணாவோட லிவர் இப்போ அனுவோட உடம்புல தான் இருக்கு” என்று ராஜ்மோகன் கூறவும் அனைவரும் அதிர்ச்சியாகினர்.
அபிலாஷ் ஏற்கனவே அபர்ணாவின் உடல் உறுப்பு சனந்தாவிடம் இல்ல என்ற சந்தேகத்தில் இருந்ததை தான் அனுவிடம் அவனுடைய அனுமானத்தை கூறவும் அவன் சனந்தாவின் பெயரையும் அபர்ணாவின் பெயரையும் வெளியே கூறாமலே வெறும் சந்தேகத்தை மட்டுமே கூறினான். அதனால் அனு அவளுடைய அப்பாவிடம் பெயர்களை சொல்ல வேண்டாம், முக்கியமாக சனந்தாவின் பெயரை வெளியே எடுக்க வேண்டாம் என்று கூறியே அழைத்து வந்தாள்.
“அபர்ணா கூட இன்னொரு பொண்ணு ஆக்சிடென்ட் ஆனப்போ இருந்தாங்கல… அந்த பொண்ணுக்கு தான் அபர்ணாவோட உடல் உறுப்பு இருக்குன்னு தான் நீங்க எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க…. ஆனா அது உண்மை இல்ல…. அனு ஒரு வருஷமா லிவர் டிசிஸ்ல பாதிக்கப்பட்டிருக்கா அவளுக்கு கண்டிப்பா டிரான்ஸ்பிளான்ட் தான் பண்ணனும்னு இருந்துது… அவளுக்காக நாங்க டோனர் எல்லாமே கேட்டு வெச்சிருந்தோம்…. அந்த சமயம் கரெக்டா அபர்ணாவோடது வந்ததும் நானும் ஹாஸ்பிடல்ல தான் இருந்தேன்” என்று ராஜ்மோகன் பேசிக் கொண்டிருக்கையில், “அதை நீங்க எங்க கிட்ட சொல்லிட்டு செஞ்சுருக்கலாமே சார்” என்று அபிலாஷ் ஆதங்கத்துடன் கேட்டான்.
“இல்லப்பா நான் உங்க கிட்ட கேட்க தான் நான் வந்தேன்… ஆனா அப்போ விக்ரம் தம்பி தான் அபர்ணா கூட இருந்த ஆளுக்கு தான் கொடுக்க சொன்னா அதனால அவங்களுக்கு கொடுக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டு இருந்ததை நான் கேட்டேன்…. நீங்க ஒரு வேலை அனுமதிக்காம போயிட்டீங்கன்னா திருப்பி இதே மாதிரி டோனர் அமைஞ்சு அனுவை நான் எப்ப காப்பாத்த முடியும் என்ற பயம் தான் எனக்குள்ள ரொம்ப சூழ்ந்துருச்சு…. அதனால தான் கூட வந்த அந்த பொண்ணு பேருலயே தான் அனு ஆப்ரேஷன் பண்ணி முடிச்சேன்… இது ஹாஸ்பிடல்ல என்னோட அசிஸ்டன்ட் டாக்டர் ஒரே ஒரு நர்ஸ் தவிர வேற யாருக்கும் தெரியாது…. இது ரொம்ப பெரிய தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க” என்று ராஜ்மோகன் கைகளை கூப்பி கூறினார்.
பெரும் அமைதி நிலவியது அங்கு. முதலில் வள்ளி வந்து அனுவைத் தொட்டு பார்த்து, “உடம்ப பத்திரமா பார்த்துக்கோ அபர்ணாவையும் பத்திரமா பாருத்துக்கோ…. முடிஞ்சா அப்பப்ப வந்து எங்கள பார்த்துட்டு போ” என்று கண்கள் கலங்க கூறினார்.
இதைப் பார்க்க அங்க இருந்த அனைவருக்குமே சங்கடம் ஆகிவிட்டது. “இல்லம்மா அனு தேர்னதுக்கு அப்புறமா அவ சொன்னது ஒன்னே ஒன்னு தான் அபர்ணாவ பத்தி விசாரிக்க சொன்னா…. அவங்க என்ன பண்ணிட்டு இருந்தாங்க ஏதுன்னு கேட்டா அப்புறம் நான் சொன்னதும் அந்த கிராமத்துக்கு கண்டிப்பா நான் போகணும்னு முடிவு பண்ணிட்டா….. இது என்னோட தப்பு தான் அதனால நீங்க அவள எதுவும் சொல்லிடாதீங்க” என்று ஒரு தந்தைக்கு உரித்தான பயத்தையும் சேர்த்து கூறினார் ராஜ்மோகன்.
“இல்ல இல்ல சார்…. ஏதோ ஒன்னு ஒரு நல்ல இடத்துக்கு போய் என் பொண்ணு ஒரு உயிரை காப்பாத்திருக்கா அப்படின்னு நினைக்கும் போது எங்களுக்கு சந்தோஷம் தான்…. ஆனா இது முன் கூட்டியே தெரிஞ்சி இருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணுது தானே தவிர உங்க மேல கோபம் எல்லாம் இல்லை சார்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chaper 104
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chaper 104
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.