நாயகன் 98

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 98

கிளப்பில் தனக்கென கொடுக்கப்பட்டிருந்த தனி அறையில் விஜய் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்க, அவனைக் காண அங்கே சென்றிருந்த மாடல் அழகி ஒருத்தி அவனை தனது வலையில் வீழ்த்தும் முயற்சியில் இறங்கி இருந்தாள். “என்ன பேபி உனக்கு இந்த டிரஸ் புடிக்கலையா? நம்ம வேற ட்ரை பண்ணலாமா?” என குலைந்து குலைந்து அவள் அவனிடம் பேசிக் கொண்டே செல்ல, அவள் கைகள் செய்த மாயாஜாலத்தில் மயங்குவதற்கு பதிலாக இன்று ஏனோ கொஞ்சம் எரிசலாக உணர்ந்த விஜய் சட்டென்று தன் மடியில் அமர்ந்திருந்த அவளை ஏதோ ஒரு குப்பையை தூக்கி எறிவதைப்போல தூக்கி தூரமாக வீசி எறிந்தான்.

அவன் எரிந்த வேகத்தில் அவள் சென்று குப்புற விழ, அவளது டிரான்ஸ்பரெண்டான சட்டையின் பட்டன்கள் எல்லாம் வெடித்து சிதறியது. அவள் குறுக்கி படுத்துக் கொண்டு ஒரு கையால் தனது இடுப்பையும் மற்றது கையால் தனது வயிற்றையும் பிடித்துக் கொண்டு “ஆஆஆ.. மம்மி!” என்று வலியில் அலறி துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கதறல்கள் எதுவுமே விஜயின் காதுகளில் விழுந்த பாடில்லை.

அவன் மீண்டும் சென்று அதே சாரில் அமர்ந்து கொண்டு தன் கையில் இருந்த மதுபாட்டிலை இறுக்கமாக பிடித்துக் கொண்டு எதிரில் இருந்த சுவற்றை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நேரம் அவனுக்கு “ஒருவேளை உங்களுக்கு அந்த பொண்ணு மேல ஃபீலிங்ஸ் இருக்கா பாஸ்?” என்ற தினேஷ் அவனிடம் கேட்டது ஞாபகம் வந்தது.

அதை நினைத்துப் பார்த்து கோபப்பட்ட விஜய் “இல்ல, எனக்குள்ள இருந்த மனுஷன் எப்பவோ செத்துப் போயிட்டான். எனக்கு எல்லாம் யார் மேலயும் எப்பயும் பீலிங்ஸ் வராது. அதுவும் அந்த அமுதா மாதிரி ஒரு லோ க்ளாஸ் பொண்ணு மேல எப்பயும் எனக்கு ஃபீலிங்ஸ் வராது.‌” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் இப்போது தான் தரையில் விழுந்து வலியில் கதறிக் கொண்டு இருந்தவளையே கண் கொண்டு பார்த்தான்.

அவள் நேரடியாக விஜயிடம் கோபப்பட்டு கத்தவும் முடியாமல், அந்த தாங்க முடியாத வழியை பொறுத்துக் கொள்ளவும் முடியாமல் அப்படியும் இப்படியுமாக தரையில் உருண்டு கொண்டிருந்தாள். அவளைப் பார்க்க ஒரு நொடி அவனுக்கு பாவமாக இருக்க, “என்னால நானும் ஹாப்பியா இல்ல. என்ன சுத்தி இருக்குறவங்களும் ஹாப்பியா இல்ல.” என்று நினைத்த விஜய் அவள் அருகில் சென்று தரையில் ஒரு காலால் மண்டியிட்டு அமர்ந்து “சாரி!” என்றான் அவளிடம்.

தன்னிடம் மன்னிப்பு கேட்பது அவன் தானா? என்று நம்ப முடியாமல் அந்தப் பெண் ஆச்சரியத்துடன் தனது வலியை மறந்து கத்துவதை நிறுத்திவிட்டு அவனை பார்க்க, அவள் கையைப் பிடித்து அவளை தூக்கிவிட்ட விஜய் “நான் உனக்கு எக்ஸ்ட்ரா பேமெண்ட் கொடுக்க சொல்றேன். இனிமே எப்பயும் என் கண் முன்னாடியே வராத.” என்றான்.

இன்று அவனது மூடு சரியில்லை என அவன் நடந்து கொண்டதை வைத்தே புரிந்து கொண்ட அந்த பெண் எப்படியோ உயிருடன் இந்த இடத்தில் இருந்து சென்றால் போதும் என நினைத்து “ஓகே சார், தேங்க்யூ.” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு நொண்டி நொண்டி நடந்து மெல்ல கதவை திறந்து வெளியில் சென்றாள்.

அந்த பார் வாசலில் விஜயின் காரில் அமர்ந்து தனது காதலியுடன் போனில் கடலை போட்டுக் கொண்டிருந்த தினேஷ் அந்த பெண் அப்படி விசித்திரமாக ஒரு பொசிஷனில் இடுப்பை பிடித்துக் கொண்டு நடந்து வருவதை பார்த்துவிட்டு “என்ன இவ அதுக்குள்ள வெளிய வந்துட்டா? அதுவும் பேக்ல நாய் கடி வாங்கி நிறைய ஊசி போட்ட மாதிரி எதுக்கு இப்படி தாங்கி தாங்கி நடந்து வர்றா? ஒருவேளை நம்ம பாஸ் சிறப்பா கவனிச்சு அனுப்பி இருப்பாரா? ஆனா நம்ம பாஸ் பர்பாமன்ஸ்ல தீயா இருப்பாரே.. அவர் அதுக்குள்ள முடிச்சு இருக்கிறதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.. அப்புறம் எப்படி?” என்று யோசித்து குழம்பியவன், அவளுக்கு கால் செய்து தங்களது காருக்கு வரச் சொல்லி என்ன ஆனது என்று அவளிடம் விசாரித்து தெரிந்து கொண்டான்.

“எனக்கும் விஜய் சார் திடீர்னு ஏன் இப்படி பண்ணாருன்னு சுத்தமா புரியல சார். லாஸ்ட் டைம் அவர் என் கூட இருக்கும்போது ரொம்ப ஹாப்பியா இருந்தாரு. அல்மோஸ்ட் 2 டேஸ் நான் அவர் கூட இருந்தேன். உங்களுக்கு தான் தெரியுமே! மேபி இப்ப அவர் மூடு சரி இல்லைன்னு நினைக்கிறேன். அப்புறம் எதுக்கு அவர் என்ன வர சொன்னாருன்னு தான் தெரியல. எனக்கு ரொம்ப பெயினா இருக்கு சார்.

இங்க இருந்து ஸ்ட்ரைட்டா நான் ஹாஸ்பிடல் தான் போகணும்னு நினைக்கிறேன். விஜய் சார் எனக்கு எக்ஸ்ட்ரா பேமெண்ட் பண்றேன்னு சொன்னாரு.” என்று அவள் சொல்ல, விஜயிடம் இருந்தும் அந்த பெண்ணிற்கு அதிக பணம் கொடுத்து அவளை அனுப்பு என்று தினேஷிற்கு மெசேஜ் வந்ததால் அவளுக்கு தங்கள் பேசியதை விட இரண்டு மடங்கான தொகையை கொடுத்து அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தான் தினேஷ்.

இப்போது விஜய் தனியாக அந்த பாரில் அமர்ந்து மூச்சுமுட்ட குடித்துக் கொண்டிருந்தான்.. ‌ கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரம் கடந்தும் அவன் பாரில் இருந்து வெளியில் வருவதை போல தெரியாததால், உள்ளே சென்ற தினேஷ் அவனை யாருக்கும் தெரியாமல் பிரைவேட் எக்ஸிட் வழியாக அவனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

“டேய் நான் குடிச்சாலே அந்த அனாமிகா பிசாசு என்ன வந்து புடிச்சிக்குது. நான் சும்மா இருந்தாலே அவ என்ன குடிக்க வச்சு ஏதாவது சம்பவம் பண்ண முடியுமான்னு ட்ரை பண்ணுவா. இன்னைக்கு அவ வேலையை ஈஸியாக்கிற மாதிரி நான் வேற நல்லா குடிச்சிருக்கேன். எங்க இருந்தாவது வந்து மறுபடியும் அவ வேலைய பார்த்துட போறா ..‌

சீக்கிரமா என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போ. எனக்கு காலைல போதை தெளியுற வரைக்கும் நீ என் கூடவே தான் இருக்கணும். எங்கயாவது போன, காலையில நான் கண்ண முழிச்சு பார்க்கும்போது நீ மட்டும் என் பக்கத்துல இல்லைனா உன்ன போட்டு தள்ளிடுவேன் பாத்துக்கோ.” என்று போதையில் உளறிய விஜய் தள்ளாடியபடி தினேஷுடன் சென்றான்.

ஏற்கனவே நான் சொன்னதைப் போல தினேஷையும் இரவு முழுவதும் தன் அருகில் பிடித்து வைத்துக் கொண்டான்.. “என் ஆளை கல்யாணம் பண்ணி அவ கூட நான் குஜாலா இருக்க வேண்டிய டைம் இது.. இவர் மட்டும் ஆல்ரெடி ஒரு wife இருக்கும்போது, ஜாலியா ஏழு கேர்ள் friend வச்சிக்கிறாரு. என் லைஃப்ல மட்டும் எந்த நல்லது நடந்திட கூடாதுன்னு தெளிவா இருக்காரு போல இருக்கு. நானே இப்ப தான் அவ கிட்ட எங்க மேரேஜ் மேட்டர் பத்தி பேசலாம்னு நெனச்சேன். அதுக்குள்ள இப்படி என்ன இழுத்துட்டு வந்துட்டாரு.” என நினைத்து தினேஷ் தனக்குள் புலம்பிக் கொண்டிருக்க, “பிரியா! நீ ஏண்டி என்ன விட்டுட்டு போன?” என்று புலம்பியபடி விஜய் அவன் மீது தன் ஒற்றைக் காலை தூக்கி போட்டான்.

‌ பின் அவன் தினேஷை தன் பக்கம் இழுத்து வசதியாக அணைத்துக் கொண்டு படுத்து உறங்கிவிட, அவன் தான் பாவம் விஜய் விடிய விடிய உளறிக் கொண்டே இருந்ததால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அதேசமயம் அமுதா காலையில் கண் விழிக்கும்போது, டாக்டர் அவளை செக் செய்து பார்த்துவிட்டு “எல்லாமே நார்மலா தான் இருக்கு. இன்னைக்கு நீங்க டிஸ்டார்ஜ் ஆகி வீட்டுக்கு போறதுன்னா போகலாம். ஒரு போர் டேஸ் கழிச்சு செக்கப்க்கு மட்டும் பெயின் இருந்தா வாங்க.” என்றார் டாக்டர்.

அதனால் அவளது குடும்பத்தினர்கள் சந்தோஷமாக அவளை டிஸ்டார்ஜ் செய்து காரில் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். விஜய் அமுதாவிற்காக வாங்கி வந்த பழங்களை அவளிடம் கொடுத்த வெற்றி “இந்தா அமுதா.. நேத்து நைட்டு உன்னை பார்க்க வரும்போது விஜய் சார் இதெல்லாம் வாங்கிட்டு வந்தாரு. நானும் உன் கிட்ட குடுக்கலாம்னு இருந்தேன் மறந்துட்டேன். இப்ப நம்ம காரை சர்வீஸ் விட போகலாம்னு பாத்தனா அப்பதான் இது சீட்டுக்கு கீழ இருந்துச்சு.” என்றான்.

விஜயின் பெயரைக் கேட்டவுடன் ஏதோ ஒரு பரவச நிலைக்கு சென்றுவிட்ட அமுதா சட்டென்று எழுந்து நின்று அவன் கொடுத்த கவரை வாங்கி இறுக்கமாக பிடித்துக் கொண்டு “என்ன சொல்ற வெற்றி.. நேத்து நைட் விஜய் சார் என்ன பாக்க வந்தாரா? ஏன் யாருமே என் கிட்ட இதை பத்தி சொல்லவே இல்ல..!! என்னை பார்க்க வந்துட்டு அவர் கடைசி வரைக்கும் என்ன பாக்காமயே கிளம்பி போயிட்டாரா?

ஏன் அவர் என் கிட்ட பேசவே இல்ல? அவர் கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ண பார்த்தேன்னு இன்னும் அவருக்கு என் மேல கோபம் போகலையா?” என்று கொஞ்சம் வருத்தத்துடன் கேட்டாள்.

“இல்லை இல்லை.. அவர் கோபமா எல்லாம் இல்ல. அவர் வரும்போது நீ தூங்கிட்டு இருந்த. அதான் உன்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு கிளம்பி போயிட்டாரு. ஆனா அவர் வந்ததை உன் கிட்ட சொல்ல சொன்னாரு. நீ வேணும்னா ஃப்ரீயா இருக்கும்போது அவர் கிட்ட போன் பண்ணி பேசு.‌

இன்னைக்கு கூட அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருத்தர் எனக்கு கால் பண்ணி உனக்கு எப்ப சூட்டிங் ஷெடியூல் பண்றதுன்னு கேட்டாரு. நான் ஒரு ரெண்டு நாள் போகட்டும் சொல்றேன் சாருன்னு சொல்லி வச்சிருக்கேன். நம்ம அவ்ளோ பிரச்சனை பண்ணியும் இப்ப எதுவுமே சொல்லாம விஜய் சார் உனக்கு லீவு கொடுத்து இருக்கிறது பெரிய விஷயம். அதுக்காக கண்டிப்பா நம்ம அவருக்கு தேங்க்ஸ் சொல்லணும். முக்கியமா அவர் உனக்கு செஞ்ச இந்த ஹெல்ப்பை நான் மறக்கவே மாட்டேன்னு என் சார்பா நீ அவர்கிட்ட சொல்லிரு.” என சொல்லிவிட்டு காரை வாஷிங் செய்வதற்கு எடுத்துச் செல்வதற்காக வெளியில் சென்று விட்டான்.

அப்போது அமுதாவை காண கலைச்செல்வி உள்ளே வர, தனது மொபைலில் அமுதா சூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை பார்த்து ரசித்து கொண்டிருப்பதை கவனித்தபடி உள்ளே வந்தாள். அவளுக்கு இப்போதெல்லாம் அமுதாவிடம் நிறைய மாற்றங்கள் இருப்பதாக தோன்றியது. அதைப் பற்றியே யோசித்தபடி உள்ளே வந்த கலைச்செல்வி “என்ன டி இப்ப உடம்பு எப்படி இருக்கு? பரவாயில்லையா? நான் கூட உங்க மாமன் கூட உனக்கு நடக்க இருந்த கல்யாணம் நின்னு போன சோகத்துல நீ அப்படியே ஃபீல் பண்ணிட்டு இருப்பேன்னு நினைச்சேன். ஆனா உன்ன பாத்தா அப்படி தெரியலையே! தலையில இந்த கட்டு மட்டும் இல்லைனா, நீ எப்பயும் போல இருக்கிற மாதிரி தான் இருக்க.” என்றாள்.

“ஆமா எனக்கு என்ன? நான் நார்மலா தான் இருக்கேன். எனக்கு முன்னாடில இருந்தே வெற்றியை கல்யாணம் பண்ணிக்கிறதுல இன்ட்ரஸ்ட் இல்லைன்னு உனக்கு தான் தெரியுமே! புடிக்காத கல்யாணம் நின்னு போனதுக்கு நான் எதுக்கு ஃபீல் பண்ணனும்?” என சாதாரணமாக கேட்டாள் அமுதா.

காதல் மலரும் 🌹

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன் 98
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.