தாபம் 76

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
விஷ்ணு: ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் சிறு தயக்கத்துடன் அவளை பார்த்து, “நான் வேணா தேச்சிவிடவா...??" என்று அவளுடைய கண்களை நேராக பார்த்த படி கேட்டான்.

ஷாலினி: “இல்ல வேண்டாம். அதுவே தானா சரி ஆயிடும் பரவால்ல." என்று சிறு தயக்கத்துடன் சொன்னாள்.

விஷ்ணு: “அட இதுக்கு எல்லாம் ரொம்ப யோசிக்காத. வேணா என்ன நர்ஸ்ன்னு நினைச்சுக்கோ." என்றவனின் கண்களில் அவள் மீது அக்கறையையும், பாசத்தையும், தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஷாலினி வேண்டாம் என்று மறுக்க தான் நினைத்தாள். ஆனால் அவளுக்கு அந்த இடத்தில் மிகவும் வலி அதிகமாக இருந்தது. அதனால் அவனை பார்த்து சிறிது வெட்டுத்துடன் சரி என்றாள். ☺️

அவள் சம்மதம் தெரிவித்து விட்டதால் அவள் அருகே சென்று அமர்ந்தவன், அவனுடைய சூடான கையை வைத்து சூடு பறக்க அவளுடைய இருப்பில் தேய்த்தான். ஏற்கனவே அனலில் தகித்துக் கொண்டு இருந்த ஷாலினியின் உடல் விஷ்ணுவின் தொடுகையால் இன்னும் சூடாகியது. 🔥அதனால் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டு தவித்தாள் ஷாலினி.

விஷ்ணு: “இப்ப ஓகேவா..??" என்று அக்கறையாக விசாரிக்க..

ஷாலினி “ஓகே தான்." என்றவள், வெட்கத்தில் அவனுடைய முகத்தை பார்க்க முடியாமல் பேச்சிட்டை தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு படித்துக் கொண்டாள். ☺️

ஷாலினி உறங்கியதும், தரையில் அமர்ந்த விஷ்ணு பெட்டில் தன்னுடைய ஒரு கையை நீட்டி அவளுடைய முகத்தை பார்த்த படியே அவனும் படுத்துக் கொண்டான். சில மணி நேரம் கடந்திருக்க, ஷாலினி நிம்மதியாக அவளுடைய பெட்டில் தன்னுடைய சவுரியத்திற்கு படித்து தூங்கிக் கொண்டு இருந்தாள். தூக்கத்தில் அவள் போத்தி இருந்த போர்வையை எல்லாம் உதித்து ஒரு பக்கம் தள்ளிவிட்டு இருந்தாள் ஷாலினி.

தன்னை மறந்து அயர்ந்து தூங்கி விட்டிருந்த விஷ்ணு, திடீரென்று கண் விழித்தவன், ஷாலினியை பார்த்தான். ஏதோ கனவில் குத்து சண்டை போட்டு கொண்டு இருப்பவளை போல தன்னுடைய கையை ஒரு புறமும், காலை வேறொரு பூரமும் வளைத்து படுத்து இருந்தவளின் ஆடைகள் கலைந்து இருந்தது. அவளுடைய முகம் முழுவதையும் அவளுடைய நீண்ட கூந்தல் மறைந்து இருந்தது.

அந்த கோலத்தில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டு இருந்த ஷாலினி, விஷ்ணுவின் கண்களுக்கு க்யூட்டாக தெரிந்தாள். 😍 அதனால் லேசாக அவளை பார்த்து புன்னகைத்தவன், 😁 அவளுடைய முகத்தை மூடி இருந்த கூந்தலை விளக்கி விட்டு பின், அவள் உதைத்து தள்ளி இருந்த போர்வையை கண்டு பிடித்து மீண்டும் அவளுக்கு அதை சரியாக போத்தி விட்டான். இரண்டு மணி நேரத்திற்கு பின்; காலை பொழுது அழகாக விடிய, ஷாலினியிடம் விடை பெற்றுக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டான் விஷ்ணு.

காலையில் காய்ச்சல் இருந்த தடமே தெரியாத அளவிற்கு ஷாலினி புத்துணர்ச்சியாக உணர்ந்ததால், அவள் கிளம்பி பள்ளிக்குச் சென்று விட்டாள்.

15 நாட்களுக்கு பிறகு...

இந்த 15 நாட்களில் பெரியதாக எதுவும் மாறி இருக்கவில்லை. விஷ்வா சென்னையில் இருக்கும் நாராயணன் குரூப்பிற்கு சொந்தமான அனைத்து கம்பெனிகளையும், பள்ளி மற்றும் கல்லூரிகள், டிரஸ்ட்கள், உணவகங்கள் என அனைத்தையும் மேற்பார்வை இடுவதற்காக சென்றுவிட்டான். சென்னை போன்ற பெருநகரங்களில் அவர்களுக்கு சொந்தமானவைகள் அங்கே ஏராளமானவை இருந்ததால் அவை அனைத்தையும் பார்வையிடுவதற்கு வருணிற்கு வெகு நாட்கள் ஆனது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ராகவி தன்னுடைய வீட்டிற்கு வந்து இருந்தாள். அவள் மருத்துவமனையில் இருக்கும் போதும் சரி, பின் வீட்டிற்கு வந்து விட்ட பின்பும் சரி; ஷாலினி, விஷ்ணு, கௌத்தம், சித்தார்த், லாவண்யா, சந்தோஷ் என அனைவரும் அவளை அடிக்கடி வந்து பார்த்துவிட்டு சென்றனர்.

ஆராதனாவும், ஹரியும், ஒரே வீட்டில் இருந்ததால் அவர்களுடைய காதல் ஆலமரத்தை நன்றாக வேரூன்றி தண்ணீர் விட்டு பெரிய மரமாக வளர்த்துக் கொண்டு இருந்தனர். அவர்களுடைய அனைத்து செய்கைகளையும் கவனித்துக் கொண்டு இருந்த செண்பகம்; ஹரியிடனும், விஷ்வாவிடனும், பேசுவதை குறைத்து கொண்டாள். ஹரி சௌபர்ணிகாவிடமே தன்னுடைய காதலை பற்றி நேராக சொல்லி இருந்ததால், இனி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று நினைத்த செண்பகம்; அவர்களுடைய திருமணத்தை நிறுத்திவிட்டு ஹரிக்கு வேறொரு பெண்ணை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்.

இதற்கிடையில் ரித்திகா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து விட்டதால், விஷ்வா மற்றும் ரித்திகாவின் திருமணத்தை பற்றி ரித்திகாவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்த செண்பகம்; அதை எப்படி செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தாள். பிராத்தனா அந்த புஃட் பால் பிளேயர் எந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்றும், அவன் தனக்கு பொருத்தமாக இருப்பானா என்றும், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவனைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தாள்.

அவள் படிக்கும் கல்லூரி அவர்களுக்கும் சொந்தமானது தான் என்பதால் அவனை பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது அவளுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை என்றாலும், அவனை பற்றிய அனைத்து விவரங்களையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும், அவளுக்கு கிடைத்த தகவல்களின்படி, அவன் பணக்காரன் தான் என்று உறுதி செய்த பிராத்தனா, அவன் தனக்கு பொருத்தமாக தான் இருப்பான் என்று நினைத்து... அவன் மீது தன்னுடைய எண்ணங்களை வளர்த்துக் கொள்ள தொடங்கினாள். 😍

ஷாலினி மனதளவில் விஷ்ணுவையும், அவனுடைய காதலையும், நன்கு புரிந்து கொண்டு இருந்தாள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் அவள் இருக்கவில்லை. விஷ்ணுவை விட்டு விலகிச் செல்லவும் முடியாமல், அவனுடைய காதலை ஏற்றுக் கொண்டு அவனோடு வாழவும் முடியாமல், இருதலைக்கொல்லி எறும்பாக தவித்துக் கொண்டு இருந்தாள். 😪 💔

ஏற்கனவே தன்னுடைய ராசி பற்றியும், தன்னுடைய ஃபேமிலி பேக்ரவுண்ட் மற்றும் பினான்சியல் பேக்ரவுண்ட்டை நினைத்தும், விஷ்ணுவை பற்றி நினைத்து குழம்பி அவனை விட்டு விலகி நின்று கொண்டு இருந்த ஷாலினியை அதைப் பற்றியே பேசி இன்னும் அவளை லாவண்யா குழப்பி விட்டு கொண்டு இருந்ததாள் லாவண்யா. விஷ்ணு மற்றும் ஷாலினியின் ரிலேஷன்ஷிப் கிணற்றில் போட்ட கல்லாய் அப்படியே கிடந்தது. விஷ்ணுவோ நம்பிக்கையோடு அவளுக்காக காத்திருந்தான். 😍 ❤️

காலை பொழுது அழகாக விடிந்தது...

பல நாள் இடைவெளிக்கு பின் இன்று தான் பள்ளிக்கு செல்ல போவதால் உற்சாகமாக காலையில் சீக்கிரமாக எழுந்து கிளம்பிய ராகவி, அவள் புதிதாக வாங்கிய ஸ்கூட்டியில் ஷாலினியோடு பள்ளிக்கு சென்றாள். ஷாலினி, ராகவியின் வீட்டிற்கு அருகே குடி வந்து விட்டதால், இப்போதெல்லாம் ஷாலினி ராகவியின் பெற்றோர்களுக்கு இரண்டாவது மகள் ஆகிவிட்டாள். தூங்கும் நேரத்தை தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் ராகவியோடு ஒட்டி கொண்டு திரிந்தாள் ஷாலினி.

விஷ்ணு ஷாலினியின் பின்னே சுற்றி கொண்டு இருந்ததால், ஷாலினி, விஷ்ணு, ராகவி, இவர்கள் மூன்றுபேரின் இடையே ஒரு நல்ல உறவு மேம்பட்டு இருந்தது. இதற்கிடையில் அவர்களுடைய நெருக்கத்தை பார்த்து வயிறு எரிந்து கொண்டு இருந்தாள் லாவண்யா. 😤

ஆபீஸ் ரூமிற்க்கு ஷாலினியோடு வந்த ரித்திகா கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தாள். தன்னுடைய அறையில் இருந்த படியே ரித்திகாவை கவனித்து கொண்டு இருந்த மானசா, அவளை முறைத்து பார்த்த படி, “என்ன ரித்திகா சந்தோசமா இருக்கியா..?? இப்பவே உன்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ சந்தோஷப்பட்டுக்கோ. நீ எனக்கு ஒரு கிப்ட் குடுத்தல்ல அதுக்கு நான் உனக்கு ஒரு ரிட்டர்ன் கிப்ட் குடுக்கிறதுக்கு டைம் வந்துருச்சு. நான் உனக்கு என்ன குடுக்கப் போறேன்னு வெயிட் பண்ணி பாரு. அதனால உன்னோட லைஃப், உன்னோட கரியர் ரெண்டுமே ஸ்பாயில் ஆயிடும்." என்று நினைத்தவள், வில்லத்தனமாக புன்னகைத்துக் கொண்டு இருந்தாள். 😁 😁 😁 இப்போது தான் மானசாவும் அவளுடைய சஸ்பென்ஷன் பீரியட் முடிந்து மீண்டும் பள்ளிக்கு வர தொடங்கி இருந்தாள். அதனால் ரித்திகாவை பழிவாங்குவதற்கான சரியான வாய்ப்புக்காக அவள் காத்திருந்தாள்.

வழக்கம்போல் ரித்திகா தன்னுடைய வகுப்புகளுக்கு செல்வது, உணவு இடைவேளையில் சித்தாத்துடன் தன்னுடைய நேரத்தை செலவிடுவது, என நிம்மதியாக இருந்தாள். இதற்கிடையில் கௌத்தமும், ரித்திகாவும் அந்த காம்பெடிஷன் செலக்சன் ப்ராசஸ்சுக்கு அனுப்புவதற்காக அவர்களுடைய டான்ஸ் பர்பாமன்ஸ் வீடியோவை ரெக்கார்ட் செய்வதற்கு டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டு இருந்தனர். அதனால் ராகவி எந்நேரமும் பிசியாகவே இருந்தாள்.

இப்படியே அந்த வாரம் கடந்தது. அந்த வார இறுதியில் அவர்களுக்கு விடுமுறை என்பதால், டான்ஸ் காம்பெடிஷன் அப்ளிகேஷன் இல் இணைப்பதற்கான மூன்று நிமிட வீடியோவை எடுப்பதற்காக ரித்திகாவை தன்னுடைய டான்ஸ் ஸ்டூடியோவிற்கு வரும் படி அழைத்தான் கெளத்தம். தான் மட்டும் வீட்டில் தனியாக இருந்து கொண்டு என்ன செய்வது என்று நினைத்த ஷாலினியும், ரித்திகாவோடு கௌத்தமின் டான்ஸ் ஸ்டுடியோவிற்கு வந்தாள்.

அவர்களுடைய பள்ளியில் இருக்கும் அளவிற்கு அந்த டான்ஸ் ஸ்டூடியோ விசாலமாக இல்லை என்றாலும் நேர்த்தியாகவும் கௌத்தமின் விருப்பத்தின் படி கலை நயத்துடனும், ஸ்டைலாகவும் இருந்தது. வார இறுதியில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை, அனைவருக்கும் கௌத்தம் டான்ஸ் பிராக்டிஸ் கொடுப்பான். ஷாலினி, ரித்திகாயும், அந்த ஸ்டூடியோவிற்குள் செல்லும்போது சில மாணவர்களும், மாணவியர்களும், தங்களுடைய பிராக்டிஸ் சேஷன் முடிந்து வெளியே சென்று கொண்டு இருந்தனர்.

ரித்திகாவையும், ஷாலினியையும், கவனித்த கௌத்தம், அவர்களை உள்ளே வரும்படி அழைத்தான். கௌத்தம் ஒரு பிரிண்டட் டி-ஷர்ட்டும், ஷார்ட்சும், ஷூவும் அணிந்து இருந்தான். கௌத்தமை இப்படி பார்ப்பதற்கு ரித்திகாவிற்க்கு வித்தியாசமாக இருந்தது. ரித்திகாவின் கண்களுக்கு அவன் இப்போது தான் கல்லூரியில் பயிலும் அழகான பையனை போல் தெரிந்தாள். 😍

ஷாலினி “அண்ணா..!! உங்க டான்ஸ் ஸ்டூடியோ ரொம்ப நல்லா இருக்கு." என்று வியப்புடன் சொன்னவள், அந்த இடத்தை சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 🤩

கௌத்தம் அவளை பார்த்து லேசாக சிரித்தவன், “தேங்க்ஸ் மா." என்றான். 😁

ரித்திகா: “நிஜமாவே உங்களோட டான்ஸ் ஸ்டூடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கௌத்தம். எனக்கும் இந்த மாதிரி ஒரு டான்ஸ் ஸ்டுடியோ வைக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. ஆனா அத எப்ப பண்ண போறேன்னு தான் எனக்கு தெரியல." என்று மகிழ்ச்சியாக பேசத் தொடங்கியவள், இறுதியில் சோகமாக முடித்தாள்.

கௌத்தம்: நம்ப செய்யணும்னு நெனச்சா நம்மளால செய்ய முடியாதுன்னு எதுவுமே இல்ல ரித்திகா. இத்தன வருஷத்துல நான் சம்பாதிச்சு சேத்து வச்ச சொத்துன்னா இது மட்டும் தான். நீ தனியா டான்ஸ் ஸ்கூல் ஸ்டார்ட் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா பண்ணும் அதுக்கு என்னால என்னென்ன சப்போர்ட் பண்ண முடியுமோ அது எல்லாத்தையும் நான் பண்றேன். ஆனா எனக்கு ஒன்னு தோணுது நான் சொல்லட்டுமா...??

ரித்திகா: என்னன்னு சொல்லுங்க.

கௌத்தம்: நீ இதுக்கு மேல தனியா ஒரு ஸ்கூல் ஸ்டார்ட் பண்றதுக்கு நீ இங்க வந்தே டீச் பண்ணலாம்ல..?? நான் உன்ன இங்க ஒர்க் பண்ண சொல்லி கேட்கல. என் கூட பார்ட்னரா இருக்கியான்னு கேக்கிறேன். இங்க நிறைய பசங்க தான் வராங்க. மேபி ஒரு ஃபீமேல் ட்ரெயினர் இருந்தா பொண்ணுங்களும் நிறைய வருவாங்கல்ல...??

ரித்திகா: ஆனா நீங்க இத கஷ்டப்பட்டு ஸ்டார்ட் பண்ணி இருக்கீங்க. நான் இப்ப வந்து ஈஸியா எப்படி உங்க கூட பார்ட்னர் ஆக முடியும்..??

கௌத்தம்: அமா ராகவி. நான் இத கஷ்டப்பட்டு தான் ஸ்டார்ட் பண்ணுனேன். ஆனா நீயும், நானும், சேந்து இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டா இத நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போகலாம்ல...?? நான் உன்ன ஃபோர்ஸ் பண்றேன்னு நினைக்காத. எனக்கு தோணுச்சு அதான் கேட்டேன். நீ யோசிச்சு சொல்லு.

ரித்திகா: “கண்டிப்பா சீக்கிரம் யோசிச்சு சொல்றேன். அண்ட் தேங்க்ஸ் என்ன நம்பி இவ்ளோ பெரிய பொறுப்பா குடுக்குறதுக்கு ரெடியா இருக்கறதுக்கு. நம்மளோட ஆசையும், லட்சியமும், ஒரே மாதிரி இருக்கு. முடிஞ்சா அத ஒன்னா சேந்து அச்சீவ் பண்ணுவோம்." என்று சிரித்து கொண்டே சொன்னாள்.😍 😁

கௌத்தம்: நம்ம சேந்து பண்ணா நம்மளால எத வேணாலும் அச்சீவ் பண்ண முடியும் ராகவி. எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்ம பண்ணிடலாம். சரி வா..!! இன்னைக்கு அந்த வீடியோவ ரெக்காட் பண்ணிடலாம்.

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 76
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.