தாபம் 73

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 73: சில்லுனு ஒரு காதல் (பார்ட் 1)

இரவு உணவிற்கு பின் தன்னுடைய அறைக்கு வந்த ஹரி, அவனுடைய மொபைல் போனில் இருந்து ஆராதனாவிற்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினான். ஹரியிடம் இருந்து மெசேஜ் வந்த அடுத்த கனமே அதை ஆராதனா பார்த்து விட்டாள்.

ஹரி: “ஓய்ய்ய்..!! பார்பி என்னோட ரூமுக்கு வா." என்று மெசேஜ் அனுப்பி இருந்தான்.

ஆராதனா: “டைம் 10 : 15 ஆகுது. இப்ப எப்டி டா வர்றது...??" என்று ரிப்ளை அனுப்பினாள்.

ஹரி: பக்கத்து ரூமுக்கு வர்றதுக்கு என்ன..?? நான் உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் பயப்படாம வா.

ஆராதனா: அய்ய..!! நான் அதுக்கெல்லாம் ஒன்னும் பயப்படல. இந்த நேரத்துல நான் உன் ரூம்குள்ள இருந்து வெளிய வரதையோ, உள்ள போறதயோ யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க..?? அதான் யோசிக்கிறேன்.

ஹரி: இப்ப என்ன நம்ம ரொமான்ஸ் பண்றோம்னு நினைப்பாங்க.. அவ்ளோ தானே..!! நினைச்சா நினைச்சுட்டு போறாங்க டி. இன்னும் ஒன் மினிட்ல நீ இங்க இருக்க.

ஆராதனா: ஏன் டா இப்படி பண்ற..??

ஹரி: நான் அப்டி தான் பண்ணுவேன். சும்மா அங்க இருந்துட்டு என் கிட்ட பேசிட்டு டைம் வேஸ்ட் பண்ணாத. நீ லேட்டா வந்தா உன் கிட்ட பேசமாட்டேன்.

ஆராதனா: “ஒரு கம்பெனிக்கு எம். டி. மாதிரியா நீ பிஹேவ் பண்ற..?? சின்ன புள்ளைங்க மாதிரி பிளாக் மெயில் பண்ணிக்கிட்டு...!! சரி வரேன் இரு." என்றவள், தான் அறையில் இருந்து வேக வேகமாக வந்து, திறந்து இருந்த ஹரியின் அறைக்குள் சென்று அவனுடைய அறை கதவை வேகமாக சாத்தி தாளிட்டாள்.

ஆராதனா அந்த அறையின் கதவை சாத்திவிட்டு திரும்புவதற்குள்.. அவள் அருகே வந்த ஹரி, அவளை பின் இருந்து அனைத்து அப்படியே அவளை தூக்கி இரண்டு, மூன்று முறை சுற்றினான். 🥰 முதலில் பதறிய ஆராதனா பின் அந்த தருணத்தை அணு அணுவாக ரசித்தாள். 🥰 அந்த அறை முழுவதும் அவர்களுடைய சிரிப்பு சத்தம் எதிரொலித்தது. 😁 😁 😁 😁

“போதும் டா விடு. தல சுத்துற மாதிரி இருக்கு." என்று ஆராதனா சொல்ல, அவளை கீழே இறக்கி விட்டான் ஹரி. பின் இருவரும் அங்கு இருந்த பெட்டில் வந்து அமர்ந்தவர்கள் மூச்சு வாங்க ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்தனர். 😍 🥰 ❤️ ஹரியின் மடியில் தன் தலையை வைத்து படுத்து கொண்டாள் ஆராதனா. ஆராதனாவின் தலையை வருடிய படி அவளுடைய கண்களை நேராக பார்த்த ஹரி, “நீ சந்தோஷமா இருக்கியா பேபி..??" என்றான்.

ஆராதனா: “இந்த ரூமுக்கு நான் வர்றதும், நம்ம எப்படி இருக்கிறதும், ஃபர்ஸ்ட் டைம் இல்ல ஹரி. ஆனா இதுக்கு முன்னாடி இருந்தத விட நான் இப்போ ரொம்ப ஹேப்பியா இருக்கேன். என்னோட இந்த லைஃப்ல என்னோட ஆசை, கனவு, லட்சியம், எல்லாமே உன் கூட வாழ்றது மட்டும் தான் ஹரி. அத தான்டி வேற எதையும் நான் யோசிச்சதே இல்ல. நடுவுல இத்தன நாள் நீ என் கூட பேசாம இருந்தப்ப நான் நானாவே இல்லை.

நான் பிராமிஸா சொல்றேன்.. நீ இல்லாம, உன் கூட பேசாம, எனக்கு எப்டி வாழ்றதுன்னே தெரியல. ஒரே ஒரு தடவ தூரத்தில இருந்தாவது உன்ன பாக்க முடியாதான்னு நான் எத்தனை நாள் ஏங்கி இருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். இத எல்லாம் நான் உன்ன கில்டியா ஃபீல் பண்ண வைக்கிறதுக்காக சொல்லல. இதுக்கு மேலயும் நீ என்ன விட்டுட்டு போனினா.. அத தாங்குறத்துக்கான சக்தி எனக்கு இல்லைன்னு உனக்கு புரிய வைக்கிறதுக்காக தான் சொல்லிட்டு இருக்கேன்.

இந்த நிமிஷம் நான் உன் கூட ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். யூ ஆர் லைக் ஹோம் டு மீ. இப் யூ வாண்ட் டு சீ மீ ஹாப்பி, ஜஸ்ட் பி வித் மீ ஃபார் எவர் அண்ட் ஆப்டர். யூ ஆர் மை எவ்ரிதிங்." என்று கண்கள் கலங்க சொன்னவள், அவனை அப்படியே இடுப்போடு அணைத்துக் கொண்டவள்; அவனுடைய வயிற்றில் தன்னுடைய முகத்தை புதைத்துக் கொண்டாள். 🤗 ஹரியும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். 🤗 அந்த அனைப்பில் விவரிக்க முடியாத அவர்களுடைய காதலின் வலியை பரிமாறிக் கொண்டனர். 🥰 ❤️

ஹரி: “உன் மனசுல இருக்கிற எல்லாத்தையும் நீ ஈஸியா சொல்லிர்ற மாதிரி என்னால அப்டி பேச முடியல. யூ ஆர் எ கேர்ள் ஆரு. நமக்காக நீ உன் ஃபேமிலியை விட்டுட்டு ஈசியா வெளிய வந்துட்ட. நீ அங்க இல்லன்னா உன்ன நெனச்சு அவங்க ஃபீல் பண்ணுவாங்களே தவிர பெருசா அதனால அவங்களுக்கு வேற எந்த லாஸ் -ம் இல்ல.

ஆனா எனக்கு அப்டி இல்ல. என்னோட தலைக்கு மேல நிறைய ரெஸ்பான்ஸ்சிபிலிட்டிஸ் இருக்கு. இது என் லைஃப். நான் தான் எனக்கு முக்கியம்னு என்னால செல்பிஷா யோசிக்க முடியாது. அப்பாவுக்கு அப்புறம் அவருடைய இடத்தில இருந்து இந்த ஃபேமிலிய விஷ்வா தான் பாத்துக்கிறான். பிசினஸ்லையும் அவன் தான் கிங். நான் ஜஸ்ட் சப்போர்ட்டிவா அவன் கூட இருக்கேன் அவ்ளோ தான். அவனோட கான்ட்ரிபியூஷனுக்கு முன்னாடி நான் பண்ணது எல்லாம் ஒண்ணுமே இல்ல.

அப்டி இருக்கும்போது நீயா என் ஃபேமிலியான்னு வரும்போது என்னால என் ஃபேமிலி பக்கம் தான் இருக்க முடிஞ்சது. இப்பவும் விஷ்வா நமக்கு சப்போர்ட் பண்றதுனால தான் நான் தைரியமா உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன். அவன் மட்டும் உன்ன வேணான்னு சொல்லி இருந்தா நானும் அதே தான் சொல்லி இருப்பேன். எனக்கு தெரியும் நான் இப்டி இருக்கிறது உன் சைடுல இருந்து பாக்கும் போது இது எவ்ளோ தப்பா தெரியும்னு.

தெரியறது என்ன அது தப்பு தான். அந்த தப்ப நான் தெரிஞ்சே தான் பண்ணுனேன். ஆனா என்னோட ஹார்ட்ல இருந்து நான் ஒன்னு மட்டும் சொல்றேன் ஆராதனா... என் லைஃப்ல இருக்கிற, இருக்க போற, ஒரே பொண்ணு நீ மட்டும் தான். இப்போ நமக்கு விஷவா சப்போர்ட் பண்ணி இருக்கலைன்னா நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கமா கடைசி வரைக்கும் இப்டியே இருந்துருப்பேன்." என்று உணர்ச்சி வசப்பட்டு சொன்னவன், கலங்கிய கண்களோடு ஆராதனாவை பார்த்துக் கொண்டு இருந்தான். 🥺💔

அவனுடைய கரகரத்த குரலில் இருந்தே அவன் எவ்வளவு மன வேதனையில் பேசி கொண்டு இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட ஆராதனா, எழுந்து அமர்ந்து அவனை கட்டி பிடித்துக் கொண்டாள். 🤗 பின் அவனுடைய முகத்தை தன் கையில் ஏந்தியவள் அவனுடைய கண்களை காதலோடு பார்த்து, “இட்ஸ் ஓகே..!! ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். ஒரு வேளை நான் உன்னோட இடத்துல இருந்து இருந்தாலும், நானும் இப்படி தான் பண்ணி இருப்பேன். இனி மேல் நம்ம பாஸ்ட பத்தி பேச வேண்டாம். இதுக்கு அப்புறம் நம்ம ஒன்னா தான் இருப்போம். எனக்கு விஷ்வா அண்ணா மேல நம்பிக்கை இருக்கு. அவர் நம்மள சேத்து வைப்பாரு." என்றவள், பாசமாக அவனுடைய நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். 🤗 😗 😘

ஹரி: ஐ ஹேவ் சம்திங் ஃபார் யூ.

ஆராதனா: என்னது..??

ஹரி: “இரு எடுத்துட்டு வரேன்." என்றவன், அவனுடைய அறையில் இருந்த பிரிட்ஜை திறந்து அதில் இருந்த பேமிலி பேக் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் ஐ எடுத்து கொண்டு வந்து ஆராதனாவிடம் கொடுத்தான்.

ஆராதனா: வாவ் ஸ்டேப்ரி ஐஸ்கிரீம். 😍 😍 எனக்கு இது பிடிக்கும்னு நீ இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா..??

ஹரி: “நான் எப்படி டி இத எல்லாம் மறப்பேன்..??" என்றவன், அங்கு இருந்த ஸ்பூனை எடுத்து அவளிடம் கொடுத்து சாப்பிடு என்றான்.

அந்த ஐஸ் கிரீமை, ஸ்பூனையும், வாங்கி கொண்டு பெட்டின் மீது சம்மனங்கால் போட்டு அமர்ந்த ஆராதனா, அதை ரசித்து சாப்பிட தொடங்கினாள். அவள் அந்த ஐஸ்கிரீமை குழந்தை போல் ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் ஹரி. 🤩 ❤️

அவன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த ஆராதனா, “எதுக்கு நீ என்னயே பாத்துட்டு இருக்க..!! உனக்கு வேணும்னா கேளு தரேன். நீ என்ன இப்டியே பாத்துட்டு இருந்தா எனக்கு வயிறு வலிக்காதா..???" என்று க்யூட் தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள். 😟 😒

ஹரி: அவளை பார்த்து சிரித்தவன், “இல்ல..!! இல்ல..!! எனக்கு வேணாம். நீயே சாப்பிடு." என்றான். 😅😅

ஆராதனா: சுயரா..??

ஹரி: “சுயர்.. !! சுயர்..!! நீ சப்பிடு." என்று வெட்கம் கலந்த புன்னகையுடன் சொன்னான். ☺️ 😁

ஹரி தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டதால், இதில் இருக்கும் அனைத்தையும் தானே சாப்பிடலாம் என்று நினைத்து மகிழ்ந்த ஆராதனா, அதை சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். அப்போது அவள் அருகே வந்து அமர்ந்தான் ஹரி. ஆராதனா மும்மரமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்ததால், அவன் தன் அருகே வந்ததை அவள் கவனிக்கவில்லை. அவள் அந்த பெரிய ஸ்பூன் முழுவதும் நிறைய ஐஸ் கிரீமை எடுத்து தன்னுடைய வாயில் பொட்டு அதக்கி கொண்டு இருக்க... அவள் கையில் இருந்த ஐஸ்கிரீம் பாக்ஸ் ஐ வாங்கி ஓரமாக வைத்த ஹரி, அவளை தன் பக்கம் இழுத்து, அவள் இதழ்களின் மேல் தன் இதழ்களை பொருத்தி சுவைக்க தொடங்கினான். 😗 😘 😋 😛

இப்படியே வெகு நேரம் கடந்து இருக்க, ஆராதனா மூச்சுக்காக போராடுவதை கவனித்த ஹரி; அவளை தன்னிடம் இருந்து பிரித்து விட்டு அவளை பார்த்து குறும்பாக சிரித்தவன், “எனக்கு இப்டி சாப்பிட்ட தான் பிடிக்கும்." என்றான். ☺️😅 அவனை பார்த்து சிறு வெட்கத்துடன் புன்னகைத்த ஆராதனா, “போடா..!! முதல்ல என் ஐஸ்கிரீம குடு. ஊருகி போய்டும்." என்றவள், அவனிடம் இருந்து அதை பிடுங்கி சாப்பிட தொடங்கினாள். 🍧 இப்படியே ஒரு வழியாக நிறைய காதல் போராட்டங்களுக்கு பின் அந்த பெரிய ஃபமலி பேக் ஐஸ்கிரீம் பாக்ஸ் இல் இருந்த அனைத்து ஐஸ்கிரீமையும் அவர்கள் இருவரும் மாறி மாறி சாப்பிட்டு காலி செய்தனர். 🍧

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 73
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.