தாபம் 69

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 69: இது காதல் மழை (பார்ட் 1)

“அப்படியே ஓடி போயிரு. எனக்கு வேற வேலை நிறையா இருக்கு" என்ற ஷாலினி ‌கதவை சாத்த போனாள்.

விஷ்ணு ஷாலினி சாத்த முயன்ற கதவை தன்னுடைய ஒரு கையால் பிடித்து தடுத்தவன், “போதும் டி. ஓவர் ஆ பண்ணாத. என்ன உள்ள விடு. என்னமோ குடிச்சிட்டு வந்து பெட் ரூம் கதவ தொறக்க சொல்லி பொண்டாட்டி கிட்ட கெஞ்சுற மாதிரியே எனக்கு ஃபீல் ஆகுது." என்றான் குறும்பாக. 🤣 🤣 🤣

ஷாலினி அவன் சொன்னதை கேட்டு கடுப்பானவள் வேகமாக கதவை திறந்து, “நான் என்ன உன் பொண்டாட்டியா டா..??" என்று கோபமாக கேட்டாள். 😡 🤬🔥

விஷ்ணு அவள் கதவை திறந்த கேப்பின் வீட்டிற்குள் வந்தவன்.. “ஆமா..!! நீ என் பொண்டாட்டி தான் டி." என்று அவளுடைய மூக்கை பிடித்து கிள்ளியபடி சொன்னவன்,

“என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி.. 😍 😘

செல்ல குட்டி.. செல்ல குட்டி.. தான் டி.. 🥰

எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே...!!!" 😍🥰

❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

என்ற பாடலை அவள் முன் பாடி ஆடியவன், பாடி முடித்த பின் அவள் முன் மண்டியிட்டு அவனுடைய இரு கைகளையும் விரித்த படி நின்றான். 🤗 விஷ்ணு இப்படி செய்வான் என்று எதிர்பார்த்திறாத ஷாலினி, திகைத்து போய் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். 😳 அவளுடைய ஆழ் மனம் விஷ்ணுவின் ஒவ்வொரு செயலையும் ரசித்து கொண்டு இருந்தது. 😍 🥰

அதுவரை மண்டியிட்டு இருந்த விஷ்ணு சட்டென்று எழுந்து நிற்க, அதனால் தன்னிலைக்கு வந்த ஷாலினி அவனை கோபமாக பார்த்து தன்னுடைய ஆள் காட்டி விரலை அவன் முன் நீட்டியவள், “இங்க பாரு..!! நீ ஃபிளிர்ட் பண்ணி ஆடிப்பாடி ஜாலியா டைம் பாஸ் பண்றதுக்கு எல்லாம் நான் ஆள் இல்ல புரிஞ்சுதா..??" என்றாள் காட்டமாக. 😒 😡 😤

நியாயமாக இந்த சீனில் ஷாலினி இப்படி சொன்னதற்கு தன்னை இவ்வளவு மோசமான ஆளாக தான் இவள் நினைத்து கொண்டு இருக்கிறார்களா..?? என்று நினைத்து விஷ்ணு அவள் மீது கோபப்பட்டு தான் இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய விஷ்ணுவோ ஷாலினியை நன்கு புரிந்து வைத்து இருந்தான். அவள் இந்த வார்த்தைகளை அவளுடைய மனதில் இருந்து சொல்லி இருக்கவில்லை என்று அவன் நன்கு அறிந்து இருந்ததால், கேஷுவலாக அவள் அருகே சென்றவன்; அவளுடைய கண்களை நேராக பார்த்து, “நீ என்ன எவ்ளோ புரிஞ்சு வச்சு இருக்கன்னு எனக்கு தெரியல ஷாலு. ஆனா இந்த வேர்ட்ஸ்ஸ நீ உன் மனசுல இருந்து சொல்லி இருக்க மாட்டேன்னு நான் நம்புகிறேன். என் கண்ண நல்லா பாரு டி. என்ன பாத்தா நான் உன் கூட சும்மா ஃப்லிர்ட் பண்ணிக்கிட்டு டைம் பாஸ் பண்ற மாதிரி உனக்கு தோணுதா..??" என்று அவனுடைய அன்பான குரலில் கேட்டான்.

விஷ்ணுவின் அந்த காந்த குரல் ஷாலினியை வசீகரித்தது. அவனுடைய பார்வைக்குள் மெல்ல மெல்ல தன்னை தொலைத்துக் கொண்டு இருந்தாள் ஷாலினி. 😍 🥰 விஷ்ணுவின் கண்கள் வழியாக அவனுடைய இதயத்திற்குள் ஊடுருவி சென்ற ஷாலினியால் அவனுடைய நேர்மையான அன்பை உணர முடிந்தது. ❤️💫🌟✨

விஷ்ணு தன் மீது வைத்து இருக்கும் கள்ளமற்ற அன்பை ஏற்கனவே ஷாலினி அறிந்து இருந்தாள் தான். ஆனால் இப்போது அவனுடைய பார்வை அவளிடம் அவனுடைய காதலை ஓறாயிரம் முறை சொல்லாமல் சொல்லி கொண்டு இருக்க, அதன் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாத ஷாலினி; சட்டென்று அவன் மீது இருந்த தன்னுடைய பார்வையை விளக்கிக் கொண்டாள். தன்னுடைய தலையை கீழே குனிந்து கொண்ட ஷாலினி, “ஐ அம் சாரி." என்றாள் மெல்லிய குரலில்.

ஷாலினி இப்போது தான் அவளுடைய வாழ்க்கையில் மீள முடியாத நிறைய கஷ்டங்களை சந்தித்து அதில் இருந்து வெளியே வந்து கொண்டு இருக்கிறாள். அதனால் இப்போதே அவளிடம் இருந்து தனக்கு சாதகமான ஒரு பதில் வரும் என்று விஷ்ணு, எதிர்பார்த்து கொண்டு எல்லாம் இருக்கவில்லை. அவளுக்கு போதிய கால அவகாசத்தை கொடுக்க விரும்பியவன், இந்த பேச்சை மாற்ற நினைத்து; “மேடம் எங்க போறதுக்கு இப்டி கிளம்பி ரெடியா இருக்கீங்க..??" என்று சிரித்து கொண்டு கேஷுவலாக கேட்டான். 😁 😁 😁 😁

ஷாலினி விஷ்ணு சகஜமாக பேசியதால் அவளும் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தவள், “ஷாப்பிங் போனும். வீட்டுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கணும் இல்ல அதான்." என்றாள்.

விஷ்ணு: “பார்றா..!! சூப்பர்..!! நானே உன்ன ஷாப்பிங் போகலாம் வான்னு கூப்பிடலாம்ன்னு வந்தேன். பாத்தா நீயே ரெடியா இருக்க. சரி வா அப்போ கிளம்பலாம்." என்றவன், பேன்ட் பாக்கெட்டில் இருந்த அவனுடைய பைக் கீயை வெளியே எடுத்தான்.

ஷாலினி: நோ தேங்க்ஸ். நானே போயிட்டு வந்துடறேன்.

விஷ்ணு: சும்மா சின்ன பொண்ணாட்டம் எல்லாத்துக்கும் அடம் பிச்சுட்டு இருக்காத ஷாலினி. அந்த ரவி, இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்கான். ஆனாலும் வேற யாராச்சும் உன் கிட்ட வந்து பொர்ப்லெம் பண்ணா நீ என்ன பண்ணுவ.. ??

ஷாலினி: “பரவால்ல. ஏதாச்சும் பிரச்சனை வந்தா நான் பாத்துக்குறேன். எப்படியும் என்ன லைப் லாங் நான் தானே பாத்துக்கணும்...!!" என்றாள், ஒரு உள் அர்த்தத்துடன்.

விஷ்ணு: “உனக்கு ஒரு பிரச்சனைன்னா அது என்ன தாண்டி தான் வரணும். இதுக்கு மேல என்ன பேச வைக்காத வா போலாம்." என்று உறுதியாக சொன்னவன், அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் வாசலின் கதவை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.

விஷ்ணுவுடைய அந்த உறுதியான குரலில் ஒளிந்து இருந்த தனக்கான அன்பையும், அக்கறையையும், உணர்ந்து கொண்ட ஷாலினியால் அவனை மறுத்துப் பேச முடியவில்லை அதனால் அமைதியாக அவனுடன் கிளம்பினாள். விஷ்ணு பார்க்கிங்கில் இருந்த அவனுடைய பைக்கை எடுக்க போக.. அவனை தடுத்த ஷாலினி, “இல்ல பைக்ல போக வேண்டாம் விஷ்ணு. நிறைய திங்ஸ் வாங்க வேண்டியது இருக்கு. சோ ஆட்டோல போகலாம்." என்று சொல்ல.. இருவரும் வெளியே வந்து ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு ஷாப்பிங் செய்ய கிளம்பினர்.

அருணின் குழந்தையை கடத்திய ரவுடிகள் சொன்ன அவர்களுடைய தலைவன் குமார் என்ற ரவுடியை பிடிப்பதற்காக ஆதித்யாவுடன் ஒரு ரோட்டில் கையில் துப்பாக்கியுடன் ஓடி கொண்டு இருந்தான் சிவா. அப்போது அவனுக்கு ஆராதனாவின் தோழி திவ்யாவிடம் இருந்து கால் வந்தது. தன்னுடைய மொபைலை எடுத்து காலர் ஐ.டியில் திவ்யாவின் பெயரை பார்த்தவுடன் அப்படியே நின்று விட்டான் சிவா. பின் அவனோடு ஓடி வந்து கொண்டு இருந்த ஆதித்யாவை பார்த்து, “மச்சான் எனக்கு ஒரு இம்பார்டன்ட் ஒர்க் வந்துருச்சு டா. இவன நீயே பாத்துக்கோ. நான் கிளம்புறேன்." என்று சொன்னவன்; அவன் கையில் இருந்த துப்பாக்கியை தன் இடுப்பில் சொருகிய படியே கால் ஐ அட்டென்ட் செய்து திவ்யாவிடம் பேச தொடங்கினான்.

சிவா: சொல்லு திவ்யா.

திவ்யா: சாரி சார். பிஸியா இருந்தீங்களா... நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டனா..??

சிவா: இல்லையே... ஏன் அப்படி கேக்குற..??

திவ்யா: இல்ல சார்.. நீங்க லாஸ்ட் ரிங்க்ல தான் கால் அட்டென்ட் பண்ணிங்க. அதனால தான் கேட்டேன்.

சிவா: சரி..!! சொல்லு என்ன விஷயம்..??

திவ்யா: ஆராதனா நாராயணன் போலசுக்கு போயிட்டாளாம்... இப்ப தான் கால் பண்ணி சொன்னா.

சிவா: ஆமா இப்ப அதுக்கு என்ன..?? நீ உன் பிரண்ட பிரிஞ்சி இருக்க முடியலன்னு நீயும் அங்க போகனும்ன்னு சொல்றியா...???

திவ்யா: ஐயையோ...!! அப்படி எல்லாம் இல்ல சார். அவளோட திங்ஸ் எல்லாம் இன்னும் இங்க ஹாஸ்டல்ல தானே இருக்கு...!!! அத எல்லாம் அவ என்ன எடுத்துட்டு வர சொன்னா. நான் எப்படி சார் இது எல்லாத்தையும் எடுத்துட்டு அங்க தனியா போக முடியும்..?? அதனால தான் என்ன பண்றதுன்னு தெரியாம உங்களுக்கு கால் பண்ணுனேன்.

சிவா: “ஆமா நீ தனியா போக முடியாது. சரி நான் ஒரு 15 மினிட்ஸ்ல அங்க வரேன். நம்ப திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு சேந்தே அங்க போயிடலாம்." என்றவன், காலை கட் செய்துவிட்டு திவ்யாவின் ஹாஸ்டலை நோக்கி காரை எடுத்து கொண்டு கிளம்பினான்.

சிவா அவளிடம் ஃபோனில் சொன்னது போலவே 15 நிமிடத்திற்குள் அவளுடைய ஹாஸ்டலுக்கு வந்து விட்டான். அவள் அனுமதி இன்றி நேராக திவ்யாவின் அறைக்குள் அவன் வர அப்போது மேலே இருக்கும் கபோர்ட்டில் இருந்த ஏதோ ஒரு பொருளை கஷ்டப்பட்டு ஒரு சேரை போட்டு ஏறி எடுத்துக் கொண்டு இருந்த திவ்யா, சிவா சட் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே வந்ததால்.. அவனைப் பார்த்து பதட்டமாகி.. அந்த சேர் இல் இருந்து கீழே விழப் போனாள். அதை கவனித்த சிவா, விரைந்து அவள் அருகே சென்று.. அவள் கீழே விழாமல் அவளை தன்னுடைய இரு கைகளில் ஏந்தினான். 🤗 ☺️

கீழ விழப்போக்கும் அதிர்ச்சியில் அந்த கபோர்டுக்குள்ளே இருந்த பைல்களை திவ்யா தட்டிவிட்டு இருக்க, அதில் இருந்த ஃபைல்கள் அனைத்தும் கீழே விழுந்து... அதில் இருந்த பேப்பர்கள் அனைத்தும் கீழே சிதறி அவர்களை சுற்றி காற்றில் பறந்து கொண்டு இருந்தது. அதில் இருந்த ஒரு பெரிய பைல் சிவாவின் தலையில் வந்து பட்டென்று விழ, திவ்யாவின் கண்களில் தன்னை தொலைத்து இருந்த சிவா; அதை எல்லாம் கவனிக்காமல் தன் கையில் இருக்கும் திவ்யாவையே பார்த்து கொண்டு இருந்தான். 😍 🥰

திவ்யாவோ திடீரென்று நடந்த இந்த சம்பவம் தந்த அதிர்ச்சியலும், சிவாவின் அருகாமை கொடுத்த கிறக்கத்திலும் மயங்கி போய் அவனுடைய கண்களுக்குள் சிறை பட்டு, அவனுடைய கைகளில் கிடந்தாள். 🤗 🥰 பூவை போல் இருந்த திவ்யாவை தான் தன்னுடைய கையில் ஏந்தி கொண்டு இருப்பதை கூட மறந்து விட்ட சிவா.. 50 kg தாஜ்மஹால் எனக்கே எனக்கா..?? என்று நினைத்து இருப்பான் போல... அதனால் திவ்யாவை எத்தனை நிமிடங்களாய் இப்படி ஏந்தி கொண்டு இருக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. 😁

கையில் மிதக்கும் கனவா நீ... 😍

கை கால் முளைத்த காற்றா நீ... 👣

கையில் ஏந்தியும் கனக்கவில்லையே 🥰

நுரையால் செய்த சிலையா நீ... ✨



இப்படி உன்னை ஏந்திக் கொண்டு.. 🤗

இந்திர லோகம் போய் விடவா... 🥰

இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..

சந்திர தரையில் பாயிடவா..??? ☺️❤️💫🌟✨

என்ற பாடலை தனக்குள் பாடி கொண்டு இருந்த சிவா, கனவு உலகில் திவ்யாவோடு டூயட் பாடி கொண்டு இருந்தான். அப்போது திடீரென்று திவ்யாவின் மொபைல் போன் அலறியது. ஆராதனா தான் அவளுக்கு கால் செய்து இருந்தாள். அந்த தொலைபேசி அழைப்பின் சத்தத்தால் டிஸ்டர்பன சிவா, தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று கூட மறந்து தன் கையில் இருந்த திவ்யாவை அப்படியே கீழே விட்டு விட்டான்.

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 69
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.