தாபம் 51

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 51: ஹரியின் தற்கொலை முயற்சி


அருண்: அந்த ஆக்சிடென்ட்ல உங்க வைஃப்போட அவங்க வயித்துல இருந்த அந்த குழந்தையும் சேந்து இறந்திருச்சில்ல..??

வருண்: “எஸ் டாக்டர்." என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

அருண்: உங்களுக்கு ரெண்டு பிரச்சனை இருக்கு மிஸ்டர் விஷ்வா. அதை சரி பண்ணிட்டா உங்களுக்கு இந்த கனவும் வராது அண்ட் இன்சோம்னியாவும் சரி ஆயிடும்.

வருண்: என்ன பிராப்ளம் டாக்டர்..??

அருண்: (First problem) ஃபர்ஸ்ட் பிராப்ளம் உங்களுக்கு இருக்கிற (Guilty Feeling) கில்டி ஃபீலிங். உங்க wife-ஐயும், குழந்தையையும், உங்களால காப்பாத்த முடியலன்ற கில்ட்டி ஃபீடிங் உங்களோட (Subconscious mind) சப்கான்சியஸ் மைண்ட்ல ரொம்ப ஆழமா இருக்கு. உங்களோட எமோஷன் தான் ஒரு கற்பனை காட்சியா உங்க கனவா வருது. இந்த கனவு வர கூடாதுன்னா நீங்க முதல்ல அந்த கில்டி ஃபீலிங்ல இருந்து வெளிய வரணும்.

அது ஒரு ஆக்சிடென்ட். நீங்களும் அதுல பாதிக்க பட்டு இருக்கும் போது உங்களால அவங்கள காப்பாத்த முடியலன்னு நெனச்சு நீங்க ஃபீல் பண்ண கூடாது. அண்ட் இரண்டாவது விஷயம், நீங்க ரொம்ப (Lonely) லோன்லியா பீல் பண்றீங்க. நீங்களே நல்லா யோசிச்சு சொல்லுங்க மிஸ்டர் வருண், அந்த இன்சிடென்ட் நடக்கிறதுக்கு முன்னாடி நீங்க உங்க ஃபிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி கூட எப்படி இருந்தீங்களோ அதே மாதிரி தான் இப்பவும் இருக்கீங்களா...??

வருண்: “நோ டாக்டர். என்னால முன்னாடி மாதிரி இருக்க முடியல." என்று தன் மனதில் இருந்து உண்மையாக பதில் சொன்னான்.

அருண்: “அதான் இப்ப பிரச்சனை. நீங்க (Reality ah accept) ரியாலிட்டிய அக்சப்ட் பண்ணிட்டு மூவ் ஆன் பண்ணனும். முன்னாடி மாதிரி இருக்க ட்ரை பண்ணுங்க. முடிஞ்சா எங்கயாவது ஒரு லாங் டிரிப் போயிட்டு வாங்க. உங்க மைண்ட்ட ரிலாக்ஸாடா வெச்சுக்கோங்க. இஃப் இட் இஸ் பாசிபிள்... உங்க மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்க பர்சனல் லைஃப்ல நான் இன்டெர்பியர் ஆகுறேன்ன்னு என்ன தப்பா நினைச்சுக்காதீங்க.

அஸ் எ டாக்டர் இது என்னோட சஜஷன். நம்மள சுத்தி ஃபேமிலி, பிரண்ட்ஸ்னு எத்தன பேர் இருந்தாலும் அவங்க யாரும் ஒரு சோல்மெட்டுக்கு ஈக்குவல் ஆக முடியாது. நான் சொன்னத யோசிச்சு பாருங்க. நீங்க பிசிகல்லி ரொம்ப ஹெல்தியா தான் இருக்கீங்க. ஆனா உங்க மெல்டல் ஹெல்த் ரொம்ப புவரா இருக்கு. ஆனா உங்க மெண்டல் ஹெல்த் உங்க பிசிகல் ஹெல்த் -த (Affect) அஃபெக்ட் பண்ணி உங்கள படித்த படுக்கையா ஆக்குற்துக்கு கூட வாய்ப்பு இருக்கு.

நீங்க நார்மல் பவர் இருக்கிற ஸ்லீப்பிங் டேப்லெட் சாப்பிட்டாலும் தூங்க முடியலை ன்னு சொல்றீங்க. அதனால கொஞ்சம் பவர் அதிகமா இருக்குற டேப்லெட்ஸ் எழுதி தரேன். நீங்க நார்மலாவே தூங்க ட்ரை பண்ணுங்க. அப்படி தூங்குறப்ப நடுவுல அந்த கனவால டிஸ்டர்ப் ஆகி திரும்ப தூங்க முடியலன்னா மட்டும் இந்த டேப்லெட் யூஸ் பண்ணுங்க." என்பவர், ஒரு மாத்திரையின் பெயரை தன்னுடைய பிரிசுரிப்ஷனில் எழுதி அவனிடம் கொடுத்தார்.

அதை பெற்று கொண்ட விஷ்வா, அதற்கு மேல் டாக்டரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அந்த பிரிஸ்கிரிப்ஷனை மட்டும் அவரிடம் இருந்து பெற்று கொண்டு பத்திரமாக அதை வைத்து கொண்டான்.

அருண்: வேற ஏதாச்சு என் கிட்ட கேட்கணும்னா கேளுங்க.

வருண்: ”நத்திங் டாக்டர். நீங்க கிளம்புங்க." என்றால் உணர்ச்சியற்ற குரலில்...

அருண்: ஓகே சார். நான் கிளம்பறேன். வேற ஏதாச்சு ப்ராப்ளம்ன்னா எனக்கு எப்ப வேணாலும் கால் பண்ணுங்க. நான் உடனே உங்களை வந்து பாக்குறேன்

வருண்: சூர் டாக்டர். தேங்க்ஸ் ஃபார் கம்மிங்.

அருண்: “அந்த டேப்லட்ட அதிகமா யூஸ் பண்ணாதீங்க. அது உங்க ஹெல்த்துக்கு நல்லதில்ல. டேக் கேர்." என்றவன், விஷ்வாவின் கேபினில் இருந்து சென்று விட்டான்.

அருண் அங்கு இருந்து சென்ற பின் சிவாவை அழைத்த விஷ்வா, அந்த பிரிஸ்கிரிப்ஷனை அவனிடம் கொடுத்து அந்த மாத்திரையை வாங்கி வருமாறு சொல்லி அனுப்பினான்.

நாராயணன் மருத்துவமனையில்...

ஆராதனா தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு ஹாஸ்பிடல் பெட்டில் வசதியாக காலை நீட்டி கொண்டு அமர்ந்து ஹரியை பார்த்து முறைத்த படி இருந்தாள்.☹️🤨 தப்பு செய்துவிட்டு மாட்டி கொண்டு அம்மாவிடம் சாரி சொல்லி சமாதான படுத்தும் குழந்தை போல் ஆராதனாவின் அருகே அமர்ந்து இருந்த ஹரி, அவளுடைய கால்களை தன்னுடைய கைகளால் பிடித்து விட்ட படியே மன்னிப்பு கேட்டு கொண்டு இருந்தான். ஆராதனா தன் வாயை திறந்து அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

ஹரி: “எத்தன தடவ சாரி கேக்குறேன்.. உனக்கு என்ன திட்டனும்ன்னா கூட பரவால்ல.. வாய் விட்டு திட்டிடு. ஆன பேசாம மட்டும் இருக்காத ப்ளீஸ்..!!" என்று கெஞ்சினான்.

ஆராதனா: இந்த ஹாஸ்பிடல் உங்களோடதுன்னா.. அதுக்குன்னு நீ இங்க குடிச்சிட்டு என்ன வேணா பண்ணலாம்ன்னு அர்த்தமா..??? படிச்சிருக்கில்ல..?? எவ்ளோ பெரிய பொசிஷன்ல இருக்க... பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா உனக்கு..??

ஹரி: சாரி ஒரு ஸ்ட்ரெஸ்ல இப்டி பண்ணிட்டேன்.

ஆராதனா: “உன்ன விட எனக்கு தான் ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கு. அப்ப உன் கூட சேந்து நானும் குடிக்கட்டுமா..?? நீ குடிச்சிட்டு கம்முனு இருந்து இருந்தா கூட பரவால்ல. ஹாஸ்பிடல் டெரஸ்ல தர்ஷன் கூட சேந்துகிட்டு நீ பாட்டு குடிச்சிட்டு மாடில இருந்து கீழ விழுந்து சூசைட் பண்ணிக்க போறேன்னு டிராமா பண்ணிட்டு இருக்க... நீ பண்ணுன ட்ராமாவ அங்க கீழே நின்னுட்டு எத்தன பேர் வீடியோ எடுத்தாங்க தெரியுமா..??

நம்ம பாடி கார்ட்ஸ் அந்த வீடியோ எடுத்தவங்க எல்லாத்தையும் கஷ்டப்பட்டு யார் யாருன்னு பாத்து அவங்க கிட்ட மொபைல் -ல வாங்கி டெலிட் பண்ணாங்க. அத பத்தி எல்லாம் உனக்கு தான் கவலை இல்லையே... நான் வந்து அவ்ளோ நேரம் பேசி கன்வின்ஸ் பண்ணி உன்ன கீழ கூட்டிட்டு வந்தேன். நல்ல வேளை நான் வந்து உன்ன கீழ கூட்டிட்டு வந்துனால இத யாரும் விஷ்வா அண்ணா -க்கு இத பத்தி இன்போர்ம் பண்ணல.

இல்லேனா அந்த லேட் நைட்டில விஷ்வா அண்ணா பதறியடிச்சுட்டு ஓடி வந்திருப்பாரு. இருக்கிற பிரச்சினைல என்ன பாத்துக்குறேன்னு நீ இங்க வந்து இருந்துகிட்டு இப்ப எல்லாரையும் டென்ஷன் பண்ணிட்டு இருக்கறதுக்கு எதுக்கு ஆண்ட்டி கிட்ட பொய் சொல்லிட்டு இங்க வந்து இருக்க..?? கிளம்பி வீட்டுக்கு போ முதல்ல." என்று காட்டமாக சொன்னவள், தன் மீது இருந்து அவன் கையை தட்டி விட்டாள். 😡

ஆராதனா பேசிய அனைத்தையும் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்த ஹரி, அவளை சமாதான படுத்துவதற்காக பேச வாயை திறக்க போக... அதற்க்குள் அவனுடைய மொபைல் போன் அலறி அவனுடைய கவனத்தை அதன் பக்கம் திருப்பியது. செண்பகம் தான் அவனுக்கு கால் செய்து இருந்தாள். அவன் ஆராதனாவுடன் பேசி கொண்டு இருந்ததால் அந்த கால் ஐ கட் செய்து விட்டான் ஹரி. செண்பகம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கால் செய்து கொண்டு இருந்தாள்.

ஒரு வேளை நடு இரவில் தான் செய்த வேலைகள் அனைத்தும் செண்பகத்திற்கு தெரிந்து விட்டது போல என்று நினைத்தவன், வேறு வழி இன்றி அந்த கால் ஐ அட்டென்ட் செய்தான். போனில் பேசிய செண்பகம், சௌபர்ணிகாவை பற்றி சொல்லி இன்னும் அரை மணி நேரத்தில் அவளை அந்த உணவகத்தில் சென்று சந்தித்து விட்டு வரும் படி ஆணையிட்டள்.

ஹரி எவ்வளவோ செண்பகத்திடம் தான் முக்கியமான வேலையில் இருப்பதால் தன்னால் அங்கே செல்ல முடியாது சொல்லி பார்த்தான். ஆனால் அதை எதையும் காதில் வாங்கி கொள்ளாத செண்பகம், “நீ அங்க போறியான்னு நான் கேக்கல. போயிட்டு வான்னு சொல்றேன் அவ்வளவு தான். நீ அங்க மட்டும் போகலேன்னு எனக்கு தெரிஞ்சது.. அப்படியே எங்கயாவது ஓடி போயிடு. உன்ன வீட்டுகுள்ளயே விட மாட்டேன்." என்றவள், கால் ஐ கட் செய்து விட்டாள்.

செண்பகத்துடன் பேசிவிட்டு பெருமூச்சு விட்ட ஹரி, ஆராதனாவிடம் செண்பகம் சொன்னதை அப்டியே சொன்னான். அதை கேட்டு கடுப்பான ஆராதனா, “சூப்பர்..!! அதான் உங்க அம்மா சொல்லிட்டாங்கள்ல... இன்னும் ஏன் இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ற..?? நல்லா டிரஸ் பண்ணிட்டு அந்த பொண்ணு கூட டேட்டிங் போ." 😒

ஹரி: நான் என்னமோ அந்த பொண்ண பிளான் பண்ணி வர சொல்லி ஜாலியா டேட்டிங் போற மாதிரி பேசுற..?? அம்மா திடீர்னு இப்படி சொன்னா நான் என்ன பண்றது..?? எப்படியும் அந்த பொண்ணு கிட்ட போய் பேசி... எனக்கு உன்ன பிடிக்கல. இந்த கல்யாணம் வேணாம்ன்னு தானே சொல்ல போறேன்... அதுக்கு எதுக்கு நீ என் கிட்ட கோச்சுக்கிற..??

ஆராதனா: நீ என்னமோ பண்ணு எனக்கு என்ன..?? முதல்ல என் கண்ணு முன்னாடி நிக்காத. உன்ன பார்த்தாலே எனக்கு டென்ஷன் ஆகுது. போய் தொல." என்று உச்ச கதியில் சொன்னவள், அருகில் இருந்த தலையணையை எடுத்து அவனுடைய முகத்தில் அடித்தாள்.

ஹரி: அவள் தன் மீது தூக்கி அடித்த பில்லொவை அழகாக கேட்ச் பிடித்தவன், “சரி எனக்கு லேட் ஆகுது. நான் போய் அந்த பொண்ண பாத்துட்டு அப்புறமா உன்ன வந்து பாக்கிறேன்." என்றவன், அங்கு இருந்து சென்று விட்டான்.

ஷாலினியின் அப்பா வீட்டில்...

நேற்று வெளியே சென்ற சசி, இன்னும் வீட்டுக்கு வராததால் வாசலையே பார்த்த படி அமர்ந்து இருந்தாள் மாலதி. காலை 11:00 மணி அளவில் வாடிய முகத்துடன் தன் வீட்டிற்குள் வந்தான் சசி. சசி வந்ததும் வராததுமாக அவனிடம் ஷாலினியை பற்றி சரமாரியாக குறை கூறிக் கொண்டு இருந்தாள் மாலதி.

சசி: ஏற்கனவே அதிக கடுப்பில் இருந்தவன், மாலதி பேசியதை கேட்டு இன்னும் கடுப்பாகி அவளுடைய கன்னத்தில் பளாரென்று அறிந்தவன், “நீ தான டி அவள வளர்த்த..?? நீ அவள ஒழுங்கா வளர்த்து இருந்தா இன்னைக்கு அவ இப்படி கொழுப்பெடுத்து திரிவாளா..?? இப்ப நான் வந்ததும் வராததுமா அவள பத்தி பேசிகிட்டு இருக்க... நேத்தே எனக்கு வேல போயிருச்சுன்னு சொன்னனே.. அத பத்தி உனக்கு ஏதாவது கொஞ்சமாவது அக்கறை இருக்கா..??? அவ்ளோ தான் எல்லாம் முடிஞ்சது. இனிமே எனக்கு எங்கேயும் வேலை கிடைக்காது. இது வரைக்கும் அவ இங்க இருந்து சம்பாரிச்சு குடுத்துட்டு இருந்த. இப்ப அவளும் இங்க இருந்து போயிட்டா. இனி மேல் இப்படி எல்லாம் நீ மினிக்கிட்டு திரிய முடியாது. போங்க...!! நீயும் உன் மகளும் எங்கயாவது கூலி வேலைக்கு போய் இந்த குடும்பத்தை காப்பாத்துங்க." என்று கோபமாக சொன்னவன் 😡 தன்னுடைய அறைக்கு சென்று கதவை அடைந்த சாத்தினான்.

- நேசம் தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 51
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.