நாட்களும் பேச்சைக் கேட்பேனா என்று வேகமாகவே ஓடத் தொடங்கியது. கவிதா மற்றும் கௌதமின் கல்யாண வேலைகள் விநாயகர் பூஜை முடிந்த பிறகு ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
கவிதா மற்றும் கௌதம் இருவரும் ஒரு நாளைக்கு சில மணி நேரமாவது ஃபோனில் பேசி அவர்களின் காதலை வளர்த்துக் கொண்டு தான் இருந்தனர். சரவணனின் பெற்றோர்கள் இப்பொழுது ஓரளவுக்கு இயல்பு நிலையைத் தொட்டிருந்தனர்.
நாளையிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஊரே கோலாகலமாக இருக்க போகிறது என்று அனைவருக்கும் ஒரே கொண்டாட்டம் தான். முக்கியமாக குழந்தைகளுக்கு, அத்துடன் பள்ளிக்கு விடுமுறையும் கொடுத்திருந்தனர்.
“அபி நீ ஏன் டா டல்லா இருக்க??” என்று சரவணன் கேட்க, “இல்ல மச்சான் வீட்ல பொண்ணு பார்க்குறாங்கனு சொல்லியிருந்தாங்க… ரொம்ப வருஷம் தட்டி கழிச்சிட்டே இருந்தேன்… இதுக்கு மேல அம்மா கோபப்படுறாங்கனு சரின்னு நானும் பாருங்கனு சொல்லிட்டேன்… எப்படியும் செட்டாக நாட்கள் ஆகும்லனு விட்டுட்டேன்… இப்ப என்னடான்னா பொண்ண பார்த்து அவங்களுக்கு புடிச்சிருக்காம் அதனால என்னையும் பாருன்றாங்க… எனக்கு இப்ப என்ன சொல்றதுன்னு தெரியல” என்று அபிலாஷ் கூறினான்.
“இதுல சொல்றதுக்கு என்ன அபி இருக்கு…. பேசி பாரு பிடிச்சிருந்தா சரி இல்லன்னா பார்த்துக்கலாம்” என்று விக்ரம் கூறினான். “என்னமோ டா… இப்போதைக்கு எதுவும் அனுப்பாதீங்க பூஜை எல்லாம் முடிச்சிட்டு நானே வீட்டுக்கு வரேன் நேர்ல பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்” என்று அபிலாஷ் கூறவும், “சரி உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு அவ்வளவு தானே” என்று சரவணன் கூறினான்.
“ம்ம், சரி!!…. ஆமா சனா எங்க ரெண்டு நாளா சுத்தமா பார்க்கவே முடியல??” என்று அபிலாஷ் கேட்க, “நானே பார்க்கல டா…. ஏண்டா அவ இப்படி பண்றான்னு தெரியல” என்று விக்ரம் புலம்பினான்.
“அவளை பத்தி தெரியும்ல… ஏற்கனவே இந்த பூஜை பொறுப்பெல்லாம் வேற எடுத்திருக்கா… அது போக எக்ஸ்போர்ட் ஆர்டர் வேற நமக்கு இப்போ உறுதி ஆகி இருக்கு…. அப்படி இருக்கும் போது வேலையை இழுத்து போட்டு தான் செய்வா…. இது போக மிஷின்லாம் வேற வந்து இறங்கிருச்சு… அப்ப அது எல்லாத்தையும் செட் பண்ணி சொல்லி கொடுத்துட்டு தான் போகுனும்னு நினைப்பா அவ்ளோ தான்….. கார்த்திக் வேற அடுத்த மாசத்துலிருந்து அவனும் கிளம்பிடுவான்…. அப்ப நானும் இன்னொரு அக்கா, நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் ஆப்ரேட் பண்ற மாதிரி இருக்கும்” என்று சரவணன் சனந்தாவுக்கு வக்காலத்து வாங்கினான்.
“அட போடா அவளும் பூஜை எல்லாம் முடிஞ்சு எப்ப கிளம்புவான்னு தெரியல…. அவளுக்கும் காலேஜ் கூடிய சீக்கிரம் ஆரம்பிச்சுரும்… என் கூட நேரம் செலவழிக்கிற மாதிரியே இல்ல… இங்க தான் இருக்கிற மாதிரி இருக்கு… ஆனா, அவளை ரொம்ப மிஸ் பண்றேன்” என்று விக்ரம் வருத்தத்துடன் கூறினான்.
“சரி இந்த அஞ்சு நாள் எல்லா வேலையும் நிப்பாட்டி கோவில்ல தான் இருப்போம்… எல்லாரும் சேர்ந்து சாப்பாடு செய்றது சாப்பிடறது… ஆட்டம் பாட்டம்னு அப்படித் தானே இருப்போம் அப்ப பேசிக்கலாம் விடு டா…. அதுவும் இல்லாம அவளுக்கும் போறோம்னு இருக்கும்ல அதான் எல்லார் கூடயும் டைம் ஸ்பெண்ட் பண்றா போல டா” என்று அபிலாஷ் கூறவும், “என்னை தவிர எல்லார் கூடயும் டைம் ஸ்பென்ட் பண்ணுவா… சரி ஓகே விடு நான் பேசிக்கிறேன்” என்று விக்ரம் கூறினான்.
“சரவணா ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னியே என்னது??” என்று விக்ரம் கேட்க, “ம்ம்… அதுவா பூஜை எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா பேசிக்கலாம் டா” என்று சரவணன் கூறவும், “இல்ல பரவால்ல சொல்லு” என்று விக்ரம் கறாராக கேட்டான்.
“ஒரு பையன் நமக்கு தகவல் சொல்றான்ல காளி அவங்களோட குரூப்ல…. அந்தப் பையன் தான் தகவல் சொன்னான் டா…. அத தான் பேசணும்னு சொன்னேன்…. அவங்க ஓரளவுக்கு சனாவை பத்தி எல்லா தகவலும் சேகரிச்சுட்டாங்கலாம்… அது போக அந்த அடியாள் ஒருத்தன் காளி கிட்ட அடி வாங்குனான்னு சொன்னேன்ல, அவன் ஒரு ஃபோன் மட்டும் காளி கிட்ட இருக்குன்னு கண்டு பிடிச்சு இருக்கானாம்… அது ஒரு வேலை அபர்ணாவோட ஃபோனா இருக்குமோ அப்படி என்ற சந்தேகம் அந்த அடியாளுக்குமே இருக்கு” என்று சரவணன் கூறவும் விக்ரம் மற்றும் அபிலாஷ் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
“அதனால தான் நம்ம அப்புவோட ஃபோன் எவ்வளவு ரிக்வெஸ்ட் பண்ணாலும் கிடைக்கலையோ” என்று விக்ரம் ஆதங்கத்துடன் கேட்க, “அப்படி தான் இருக்கும் மச்சான்… ஆனா, அதுலயும் அந்த அடியாளுக்கு ஒரு டவுட் இருக்கு டா… ஃபோன் இருக்கு அப்ப அதுல ஏதாவது எவிடென்ஸ் இருந்தா அத ஈசியா நம்ம டெலிட் பண்ணிடலாம் தானே!!….
“ஏன்னா மெயில் ஐடி அக்கவுண்ட் அதுல லாகின்ல இருக்கும்…. எந்த டீடைல்ஸ் எப்படி சேவ் பண்ணி இருந்தாலும் அதுல இருந்தே டெலிட் பண்ணிடலாம் தான்… ஒரு வேலை அவர சார்ந்த எவிடன்ஸ் இருந்தாலும் கூட டெலிட் பண்ணலாம் தான்…. இருந்தும் ஏன் இன்னும் பயப்படறாரு அப்படி என்ற கேள்வி மட்டும் இந்த அடியாளுக்கு இருக்காம்” என்று சரவணன் கூறினான்.
“நீ சொல்றதும் கரெக்ட் தான் சரவணா…. அந்த அடியாளோட சந்தேகமும் கரெக்ட் தான்…. ஏன்னா இப்போ ஃபோன் லேப்டாப் ஏதாவது ஒன்னுத்திலயே எல்லாமே நம்ம டெலிட் பண்ணிடலாம்…. இருந்தும் அவர் பயப்படுகிறாருன்னா அப்ப வேற எங்கேயாவது எவிடன்ஸ் இருக்கும்னு நினைக்கிறாரோ” என்று அபிலாஷ் கேட்க, “வேற யாரு சனா மட்டும் தான் ஒரே எவிடென்ஸ் அவருக்கு... அதனால கூட அந்த பயம் இருக்கலாம்” என்று விக்ரம் கூறினான்.
“இவ்வளவு தூரம் வந்துட்டோம் இதுக்கு அப்புறம் என்ன இன்னும் கொஞ்சம் நாள் தானே…. அதுவும் பத்திரமா பார்த்து அவளை ஊருக்கு அனுப்பி வைக்கலாம் எதுவும் பயப்படாதே” என்று சரவணன் கூறினான். “ம்ம்… சரி டா வீட்டுக்கு கிளம்பலாம்” என்று கூறி சரவணன் மற்றும் விக்ரம் புறப்பட்டனர்.
“ஹலோ!!!!! எங்க டி இருக்க??? எவ்வளவு நேரம் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா??” என்று விக்ரம் கோபத்தில் பேசவும், “ஐயோ சாரிப்பா நான் இங்க இன்னும் கோவில்ல தான் இருக்கேன்… விநாயகர் சிலையும் வந்துருச்சு அதெல்லாம் கரெக்டா வெச்சுட்டு அப்படியே இங்க எல்லாரோடையும் சேர்ந்து பேசிட்டு பூ கட்டிட்டு இருக்கேன்… சாரி மா நான் வந்திடுறேன் இருங்க” என்று கூறி சனந்தா ஃபோனை வைத்தாள்.
பின் தான் செல்வதாக சனந்தா கூறவும் பாட்டியும் சனந்தாவுடன் சேர்ந்து கொண்டார். சனா!!! என்று பாட்டி அழைக்க சொல்லுங்க பாட்டி என்று சனந்தா கூறவும், “தைரியமா இரு எது நடந்தாலும் எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சுக்கோ…. இங்க இருக்கிற எல்லாருக்குமே உன்னை பிடிக்கும் யாரும் அவ்வளவு சீக்கிரம் உன்னை தப்பா நினைச்சிட மாட்டாங்க…. நான் முதல்ல சொன்னேன்ல கீழ போட்டு மிதிச்சாலும் மிதிப்பாங்கன்னு…. ஆனா, எனக்கு இப்ப அப்படி தோணல… இங்க இருக்கிறவங்க எல்லாருக்குமே உன் மேல நல்ல நம்பிக்கை இருக்கு அதனால நீ தைரியமா இரு” என்று பாட்டி கூறினார்.
“என்னாச்சு பாட்டி திடீர்னு இப்படி சொல்றீங்க??” என்று சனந்தா கேட்க, “சொல்லணும்னு தோணுச்சு சொல்றேன் தைரியமா இரு” என்று பாட்டி கூறினார். இருவரும் பேசிக் கொண்டே பாட்டி அவருடைய வீட்டிற்கு செல்லவும் சனந்தா விக்ரம் வீட்டிற்கு வந்து அடைந்தாள்.
“என்ன சனா இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா??” என்று வள்ளி கேட்கவும், “இல்லா ஆன்ட்டி டைம் பார்க்கவே இல்ல அதனால தான்” என்று சனந்தா தயக்கத்துடன் இருக்க, விக்ரமின் முகத்தில் சுடு தண்ணியை ஊத்தியது போல் எரிச்சலுடன் ஹாலில் அமர்ந்திருந்தான்.
“அவளே எவ்ளோ வேலை பார்த்துட்டு வரா…. அவகிட்ட போய் தெரியுதா தெரியலையான்னு கேட்குற….. என்ன வள்ளி இது” என்று ஸ்ரீனிவாசன் சனந்தாவுக்கு வக்காலத்து வாங்கவும், “அப்படி இல்லைங்க அவளும் பாவம்ல ரெஸ்ட் எடுக்கணும்ல அதனால தான் சொன்னேன்…. நீங்க உடனே வந்துருவிங்களே சனாவ சொன்னா மட்டும்” என்று வள்ளி சலித்துக் கொண்டார்.
பின்ன என்னமா…. என்று ஸ்ரீனிவாசன் பேசுவதற்குள், “ஐயோ ப்ளீஸ் ப்ளீஸ்!!! வேண்டாம் ப்ளீஸ்!!! ரெண்டு பேரும் ஆரம்பிச்சிடாதீங்க” என்று சனந்தா கூறவும் இருவரும் அமைதி ஆகினர். “ம்ம்…. சாப்பிட்டீங்களா??” என்று சனந்தா தயக்கத்துடன் கேட்க, “நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் மா நீ தான் சாப்பிடல” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “விக்ரம் கூட தான் இன்னும் சாப்பிடல” என்று வள்ளி கூறினார்.
சனந்தா மெதுவாக திரும்பி விக்ரமை பார்த்து, சாப்பிடலாம் வாங்க… என்று அழைத்து சமையலறையில் சென்று சாப்பாட்டை கொண்டு வந்தாள் சனந்தா. “சனா கூப்பிடுறால போய் சாப்பிடு” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், சரி என்று விக்ரமும் சனந்தாவுடன் சேர்ந்த உணவு அருந்தினான்.
உணவருந்திய பின் வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் உறங்கிய பின், சனந்தா மாடிக்கு சென்றாள்.
சனந்தா விக்ரமை பார்த்து, “இன்னும் கோவமா இருக்கீங்களா??” என்று கேட்கவும், “பின்ன இருக்காதா…. இன்னும் நீ இருக்கப் போறது கொஞ்ச நாள் தான்…. நீயும் நானும் மாடிக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது தெரியுமா உனக்கு அது” என்று விக்ரம் கேட்கவும்,
“தெரியுது பா…… கொஞ்சம் வேலையா இருந்துட்டேன் எக்ஸ்போர்டோட ஃபர்ஸ்ட் ஆர்டர் வேற அதனால அதை பத்திரமா செஞ்சு அனுப்புன உடனே தான் நிம்மதியே…. கொஞ்சம் அதுல நிறைய நேரம் இருந்துட்டேன் தான் சாரி மா” என்று சனந்தா கூறினாள்.
விக்ரம் இன்னுமும் முகத்தை திருப்பி கொண்டு அவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கவும், சனந்தா அவனுடைய கையை எடுத்து அவளின் தோள் மீது போட்டுக் கொண்டே அவனிடம் மேலும் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
இன்னமும் விக்ரம் அப்படியே இருக்கவும் சனந்தா மெதுவாக அவனின் தாடையை பிடித்து அவனின் முகத்தை அவள் புறம் திருப்பி அவளின் இரு கைகளையும் அவன் கன்னத்தில் வைத்து அவனின் முகத்தை அவளுடைய உயரத்திற்கு குனிய வைத்து அவனுடைய நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்து, “ரொம்ப சாரி விக்ரம்… என் செல்லம் தான நீங்க… என் பட்டு தான ப்ளீஸ் பா என்னை மன்னிச்சிடுங்க” என்று சனந்தா அவனை கொஞ்சவும் விக்ரம் லேசாக புன்னகைத்தான்.
“எப்பா… இப்ப தான் சிரிப்பு வருது சாருக்கு… உங்களை சமாதானம் பண்ண நான் இவ்வளவு பண்ணனும்” என்று சனந்தா கூறவும், “என்ன பண்ண சொல்ற… இப்ப தான் டைம் இருக்கு நமக்கு அதுக்கப்புறம் நீ ஊருக்கு போயிட்டேன்னா சுத்தம் அவ்வளவு பிஸியா இருப்ப என் கவலை எனக்கு” என்று விக்ரம் கூறவும்,
சனந்தா அவனை அணைத்துக் கொண்டு, “நானும் உங்கள ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்…. எனக்கு எப்பல்லாம் நேரம் கிடைக்குதோ நான் உங்களுக்கு கண்டிப்பா ஃபோன் பண்றேன் விக்ரம்” என்று சனந்தா கூறி, அவனுடைய கழுத்து வளையத்தில் காதுக்கு சற்று கீழே அழுத்தமாக முத்தம் பதித்தாள்.
அந்த முத்தத்தில் விக்ரமிற்கு அவனுடைய உடம்பு முழுவதும் ஏதோ சில்லென்று பாயவும் அவளை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனுடைய அணைப்பு அவளுக்கு பாதுகாப்பான உணர்வை தந்தது.
சனந்தா விக்ரமின் முதுகை தட்டி அவனிடமிருந்து விலக போகவும், அவளை மறுபடியும் இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவளின் முகத்தை அவன் இரு கைகளால் ஏந்தி இரு கன்னங்களில் முத்தம் பதித்து இறுதியில் நெற்றியில் முத்திரை வைத்தான்.
“இப்போ போய் தூங்கு காலைல சீக்கிரம் ரெடி ஆகு… நான் உன்னை வண்டில கூட்டிட்டு போறேன்” என்று விக்ரம் கூறவும், “அப்படியா!!! ஆன்ட்டி, அவங்க கூட வான்னு சொல்லி கூப்பிட்டாங்களே” என்று சனந்தா சொல்லவும், “இல்ல நான் அம்மா கிட்ட பேசிக்கிறேன்…. நான் தான் உன்னை நாளைக்கு கூட்டிட்டு போவேன் சரியா” என்று விக்ரம் கூறவும் சரி என்று ஆமோதித்தாள் சனந்தா.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல.
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
கவிதா மற்றும் கௌதம் இருவரும் ஒரு நாளைக்கு சில மணி நேரமாவது ஃபோனில் பேசி அவர்களின் காதலை வளர்த்துக் கொண்டு தான் இருந்தனர். சரவணனின் பெற்றோர்கள் இப்பொழுது ஓரளவுக்கு இயல்பு நிலையைத் தொட்டிருந்தனர்.
நாளையிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஊரே கோலாகலமாக இருக்க போகிறது என்று அனைவருக்கும் ஒரே கொண்டாட்டம் தான். முக்கியமாக குழந்தைகளுக்கு, அத்துடன் பள்ளிக்கு விடுமுறையும் கொடுத்திருந்தனர்.
“அபி நீ ஏன் டா டல்லா இருக்க??” என்று சரவணன் கேட்க, “இல்ல மச்சான் வீட்ல பொண்ணு பார்க்குறாங்கனு சொல்லியிருந்தாங்க… ரொம்ப வருஷம் தட்டி கழிச்சிட்டே இருந்தேன்… இதுக்கு மேல அம்மா கோபப்படுறாங்கனு சரின்னு நானும் பாருங்கனு சொல்லிட்டேன்… எப்படியும் செட்டாக நாட்கள் ஆகும்லனு விட்டுட்டேன்… இப்ப என்னடான்னா பொண்ண பார்த்து அவங்களுக்கு புடிச்சிருக்காம் அதனால என்னையும் பாருன்றாங்க… எனக்கு இப்ப என்ன சொல்றதுன்னு தெரியல” என்று அபிலாஷ் கூறினான்.
“இதுல சொல்றதுக்கு என்ன அபி இருக்கு…. பேசி பாரு பிடிச்சிருந்தா சரி இல்லன்னா பார்த்துக்கலாம்” என்று விக்ரம் கூறினான். “என்னமோ டா… இப்போதைக்கு எதுவும் அனுப்பாதீங்க பூஜை எல்லாம் முடிச்சிட்டு நானே வீட்டுக்கு வரேன் நேர்ல பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்” என்று அபிலாஷ் கூறவும், “சரி உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு அவ்வளவு தானே” என்று சரவணன் கூறினான்.
“ம்ம், சரி!!…. ஆமா சனா எங்க ரெண்டு நாளா சுத்தமா பார்க்கவே முடியல??” என்று அபிலாஷ் கேட்க, “நானே பார்க்கல டா…. ஏண்டா அவ இப்படி பண்றான்னு தெரியல” என்று விக்ரம் புலம்பினான்.
“அவளை பத்தி தெரியும்ல… ஏற்கனவே இந்த பூஜை பொறுப்பெல்லாம் வேற எடுத்திருக்கா… அது போக எக்ஸ்போர்ட் ஆர்டர் வேற நமக்கு இப்போ உறுதி ஆகி இருக்கு…. அப்படி இருக்கும் போது வேலையை இழுத்து போட்டு தான் செய்வா…. இது போக மிஷின்லாம் வேற வந்து இறங்கிருச்சு… அப்ப அது எல்லாத்தையும் செட் பண்ணி சொல்லி கொடுத்துட்டு தான் போகுனும்னு நினைப்பா அவ்ளோ தான்….. கார்த்திக் வேற அடுத்த மாசத்துலிருந்து அவனும் கிளம்பிடுவான்…. அப்ப நானும் இன்னொரு அக்கா, நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் ஆப்ரேட் பண்ற மாதிரி இருக்கும்” என்று சரவணன் சனந்தாவுக்கு வக்காலத்து வாங்கினான்.
“அட போடா அவளும் பூஜை எல்லாம் முடிஞ்சு எப்ப கிளம்புவான்னு தெரியல…. அவளுக்கும் காலேஜ் கூடிய சீக்கிரம் ஆரம்பிச்சுரும்… என் கூட நேரம் செலவழிக்கிற மாதிரியே இல்ல… இங்க தான் இருக்கிற மாதிரி இருக்கு… ஆனா, அவளை ரொம்ப மிஸ் பண்றேன்” என்று விக்ரம் வருத்தத்துடன் கூறினான்.
“சரி இந்த அஞ்சு நாள் எல்லா வேலையும் நிப்பாட்டி கோவில்ல தான் இருப்போம்… எல்லாரும் சேர்ந்து சாப்பாடு செய்றது சாப்பிடறது… ஆட்டம் பாட்டம்னு அப்படித் தானே இருப்போம் அப்ப பேசிக்கலாம் விடு டா…. அதுவும் இல்லாம அவளுக்கும் போறோம்னு இருக்கும்ல அதான் எல்லார் கூடயும் டைம் ஸ்பெண்ட் பண்றா போல டா” என்று அபிலாஷ் கூறவும், “என்னை தவிர எல்லார் கூடயும் டைம் ஸ்பென்ட் பண்ணுவா… சரி ஓகே விடு நான் பேசிக்கிறேன்” என்று விக்ரம் கூறினான்.
“சரவணா ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னியே என்னது??” என்று விக்ரம் கேட்க, “ம்ம்… அதுவா பூஜை எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா பேசிக்கலாம் டா” என்று சரவணன் கூறவும், “இல்ல பரவால்ல சொல்லு” என்று விக்ரம் கறாராக கேட்டான்.
“ஒரு பையன் நமக்கு தகவல் சொல்றான்ல காளி அவங்களோட குரூப்ல…. அந்தப் பையன் தான் தகவல் சொன்னான் டா…. அத தான் பேசணும்னு சொன்னேன்…. அவங்க ஓரளவுக்கு சனாவை பத்தி எல்லா தகவலும் சேகரிச்சுட்டாங்கலாம்… அது போக அந்த அடியாள் ஒருத்தன் காளி கிட்ட அடி வாங்குனான்னு சொன்னேன்ல, அவன் ஒரு ஃபோன் மட்டும் காளி கிட்ட இருக்குன்னு கண்டு பிடிச்சு இருக்கானாம்… அது ஒரு வேலை அபர்ணாவோட ஃபோனா இருக்குமோ அப்படி என்ற சந்தேகம் அந்த அடியாளுக்குமே இருக்கு” என்று சரவணன் கூறவும் விக்ரம் மற்றும் அபிலாஷ் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
“அதனால தான் நம்ம அப்புவோட ஃபோன் எவ்வளவு ரிக்வெஸ்ட் பண்ணாலும் கிடைக்கலையோ” என்று விக்ரம் ஆதங்கத்துடன் கேட்க, “அப்படி தான் இருக்கும் மச்சான்… ஆனா, அதுலயும் அந்த அடியாளுக்கு ஒரு டவுட் இருக்கு டா… ஃபோன் இருக்கு அப்ப அதுல ஏதாவது எவிடென்ஸ் இருந்தா அத ஈசியா நம்ம டெலிட் பண்ணிடலாம் தானே!!….
“ஏன்னா மெயில் ஐடி அக்கவுண்ட் அதுல லாகின்ல இருக்கும்…. எந்த டீடைல்ஸ் எப்படி சேவ் பண்ணி இருந்தாலும் அதுல இருந்தே டெலிட் பண்ணிடலாம் தான்… ஒரு வேலை அவர சார்ந்த எவிடன்ஸ் இருந்தாலும் கூட டெலிட் பண்ணலாம் தான்…. இருந்தும் ஏன் இன்னும் பயப்படறாரு அப்படி என்ற கேள்வி மட்டும் இந்த அடியாளுக்கு இருக்காம்” என்று சரவணன் கூறினான்.
“நீ சொல்றதும் கரெக்ட் தான் சரவணா…. அந்த அடியாளோட சந்தேகமும் கரெக்ட் தான்…. ஏன்னா இப்போ ஃபோன் லேப்டாப் ஏதாவது ஒன்னுத்திலயே எல்லாமே நம்ம டெலிட் பண்ணிடலாம்…. இருந்தும் அவர் பயப்படுகிறாருன்னா அப்ப வேற எங்கேயாவது எவிடன்ஸ் இருக்கும்னு நினைக்கிறாரோ” என்று அபிலாஷ் கேட்க, “வேற யாரு சனா மட்டும் தான் ஒரே எவிடென்ஸ் அவருக்கு... அதனால கூட அந்த பயம் இருக்கலாம்” என்று விக்ரம் கூறினான்.
“இவ்வளவு தூரம் வந்துட்டோம் இதுக்கு அப்புறம் என்ன இன்னும் கொஞ்சம் நாள் தானே…. அதுவும் பத்திரமா பார்த்து அவளை ஊருக்கு அனுப்பி வைக்கலாம் எதுவும் பயப்படாதே” என்று சரவணன் கூறினான். “ம்ம்… சரி டா வீட்டுக்கு கிளம்பலாம்” என்று கூறி சரவணன் மற்றும் விக்ரம் புறப்பட்டனர்.
“ஹலோ!!!!! எங்க டி இருக்க??? எவ்வளவு நேரம் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா??” என்று விக்ரம் கோபத்தில் பேசவும், “ஐயோ சாரிப்பா நான் இங்க இன்னும் கோவில்ல தான் இருக்கேன்… விநாயகர் சிலையும் வந்துருச்சு அதெல்லாம் கரெக்டா வெச்சுட்டு அப்படியே இங்க எல்லாரோடையும் சேர்ந்து பேசிட்டு பூ கட்டிட்டு இருக்கேன்… சாரி மா நான் வந்திடுறேன் இருங்க” என்று கூறி சனந்தா ஃபோனை வைத்தாள்.
பின் தான் செல்வதாக சனந்தா கூறவும் பாட்டியும் சனந்தாவுடன் சேர்ந்து கொண்டார். சனா!!! என்று பாட்டி அழைக்க சொல்லுங்க பாட்டி என்று சனந்தா கூறவும், “தைரியமா இரு எது நடந்தாலும் எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சுக்கோ…. இங்க இருக்கிற எல்லாருக்குமே உன்னை பிடிக்கும் யாரும் அவ்வளவு சீக்கிரம் உன்னை தப்பா நினைச்சிட மாட்டாங்க…. நான் முதல்ல சொன்னேன்ல கீழ போட்டு மிதிச்சாலும் மிதிப்பாங்கன்னு…. ஆனா, எனக்கு இப்ப அப்படி தோணல… இங்க இருக்கிறவங்க எல்லாருக்குமே உன் மேல நல்ல நம்பிக்கை இருக்கு அதனால நீ தைரியமா இரு” என்று பாட்டி கூறினார்.
“என்னாச்சு பாட்டி திடீர்னு இப்படி சொல்றீங்க??” என்று சனந்தா கேட்க, “சொல்லணும்னு தோணுச்சு சொல்றேன் தைரியமா இரு” என்று பாட்டி கூறினார். இருவரும் பேசிக் கொண்டே பாட்டி அவருடைய வீட்டிற்கு செல்லவும் சனந்தா விக்ரம் வீட்டிற்கு வந்து அடைந்தாள்.
“என்ன சனா இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா??” என்று வள்ளி கேட்கவும், “இல்லா ஆன்ட்டி டைம் பார்க்கவே இல்ல அதனால தான்” என்று சனந்தா தயக்கத்துடன் இருக்க, விக்ரமின் முகத்தில் சுடு தண்ணியை ஊத்தியது போல் எரிச்சலுடன் ஹாலில் அமர்ந்திருந்தான்.
“அவளே எவ்ளோ வேலை பார்த்துட்டு வரா…. அவகிட்ட போய் தெரியுதா தெரியலையான்னு கேட்குற….. என்ன வள்ளி இது” என்று ஸ்ரீனிவாசன் சனந்தாவுக்கு வக்காலத்து வாங்கவும், “அப்படி இல்லைங்க அவளும் பாவம்ல ரெஸ்ட் எடுக்கணும்ல அதனால தான் சொன்னேன்…. நீங்க உடனே வந்துருவிங்களே சனாவ சொன்னா மட்டும்” என்று வள்ளி சலித்துக் கொண்டார்.
பின்ன என்னமா…. என்று ஸ்ரீனிவாசன் பேசுவதற்குள், “ஐயோ ப்ளீஸ் ப்ளீஸ்!!! வேண்டாம் ப்ளீஸ்!!! ரெண்டு பேரும் ஆரம்பிச்சிடாதீங்க” என்று சனந்தா கூறவும் இருவரும் அமைதி ஆகினர். “ம்ம்…. சாப்பிட்டீங்களா??” என்று சனந்தா தயக்கத்துடன் கேட்க, “நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் மா நீ தான் சாப்பிடல” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “விக்ரம் கூட தான் இன்னும் சாப்பிடல” என்று வள்ளி கூறினார்.
சனந்தா மெதுவாக திரும்பி விக்ரமை பார்த்து, சாப்பிடலாம் வாங்க… என்று அழைத்து சமையலறையில் சென்று சாப்பாட்டை கொண்டு வந்தாள் சனந்தா. “சனா கூப்பிடுறால போய் சாப்பிடு” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், சரி என்று விக்ரமும் சனந்தாவுடன் சேர்ந்த உணவு அருந்தினான்.
உணவருந்திய பின் வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் உறங்கிய பின், சனந்தா மாடிக்கு சென்றாள்.
சனந்தா விக்ரமை பார்த்து, “இன்னும் கோவமா இருக்கீங்களா??” என்று கேட்கவும், “பின்ன இருக்காதா…. இன்னும் நீ இருக்கப் போறது கொஞ்ச நாள் தான்…. நீயும் நானும் மாடிக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது தெரியுமா உனக்கு அது” என்று விக்ரம் கேட்கவும்,
“தெரியுது பா…… கொஞ்சம் வேலையா இருந்துட்டேன் எக்ஸ்போர்டோட ஃபர்ஸ்ட் ஆர்டர் வேற அதனால அதை பத்திரமா செஞ்சு அனுப்புன உடனே தான் நிம்மதியே…. கொஞ்சம் அதுல நிறைய நேரம் இருந்துட்டேன் தான் சாரி மா” என்று சனந்தா கூறினாள்.
விக்ரம் இன்னுமும் முகத்தை திருப்பி கொண்டு அவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கவும், சனந்தா அவனுடைய கையை எடுத்து அவளின் தோள் மீது போட்டுக் கொண்டே அவனிடம் மேலும் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
இன்னமும் விக்ரம் அப்படியே இருக்கவும் சனந்தா மெதுவாக அவனின் தாடையை பிடித்து அவனின் முகத்தை அவள் புறம் திருப்பி அவளின் இரு கைகளையும் அவன் கன்னத்தில் வைத்து அவனின் முகத்தை அவளுடைய உயரத்திற்கு குனிய வைத்து அவனுடைய நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்து, “ரொம்ப சாரி விக்ரம்… என் செல்லம் தான நீங்க… என் பட்டு தான ப்ளீஸ் பா என்னை மன்னிச்சிடுங்க” என்று சனந்தா அவனை கொஞ்சவும் விக்ரம் லேசாக புன்னகைத்தான்.
“எப்பா… இப்ப தான் சிரிப்பு வருது சாருக்கு… உங்களை சமாதானம் பண்ண நான் இவ்வளவு பண்ணனும்” என்று சனந்தா கூறவும், “என்ன பண்ண சொல்ற… இப்ப தான் டைம் இருக்கு நமக்கு அதுக்கப்புறம் நீ ஊருக்கு போயிட்டேன்னா சுத்தம் அவ்வளவு பிஸியா இருப்ப என் கவலை எனக்கு” என்று விக்ரம் கூறவும்,
சனந்தா அவனை அணைத்துக் கொண்டு, “நானும் உங்கள ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்…. எனக்கு எப்பல்லாம் நேரம் கிடைக்குதோ நான் உங்களுக்கு கண்டிப்பா ஃபோன் பண்றேன் விக்ரம்” என்று சனந்தா கூறி, அவனுடைய கழுத்து வளையத்தில் காதுக்கு சற்று கீழே அழுத்தமாக முத்தம் பதித்தாள்.
அந்த முத்தத்தில் விக்ரமிற்கு அவனுடைய உடம்பு முழுவதும் ஏதோ சில்லென்று பாயவும் அவளை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனுடைய அணைப்பு அவளுக்கு பாதுகாப்பான உணர்வை தந்தது.
சனந்தா விக்ரமின் முதுகை தட்டி அவனிடமிருந்து விலக போகவும், அவளை மறுபடியும் இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவளின் முகத்தை அவன் இரு கைகளால் ஏந்தி இரு கன்னங்களில் முத்தம் பதித்து இறுதியில் நெற்றியில் முத்திரை வைத்தான்.
“இப்போ போய் தூங்கு காலைல சீக்கிரம் ரெடி ஆகு… நான் உன்னை வண்டில கூட்டிட்டு போறேன்” என்று விக்ரம் கூறவும், “அப்படியா!!! ஆன்ட்டி, அவங்க கூட வான்னு சொல்லி கூப்பிட்டாங்களே” என்று சனந்தா சொல்லவும், “இல்ல நான் அம்மா கிட்ட பேசிக்கிறேன்…. நான் தான் உன்னை நாளைக்கு கூட்டிட்டு போவேன் சரியா” என்று விக்ரம் கூறவும் சரி என்று ஆமோதித்தாள் சனந்தா.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல.
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 99
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 99
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.