ஏற்கனவே அங்கே குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்த யாழினிக்கு அவன் கொடுத்த முரட்டு முத்தமும், அவனது சூடான கைகள் அவளது உடல்களில் அத்துமீறி செய்யும் மாயாஜாலங்களும் கதகதவென இருந்ததால் கண்களை மூடி அவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அந்த தருணத்தை ரசித்தாள். அவர்கள் இருவருக்கும் நடுவில் நடந்த காதல் விளையாட்டுகளை மொபைல் ஃபோன் வழியாக போட்டுக் கொண்டு இருந்ததற்கே சூடாகி போய் பைத்தியம் பிடித்து ஏதேதோ செய்து சுற்றிக் கொண்டு இருந்த சுவாத்திக்கு இப்போது அதை நேரில் காணும் போது, மீண்டும் என்னவோ போல் ஆகிவிட்டது.
பொதுவாகவே அவளுக்கு ஷங்கரை மிகவும் பிடிக்கும். அவனது ஒவ்வொரு செயலும் அத்தனை நேர்த்தியாக இருப்பதாக அவள் பலமுறை நினைத்திருக்கிறாள். இப்போது ஒவ்வொரு நொடியும் அவன் யாழினியை கொண்டாடுவதை அவள் அருகில் இருந்து பார்க்கும் போது, “ச்சே.. நான் ஏன் யாழினியா பிறக்கல?” என்று ஒரு நொடியாவது அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இருப்பினும் இப்போது அவளுக்கு என்று ஒருவன் இருக்கிறான். இன்னும் சில மணி நேரங்களில் அவளுக்கு அவனுடன் திருமணம் ஆகப்போகிறது என்பதால் அதை நினைத்துப் பார்த்த சுவாதி “கடவுளோட அருளாள தினேஷும் என்ன சங்கர் மாதிரி லவ் பண்ணா நல்லா இருக்கும். எனக்கு மட்டும் என் புருஷன் என் பின்னாடியே சுத்திட்டு இருக்கணும்னு ஆசையா இருக்காதா?” என்று நினைத்து பெருமூச்சு விட்டுவிட்டு “என்னமோ எல்லாம் நல்லபடியாக நடக்கும்னு நம்புவோம்.” என்ற எண்ணத்தில் அவர்களை தொந்தரவு செய்யாமல் தனது ரூமிற்கு சென்று கண்களை மூடி படித்தாள்.
அரை மணி நேரம் தான் தூங்கி இருப்பாள். அப்போது பாத்ரூமில் குளிக்கும்போது தினேஷும் அவளும் அங்கேயே தண்ணீருக்குள் கசமுசா செய்வதைப்போல அவளுக்கு ஒரு கனவு வர, தன் கண்களை இறுக்கமாக மூடி கைகளால் பெட்ஷீட்டை பிடித்து கசக்கி கொண்டு இருந்த ஸ்வாத்தி தூக்கத்தில் முனகிக் கொண்டு இருக்க, “சுவாதி தூங்கி எந்திரிச்சியா இல்லையா? இன்னும் ரெண்டு மணி நேரத்துல உனக்கு கல்யாணம் டி. நான் இப்படி வெளிய நின்னு காட்டு கத்தா கத்திக்கிட்டு இருக்கேன்.. கதவை திறக்காம என்ன டி பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டு அந்த அறையின் கதவை பலத்த சத்தத்துடன் தட்டினாள் அவளது அம்மா. அதனால் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த சுவாதி சுற்றி முற்றி பார்த்துவிட்டு “அட.. ச்சே.. எல்லாம் கனவா? அதெல்லாம் நெஜமா நடக்கிற மாதிரியே இருந்துச்சே!” என்று நினைத்து மனசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
அவள் அம்மா வெளியில் இருந்து கதவை விடாமல் ஏதோ உடைத்து விடுவதைப் போல தட்டிக் கொண்டே இருக்க, “ஐயோ.. வரேன் அம்மா. கதவை போட்டு உடைக்காத.” என்ற சுவாதி சென்று அந்த அறை கதவை திறந்தாள். பின் அனைவரும் அவளை கிளம்பச் சொல்லி அவசரப்படுத்த, அவள் ஒரு பக்கம் திருமணம் நடக்கப்போகிறது என்ற சந்தோஷத்திலும் கொஞ்சம் பயத்திலும் வேகமாக கிளம்பிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வெளியில் சத்தம் கேட்டதால் நேரம் ஆவதை உணர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த யாழினியை எழுப்பி அவளுடன் சேர்ந்து கிளம்ப தொடங்கினான் சங்கர்.
சரியாக ஒரு மணி நேரத்தில் மணமக்கள் இருவரும் அழகாக தயாராகி மேடையில் சென்று அமர்ந்தார்கள். ஐயர் திருமண சடங்குகளை தொடங்கி மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார். இரு விட்டாரின் சொந்த பந்தங்கள் அனைவரும் கூடி அவரவருக்கான இருக்கையில் அமர்ந்து அந்த திருமணத்தை காணும் ஆவலுடன் இருந்தார்கள். அனைத்தும் முடிந்த பின் ஐயர் வழக்கம் போல “கெட்டி மேளம் கெட்டி மேளம்..!!” என்று சொல்ல, தன் கையில் இருந்த தாலியை சுவாதியின் கழுத்தில் கட்டிய தினேஷ் அவளது நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து அவளை தனது மனைவியாக ஏற்றுக் கொண்டு அவளுடன் சேர்ந்து அக்னியை ஏழு முறை சுற்றி வந்தான். அவன் கையைப் உரிமையாக பிடித்துக் கொண்ட சுவாதி அவனைப் பார்த்து அழகாக புன்னகைக்க, அவனும் இவளை பார்த்து புன்னகைத்தான். அந்த காட்சியை மிஸ் செய்து விடக் கூடாது என்று நினைத்த யாழினி அதை தனது புது ஆப்பிள் ஐபோனில் ஃபோட்டோ எடுத்தாள்.
விடியற்காலையிலேயே திருமணம் முடிந்து விட்டதால் அங்கே வந்த உற்றார் உறவினர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு மண்டபத்தை காலி செய்து சாயங்கால வேளையில் சுவாதியின் வீடு அதே ஊரில் இருந்ததால் அனைவரும் அங்கே கிளம்பி சென்றார்கள். அந்த கால ஸ்டைலில் கிராமத்திற்குள் அழகாக கட்டப்பட்டு இருந்த அந்த பெரிய பண்ணை வீட்டிற்குள் உள்ள சுவாதியின் அறையில் அவளுக்கும் தினேஷுக்கும் ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக வேறு ஒரு அறையில் அமர்ந்து தயாராகிக் கொண்டு இருந்தாள் சுவாதி.
அவளது மற்ற உறவுக்கார பெண்களோடு சேர்ந்து அவளை அலங்கரித்துக் கொண்டு இருந்த யாழினி “இத்தனை நாளா என் கஷ்டத்தை எல்லாம் நான் உன் கிட்ட சொல்லி புலம்பும்போது, மேரேஜ் லைப்னா இப்படி தானே டி இருக்கும்! நம்ப தான் ஹஸ்பண்ட் கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும். புருஷன் அப்படி இப்படி இருக்கிறதெல்லாம் நார்மல் தான்னு வாய் கிழிய பேசுனீல! இன்னைல இருந்து எனக்கு நடந்ததெல்லாம் உனக்கும் நடக்கும். நாளைக்கு காலைல நீ வந்து என் கிட்ட அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு புலம்புறத கேக்குறதுக்கு நான் இப்பல இருந்தே heavy interestஓட வெயிட் பண்ண போறேன். உன்ன விட, உன் ஃபர்ஸ்ட் நைட் எப்படி இருக்க போகுதுன்னு நெனச்சாலே எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. எனக்கு first night நடக்கும் போதெல்லாம், நான் அடுத்த நாள் ஈவினிங் தான் தூங்கியே எந்திரிச்சேன். சங்கர் செஞ்ச வேலை அப்படி. அதை இப்ப நெனச்சாலும் எனக்கு பயமா இருக்கு டி.” என்று சொல்லிவிட்டு சிரிக்க, தனக்கு என்னென்ன நடக்குமோ என்று யோசிக்கும்போது தயக்கத்தாலும் கொஞ்சம் கூச்சத்திலும் சுவாதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அதனால் வெட்கத்துடன் எதுவும் பேசாமல் லேசாக சிரித்து வைத்தாள்.
பின் ஒரு வழியாக திருமணமான பெண்கள் அனைவரும் சேர்ந்து ஸ்வாதிக்கு எக்கச்சக்க அட்வைஸ்களை கொடுத்து அவளை அழகாக பட்டுப் புடவையில் அலங்கரித்து தலை நிறைய முல்லை பூ வைத்து கையில் சுட சுட பாதாம் பாலுடன் அவளது ரூமிற்குள் தள்ளி கதவை சாத்தினார்கள். திக் திக் இதயத்துடன் இருந்த சுவாதி குனிந்த தலை நிமிராமல் அடிமேல் அடி வைத்து உள்ளே செல்ல, அவளது புது வெள்ளி கொலுசு ஜல்ஜல் என்று ஒலியெழுத்தியது. “நேத்து என்ன பார்க்க தனியா என் ரூமுக்கே வந்து என்னை ஹக் பண்ணி லவ் யூ எல்லாம் சொல்லிட்டு போயிட்டு, இப்ப என்னமோ புதுசா என்ன பாக்குற மாதிரி இவ என்ன இப்படி வெட்கப்பட்டுட்டு வர்றா?” என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட தினேஷ் “பாத்து டி.. கீழ பாத்துக்கிட்டே நடந்து போய் ஆப்போசிட்ல இருக்கிற செவுத்துல முட்டிக்காத. அது என்ன பாதாம் பாலா? ஸ்மெல் செமையா இருக்கு. இங்க வந்து உட்காரு. சூடு ஆறுறதுக்குள்ள முதல்ல அதை குடிக்கலாம்.” என்றான்.
சரி என்று தலையாட்டிய சுவாதி அமைதியாக கையில் பால் சொம்புடன் சென்று அவன் அருகில் கட்டிலில் அமர்ந்தாள். அவள் கையில் இருந்த சொம்பை வாங்கி பாலை ஒரு கிளாஸில் ஊற்றி குடித்த தினேஷ் “ம்ம்.. நான் எக்ஸ்பெக்ட் பண்ணதை விட பாதாம் பால் செம! நான் குடிச்சிட்டு உனக்கு வேற கொஞ்சம் கொடுக்கணும் இல்ல! இந்தா நீயும் குடி.” என்று சொல்லி மீதம் இருந்த பாலை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி மெல்ல குடித்தபடி ஓரக் கண்ணால் அவள் அவனைப் பார்க்க, “உன்ன பாக்க வச்சு குடிச்சா எனக்கு வயிறு வலிக்கும்ல! அதான் கொடுத்தேன். இல்லைனா இதோட டேஸ்ட்டுக்கு நானே ஃபுல்லா குடிச்சிருப்பேன். எனக்கு பாதாம் பால் ரொம்ப பிடிக்கும். இதை யார் போட்டது? நீயா?” என்று சாதாரணமாக கேட்டான் தினேஷ்.
“என்ன இவரு இவ்வளவு சாதாரணமா இருக்காரு? இன்னைக்கு எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்க போகுது. ஆனா அதுக்காக இவர் ஆர்வமாக இருக்கிற மாதிரியே தெரியலையே! இந்த நேரத்தில போய் பாதாம் பால பத்தி புகழ்ந்து பேசிட்டு இருக்காரு! நான் இவருக்காக தானே இவ்வளவு அழகா ரெடியாகி வந்திருக்கேன்! என்ன பத்தி ஒரு வார்த்தை சொல்லல. இன்னும் இவர் என்னை ஒழுங்கா கூட பாக்கல. ஐயோ இந்த மனுஷன் கூட நான் எப்படித்தான் வாழ போறேன்னு தெரியலையே!” என்று நினைத்து சலித்துக் கொண்ட சுவாதி “இத எங்க அம்மாவும் யாழினியும் சேர்ந்து தான் போட்டாங்க. அவளுக்கு சமைக்கவே தெரியாது. ஆனா பாதாம் பால் ரொம்ப பிடிக்கும். இத மட்டும் அவ டேஸ்ட்டா செய்வா. ஆனா இது உங்களுக்கும் இவ்வளவு பிடிக்கும்னு எனக்கு தெரியாது.” என்றாள்.
-தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
பொதுவாகவே அவளுக்கு ஷங்கரை மிகவும் பிடிக்கும். அவனது ஒவ்வொரு செயலும் அத்தனை நேர்த்தியாக இருப்பதாக அவள் பலமுறை நினைத்திருக்கிறாள். இப்போது ஒவ்வொரு நொடியும் அவன் யாழினியை கொண்டாடுவதை அவள் அருகில் இருந்து பார்க்கும் போது, “ச்சே.. நான் ஏன் யாழினியா பிறக்கல?” என்று ஒரு நொடியாவது அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இருப்பினும் இப்போது அவளுக்கு என்று ஒருவன் இருக்கிறான். இன்னும் சில மணி நேரங்களில் அவளுக்கு அவனுடன் திருமணம் ஆகப்போகிறது என்பதால் அதை நினைத்துப் பார்த்த சுவாதி “கடவுளோட அருளாள தினேஷும் என்ன சங்கர் மாதிரி லவ் பண்ணா நல்லா இருக்கும். எனக்கு மட்டும் என் புருஷன் என் பின்னாடியே சுத்திட்டு இருக்கணும்னு ஆசையா இருக்காதா?” என்று நினைத்து பெருமூச்சு விட்டுவிட்டு “என்னமோ எல்லாம் நல்லபடியாக நடக்கும்னு நம்புவோம்.” என்ற எண்ணத்தில் அவர்களை தொந்தரவு செய்யாமல் தனது ரூமிற்கு சென்று கண்களை மூடி படித்தாள்.
அரை மணி நேரம் தான் தூங்கி இருப்பாள். அப்போது பாத்ரூமில் குளிக்கும்போது தினேஷும் அவளும் அங்கேயே தண்ணீருக்குள் கசமுசா செய்வதைப்போல அவளுக்கு ஒரு கனவு வர, தன் கண்களை இறுக்கமாக மூடி கைகளால் பெட்ஷீட்டை பிடித்து கசக்கி கொண்டு இருந்த ஸ்வாத்தி தூக்கத்தில் முனகிக் கொண்டு இருக்க, “சுவாதி தூங்கி எந்திரிச்சியா இல்லையா? இன்னும் ரெண்டு மணி நேரத்துல உனக்கு கல்யாணம் டி. நான் இப்படி வெளிய நின்னு காட்டு கத்தா கத்திக்கிட்டு இருக்கேன்.. கதவை திறக்காம என்ன டி பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டு அந்த அறையின் கதவை பலத்த சத்தத்துடன் தட்டினாள் அவளது அம்மா. அதனால் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த சுவாதி சுற்றி முற்றி பார்த்துவிட்டு “அட.. ச்சே.. எல்லாம் கனவா? அதெல்லாம் நெஜமா நடக்கிற மாதிரியே இருந்துச்சே!” என்று நினைத்து மனசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
அவள் அம்மா வெளியில் இருந்து கதவை விடாமல் ஏதோ உடைத்து விடுவதைப் போல தட்டிக் கொண்டே இருக்க, “ஐயோ.. வரேன் அம்மா. கதவை போட்டு உடைக்காத.” என்ற சுவாதி சென்று அந்த அறை கதவை திறந்தாள். பின் அனைவரும் அவளை கிளம்பச் சொல்லி அவசரப்படுத்த, அவள் ஒரு பக்கம் திருமணம் நடக்கப்போகிறது என்ற சந்தோஷத்திலும் கொஞ்சம் பயத்திலும் வேகமாக கிளம்பிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வெளியில் சத்தம் கேட்டதால் நேரம் ஆவதை உணர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த யாழினியை எழுப்பி அவளுடன் சேர்ந்து கிளம்ப தொடங்கினான் சங்கர்.
சரியாக ஒரு மணி நேரத்தில் மணமக்கள் இருவரும் அழகாக தயாராகி மேடையில் சென்று அமர்ந்தார்கள். ஐயர் திருமண சடங்குகளை தொடங்கி மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார். இரு விட்டாரின் சொந்த பந்தங்கள் அனைவரும் கூடி அவரவருக்கான இருக்கையில் அமர்ந்து அந்த திருமணத்தை காணும் ஆவலுடன் இருந்தார்கள். அனைத்தும் முடிந்த பின் ஐயர் வழக்கம் போல “கெட்டி மேளம் கெட்டி மேளம்..!!” என்று சொல்ல, தன் கையில் இருந்த தாலியை சுவாதியின் கழுத்தில் கட்டிய தினேஷ் அவளது நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து அவளை தனது மனைவியாக ஏற்றுக் கொண்டு அவளுடன் சேர்ந்து அக்னியை ஏழு முறை சுற்றி வந்தான். அவன் கையைப் உரிமையாக பிடித்துக் கொண்ட சுவாதி அவனைப் பார்த்து அழகாக புன்னகைக்க, அவனும் இவளை பார்த்து புன்னகைத்தான். அந்த காட்சியை மிஸ் செய்து விடக் கூடாது என்று நினைத்த யாழினி அதை தனது புது ஆப்பிள் ஐபோனில் ஃபோட்டோ எடுத்தாள்.
விடியற்காலையிலேயே திருமணம் முடிந்து விட்டதால் அங்கே வந்த உற்றார் உறவினர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு மண்டபத்தை காலி செய்து சாயங்கால வேளையில் சுவாதியின் வீடு அதே ஊரில் இருந்ததால் அனைவரும் அங்கே கிளம்பி சென்றார்கள். அந்த கால ஸ்டைலில் கிராமத்திற்குள் அழகாக கட்டப்பட்டு இருந்த அந்த பெரிய பண்ணை வீட்டிற்குள் உள்ள சுவாதியின் அறையில் அவளுக்கும் தினேஷுக்கும் ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக வேறு ஒரு அறையில் அமர்ந்து தயாராகிக் கொண்டு இருந்தாள் சுவாதி.
அவளது மற்ற உறவுக்கார பெண்களோடு சேர்ந்து அவளை அலங்கரித்துக் கொண்டு இருந்த யாழினி “இத்தனை நாளா என் கஷ்டத்தை எல்லாம் நான் உன் கிட்ட சொல்லி புலம்பும்போது, மேரேஜ் லைப்னா இப்படி தானே டி இருக்கும்! நம்ப தான் ஹஸ்பண்ட் கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும். புருஷன் அப்படி இப்படி இருக்கிறதெல்லாம் நார்மல் தான்னு வாய் கிழிய பேசுனீல! இன்னைல இருந்து எனக்கு நடந்ததெல்லாம் உனக்கும் நடக்கும். நாளைக்கு காலைல நீ வந்து என் கிட்ட அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு புலம்புறத கேக்குறதுக்கு நான் இப்பல இருந்தே heavy interestஓட வெயிட் பண்ண போறேன். உன்ன விட, உன் ஃபர்ஸ்ட் நைட் எப்படி இருக்க போகுதுன்னு நெனச்சாலே எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. எனக்கு first night நடக்கும் போதெல்லாம், நான் அடுத்த நாள் ஈவினிங் தான் தூங்கியே எந்திரிச்சேன். சங்கர் செஞ்ச வேலை அப்படி. அதை இப்ப நெனச்சாலும் எனக்கு பயமா இருக்கு டி.” என்று சொல்லிவிட்டு சிரிக்க, தனக்கு என்னென்ன நடக்குமோ என்று யோசிக்கும்போது தயக்கத்தாலும் கொஞ்சம் கூச்சத்திலும் சுவாதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அதனால் வெட்கத்துடன் எதுவும் பேசாமல் லேசாக சிரித்து வைத்தாள்.
பின் ஒரு வழியாக திருமணமான பெண்கள் அனைவரும் சேர்ந்து ஸ்வாதிக்கு எக்கச்சக்க அட்வைஸ்களை கொடுத்து அவளை அழகாக பட்டுப் புடவையில் அலங்கரித்து தலை நிறைய முல்லை பூ வைத்து கையில் சுட சுட பாதாம் பாலுடன் அவளது ரூமிற்குள் தள்ளி கதவை சாத்தினார்கள். திக் திக் இதயத்துடன் இருந்த சுவாதி குனிந்த தலை நிமிராமல் அடிமேல் அடி வைத்து உள்ளே செல்ல, அவளது புது வெள்ளி கொலுசு ஜல்ஜல் என்று ஒலியெழுத்தியது. “நேத்து என்ன பார்க்க தனியா என் ரூமுக்கே வந்து என்னை ஹக் பண்ணி லவ் யூ எல்லாம் சொல்லிட்டு போயிட்டு, இப்ப என்னமோ புதுசா என்ன பாக்குற மாதிரி இவ என்ன இப்படி வெட்கப்பட்டுட்டு வர்றா?” என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட தினேஷ் “பாத்து டி.. கீழ பாத்துக்கிட்டே நடந்து போய் ஆப்போசிட்ல இருக்கிற செவுத்துல முட்டிக்காத. அது என்ன பாதாம் பாலா? ஸ்மெல் செமையா இருக்கு. இங்க வந்து உட்காரு. சூடு ஆறுறதுக்குள்ள முதல்ல அதை குடிக்கலாம்.” என்றான்.
சரி என்று தலையாட்டிய சுவாதி அமைதியாக கையில் பால் சொம்புடன் சென்று அவன் அருகில் கட்டிலில் அமர்ந்தாள். அவள் கையில் இருந்த சொம்பை வாங்கி பாலை ஒரு கிளாஸில் ஊற்றி குடித்த தினேஷ் “ம்ம்.. நான் எக்ஸ்பெக்ட் பண்ணதை விட பாதாம் பால் செம! நான் குடிச்சிட்டு உனக்கு வேற கொஞ்சம் கொடுக்கணும் இல்ல! இந்தா நீயும் குடி.” என்று சொல்லி மீதம் இருந்த பாலை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி மெல்ல குடித்தபடி ஓரக் கண்ணால் அவள் அவனைப் பார்க்க, “உன்ன பாக்க வச்சு குடிச்சா எனக்கு வயிறு வலிக்கும்ல! அதான் கொடுத்தேன். இல்லைனா இதோட டேஸ்ட்டுக்கு நானே ஃபுல்லா குடிச்சிருப்பேன். எனக்கு பாதாம் பால் ரொம்ப பிடிக்கும். இதை யார் போட்டது? நீயா?” என்று சாதாரணமாக கேட்டான் தினேஷ்.
“என்ன இவரு இவ்வளவு சாதாரணமா இருக்காரு? இன்னைக்கு எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்க போகுது. ஆனா அதுக்காக இவர் ஆர்வமாக இருக்கிற மாதிரியே தெரியலையே! இந்த நேரத்தில போய் பாதாம் பால பத்தி புகழ்ந்து பேசிட்டு இருக்காரு! நான் இவருக்காக தானே இவ்வளவு அழகா ரெடியாகி வந்திருக்கேன்! என்ன பத்தி ஒரு வார்த்தை சொல்லல. இன்னும் இவர் என்னை ஒழுங்கா கூட பாக்கல. ஐயோ இந்த மனுஷன் கூட நான் எப்படித்தான் வாழ போறேன்னு தெரியலையே!” என்று நினைத்து சலித்துக் கொண்ட சுவாதி “இத எங்க அம்மாவும் யாழினியும் சேர்ந்து தான் போட்டாங்க. அவளுக்கு சமைக்கவே தெரியாது. ஆனா பாதாம் பால் ரொம்ப பிடிக்கும். இத மட்டும் அவ டேஸ்ட்டா செய்வா. ஆனா இது உங்களுக்கும் இவ்வளவு பிடிக்கும்னு எனக்கு தெரியாது.” என்றாள்.
-தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-9
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-9
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.