Chapter 7

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
சரவணன் மற்றும் விக்ரம் பிரகாஷிடம் டாக்குமெண்ட்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டனர். வண்டியில் செல்லும் வழியில் சரவணன் டாக்குமெண்ட்டை ஓபன் செய்து பார்த்து, “இந்த பொண்ணு ஃபுட் அண்ட் சயின்ஸ் படிச்சிருக்கு டா…. இன்னொரு கோர்ஸ் நியூயார்க்ல வேற போய் முடிச்சிட்டு வந்து இருக்காடா….. இவள போய் கூட்டிட்டு வந்து நம்ம கிராமத்துல வாலன்டியர் ஆக்க பார்க்குற நீ” என்று சரவணன் கேலியாக கேட்க, “ஆகட்டும் டா…. ஒன்னும் தப்பு இல்ல நம்ம வீட்டு பொண்ண நம்ம இழந்துட்டு நிக்குறோம்ல, வந்து நமக்காக வேலை செய்றதுல ஒன்னும் செத்துர மாட்டா” என்று விக்ரம் கோபத்தில் கூறினான்.

“விக்கி கூலா இரு டா…. நீ ஏன் இவ்வளவு கோவப்படுற உன் கோபம் எனக்கு புரியாம இல்ல…. நியாயம் இல்லன்னு நான் சொல்லவே மாட்டேன்” என்று சரவணன் கூற, “அது என்னமோ தெரியல எனக்கு திருப்பி அவர பார்த்த உடனே அபர்ணா தான் ஞாபகம் வரா…. அதனால என்ன அறியாமலே எனக்கு கோபம் வந்திருதுடா” என்று விக்ரம் கூறினான்.

“புரியுது மச்சான்… சரி, ஊட்டில ஆஃபீஸ் கிட்ட நிறுத்து டாக்குமென்ட் சப்மிட் பண்ணிடலாம்…. சரி இந்த டாக்குமெண்ட்ட நீ போய் குடுத்துட்டு வரியா இல்லேன்னா நான் போவா?” என்று சரவணன் கேட்க, “நீயே போய் குடு எனக்கு அந்த மூஞ்சிய பார்க்க கூட விருப்பம் இல்ல” என்று விக்ரம் கூற, “ஆமா டாக்குமெண்ட்ல இருக்கிற அந்த பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ பார்க்க கூட இவருக்கு விருப்பம் இல்ல… ஆனா, ஊருக்கு கூட்டிட்டு வந்தா எப்படியும் தினமும் பார்த்து தான் ஆகணும்… என்ன பண்ண போறியோ நீ, போ” என்று சரவணன் புலம்பி கொண்டே டாக்குமெண்ட் சப்மிட் செய்து விட்டு வந்தான்.


“மச்சான் சீக்கிரமே போயிட்டு கூட்டிட்டு வா டா மதியம் சாமி கும்பிடுறதுக்குள்ள வந்திடு” என்று விக்ரம் கூற, “இன்னிக்கு ஏன் வரனும்… வேற ஒரு நாள் வரலாம்ல… நம்ம நிம்மதியா அபர்ணாக்கு சாமி கூட கும்பிட முடியாது போல... ஆனா, தைரியம் தான் ஆக்ஸிடென்ட் பண்ணிட்டு எப்படி வராங்களோ” என்று அபிலாஷ் சலித்துக் கொண்டான்.

“அவங்க சொன்ன டேட் இன்னிக்கு தான் என்ன பண்ண முடியும் சொல்லு…. ஆங்… அப்புறம் யாருக்கும் தெரியாது அவ தான் ஆக்ஸிடென்ட பண்ணான்னு… அதே போல அவளுக்கு தான் அபர்ணாவோட ஆர்கன் டொனேட் பண்ணி இருக்குன்னு தெரியாது… நீங்களும் அப்படியே உங்களுக்குள்ள வெச்சிக்கோங்க” என்று விக்ரம் கூற, சரி என்று ஆமோதித்தனர் சரவணன் மற்றும் அபிலாஷ். “சரி நான் இப்ப போனா தான் மதியத்துக்குள்ள வர முடியும்” என்று அதிகாலையில் புறப்பட்டான் சரவணன்.

“ஹாய்!! என் பேரு சரவணன் நான் உங்களை வண்ணம் கிராமத்துக்கு கூட்டிட்டு போக வந்து இருக்கேன்” என்று சரவணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, “ஹாய்…. என்னோட பேரு சனந்தா…. ஆன்… இது என்னோட லக்கேஜ் கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா எடுத்து வெக்கிறதுக்கு” என்று சனந்தா கேட்க, அதன் படி சரவணன் உதவி செய்தான். சனந்தா, பிரகாஷ், சந்திரசேகர் மற்றும் லக்ஷ்மி அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றாள்.

இருவரும் வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்க, “நீங்க எப்படி எங்க கிராமத்துக்கு வர ஒத்துக்கிட்டீங்க?” என்று சரவணன் கேட்க, “நீங்க வாங்க எல்லாம் வேண்டாமே… உங்கள விட சின்ன பொண்ணா தான் இருப்பேன் நானு” என்று சனந்தா கூற, “சரி ஓகே…. நீ எப்படி வர ஒத்துக்கிட்ட?” என்று சரவணன் கேட்க, “அது ஒரு சின்ன கதை நான் அப்புறம் சொல்றேன் உங்களுக்கு” என்று சனந்தா கூறினாள்.

“ஆனா, உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு…” என்று சரவணன் கூற, “அப்படியா!! அதுக்கு வாய்ப்பே இல்லையே நான் இங்க கோயம்புத்தூர்ல இருக்கேன்… நீங்க அங்க ஊட்டிக்கும் மேல இருக்கீங்க எப்படி என்னை பார்த்து இருக்க முடியும்” என்று சனந்தா கேட்க, “அது தெரியல… அப்படி தோணிச்சு” என்று கூறினான் சரவணன்.

ஒரு மணி நேர பயணத்திற்கு பின், “ரொம்ப நேரம் ஆகுமா” என்று சனந்தா கேட்க, “ஏன் என்ன ஆச்சு?? உடம்பு ஏதும் பிரச்சனையா உனக்கு.... ட்ராவல் சிக்னஸ் மாதிரி இருக்கா??” என்று சரவணன் அக்கறையுடன் கேட்க, “அது எல்லாம் இல்ல….. ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் ரொம்ப ட்ராவல் பண்ணுறேன் அதான் ஒரு மாதிரி இருக்கு” என்று சனந்தா கூறவும், “சரி ஓகே வா… ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்” என்று ஒரு கடையில் நிறுத்தி சரவணன் டீயை வாங்கி பருகினான், சனந்தா வண்டியிலையே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.

“இந்த பொண்ண பார்த்தா ரொம்ப அமைதியா இருக்குற மாதிரி இருக்கு… பாவம் அவளால வண்டில ஒரு மணி நேரம் ட்ராவல் பண்றதுக்குள்ளேயே இப்படி இருக்கே” என்று சரவணன் மனதில் புலம்பி கொண்டு இருந்தான்.

ஒரு பதினைந்து நிமிடத்தில் மறுபடியும் வண்டியை எடுத்து புறப்பட்டனர். “ம்ம்… ஹெல்த் அண்ட் சயின்ஸ் படிச்சிருக்க அப்புறம் நியூயார்க்ல ஹெல்த் அண்ட் வெல்னெஸ் முடிச்சிருக்க அப்புறம் ஏன் வேலைக்கு போகாம இருக்க?” என்று சரவணன் கேட்க, “வேலை பண்ணிட்டு தான் இருக்கோம்….. ஆனா, ஒரு செக்டார்ல சேர்ந்து பண்ணல…. எனக்கு நான் சம்பாதிச்சு வீட்டை பார்த்துக்கனும்னு எங்க குடும்ப சூழல் இல்ல… அதனால எனக்கு பிடிச்ச மாதிரி எங்க சீனியர்ஸ் கூட சேர்ந்து ஒரு சர்வீஸ் மாதிரி பண்ணிட்டு இருக்கோம்… அதுவுமில்லாம அடுத்த ரீசர்ச் பண்ணிட்டு இருக்கேன் அதனால தான் ஒரு ப்ராப்பர் வேலைக்கு என்னால போக முடியல” என்று சனந்தா கூறினாள்.

“ஓ!!! அப்ப அடுத்து பி.ஹெச்.டி-க்கும் படிச்சிட்டு இருக்கியா?” என்று சரவணன் கேட்க, “முதல்ல இந்த சின்ன ரீசர்ச் வேலை இருக்கு இந்த ரீசர்ச் வேலை முடிச்சிட்டேன்னா அத பேஸ் பண்ணியே பி.ஹெச்.டி பண்ணனும்னு இருக்கேன்” என்று சனந்தா கூறினாள்.

“அதெல்லாம் இருக்கட்டும் என்னை பத்தி இவ்ளோ கேக்குறீங்க உங்கள பத்தி சொல்லுங்க” என்று சனந்தா கேட்க, “ஒன்னும் பெருசா இல்ல மா…. ஊட்டியில தான் எங்க வீடு, அம்மா அப்பா இருக்குறது எல்லாம்… என் கூட பிறந்தவங்க யாரும் இல்ல… என் கூட வண்ணம் கிராமத்துல இருந்து ஸ்கூல்ல ஒரு பையன் வந்து படிச்சான்…. அப்படி அவன் கூட பழகி எனக்கு அவங்க ஊர் புடிச்சு போய்…. அப்படி தான் நான் அங்க போய் ஃபாரஸ்ட் ரேஞ்சர் இன்ஸ்பெக்டரா வேலை பார்த்துட்டு இருக்கேன்” என்று சரவணன் கூற, “அப்படியா!!! எல்லாரும் கிராமத்திலிருந்து சிட்டிக்கு வர பார்ப்பாங்க…. ஆனா, நீங்க சிட்டில இருந்து கிராமத்துக்கு போய் அவங்களுக்காக செய்யணும்னு யோசிக்கிறீங்களே சூப்பர்!!!” என்று சனந்தா கூற, “தேங்க்யூ….” என்றான் சரவணன்.

இப்படி இருவரும் பேசிக்கொண்டே பயணித்தனர்.

“இன்னிக்கு எப்படியாவது எல்லார் முன்னாடியும் விக்ரமை புடிச்சிருக்குன்னு சொல்லிரனும் அப்படி எல்லார் முன்னாடியும் சொல்லிட்டோம்னா நிலைமை நமக்கு சாதகமா அமையும்ல” என்று கவிதா மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள்.

“என்ன யோசிச்சிட்டு இருக்க வந்து வேலைய பாரு வா கவிதா” என்று வள்ளி கூற, “இதோ வந்துட்டேன் அத்தை” என்று கோயிலுக்குள் சென்று வள்ளிக்கு ஒத்தாசையாக இருந்தாள்.

அனைவரும் அபர்ணாவின் மூன்றாவது மாத சடங்கிற்காக ஒன்றாக சேர்ந்து உணவு தயாரித்து கோவிலில் படையல் போட்டு சாமியை கும்பிட்டனர். “விக்ரம், சரவணன் எப்ப பா வருவான் சாமி கூட கும்பிட்டாச்சு” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “வர நேரம் தான் பா…. வாலன்டியரை கூட்டிட்டு வர போயிருக்கான் அதான்…. நான் போக வேண்டியது சரி நமக்கு இங்க வேலை இருக்குன்னு அவன அனுப்புனேன்” என்று விக்ரம் கூற, ம்ம்… சரி என்று தலை அசைத்தார் ஸ்ரீனிவாசன்.

அங்கே கோவிலின் பக்கத்தில் பள்ளிக்காக போடப்பட்டிருக்கும் குடிசையில் அனைவருக்கும் உணவு பரிமாற ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் சரவணன் வந்ததும் அபிலாஷ் அவனைப் பார்த்து, “என்னடா லக்கேஜோட வர… என்ட்ரன்ஸ்ல ஹாஸ்பிடல் ரூம்கிட்டையே வெக்க வேண்டியது தானே லக்கேஜ் எல்லாத்தையும்” என்று அபிலாஷ் கேட்க, “இல்ல டா விக்ரம் தான் மேல இங்க கொண்டு வர சொல்லிட்டான் அதனால தான் கொண்டு வந்தேன்” என்று சரவணன் கூறினான்.

“ஆமா, அந்த பொண்ணு எங்க?” என்று அபிலாஷ் கேட்க, “அங்க வந்துட்டு இருக்கா…. பாவம் டா… ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணுறா… ஏற கூட முடியல” என்று சரவணன் கூற, “நீ ரொம்ப பாவம் பார்க்காத சரியா… வரட்டும் ஒன்னும் ஆயிற மாட்டா” என்று அபிலாஷ் கோபத்தில் கூறினான்.

“மச்சான் லக்கேஜ் எல்லாம் அங்க ஓரமா வெச்சிருக்கேன் அந்த பொண்ணு வந்துட்டு இருக்கா பாரு” என்று சரவணன் கூற, விக்ரம் அவளை பார்த்ததும் அதிர்ச்சியாகி உறைந்து நின்றான்.

“சனந்தா மெதுவாக சரவணனின் அருகில் வந்து நின்று, “என்ன இன்னிக்கு விசேஷம்?” என்று கேட்க, “நீ கொன்னுட்டுல ஒருத்திய அவளுக்கு தான் இப்ப படையல் போட்டுட்டு இருக்கோம்” என்று மனதிற்குள் கோபத்தில் கூறிக் கொண்டான் அபிலாஷ்.

“எங்க தங்கச்சி இறந்து மூணு மாசம் ஆகுது அதனால படையல் போட்டு சாமி கும்பிடுறாங்க” என்று சரவணன் கூற, “ரொம்ப சாரி…. கேட்டதுக்கு” என்று சனந்தா கூறினாள்.

விக்ரம் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க, “இவன் பேரு விக்ரம், இவனும் என் கூட தான் இன்ஸ்பெக்டரா வேலை பார்க்குறான்… நான் சொன்ன ஸ்கூல்மேட் இவன் தான்” என்று அறிமுகம் படுத்த, சனந்தா அவனை பார்த்ததும் புன்னகைத்து, “ஹலோ சார் என் பேரு சனந்தா” என்று கூறவும், விக்ரமிற்கு என்ன கூறுவது என்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இயற்கை தாய் என்ன நினைத்துதோ என்னவோ அவர்களை ஆசிர்வதிக்கும் வகையில் மழை பொழிய ஆரம்பித்தது.

“என்ன மச்சான் எப்படி நின்னுட்டு இருக்க??” என்று சரவணன் விக்ரமை பார்த்து மெதுவாக கேட்க, “உனக்கு அது யாருன்னு தெரியலையா??” என்று விக்ரம் மெல்லிய குரலில் கேட்க, இல்லை!!! என்பது போல் தலையை அசைத்தான் சரவணன்.

“இவ தான் நான் தேடிட்டு இருந்த பொண்ணு டா” விக்ரம் கூற, சரவணனும் அதிர்ச்சியில், “அதான் அவள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா” என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

சரவணன் விக்ரமின் நிலைமையை கருதி அவனின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருக்கும் குடிசைகுள் ஓடினான். சனந்தாவும் அவர்களை பின் தொடர்ந்து போக சனந்தா விக்ரமுக்கு சற்று முன்னால் நின்று கொண்டிருந்தாள். மெதுவாக விக்ரமை திரும்பி பார்க்க விக்ரமோ அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். “இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே… எனக்கு சரியா ஞாபகம் இல்லையே” என்று சனந்தா மனதிற்குள் யோசித்து கொண்டு திரும்பினாள்.

“விக்கி என்ன பண்ற??? எல்லாரும் இருக்காங்க…. நீ ஆ….ன்னு அவளையே பார்த்துட்டு இருக்க” என்று சரவணன் விக்ரமின் காதில் கிசுகிசுத்தான்.

“என்னது இது ஆண்டவா…. ஒரு பொண்ண பார்த்து எனக்கு ஏன் புடிச்சதுன்னே தெரியாம இவள பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டு தெருத்தெருவாக திரிஞ்சு…. ஹாஸ்பிட்டல்ல வார வாரம் போய் காத்திருந்ததுக்கு…. கடைசியா பார்த்தா இவ தான் எங்க அப்பு சாவுக்கு காரணமா இருந்த பொண்ணா…. அதுவும் இல்லாம அப்புவோட உடல் உறுப்புகளையும் இவ தான் எடுத்துக்கிட்டு உயிரோட இங்க வந்து இருக்காளா….. என்னது இது எனக்கு மட்டும் இப்படி நடக்குது…. என் கூட பொறந்தவள இழந்தேன் என் மனசுக்கு பிடிச்சவள கண்ணுல காட்டுன்னு வேண்டினேன்… ஆனா, அவளை இப்படியா கொண்டு வந்து நிப்பாட்டுவ ஆண்டவா” என்று மனதிற்குள் பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தான் விக்ரம்.

இங்கே நடந்து கொண்டு இருந்த அனைத்தையும் கவிதா கவனிக்காமல் இல்லை. மழை நின்றதும் அனைவருக்கும் சனந்தாவை அறிமுகம் செய்து வைத்தான் சரவணன். அனைவரும் புன்னகையுடன் அவளை வரவேற்றனர்.

“என்னது இது…. யாரு அந்த பொண்ணு… அவ வந்ததும் விக்ரம் இப்படி ஆ…ன்னு வாய பொளந்துட்டு இருக்கான்…. இப்ப எல்லாருடைய கவனமும் அவ பக்கம் திரும்புதே… நம்ம போய் முதல்ல விக்ரமை பிடிச்சிருக்குன்னு சொல்லிட வேண்டியது தான்” என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டு பேச தொடங்கவும், பாட்டி சனந்தாவிடம் வந்து, “லட்சனமா இருக்க மா… எங்க கிராமத்தை பத்திரமா பார்த்துக்கோ” என்று கூறவும், அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

“என்ன இந்த பாட்டி நாம போய் பேசினா கூட பேச மாட்டாங்க….. அவங்களே இப்போ புதுசா இந்த பொண்ணு வந்ததும் அவங்ட கிட்ட வந்து பேசுறாங்களே” என்று அனைவரும் நினைத்துக் கொண்டு அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். சனந்தா புன்னகையுடன், “என்னால முடிஞ்சத நான் கண்டிப்பா பண்றேன் பாட்டி” என்று கூறினாள்.

“எங்களுடைய ஊர் தேவதையே அவ தான்…. அவள இழந்துட்டோம்… அந்த இடத்துக்கு யாரும் ஈடு இனையே இல்ல…. ஆனா, கடவுளா பார்த்து உன்ன அனுப்பி இருக்காருன்னு நாங்க நம்புறோம்” என்று பாட்டி கூற, சனந்தா புன்னகைத்து அபர்ணாவின் புகைப்படத்தை பார்க்க, அவள் மனதில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள் வந்து தலையை பிடித்துக் கொண்டு மயங்கி சரியவும் விக்ரம் ஓடி வந்து அவளை தாங்கினான்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 7
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.