தினேஷ், சங்கர் மற்றும் அவனது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஓரமாக நின்று ஏதோ ஜூஸ் குடித்தபடி பேசிக் கொண்டிருந்தான். தனது கைகளில் தினேஷின் பெயரை மெஹந்தி ஆர்டிஸ்ட் எழுதிய உடன் ஆசையாக அதை அவனிடம் காட்டுவதற்காக சென்றாள் சுவாதி. “தினேஷ்!” என்று அவன் பெயரை சொல்லி அவள் அவனை அழைக்க, “டேய் அங்க பாரு சிஸ்டர் உன்ன கூப்பிடுறாங்க டா!” என்று தினேஷின் அருகில் இருந்த அவனது நண்பன் அவன் சுவாதியை கவனிக்காததால் கூப்பிட்டு சொன்னான்.
தினேஷ் என்ன என்பதைப் போல சாதாரணமாக திரும்பி சுவாதியை பார்க்க, தன் இரு கைகள் முழுவதும் இருந்த மெஹந்தி டிசைனை அவனிடம் காட்டிய சுவாதி “இந்த டிசைனுக்குள்ள உங்க நேம் மறைஞ்சு இருக்கு. அது கரெக்டா எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பாப்போம்..!!” என்று ஆர்வமாக கேட்டாள். சலிப்புடன் அவளை பார்த்த தினேஷ் “என்ன நிறைய டிவி சீரியல் பாப்பியா நீ? இன்னுமா டி இதையெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க? என் நேம் எங்க இருந்தா என்ன இப்போ? நாளைக்கு நமக்கு மேரேஜ். இதெல்லாம் முடிச்சுட்டு சீக்கிரம் போய் தூங்கு போ.” என்று அவளை அந்த இடத்தை விட்டு விரட்டுவதிலேயே குறியாக இருப்பதைப் போல பேசினான்.
“சரியான சிடு மூஞ்சி. நம்ம எப்ப இவங்கிட்ட பேச போனாலும் இவன் ஒழுங்காவே பேச மாட்டான். அது தெரிஞ்சும் ஏன் தான் திரும்பி திரும்பி வந்து இலன் கிட்ட பேசி அசிங்கப்படுறனோ தெரியல. எல்லாம் என் நேரம்.” என்று நினைத்த சுவாதி வாடிய முகத்துடன் அங்கே இருந்து செல்ல தொடங்கினாள்.
அவளை கவனித்த சங்கர் “ஸ்வாதி நில்லு மா!” என்று உரத்த குரலில் சொல்ல, அவள் உட்பட அனைவரும் இப்போது திரும்பி சங்கரை பர்த்தார்கள். தினேஷின் அருகே சென்ற சங்கர் “என்ன ப்ரோ நீங்க.. இந்த மாதிரி மேரேஜ்ல கிடைக்கிற சின்ன சின்ன சந்தோஷத்தை எல்லாம் மிஸ் பண்ணலாமா? நானும் யாழினியும் சிம்பிளா கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இந்த மாதிரி எங்களுக்கு எதுவுமே நடக்கலைன்னு எனக்கு இப்பயுமே ஒரு ஃபீலிங் இருக்கு தெரியுமா? இப்ப நான் வரும்போது கூட யாழினி கையில மெஹந்தி ஆர்டிஸ்ட் பொண்ணு கிட்ட என் பேர எழுத சொல்லிட்டு தான் வந்தேன்.
நீங்க போக சொன்ன உடனே சுவாத்தியோட faceஏ dull ஆயிடுச்சு பாருங்க! அத பாத்து சொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆயிட போகுது? உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லனாலும் அட்லீஸ்ட் அந்த பொண்ணுக்காகவாவது சும்மா ட்ரை பண்ணி பார்க்கலாம் இல்ல?” என்று அக்கறையுடன் கேட்டான்.
அப்போது மெஹந்தி போட்டு முடிந்து அங்கே வந்த யாழினி ஷங்கரின் முன்னே தன் கையை நீட்டி “வீரப்பா சொல்லிட்டு வந்தில்ல! இப்போ உன் name எங்க இருக்குனு கரெக்டா கண்டுபிடி பார்க்கலாம்.” என்று சொல்ல, “அதெல்லாம் நான் ஈசியா கண்டுபிடிச்சிடுவேன்.” என்றான் ஷங்கர். அவர்களை கவனித்த தினேஷ் சுவாதி பாவமாக தன்னை பார்ப்பதை உணர்ந்து தன் ஒற்றை கையால் “இங்க வா!” என்று சைகை செய்தான். அதனால் உடனே சிறு குழந்தையாய் மாறி சந்தோஷப்பட்ட சுவாதி வேகமாக அவன் முன்னே சென்று நின்று தன் கைகளை அவன் முன்னே நீட்டியவாறு அழகாக அவனை பார்த்து புன்னகைத்தாள்.
அவள் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பை கண்ட பிறகு “இவ என்ன இந்த சின்ன விஷயத்துக்கே இவ்ளோ excite ஆகுறா? சங்கர் சொன்ன மாதிரி நம்ம தான் கொஞ்சம் ஓவரா பேசி இவளை ஹர்ட் பண்ணிட்டோம் போல!” என்று நினைத்து வருத்தப்பட்ட தினேஷ் அவள் கையைப் பிடித்து அந்த பெரிய மெஹந்தி டிசைனுக்குள் அவன் பெயர் எங்கே ஒளிந்து இருக்கிறது என்று தேட தொடங்கினான். அங்கே வெளிச்சம் சரியாக தெரியாததால் தனது மொபைல் ஃபோனில் உள்ள பிளாஷ் லைட்டை எல்லாம் பயன்படுத்தி யாழினியின் கையில் இருந்த தன் பெயரை ஆர்வமுடன் தேடிய சங்கர் இரண்டு நிமிடத்தில் அதை கண்டுபிடித்து சுட்டிக்காட்டி “பாத்தியா.. நான் ஈசியா கண்டுபிடிச்சிடுவேன்னு சொன்னேன்ல! இங்க தானே இருக்கு!” என்று ஆசையாக கேட்டான்.
“ம்ம்.. கரெக்ட் தான், நான் அந்த பொண்ணு கிட்ட உன்னால கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு கஷ்டமா எழுத சொன்னேன். பட் நீ என்ன சொல்லி அவளை கரெக்ட் பண்ணியோ.. எனக்கு என்ன தெரியும்? அதான் அவ நீ ஈஸியா கண்டுபிடிக்கிற மாதிரி எழுதி வச்சிட்டா போல... சோ நீங்களா கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச மாதிரி சீன் போடாதீங்க மிஸ்டர் சங்கர்.” என்று யாழினி விளையாட்டாக சொல்ல, “ஆமா அந்த பொண்ணு வேற பார்க்க நல்லா இருந்துச்சு. நானே எப்படியாவது பேசி கரெக்ட் பண்ணி நம்பர் வாங்கலாம்னு நினைச்சேன். நீயே ஞாபகப்படுத்திட்ட! இரு, நான் போய் முதல்ல அந்த பொண்ணு பேரு என்னன்னு கேட்டுட்டு வரேன்.” என்ற சங்கர் அந்த மெஹந்தி ஆர்டிஸ்ட் பெண் இருந்த இடத்தை நோக்கி சென்றான்.
அதனால் “டேய் எரும மாடு நில்லு டா! நீ மட்டும் அவ கிட்ட போய் பேசின, உன்ன கொன்றுவேன்.” என்ற யாழினி ஓட்டமும் நடையுமாக அவனை பின் தொடர்ந்து செல்ல, வேண்டுமென்றே வீம்பிற்காக அவளைக் கண்டு கொள்ளாமல் சென்று கொண்டு இருந்தான் சங்கர். அதனால் எரிச்சல் அடைந்த யாழினி அவள் கைகள் இரண்டிலும் மருதாணி இருந்ததால் அவன் அருகில் சென்று பின்னே இருந்து அவனை விளையாட்டாக எட்டி உதைத்து “என்ன டா! நான் இருக்கும் போதே, உனக்கு இன்னொருத்தி கேக்குதா? அதுவும் என் முன்னாடியே அவ கிட்ட பேச போற! எனக்கு இந்த மெஹந்தி டிசைன் ரொம்ப பிடிச்சிருக்கு. இல்லைனா வர்ற கோபத்துக்கு அப்படியே இந்த மெஹந்தி போட்ட கையால உன்ன அடிச்சு உன் கண்ணத்த செவக்க வச்சிருப்பேன்.” என்று கோபமாக சொன்னாள்.
அவளது அந்த திடீர் கோபத்தையும் கண்டு ரசித்த சங்கர் திரும்பி அவளை பார்த்து குறும்பாக சிரித்து “இப்போ நான் உன்ன வெட்கத்துல சிவக்க வைக்கிறேன் பாக்குறியா பேபி..??” என்று கேட்டுவிட்டு அவளை தூக்கி சுற்றினான். அங்கே இருந்த பெரிய ஸ்பீக்கரில் ஏற்கனவே ஒரு காதல் பாடல் ஓடிக் கொண்டு இருக்க, தன்னை சுற்றி இருப்பவர்கள் அவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் ஒரு நொடி கூட யோசிக்காமல் “என் பொண்டாட்டிய தூக்கி நான் டான்ஸ் ஆடுறேன். அதனால யாருக்கு என்ன வந்துச்சு?” என்று நினைத்து யாழினி உடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான். அங்கே இருந்த மற்ற இளம் வயது ஜோடிகளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.
அந்த அழகான காட்சியை ஏக்கத்துடன் பார்த்து சுவாதி சிரித்துக் கொண்டு இருக்க, “இவங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கிறது பார்க்கிறதுக்கு எவ்வளவு நல்லா இருக்கு!” என்று நினைத்த தினேஷ் காதலுடன் தன் அருகில் இருந்த சுவாதியை பார்த்தான். அளவான ஒப்பனையிலும், அங்கே இருந்த மங்கிய வெளிச்சத்திலும் கூட அவன் கண்களுக்கு அவள் அழகாகவே தெரிந்தாள். அதனால் இப்போது சங்கர் செய்ததைப் போலவே தானும் தனது மொபைல் ஃபோனில் உள்ள பிளாஷ் லைட்டை பயன்படுத்தி சுவாதியின் கையில் உள்ள மெஹந்தி டிசைனை பார்த்தான் தினேஷ். அதனால் மகிழ்ந்த சுவாதி அவனை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படியே ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகிவிட, தனது பெயரை கண்டுபிடிக்க முயற்சி செய்து தோற்றுப் போன தினேஷ் “சாரி சுவாதி! நானும் உனக்காக தான் இவ்வளவு நேரமா ட்ரை பண்ணி பார்த்தேன். பட் நான் எப்படி பார்த்தாலும் எனக்கு என் நேம் எங்க இருக்குன்னே தெரிய மாட்டேங்குது.” என்று வருத்தத்துடன் சொன்னான்.
அவன் தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பதை விட, தனக்காக ஏதேனும் செய்ய நினைப்பதே மேல் என்று நினைத்து சந்தோஷப்பட்ட சுவாதி “பரவால்ல விடுங்க தினேஷ். நீங்க நான் கேட்டதுக்காக ட்ரை பண்ணீங்க இல்ல.. எனக்கு அதுவே போதும்.” என்று சொல்லிவிட்டு அவளாகவே அவள் கையில் இருந்த அவனது பெயரை அவனுக்கு சுட்டி காட்டினாள். “ஓஹோ! இங்க தான் இருந்துச்சா? நான் அப்பயும் யோசிச்சேன். பட் சரியா பாக்காம விட்டுட்டேன். என்னால கண்டுபிடிக்க முடியல.” என்ற தினேஷ் லேசாக புன்னகைக்க, தானும் அவனுடன் சேர்ந்து சிரித்தாள் சுவாதி.
அவர்கள் இருவரும் தனியாக பேசிக் கொள்ளும்போது நாம் ஏன் அவர்கள் அருகில் இருந்து தொந்தரவு செய்ய வேண்டும் என்று நினைத்து தினேஷின் நண்பர்கள் குழு சாப்பிடும் இடத்தை நோக்கி சென்றுவிட, இப்போது தான் தன்னிடம் தினேஷ் ஏதோ மனசு விட்டு நாலு வார்த்தை பேசுகிறான் என்று நினைத்து சந்தோஷப்பட்ட சுவாதி இத்தனை நாட்களாக தன் மனதில் பூட்டி வைத்திருக்கும் அவன் மீதான காதலை இன்று அவனிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்குள் அவர்களை கவனித்துவிட்டு அங்கே வந்த ஒரு பாட்டி “நிச்சயமாகி நாளைக்கு உங்களுக்கு கல்யாணமே ஆகப்போகுது. இருந்தாலும் இந்த நேரத்துல நீங்க இப்படி நின்னு பேசிட்டு இருக்குறத யாராவது பாத்தா, பாக்கறவங்க என்ன நினைப்பாங்க? முதல்ல கல்யாணம் முடியட்டும். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கோங்க. புருஷன் பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து விடிய விடிய பேசிக்கிட்டே இருந்தாலும், உங்களை யார் கேட்க போறாது? இப்ப போய் நேரம் காலத்துல சாப்பிட்டு படுங்க.” என்று சொ
ல்லி அவர்கள் இருவரையும் பிரித்து விட்டார்.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
தினேஷ் என்ன என்பதைப் போல சாதாரணமாக திரும்பி சுவாதியை பார்க்க, தன் இரு கைகள் முழுவதும் இருந்த மெஹந்தி டிசைனை அவனிடம் காட்டிய சுவாதி “இந்த டிசைனுக்குள்ள உங்க நேம் மறைஞ்சு இருக்கு. அது கரெக்டா எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பாப்போம்..!!” என்று ஆர்வமாக கேட்டாள். சலிப்புடன் அவளை பார்த்த தினேஷ் “என்ன நிறைய டிவி சீரியல் பாப்பியா நீ? இன்னுமா டி இதையெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க? என் நேம் எங்க இருந்தா என்ன இப்போ? நாளைக்கு நமக்கு மேரேஜ். இதெல்லாம் முடிச்சுட்டு சீக்கிரம் போய் தூங்கு போ.” என்று அவளை அந்த இடத்தை விட்டு விரட்டுவதிலேயே குறியாக இருப்பதைப் போல பேசினான்.
“சரியான சிடு மூஞ்சி. நம்ம எப்ப இவங்கிட்ட பேச போனாலும் இவன் ஒழுங்காவே பேச மாட்டான். அது தெரிஞ்சும் ஏன் தான் திரும்பி திரும்பி வந்து இலன் கிட்ட பேசி அசிங்கப்படுறனோ தெரியல. எல்லாம் என் நேரம்.” என்று நினைத்த சுவாதி வாடிய முகத்துடன் அங்கே இருந்து செல்ல தொடங்கினாள்.
அவளை கவனித்த சங்கர் “ஸ்வாதி நில்லு மா!” என்று உரத்த குரலில் சொல்ல, அவள் உட்பட அனைவரும் இப்போது திரும்பி சங்கரை பர்த்தார்கள். தினேஷின் அருகே சென்ற சங்கர் “என்ன ப்ரோ நீங்க.. இந்த மாதிரி மேரேஜ்ல கிடைக்கிற சின்ன சின்ன சந்தோஷத்தை எல்லாம் மிஸ் பண்ணலாமா? நானும் யாழினியும் சிம்பிளா கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இந்த மாதிரி எங்களுக்கு எதுவுமே நடக்கலைன்னு எனக்கு இப்பயுமே ஒரு ஃபீலிங் இருக்கு தெரியுமா? இப்ப நான் வரும்போது கூட யாழினி கையில மெஹந்தி ஆர்டிஸ்ட் பொண்ணு கிட்ட என் பேர எழுத சொல்லிட்டு தான் வந்தேன்.
நீங்க போக சொன்ன உடனே சுவாத்தியோட faceஏ dull ஆயிடுச்சு பாருங்க! அத பாத்து சொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆயிட போகுது? உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லனாலும் அட்லீஸ்ட் அந்த பொண்ணுக்காகவாவது சும்மா ட்ரை பண்ணி பார்க்கலாம் இல்ல?” என்று அக்கறையுடன் கேட்டான்.
அப்போது மெஹந்தி போட்டு முடிந்து அங்கே வந்த யாழினி ஷங்கரின் முன்னே தன் கையை நீட்டி “வீரப்பா சொல்லிட்டு வந்தில்ல! இப்போ உன் name எங்க இருக்குனு கரெக்டா கண்டுபிடி பார்க்கலாம்.” என்று சொல்ல, “அதெல்லாம் நான் ஈசியா கண்டுபிடிச்சிடுவேன்.” என்றான் ஷங்கர். அவர்களை கவனித்த தினேஷ் சுவாதி பாவமாக தன்னை பார்ப்பதை உணர்ந்து தன் ஒற்றை கையால் “இங்க வா!” என்று சைகை செய்தான். அதனால் உடனே சிறு குழந்தையாய் மாறி சந்தோஷப்பட்ட சுவாதி வேகமாக அவன் முன்னே சென்று நின்று தன் கைகளை அவன் முன்னே நீட்டியவாறு அழகாக அவனை பார்த்து புன்னகைத்தாள்.
அவள் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பை கண்ட பிறகு “இவ என்ன இந்த சின்ன விஷயத்துக்கே இவ்ளோ excite ஆகுறா? சங்கர் சொன்ன மாதிரி நம்ம தான் கொஞ்சம் ஓவரா பேசி இவளை ஹர்ட் பண்ணிட்டோம் போல!” என்று நினைத்து வருத்தப்பட்ட தினேஷ் அவள் கையைப் பிடித்து அந்த பெரிய மெஹந்தி டிசைனுக்குள் அவன் பெயர் எங்கே ஒளிந்து இருக்கிறது என்று தேட தொடங்கினான். அங்கே வெளிச்சம் சரியாக தெரியாததால் தனது மொபைல் ஃபோனில் உள்ள பிளாஷ் லைட்டை எல்லாம் பயன்படுத்தி யாழினியின் கையில் இருந்த தன் பெயரை ஆர்வமுடன் தேடிய சங்கர் இரண்டு நிமிடத்தில் அதை கண்டுபிடித்து சுட்டிக்காட்டி “பாத்தியா.. நான் ஈசியா கண்டுபிடிச்சிடுவேன்னு சொன்னேன்ல! இங்க தானே இருக்கு!” என்று ஆசையாக கேட்டான்.
“ம்ம்.. கரெக்ட் தான், நான் அந்த பொண்ணு கிட்ட உன்னால கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு கஷ்டமா எழுத சொன்னேன். பட் நீ என்ன சொல்லி அவளை கரெக்ட் பண்ணியோ.. எனக்கு என்ன தெரியும்? அதான் அவ நீ ஈஸியா கண்டுபிடிக்கிற மாதிரி எழுதி வச்சிட்டா போல... சோ நீங்களா கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச மாதிரி சீன் போடாதீங்க மிஸ்டர் சங்கர்.” என்று யாழினி விளையாட்டாக சொல்ல, “ஆமா அந்த பொண்ணு வேற பார்க்க நல்லா இருந்துச்சு. நானே எப்படியாவது பேசி கரெக்ட் பண்ணி நம்பர் வாங்கலாம்னு நினைச்சேன். நீயே ஞாபகப்படுத்திட்ட! இரு, நான் போய் முதல்ல அந்த பொண்ணு பேரு என்னன்னு கேட்டுட்டு வரேன்.” என்ற சங்கர் அந்த மெஹந்தி ஆர்டிஸ்ட் பெண் இருந்த இடத்தை நோக்கி சென்றான்.
அதனால் “டேய் எரும மாடு நில்லு டா! நீ மட்டும் அவ கிட்ட போய் பேசின, உன்ன கொன்றுவேன்.” என்ற யாழினி ஓட்டமும் நடையுமாக அவனை பின் தொடர்ந்து செல்ல, வேண்டுமென்றே வீம்பிற்காக அவளைக் கண்டு கொள்ளாமல் சென்று கொண்டு இருந்தான் சங்கர். அதனால் எரிச்சல் அடைந்த யாழினி அவள் கைகள் இரண்டிலும் மருதாணி இருந்ததால் அவன் அருகில் சென்று பின்னே இருந்து அவனை விளையாட்டாக எட்டி உதைத்து “என்ன டா! நான் இருக்கும் போதே, உனக்கு இன்னொருத்தி கேக்குதா? அதுவும் என் முன்னாடியே அவ கிட்ட பேச போற! எனக்கு இந்த மெஹந்தி டிசைன் ரொம்ப பிடிச்சிருக்கு. இல்லைனா வர்ற கோபத்துக்கு அப்படியே இந்த மெஹந்தி போட்ட கையால உன்ன அடிச்சு உன் கண்ணத்த செவக்க வச்சிருப்பேன்.” என்று கோபமாக சொன்னாள்.
அவளது அந்த திடீர் கோபத்தையும் கண்டு ரசித்த சங்கர் திரும்பி அவளை பார்த்து குறும்பாக சிரித்து “இப்போ நான் உன்ன வெட்கத்துல சிவக்க வைக்கிறேன் பாக்குறியா பேபி..??” என்று கேட்டுவிட்டு அவளை தூக்கி சுற்றினான். அங்கே இருந்த பெரிய ஸ்பீக்கரில் ஏற்கனவே ஒரு காதல் பாடல் ஓடிக் கொண்டு இருக்க, தன்னை சுற்றி இருப்பவர்கள் அவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் ஒரு நொடி கூட யோசிக்காமல் “என் பொண்டாட்டிய தூக்கி நான் டான்ஸ் ஆடுறேன். அதனால யாருக்கு என்ன வந்துச்சு?” என்று நினைத்து யாழினி உடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான். அங்கே இருந்த மற்ற இளம் வயது ஜோடிகளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.
அந்த அழகான காட்சியை ஏக்கத்துடன் பார்த்து சுவாதி சிரித்துக் கொண்டு இருக்க, “இவங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கிறது பார்க்கிறதுக்கு எவ்வளவு நல்லா இருக்கு!” என்று நினைத்த தினேஷ் காதலுடன் தன் அருகில் இருந்த சுவாதியை பார்த்தான். அளவான ஒப்பனையிலும், அங்கே இருந்த மங்கிய வெளிச்சத்திலும் கூட அவன் கண்களுக்கு அவள் அழகாகவே தெரிந்தாள். அதனால் இப்போது சங்கர் செய்ததைப் போலவே தானும் தனது மொபைல் ஃபோனில் உள்ள பிளாஷ் லைட்டை பயன்படுத்தி சுவாதியின் கையில் உள்ள மெஹந்தி டிசைனை பார்த்தான் தினேஷ். அதனால் மகிழ்ந்த சுவாதி அவனை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படியே ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகிவிட, தனது பெயரை கண்டுபிடிக்க முயற்சி செய்து தோற்றுப் போன தினேஷ் “சாரி சுவாதி! நானும் உனக்காக தான் இவ்வளவு நேரமா ட்ரை பண்ணி பார்த்தேன். பட் நான் எப்படி பார்த்தாலும் எனக்கு என் நேம் எங்க இருக்குன்னே தெரிய மாட்டேங்குது.” என்று வருத்தத்துடன் சொன்னான்.
அவன் தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பதை விட, தனக்காக ஏதேனும் செய்ய நினைப்பதே மேல் என்று நினைத்து சந்தோஷப்பட்ட சுவாதி “பரவால்ல விடுங்க தினேஷ். நீங்க நான் கேட்டதுக்காக ட்ரை பண்ணீங்க இல்ல.. எனக்கு அதுவே போதும்.” என்று சொல்லிவிட்டு அவளாகவே அவள் கையில் இருந்த அவனது பெயரை அவனுக்கு சுட்டி காட்டினாள். “ஓஹோ! இங்க தான் இருந்துச்சா? நான் அப்பயும் யோசிச்சேன். பட் சரியா பாக்காம விட்டுட்டேன். என்னால கண்டுபிடிக்க முடியல.” என்ற தினேஷ் லேசாக புன்னகைக்க, தானும் அவனுடன் சேர்ந்து சிரித்தாள் சுவாதி.
அவர்கள் இருவரும் தனியாக பேசிக் கொள்ளும்போது நாம் ஏன் அவர்கள் அருகில் இருந்து தொந்தரவு செய்ய வேண்டும் என்று நினைத்து தினேஷின் நண்பர்கள் குழு சாப்பிடும் இடத்தை நோக்கி சென்றுவிட, இப்போது தான் தன்னிடம் தினேஷ் ஏதோ மனசு விட்டு நாலு வார்த்தை பேசுகிறான் என்று நினைத்து சந்தோஷப்பட்ட சுவாதி இத்தனை நாட்களாக தன் மனதில் பூட்டி வைத்திருக்கும் அவன் மீதான காதலை இன்று அவனிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்குள் அவர்களை கவனித்துவிட்டு அங்கே வந்த ஒரு பாட்டி “நிச்சயமாகி நாளைக்கு உங்களுக்கு கல்யாணமே ஆகப்போகுது. இருந்தாலும் இந்த நேரத்துல நீங்க இப்படி நின்னு பேசிட்டு இருக்குறத யாராவது பாத்தா, பாக்கறவங்க என்ன நினைப்பாங்க? முதல்ல கல்யாணம் முடியட்டும். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கோங்க. புருஷன் பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து விடிய விடிய பேசிக்கிட்டே இருந்தாலும், உங்களை யார் கேட்க போறாது? இப்ப போய் நேரம் காலத்துல சாப்பிட்டு படுங்க.” என்று சொ
ல்லி அவர்கள் இருவரையும் பிரித்து விட்டார்.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-6
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-6
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.