அதை உணர்ந்த தினேஷ் கனவில் வந்த அனைத்தையும் ஒன்று விடாமல் செய்து அனுபவித்து விட வேண்டும் என்று ஆசையில் ஒரு நொடியும் தாமதிக்காமல் தனது ஆடைகளை கழட்டி எறிந்து விட்டு அவளது ஆடைகளையும் கிழித்து எரிந்து விட்டு அவளை தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு சென்றான். அங்கே அவர்கள் இருவரும் காமத்திலும் போதையிலும் மூழ்கி ஒருவருக்கொருவர் எல்லையற்ற பேரின்பத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
மறுநாள் மதிய வேளையில் யாழினி கண் விழித்து பார்க்கும்போது அவளும் தினேஷும் ஆடைகள் இன்றி ஒரே போர்வைக்குள் கிடந்தார்கள். அதனால் அதிர்ந்தவள், தன் தலையின் மீது கை வைத்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் நேற்று நடந்த அனைத்தையும் நினைவு கூர்ந்தாள். தினேஷ் அவளிடம் வலுக்கட்டாயமாக எல்லை மீறி நடந்து கொண்டதைப் போல அவளுக்கு தோன்றவில்லை. அப்படி என்றால் அது அவளது சம்மதத்துடன் தான் நடந்திருக்கிறது என்னும் போது, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தினேஷும் சுவாதியும் பிரிந்து விட்டார்கள்.
ஆனால் இவளும் சங்கரும் அவர்களுடைய ரிலேஷன்ஷிப் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால், அவளுக்கு ஒருபுறம் குற்ற உணர்வாக இருந்தது. அதனால் அவள் அழுது கொண்டிருக்க, “இங்க பாரு யாழினி.. எனக்கு சுவாதி செட்டாக மாட்டான்றது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு உனக்கு தினேஷ் செட்டாக மாட்டான்றதும் உண்மை தான். அவன் நீ வேணும்னு நினைச்சிருந்தா, இத்தனை நாளாகியும் உன்ன காண்டாக்ட் பண்ணாம இருப்பானா?
நீ அவன பத்தி யோசிச்சு உன் லைஃப்ப ஸ்பாயில் பண்ணிக்காத. நேத்து நடந்த எல்லாத்துக்கும் நானே ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்கிறேன். டரஸ்ட் மீ. உனக்கு நான் இருக்கேன். எப்பயும் இருப்பேன்.” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தினான் தினேஷ். இப்போது அவனை ஏற்றுக் கொள்வதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்று யோசித்த யாழினியின் மூளைக்கு தினேஷ் ஒரு நல்ல choiceஆக தெரிந்தான். அதனால் சரி என்று தலையாட்டியவள், அவனது தோள்களில் சாய்ந்து கொண்டாள். வெற்றிகரமாக தனது கனவு நிஜமான சந்தோஷத்தில் அவளை அணைத்துக் கொண்டான் தினேஷ்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு..
தினேஷும் யாழினியும் அவர்கள் இத்தனை வருடங்களாக கனவு கண்டதைப் போலவே தனியாக சென்னையில் அவர்களுக்கென்று ஒரு புது வீடு வாங்கி அதன் கிரகப்பிரவேசத்தை நடத்திக் கொண்டு இருந்தார்கள். வெகு நாட்களாக சுவாதியை டிவர்ஸ் செய்துவிட்டு தினேஷ் யாழினியை திருமணம் செய்து கொண்டதால் கோபித்துக் கொண்டு அவனிடம் பேசாமல் இருந்த அவனது பெற்றோர்கள் இன்று தங்களது மகனும் மருமகளும் புது வீடு வாங்கி இருக்கும் சந்தோஷத்தில் தனது ஒரே மகனை ஆசீர்வதிக்காமல் இருந்தால் எப்படி? என்று எண்ணி அங்கே வந்திருந்தார்கள்.
பூஜையில் தினேஷின் அருகே அமர்ந்திருந்த யாழினி “அவங்க ரெண்டு பேரும் வருவாங்களா?” என்று கேட்க, “தெரியல, வருவாங்கன்னு தான் நினைக்கிறேன். நீயும் சுவாதியும் பேசிட்டு தானே இருக்கீங்க.. நீ பர்சனலா அவளை கூப்பிட்டது மட்டும் இல்லாம இன்னைக்கு மார்னிங் நான் சங்கருக்கு கால் பண்ணி வர சொல்லி இருக்கேன். கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும் வருவாங்க.” என்று அவளிடம் சொன்ன தினேஷ் “அவங்க என் குழந்தையையும் கூட்டிட்டு வந்தா நல்லா இருக்கும்.” என்று தன் மனதிற்குள் நினைத்தான்.
இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே அங்கே புது பட்டு வேட்டி சட்டையில் சங்கர் பட்டுப்பாவாடை அணிந்து அழகாக தலையில் குடுமி போட்டு இருந்த மூன்றரை வயது சிறுமியை தூக்கிக் கொண்டு உள்ளே வர, அழகிய சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த பட்டுப்புடவையில் பொட்டு வைத்து, பூ வைத்து, நெற்றி நிறைய வகுட்டில் குங்குமம் வைத்து குடும்ப பங்கான பெண்ணாக அழகாக இருந்த ஸ்வாதி அவனை பின் தொடர்ந்து உள்ளே வந்தாள் பிறந்து வெறும் இரண்டு மாதமே ஆன ஷங்கரின் வாரிசான சக்தி என்ற ஆண் குழந்தை அவள் கைகளில் உறங்கிக் கொண்டிருந்தது. உள்ளே வந்த சங்கரும் ஸ்வாதியும் தங்களது குழந்தைகளோடு chairல் அமர்ந்தார்கள்.
தினேஷ் இதுவரை அவனது குழந்தையை சுவாதியின் சமூக வலைத்தளங்களில் அவள் போட்ட புகைப்படத்தில் தன் பார்த்திருக்கிறான். இப்போது முதன் முதலாக நேரில் தனது பெண் குழந்தையை பார்த்தவுடன் அவளைத் தூக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் எழுந்து செல்ல முடியாமல் அவன் அமர்ந்திருக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த யாழினி முழுவதாக தோற்றத்திலும் குண நலங்களிலும் மாறி போயிருந்த சங்கரை ஆச்சரியமாக பார்த்தாள். அவள் மும்பைக்கு சென்றதில் இரந்து இன்று வரை அவளுக்கும் ஷங்கருக்கும் நடுவில் பேச்சுவார்த்தை இல்லை. சுவாதியின் கையில் இருந்த ஷங்கரின் மகனை பார்த்த யாழினி “அப்படியே இவன் அவனை மாதிரியே இருக்கான். இப்போ என் குழந்தை இருந்திருந்தா, நட்சத்திராவை விட அந்த குழந்தை பெருசா இருந்திருக்கும்.” என்று நினைத்துக் கொண்டாள்.
தினேஷின் பெற்றோர்கள் சுவாதி வந்தவுடன் எழுந்து அவள் அருகில் சென்று “நல்லா இருக்கியா மா சுவாத்தி? இது இரண்டாவது குழந்தையா? எத்தனை மாசம் ஆகுது? குழந்தைக்கு என்ன பெயர் வச்சிருக்கீங்க?” என்று நலம் விசாரிக்க, தினேஷை ஓரக் கண்ணால் பார்த்த ஸ்வாதி அவனுக்கும் கேட்கும்படி “எனக்கு என்ன அங்கிள்? என் ஹஸ்பண்ட் என்ன ரொம்ப நல்லா வச்சிருக்காரு. நாங்க ரெண்டு பேரு. இப்ப எங்களுக்காக இரண்டு பேரு. டோட்டலி நாங்க நாலு பேரும் குடும்பமா சந்தோஷமா இருக்கோம். அப்புறம் குழந்தை பேர் என்னன்னு கேட்டீங்கல்ல.. சக்தி.” என்று சிரித்த முகமாக சொன்னாள்.
ஷங்கரின் மடியில் அமர்ந்திருந்த நட்சத்திரா “டாடி இங்க என்ன பண்றாங்க? ஏன் இந்த இடத்துல ஒரே புகையா இருக்கு? எனக்கு வேர்க்குது. ஃபேன் போட சொல்லுங்க. எனக்கு வேர்க்குது.” என்று தன் மழலை குரலில் சொல்ல, “புதுசா வீடு வாங்கினவங்க எல்லாரையும் கூப்பிட்டு இப்படி ஐயர வர வச்சு பூஜை பண்ணுவாங்க. இத கிரகப்பிரவேசம்னு சொல்லுவாங்க நக்சு. நம்ம ஊர்ல தாத்தா வீட்டு கிட்ட ஒரு தோட்டத்து வீடு வாங்கி இருக்கோம்ல.. அங்க சீக்கிரம் நம்மளும் இதே மாதிரி பூஜை பண்ணுவோம்.” என்றான் சங்கர். நட்சத்திரா பெண் குழந்தையாக இருந்தாலும் அவளது முகத்தில் அப்படியே தினேஷின் சாயல் இருந்தது.
அதனால் கண் கலங்க அவளை பார்த்த தினேஷின் பெற்றோர்கள் “இந்த தினேஷும் யாழினியும் வீடு வாங்கணும் சொத்து சேர்க்கணம்னு நாயா பேயா அலைஞ்சு காசுக்கு மேல காசு சம்பாதிக்கிறாங்க. வயசு இவளுக்கு 30-க்கு மேலாகப் போகுது. அவனுக்கு 37 ஆகப்போகுது. இவங்க எப்ப அவங்களுக்குன்னு குழந்தை பெத்துக்க போறாங்களோ! சுவாதியும் தினேஷும் பிரியாம இருந்திருந்தா இன்னைக்கு நட்சத்திரா எங்க வீட்டு வாரிசா இருந்திருப்பா. இப்ப எங்க சொந்த பேத்திய யாரோ ஒருத்தி மாதிரி பாக்க வேண்டியதா இருக்கு. என்ன பண்றது.. சுவாதி மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைச்சும், அவ கூட ஒழுங்கா வாழ எங்க பையனுக்கு துப்பு இல்லை. அதான் இப்போ சங்கர் நட்சத்திராவுக்கு அப்பா வாயிட்டான்.” என்று நினைத்து வருத்தப்பட்டார்கள்.
அதை கவனித்த சங்கர் அவர்களை சங்கட படுத்த வேண்டாம் என்று நினைத்து “அங்க பாரு தாத்தா பாட்டி.. அவங்களுக்கு ஹாய் சொல்லு!” என்று சொல்ல, தினேஷின் அப்பா “தாத்தா கிட்ட வாடா செல்லம்.” என்று சொல்லி நட்சத்திராவை ஆசையாக தூக்கிக் கொண்டார். அதனால் சுவாதி சங்கரை பார்த்து முறைக்க, “பாவம் டி விடு முறைக்காத. தினேஷ் பண்ண தப்புக்கு இவங்க என்ன பண்ணுவாங்க?” என்று மெல்லிய குரலில் சொன்னான் சங்கர். தனது மகளை அவனுடைய பெற்றோர்கள் கொஞ்சி விளையாடுவதை ஏக்க
த்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் தினேஷ்.
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
மறுநாள் மதிய வேளையில் யாழினி கண் விழித்து பார்க்கும்போது அவளும் தினேஷும் ஆடைகள் இன்றி ஒரே போர்வைக்குள் கிடந்தார்கள். அதனால் அதிர்ந்தவள், தன் தலையின் மீது கை வைத்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் நேற்று நடந்த அனைத்தையும் நினைவு கூர்ந்தாள். தினேஷ் அவளிடம் வலுக்கட்டாயமாக எல்லை மீறி நடந்து கொண்டதைப் போல அவளுக்கு தோன்றவில்லை. அப்படி என்றால் அது அவளது சம்மதத்துடன் தான் நடந்திருக்கிறது என்னும் போது, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தினேஷும் சுவாதியும் பிரிந்து விட்டார்கள்.
ஆனால் இவளும் சங்கரும் அவர்களுடைய ரிலேஷன்ஷிப் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால், அவளுக்கு ஒருபுறம் குற்ற உணர்வாக இருந்தது. அதனால் அவள் அழுது கொண்டிருக்க, “இங்க பாரு யாழினி.. எனக்கு சுவாதி செட்டாக மாட்டான்றது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு உனக்கு தினேஷ் செட்டாக மாட்டான்றதும் உண்மை தான். அவன் நீ வேணும்னு நினைச்சிருந்தா, இத்தனை நாளாகியும் உன்ன காண்டாக்ட் பண்ணாம இருப்பானா?
நீ அவன பத்தி யோசிச்சு உன் லைஃப்ப ஸ்பாயில் பண்ணிக்காத. நேத்து நடந்த எல்லாத்துக்கும் நானே ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்கிறேன். டரஸ்ட் மீ. உனக்கு நான் இருக்கேன். எப்பயும் இருப்பேன்.” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தினான் தினேஷ். இப்போது அவனை ஏற்றுக் கொள்வதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்று யோசித்த யாழினியின் மூளைக்கு தினேஷ் ஒரு நல்ல choiceஆக தெரிந்தான். அதனால் சரி என்று தலையாட்டியவள், அவனது தோள்களில் சாய்ந்து கொண்டாள். வெற்றிகரமாக தனது கனவு நிஜமான சந்தோஷத்தில் அவளை அணைத்துக் கொண்டான் தினேஷ்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு..
தினேஷும் யாழினியும் அவர்கள் இத்தனை வருடங்களாக கனவு கண்டதைப் போலவே தனியாக சென்னையில் அவர்களுக்கென்று ஒரு புது வீடு வாங்கி அதன் கிரகப்பிரவேசத்தை நடத்திக் கொண்டு இருந்தார்கள். வெகு நாட்களாக சுவாதியை டிவர்ஸ் செய்துவிட்டு தினேஷ் யாழினியை திருமணம் செய்து கொண்டதால் கோபித்துக் கொண்டு அவனிடம் பேசாமல் இருந்த அவனது பெற்றோர்கள் இன்று தங்களது மகனும் மருமகளும் புது வீடு வாங்கி இருக்கும் சந்தோஷத்தில் தனது ஒரே மகனை ஆசீர்வதிக்காமல் இருந்தால் எப்படி? என்று எண்ணி அங்கே வந்திருந்தார்கள்.
பூஜையில் தினேஷின் அருகே அமர்ந்திருந்த யாழினி “அவங்க ரெண்டு பேரும் வருவாங்களா?” என்று கேட்க, “தெரியல, வருவாங்கன்னு தான் நினைக்கிறேன். நீயும் சுவாதியும் பேசிட்டு தானே இருக்கீங்க.. நீ பர்சனலா அவளை கூப்பிட்டது மட்டும் இல்லாம இன்னைக்கு மார்னிங் நான் சங்கருக்கு கால் பண்ணி வர சொல்லி இருக்கேன். கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும் வருவாங்க.” என்று அவளிடம் சொன்ன தினேஷ் “அவங்க என் குழந்தையையும் கூட்டிட்டு வந்தா நல்லா இருக்கும்.” என்று தன் மனதிற்குள் நினைத்தான்.
இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே அங்கே புது பட்டு வேட்டி சட்டையில் சங்கர் பட்டுப்பாவாடை அணிந்து அழகாக தலையில் குடுமி போட்டு இருந்த மூன்றரை வயது சிறுமியை தூக்கிக் கொண்டு உள்ளே வர, அழகிய சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த பட்டுப்புடவையில் பொட்டு வைத்து, பூ வைத்து, நெற்றி நிறைய வகுட்டில் குங்குமம் வைத்து குடும்ப பங்கான பெண்ணாக அழகாக இருந்த ஸ்வாதி அவனை பின் தொடர்ந்து உள்ளே வந்தாள் பிறந்து வெறும் இரண்டு மாதமே ஆன ஷங்கரின் வாரிசான சக்தி என்ற ஆண் குழந்தை அவள் கைகளில் உறங்கிக் கொண்டிருந்தது. உள்ளே வந்த சங்கரும் ஸ்வாதியும் தங்களது குழந்தைகளோடு chairல் அமர்ந்தார்கள்.
தினேஷ் இதுவரை அவனது குழந்தையை சுவாதியின் சமூக வலைத்தளங்களில் அவள் போட்ட புகைப்படத்தில் தன் பார்த்திருக்கிறான். இப்போது முதன் முதலாக நேரில் தனது பெண் குழந்தையை பார்த்தவுடன் அவளைத் தூக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் எழுந்து செல்ல முடியாமல் அவன் அமர்ந்திருக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த யாழினி முழுவதாக தோற்றத்திலும் குண நலங்களிலும் மாறி போயிருந்த சங்கரை ஆச்சரியமாக பார்த்தாள். அவள் மும்பைக்கு சென்றதில் இரந்து இன்று வரை அவளுக்கும் ஷங்கருக்கும் நடுவில் பேச்சுவார்த்தை இல்லை. சுவாதியின் கையில் இருந்த ஷங்கரின் மகனை பார்த்த யாழினி “அப்படியே இவன் அவனை மாதிரியே இருக்கான். இப்போ என் குழந்தை இருந்திருந்தா, நட்சத்திராவை விட அந்த குழந்தை பெருசா இருந்திருக்கும்.” என்று நினைத்துக் கொண்டாள்.
தினேஷின் பெற்றோர்கள் சுவாதி வந்தவுடன் எழுந்து அவள் அருகில் சென்று “நல்லா இருக்கியா மா சுவாத்தி? இது இரண்டாவது குழந்தையா? எத்தனை மாசம் ஆகுது? குழந்தைக்கு என்ன பெயர் வச்சிருக்கீங்க?” என்று நலம் விசாரிக்க, தினேஷை ஓரக் கண்ணால் பார்த்த ஸ்வாதி அவனுக்கும் கேட்கும்படி “எனக்கு என்ன அங்கிள்? என் ஹஸ்பண்ட் என்ன ரொம்ப நல்லா வச்சிருக்காரு. நாங்க ரெண்டு பேரு. இப்ப எங்களுக்காக இரண்டு பேரு. டோட்டலி நாங்க நாலு பேரும் குடும்பமா சந்தோஷமா இருக்கோம். அப்புறம் குழந்தை பேர் என்னன்னு கேட்டீங்கல்ல.. சக்தி.” என்று சிரித்த முகமாக சொன்னாள்.
ஷங்கரின் மடியில் அமர்ந்திருந்த நட்சத்திரா “டாடி இங்க என்ன பண்றாங்க? ஏன் இந்த இடத்துல ஒரே புகையா இருக்கு? எனக்கு வேர்க்குது. ஃபேன் போட சொல்லுங்க. எனக்கு வேர்க்குது.” என்று தன் மழலை குரலில் சொல்ல, “புதுசா வீடு வாங்கினவங்க எல்லாரையும் கூப்பிட்டு இப்படி ஐயர வர வச்சு பூஜை பண்ணுவாங்க. இத கிரகப்பிரவேசம்னு சொல்லுவாங்க நக்சு. நம்ம ஊர்ல தாத்தா வீட்டு கிட்ட ஒரு தோட்டத்து வீடு வாங்கி இருக்கோம்ல.. அங்க சீக்கிரம் நம்மளும் இதே மாதிரி பூஜை பண்ணுவோம்.” என்றான் சங்கர். நட்சத்திரா பெண் குழந்தையாக இருந்தாலும் அவளது முகத்தில் அப்படியே தினேஷின் சாயல் இருந்தது.
அதனால் கண் கலங்க அவளை பார்த்த தினேஷின் பெற்றோர்கள் “இந்த தினேஷும் யாழினியும் வீடு வாங்கணும் சொத்து சேர்க்கணம்னு நாயா பேயா அலைஞ்சு காசுக்கு மேல காசு சம்பாதிக்கிறாங்க. வயசு இவளுக்கு 30-க்கு மேலாகப் போகுது. அவனுக்கு 37 ஆகப்போகுது. இவங்க எப்ப அவங்களுக்குன்னு குழந்தை பெத்துக்க போறாங்களோ! சுவாதியும் தினேஷும் பிரியாம இருந்திருந்தா இன்னைக்கு நட்சத்திரா எங்க வீட்டு வாரிசா இருந்திருப்பா. இப்ப எங்க சொந்த பேத்திய யாரோ ஒருத்தி மாதிரி பாக்க வேண்டியதா இருக்கு. என்ன பண்றது.. சுவாதி மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைச்சும், அவ கூட ஒழுங்கா வாழ எங்க பையனுக்கு துப்பு இல்லை. அதான் இப்போ சங்கர் நட்சத்திராவுக்கு அப்பா வாயிட்டான்.” என்று நினைத்து வருத்தப்பட்டார்கள்.
அதை கவனித்த சங்கர் அவர்களை சங்கட படுத்த வேண்டாம் என்று நினைத்து “அங்க பாரு தாத்தா பாட்டி.. அவங்களுக்கு ஹாய் சொல்லு!” என்று சொல்ல, தினேஷின் அப்பா “தாத்தா கிட்ட வாடா செல்லம்.” என்று சொல்லி நட்சத்திராவை ஆசையாக தூக்கிக் கொண்டார். அதனால் சுவாதி சங்கரை பார்த்து முறைக்க, “பாவம் டி விடு முறைக்காத. தினேஷ் பண்ண தப்புக்கு இவங்க என்ன பண்ணுவாங்க?” என்று மெல்லிய குரலில் சொன்னான் சங்கர். தனது மகளை அவனுடைய பெற்றோர்கள் கொஞ்சி விளையாடுவதை ஏக்க
த்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் தினேஷ்.
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-56
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-56
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.