Chapter-52

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
ஃபிளைட்டில் ஏறி தினேஷும் யாழினியும் மும்பையை நோக்கி பறந்து கொண்டிருந்தார்கள். சுவாதி தனக்கு டிவர்ஸ் கொடுப்பதாக சொல்லிவிட்டதால் தனது பிரச்சனை ஒரு முடிவிற்கு வந்துவிட்டது என்று நினைத்த தினேஷ் இப்போது யாழினியின் பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் “என்ன ஆச்சு உனக்கு? ஏன் நேத்துல இருந்து ஒரு மாதிரி இருக்க? உனக்கும் சங்கருக்கும் எதாவது பிராப்ளமா?” என்று கேட்டான். முதலில் அப்படி எலலாம் ஒன்றும் இல்லை என்று சொல்லி சமாளித்த யாழினி தன் மனதில் உள்ளதை யாரிடமாவது சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அனைத்தையும் அவனிடம் சொன்னாள்‌.



பின் கலங்கிய கண்களுடன் “நீங்களே சொல்லுங்க தினேஷ்.. சங்கர் மாதிரி இவ்ளோ sensitiveஆன ஆளுங்க கிட்ட நம்ம எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்க முடியுமா? இல்ல, நம்ம ஏதாவது சொன்னா தான் அத புரிஞ்சிக்கிற கெப்பாசிட்டி அவங்களுக்கு இருக்கா? நான் எந்த சிச்சுவேஷன்ல என்ன நெனச்சு இத செஞ்சு இருப்பேன்னு கொஞ்சம் கூட என் சைடுல இருந்து யோசிச்சு பாக்காம நான் பண்ணது தான் தப்புன்னு ஸ்ட்ராங்கா பேசுறவன் கிட்ட நான் என்ன பேச முடியும்? அதுவும் என்ன பாக்கவே புடிக்கல அப்படி இப்படின்னு ரொம்ப ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டான். இதுக்கு முன்னாடி ஷங்கர் என்னை இவ்வளவு மோசமா ட்ரீட் பண்ணதே இல்ல. சோ என்னால இதை ஏத்துக்கவே முடியல. கஷ்டமா இருக்கு தினேஷ்.” என்று யாழினி சொல்ல, அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்ட தினேஷ் “ஆக்சுவலி இதே மாதிரி தான் எனக்கும் சுவாதிக்கும் நடுவுல பிரச்சனை. இப்போ அது டிவோர்ஸ் வரைக்கும் போயிடுச்சு. இவங்கள எல்லாம் திருத்தவே முடியாது யாழினி. அவங்க என்னைக்கும் நம்மள புரிஞ்சிக்கவே மாட்டாங்க.” என்றான்.



சாக்காகி அவனைப் பார்த்த யாழினி “என்ன சொல்றீங்க நீங்க சுவாதிய டிவரஸ் பண்ண போறீங்களா? அந்த அளவுக்கு உங்களுக்குள்ள ‌என்ன ஆச்சு? சங்கர் அளவுக்கு எல்லாம் சுவாதி மோசமில்லை தினேஷ். உள்ளுக்குள்ள என்ன பிராப்ளம்னு சொல்லுங்க. நான் அவ கிட்ட பேசி பார்க்கிறேன்.” என்று தன் கண்ணீரை துடைத்து கொண்டு கேட்க, “பிரச்சனையை பேசி சால்வ் பண்ற ஸ்டேஜை எல்லாம் நாங்க எப்பவோ கிராஸ் பண்ணி வந்துட்டோம் யாழினி. இந்த டிவர்ஸ்ல ஸ்வாதி தான் என்னை விட ஸ்ட்ராங்கா இருக்கா. சோ அவளுக்கு என் கூட வாழ பிடிக்கலைங்கும் போது, நான் எதுக்காக அவளை போர்ஸ் பண்ணனும்? எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்ல. நானும் எல்லாத்துக்கும் ரெடி ஆகிட்டேன்.

என் லாயர் ஃபிரண்ட் கிட்ட கூட பேசிட்டேன். அவர் பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டு இருக்காரு. இந்த வீக் முடியறதுக்குள்ள கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணிடலாம்னு அவர் சொல்லிட்டாரு. இன்னும் இத பத்தி வீட்ல சொல்ல வேண்டியது மட்டும் தான் பாக்கி.” என்று கூலாக சொன்னான் தினேஷ்.



இன்னும் அதிர்ச்சி விலகாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த யாழினி “உங்களுக்கு மேரேஜ் ஆகி முழுசா ஒன் இயர் கூட ஆகல. அதுக்குள்ள ஏன் இப்படி ஒரு டிசிஷன்?” என்று கேட்க, நடந்த அனைத்தையும் அவளிடம் சொன்ன தினேஷ் “எனக்கு சுவாதி கூட செட் ஆகாது யாழினி. இப்படியே டெய்லியும் சண்டை போட்டுக்கிட்டு ஒரே வீட்ல பல வருஷம் ஒன்னா வாழ்வதற்கு, நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு போய் அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழறது தான் பெட்டர்ன்னு எனக்கு தோணுது. இந்த விஷயத்துல நான் சுவாதிய குறை சொல்றதுக்கு கூட விரும்பல. அவ அவளோட point of viewல கிளியரா இருக்கா.

என்ன அது எனக்கு ஆப்போசிட்டா இருக்கு அதனால, எங்களுக்குள்ள செட்டாக மாட்டேங்குது. அதுக்கு என்ன பண்ண முடியும்? இந்த ரிலேஷன்ஷிப் வொர்க் அவுட் ஆகலைன்னு நெனச்சு தலை முழுகிட்டு வேற வேலைய பார்க்க வேண்டியது தான்.” என்றான்.



“என்ன தினேஷ் எல்லாத்தையும் இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க? உங்களுக்கு அவளை விட்டு பிரியுறதை நெனச்சு கஷ்டமா இல்லையா?” என்று யாழினி கேட்க, “அவ என் ஒய்ஃப். திடீர்னு அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு மாறும் போது, அத ஏத்துக்க கஷ்டமா தான் இருக்கும் யாழினி. ஆனா என்ன பண்றது? அவ கூட சேர்ந்து வாழ்றது எங்க ரெண்டு பேருக்குமே இதைவிட கஷ்டமா இருக்கே! ரெண்டு பேரும் பிடிக்காம கடனுக்கு வாழ்ந்துட்டு இருந்தா டைம் வேஸ்ட் தானே! இன்னொரு பத்து வருஷம் கழிச்சு இது செட் ஆகலைன்னு நம்ம பிரிஞ்சா, அப்போ லைஃப்ல நம்ம இன்னொரு chance வேணும்னு Move onஆக ஆசைப்பட்டா கூட அதுக்கு பாசிபிலிட்டிஸ் இருக்காது. சோ எமோஷனலா யோசிக்கிறதை விட பிராக்டிக்கலா யோசிக்கணும் அதுதான் நம்ம lifeக்கு நல்லது. It's one life யாழினி. யாருக்காகவும் எதுக்காகவும் நம்ம அதை வேஸ்ட் பண்ண கூடாதுல்ல!” என்றான் தினேஷ். அது அவளுக்கும் சரி என்றுதான் பட்டது. அதனால் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்க தொடங்கினாள் யாழினி.



ஒன்றரை மாதத்திற்கு பிறகு..



இன்று ஆபீஸ் லீவ் என்பதால் தாமதமாக தூங்கி எழுந்த சங்கர் தனது அறையை விட்டு வெளியே வர, கிச்சனில் இருந்து வந்த நல்ல மனம் அந்த வீடு முழுவதும் வீசிக் கொண்டிருந்தது. அதை நுகர்ந்தபடி நேராக கிச்சனுக்கு சென்ற சங்கர் நைட்டியுடன் தனது தலை முடியை சீவி கொண்டை போட்டு வேர்க்க விருவிருக்க சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்த ஸ்வாதியின் கொண்டையை பிடித்து ஆட்டிவிட்டு “ஓய்.. நான் வீட்ல இருக்கும்போது நீ குக் பண்ணாத.. நானே பண்றேன்னு சொன்னா கேக்க மாட்டியா நீ? டெய்லியும் நீதானே டி சமைக்கிற... இந்த ரெண்டு நாள் ஜாலியா ரெஸ்ட் எடக்க வேண்டியது தானே!” என்று கேட்க, “நான் இப்பயெல்லாம் உன்னால ரெஸ்ட் மட்டும் தான் எடுத்துட்டு இருக்கேன் சங்கர். ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து எனக்கு போரடிக்குது. நீ எனக்கு பார்த்து பார்த்து சமைச்சு கொடுக்கிற. நீ வீட்ல இருக்கும் போது ஸ்பெஷலா உனக்கு ஏதாவது சமைச்சு கொடுக்கணும்னு எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா? நான் பிரியாணி பண்ணிட்டேன். இன்னொரு அரை மணி நேரம் தான். எல்லாம் முடிஞ்சுரும். சீக்கிரம் சாப்பிடலாம் எனக்கு வேற பசிக்குது.” என்றாள் ஸ்வாதி.‌



இப்போது அவளுக்கு ஐந்து மாதத்திற்கு மேல் ஆகியிருந்ததால் அவளது வயிறு கொஞ்சம் பெரிதாக இருக்க, மேடிட்டு இருந்த அவளது வயிற்றின் மீது தன் கையை வைத்த சங்கர் “எப்ப பாத்தாலும் இந்த பாப்பாவ பட்டினி போடுறதே உனக்கு வேலையா போயிடுச்சு. நீ போய் ஹால்ல உட்காரு போ. நான் மத்தது எல்லாத்தையும் பாத்துக்கறேன்.” என்று சொல்லி அவளது தோள்களில் கை வைத்து “போ.. போ.. போ..!! நான் வீட்ல இருக்கும்போது நீ எந்த வேலை செய்யக் கூடாது.” என்று சொல்லி கிச்சனில் இருந்து அவளை வெளியே அனுப்பினான். “அட போடா.. எப்பயும் இப்படியே சொல்லு. நான் பிரக்னண்டா தான் இருக்கேன், பேஷண்டா இல்ல. டாக்டரே அஞ்சு மாசத்துக்கு மேல வீட்டு வேலையெல்லாம் செய்யனும்னு தான் சொன்னாங்க.” என்று முக சுழிப்புடன் சொன்ன ஸ்வாதி ஒரு chairஐ எடுத்துக் கொண்டு வந்து கிச்சனின் அருகே போட்டு அமர்ந்தாள்.‌



“அவங்க அப்படி தான் சொல்லுவாங்க. அதுக்காக என்னால உன்னை வேலை வாங்க முடியாது. ஏதோ ஆன்லைன் கிளாஸ்லாம் அட்டென்ட் பண்ணி டெய்லியும் படிக்கிறியே..!! மேடம் டிஸ்டன்ஸ் எஜுகேஷன்லையே MBA படிக்கிறீங்க. அப்போ அந்த வேலையை மட்டும் பாருங்க.‌” என்ற சங்கர் அவள் செய்து வைத்திருந்த பிரியாணியை தம் போட்டான்.‌ “அதெல்லாம் எனக்கு படிக்க தெரியும். நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை.” என்று சொல்லிவிட்டு தன் உதட்டை சுளித்த சுவாதி தனக்குள் சிரித்துக் கொண்டாள். கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த வீட்டில் அவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள்.



தூங்கும் போது இருவரும் தனி தனி அறையில் படுத்துக் கொண்டாலும், சங்கர் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் சுவாதியுடன் தான் இருப்பான். தன்னையும் தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் தினேஷ் எப்படி எல்லாம் ஒரு அப்பாவாக இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சுவாதி ஆசைப்பட்டாளோ, இன்று சங்கர் அதை எல்லாம் அவளுடன் இருந்து செய்து கொண்டு இருக்கிறான். சுவாதி தினேஷின் கோர்ட் கேஸ் நிலுவையில் இருக்க, சுவாதியின் குடும்பத்தினர் அவளது இந்த முடிவினால் அவள் மீது கோபப்பட்டு அவளுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள். இருப்பினும், சங்கர் அவளுக்கு துணையாக இருந்ததால் வேறு யார் ஒருவரின் துணையும் அவளுக்கு தேவைப்படவில்லை.‌

தொடரும்...

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-52
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.