Chapter-51

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அந்த வீட்டிற்கு வந்து எத்தனையோ மாதங்கள் கடந்து இருந்தும் அவள் இன்னும் மொட்டை மாடி பக்கம் ஒரு தடவை கூட சென்றதில்லை என்பதால், அவளுக்கு அங்கே செல்ல கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது. மொட்டை மாடியில் எப்போதும் வெறும் ஆண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று சங்கர் அவளிடம் சொன்னது வேறு அவளுக்கு ஞாபகம் வர, திக் திக் இதயத்துடன் அங்கே சென்ற சுவாதி பெரிய பெரிய தண்ணீர் டேங்குகளுக்கு அருகில் படுத்திருந்த ஷங்கரை கண்டாள். அவன் அருகில் காலியான நான்கு ஐந்து மது பாட்டில்கள் கிடந்தது.



சங்கர் அப்படியே கேட்பாரின்றி போதையில் கிடந்தான். யாழினியை அவன் காதலிக்க தொடங்கிய பிறகு அவள் குடிக்கக்கூடாது என்று சொன்ன ஒரே காரணத்திற்காக அவன் இந்த குடிப்பழக்கத்தை விட்டிருந்தான். இதனை வருடங்கள் கழித்து அவன் குடுத்திருக்கிறான் என்றால், கண்டிப்பாக ஏதோ பெரிதாக ஒன்று நடந்திருக்கிறது என்று நினைத்த சுவாதி அவன் அருகில் அமர்ந்து அவனது தோள்களில் தட்டி “சங்கர்.. நேத்து நைட்டு நீங்க இங்க வந்து படுத்துருக்கீங்க போல. இப்போ மறுநாள் நைட்டே ஆகப்போகுது. ஈவினிங் ஆயிடுச்சு. எவ்ளோ நேரம் தான் இப்படியே படுத்து இருப்பீங்க? எந்திரிச்சு கீழ வாங்க. நான் பேசுறது கேக்குதா இல்லையா? சங்கர்.. எந்திரிங்க ஷங்கர்..!!” என்று அவனை எழுப்பினாள்.



அவள் குரலை கேட்டு பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த சங்கர் “யாழினி..!! யாழினி..!!” என்று பிதற்றினான். “யாழினி இங்க இல்ல. அவ தினேஷ் கூட ஏர்போர்ட் போய்ட்டா. விடியறதுக்குள்ள அவங்க மும்பை போயிடுவாங்க. நீங்க எந்திரிங்க நம்ம கீழ போகலாம். நான் உங்களுக்காக சமைச்சு வச்சிருக்கேன். வந்து குளிச்சிட்டு சாப்பிடுங்க.” என்று அன்புடன் சொன்ன சுவாதி கை தாங்களாக ஷங்கரை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள். சுவாதியின் முகத்தை பார்த்து ஓரளவிற்கு நார்மலான சங்கர் சென்று குளித்துவிட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தான். அவன் அருகில் அமர்ந்த சுவாதி “வாங்க சாப்பிடலாம்.” என்று சொல்ல, “எனக்கு வேணாம். நான் சாப்பிடுற மூடுல எல்லாம் இல்ல சுவாதி. அட்லீஸ்ட் நீயாவது என்னை புரிஞ்சுக்கோ ப்ளீஸ்!” என்று உடைந்த குரலில் சொன்னான் ஷங்கர்.



“என்னால கண்டிப்பா உங்களை புரிஞ்சிக்க முடியும் ஷங்கர். பட் பசி எதையும் புரிஞ்சுக்காது. இங்க யாரும் இல்லாம என்னால மட்டும் தனியா சமைச்சு எப்படி சாப்பிட முடியும்? ஏதோ செஞ்சே ஆகணுமேன்னு சமைச்சு வச்சுட்டேன். ஆனா அத நிம்மதியா சாப்பிட மனசு வர மாட்டேங்குது. ப்ளீஸ்.. எனக்காக வந்து சாப்பிடுங்க.” என்ற சுவாதி அவன் கையைப் பிடித்து இழுக்க, “அடிப்பாவி.. நீ பிரக்னண்டா இருக்க. ஞாபகம் இருக்கா இல்லையா? உன் குழந்தைக்காக அவ்ளோ போராடிட்டு இப்படி எனக்காக இவ்வளவு நேரம் சாப்பிடாம இருப்பியா? டாக்டர் உன்னை டைமுக்கு சாப்டுட்டுட்டு மெடிசின்ஸ் எடுத்துக்க சொன்னாங்க. நீ இப்படி அசால்டா இருக்கக் கூடாது. நீ வா முதல்ல நம்ம சாப்பிடலாம். எனக்காக இல்லைன்னாளும் உனக்காக நான் சாப்பிடுறேன்.” என்ற ஷங்கர் அவளுடன் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட தொடங்கினான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த சுவாதி “உங்களுக்கும் யாழினிக்கும் என்ன பிராப்ளம்? ஏன் அவ மேல இவ்வளவு கோவமா இருக்கீங்க? தினேஷ் கூட அவ மும்பை போனது உங்களுக்கு புடிக்கலையா?” என்று பொறுமையாக கேட்டாள்.



“அவள் எவன் கூட எங்க போனா எனக்கென்ன? நான் எதுக்கு அதுக்கெல்லாம் கோவப்படணும்?” என்று அவன் எரிச்சலுடன்‌ கேட்க, “ச்ச்.. இப்படி எல்லாம் பேசாதீங்க சங்கர். இது உங்க கேரக்டரே இல்ல. மத்தவங்க பண்ற சில விஷயங்கள் உங்க லைஃபை பாதித்தாலும், நீங்க உங்களோட ஒரிஜினாலிட்டிய இழக்க கூடாது. இந்த பிரச்சனையை பத்தி என்னை தவிர நீங்க வேற யார் கிட்டயும் பேச முடியாது. இப்படி உள்ளுக்குள்ளயே வச்சு கஷ்டப்படுறதுக்கு மனசு விட்டு பேசிடுங்க.” என்றாள் சுவாதி.



அவள் குரலில் இருந்த நிதானம் அவனையும் நிதானப்படுத்தியது. நேராக நிமிர்ந்து அமர்ந்த சங்கர் “சாரி ஸ்வாதி.” என்று சொல்லிவிட்டு நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட்டு அழுதவாறு “இதுக்கு மேல என்னால எப்படி அவ முகத்துல முழிக்க முடியும் சொல்லு..‌‌ அவளை பார்க்கும்போது எல்லாம் ஆறு மாசத்துக்கு முன்னாடி அவ என்ன நடிச்சு ஏமாத்துனது தான் எனக்கு ஞாபகம் வருது. அப்ப அவளுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. நான் எவ்ளோ பெரிய கேன கிறுக்கனா இருந்திருந்தா, அவ எனக்கே தெரியாம என் குழந்தைய கொண்டுட்டு வந்ததை கூட கண்டுபிடிக்க முடியாம அவளுக்கு என்ன ஆச்சுன்னு அவ கூடவே இருந்து பாத்துகிட்டு அவளைப் பத்தியே யோசிச்சிட்டு இருந்திருப்பேன்!



ஒருவேளை அவளுக்கு இதுல விருப்பம் இல்லைன்னா கூட, அத பத்தி நேரடியா என் கிட்ட பேசி என்ன அவ கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணி இருக்கலாம். அதை விட்டுட்டு இவ்வளவு பெரிய விஷயத்தை என் கிட்ட மறைச்சு என்னை இத்தனை மாசமா ஏமாத்திட்டு இருந்திருக்கா பாரு! அதைதான் சுவாதி என்னால தாங்கவே முடியல. அடிக்கடி எனக்கு உன்ன விட்டா யார் இருக்கா சங்கர்னு அவ கேட்டுட்டே இருப்பா. எனக்கு மட்டும் அவள விட்டா வேற யாரு டி இருக்காங்க? எங்களுக்குன்னு வந்த குழந்தையையும் அவ இல்லாம பண்ணிட்டா. எனக்கு என்னமோ அவளும் எனக்கு இல்லாம போயிட்ட மாதிரி ஒரு ஃபீல் வருது ஏன்னே தெரியல. இதெல்லாம் நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு சுவாதி. நான் யாழினி என் கிட்ட இப்படி பொய் சொல்லவா, என்னை ஏமாத்துவானு நெனச்சு கூட பாத்ததில்ல தெரியுமா?” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு அழுத ஷங்கர் தன் அருகில் அமர்ந்திருந்த சுவாதியின் தோள்களில் சாய்ந்து கொண்டான்.

‌ தானும் அவனது தோள்களில் சாய்ந்து கொண்ட சுவாதி “நமக்கு புடிச்சிருக்கோ இல்லையோ நம்ம லைஃப் இப்படித்தான் இருக்கு சங்கர். ஆனா இது கடைசி வரைக்கும் இப்படியே இருந்துடாதுன்னு மட்டும் நம்ம நம்புவோம். எல்லா சமயமும் நம்ம நினைக்கிற மாதிரியே நடந்துட்டா, இந்த வாழ்க்கை போர் அடிச்சிடும்ல்ல.. அதான் கடவுள் உங்களையும் என்னையும் வச்சு விளையாடி டைம் பாஸ் பண்ணிட்டு இருக்காரு. இந்த கேமை நம்ம விளையாட தேவையில்லை. ஜஸ்ட் இது நம்மள பாதிக்காம பாத்துக்கிட்டா போதும். ‌

நீங்க சொன்னீங்கல்ல.. பேப்பர் போட்டுட்டு நோட்டிஸ் பீரியட் ஒர்க் பண்ணிட்டு அப்புறம் ரிசைன் பண்ணுன்னு... எனக்கு அப்படி ஆபீஸ் போறதுக்கு கூட விருப்பம் இல்ல. இதுவரைக்கும் மத்தவங்க எல்லார பத்தியம் யோசிச்சு முக்கியமா இந்த சொசைட்டிய பத்தி என் குடும்பத்தில இருக்கிறவங்கள பத்தின்னு ஒவ்வொருத்தர பத்தியும் யோசிச்சு எனக்கு புடிச்ச மாதிரி இந்த வாழ்க்கையை நான் வாழவே இல்ல. Even எனக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் கூட, முதல்ல நான் தினேஷுக்கு புடிச்ச மாதிரி இருக்கணும்னு நினைச்சேன். அப்புறம் தினேஷை எனக்கு புடிச்ச மாதிரி மாத்த முடியுமான்னு நினைத்தேன். இந்த டோட்டல் ஜர்னில அது இரண்டுமே நடக்காதுன்னு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு.‌

Husband and wifeன்னா, ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்றது இல்ல. ஒருத்தர் இன்னொருத்தருக்காக அவங்களை புரிஞ்சிக்கிட்டு நம்மள விட அவங்கள பத்தி அதிகமா யோசிச்சு நம்ம வாழ்ற இந்த வாழ்க்கையும் நமக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப்பும் காதலும் தான் முக்கியம்னு நினைச்சு வாழ்றது. அந்த வாழ்க்கையில குறைகள் இருந்தாலும், நம்ம பார்ட்னரை அவங்க எப்படி இருக்காங்களோ அப்படியே ஏத்துக்கணும். ஆனா இதுல பிரச்சனை என்னன்னா, இத‌ ஒருத்தர் மட்டுமே கடைசி வரைக்கும் செஞ்சிட்டு இருக்க முடியாது. அந்த ரிலேஷன்ஷிப் முக்கியம்னு நினைச்சு இரண்டு பேருமே efforts போடணும்.

தினேஷ் கிட்ட இருந்து அது எப்பயும் வராதுன்னு நான் புரிஞ்சுகிட்டேன். சோ எனக்காகவும் என் குழந்தைக்காகவும் நான் அவன டிவர்ஸ் பண்ண போறேன். இனிமே நான் ஆபீஸ் போக தேவை இல்லை. தினேஷை இம்பிரஸ் பண்ண எதுவும் பண்ண தேவையில்லை. என் குழந்தையை நான் நல்லா பாத்துக்கணும். அதுக்கு நான் முதல்ல நிம்மதியா சந்தோஷமா இருக்கணும். அதுக்கு என்ன வழின்னு பாக்கணும். நான் இப்ப அத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன். இப்ப இதை நான் உங்க கிட்ட எதுக்கு சொல்றேன்னா, எல்லாருக்கும் ஒரு வாழ்க்கை தான் சங்கர். அதை நம்ம திருப்தியா, சந்தோஷமா, நமக்கு புடிச்ச மாதிரி வாழனும். நீங்க அப்படி வாழனும்னு நான் ஆசைப்படுறேன். உங்கள பத்தி, யாழினிய பத்தி யாரை பத்தியும் யோசிக்காதீங்க. உங்களுக்கு கிடைச்சிருக்கிற இந்த வாழ்க்கையில என்ன வேணும்னு மட்டும் யோசிங்க.‌ அதைத் தேடி போங்க.” என்று மென்மையான குரலில் சொன்னாள்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-51
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.