Chapter-48

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
உண்மையில் தினேஷுக்கு சுவாதியை டிவர்ஸ் செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை. இது அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். அதை விட்டு விலகும் போது இவர்கள் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டியது இருக்கும். கண்டிப்பாக அவன் குடும்பத்தினர்கள் இந்த முடிவிற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று அவனுக்கே நன்றாக தெரியும். இருப்பினும் ஸ்வாதியின் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க சொல்லி அவளை மிரட்ட வேறு வழி தெரியாததால் தான் அவன் டிவர்ஸ் என்னும் ஆயுதத்தை தன் கையில் எடுத்திருந்தான். காலையில் தான் அப்படி சொன்னவுடன் அத்தனை கோபப்பட்டு தன்னை எதிர்த்து பேசிய சுவாதி இப்போது தீர்க்கமாக தான் வேண்டாம் என்ற முடிவிற்கு வந்து பேசுவதை அவனால் நம்பவே முடியவில்லை. அதனால் இப்போது அவளை கன்வின்ஸ் செய்வது அவனூடைய முறை ஆகிவிட்டது.



அவள் அருகில் சென்ற தினேஷ் அவளது தோள்களை பற்றிக் கொண்டு “நீ என்ன பேசிட்டு இருக்க சுவாதி? உனக்கு டிவர்ஸ் பண்றதுன்னா சாதாரணமா தெரியுதா? நான் சும்மா உன் கிட்ட பிளாக்மெயில் பண்றதுக்கு தான் அப்படி சொன்னேன். மத்தபடி உன்னை விட்டுட்டு போகணும் என்ற ஐடியாவே எனக்கு இல்ல.” என்று சொல்ல, அவன் கையை தட்டி விட்டு லேசாக அவனை பார்த்து புன்னகைத்த சுவாதி “ஏன்னா.. என்ன விட்டா இந்த மாதிரி உனக்கு இன்னொரு அடிமை எவளும் சிக்க மாட்டாளே.. அப்புறம் எப்படி நீ என்னை டிவர்ஸ் பண்ணுவ?” என்று நக்கலாக கேட்டாள்‌.



“என்ன சுவாதி இப்படி பேசுற? நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா? நீ இல்லாம எப்படி டி என்னால இருக்க முடியும்?” என்று அவன் அவசரமான குரலில் கேட்க, “நான் இல்லாம எப்படி உன்னால இருக்க முடியும்னு இன்னிக்கி ஒரு நாள்ல நான் நல்லா தெரிஞ்சுகிட்டேன். நீதானே என்ன இன்னைக்குள்ள ஒரு டெசிஷன் எடுத்து சொல்லு சொல்லுன்னு force பண்ண.. நான் சொல்லிட்டேன். இப்ப உன் டர்ன். உனக்கு நான் ஒரு வாரம் டைம் கொடுக்கிறேன். நல்லா யோசிச்சு சொல்லு. உனக்கு நானும் என் குழந்தையும் வேணுமா வேணாமான்னு. எது எப்படி இருந்தாலும், நான் என் வேலையை விடப்போறது கன்பார்ம். சோ என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வரப் போறது இல்ல. அதே மாதிரி உன்னால எனக்கும், என் குழந்தைக்கும் எந்த பிரச்சனையும் வர கூடாது.” என்று தனது ஒற்றை விரலை நீட்டி அவனை எச்சரித்தாள் சுவாதி.



குளித்துவிட்டு வெறும் டவலுடன் பாத்ரூமில் இருந்து வந்த யாழினி “சங்கர் டீ ரெடியா?” என்று கேட்டபடி திரும்ப, அவள் முன்னே சுடச்சுட ஒரு கப் டீயை நீட்டினான் சங்கர். அதை வாங்கிக் கொண்டு கட்டிலில் அமர்ந்த யாழினி “நமக்கு ஒரு புது ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு சங்கர். அதை நம்ம ஆபீஸோட மும்பை பிரான்ச்சுக்கு போய் தான் பண்ணனுமாம். சோ தினேஷ் மூணு மாசம் மும்பை போறாரு. அவருக்கு அசிஸ்டென்டா நம்ம டீம்ல இருந்து இன்னொருத்தரும் போகணும். நான் ஸ்வாதிய கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன். அவளுக்கும் தினேஷுக்கும் நடுவுல ஏதோ பிராப்ளம் போல. அவ வர வேண்டாம்னு சொல்லிட்டாரு அவரு.

இப்ப அவர் கூட என்ன வர சொல்லி கேட்கிறாரு. மூணு மாசம் அங்க போய் ஸ்டே பண்ணி ஒர்க் பண்ணனும். அக்கமடேஷன் எல்லாம் ஆபீஸ் சைடுலயே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாங்க. இருந்தாலும் எனக்கு தான் என்ன பண்றதுன்னு தெரியல. இன்னைக்குள்ள யோசிச்சு சொல்றேன்னு அவர் கிட்ட சொல்லி இருக்கேன். உனக்கு என்ன தோணுது? நான்‌ தினேஷ் கூட மும்பை போயிட்டு வரட்டா?” என்று அவனிடம் கேட்டாள்.



அவளைப் பார்த்து ஒரு விரக்தி புன்னகையை சிந்திய சங்கர் “நீ அப்படியே எல்லாத்தையும் என் கிட்ட கேட்டுட்டு பண்ற மாதிரி எதுக்கு டி நடிக்கிற? உனக்கு என்ன தோணுதோ பண்ணு. நீ எப்படி வேணாலும் இரு. எனக்கு என்ன? இதெல்லாம் எதுக்கு என் கிட்ட கேக்குற?” என்று சலிப்புடன் கேட்க, தன் கையில் இருந்த கப்பை அருகில் உள்ள டேபிளின் மீது வைத்த யாழினி எழுந்து நின்று “இப்ப எதுக்கு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க நீ? அப்படி நான் உன் கிட்ட சொல்லாம என்ன செஞ்சுட்டேன்? நீதான் இன்னைக்கு கூட என் கிட்ட எதுவும் சொல்லாம ஆபீஸ்ல இருந்து கிளம்பி வந்து இருக்க. நான் தினேஷ் அந்த ப்ராஜெக்ட் விஷயமா மீட்டிங் போட்டு இருந்ததுனால பிஸியாவே இருந்துட்டேன். கார்ல வந்து ஏறும்போது தான் நீ முன்னாடியே பர்மிஷன் கேட்டு வீட்டுக்கு போயிட்டன்னு தினேஷ் சொல்றாரு. சண்டை போடணும்னு நினைச்சிருந்தா, இத பத்தி உன்‌ கிட்ட கேட்டு நான் எப்பவோ சண்‌டை போட்டு இருக்கலாம்ல்ல.. என்னால உன்ன மாதிரி எல்லாம் இப்டி சில்லியான விஷயத்துக்கு டென்ஷன் ஆகிட்டு இருக்க முடியாது. கொஞ்சமாவது மெச்சூரிட்டியோட பிஹேவ் பண்ண கத்துக்கோ சங்கர்.” என்று பதிலுக்கு அவனை குறை சொன்னாள் யாழினி.



“எனக்கு உன்ன மாதிரியெல்லாம் கல்நெஞ்சகாரத்தனமா இருக்க தெரியாது டி. அப்படி என்னால இருக்கவும் முடியாது. இப்படி எல்லாம் இருக்கிறதுக்கு பேர் தான் மெச்சூரிட்டினா, அது எனக்கு இல்லைன்னே வச்சுக்கோ. நான் மேனர்ஸ் தெரியாத மெச்சூரிட்டி இல்லாதவன் போதுமா? இப்படி இருக்கிற என்னை எதுக்கு டி நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட? உனக்கு புடிச்ச மாதிரி உன் டேஸ்ட் இருக்கிறவனா பார்த்து லவ் பண்ணி இருக்க வேண்டியது தானே? நானா வந்து உன்ன புடிச்சிருக்குன்னு சொல்லி உன்ன தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்த கால்ல நின்னேன்? பண்றது எல்லாத்தையும் நீ பண்ணிட்டு இப்ப என்ன குறை சொல்றியா?” என்று கோபமாக கேட்டான் ஷங்கர்.



இதுவரை யாழினி சின்னதாகவோ பெரியதாகவோ எத்தனையோ தவறுகள் செய்திருக்கிறாள். அப்போதெல்லாம் அவள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் அவளை திட்டி இருக்கிறான். ஆனால் ஒருபோதும் இப்படி எல்லாம் அவளை காயப்படுத்தும் விதமாக அவன் பேசியதே இல்லை. இப்போது பேசுகிறான் என்றால் அது அவளுக்கு விசித்திரமாக தெரிய, “திடீர்னு என்ன ஆச்சு இவனுக்கு? ஏன் இப்படி எல்லாம் லூசுத் தனமா பேசிட்டு இருக்கான்?” என்று நினைத்த யாழினி அவன் அருகில் சென்று அவன் கன்னத்தில் கை வைத்து “என்ன ஆச்சு பேபி உனக்கு? இப்ப எதுக்கு கோபப்பட்டு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க? லாஸ்ட் 10 டேஸ்சா நமக்குள்ள ஒண்ணுமே நடக்கல. இப்போ நான் 3 மந்த்ஸ் மும்பை போக போறேன்னு சொன்னதுனால நீ ஃபீல் பண்றியா? மும்பை பக்கத்துல தானே இருக்கு..

நீ நெனச்சா உடனே பிளைட் டிக்கெட் போட்டு அங்கே கிளம்பி வரலாம். நானும் நடுவுல லீவ் கிடைச்சா இங்க கிளம்பி வரேன். எப்படியும் நான் நாளைக்கு கிளம்பிடுவேன். பட் இன்னைக்கு நாள் முடியுற வரைக்கும் நமக்கு டைம் இருக்கே.. நம்ம என்ன வேணாலும் பண்ணலாம். விடிய விடிய ஜாலியா விளையாடிட்டே இருக்கலாம். இது உனக்கு ரொம்ப பிடிச்ச கேம்ல.. நம்ம சேர்ந்து விளையாடினா, உன் டென்ஷன் எல்லாம் ஒரே செகண்ட்ல காணாம போயிடும். Let's play!” என்று அவனது கழுத்தோரம் தனது விரல்களால் கோலம் போட்டவாறு சொல்லிவிட்டு தன் மீது கட்டி இருந்த துண்டை கழட்ட தொடங்கினாள் யாழினி.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-48
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.