“நான் அப்படியெல்லாம் நடக்கவே நடக்காதுன்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன நடந்தா ஓகேவான்னு கேட்டுட்டு இருக்க?” என்று சலிப்புடன் யாழினி கேட்க, “நீ நடக்காதுன்னு நம்புற. நான் நடக்கும்னு நம்புறேன். உனக்கு உன் மேல நம்பிக்கை இருந்தா, எனக்கு ப்ராமிஸ் பண்ணு. ஒருவேளை நீ பண்ற எல்லாத்தையும் மீறி நீ ப்ரெக்னன்ட் ஆயிட்டா, என் குழந்தைக்கு அம்மாவாக நீ ரெடி ஆகணும். பொறுப்பா இருக்க கத்துக்கணும். கரியர்ல இருந்து பிரேக் எடுத்துட்டு குடும்ப இஸ்திரியா மாற ட்ரை பண்ணனும். நான் உன் கூடவே இருக்கேன் உன்ன சப்போர்ட் பண்றேன். ஓகேவா?” என்று கேட்டு தன் ஒற்றைக் கையை நீட்டி அவளிடம் சத்தியம் செய்ய சொன்னான் சங்கர்.
அதனால் அவனுக்காக அவன் கையின் மீது தன் கையை வைத்த யாழினி “நீ சொன்ன மாதிரி நான் பண்ற எல்லாத்தையும் மீறி நான் கன்சிவ் ஆகிட்டா, அது ஒரு அதிசயம் தான். அப்படி அந்த அதிசயம் நடந்துருச்சுன்னா, உனக்காக நான் அந்த குழந்தைய பெத்துக்கிறேன் ப்ராமிஸ். போதுமா?” என்றாள். “எனக்கு இது போதும்.” என்ற சங்கர் அவளை அணைத்துக் கொண்டான். இவ்வாறு அன்று நடந்ததெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்த சங்கர், சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு யாழினி தனக்கு மயக்கம் வருவதாக சொன்னதும், வாமிட் வருவதைப் போல இருக்கிறது என்று சொன்னதையும், அதன் பிறகு ஒரு வாரம் வரை தனக்கு லாங் பீரியட்ஸ் இருப்பதாக சொல்லி அதிக ரத்தப்போக்கினால் அவதிப்பட்டதும் அவனுக்கு ஞாபகம் வந்தது.
“அடிப்பாவி.. என் குழந்தையை அநியாயமா கொன்னுட்டல? அது உருவாகுறதுக்கு முன்னாடியே தடுக்கிறது வேற விஷயம். நீ பண்றது எல்லாத்தையும் தாண்டி, நமக்குன்னு குழந்தை வந்தா அத பெத்துக்கணும்னு உன் கிட்ட எவ்வளவு ஆசையா கேட்டேன்.. பிராமிஸ் எல்லாம் பண்ணியே டி..!! கடைசியில சத்தியமாவது சக்கரை பொங்கலாவதுனு நினைச்சு என் கிட்ட நீ பிரக்னன்ட் ஆனதை கூட மறைச்சு அநியாயமா என் குழந்தையை கொன்னுட்டல.. நீ எல்லாம் ஒரு பொண்ணா? எப்படி டி உனக்கு இப்படி பண்ண மனசு வந்துச்சு? ச்சே.. உன்ன போய் நான் உருகி உருகி இத்தனை வருஷமா லவ் பண்ணி இருக்கனே...!! நீ எனக்கு பண்ணது நம்பிக்கை துரோகம் யாழினி. நான் இதுக்காக உன்னை மன்னிக்கவே மாட்டேன்.” என்று தன் மனதிற்குள் அவளை திட்டிய சங்கர் அவளது ஸ்கேன் ரிப்போர்ட்டில் இருந்த தனது குழந்தையின் உருவத்தை அவன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறி அழுதான்.
இப்போதுதான் அவன் ஹாஸ்பிடலுக்கு சென்று சுவாதியின் குழந்தையை வேறு பரிசோதித்து விட்டு வந்ததால், அதன் தாக்கம் அவன் மனதை விட்டு இன்னும் சென்றிருக்காத நிலையில் அதற்குள் அவன் மனைவி இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டாள் என்று தெரிந்ததால் ஷங்கருக்கு யாழினி மற்றும் தினேஷின் மீது இப்போது வெறுப்பு வந்தது. கூடவே தன் குழந்தையை தன்னால் காக்க முடியவில்லை என்று நினைக்கும் போது, குற்ற உணர்ச்சியும் அவனை வாட்டியது. மொத்தத்தில் தங்களது குழந்தையை நினைத்து அங்கே ஸ்வாதி அவளது ரூமில் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருக்க, இங்கே பிறப்பதற்கு முன்பே மறைந்து போன தன் குழந்தையை நினைத்து அழுது கரைந்தான் சங்கர்.
மூன்று மணி நேரத்திற்கு பிறகு யாழினியும் தினேஷும் ஒருவருடன் ஒருவர் சிரித்து பேசியபடி தங்களது வீட்டின் முன்னே வந்து நின்றார்கள். கதவு உள்ளே இருந்து லாக் செய்யப்பட்டு இருந்ததால், தினேஷ் காலிங் பெல்லை அழுத்தினான். சுவாதிக்கு சென்று கதவைத் திறக்க மனமில்லை. அதனால் அவள் அழுத்தமாக தனது ரூமிலேயே இருந்துவிட, தன் கண்ணீரை துடைத்துவிட்டு இறுகிய முகத்துடன் சென்று கதவை திறந்தான் ஷங்கர். “திடீர்னு நமக்கு இப்படி ஒரு ஆப்பர்சூனிட்டி கிடைக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல தினேஷ். பட் நீங்க கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அதான் நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன். நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் டைம் கொடுங்க நைட்டுக்குள்ள நான் என் டிசிஷன் என்னன்னு சொல்றேன்.” என்று சொன்னபடி யாழினி உள்ளே வர, “ஓகே யாழினி டேக் யுவர் டைம். பொறுமையா நாளைக்கு கூட நல்லா யோசிச்சு சொல்லு.” என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றான் தினேஷ்.
செல்பவனை பார்த்து முறைத்த சங்கர் யாழினியை மேலும் கீழும் பார்த்தான். அதையெல்லாம் கவனிக்காமல் அவள் பாட்டிற்கு “எனக்கு தலை வலிக்குது. ஒரு டீ போடுறியா நான் போய் குளிச்சிட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்காக கூட காத்திருக்காமல் நேராக தனது ரூமிற்கு சென்றாள் யாழினி. அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு கோபம் பற்றி கொண்டு வர “இன்னைக்கு தான் டி எனக்கு ஒரு விஷயம் நல்லா புரியுது. நீயும் சரி.. அந்த தினேஷும் சரி.. ரெண்டு பேரும் சரியான செல்ஃபிஷ். உங்களுக்கு உங்கள பத்தி மட்டும் தான் கவலை. உங்க கூட இருக்கிறவங்களை பத்தி யோசிச்சு பார்க்குறது எல்லாம் உங்களுக்கு வராது. இப்படி இருக்கிற உங்களுக்கு எல்லாம் எதுக்கு டி கல்யாணம் குழந்தை எல்லாம்?
அப்படியே தனியா ஜாலியா உங்க இஷ்டத்துக்கு சுத்திட்டு இருக்க வேண்டியது தானே.. எதுக்கு கல்யாணம் என்ற பேருல எங்க வாழ்க்கையில வந்து மொத்தமா எங்களை நிம்மதிய இருக்க விடாம எங்க லைஃபையே கெடுத்துட்டு இருக்கீங்க? காலையில சுவாத்திய கோபமா திட்டிட்டு அவன் அப்படியே அவள விட்டுட்டு போயிட்டான். இப்ப கொஞ்சம் கூட அவளை பத்தி கவலையே இல்லாம ஜாலியா உன் கூட சிரிச்சு பேசிகிட்டு எதுவும் நடக்காத மாதிரி வீட்டுக்குள்ள வர்றான். நீ.. அவனுக்கும் மேல டி. அவங்களாவது ஒருத்தருக்கு ஒருத்தரை பிடிச்சும் பிடிக்காமலும் அரேஞ்ச் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. அவங்களுக்கு மேரேஜ் ஆகி சிக்ஸ் மன்த்ஸ் தான் ஆகியிருக்கு. ஆனா நீயும் நானும் இத்தனை வருஷமா ஒண்ணா வாழ்ந்துட்டு இருக்கோம். எப்பயாவது என்ன பத்தி ஒரு பர்சென்ட்டாவது யோசிச்சு இருக்கியா நீ? நான் யார் கிட்டயும் எதுவும் சொல்லாம தினேஷ் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு கிளம்பி வந்து இருக்கேன். அவன் கூட தானே வீட்டுக்கு வர்ற.. அப்போ நான் எங்க போனேன்னு நீ யோசிக்கல இல்ல..
அவ்வளவு தான் டி நீ. நான் ஆபீஸ்ல இருந்து கிளம்பி வந்து எவ்வளவு நேரம் ஆகுது.. ஒரு வேலை எனக்கு ஏதாவது ஆகி இருந்தா? ஒரு கால் பண்ணி நான் ஏன் சீக்கிரம் கிளம்பி போயிட்டேன்னு கூட கேக்கணும்ன்னு உனக்கு தோணலை இல்ல யாழினி.. இப்ப வரைக்கும் நடந்தது எல்லாத்தையும் யோசித்துப் பார்த்தா நான் தாண்டி முட்டாள் தனமா எதையும் புரிஞ்சுக்காம இருந்திருக்கேன். என்ன லவ் பண்றேன்னு முதல்ல சொன்னது மட்டும் தான் நீ. இத்தனை வருஷமா நான் மட்டும்தான் உன்னை ஒன் சைடா உன்ன லவ் பண்ணிட்டு இருந்திருக்கேன்.
நான் உனக்கு கொடுத்த லவ்ல.. ஒரு பர்சென்ட் கூட எனக்கு திருப்பி கிடைக்கலையே டி.. ச்சீ... என்ன மயிறு வாழ்க்கை டா இது? நீ போக போக சரியாயிடுவன்னு நான் நினைச்சேன். ஆனா எதுவும் மாறாதுன்னு எனக்கு இப்பதாண்டி தெரியுது. இந்த அறிவு மட்டும் முன்னாடியே வந்திருந்தா, சத்தியமா உனக்கு ஓகே சொல்லி இருக்கவே மாட்டேன்.” என்று நினைத்த சங்கர் கலங்கிய கண்களுடன் கிச்சனுக்கு சென்று டீ போட்டுக் கொண்டு தனது ரூமிற்கு சென்றான். யாழினி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தாள்.
சுவாதியின் அறையில்..
டேபிளில் இருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்த தினேஷ் “ஓஹோ.. மேடம் நான் வராமயே ஹாஸ்பிடலுக்கு போய் ஸ்கேன் பண்ணிட்டு வந்துட்டீங்க போல! அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சு.. அப்போ டிசிஷன் எடுக்கிற அளவுக்கு தைரியம் வந்துருச்சா? என்ன டிசைட் பண்ணி இருக்கீங்க மேடம்?” என்று அவளைப் பார்த்து திமிராக கேட்க, மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு தானும் அவனைத் திமிராக பார்த்த ஸ்வாதி “நீ என் குழந்தைக்கு அப்பனா இருக்கறதுனால உனக்கு ஒரு லாஸ்ட் சான்ஸ் குடுக்கலாம்ன்னு நினைக்கிறேன். நம்ம ஃபேமிலில யாரும் பஞ்சத்தில அடிபட்டு பரதேசி மாதிரி சுத்திட்டு இருக்கல. எல்லார் கிட்டயும் சேவிங்ஸ் இருக்கு. முக்கியமா நான் எனக்காக சேர்த்து வச்சிருக்கேன். இன்னொரு த்ரீ இயர்ஸ் நான் வேலைக்கு போகலைன்னாலும், என்னையும் என் குழந்தையையும் என்னால பாத்துக்க முடியும்.
நான் என் jobஐ quit பண்றதா டிசைட் பண்ணிருக்கேன். என் குழந்தை பிறந்து கொஞ்சம் வளர்ந்து ஸ்கூலுக்கு போனதுக்கு அப்புறம் மறுபடியும் வேற ஏதாவது ஆபீஸ்க்கு ஜாப் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். இது தான் என் டிசிஷன். யாருக்காகவும் எதுக்காகவும் என்னால என் குழந்தையை விட்டுக் கொடுக்க முடியாது. உனக்கு இந்த குழந்தையும் நானும் வேணாம்னு தோணுச்சுன்னா, நீ என்ன தாராளமா டிவர்ஸ் பண்ணிக்கலாம். எனக்குன்னு யாருமே இல்லைன்னாலும் பரவால்ல. எனக்கு என் குழந்தை போதும். என் குழந்தைக்கு அம்மா மட்டும் போதும்.” என்று உறுதியாக சொல்லி விட்டாள்.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
அதனால் அவனுக்காக அவன் கையின் மீது தன் கையை வைத்த யாழினி “நீ சொன்ன மாதிரி நான் பண்ற எல்லாத்தையும் மீறி நான் கன்சிவ் ஆகிட்டா, அது ஒரு அதிசயம் தான். அப்படி அந்த அதிசயம் நடந்துருச்சுன்னா, உனக்காக நான் அந்த குழந்தைய பெத்துக்கிறேன் ப்ராமிஸ். போதுமா?” என்றாள். “எனக்கு இது போதும்.” என்ற சங்கர் அவளை அணைத்துக் கொண்டான். இவ்வாறு அன்று நடந்ததெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்த சங்கர், சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு யாழினி தனக்கு மயக்கம் வருவதாக சொன்னதும், வாமிட் வருவதைப் போல இருக்கிறது என்று சொன்னதையும், அதன் பிறகு ஒரு வாரம் வரை தனக்கு லாங் பீரியட்ஸ் இருப்பதாக சொல்லி அதிக ரத்தப்போக்கினால் அவதிப்பட்டதும் அவனுக்கு ஞாபகம் வந்தது.
“அடிப்பாவி.. என் குழந்தையை அநியாயமா கொன்னுட்டல? அது உருவாகுறதுக்கு முன்னாடியே தடுக்கிறது வேற விஷயம். நீ பண்றது எல்லாத்தையும் தாண்டி, நமக்குன்னு குழந்தை வந்தா அத பெத்துக்கணும்னு உன் கிட்ட எவ்வளவு ஆசையா கேட்டேன்.. பிராமிஸ் எல்லாம் பண்ணியே டி..!! கடைசியில சத்தியமாவது சக்கரை பொங்கலாவதுனு நினைச்சு என் கிட்ட நீ பிரக்னன்ட் ஆனதை கூட மறைச்சு அநியாயமா என் குழந்தையை கொன்னுட்டல.. நீ எல்லாம் ஒரு பொண்ணா? எப்படி டி உனக்கு இப்படி பண்ண மனசு வந்துச்சு? ச்சே.. உன்ன போய் நான் உருகி உருகி இத்தனை வருஷமா லவ் பண்ணி இருக்கனே...!! நீ எனக்கு பண்ணது நம்பிக்கை துரோகம் யாழினி. நான் இதுக்காக உன்னை மன்னிக்கவே மாட்டேன்.” என்று தன் மனதிற்குள் அவளை திட்டிய சங்கர் அவளது ஸ்கேன் ரிப்போர்ட்டில் இருந்த தனது குழந்தையின் உருவத்தை அவன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறி அழுதான்.
இப்போதுதான் அவன் ஹாஸ்பிடலுக்கு சென்று சுவாதியின் குழந்தையை வேறு பரிசோதித்து விட்டு வந்ததால், அதன் தாக்கம் அவன் மனதை விட்டு இன்னும் சென்றிருக்காத நிலையில் அதற்குள் அவன் மனைவி இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டாள் என்று தெரிந்ததால் ஷங்கருக்கு யாழினி மற்றும் தினேஷின் மீது இப்போது வெறுப்பு வந்தது. கூடவே தன் குழந்தையை தன்னால் காக்க முடியவில்லை என்று நினைக்கும் போது, குற்ற உணர்ச்சியும் அவனை வாட்டியது. மொத்தத்தில் தங்களது குழந்தையை நினைத்து அங்கே ஸ்வாதி அவளது ரூமில் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருக்க, இங்கே பிறப்பதற்கு முன்பே மறைந்து போன தன் குழந்தையை நினைத்து அழுது கரைந்தான் சங்கர்.
மூன்று மணி நேரத்திற்கு பிறகு யாழினியும் தினேஷும் ஒருவருடன் ஒருவர் சிரித்து பேசியபடி தங்களது வீட்டின் முன்னே வந்து நின்றார்கள். கதவு உள்ளே இருந்து லாக் செய்யப்பட்டு இருந்ததால், தினேஷ் காலிங் பெல்லை அழுத்தினான். சுவாதிக்கு சென்று கதவைத் திறக்க மனமில்லை. அதனால் அவள் அழுத்தமாக தனது ரூமிலேயே இருந்துவிட, தன் கண்ணீரை துடைத்துவிட்டு இறுகிய முகத்துடன் சென்று கதவை திறந்தான் ஷங்கர். “திடீர்னு நமக்கு இப்படி ஒரு ஆப்பர்சூனிட்டி கிடைக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல தினேஷ். பட் நீங்க கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அதான் நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டேன். நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் டைம் கொடுங்க நைட்டுக்குள்ள நான் என் டிசிஷன் என்னன்னு சொல்றேன்.” என்று சொன்னபடி யாழினி உள்ளே வர, “ஓகே யாழினி டேக் யுவர் டைம். பொறுமையா நாளைக்கு கூட நல்லா யோசிச்சு சொல்லு.” என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றான் தினேஷ்.
செல்பவனை பார்த்து முறைத்த சங்கர் யாழினியை மேலும் கீழும் பார்த்தான். அதையெல்லாம் கவனிக்காமல் அவள் பாட்டிற்கு “எனக்கு தலை வலிக்குது. ஒரு டீ போடுறியா நான் போய் குளிச்சிட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்காக கூட காத்திருக்காமல் நேராக தனது ரூமிற்கு சென்றாள் யாழினி. அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு கோபம் பற்றி கொண்டு வர “இன்னைக்கு தான் டி எனக்கு ஒரு விஷயம் நல்லா புரியுது. நீயும் சரி.. அந்த தினேஷும் சரி.. ரெண்டு பேரும் சரியான செல்ஃபிஷ். உங்களுக்கு உங்கள பத்தி மட்டும் தான் கவலை. உங்க கூட இருக்கிறவங்களை பத்தி யோசிச்சு பார்க்குறது எல்லாம் உங்களுக்கு வராது. இப்படி இருக்கிற உங்களுக்கு எல்லாம் எதுக்கு டி கல்யாணம் குழந்தை எல்லாம்?
அப்படியே தனியா ஜாலியா உங்க இஷ்டத்துக்கு சுத்திட்டு இருக்க வேண்டியது தானே.. எதுக்கு கல்யாணம் என்ற பேருல எங்க வாழ்க்கையில வந்து மொத்தமா எங்களை நிம்மதிய இருக்க விடாம எங்க லைஃபையே கெடுத்துட்டு இருக்கீங்க? காலையில சுவாத்திய கோபமா திட்டிட்டு அவன் அப்படியே அவள விட்டுட்டு போயிட்டான். இப்ப கொஞ்சம் கூட அவளை பத்தி கவலையே இல்லாம ஜாலியா உன் கூட சிரிச்சு பேசிகிட்டு எதுவும் நடக்காத மாதிரி வீட்டுக்குள்ள வர்றான். நீ.. அவனுக்கும் மேல டி. அவங்களாவது ஒருத்தருக்கு ஒருத்தரை பிடிச்சும் பிடிக்காமலும் அரேஞ்ச் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. அவங்களுக்கு மேரேஜ் ஆகி சிக்ஸ் மன்த்ஸ் தான் ஆகியிருக்கு. ஆனா நீயும் நானும் இத்தனை வருஷமா ஒண்ணா வாழ்ந்துட்டு இருக்கோம். எப்பயாவது என்ன பத்தி ஒரு பர்சென்ட்டாவது யோசிச்சு இருக்கியா நீ? நான் யார் கிட்டயும் எதுவும் சொல்லாம தினேஷ் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு கிளம்பி வந்து இருக்கேன். அவன் கூட தானே வீட்டுக்கு வர்ற.. அப்போ நான் எங்க போனேன்னு நீ யோசிக்கல இல்ல..
அவ்வளவு தான் டி நீ. நான் ஆபீஸ்ல இருந்து கிளம்பி வந்து எவ்வளவு நேரம் ஆகுது.. ஒரு வேலை எனக்கு ஏதாவது ஆகி இருந்தா? ஒரு கால் பண்ணி நான் ஏன் சீக்கிரம் கிளம்பி போயிட்டேன்னு கூட கேக்கணும்ன்னு உனக்கு தோணலை இல்ல யாழினி.. இப்ப வரைக்கும் நடந்தது எல்லாத்தையும் யோசித்துப் பார்த்தா நான் தாண்டி முட்டாள் தனமா எதையும் புரிஞ்சுக்காம இருந்திருக்கேன். என்ன லவ் பண்றேன்னு முதல்ல சொன்னது மட்டும் தான் நீ. இத்தனை வருஷமா நான் மட்டும்தான் உன்னை ஒன் சைடா உன்ன லவ் பண்ணிட்டு இருந்திருக்கேன்.
நான் உனக்கு கொடுத்த லவ்ல.. ஒரு பர்சென்ட் கூட எனக்கு திருப்பி கிடைக்கலையே டி.. ச்சீ... என்ன மயிறு வாழ்க்கை டா இது? நீ போக போக சரியாயிடுவன்னு நான் நினைச்சேன். ஆனா எதுவும் மாறாதுன்னு எனக்கு இப்பதாண்டி தெரியுது. இந்த அறிவு மட்டும் முன்னாடியே வந்திருந்தா, சத்தியமா உனக்கு ஓகே சொல்லி இருக்கவே மாட்டேன்.” என்று நினைத்த சங்கர் கலங்கிய கண்களுடன் கிச்சனுக்கு சென்று டீ போட்டுக் கொண்டு தனது ரூமிற்கு சென்றான். யாழினி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தாள்.
சுவாதியின் அறையில்..
டேபிளில் இருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்த தினேஷ் “ஓஹோ.. மேடம் நான் வராமயே ஹாஸ்பிடலுக்கு போய் ஸ்கேன் பண்ணிட்டு வந்துட்டீங்க போல! அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சு.. அப்போ டிசிஷன் எடுக்கிற அளவுக்கு தைரியம் வந்துருச்சா? என்ன டிசைட் பண்ணி இருக்கீங்க மேடம்?” என்று அவளைப் பார்த்து திமிராக கேட்க, மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு தானும் அவனைத் திமிராக பார்த்த ஸ்வாதி “நீ என் குழந்தைக்கு அப்பனா இருக்கறதுனால உனக்கு ஒரு லாஸ்ட் சான்ஸ் குடுக்கலாம்ன்னு நினைக்கிறேன். நம்ம ஃபேமிலில யாரும் பஞ்சத்தில அடிபட்டு பரதேசி மாதிரி சுத்திட்டு இருக்கல. எல்லார் கிட்டயும் சேவிங்ஸ் இருக்கு. முக்கியமா நான் எனக்காக சேர்த்து வச்சிருக்கேன். இன்னொரு த்ரீ இயர்ஸ் நான் வேலைக்கு போகலைன்னாலும், என்னையும் என் குழந்தையையும் என்னால பாத்துக்க முடியும்.
நான் என் jobஐ quit பண்றதா டிசைட் பண்ணிருக்கேன். என் குழந்தை பிறந்து கொஞ்சம் வளர்ந்து ஸ்கூலுக்கு போனதுக்கு அப்புறம் மறுபடியும் வேற ஏதாவது ஆபீஸ்க்கு ஜாப் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். இது தான் என் டிசிஷன். யாருக்காகவும் எதுக்காகவும் என்னால என் குழந்தையை விட்டுக் கொடுக்க முடியாது. உனக்கு இந்த குழந்தையும் நானும் வேணாம்னு தோணுச்சுன்னா, நீ என்ன தாராளமா டிவர்ஸ் பண்ணிக்கலாம். எனக்குன்னு யாருமே இல்லைன்னாலும் பரவால்ல. எனக்கு என் குழந்தை போதும். என் குழந்தைக்கு அம்மா மட்டும் போதும்.” என்று உறுதியாக சொல்லி விட்டாள்.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-47
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-47
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.