சங்கருடன் வீடு வந்து சேர்ந்தாள் சுவாதி. எப்படியும் அவள் சரியாக சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்று நினைத்த சங்கர் அவளுக்கு பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தான். அதை அவள் அமைதியாக குடித்துக் கொண்டிருக்க, “நான் லாஸ்ட்டா ஒரு தடவ தினேஷ் கிட்ட இந்த குழந்தையை பத்தி பேசிப் பார்க்கலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?” என்று கேட்க, “நான் எதுவும் நினைக்கல சங்கர். நான் என்ன பேசினாலும் அத கேட்கிற மைண்ட் செட்டுல அவன் இல்லை. அவன் என்ன நினைக்கிறானோ அதுதான் கரெக்ட். அதை மட்டும் தான் நான் பண்ணனும். என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது. நான் காலையில எவ்ளோ கெஞ்சினேன் தெரியுமா? இருக்கிறதுனா இரு. போறதுன்னா டிவர்ஸ் கொடுத்துட்டு போன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு போயிட்டான். அதான் உங்க கிட்ட ஆல்ரெடி சொன்னனே.. இதுக்கு மேல நான் அவன் கிட்ட என்ன பேச முடியும்னு நீங்க நினைக்கிறீங்க?” என்று கொஞ்சம் கோபமாக கேட்டாள் சுவாதி.
பெரு மூச்சு விட்ட சங்கர் “அதுக்காக அப்படியே விட முடியுமா? இதுல உன்ன விட பாதிக்கப்படப்போறது உன் குழந்தை தான். ஒரு குழந்தை சந்தோஷமா வளர்றத்துக்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே அவங்க கூட இருக்கணும் சுவாதி. இப்ப என்ன தினேஷுக்கு.. உன்னால அவர் கரியர்ல எதுவும் இஷ்யூஸ் வந்தா, அவருக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கிற இந்த டைம்ல அது பெரிய பிளாக் மார்க் ஆகிடும்னு அவர் பயப்படுறாரு அதானே.. நீ வேலைக்கு போனா தானே பிரச்சனை..
இப்பவே பேப்பர் போட்டுவிடு. 2 மந்த்ஸ் நோட்டிஸ் பீரியட் வொர்க் பண்ணிட்டு ரிலீவ் ஆகிடு. அதுக்கப்புறம் உனக்கும் தினேஷுக்கும் மேரேஜ் ஆனது தெரிந்தாலும் பிரச்சனை இல்லையே! இந்த சென்னையில அந்த ஒரு ஆபீஸ் மட்டும் தான் இருக்கா? அப்புறமா குழந்தை பிறந்து ஓரளவுக்கு வளர்ந்ததற்கு அப்புறம் நீ வேற பக்கம் கூட ஜாப் ட்ரை பண்ணலாம். இப்படி இவ்ளோ ஆப்ஷன்ஸ் இருக்கும்போது, எதுக்கு டிவார்சை பத்தி எல்லாம் யோசிக்கணும்? அவர் இத பத்தி யோசிக்கலைன்னாலும், உனக்காகவும் உங்களுக்கு பொறக்க போற குழந்தைக்காகவும் நீயாவது யோசிக்கணும் சுவாதி.” என்று பொறுமையாக சொன்னான்.
“எனக்கு அவர மாதிரி அப்படியே கரியர்ல முன்னேறனும் வேலைக்கு போயே ஆகணும்னு எல்லாம் எதுவும் இல்ல சங்கர். நான் குடும்பம் குழந்தைங்கன்னு சாதாரணமா வாழனும்னு தான் ஆசைப்பட்டேன். யாழினி சென்னைக்கு வேலைக்கு வந்ததால, நானும் வீட்டிலயே இருக்கிறதுக்கு சென்னைக்கு போனா நல்லா இருக்குமேன்னு நினைச்சு அவ பின்னாடியே இங்க வந்துட்டேன். அவ்ளோ தான் எனக்கும் இந்த ஊருக்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப். நீங்க சொல்ற ஆப்ஷன்ஸ் எல்லாத்தையும் நான் யோசிப்பேன். ஆனா ஒரு செகண்ட் என்ன பத்தி யோசிச்சு, எனக்காக இந்த ஆப்ஷன்ஸ் கொடுக்குறதுக்கு கூட தினேஷ் ரெடியா இல்லையே! அதுதான் எனக்கு இன்னும் கடுப்பா இருக்கு.” என்று சுவாதி சொல்ல, “அட விடு டி. சும்மா எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாத. உடனே அவர் உன்ன விட்டுட்டு போகணும்னு நினைச்சாலும், அவங்க வீட்ல விட்டுருவாங்களா? இன்னும் நடக்க வேண்டியது எவ்வளவு இருக்கு! நீ பொறுமையா இரு பாத்துக்கலாம். நைட்டு அவர் வந்ததுக்கு அப்புறம் நான் சொன்னதை பத்தி பேசிப் பாரு. அவர் ஓகே சொல்றதுக்கு கூட சான்ஸ் இருக்கு இல்ல!” என்றான் சங்கர். “ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்.” என்று சலிப்புடன் சொன்னாள் ஸ்வாதி.
பின் அவள் தனது ரூமிற்கு சென்றுவிட, சங்கரும் அவனது ரூம் கதவை திறந்தான். அப்போது அவனை முந்திக் கொண்டு ஒரு சுண்டலி அவன் ரூம்மிற்குள் ஓடியது. அதை கவனித்த சங்கர் “டேய் குட்டி பையா.. இன்னும் இந்த வீட்டை விட்டு போகலையா நீ? நானும் சரி உன்னை கொல்ல வேண்டாமேன்னு நெனச்சு பாவம் பார்த்து ஒரு வாரமா போனா போகுதுன்னு உன்னை விட்டுட்டு இருக்கேன். ஆனா நீ இங்கனைக்குள்ளயே சுத்திட்டு இருக்க! இன்னைக்கு உன்ன புடிச்சு என் கையாலயே நசுக்கி கொல்றேன் பாரு!” என்று சொல்லிவிட்டு அந்த எலியின் பின்னே தனது அறைக்குள் ஓடினான். Tom and Jerry போல அவர்கள் இருவரும் அந்த அறைக்குள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது கட்டிலில் ஏறி ஜன்னல் கம்பிகளில் தாவி அவர்களது பீரோவின் மீது ஏறிய அந்த சுண்டெலி நடுவில் இருந்த சந்திற்குள் புகுந்து கொண்டது. அதை வெளியில் வர வைப்பதற்காக தன் முன்னே இருந்த ஸ்டீல் பீரோவை பிடித்து லேசாக ஆட்டினான் சங்கர். பின்னே இருந்து அந்த எலி கீச் கீச் என்று சத்தம் எழுப்பியதே தவிர, வெளியில் வருவதாக தெரியவில்லை. “ஓஹோ என் கிட்டயே விளையாட்டு காட்றியா நீ? நீ எங்க போனாலும் இன்னைக்கு நான் உன்ன விட மாட்டேன் டா. உனக்கு என் கையால தான் சாவு.” என்று முணுமுணுத்த சங்கர் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த பீரோவை முன்னே இழுத்தான். அதனால் பயந்து போய் அந்த எலி அவனது கால்களுக்கு நடுவில் புகுந்து வெளியே ஹாலுக்கு ஓடிச் சென்று விட்டது.
ஹாலுக்கு சென்றதால் பிரச்சினை இல்ல. இனி மருந்து வைத்து அதைக் கொன்று விடலாம் என்று நினைத்த சங்கர் தனது அறையின் கதவை லாக் செய்துவிட்டு பீரோவை இருந்த இடத்தில் வைப்பதற்காக தன் பலம் கொண்டு நகர்த்திக் கொண்டிருந்தான். அப்போது அவன் தலையில் நங்கென்று ஒரு கவர் வந்து விழுந்தது. அதனால் அவன் கீழே குனிந்து பார்க்க, ஏதோ ஒரு ஃபைல் பாலித்தீன் கவரில் வைக்கப்பட்டு கீழே விழுந்திருந்தது. அதை தன் கையில் எடுத்துப் பார்த்த சங்கர் “என்ன கவர் இது.. இந்த ரூம்ல எனக்கு தெரியாம? யாழினி எதுவும் மேல தூக்கி வச்சிருப்பாளோ!” என்று நினைத்து அதை எடுத்து திறந்து பார்த்தான். அதற்குள் மிஸ்ஸஸ் யாழினி சங்கரநாராயணன் என்று பெயரிடப்பட்டு இருந்த ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் இருந்தது. அவன் சுவாதியை அழைத்துச் சென்ற அதே ஹாஸ்பிடல் தான் அது. அதனால் பதட்டம் அடைந்த சங்கர் உடனே அதை திறந்து படித்து பார்த்தான்.
அதற்குள் ஆறு மாதத்திற்கு முன்பு யாழினி ஹாஸ்பிடலுக்கு சென்று செக் செய்த போது டாக்டர் கொடுத்த ரிப்போர்ட் இருந்தது. அதில் யாழினி பிரக்னண்ட்டாக இருப்பதாக போட்டிருந்தது. அப்போது அதை பார்த்திருந்தால் அவன் சந்தோஷப்பட்டு இருப்பான். இப்போது யாழினி கர்ப்பமாக இல்லை. அப்படி என்றால்? “நீ என் குழந்தையை அபார்ஷன் பண்ணிட்டியா யாழினி?” என்று யோசித்த சங்கருக்கு மனம் வலித்தது. அவர்கள் இருவரும் ஒவ்வொரு முறை ஒன்றாக இருக்கும் போதும், தான் கருத்தரிக்கக் கூடாது என்பதற்காக யாழினி மாத்திரைகள் எடுத்துக் கொள்வாள். “ஏய் இதெல்லாம் வேணாம் டி. குழந்தை பொறந்தா ரெணடு மூணு வருஷம் தானே.. அது ஸ்கூலுக்கு போற வரைக்கும் நீ ஜாலியா வீட்ல இரு. உன்னையும் நம்ம குழந்தையையும் நான் பாத்துக்க மாட்டனா? எதுக்கு வேலை வேலைன்னு அலையுற?” என்று சங்கர் ஒரு முறை கேட்டிருக்க, “நம்ம இத பத்தி ஆல்ரெடி நிறைய தடவை பேசி டிஸ்கஸ் பண்ணிட்டோம் சங்கர். மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமா உனக்கு?” என்று எரிச்சலுடன் கேட்டாள் அவள்.
அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக கட்டிலில் படுத்திருந்தாள். அவளை தன் பக்கம் இழுத்து படுக்க வைத்த சங்கர் “இந்த மாதிரி மாத்திரை போட்டாலும், காண்டம் யூஸ் பண்ணினாலும் 100% safe இல்ல தெரியுமா? அப்போ கண்டிப்பா அட்லீஸ்ட் 0.001% ஆவது நீ பிரக்னன்ட் ஆகறதுக்கு சான்ஸ் இருக்கு. அப்படி மட்டும் நடந்துச்சுன்னா எப்படி இருக்கும்? எத்தனை sperms உள்ள போனாலும் ஏதாவது ஒன்னு தான் குழந்தையா மாறும்.
அதுலையும் காண்டம் யூஸ் பண்ணி, குழந்தை வேண்டாம்னு மாத்திரை எல்லாம் சாப்பிட்டு அப்படியும் நீ பிரக்னண்ட் ஆகி குழந்தை வந்தா.. அது அதிசயம் டி. கடவுளே நமக்குன்னு ஒரு குழந்தைய கொடுக்கறதுக்கு ஆசைப்பட்டாருன்னு அர்த்தம். எனக்கு என்னமோ நமக்கு அப்படித்தான் நடக்கும்னு தோணுது. நீ என்ன நினைக்கிற?” என்று கேட்க, “நீ ஒரு லூசுன்னு நினைக்கிறேன். எப்படி உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது?” என்று கிண்டலாக கேட்டாள் யாழினி. “சரி நான் லூசாவே இருந்துட்டு போறேன் பரவால்ல. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. ஒருவேளை நீ இப்படி எல்லாம் பண்ணியும், தெரியாம பிரகனண்ட் ஆகிட்டேனா.. எனக்காக, நமக்காக நீ அந்த குழந்தையை பெத்துக்கணும் ஓகேவா? இது தான் God's Timingன்னு நீ ஏத்துக்கணும் ஓகேவா?” என்று ஆர்வமான முகத்துடன் கேட்டான் சங்கர்.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
பெரு மூச்சு விட்ட சங்கர் “அதுக்காக அப்படியே விட முடியுமா? இதுல உன்ன விட பாதிக்கப்படப்போறது உன் குழந்தை தான். ஒரு குழந்தை சந்தோஷமா வளர்றத்துக்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே அவங்க கூட இருக்கணும் சுவாதி. இப்ப என்ன தினேஷுக்கு.. உன்னால அவர் கரியர்ல எதுவும் இஷ்யூஸ் வந்தா, அவருக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கிற இந்த டைம்ல அது பெரிய பிளாக் மார்க் ஆகிடும்னு அவர் பயப்படுறாரு அதானே.. நீ வேலைக்கு போனா தானே பிரச்சனை..
இப்பவே பேப்பர் போட்டுவிடு. 2 மந்த்ஸ் நோட்டிஸ் பீரியட் வொர்க் பண்ணிட்டு ரிலீவ் ஆகிடு. அதுக்கப்புறம் உனக்கும் தினேஷுக்கும் மேரேஜ் ஆனது தெரிந்தாலும் பிரச்சனை இல்லையே! இந்த சென்னையில அந்த ஒரு ஆபீஸ் மட்டும் தான் இருக்கா? அப்புறமா குழந்தை பிறந்து ஓரளவுக்கு வளர்ந்ததற்கு அப்புறம் நீ வேற பக்கம் கூட ஜாப் ட்ரை பண்ணலாம். இப்படி இவ்ளோ ஆப்ஷன்ஸ் இருக்கும்போது, எதுக்கு டிவார்சை பத்தி எல்லாம் யோசிக்கணும்? அவர் இத பத்தி யோசிக்கலைன்னாலும், உனக்காகவும் உங்களுக்கு பொறக்க போற குழந்தைக்காகவும் நீயாவது யோசிக்கணும் சுவாதி.” என்று பொறுமையாக சொன்னான்.
“எனக்கு அவர மாதிரி அப்படியே கரியர்ல முன்னேறனும் வேலைக்கு போயே ஆகணும்னு எல்லாம் எதுவும் இல்ல சங்கர். நான் குடும்பம் குழந்தைங்கன்னு சாதாரணமா வாழனும்னு தான் ஆசைப்பட்டேன். யாழினி சென்னைக்கு வேலைக்கு வந்ததால, நானும் வீட்டிலயே இருக்கிறதுக்கு சென்னைக்கு போனா நல்லா இருக்குமேன்னு நினைச்சு அவ பின்னாடியே இங்க வந்துட்டேன். அவ்ளோ தான் எனக்கும் இந்த ஊருக்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப். நீங்க சொல்ற ஆப்ஷன்ஸ் எல்லாத்தையும் நான் யோசிப்பேன். ஆனா ஒரு செகண்ட் என்ன பத்தி யோசிச்சு, எனக்காக இந்த ஆப்ஷன்ஸ் கொடுக்குறதுக்கு கூட தினேஷ் ரெடியா இல்லையே! அதுதான் எனக்கு இன்னும் கடுப்பா இருக்கு.” என்று சுவாதி சொல்ல, “அட விடு டி. சும்மா எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாத. உடனே அவர் உன்ன விட்டுட்டு போகணும்னு நினைச்சாலும், அவங்க வீட்ல விட்டுருவாங்களா? இன்னும் நடக்க வேண்டியது எவ்வளவு இருக்கு! நீ பொறுமையா இரு பாத்துக்கலாம். நைட்டு அவர் வந்ததுக்கு அப்புறம் நான் சொன்னதை பத்தி பேசிப் பாரு. அவர் ஓகே சொல்றதுக்கு கூட சான்ஸ் இருக்கு இல்ல!” என்றான் சங்கர். “ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்.” என்று சலிப்புடன் சொன்னாள் ஸ்வாதி.
பின் அவள் தனது ரூமிற்கு சென்றுவிட, சங்கரும் அவனது ரூம் கதவை திறந்தான். அப்போது அவனை முந்திக் கொண்டு ஒரு சுண்டலி அவன் ரூம்மிற்குள் ஓடியது. அதை கவனித்த சங்கர் “டேய் குட்டி பையா.. இன்னும் இந்த வீட்டை விட்டு போகலையா நீ? நானும் சரி உன்னை கொல்ல வேண்டாமேன்னு நெனச்சு பாவம் பார்த்து ஒரு வாரமா போனா போகுதுன்னு உன்னை விட்டுட்டு இருக்கேன். ஆனா நீ இங்கனைக்குள்ளயே சுத்திட்டு இருக்க! இன்னைக்கு உன்ன புடிச்சு என் கையாலயே நசுக்கி கொல்றேன் பாரு!” என்று சொல்லிவிட்டு அந்த எலியின் பின்னே தனது அறைக்குள் ஓடினான். Tom and Jerry போல அவர்கள் இருவரும் அந்த அறைக்குள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது கட்டிலில் ஏறி ஜன்னல் கம்பிகளில் தாவி அவர்களது பீரோவின் மீது ஏறிய அந்த சுண்டெலி நடுவில் இருந்த சந்திற்குள் புகுந்து கொண்டது. அதை வெளியில் வர வைப்பதற்காக தன் முன்னே இருந்த ஸ்டீல் பீரோவை பிடித்து லேசாக ஆட்டினான் சங்கர். பின்னே இருந்து அந்த எலி கீச் கீச் என்று சத்தம் எழுப்பியதே தவிர, வெளியில் வருவதாக தெரியவில்லை. “ஓஹோ என் கிட்டயே விளையாட்டு காட்றியா நீ? நீ எங்க போனாலும் இன்னைக்கு நான் உன்ன விட மாட்டேன் டா. உனக்கு என் கையால தான் சாவு.” என்று முணுமுணுத்த சங்கர் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த பீரோவை முன்னே இழுத்தான். அதனால் பயந்து போய் அந்த எலி அவனது கால்களுக்கு நடுவில் புகுந்து வெளியே ஹாலுக்கு ஓடிச் சென்று விட்டது.
ஹாலுக்கு சென்றதால் பிரச்சினை இல்ல. இனி மருந்து வைத்து அதைக் கொன்று விடலாம் என்று நினைத்த சங்கர் தனது அறையின் கதவை லாக் செய்துவிட்டு பீரோவை இருந்த இடத்தில் வைப்பதற்காக தன் பலம் கொண்டு நகர்த்திக் கொண்டிருந்தான். அப்போது அவன் தலையில் நங்கென்று ஒரு கவர் வந்து விழுந்தது. அதனால் அவன் கீழே குனிந்து பார்க்க, ஏதோ ஒரு ஃபைல் பாலித்தீன் கவரில் வைக்கப்பட்டு கீழே விழுந்திருந்தது. அதை தன் கையில் எடுத்துப் பார்த்த சங்கர் “என்ன கவர் இது.. இந்த ரூம்ல எனக்கு தெரியாம? யாழினி எதுவும் மேல தூக்கி வச்சிருப்பாளோ!” என்று நினைத்து அதை எடுத்து திறந்து பார்த்தான். அதற்குள் மிஸ்ஸஸ் யாழினி சங்கரநாராயணன் என்று பெயரிடப்பட்டு இருந்த ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் இருந்தது. அவன் சுவாதியை அழைத்துச் சென்ற அதே ஹாஸ்பிடல் தான் அது. அதனால் பதட்டம் அடைந்த சங்கர் உடனே அதை திறந்து படித்து பார்த்தான்.
அதற்குள் ஆறு மாதத்திற்கு முன்பு யாழினி ஹாஸ்பிடலுக்கு சென்று செக் செய்த போது டாக்டர் கொடுத்த ரிப்போர்ட் இருந்தது. அதில் யாழினி பிரக்னண்ட்டாக இருப்பதாக போட்டிருந்தது. அப்போது அதை பார்த்திருந்தால் அவன் சந்தோஷப்பட்டு இருப்பான். இப்போது யாழினி கர்ப்பமாக இல்லை. அப்படி என்றால்? “நீ என் குழந்தையை அபார்ஷன் பண்ணிட்டியா யாழினி?” என்று யோசித்த சங்கருக்கு மனம் வலித்தது. அவர்கள் இருவரும் ஒவ்வொரு முறை ஒன்றாக இருக்கும் போதும், தான் கருத்தரிக்கக் கூடாது என்பதற்காக யாழினி மாத்திரைகள் எடுத்துக் கொள்வாள். “ஏய் இதெல்லாம் வேணாம் டி. குழந்தை பொறந்தா ரெணடு மூணு வருஷம் தானே.. அது ஸ்கூலுக்கு போற வரைக்கும் நீ ஜாலியா வீட்ல இரு. உன்னையும் நம்ம குழந்தையையும் நான் பாத்துக்க மாட்டனா? எதுக்கு வேலை வேலைன்னு அலையுற?” என்று சங்கர் ஒரு முறை கேட்டிருக்க, “நம்ம இத பத்தி ஆல்ரெடி நிறைய தடவை பேசி டிஸ்கஸ் பண்ணிட்டோம் சங்கர். மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமா உனக்கு?” என்று எரிச்சலுடன் கேட்டாள் அவள்.
அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக கட்டிலில் படுத்திருந்தாள். அவளை தன் பக்கம் இழுத்து படுக்க வைத்த சங்கர் “இந்த மாதிரி மாத்திரை போட்டாலும், காண்டம் யூஸ் பண்ணினாலும் 100% safe இல்ல தெரியுமா? அப்போ கண்டிப்பா அட்லீஸ்ட் 0.001% ஆவது நீ பிரக்னன்ட் ஆகறதுக்கு சான்ஸ் இருக்கு. அப்படி மட்டும் நடந்துச்சுன்னா எப்படி இருக்கும்? எத்தனை sperms உள்ள போனாலும் ஏதாவது ஒன்னு தான் குழந்தையா மாறும்.
அதுலையும் காண்டம் யூஸ் பண்ணி, குழந்தை வேண்டாம்னு மாத்திரை எல்லாம் சாப்பிட்டு அப்படியும் நீ பிரக்னண்ட் ஆகி குழந்தை வந்தா.. அது அதிசயம் டி. கடவுளே நமக்குன்னு ஒரு குழந்தைய கொடுக்கறதுக்கு ஆசைப்பட்டாருன்னு அர்த்தம். எனக்கு என்னமோ நமக்கு அப்படித்தான் நடக்கும்னு தோணுது. நீ என்ன நினைக்கிற?” என்று கேட்க, “நீ ஒரு லூசுன்னு நினைக்கிறேன். எப்படி உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது?” என்று கிண்டலாக கேட்டாள் யாழினி. “சரி நான் லூசாவே இருந்துட்டு போறேன் பரவால்ல. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. ஒருவேளை நீ இப்படி எல்லாம் பண்ணியும், தெரியாம பிரகனண்ட் ஆகிட்டேனா.. எனக்காக, நமக்காக நீ அந்த குழந்தையை பெத்துக்கணும் ஓகேவா? இது தான் God's Timingன்னு நீ ஏத்துக்கணும் ஓகேவா?” என்று ஆர்வமான முகத்துடன் கேட்டான் சங்கர்.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-46
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-46
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.