அவர்கள் மூவருக்குமே அவர்களைத் தவிர அங்கே வேறு யாரும் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இல்லை என்பதால், மூவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். சங்கரைப் போல யாழினியும் இதற்கு மேல் தனது அத்தைக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று நினைத்து ஒரு நெட் சென்டரில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலைக்கு சென்றாள். ஒரு நாள் அவள் வேலை முடிந்து அவள் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு சென்று கொண்டு இருக்கும் போது அவளை நான்கு ரவுடிகள் பின் தொடர்ந்து ஓடி வந்தார்கள்.
அதனால் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்த யாழினி என்ன செய்வது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தவித்தாள். இருந்த பயத்தில் எப்படியாவது இவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று இருந்தது அவளுக்கு. ஆனால் அவள் இருந்த சாலையில் ஒரு ஈ, காக்கா கூட பறக்கவில்லை. இதில் சென்று அவள் யாரிடம் உதவி கேட்க முடியும்? அப்போது அவள் மனதில் தோன்றிய ஒரே பெயர் சங்கர் தான். அதனால் நொடியும் தாமதிக்காமல் சங்கருக்கு கால் செய்த யாழினி “சங்கர்.. சங்கர்.. ப்ளீஸ் சங்கர் என்ன காப்பாத்து. யாருன்னே தெரியல நாலு பசங்க என்னை துரத்திட்டு வர்றாங்க. எனக்கு பயமா இருக்கு டா. எனக்கு உன்ன விட்டா இங்க வேற யார தெரியும்? அதான் உனக்கு கால் பண்ணேன். ப்ளீஸ்.. வந்து என்னை காப்பாத்து சங்கர்.” என்று அழுது கொண்டே சொன்னாள்.
அவள் எங்கே இருக்கிறாள் என்று கேட்டு தெரிந்து கொண்ட சங்கர் உடனே தனது செகண்ட் ஹேண்ட் பல்சர் பைக்கில் அவளது லொகேஷனை நோக்கி பறந்து சென்று அவளைப் பின் தொடர்ந்து வந்தவர்களை அடித்து வெளுத்து யாழினியை காப்பாற்றி பத்திரமாக அவளைக் கொண்டு போய் ஹாஸ்டலில் இறக்கிவிட்டு வந்தான். அந்த நொடியில் தன் வாழ்க்கையில் சங்கரைப் போன்ற ஒருவன் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்ந்து கொண்ட யாழினி, தொடர்ந்து ஒரு வாரம் அவனைப் பற்றி யோசித்தாள். அவளுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. அவனை கண்டிப்பாக இழந்து விடக் கூடாது என்று தோன்றியது.
அதனால் அடுத்த நாளே காலேஜுக்கு சென்று “இன்னைக்கு ஈவினிங் நம்ம தியேட்டருக்கு போலாமா? என்னோட ட்ரீட்.” என்று யாழினி சுவாதிக்கு தெரியாமல் அவனிடம் கேட்க, “ம்ம்.. இன்னைக்கு ஓனர் வெளியூருக்கு போறாரு. சோ ஷாப்ல பெருசா வேலை இருக்காது. போலாம். நம்ம கூட சுவாதியும் வர்றாளா?” என்று ஷங்கர் கேட்க, “இல்ல அவ நாளைக்கு இருக்க டெஸ்ட்க்கு படிக்கணும் வர முடியாதுன்னு சொல்லிட்டா. சோ நீயும் நானும் மட்டும் தான்.” என்று பொய் சொன்ன யாழினி அவனுடன் தியேட்டருக்கு சென்றாள். நடுவில் இன்டர்வெல் வரும்போது, அவர்கள் இருவரும் தியேட்டரில் உள்ள கேண்டின்கு சென்று பாப்கார்ன் வாங்கினார்கள். அதை தன் கையில் வைத்துக் கொண்டு அவன் முன்னே மண்டியிட்டு தரையில் அமர்ந்த யாழினி “எனக்கு பாப்கார்ன் ரொம்ப பிடிக்கும். இப்போ அதைவிட அதிகமா உன்ன புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். உன்ன பார்க்கும்போது எல்லாம், எனக்கு என்னமோ என் வீட்ல இருக்கிற என் ஃபேமிலியை சேர்ந்த ஒருத்தர் என் கூட இருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் வருது சங்கர். அது லைஃப் லாங் வேணும்னு நான் ஆசைப்படுறேன். எப்பயும் உனக்காக நானும் எனக்காக நீயும் இருக்கணும். Will you marry me? என் கிட்ட நிறைய காசு பணம் இருந்திருந்தா, பெருசா ஏதாவது வாங்கி உன்ன சர்ப்ரைஸ் பண்ணி ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன். இப்போதைக்கு என் கிட்ட இது தான் இருக்கு. உன் முன்னாடி நான் இருக்கேன். என்னையும் இந்த பாப்கார்னையும் அக்சப்ட் பண்ணுவியா?” என்று க்யூட்டாக கேட்டாள்.
அப்போது அங்கே படம் பார்க்க வந்திருந்த அனைவரும் அந்த காட்சியை பார்த்துவிட்டு அத்தனை அழகாக இருந்த யாழினி அவளுக்கு நேர் மாறாக பார்ப்பதற்கே காட்டானை போல சாதாரணமாக இருந்த ஷங்கரை காதலிப்பதாக சொல்வதை பெரிய விஷயம் என்று நினைத்தார்கள். அதனால் அனைவரும் “ஓகே சொல்லு ப்ரோ.. இந்த மாதிரி பொண்ணு எல்லாம் யாருக்காவது கிடைக்குமா? SAY YES.. SAY YES.. SAY YES..!!” என்று கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் சொன்னதைப் போலவே அவன் படிக்கும் காலேஜில் இருக்கும் மிகவும் அழகான பெண்கள் யாழினியும் ஒரத்தி. அவள் பின்னே சுற்றாத ஆண்களே இல்லை என்று கூட சொல்லலாம்.
அத்தனை அழகான பெண், அதுவும் இத்தனை நாட்களாக தனக்கு தோழியாக இருந்தவள். இருவருக்கும் மற்றொருவரின் நிலையைப் பற்றி நன்றாக தெரியும். அப்படி இருந்தும் அவள் தன்னை காதலிக்கிறாள் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? அதுவும் இப்போதே திருமணம் செய்து கொள்ளலாமா? என்று வேறு கேட்கிறாள். அப்படி என்றால் இவளுக்கு தன் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கும்? என்றெல்லாம் யோசித்த சங்கருக்கு “நான் இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணது இல்லை யாழினி. நான் இருக்கிற சிச்சுவேஷனுக்கு அப்படி நினைச்சது கூட இல்ல. ஆனா ஒரு பொண்ணு நீ என்னை நம்பி இத்தனை பேர் முன்னாடி வெட்கத்தை விட்டு என்னை லவ் பண்றதா சொல்லும்போது, என்னால எப்படி உன்னை வேணாம்னு சொல்ல முடியும்? நான் பார்த்த வரைக்கும் நீ எல்லாத்துக்கும் அடம் பிடிக்கிற ஒரு குழந்தை மாதிரி. இதுவரைக்கும் உன்னை நான் தப்பா நினைச்சதே இல்ல. ஆனா இப்போ உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்குன்னு ஒரு ஃபேமிலிய உருவாக்கி உன் கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும்னு ஆசையா இருக்கு. ஒரே செகண்ட்ல என்னையே நீ இப்படி யோசிக்க வச்சுட்ட இல்ல!
நான் முடிவு பண்ணிட்டேன் டி. நீ எனக்கு தான். நீதான் என் பொண்டாட்டி. உனக்குன்னு யாருமே இல்லன்னு எப்பவும் சொல்லுவல.. இந்த செகண்ட்ல இருந்து நான் சாகுற வரைக்கும் உனக்காக கண்டிப்பா நான் இருப்பேன். இது எனக்கு நானே செஞ்சிக்கிற ப்ராமிஸ்.” என்று தோன்ற, அவள் கையில் இருந்த பாப்கார்னை வாங்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து அவளை மேலே எழுப்பி “ஓகே மிஸஸ் சங்கர், உங்க ப்ரோபோசல் accepted.” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவன் தன் காதலை ஏற்றுக் கொண்டதால் மகிழ்ந்த யாழினி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அன்றில் இருந்து தொடங்கியது அவர்களது காதல் கதை.
வழக்கம்போல இரவு தனது ஹாஸ்டல் ரூமிற்கு சென்ற யாழினி சுவாதியை கட்டிப்பிடித்து நடந்ததை அவளிடம் சொல்லி “ஐயோ. எனக்கு இப்ப எப்படி இருக்கு தெரியுமா சுவாதி? அப்படியே ஜாலியா வானத்தில பறக்கிற மாதிரி இருக்கு. இப்ப என்ன விட யாரும் இந்த worldல சந்தோசமாவே இருக்க மாட்டாங்கன்னு தோணுது. என்னமோ சங்கர் எனக்கு கிடைச்சதுனால எல்லாமே கிடைச்ச மாதிரி ஒரு ஃபீல் வருது. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்றாள். அவள் பேச பேச சுவாதியின் கண்கள் கலங்கியது. அவளுக்கு உடனே கத்தி அழ வேண்டும் போல இருந்தது. இருப்பினும் யாழினியின் முன்னே தன் கவலையை வெளி காட்டக் கூடாது என்று நினைத்து “சூப்பர் யாழினி. சங்கர் உனக்கு ஓகே சொல்லுவாருன்னு நான் எதிர்பார்க்கல. எனிவேஸ்.. எப்பயும் நீங்க ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கணும்.” என்று அனைத்தையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்.
செல்லமாக அவள் கணங்களைப் பிடித்து கிள்ளிய யாழினி “இதுவரைக்கும் எனக்குன்னு எங்க அத்தை ஃபேமிலிக்கு அப்புறம் நீ மட்டும் தான் இருந்த. இப்போ எனக்குன்னு என் சங்கர் இருக்கான். நீங்க ரெண்டு பேரும் எனக்கு போதும் சுவாதி. வேற எதுவும் வேண்டாம். அவன் என் கைய புடிச்சு எழுப்பி விட்டு என்ன மிஸ்ஸஸ் ஷங்கர்னு கூப்பிடும்போது எப்படி இருந்துச்சு தெரியுமா? நெஜமாவே எங்களுக்கு மேரேஜ் ஆன மாதிரி ஒரு ஃபீல் வந்துச்சு. அப்ப தான் அவனை நான் எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு எனக்கே புரிஞ்சது. Finally யாழினி ஹேப்பி.. ரொம்ப ஹேப்பி!” என்றாள்.
உண்மையில் முதலில் சங்கர் அந்த கல்லூரியில் சந்தித்தது சுவாதியைத் தான். அவளை ஒரு பட்டிக்காட்டு அசிங்கமான கிராமத்து பெண்ணாக அனைவரும் பார்த்து கிண்டல் செய்யும்போது, ஒரு தோழியாக யாழினி அவள் அருகில் நின்றிருந்தாலும் யார் என்று தெரியாத சங்கர் அதுவும் ஒரு ஆண் தனக்காக மற்றவர்களிடம் சண்டை போட்டு தன்னிடமும் “மத்தவங்க சொல்றதுக்காக நீ அழகா இல்லன்னு நீயே நினைச்சுக்காத. நான் பார்த்த பொண்ணுங்கள்லயே நீ ரொம்ப அழகானவ சுவாதி. அழகுன்றது வெளித்தோற்றத்தை மட்டும் வச்சு சொல்றது கிடையாது. நீ, உன் மனசு எல்லாமே அழகு தான்.” என்று சொல்லும்போது அவளுக்கு அவன் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. காலப்போக்கில் அது காதலாகவும் மலர்ந்தது.
பொதுவாகவே சாந்த குணம் கொண்ட சுவாதி தனது பெற்றோர்களுக்கும், இந்த சொசைட்டிக்கும், ஏன் சங்கருக்கும் கூட பயந்து தன் காதலை அவனிடம் சொல்ல தயங்கினாள். தூரத்தில் இருந்து அவனைப் பார்த்து ரசித்து, அவனுடன் தோழியாக இருப்பதே எனக்கு கிடைத்த பாக்கியம் என்று நினைத்து சந்தோஷப்பட்டு அப்படியே தன் காதலை அவனிடம் வெளிப்படுத்த தயங்கிக் கொண்டே இருந்தாள். இப்போது தாமதமாகிவிட்டது. அவளுடைய சங்கர் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் இன்று யாழினிக்கு சொந்தமாகி விட்டான். இதற்கு மேல் அவளால் என்ன செய்ய முடியும்?
அப்படியே முடிந்தாலும், அதை செய்ய சுவாதி விரும்பவில்லை. வெளியில் இருந்து பார்க்கும்போது யாழினி அழகான தோற்றமுடைய மகிழ்ச்சியான பெண்ணாக தெரிந்தாலும், தனக்கு கிடைத்த நியாயமான சந்தோஷங்கள் கூட அவளுக்கு கிடைக்காமல் போயிருக்கிறது என்று தனது வீட்டின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த சுவாதிக்கு நன்றாக தெரியும். அதனால் “யாருக்கு என்ன கிடைக்கணும்னு இருக்கோ அதுதானே கிடைக்கும்? அவருக்கும் உன்ன பிடிச்சிருக்கு. அப்புறம் இதுல நான் நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? என்ன எங்க வீட்ல கஷ்டமே தெரியாம வளத்திட்டாங்க. இந்த ஃபர்ஸ்ட் லவ் பெயிலியர் தான் எனக்கு தெரிஞ்சு நான் அனுபவிக்கிற முதல் கஷ்டம். ஆனா யாழினியும், சங்கரும் அவங்க வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும். இருப்பாங்க, இருக்கட்டும். நம்ம என்னைக்கும் அவங்களுக்கு நடுவுல போகக் கூடாது.” என்று நினைத்து தன் மனதை தேற்றிக் கொண்டாள்.
காதலிக்க தொடங்கிய யாழினியும் ஷங்கரும் அவள் கண் முன்னேயே ஜோடியாக சுற்றிக் கொண்டு இருந்ததால் அவர்களது காதல் காட்சிகளை எல்லாம் பார்த்து பழகிய சுவாதிக்கு காலப்போக்கில் சங்கர் யாழினியின் காதலனாக மட்டுமே தெரிய, முழு மனதாக அவனை தனது நண்பனாக மட்டும் பார்க்க தொடங்கி இருந்தாள்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
அதனால் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்த யாழினி என்ன செய்வது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தவித்தாள். இருந்த பயத்தில் எப்படியாவது இவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று இருந்தது அவளுக்கு. ஆனால் அவள் இருந்த சாலையில் ஒரு ஈ, காக்கா கூட பறக்கவில்லை. இதில் சென்று அவள் யாரிடம் உதவி கேட்க முடியும்? அப்போது அவள் மனதில் தோன்றிய ஒரே பெயர் சங்கர் தான். அதனால் நொடியும் தாமதிக்காமல் சங்கருக்கு கால் செய்த யாழினி “சங்கர்.. சங்கர்.. ப்ளீஸ் சங்கர் என்ன காப்பாத்து. யாருன்னே தெரியல நாலு பசங்க என்னை துரத்திட்டு வர்றாங்க. எனக்கு பயமா இருக்கு டா. எனக்கு உன்ன விட்டா இங்க வேற யார தெரியும்? அதான் உனக்கு கால் பண்ணேன். ப்ளீஸ்.. வந்து என்னை காப்பாத்து சங்கர்.” என்று அழுது கொண்டே சொன்னாள்.
அவள் எங்கே இருக்கிறாள் என்று கேட்டு தெரிந்து கொண்ட சங்கர் உடனே தனது செகண்ட் ஹேண்ட் பல்சர் பைக்கில் அவளது லொகேஷனை நோக்கி பறந்து சென்று அவளைப் பின் தொடர்ந்து வந்தவர்களை அடித்து வெளுத்து யாழினியை காப்பாற்றி பத்திரமாக அவளைக் கொண்டு போய் ஹாஸ்டலில் இறக்கிவிட்டு வந்தான். அந்த நொடியில் தன் வாழ்க்கையில் சங்கரைப் போன்ற ஒருவன் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்ந்து கொண்ட யாழினி, தொடர்ந்து ஒரு வாரம் அவனைப் பற்றி யோசித்தாள். அவளுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. அவனை கண்டிப்பாக இழந்து விடக் கூடாது என்று தோன்றியது.
அதனால் அடுத்த நாளே காலேஜுக்கு சென்று “இன்னைக்கு ஈவினிங் நம்ம தியேட்டருக்கு போலாமா? என்னோட ட்ரீட்.” என்று யாழினி சுவாதிக்கு தெரியாமல் அவனிடம் கேட்க, “ம்ம்.. இன்னைக்கு ஓனர் வெளியூருக்கு போறாரு. சோ ஷாப்ல பெருசா வேலை இருக்காது. போலாம். நம்ம கூட சுவாதியும் வர்றாளா?” என்று ஷங்கர் கேட்க, “இல்ல அவ நாளைக்கு இருக்க டெஸ்ட்க்கு படிக்கணும் வர முடியாதுன்னு சொல்லிட்டா. சோ நீயும் நானும் மட்டும் தான்.” என்று பொய் சொன்ன யாழினி அவனுடன் தியேட்டருக்கு சென்றாள். நடுவில் இன்டர்வெல் வரும்போது, அவர்கள் இருவரும் தியேட்டரில் உள்ள கேண்டின்கு சென்று பாப்கார்ன் வாங்கினார்கள். அதை தன் கையில் வைத்துக் கொண்டு அவன் முன்னே மண்டியிட்டு தரையில் அமர்ந்த யாழினி “எனக்கு பாப்கார்ன் ரொம்ப பிடிக்கும். இப்போ அதைவிட அதிகமா உன்ன புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். உன்ன பார்க்கும்போது எல்லாம், எனக்கு என்னமோ என் வீட்ல இருக்கிற என் ஃபேமிலியை சேர்ந்த ஒருத்தர் என் கூட இருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் வருது சங்கர். அது லைஃப் லாங் வேணும்னு நான் ஆசைப்படுறேன். எப்பயும் உனக்காக நானும் எனக்காக நீயும் இருக்கணும். Will you marry me? என் கிட்ட நிறைய காசு பணம் இருந்திருந்தா, பெருசா ஏதாவது வாங்கி உன்ன சர்ப்ரைஸ் பண்ணி ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன். இப்போதைக்கு என் கிட்ட இது தான் இருக்கு. உன் முன்னாடி நான் இருக்கேன். என்னையும் இந்த பாப்கார்னையும் அக்சப்ட் பண்ணுவியா?” என்று க்யூட்டாக கேட்டாள்.
அப்போது அங்கே படம் பார்க்க வந்திருந்த அனைவரும் அந்த காட்சியை பார்த்துவிட்டு அத்தனை அழகாக இருந்த யாழினி அவளுக்கு நேர் மாறாக பார்ப்பதற்கே காட்டானை போல சாதாரணமாக இருந்த ஷங்கரை காதலிப்பதாக சொல்வதை பெரிய விஷயம் என்று நினைத்தார்கள். அதனால் அனைவரும் “ஓகே சொல்லு ப்ரோ.. இந்த மாதிரி பொண்ணு எல்லாம் யாருக்காவது கிடைக்குமா? SAY YES.. SAY YES.. SAY YES..!!” என்று கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் சொன்னதைப் போலவே அவன் படிக்கும் காலேஜில் இருக்கும் மிகவும் அழகான பெண்கள் யாழினியும் ஒரத்தி. அவள் பின்னே சுற்றாத ஆண்களே இல்லை என்று கூட சொல்லலாம்.
அத்தனை அழகான பெண், அதுவும் இத்தனை நாட்களாக தனக்கு தோழியாக இருந்தவள். இருவருக்கும் மற்றொருவரின் நிலையைப் பற்றி நன்றாக தெரியும். அப்படி இருந்தும் அவள் தன்னை காதலிக்கிறாள் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? அதுவும் இப்போதே திருமணம் செய்து கொள்ளலாமா? என்று வேறு கேட்கிறாள். அப்படி என்றால் இவளுக்கு தன் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கும்? என்றெல்லாம் யோசித்த சங்கருக்கு “நான் இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணது இல்லை யாழினி. நான் இருக்கிற சிச்சுவேஷனுக்கு அப்படி நினைச்சது கூட இல்ல. ஆனா ஒரு பொண்ணு நீ என்னை நம்பி இத்தனை பேர் முன்னாடி வெட்கத்தை விட்டு என்னை லவ் பண்றதா சொல்லும்போது, என்னால எப்படி உன்னை வேணாம்னு சொல்ல முடியும்? நான் பார்த்த வரைக்கும் நீ எல்லாத்துக்கும் அடம் பிடிக்கிற ஒரு குழந்தை மாதிரி. இதுவரைக்கும் உன்னை நான் தப்பா நினைச்சதே இல்ல. ஆனா இப்போ உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்குன்னு ஒரு ஃபேமிலிய உருவாக்கி உன் கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும்னு ஆசையா இருக்கு. ஒரே செகண்ட்ல என்னையே நீ இப்படி யோசிக்க வச்சுட்ட இல்ல!
நான் முடிவு பண்ணிட்டேன் டி. நீ எனக்கு தான். நீதான் என் பொண்டாட்டி. உனக்குன்னு யாருமே இல்லன்னு எப்பவும் சொல்லுவல.. இந்த செகண்ட்ல இருந்து நான் சாகுற வரைக்கும் உனக்காக கண்டிப்பா நான் இருப்பேன். இது எனக்கு நானே செஞ்சிக்கிற ப்ராமிஸ்.” என்று தோன்ற, அவள் கையில் இருந்த பாப்கார்னை வாங்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து அவளை மேலே எழுப்பி “ஓகே மிஸஸ் சங்கர், உங்க ப்ரோபோசல் accepted.” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவன் தன் காதலை ஏற்றுக் கொண்டதால் மகிழ்ந்த யாழினி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அன்றில் இருந்து தொடங்கியது அவர்களது காதல் கதை.
வழக்கம்போல இரவு தனது ஹாஸ்டல் ரூமிற்கு சென்ற யாழினி சுவாதியை கட்டிப்பிடித்து நடந்ததை அவளிடம் சொல்லி “ஐயோ. எனக்கு இப்ப எப்படி இருக்கு தெரியுமா சுவாதி? அப்படியே ஜாலியா வானத்தில பறக்கிற மாதிரி இருக்கு. இப்ப என்ன விட யாரும் இந்த worldல சந்தோசமாவே இருக்க மாட்டாங்கன்னு தோணுது. என்னமோ சங்கர் எனக்கு கிடைச்சதுனால எல்லாமே கிடைச்ச மாதிரி ஒரு ஃபீல் வருது. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்றாள். அவள் பேச பேச சுவாதியின் கண்கள் கலங்கியது. அவளுக்கு உடனே கத்தி அழ வேண்டும் போல இருந்தது. இருப்பினும் யாழினியின் முன்னே தன் கவலையை வெளி காட்டக் கூடாது என்று நினைத்து “சூப்பர் யாழினி. சங்கர் உனக்கு ஓகே சொல்லுவாருன்னு நான் எதிர்பார்க்கல. எனிவேஸ்.. எப்பயும் நீங்க ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கணும்.” என்று அனைத்தையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்.
செல்லமாக அவள் கணங்களைப் பிடித்து கிள்ளிய யாழினி “இதுவரைக்கும் எனக்குன்னு எங்க அத்தை ஃபேமிலிக்கு அப்புறம் நீ மட்டும் தான் இருந்த. இப்போ எனக்குன்னு என் சங்கர் இருக்கான். நீங்க ரெண்டு பேரும் எனக்கு போதும் சுவாதி. வேற எதுவும் வேண்டாம். அவன் என் கைய புடிச்சு எழுப்பி விட்டு என்ன மிஸ்ஸஸ் ஷங்கர்னு கூப்பிடும்போது எப்படி இருந்துச்சு தெரியுமா? நெஜமாவே எங்களுக்கு மேரேஜ் ஆன மாதிரி ஒரு ஃபீல் வந்துச்சு. அப்ப தான் அவனை நான் எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு எனக்கே புரிஞ்சது. Finally யாழினி ஹேப்பி.. ரொம்ப ஹேப்பி!” என்றாள்.
உண்மையில் முதலில் சங்கர் அந்த கல்லூரியில் சந்தித்தது சுவாதியைத் தான். அவளை ஒரு பட்டிக்காட்டு அசிங்கமான கிராமத்து பெண்ணாக அனைவரும் பார்த்து கிண்டல் செய்யும்போது, ஒரு தோழியாக யாழினி அவள் அருகில் நின்றிருந்தாலும் யார் என்று தெரியாத சங்கர் அதுவும் ஒரு ஆண் தனக்காக மற்றவர்களிடம் சண்டை போட்டு தன்னிடமும் “மத்தவங்க சொல்றதுக்காக நீ அழகா இல்லன்னு நீயே நினைச்சுக்காத. நான் பார்த்த பொண்ணுங்கள்லயே நீ ரொம்ப அழகானவ சுவாதி. அழகுன்றது வெளித்தோற்றத்தை மட்டும் வச்சு சொல்றது கிடையாது. நீ, உன் மனசு எல்லாமே அழகு தான்.” என்று சொல்லும்போது அவளுக்கு அவன் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. காலப்போக்கில் அது காதலாகவும் மலர்ந்தது.
பொதுவாகவே சாந்த குணம் கொண்ட சுவாதி தனது பெற்றோர்களுக்கும், இந்த சொசைட்டிக்கும், ஏன் சங்கருக்கும் கூட பயந்து தன் காதலை அவனிடம் சொல்ல தயங்கினாள். தூரத்தில் இருந்து அவனைப் பார்த்து ரசித்து, அவனுடன் தோழியாக இருப்பதே எனக்கு கிடைத்த பாக்கியம் என்று நினைத்து சந்தோஷப்பட்டு அப்படியே தன் காதலை அவனிடம் வெளிப்படுத்த தயங்கிக் கொண்டே இருந்தாள். இப்போது தாமதமாகிவிட்டது. அவளுடைய சங்கர் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் இன்று யாழினிக்கு சொந்தமாகி விட்டான். இதற்கு மேல் அவளால் என்ன செய்ய முடியும்?
அப்படியே முடிந்தாலும், அதை செய்ய சுவாதி விரும்பவில்லை. வெளியில் இருந்து பார்க்கும்போது யாழினி அழகான தோற்றமுடைய மகிழ்ச்சியான பெண்ணாக தெரிந்தாலும், தனக்கு கிடைத்த நியாயமான சந்தோஷங்கள் கூட அவளுக்கு கிடைக்காமல் போயிருக்கிறது என்று தனது வீட்டின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த சுவாதிக்கு நன்றாக தெரியும். அதனால் “யாருக்கு என்ன கிடைக்கணும்னு இருக்கோ அதுதானே கிடைக்கும்? அவருக்கும் உன்ன பிடிச்சிருக்கு. அப்புறம் இதுல நான் நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? என்ன எங்க வீட்ல கஷ்டமே தெரியாம வளத்திட்டாங்க. இந்த ஃபர்ஸ்ட் லவ் பெயிலியர் தான் எனக்கு தெரிஞ்சு நான் அனுபவிக்கிற முதல் கஷ்டம். ஆனா யாழினியும், சங்கரும் அவங்க வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும். இருப்பாங்க, இருக்கட்டும். நம்ம என்னைக்கும் அவங்களுக்கு நடுவுல போகக் கூடாது.” என்று நினைத்து தன் மனதை தேற்றிக் கொண்டாள்.
காதலிக்க தொடங்கிய யாழினியும் ஷங்கரும் அவள் கண் முன்னேயே ஜோடியாக சுற்றிக் கொண்டு இருந்ததால் அவர்களது காதல் காட்சிகளை எல்லாம் பார்த்து பழகிய சுவாதிக்கு காலப்போக்கில் சங்கர் யாழினியின் காதலனாக மட்டுமே தெரிய, முழு மனதாக அவனை தனது நண்பனாக மட்டும் பார்க்க தொடங்கி இருந்தாள்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-45
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-45
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.