Chapter-44

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அதையும் கவனித்த டாக்டர் “இவங்க உங்க கூட இருக்கும்போது தான் சந்தோஷமா இருக்காங்க சார். ஒரு பொண்ணுக்கு அவ பிரக்னண்டா இருக்கும்போது, எத்தனை பேர் அவ கூட இருந்து பாத்துக்கிட்டாலும் அவ புருஷன் பக்கத்துல நிக்கிற மாதிரி வராது. உங்களால முடிஞ்ச வரைக்கும் இவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. ரெண்டு பேரும் ஹாப்பியா இருங்க. அஞ்சு மாசத்துக்கு மேல ஆயிடுச்சுன்னா, நீங்க பிரிஞ்சி இருக்க தேவையில்லை‌. எப்பயும் போல ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்பா சந்தோஷமா இருக்கலாம். பட் அதுவரைக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. நான் கொடுத்திருக்கிற மெடிசின்ஸ் எல்லாத்தையும் அவங்க கரெக்டா ஃபாலோ பண்றாங்களானு செக் பண்ணிக்கோங்க.” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். சுவாதியை காத்திருப்போர் இருக்கையில் அமர வைத்த சங்கர் வீட்டிற்கு செல்ல கேப் புக் செய்துவிட்டு பார்மசிக்கு சென்று அவளுக்கான மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தான்.



‌ ஐந்து நிமிடத்தில் அங்கே கேப் வந்துவிட, ஸ்வாதியுடன் அதில் ஏறி அமர்ந்தான் சங்கர். தனது மொபைல் ஃபோனை எடுத்த சுவாதி “டாக்டர் செக்கப் அண்ட் மெடிசனுக்கு எவ்ளோ ஆச்சுன்னு சொல்லுங்க. நான் உங்களுக்கு அமௌன்ட் சென்ட் பண்ணிட்டறேன். அப்படியே டாக்ஸி up and down எவ்ளோ ஆச்சுன்னு தெரியல. அதையும் சேர்த்து டோட்டல்‌ பண்ணி சொல்லுங்க.” என்று சொல்ல, “ச்ச்.. இப்ப நான் உன் கிட்ட காசு கொடுன்னு கேட்டனா?” என்று கடுப்பாகி கேட்டான் சங்கர்.‌ “நீங்க ரொம்ப நல்லவரு சங்கர். மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா, கணக்கு பார்த்து செலவு பண்ண மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அதுக்காக சும்மா சும்மா உங்கள அப்படி செலவு பண்ண வைக்கிறது நல்லா இல்ல. எனக்கு அது சுத்தமா பிடிக்கல. கில்டியா இருக்கு. ப்ளீஸ் வாங்கிக்கோங்க. நீங்க எனக்காக இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம். நீங்க இந்த தடவை என் கிட்ட காசு வாங்கிக்கலைனா, அடுத்த தடவை எனக்கு ஒரு ஹெல்ப் தேவைப்பட்டா என்னால எப்படி உங்க கிட்ட கேட்க முடியும்..?? மனசு உறுத்தாதா? வேண்டாம் வேண்டாம்னு சொல்லி என்னை கஷ்டப்படுத்தாதீங்க ப்ளீஸ்!” என்று விட்டால் அழுது விடுவேன் என்ற நிலையில் சொன்னள் சுவாதி.



டாக்டர் அவளை எமோஷனலாக விடக் கூடாது என்று சொன்னதால் “சரி சரி ஏன் இதுக்கே டென்ஷனாகிற? இப்ப என்ன உனக்கு.. நான் எவ்வளவு ஆச்சுன்னு கணக்கு சொல்லி அதற்கான அமௌன்ட்ட வாங்கிக்கணும் அவ்ளோ தானே! ஓகே, சொல்கிறேன். எனக்கு நீ சென்ட் பண்ணு.” என்ற சங்கர் அவளிடம் தான் செலவு செய்த தொகையைப் பெற்றுக் கொண்டான். அதன் பிறகு அவர்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சுவாதி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் காலையில் இருந்து அவள் முகத்தில் இல்லாத ஒருவித அமைதி இப்போது அவள் முகத்தில் இருப்பதாக அவனுக்கு தோன்ற, “நெஜமாவே டாக்டர் சொன்ன மாதிரி இவ என் கூட இருக்கும் போது சந்தோஷமா தான் இருக்கா. நானும் தான்.” என்று நினைத்த சங்கருக்கு அப்போதுதான் அவளுடன் இருக்கும் போதெல்லாம் தானும் சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தான்.



அதனால் அவனது எண்ண ஓட்டம் பின்னோக்கி செல்ல, முதன் முதலில் தனது கிளாஸுற்க்கு முதல் நாள் தலையில் எண்ணெய் வைத்து சீவி நீட்டாக சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு ஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகள் போல ஒரு பேக் பேகை தனது தோள்களில் மாட்டிக் கொண்டு வந்த சுவாதி மற்ற மாணவர்களின் கிண்டல் கேலிக்கு உள்ளாகி அழுததையும், தான் அவளுக்காக அவர்களிடம் சண்டை போட்டதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்று கூட “இவ பாக்கறதுக்கு அழகா தானே இருக்கா! பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருக்கணும். முடிய விரிச்சு போட்டுகிட்டு அரைகுறையா டிரஸ் பண்ணிக்கிட்டு வர்றது தான் இவங்களுக்கு ஸ்டைலா? எப்படிப் பார்த்தாலும் என் கண்ணுக்கு இவ அழகா தான் தெரியுறா. இவனுங்களுக்குத் தான் இவ கிட்ட இருக்கிற அழகை பார்க்க தெரியல.” என்று அவன் நினைத்திருக்க, இப்போது அதை நினைவு கூர்ந்து சுவாதியை மேலும் கீழும் பார்த்தான் சங்கர்.



அவன் வரும்போது பார்த்த சுவாதிக்கும் இப்போது அவன் கண்களுக்கு அந்த மாலை நேரத்தின் சூரிய கதிர்களின் உதவியோடு மஞ்சள் நிறத்தில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கே உரிய அழகுடன் இருந்த சுவாத்தி பேரழகியாகவே தெரிந்தாள். இன்றும் சாதாரணமாக சுடிதார் தான் அணிந்திருந்தாள். அவளை அப்படி பார்த்தவுடன் ஷங்கரின் மனதில் அவனையும் மீறி,

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.

அவளுக்கு யாரும் இணை இல்லை.

அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை.

ஆனால் அது ஒரு குறையும் இல்லை. என்ற பாடல் ஒலித்தது.



அதனால் லேசாக அவளைப் பார்த்து புன்னகைத்த சங்கர் “உன்ன மாதிரி பொண்ணு எல்லாம் யாருக்கு கிடைப்பாங்க சுவாதி? உன் அருமை அந்த முட்டாள் பையன் தினேஷுக்கு புரியல டி. அதான் ஈசியா உன்ன டிவர்ஸ் பண்றேன்னு அவனால சொல்ல முடியுது. உன்ன மாதிரி பொண்ணுங்க எல்லாம் கோவில்ல இருக்கிற சாமி மாதிரி. அவன மாதிரி இருகாட்ட ஆளுங்களுக்கு உன்ன கொண்டாடி உன் மேல மரியாதை வச்சு பாசம் காட்ட தெரியாது. என்ன பண்றது.. பொதுவாவே opposite poles attractsன்னு‌ சொல்லுவாங்களே.. அந்த மாதிரி நம்ம லைஃப்ல நடந்திருச்சு போல. நீயும் நானும் ஒரே மாதிரி தான்‌. ஆனா நமக்கு ஆப்போசிட் பெர்சனாலிட்டில இருக்கிறவங்க பார்ட்னரா வந்திருக்காங்க. இந்த விதிய என்னன்னு சொல்றது? நினைச்சா எனக்கு சிரிப்பு தான் வருது. ஆனா உன் வாழ்க்கையில அது கண்ணீரை குடுத்துடுச்சே! அத பத்தி யோசிச்சா உன்ன நெனச்சு கஷ்டமா இருக்கு டி. என்னால உனக்கு என்ன பண்ண முடியும்னு எனக்கு தெரியல. ஆனா எதுவா இருந்தாலும் அத பண்றதுக்கு நான் ரெடியா இருக்கேன். உனக்காக அந்த குழந்தைக்காக..!!” என்று அவள் முகத்தைப் பார்த்து தனக்குள் சொல்லிக் கொண்டான். சுவாதியை பற்றி யோசிக்க யோசிக்க சங்கர் அவர்களது கல்லூரி கால நினைவுகளுக்கு சென்று கொண்டிருந்தான்.



பிளாஷ்பேக்..



யாழினியின் பெற்றோர்கள் அவளது சிறு வயதிலேயே ஒரு கார் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார்கள். அதனால் அவளை அவளது சொந்த அத்தை தான் வளர்த்தார். அவருடைய குடும்பமும் ஏழ்மையானது தான். இருப்பினும் யாழினியையும் தங்களது சொந்த மகளாக நினைத்து நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினார்கள். யாழினியின் அத்தையும் சுவாதியின் பெற்றோர்களும் பக்கத்து வீட்டுக்காரர்கள். அருகருகில் உள்ள வீட்டில் வளர்ந்ததால் சிறு வயதில் இருந்தே அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள். யாழினிக்கு அவள் நன்றாக படித்ததால் டவுணில் உள்ள பிரைவேட் காலேஜில் ஸ்காலர்ஷிப் உடன் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவளை பிரிய மனமில்லாமல் சுவாதியும் தனது பெற்றோர்களிடம் கேட்டு ‌ யாழினியின் காலேஜில் தனக்கும் சீட்டு வாங்கிக் கொண்டாள்.



அங்கே உள்ள ஹாஸ்டலில் தங்கி அவர்கள் இருவரும் காலேஜிற்கு சென்றார்கள். எதையும் விரைவாக கற்றுக் கொள்ளும் திறமை உடைய யாழினி கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், டவுனுக்கு சென்றவுடன் அங்கே இருந்த மற்றவர்களை பார்த்து உடனே தன்னை மெருகேற்றிக் கொண்டாள். ஆனால் எதையும் விரைவில் ஏற்றுக்கொள்ளத் தெரியாத சுவாதிக்கு அப்படி உடனே மாற முடியாமல் போய்விட, பட்டிக்காட்டில் இருந்து பட்டணத்திற்கு வந்த அதே பெண்ணாகவே அவள் கல்லூரிக்குள் சுற்றிக் கொண்டிருந்தாள். அவர்களைப் போலவே வேறு ஒரு கிராமப் பகுதியில் இருந்து தனது வாழ்க்கையை தான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைமையில் இருந்த சங்கர் டவுனுக்கு சென்றால் ஏதாவது ஒரு பார்ட் டைம் ஜாப் கிடைக்கும். அதை வைத்து படித்து வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கையில் ஒரு பக்கத்தில் வேலைக்கு சேர்ந்தான்.



அவன் திறமையைக் கண்ட அவன் மெக்கானிக்காக வேலை பார்த்த கார் செட்டின் முதலாளி ஏழை மாணவர்களை படிக்க வைத்தால் புண்ணியம் என்று நினைத்து அவன் படித்து முடிக்கும் வரை ஆகும் அத்தனை செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக அவனுக்கு வாக்களித்தார் அதைப்போலவே அவனுக்கு உறுதுணையாகவும் இருந்தார். ஸ்வாதி, சங்கர், யாழினி மூன்று பேரும் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள். அதனால் தனது கிளாசை சேர்ந்த ஒரு பெண்ணை மற்ற கிளாஸில் உள்ள மாணவர்களும், ஏன் தனது கிளாசில் உள்ள பெண்களும் கூட கிண்டல் செய்து துன்புறுத்தி கஷ்டப்படுத்துவதை பார்க்க முடியாமல் சுவாதிக்கு ஆதரவாக சங்கர் அனைவருடனும் சண்டை போட்டான். அப்படித்தான் அவன் யாழினி, சுவாதி இருவருக்குமே பரிட்ச்சியமானவன் ஆனான்.


தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-44
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.