சுவாதி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சங்கர் குழந்தை பற்றி யாழினியிடம் பேசும்போது அவள் பேசிய அனைத்தையும் அவனுக்கு ஞாபகப்படுத்தியது. தான் யாழினிக்கு உறுதுணையாக இருந்து அனைத்தையும் செய்ய தயாராக இருக்கும்போதும், அவள் தனது குழந்தையை பெற்றெடுக்க தயாராக இல்லை. ஆனால் ஸ்வாதி தனக்கு அவளது சொந்த கணவனிடம் இருந்தே எந்த ஆதரவும் கிடைக்கவில்லை எண்ணும் போதும், இந்த குழந்தை பிறந்தால் அவளது வாழ்க்கை பாதிக்கப்படும் என்று தெரிந்திருந்த போதும், “எனக்கு என் குழந்தை தான் வேணும். என்ன நடந்தாலும் நான் என் குழந்தையை விட மாட்டேன்.” என்று சொல்வது நேராக சங்கரின் இதயத்தை தொட்டது. ஒரே நொடியில் சுவாதி சங்கரின் இதயத்தில் உயர்ந்த இடத்திற்கு சென்றுவிட்டாள்.
அவள் தன்னுடன் ஒரே வீட்டில் தங்கி இருப்பதாலோ என்னவோ, அவள் தனக்கு குழந்தை வரப்போகிறது என்று சொன்ன உடனேயே அவனுக்கு தங்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரப் போகிறது என்ற சந்தோஷம் தொற்றிக் கொண்டது. அதனால் உணர்ச்சிவசப்பட்டு சுவாதியை இறுக்கமாக அணைத்துக் கொண்ட சங்கர் “நீ பயப்படாத சுவாதி. இந்த விஷயத்துல உன்ன எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும் நீ உன் முடிவுல ஸ்டிராங்கா இருக்கிற வரைக்கும், நான் உன் கூட இருப்பேன். உனக்காகவும் உன் குழந்தைக்காகவும் என்னால என்னென்ன பண்ண முடியுமோ அது எல்லாத்தையும் பண்றதுக்கு நான் ரெடியா இருக்கேன். உனக்கு யாரும் இல்லைன்னு மட்டும் எப்பவும் நினைச்சுறாத. உனக்கு நான் இருக்கேன்.” என்று மனதில் இருந்து சொன்னான். அவன் கண்களும் அவளுக்காக கலங்கியது. ஸ்வாதியின் நிலையை நினைக்கும்போது, சக மனிதனாக அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
அவனது குரலில் இருந்த சோகத்தை வைத்து தனக்காக அவன் வருத்தப்படுகிறான் என்று நினைத்த சுவாதி வாஞ்சையுடன் அவனைப் பார்க்க, அவள் கண்ணீரை தனது கட்டை விரலால் துடைத்த சங்கர் “இனிமே நீ எதுக்காகவும் யாருக்காகவும் அழக் கூடாது. இது உன் லைஃப் ஸ்வாதி. அவர் உனக்கு ஹஸ்பண்டாவே இருந்தாலும், உன் வயித்துல வளர்ற குழந்தையை வேண்டாம்னு சொல்ற ரைட்ஸ் அவருக்கு இல்லை. அவருக்கு அவ்ளோ அக்கறை இருக்குன்னா, முன்னாடியே கேர்ஃபுல்லா இருந்திருக்கணும். நீ பிரக்னண்ட்டாகி மூணு மாசம் ஆனதுக்கு அப்புறமும், இந்த குழந்தை வேண்டாம்னு சொல்றதுக்கு அவருக்கு எப்படி தான் மனசு வருதோ தெரியல! சரி அதை விடு, இத பத்தி நம்ம அப்புறமா அவர் கிட்ட பேசிக்கலாம். நீ ஹாஸ்பிடல் போகணும்னு சொன்னியே.. அந்த ஹாஸ்பிடல் எங்க இருக்குன்னு சொல்லு. நம்ம போயிட்டு வந்துடலாம்.” என்று அக்கறையுடன் சொல்ல, அவன் கண்களில் இருந்து தனக்காக வந்த ஒரு சொட்டு கண்ணீரை விரக்தி புன்னகையுடன் துடைத்த ஸ்வாதி “என்ன புரிஞ்சுகிட்டு, எனக்காக முதல் முதல்ல கண்ணீர் சிந்தன பர்சன் நீங்க தான் சங்கர். சத்தியமா சொல்றேன் எப்பயுமே நீங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல். உங்களையும், நீங்க எனக்கு பண்ற ஹெல்ப்பையும் நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன். உங்கள மாதிரி ஒரு நல்ல மனுஷனை நான் பார்த்ததே இல்ல.” என்று சொல்லிவிட்டு எமோஷனலாகி மீண்டும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
இதுவரை யாரும் அவனை அவனது நல்ல குணங்களை எல்லாம் புரிந்து கொண்டு மனதார பாராட்டியது இல்லை என்பதால், அவளது அன்பில் நெகிழ்ந்து போன சங்கர் தானும் அவளை அணைத்துக் கொண்டான். அவர்கள் இருவரின் உடலும் ஒன்றை ஒன்று நன்றாக ஒட்டிக் கொண்டு இருக்க, ஸ்வாதியின் இதயத்துடிப்பை கூட அவனால் நன்றாக உணர முடிந்தது. அந்த உணர்வு அவனுக்குள் ஒரு புதுவித மாற்றத்தை கொடுத்தது. அதில் சில நொடிகள் தன்னையும் மறந்து அவளை அனைத்தவாறு அந்த அணைப்பு தந்த சுகத்தில் அப்படியே நின்ற சங்கர் திடீரென சுதாரித்துக் கொண்டு அவளை விட்டு விலகி “நீ ரெடி ஆகிட்டு வா. ஹாஸ்பிடல் அட்ரஸ் சொல்லு. நான் கேப் புக் பண்றேன்.” என்று சொல்லிவிட்டு சென்று சோஃபாவில் அமர்ந்தான்.
தனது கண்ணீரை அழுத்தி துடைத்த சுவாதி “ஒரு நிமிஷம் இருங்க.” என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்று அங்கே இருந்த டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்டை எடுத்து வந்து அவன் முன்னே நீட்டி “இதுல ஹாஸ்பிடல் அட்ரஸ் இருக்கு. நீங்க கேப் புக் பண்ணுங்க. நான் போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன். ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி தண்ணி நிறைய குடிச்சிட்டு வரணும்னு சொன்னாங்க. நீங்க ஒரு வாட்டர் பாட்டில்ல தண்ணி மட்டும் கொஞ்சம் ஊத்தி வைங்க ப்ளீஸ்!” என்று சொல்லிவிட்டு சென்றாள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் டாக்டரின் முன்னே அமர்ந்திருந்தார்கள்.
நேற்றே டாக்டர் ஸ்வாதியை இன்று அவளது கணவனுடன் செக்கப்பிற்கு வர சொல்லி இருந்ததால் இப்போது அவளுடன் வந்திருந்த ஷங்கரை அவளுடைய கணவன் என்று நினைத்து “குழந்தையோட ஹார்ட் பீட் உங்களுக்கு கேக்குதா? இதுல நல்லா கேட்டு பாருங்க.” என்று சொல்ல, அங்கே இருந்த கம்ப்யூட்டரின் உதவியோடு ஸ்கேனில் தெரிந்த சுவாதியின் குழந்தையின் உருவத்தை தன் கையால் தொட்டு பார்த்த சங்கர் அவன் காதில் ஒலித்த திக் திக் என்ற அதன் இதயத் துடிப்பின் சத்தத்தை கேட்டான். அந்த கணமே இன்னும் பிறக்காத அந்த குழந்தையின் மீது அவனுக்கு ஒரு இனம் புரியாத பாசம் வந்துவிட்டது. அதனால் அவனையும் மீறி அவன் கண்கள் கலங்கிவிட, “இங்க நியாயமா இந்த இடத்துல தினேஷ் தான் இருந்திருக்கணும். ஆனா இப்போ சங்கர் இருக்காரு. இவர் இங்க இருக்கிறது சத்தியமா என் மனசுக்கு ஆறுதலா இருக்கு. ஏன் இந்த கடவுள் எங்க வாழ்க்கையில இப்படி விளையாடிட்டாரு? நானும் யாழினியும் ஒரே நாள்ல தான் சங்கர மீட் பண்ணோம். சொல்லி வச்ச மாதிரி நாங்க ரெண்டு பேருமே அவரை லவ் பண்ணோம். ஆனா நான் என் மனசுக்குள்ள இருக்கிற ஃபீலிங்ஸை புரிஞ்சிகிட்டு அவர் கிட்ட அதை பத்தி சொல்றதுக்குள்ள, யாழினி புத்திசாலித்தனமா முந்திக்கிட்டா.
அதனால சங்கர் இப்ப அவ புருஷன் ஆயிட்டாரு. அன்னைக்கு மட்டும் எனக்கு என் மனசுல இருந்த லவ்வை இவர் கிட்ட சொல்ல தைரியம் இருந்திருந்தா, இப்ப யாழினி இருக்க இடத்துல நான் இருந்திருப்பேன். அவளை விட நான் இவரை சந்தோஷமா வச்சுக்குவேன். இவரும் என்ன குழந்தை மாதிரி நல்லா பாத்துக்குவாரு. இப்போ இந்த குழந்தை இவருக்கு பிறந்ததா இருந்திருக்கும். நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இங்க வந்து எங்க குழந்தையை பத்தி டாக்டர் கிட்ட பேசிருப்போம். அன்னைக்கு நான் என் லவ்வை சொல்றதுக்கு கொஞ்சம் லேட் பண்ணதுக்காக எனக்கு கிடைக்க வேண்டிய சங்கர நீங்க யாழினிக்கு கொடுத்துட்டீங்க இல்ல கடவுளே! ஏன் இப்படி பண்ணீங்க?
யாழினியால சங்கர் மனசார சந்தோஷமா இல்ல. அவருக்கு புடிச்ச மாதிரி அவ ஒரு நாள் கூட இருந்தது இல்ல. இனியும் இருக்க மாட்டா. என்ன மாதிரி தான் அவரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழறாரு. தினேஷும் அப்படியே எனக்கு ஆப்போசிட்டா இருக்கான். ஒருவேளை நானும் சங்கரும் தினேஷும் யாழினியும் கல்யாணம் பண்ணி இருந்தா, எங்க வாழ்க்கை எவ்வளவு பர்ஃபெக்ட்டா இருந்திருக்கும்? நீங்க ஏன் எங்க நாலு பேரோட வாழ்க்கையிலையும் விளையாடி எங்க சந்தோஷத்தை எடுத்துக்கிட்டீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லல்ல!” என்று நினைத்து கண்ணீர் சிந்தினாள்.
அதை கவனித்த பெண் டாக்டர் “எம்மா ஸ்வாதி.. ரொம்ப எமோஷனல் ஆகாத மா. அங்க பாருங்க சார்.. உங்க வைஃப் எதுக்கு எடுத்தாலும் ரொம்ப எமோஷனலாவாங்க போல! இப்படி பிரக்னண்டா இருக்கிற டைம்ல இவங்க ஸ்ட்ரெஸ் ஆகி எமோஷனல் ஆகி அழுதுட்டே இருந்தாங்கன்னா, அது குழந்தைக்கு நல்லது இல்ல. ஆல்ரெடி இவங்களுக்கு பிளட் பிரஷர் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு. அது இன்னும் அதிகமாயிடாம பார்த்துக்கோங்க. இவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. இப்படியே இருந்தாங்கன்னா, குழந்தை அபார்ட் ஆகுறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. இதப்பத்தி டீடெயிலா பேசறதுக்கு தான் நான் உங்களை வர சொன்னேன். இவங்க பிரக்னண்ட்டாகி நாலு மாசம் ஆகப்போகுது. இந்த டைம்ல ஏதாவது நடந்து இவங்க ஸ்டிரஸ் ஆகி குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா, அது கண்டிப்பா இவங்களையும் பாதிக்கும். நீங்க தான் சார் உங்க wife-ஐயும் குழந்தையும் நல்லா பாத்துக்கணும்.” என்று சொல்ல, சங்கர் வாய் அடைத்துப் போய் நின்று விட்டான்.
ஏற்கனவே மனம் உடைந்து சோகத்தில் இருக்கும் சுவாதி ஒரு ஆறுதலுக்காக தன்னை அவளுடன் அழைத்து வந்திருக்கும் போது, இப்போது டாக்டரின் முன்னே அவள் தனது மனைவி இல்லை என்று சொல்லி மேலும் அவளை காயப்படுத்த வேண்டாம் என்று நினைத்த சங்கர் “ஓகே டாக்டர். நான் அவங்கள பத்திரமா பாத்துக்குறேன். சுவாதியும் அவ வயித்துல வளர்ற குழந்தையும் என் ரெஸ்பான்சிபிலிட்டி.” என்று வாக்கு கொடுத்தான். அந்த நொடி, இதுவரை சங்கர் தனது கணவனாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று யோசித்து வருத்தப்பட்டு கொண்டு இருந்த சுவாதிக்கு அவன் நிஜமாகவே தனது கணவனாக மாறிவிட்டதை போல ஒரு உணர்வு ஏற்பட்டது. டாக்டர் வேறு அடிக்கடி உங்க வைஃப் சுவாதி என்று சொல்லி சங்கரிடம் பேசிக் கொண்டே இருந்ததால், அது அவர்கள் இருவரின் மனதிலும் பதியத்தான் செய்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் ஷஙகரை தனது கணவன் என்று சொல்வது சுவாதிக்கு அவளையும் மீறி பிடித்துப் போனது. அதனால் தன் மனதில் இருந்த கஷ்டங்கள் அனைத்தையும் தூக்கி தூரப் போட்டுவிட்டு, கணவன் மனைவியாக அவர்கள் இருவரும் தங்களது குழந்தை சம்பந்தப்பட்ட அழகிய தருணங்களை என்ஜாய் செய்ய வந்திருப்பதாக நினைத்து உடனே சந்தோஷமானாள்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
அவள் தன்னுடன் ஒரே வீட்டில் தங்கி இருப்பதாலோ என்னவோ, அவள் தனக்கு குழந்தை வரப்போகிறது என்று சொன்ன உடனேயே அவனுக்கு தங்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரப் போகிறது என்ற சந்தோஷம் தொற்றிக் கொண்டது. அதனால் உணர்ச்சிவசப்பட்டு சுவாதியை இறுக்கமாக அணைத்துக் கொண்ட சங்கர் “நீ பயப்படாத சுவாதி. இந்த விஷயத்துல உன்ன எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும் நீ உன் முடிவுல ஸ்டிராங்கா இருக்கிற வரைக்கும், நான் உன் கூட இருப்பேன். உனக்காகவும் உன் குழந்தைக்காகவும் என்னால என்னென்ன பண்ண முடியுமோ அது எல்லாத்தையும் பண்றதுக்கு நான் ரெடியா இருக்கேன். உனக்கு யாரும் இல்லைன்னு மட்டும் எப்பவும் நினைச்சுறாத. உனக்கு நான் இருக்கேன்.” என்று மனதில் இருந்து சொன்னான். அவன் கண்களும் அவளுக்காக கலங்கியது. ஸ்வாதியின் நிலையை நினைக்கும்போது, சக மனிதனாக அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
அவனது குரலில் இருந்த சோகத்தை வைத்து தனக்காக அவன் வருத்தப்படுகிறான் என்று நினைத்த சுவாதி வாஞ்சையுடன் அவனைப் பார்க்க, அவள் கண்ணீரை தனது கட்டை விரலால் துடைத்த சங்கர் “இனிமே நீ எதுக்காகவும் யாருக்காகவும் அழக் கூடாது. இது உன் லைஃப் ஸ்வாதி. அவர் உனக்கு ஹஸ்பண்டாவே இருந்தாலும், உன் வயித்துல வளர்ற குழந்தையை வேண்டாம்னு சொல்ற ரைட்ஸ் அவருக்கு இல்லை. அவருக்கு அவ்ளோ அக்கறை இருக்குன்னா, முன்னாடியே கேர்ஃபுல்லா இருந்திருக்கணும். நீ பிரக்னண்ட்டாகி மூணு மாசம் ஆனதுக்கு அப்புறமும், இந்த குழந்தை வேண்டாம்னு சொல்றதுக்கு அவருக்கு எப்படி தான் மனசு வருதோ தெரியல! சரி அதை விடு, இத பத்தி நம்ம அப்புறமா அவர் கிட்ட பேசிக்கலாம். நீ ஹாஸ்பிடல் போகணும்னு சொன்னியே.. அந்த ஹாஸ்பிடல் எங்க இருக்குன்னு சொல்லு. நம்ம போயிட்டு வந்துடலாம்.” என்று அக்கறையுடன் சொல்ல, அவன் கண்களில் இருந்து தனக்காக வந்த ஒரு சொட்டு கண்ணீரை விரக்தி புன்னகையுடன் துடைத்த ஸ்வாதி “என்ன புரிஞ்சுகிட்டு, எனக்காக முதல் முதல்ல கண்ணீர் சிந்தன பர்சன் நீங்க தான் சங்கர். சத்தியமா சொல்றேன் எப்பயுமே நீங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல். உங்களையும், நீங்க எனக்கு பண்ற ஹெல்ப்பையும் நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன். உங்கள மாதிரி ஒரு நல்ல மனுஷனை நான் பார்த்ததே இல்ல.” என்று சொல்லிவிட்டு எமோஷனலாகி மீண்டும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
இதுவரை யாரும் அவனை அவனது நல்ல குணங்களை எல்லாம் புரிந்து கொண்டு மனதார பாராட்டியது இல்லை என்பதால், அவளது அன்பில் நெகிழ்ந்து போன சங்கர் தானும் அவளை அணைத்துக் கொண்டான். அவர்கள் இருவரின் உடலும் ஒன்றை ஒன்று நன்றாக ஒட்டிக் கொண்டு இருக்க, ஸ்வாதியின் இதயத்துடிப்பை கூட அவனால் நன்றாக உணர முடிந்தது. அந்த உணர்வு அவனுக்குள் ஒரு புதுவித மாற்றத்தை கொடுத்தது. அதில் சில நொடிகள் தன்னையும் மறந்து அவளை அனைத்தவாறு அந்த அணைப்பு தந்த சுகத்தில் அப்படியே நின்ற சங்கர் திடீரென சுதாரித்துக் கொண்டு அவளை விட்டு விலகி “நீ ரெடி ஆகிட்டு வா. ஹாஸ்பிடல் அட்ரஸ் சொல்லு. நான் கேப் புக் பண்றேன்.” என்று சொல்லிவிட்டு சென்று சோஃபாவில் அமர்ந்தான்.
தனது கண்ணீரை அழுத்தி துடைத்த சுவாதி “ஒரு நிமிஷம் இருங்க.” என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்று அங்கே இருந்த டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்டை எடுத்து வந்து அவன் முன்னே நீட்டி “இதுல ஹாஸ்பிடல் அட்ரஸ் இருக்கு. நீங்க கேப் புக் பண்ணுங்க. நான் போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன். ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி தண்ணி நிறைய குடிச்சிட்டு வரணும்னு சொன்னாங்க. நீங்க ஒரு வாட்டர் பாட்டில்ல தண்ணி மட்டும் கொஞ்சம் ஊத்தி வைங்க ப்ளீஸ்!” என்று சொல்லிவிட்டு சென்றாள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் டாக்டரின் முன்னே அமர்ந்திருந்தார்கள்.
நேற்றே டாக்டர் ஸ்வாதியை இன்று அவளது கணவனுடன் செக்கப்பிற்கு வர சொல்லி இருந்ததால் இப்போது அவளுடன் வந்திருந்த ஷங்கரை அவளுடைய கணவன் என்று நினைத்து “குழந்தையோட ஹார்ட் பீட் உங்களுக்கு கேக்குதா? இதுல நல்லா கேட்டு பாருங்க.” என்று சொல்ல, அங்கே இருந்த கம்ப்யூட்டரின் உதவியோடு ஸ்கேனில் தெரிந்த சுவாதியின் குழந்தையின் உருவத்தை தன் கையால் தொட்டு பார்த்த சங்கர் அவன் காதில் ஒலித்த திக் திக் என்ற அதன் இதயத் துடிப்பின் சத்தத்தை கேட்டான். அந்த கணமே இன்னும் பிறக்காத அந்த குழந்தையின் மீது அவனுக்கு ஒரு இனம் புரியாத பாசம் வந்துவிட்டது. அதனால் அவனையும் மீறி அவன் கண்கள் கலங்கிவிட, “இங்க நியாயமா இந்த இடத்துல தினேஷ் தான் இருந்திருக்கணும். ஆனா இப்போ சங்கர் இருக்காரு. இவர் இங்க இருக்கிறது சத்தியமா என் மனசுக்கு ஆறுதலா இருக்கு. ஏன் இந்த கடவுள் எங்க வாழ்க்கையில இப்படி விளையாடிட்டாரு? நானும் யாழினியும் ஒரே நாள்ல தான் சங்கர மீட் பண்ணோம். சொல்லி வச்ச மாதிரி நாங்க ரெண்டு பேருமே அவரை லவ் பண்ணோம். ஆனா நான் என் மனசுக்குள்ள இருக்கிற ஃபீலிங்ஸை புரிஞ்சிகிட்டு அவர் கிட்ட அதை பத்தி சொல்றதுக்குள்ள, யாழினி புத்திசாலித்தனமா முந்திக்கிட்டா.
அதனால சங்கர் இப்ப அவ புருஷன் ஆயிட்டாரு. அன்னைக்கு மட்டும் எனக்கு என் மனசுல இருந்த லவ்வை இவர் கிட்ட சொல்ல தைரியம் இருந்திருந்தா, இப்ப யாழினி இருக்க இடத்துல நான் இருந்திருப்பேன். அவளை விட நான் இவரை சந்தோஷமா வச்சுக்குவேன். இவரும் என்ன குழந்தை மாதிரி நல்லா பாத்துக்குவாரு. இப்போ இந்த குழந்தை இவருக்கு பிறந்ததா இருந்திருக்கும். நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இங்க வந்து எங்க குழந்தையை பத்தி டாக்டர் கிட்ட பேசிருப்போம். அன்னைக்கு நான் என் லவ்வை சொல்றதுக்கு கொஞ்சம் லேட் பண்ணதுக்காக எனக்கு கிடைக்க வேண்டிய சங்கர நீங்க யாழினிக்கு கொடுத்துட்டீங்க இல்ல கடவுளே! ஏன் இப்படி பண்ணீங்க?
யாழினியால சங்கர் மனசார சந்தோஷமா இல்ல. அவருக்கு புடிச்ச மாதிரி அவ ஒரு நாள் கூட இருந்தது இல்ல. இனியும் இருக்க மாட்டா. என்ன மாதிரி தான் அவரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழறாரு. தினேஷும் அப்படியே எனக்கு ஆப்போசிட்டா இருக்கான். ஒருவேளை நானும் சங்கரும் தினேஷும் யாழினியும் கல்யாணம் பண்ணி இருந்தா, எங்க வாழ்க்கை எவ்வளவு பர்ஃபெக்ட்டா இருந்திருக்கும்? நீங்க ஏன் எங்க நாலு பேரோட வாழ்க்கையிலையும் விளையாடி எங்க சந்தோஷத்தை எடுத்துக்கிட்டீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லல்ல!” என்று நினைத்து கண்ணீர் சிந்தினாள்.
அதை கவனித்த பெண் டாக்டர் “எம்மா ஸ்வாதி.. ரொம்ப எமோஷனல் ஆகாத மா. அங்க பாருங்க சார்.. உங்க வைஃப் எதுக்கு எடுத்தாலும் ரொம்ப எமோஷனலாவாங்க போல! இப்படி பிரக்னண்டா இருக்கிற டைம்ல இவங்க ஸ்ட்ரெஸ் ஆகி எமோஷனல் ஆகி அழுதுட்டே இருந்தாங்கன்னா, அது குழந்தைக்கு நல்லது இல்ல. ஆல்ரெடி இவங்களுக்கு பிளட் பிரஷர் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு. அது இன்னும் அதிகமாயிடாம பார்த்துக்கோங்க. இவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. இப்படியே இருந்தாங்கன்னா, குழந்தை அபார்ட் ஆகுறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. இதப்பத்தி டீடெயிலா பேசறதுக்கு தான் நான் உங்களை வர சொன்னேன். இவங்க பிரக்னண்ட்டாகி நாலு மாசம் ஆகப்போகுது. இந்த டைம்ல ஏதாவது நடந்து இவங்க ஸ்டிரஸ் ஆகி குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா, அது கண்டிப்பா இவங்களையும் பாதிக்கும். நீங்க தான் சார் உங்க wife-ஐயும் குழந்தையும் நல்லா பாத்துக்கணும்.” என்று சொல்ல, சங்கர் வாய் அடைத்துப் போய் நின்று விட்டான்.
ஏற்கனவே மனம் உடைந்து சோகத்தில் இருக்கும் சுவாதி ஒரு ஆறுதலுக்காக தன்னை அவளுடன் அழைத்து வந்திருக்கும் போது, இப்போது டாக்டரின் முன்னே அவள் தனது மனைவி இல்லை என்று சொல்லி மேலும் அவளை காயப்படுத்த வேண்டாம் என்று நினைத்த சங்கர் “ஓகே டாக்டர். நான் அவங்கள பத்திரமா பாத்துக்குறேன். சுவாதியும் அவ வயித்துல வளர்ற குழந்தையும் என் ரெஸ்பான்சிபிலிட்டி.” என்று வாக்கு கொடுத்தான். அந்த நொடி, இதுவரை சங்கர் தனது கணவனாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று யோசித்து வருத்தப்பட்டு கொண்டு இருந்த சுவாதிக்கு அவன் நிஜமாகவே தனது கணவனாக மாறிவிட்டதை போல ஒரு உணர்வு ஏற்பட்டது. டாக்டர் வேறு அடிக்கடி உங்க வைஃப் சுவாதி என்று சொல்லி சங்கரிடம் பேசிக் கொண்டே இருந்ததால், அது அவர்கள் இருவரின் மனதிலும் பதியத்தான் செய்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் ஷஙகரை தனது கணவன் என்று சொல்வது சுவாதிக்கு அவளையும் மீறி பிடித்துப் போனது. அதனால் தன் மனதில் இருந்த கஷ்டங்கள் அனைத்தையும் தூக்கி தூரப் போட்டுவிட்டு, கணவன் மனைவியாக அவர்கள் இருவரும் தங்களது குழந்தை சம்பந்தப்பட்ட அழகிய தருணங்களை என்ஜாய் செய்ய வந்திருப்பதாக நினைத்து உடனே சந்தோஷமானாள்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-43
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-43
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.