தொடர்ச்சி 👉🏻

காலை மெல்ல புலர

பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தால் சீதா.

அதிகாலை எழுந்தவர் குளித்து முடித்து தலைவாரி வகிடில் குங்குமம் வைத்துக் கொண்டு தலை நிறைய மல்லி பூவை சரமாக அல்லி சூடி பார்ப்பதற்கே மங்களகரமாக
இருந்தார் சீதா.

சீதா என்ற பெயருக்கு ஏற்றவாறு சீதையை போலத்தான் இருந்தார்.

காலையில் 8:00 மணி வருவதாக சொல்லி இருந்தார் அசோக்.

என்னம்மா காலைல 8:30 மணி ஆகுது இன்னும் உன் புருஷனை காணோம்.

இந்த முறையும் ஏமாத்திட்டாரா?

சும்மா இருடா.

எப்ப பார்த்தாலும் அவரை ஏதாவது ஒரு கொர சொல்லிக்கிட்டு இருக்கே என்று செல்லமாக கோபித்துக் கொள்ள

சரி விடுமா உன் வீட்டுக்காரரை நான் ஒன்னும் சொல்லல.

என்று தோல் மேல் கையை போட்டுக்கொண்டு

என்னம்மா உன் ஆளு வராருண்ணு தெரிஜதும் மேக்கப்
தூக்கலா போட்டுருக்க.😉

அட சை போடா! வாலு

என்றிட சிரித்துக்கொண்டே மாறனும் பள்ளி கிளம்பி சென்றான்.


அஷோக் வீட்டிற்க்கு வர நேரம் மதியதயத்தை கடந்தது


சீதா சீதா

என்று அலைத்தவாரே உள்ளே நுழைந்தார் அஷோக்.

வாங்க வாங்க

என்ன இவளோ லேட்

காலைல வரதா சொன்னீங்க ஃப்ளைட் ஏதும் லேட் டா.

இல்லே மா.

ஒரு டீல் சைன் பண்ண வேண்டி இருந்தது.

நம்ம நினைச்ச மாதிரியே கான்ரேக்ட் நமக்கே கொடுத்துடாங்க

🙂 புன்னகைத்தாள் சீதா.

பின்ன என்ன சீதா நான் ஒரு புராஜக்ட் ட சமிட் பண்ணா எப்படி நமக்கு கிடைக்காமல் போகும்.

நம்ம கம்பனி புராஜக்ட் தான் அவங்க எல்லார் விடவும் பெஸ்ட் டா இருந்தது.
என் ஹார்ட் வொர்க் வீன் ஆகல.

🙂

என்ன சீதா ஒன்னும் பேசாம இருக்க.

ஒன்னும் இல்லே.

சொல்லு சீதா என்னட்சி முகம் ஏன் இப்படி வாடி இருக்கு .

ஏதா இருந்தாலும் சொல்லு

என்ன சொல்ல? சொல்றிங்க?

😳

6 மாசம் கழிச்சு இப்ப தான் வீட்டுக்கு வரீங்க.

நீ எப்படி இருக்க நம்ம பையன் மாறன் எப்படி இருக்கான் அப்படின்னு ஒரு வார்த்த கேட்டீங்களா?

😳

என்ன என்ன சொல்ல சொல்றிங்க ?

எங்க அப்பா அம்மா எவ்ளோ சொல்லியும் கேட்காம உங்களைத்தான் கட்டுவேன்னு அடம் பிடித்து கட்டினேன்னே அத சொல்ல சொல்றிங்க லா

இல்லே எங்க அப்பா இறந்து போனது தெறிஜும் வரமா மீட்டிங் அட்டென்ட் பண்ணிங்களே அதைத்தான் சொல்ல சொல்றிங்கலா

சீதா நீ இவளோ பேசுவியா?

பேச வட்சிடிங்களே.

நானும் இன்னைக்கு திருந்துவிங்க நாளைக்கு திருந்துவிங்கனு கனவு கண்டுட்டு என் தலைல நானே மண் அல்லிக்கொட்டிக் கிட்டேன்.

நீ இதெல்லாம் தேரிஜி தானே என்ன விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டே.

ஆமாம் !

இதெல்லாம் தெரிஜீ தான் பண்ணிக்கிட்டேன்.

உங்களை திருத்திரலாம்னு நம்பிக்கைல

ஆனா இது நடக்காது இப்போ புறிஜிகிட்டேன்.

இப்போ என்ன பண்ணனும் சொல்ற எல்லா வேலையையும் நான் விட்டு உன் கூடவே இருக்கணும் சொல்றியா?

ஐயோ உங்களை அப்படி இருங்க இப்படி இருங்கணு நான் சொல்ல முடியுமா

எவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேன் நீங்க.

என் பிரசவத்திற்கு கூட நீங்க இல்லையே.

எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கும் ஆல்ப்ப சந்தோஷம் தன் புருசன்🤰🤱🏻 பிரசவத்தில் கூட இருக்கணும் தான் அதுக்கே நீங்க இல்லையே.

ஹே என் சூழ்நிலை அப்படி.

சரி அத விடுங்க மாறன் பிறந்து எத்தன நாள் கழிச்சி நீங்க வந்து பாத்திங்க? அட்லீஸ்ட் மாறன் பொறந்ததாட்சும் தெரிஜதா.

மௌனம்.....

சொல்லுங்க?

என்ன மறந்துறுட்சா?

நான் சொல்றேன்.

ஹாஸ்பிட்டல்ல இருந்து உங்களுக்கு கால் பண்ணேன் ஒரு தடவ ரெண்டு தடவ இல்லே 42 தடவ.

ஆனா நீங்க கால் அட்டென்ட் பண்ணல.

ஏன்

என்னா பிஸ்னஸ் பணம்.

மாறன் பொறந்து 10 நாள் கழிச்சி ஃபோன் பண்ணின்க.

அதெல்லாம் இப்போ எதுக்கு.

பேசனும்க பேசணும்.

அட்லீஸ்ட் உங்க பையன் எப்படி படிகரான்னு உங்களுக்கு தெரியுமா?

ஒரு வாடியாவது புரோகிரஸ் ரிப்போர்ட் சைன் பண்ணியாட்சும் கொடுத்து இருக்கீங்களா?

அத விடுங்க மாறன் என்ன கிளாஸ் படிகரான் ஆட்ச்சும் தெரியுமா.

😔 நீ என்ன பத்தி தேறிஜி தானே....

அட போதும் நிறுத்துங்க.

இல்லே உங்களை பத்தி நான் தேரிஜீ கல்யாணம் பண்ணல.

உங்களை புறிஜிகிட்டெனு நினைச்சேன் ஆனா அது தப்பு.

நான் ஒரு மனுசன காதலிட்சே நினைச்சேன்.

இல்லே நான் ஒரு கல்ல காதலிச்சு இருக்கேன்.

என் காதல் தோத்து போட்சீ என்றபடி தலையில் வைத்திருந்த மல்லிகை சரத்தை கழட்டி வீச

அது ஸ்கூல் முடிந்து வந்த மாறனின் காலில் விழுந்தது


சீதா முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதார்.

மா 🥺

ஏன் அழரிங்க

பதில் இல்லை ஆனால் அழுகையும் நிற்க வில்லை.

மாறனுக்கு வந்ததே கோபம்.

யோவ் ...

என்னையா பண்ண எங்க அம்மாவ

என்றபடி சட்டையை பிடிக்க.

மாறா வேண்டாம்

என்றார் சீதா.

அவன் கேக்க வில்லை.

என் அம்மாவ அழவெட்ச உன்ன சும்மா விட மாட்டேன் என்று அடிக்க செல்ல.

அஷோக் அசையாமல் சிலை போல் நின்று இருந்தார்.

மாறா என்ற படி ஓங்கி கன்னத்தில் ஒன்று வைத்தார் சீதா.

ம் மா

யாரடா அடிக்க போற

அவர் உன் அப்பா.

அம்மா அவர் உன்ன

எங்க ரெண்டு பெருக்குல ஆயிரம் இருக்கும் நீ இதுல தலை இடாதா.

மாறன் அமைதியானான்.

சீதா என்ன மண்ணி ...

என்று முடிக்கும் முன்னரே

உள்ளே நுழைந்தனர் ரகு மற்றும் கௌதம்.

அவர்களின் அடியாட்களுடன்

அட அட அட குடுபம்ன இப்படி தானே இருக்கணும்.

அஷோக் நீ ரொம்ப குடுத்து வட்சவன் டா.

(என்றபடியே அசோக்கின் கையை பின் பக்கமாக இழுத்து பிடித்துக் கொண்டனர் அடியாட்கள்.)

உன் பொண்டாட்டி எவ்ளோ அழகா இருக்கா.

ஏய்......என்று மாறன் அலற பையன் ரொம்ப துள்ளுறான்.

அவனுக்கு வலிக்காம கட்டி போடுங்கடா.

என்ன அஷோக் உன் கிட்ட எத்தன தடவ சொன்னேன்.

என் பிசினஸ் ல போட்டி போடாதனு

ஆனா நீ சொல்றதையே கேக்க மாற்றியே.

இப்போ பாரு யாரு கஸ்டப்படரா உன்னால உன் உன் பொண்டாட்டி புள்ளையும் தான்.

டேய் என்ன டா பிசினஸ்ல என்ன நேருக்கு நேர் ஜெயிக்க முடியலன்னு இப்படி கோல மாதிரி என் ஃபேமிலிய வச்சு பிளாக் மெயில் பண்றீங்களே உங்களுக்கு வெக்கமா இல்ல.

என்ன அஷோக்?

கொழந்த மாதிரி பேசற.

நாங்க பிளாக் மெயில் பண்ண வரல சம்பவம் பண்ண வந்திருக்கோம்.

😳

டேய் விடுங்கடா

அஷோக் என்று சீதா கத்த

அங்கிருந்த ஒருவன் சீதாவை பலார் பாலார் என மாறி மாறி இரு கன்னங்களிலும் அடித்தான்.

மாறன் இதை பார்த்து கதறி துடித்தான்.

மா......😭

டேய் எங்க அம்மாவ விடுங்கடா

உங்களை எல்லாம் நான் உயிரோடவே விடமாட்டேன்.

ஏய் இங்க பாருடா?

தம்பி ஏதோ வீடியோ கேம் நினைட்சி பேசுதுடா.

நாங்க ரியல் ரவுடிங்க என்றபடி சத்தம் போட்டு சிரித்தனர்.

இதோ பாரு இப்போ உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க என்று அசோக் கௌதமிடமும் ரகுவிடமும் கேட்டார்.

வேற என்ன எங்க தொழில்ல நீ போட்டி போடக்கூடாது நீ எப்ப வந்த நாங்க பரம்பரை பரம்பரையா பணக்கார வர்க்கம் இப்ப வந்த உன்ன எங்கள மீறி ஜெயிக்க விற்றுவோமா.

சரி இப்ப நான் என்ன பண்ணனும்.

எங்களுக்கு என்ன அசோக் உன் பிசினஸ் எங்களுக்கு வேணும் அவ்வளவே தான்.

வாட்.

ஆமா இந்த டீல் மட்டும் இல்ல உன் பேர்ல இருக்க எல்லாம் டீல் அண்ட் காண்ட்ராக்ட் எல்லாத்தையும் எங்களோட கம்பெனிக்கு நீ மாத்தி கொடுக்கணும்.

வாட் யூ மீன்.

ஓபனா சொல்லணும்னா உன் கம்பெனிக்கு நிர்வாகத்த எங்க கம்பெனி நடத்தும்.

முடியாது அது என் கனவு என் உழைப்பு அதை யாருக்காகவும் நான் கொடுக்கணும்டிர அவசியம் இல்லை.

அப்பா வேண்டாம்பா அவங்க கேட்கிறத கொடுத்து இருங்க பா.

அம்மாவ அடிக்கிறாங்கப்பா என்னால பாக்க முடியல.
😭

நீ சும்மா இருமாறா உனக்கு ஒன்னும் தெரியாது இவங்க இப்படித்தான் பிளாக்மெயில் பண்ணுவாங்க அதுக்கெல்லாம் நம்ம பயப்படக்கூடாது.

அடி தலாமல் சீதா மயங்கி விழுந்தார்.

ஐயோ அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு எழுந்திரிங்க.

என்று கதறினான் மாறன்.

டேய் கைய கட்டி வச்சுட்டு இப்படி பொம்பளைங்க கிட்ட வீரத்தை காட்டுறீங்களே டா.

என்ற மாறனை பார்த்து நக்கல் அடித்து சிரித்தனர்.

டேய் இதோ பாருடா இவன் நிறைய தமிழ் படம் பார் பான் போல.

ரகு டேய் அவன் கட்ட கழட்டி விடுங்க என்ன பண்றான்னு பார்ப்போம்.

டேய் அவன் சின்ன பையன் டா விட்டுடுங்கடா என்று அசோக் கெஞ்ச.

ஓ உனக்கு சென்டிமென்ட்லாம் இருக்கா?

மாறன் கட்டை கழட்டி விட்டனர்.

அம்மா என்ற படி ஓடி வந்து சீதாவை உசுப்பினான்.

மெல்ல கண் விழித்த சீதா மாறனைக் கண்டதும் கட்டி தழுவி கொண்டார்.

கடைசியா கேட்கிறேன் அசோக் உன்னால ஒத்து வர முடியுமா முடியாதா?

முடியவே முடியாது டா என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ.

அப்பொழுதுதான் அந்த பயங்கர அசம்பாவிதம் நடந்தது.

மாறா!!!!!!!!!!!

மா......😱


தொடரும்...
Shahiabi. Writer ✍🏼
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -41
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.