பட் உனக்கும் எனக்கும் இந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டு போயிடு. எனக்கு டிவர்ஸ் கொடுத்துட்டு போயிடு. நான் இருக்கிற சிச்சுவேஷனுக்கு என்னால உன் குழந்தைக்கு அப்பனா எல்லாம் இருந்து செலவு பண்ண முடியாது. நான் சொல்றத சொல்லிட்டேன். இதுக்கு மேல நீதான் சுவாதி உனக்கு என்ன வேணும்னு டிசைட் பண்ணனும். எனக்கு உன் கூட எந்த பிரச்சனையும் இல்ல. நீ இந்த குழந்தையை அபார்ஷன் பண்றதை பற்றி யோசி.” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
பின் நேற்று அவனையும் யாழினியையும் சங்கர் தான் எப்படியும் இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும் என்று நினைத்து நேராக அவனிடம் சென்று “கிளம்பிட்டீங்களா? யாழினி எங்க?” என்று கேட்க, “இதோ கிளம்பிட்டேன். வாங்க போலாம். பிரேக் டைம்ல ஆபீஸ் கேண்டில போய் சாப்பிட்டுக்கலாம்.” என்றபடி அங்கே வந்தாள் யாழினி. “சுவாதி எங்க அவ வரலையா?” என்று ஷங்கர் கேட்க, “அவளா.. அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. சோ அவ ஆபிஸ்க்கு வரலைன்னு சொல்லிட்டா. நீங்க வாங்க.. நம்ம கிளம்பலாம் லேட் ஆகுது. என் கார் கீ உங்க கிட்ட தானே இருக்கு?” என்று கேட்ட தினேஷ் சங்கரிடம் இருந்து தன் கார் சாவியை வாங்கிக் கொண்டு அவர்களுடன் அங்கே இருந்து தனது காரில் புறப்பட்டான்.
நேற்று சுவாதி தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி இருந்ததால், “என்ன ஆச்சு அவளுக்கு? நேத்தே நான் ஹாஸ்பிடல் போலாம் வான்னு கூப்பிட்டேன். அப்போ பரவாயில்ல ஒன்னும் இல்லன்னு தானே சொன்னா.. தினேஷும் அவளுக்கு என்னாச்சுன்னு சொல்லல. என்னவா இருக்கும்?” என்று யோசித்து குழம்பிய சங்கர் “நம்மளா கண்டதை யோசிச்சி எதுக்கு மண்டைய ஒடச்சிகிட்டு? ஆபீஸ் போயிட்டு ஃப்ரீ ஆகிட்டு அப்புறமா அவளுக்கு கால் பண்ணி பேசலாம்.” என்று நினைத்துக் கொண்டான்.
இங்கே அந்த வீட்டில் தனியாக அவளது ரூமின் ஒரு மூலையில் அமர்ந்து கால்களுக்கு நடுவில் தன் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்த ஸ்வாதி “ஏன் என் வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கு? எல்லா பொண்ணுங்க மாதிரியும் கல்யாணம் பண்ணி, என் புருஷன் கூட சந்தோஷமா வாழ்ந்து, குழந்தை பெத்துக்கிட்டு நிம்மதியா இருக்கணும்னு தானே நான் ஆசைப்பட்டேன்.. என்னோட அந்த நியாயமான சின்ன ஆசை கூட நடக்காதா?
கல்யாணமாகி முழுசா ஒரு வருஷம் கூட ஆகல. ஏற்கனவே வீட்ல இருக்குறவங்க எல்லாரும் என் கிட்ட தான் எப்போ நல்ல செய்தி சொல்ல போறீங்கன்னு கேட்டுட்டே இருக்காங்க. இப்போ நான் அம்மாவாகி இருக்கிற இந்த நேரத்துல, அந்த சந்தோஷத்தை கூட என்னால முழுசா கொஞ்ச நேரம் கூட அனுபவிக்க முடியலையே...!! ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? ஒரேடியா என்ன விட்டுட்டு போ.. இந்த குழந்தை வேணும்னா எனக்கு டிவோர்ஸ் கொடுத்துடுன்னு.. இவனால எப்படி ஈஸியா சொல்ல முடியுது?
ஒருவேளை அவனுக்கு இப்ப குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் இருந்தாலும் கூட, அத பத்தி என் கிட்ட பேசி என்னை கன்வின்ஸ் பண்ண கொஞ்சம் கூட ட்ரை பண்ணாம, எடுத்த உடனே குழந்தை வேணும்னா என்ன விட்டு போயிடுனு சொல்றானே.. மனுஷனா இவன்? ரீசன் எதுவா இருந்தாலும், இவனுக்கு என் மேல கொஞ்சமாவது பாசம் இருந்தா, இவனால இப்படி எல்லாம் இரக்கமே இல்லாம பேச முடியுமா? இவனுக்கு என் மேலயும் பாசம் இல்ல. என் குழந்தை மேலயும் அக்கறை இல்ல.” என்று நினைத்தாள்.
யாருக்காகவும் எதற்காகவும் தனது குழந்தையை மட்டும் இழந்து விடக் கூடாது என்று தெளிவாக இருந்த சுவாதிக்கு “என் மேல பாசமே இல்லாதவன் கூட நான் எதுக்கு வாழனும்? பேசாம இவன் கேட்கிற மாதிரி நான் இவனுக்கு டிவர்ஸ் கொடுத்தரவா?” என்று ஒரு நொடி யோசித்துப் பார்த்தாள். பின் அவனுடன் வாழ்ந்த நாட்கள் எல்லாம் அவளது மன கண்களில் வந்து செல்ல, “என்னால எப்படி அவன டிவர்ஸ் பண்ண முடியும்? அவன் வேணா என்ன ஒரு ஆளாவே நினைக்காம இருக்கலாம். ஆனா அவன் என்னை தொட்டு தாலி கட்டின புருஷன்.
இப்ப என் குழந்தையோட அப்பா. அவன் இல்லாம என்னால எப்படி என் குழந்தைய தனியா வளர்க்க முடியும்? அது பொறந்து அப்பா எங்க அம்மானு கேட்டா நான் யாரை காட்டுவேன்? அதுவும் இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் ஆகி ஜஸ்ட் 6 மன்த்ஸ்ல நான் டிவர்ஸ் வாங்க போறேன்னு சொன்னா.. என் வீட்ல இருக்குறவங்க கூட என் மேல தான் தப்புன்னு சொல்லி என்னை ஏத்துக்க மாட்டாங்க. அப்புறம் தினேஷும் இல்லாம, ஃபேமிலி சப்போர்ட்டும் இல்லாம நான் அனாதையா நடுத்தெருவில நிக்கணும். அதுக்காக என்னால எப்படி என் குழந்தையை கொல்ல முடியும்? ஐயோ கடவுளே! என்னை ஏன் இப்படி கொடுமை படுத்துற?” என்று நினைத்து அழுது கரைந்தாள்.
அவளது கெட்ட நேரம்.. கடவுளிடம் தனது கவலைகளைச் சொல்லி அழலாம் என்று நினைத்தாலும், அவளால் இப்போது இந்த நிலையில் வெளியில் கோவிலுக்கு செல்ல முடியாது. அந்த வீட்டிலும் ஒரு சாமி ஃபோட்டோ கூட இல்லை. மொத்தத்தில் கேட்பாரின்றி எனக்கென யாரும் இல்லையே.. என்று தனியாக சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அப்படியே நேரம் செல்ல, அவளுக்கு பசியாக இருந்தது. அதனால் தான் வயிற்றை பிடித்துக் கொண்டு எழுந்து கிச்சனுக்கு சென்ற சுவாதி அங்கே சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள். அவளை தினேஷ் எப்போதும் புரிந்து கொள்ள தவறி இருந்தாலும், சங்கர் அவளை பற்றி நினைக்காத நாளே இல்லை. அதனால் இப்போதும் அவன் அவளுக்காக யோசித்து காலை உணவும், மதிய உணவையும் அவளுக்கும் சேர்த்து எடுத்து வைத்துவிட்டு தான் சென்றிருந்தான். அந்த உணவுகளை நன்றியுடன் பார்த்த சுவாதி வேண்டா வெறுப்பாக அதை எடுத்து ஒரு தட்டில் போட்டு சாப்பிட தொடங்கினாள். தொடர்ந்து அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.
அதை துடைத்துவிட்டு தொடர்ந்து உணவு உண்ட ஸ்வாதி “பாப்பா.. உனக்கு யாரும் இல்லைன்னு நெனச்சு நீ என்னைக்கும் வருத்தப்படக் கூடாது. உனக்கு அம்மா நான் இருக்கேன். எவ்ளோ மோசமான சிச்சுவான் வந்தாலும், நான் உன்னை விட மாட்டேன். நீ எனக்குள்ள தான் இருக்க. என்னை நம்பி தான் இந்த பூமிக்கு வரப்போற. உன்ன பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. சோ என்ன ஆனாலும் சரி, யாருக்காகவும் அம்மா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்.” என்று தன் வயிற்றில் இருந்த குழந்தையிடம் பேசியப்படியே அந்த சிசுவிற்காகவே சாப்பிட்டாள். பின் அவளுக்கு கலைப்பாக இருக்க, மீண்டும் சென்று தனது அறையில் படுத்துக் கொண்டாள்.
அவள் மனம் ஒரே பாரமாக இருக்க, அவள் கண்கள் அவளையும் மீறி தொடர்ந்து கண்ணீர் சிந்தி கொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அதையும் துடைக்க தெம்பு இல்லாமல், “இதெல்லாம் என்ன வாழ்க்கையோ!” என்று நினைத்து அப்படியே மணிக்கணக்காக படித்திருந்தாள் சுவாதி. லஞ்ச் சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ சென்ற ஷங்கருக்கு திடீரென சுவாதியின் ஞாபகம் வர, “இந்நேரம் சாப்பிட்டிருப்பாளா அவ? கால் பண்ணி இப்ப எப்படி இருக்கான்னு கேட்டு பார்க்கலாம்.” என்று நினைத்து உடனே அவளுக்கு கால் செய்தான்.
தன் அருகில் இருந்த தலையணையை தன்னுடன் சேர்த்து இறுக்கி பிடித்துக் கொண்டு படுத்திருந்த ஸ்வாதி அவளது போனிற்கு கால் வரவும், “நான் ஆபீஸ்க்கு போய் இருப்பேன்னு இந்த நேரத்துல வீட்ல இருந்து யாரும் கால் பண்ண மாட்டாங்க. அப்ப தினேஷ் தான் கால் பண்ணிருக்காரா..?? அவர் என்ன பத்தி யோசிச்சுருப்பாரா? இந்த குழந்தை மேல அவருக்கும் உரிமை இருக்கு இல்ல.. அதான் அவருக்கும் குழந்தை வேணும்னு தோனி இருக்குமோ என்னமோ!” என்று நினைத்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாக எழுந்து சென்று டேபிளில் இருந்த தனது மொபைல் ஃபோனை பார்த்தாள்.
திரையில் தெரிந்த ஷங்கரின் பெயரை பார்த்தவுடன் அவளது முகம் வாடி போய்விட, அவளது இதழ்கள் ஒரு விரத்தி புன்னகையை சிந்தியது. அதுவரை அடித்துக் கொண்டிருந்த ஃபோன் ரிங்டோன் ஸ்டாப் ஆகிவிட்டது. சுவாதி தனது அழைப்பை ஏற்காததால் அவளை நினைத்து மேலும் கவலைப்பட்ட சங்கர் “காலை கூட அட்டென்ட் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்க இவ? ஒருவேளை தூங்கிட்டு இருக்காளா? எதுக்கும் இன்னொரு தடவை கால் பண்ணி பார்க்கலாம்.” என்று எண்ணி அவளுக்கு மீண்டும் கால் செய்தான்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
பின் நேற்று அவனையும் யாழினியையும் சங்கர் தான் எப்படியும் இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும் என்று நினைத்து நேராக அவனிடம் சென்று “கிளம்பிட்டீங்களா? யாழினி எங்க?” என்று கேட்க, “இதோ கிளம்பிட்டேன். வாங்க போலாம். பிரேக் டைம்ல ஆபீஸ் கேண்டில போய் சாப்பிட்டுக்கலாம்.” என்றபடி அங்கே வந்தாள் யாழினி. “சுவாதி எங்க அவ வரலையா?” என்று ஷங்கர் கேட்க, “அவளா.. அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. சோ அவ ஆபிஸ்க்கு வரலைன்னு சொல்லிட்டா. நீங்க வாங்க.. நம்ம கிளம்பலாம் லேட் ஆகுது. என் கார் கீ உங்க கிட்ட தானே இருக்கு?” என்று கேட்ட தினேஷ் சங்கரிடம் இருந்து தன் கார் சாவியை வாங்கிக் கொண்டு அவர்களுடன் அங்கே இருந்து தனது காரில் புறப்பட்டான்.
நேற்று சுவாதி தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி இருந்ததால், “என்ன ஆச்சு அவளுக்கு? நேத்தே நான் ஹாஸ்பிடல் போலாம் வான்னு கூப்பிட்டேன். அப்போ பரவாயில்ல ஒன்னும் இல்லன்னு தானே சொன்னா.. தினேஷும் அவளுக்கு என்னாச்சுன்னு சொல்லல. என்னவா இருக்கும்?” என்று யோசித்து குழம்பிய சங்கர் “நம்மளா கண்டதை யோசிச்சி எதுக்கு மண்டைய ஒடச்சிகிட்டு? ஆபீஸ் போயிட்டு ஃப்ரீ ஆகிட்டு அப்புறமா அவளுக்கு கால் பண்ணி பேசலாம்.” என்று நினைத்துக் கொண்டான்.
இங்கே அந்த வீட்டில் தனியாக அவளது ரூமின் ஒரு மூலையில் அமர்ந்து கால்களுக்கு நடுவில் தன் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்த ஸ்வாதி “ஏன் என் வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கு? எல்லா பொண்ணுங்க மாதிரியும் கல்யாணம் பண்ணி, என் புருஷன் கூட சந்தோஷமா வாழ்ந்து, குழந்தை பெத்துக்கிட்டு நிம்மதியா இருக்கணும்னு தானே நான் ஆசைப்பட்டேன்.. என்னோட அந்த நியாயமான சின்ன ஆசை கூட நடக்காதா?
கல்யாணமாகி முழுசா ஒரு வருஷம் கூட ஆகல. ஏற்கனவே வீட்ல இருக்குறவங்க எல்லாரும் என் கிட்ட தான் எப்போ நல்ல செய்தி சொல்ல போறீங்கன்னு கேட்டுட்டே இருக்காங்க. இப்போ நான் அம்மாவாகி இருக்கிற இந்த நேரத்துல, அந்த சந்தோஷத்தை கூட என்னால முழுசா கொஞ்ச நேரம் கூட அனுபவிக்க முடியலையே...!! ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? ஒரேடியா என்ன விட்டுட்டு போ.. இந்த குழந்தை வேணும்னா எனக்கு டிவோர்ஸ் கொடுத்துடுன்னு.. இவனால எப்படி ஈஸியா சொல்ல முடியுது?
ஒருவேளை அவனுக்கு இப்ப குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் இருந்தாலும் கூட, அத பத்தி என் கிட்ட பேசி என்னை கன்வின்ஸ் பண்ண கொஞ்சம் கூட ட்ரை பண்ணாம, எடுத்த உடனே குழந்தை வேணும்னா என்ன விட்டு போயிடுனு சொல்றானே.. மனுஷனா இவன்? ரீசன் எதுவா இருந்தாலும், இவனுக்கு என் மேல கொஞ்சமாவது பாசம் இருந்தா, இவனால இப்படி எல்லாம் இரக்கமே இல்லாம பேச முடியுமா? இவனுக்கு என் மேலயும் பாசம் இல்ல. என் குழந்தை மேலயும் அக்கறை இல்ல.” என்று நினைத்தாள்.
யாருக்காகவும் எதற்காகவும் தனது குழந்தையை மட்டும் இழந்து விடக் கூடாது என்று தெளிவாக இருந்த சுவாதிக்கு “என் மேல பாசமே இல்லாதவன் கூட நான் எதுக்கு வாழனும்? பேசாம இவன் கேட்கிற மாதிரி நான் இவனுக்கு டிவர்ஸ் கொடுத்தரவா?” என்று ஒரு நொடி யோசித்துப் பார்த்தாள். பின் அவனுடன் வாழ்ந்த நாட்கள் எல்லாம் அவளது மன கண்களில் வந்து செல்ல, “என்னால எப்படி அவன டிவர்ஸ் பண்ண முடியும்? அவன் வேணா என்ன ஒரு ஆளாவே நினைக்காம இருக்கலாம். ஆனா அவன் என்னை தொட்டு தாலி கட்டின புருஷன்.
இப்ப என் குழந்தையோட அப்பா. அவன் இல்லாம என்னால எப்படி என் குழந்தைய தனியா வளர்க்க முடியும்? அது பொறந்து அப்பா எங்க அம்மானு கேட்டா நான் யாரை காட்டுவேன்? அதுவும் இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் ஆகி ஜஸ்ட் 6 மன்த்ஸ்ல நான் டிவர்ஸ் வாங்க போறேன்னு சொன்னா.. என் வீட்ல இருக்குறவங்க கூட என் மேல தான் தப்புன்னு சொல்லி என்னை ஏத்துக்க மாட்டாங்க. அப்புறம் தினேஷும் இல்லாம, ஃபேமிலி சப்போர்ட்டும் இல்லாம நான் அனாதையா நடுத்தெருவில நிக்கணும். அதுக்காக என்னால எப்படி என் குழந்தையை கொல்ல முடியும்? ஐயோ கடவுளே! என்னை ஏன் இப்படி கொடுமை படுத்துற?” என்று நினைத்து அழுது கரைந்தாள்.
அவளது கெட்ட நேரம்.. கடவுளிடம் தனது கவலைகளைச் சொல்லி அழலாம் என்று நினைத்தாலும், அவளால் இப்போது இந்த நிலையில் வெளியில் கோவிலுக்கு செல்ல முடியாது. அந்த வீட்டிலும் ஒரு சாமி ஃபோட்டோ கூட இல்லை. மொத்தத்தில் கேட்பாரின்றி எனக்கென யாரும் இல்லையே.. என்று தனியாக சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அப்படியே நேரம் செல்ல, அவளுக்கு பசியாக இருந்தது. அதனால் தான் வயிற்றை பிடித்துக் கொண்டு எழுந்து கிச்சனுக்கு சென்ற சுவாதி அங்கே சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள். அவளை தினேஷ் எப்போதும் புரிந்து கொள்ள தவறி இருந்தாலும், சங்கர் அவளை பற்றி நினைக்காத நாளே இல்லை. அதனால் இப்போதும் அவன் அவளுக்காக யோசித்து காலை உணவும், மதிய உணவையும் அவளுக்கும் சேர்த்து எடுத்து வைத்துவிட்டு தான் சென்றிருந்தான். அந்த உணவுகளை நன்றியுடன் பார்த்த சுவாதி வேண்டா வெறுப்பாக அதை எடுத்து ஒரு தட்டில் போட்டு சாப்பிட தொடங்கினாள். தொடர்ந்து அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.
அதை துடைத்துவிட்டு தொடர்ந்து உணவு உண்ட ஸ்வாதி “பாப்பா.. உனக்கு யாரும் இல்லைன்னு நெனச்சு நீ என்னைக்கும் வருத்தப்படக் கூடாது. உனக்கு அம்மா நான் இருக்கேன். எவ்ளோ மோசமான சிச்சுவான் வந்தாலும், நான் உன்னை விட மாட்டேன். நீ எனக்குள்ள தான் இருக்க. என்னை நம்பி தான் இந்த பூமிக்கு வரப்போற. உன்ன பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. சோ என்ன ஆனாலும் சரி, யாருக்காகவும் அம்மா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்.” என்று தன் வயிற்றில் இருந்த குழந்தையிடம் பேசியப்படியே அந்த சிசுவிற்காகவே சாப்பிட்டாள். பின் அவளுக்கு கலைப்பாக இருக்க, மீண்டும் சென்று தனது அறையில் படுத்துக் கொண்டாள்.
அவள் மனம் ஒரே பாரமாக இருக்க, அவள் கண்கள் அவளையும் மீறி தொடர்ந்து கண்ணீர் சிந்தி கொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அதையும் துடைக்க தெம்பு இல்லாமல், “இதெல்லாம் என்ன வாழ்க்கையோ!” என்று நினைத்து அப்படியே மணிக்கணக்காக படித்திருந்தாள் சுவாதி. லஞ்ச் சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ சென்ற ஷங்கருக்கு திடீரென சுவாதியின் ஞாபகம் வர, “இந்நேரம் சாப்பிட்டிருப்பாளா அவ? கால் பண்ணி இப்ப எப்படி இருக்கான்னு கேட்டு பார்க்கலாம்.” என்று நினைத்து உடனே அவளுக்கு கால் செய்தான்.
தன் அருகில் இருந்த தலையணையை தன்னுடன் சேர்த்து இறுக்கி பிடித்துக் கொண்டு படுத்திருந்த ஸ்வாதி அவளது போனிற்கு கால் வரவும், “நான் ஆபீஸ்க்கு போய் இருப்பேன்னு இந்த நேரத்துல வீட்ல இருந்து யாரும் கால் பண்ண மாட்டாங்க. அப்ப தினேஷ் தான் கால் பண்ணிருக்காரா..?? அவர் என்ன பத்தி யோசிச்சுருப்பாரா? இந்த குழந்தை மேல அவருக்கும் உரிமை இருக்கு இல்ல.. அதான் அவருக்கும் குழந்தை வேணும்னு தோனி இருக்குமோ என்னமோ!” என்று நினைத்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாக எழுந்து சென்று டேபிளில் இருந்த தனது மொபைல் ஃபோனை பார்த்தாள்.
திரையில் தெரிந்த ஷங்கரின் பெயரை பார்த்தவுடன் அவளது முகம் வாடி போய்விட, அவளது இதழ்கள் ஒரு விரத்தி புன்னகையை சிந்தியது. அதுவரை அடித்துக் கொண்டிருந்த ஃபோன் ரிங்டோன் ஸ்டாப் ஆகிவிட்டது. சுவாதி தனது அழைப்பை ஏற்காததால் அவளை நினைத்து மேலும் கவலைப்பட்ட சங்கர் “காலை கூட அட்டென்ட் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்க இவ? ஒருவேளை தூங்கிட்டு இருக்காளா? எதுக்கும் இன்னொரு தடவை கால் பண்ணி பார்க்கலாம்.” என்று எண்ணி அவளுக்கு மீண்டும் கால் செய்தான்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-41
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-41
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.