Chapter-40

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
காலைப் பொழுது அழகாக விடிந்தது. தினேஷ் யாழினி இருவருமே தூங்கி எழுந்து இரவு எதுவும் நடக்காததை போலவும், அவர்கள் இங்கே எப்படி வந்தார்கள் என்றெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை என்பது போலவும், தாங்களாக எழுந்து வழக்கம்போல ஆபீஸீற்க்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ஷங்கருக்கு எரிச்சலாக இருந்தாலும், இத்தனை வருடங்களில் அவன் இதற்கெல்லாம் பழகி இருந்ததால் வழக்கம்போல அவன் இதயும் “எப்பயும் நடக்கிறது தானே” என்று நினைத்து சுலபமாக கடந்து சென்று விட்டான். ஆனால் சுவாதிக்கு அப்படி இல்லை என்பதால் தினேஷின் மீது இருந்த கோபத்தில் அவள் அவனிடம் பேசவே இல்லை.



அதைக் கூட கண்டுக் கொள்ளாத தினேஷ் அவளை ஒரு ஆளாகவே மதிக்காமல் அவன் பாட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். அதனால் இன்னும் அவளுக்கு கோபம் தலைக்கு ஏற, “இல்ல ஸ்வாதி.. இந்த மாதிரி நேரத்துல நீ கோபப்படக் கூடாது. உனக்கு டைம் இல்ல. நீ இப்பவே இத பத்தி அவர் கிட்ட பேசிரு. இப்படியே எத்தனை நாளைக்கு விட முடியும்?” என்று நினைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சுவாதி “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று தயக்கத்துடன் அவனிடம் சொன்னாள். நேற்று இதைப்பற்றி அவனிடம் பேச வேண்டும் என்று நினைக்கும் போது அவளிடம் இருந்த எக்சைட்மென்ட் இப்போது இல்லை.



இதனால் அவன் சந்தோஷப்படுகிறானோ இல்லையோ.. சொல்ல வேண்டியது என் கடமை. என்ற ரீதியில் அவள் அவனை பார்க்க, அப்படி கூட பதிலுக்கு அவளை திரும்பிப் பார்க்காமல் தனது வாட்சை தேடி கண்டுபிடித்து எடுத்து கையில் கட்டிக் கொண்டிருந்த தினேஷ் “என்ன.. சீக்கிரம் சொல்லு. லேட் ஆகும்னா ஈவினிங் கூட வந்து பேசிக்கலாம். ஆபீஸ்க்கு லேட் ஆகுது. இங்க சாப்பிடுறதுக்கு கூட டைம் இல்ல.” என்றான். அவன் தனக்கு முகம் கொடுத்து கூட பேசாத போது, அவனிடம் இப்படி ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா? என்று அவளுக்குள் தோன்றினாலும் “சொல்லி தானே ஆகணும்! வேற என்ன பண்றது?” என்று நினைத்த சுவாதி அவனை சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்து பெரிதாக பில்டப் செய்து சொல்லாமல் இருந்த கடுப்பில் அவன் தாடையை பிடித்து அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி அவன் கண்களைப் பார்த்து கனீர் குரலில் “நான் பிரக்னெண்டா இருக்கேன் தினேஷ். ஆல்ரெடி 3 months மேல ஆயிடுச்சு. எனக்கு தெரியல.‌ நான் போன வாரம் பிரக்னென்சி கிட் வாங்கி டெஸ்ட் பண்ணன். அப்புறம் கோவிலுக்கு போயிட்டு நான் டாக்டர் கிட்ட போய் செக் பண்ணேன்.





அவங்களும் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. இன்னைக்கு ஈவினிங் என்னமோ டெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி வர சொன்னாங்க. உங்களையும் கூட்டிட்டு வர சொன்னாங்க. இன்னைக்கு போய் டாக்டரை பார்த்துட்டு வந்துடலாமா?” என்று கேட்டாள்‌. அவள் சொன்னதை கேட்டு ஷாக் ஆகி அப்படியே ஒரு நொடி நின்ற தினேஷ் பின் “காலங் காத்தால என்ன டி உளறிட்டு இருக்க? நேத்து நான் தானே குடிச்சிட்டு வந்தேன்.. அதிலேயே உனக்கு போதை ஏறிடுச்சோ? இல்ல.. சும்மா என்னை prank பண்றதுக்காக இப்படி சொல்லிட்டு இருக்கியா? நான் ஆல்ரெடி லேட் ஆகுதுன்னு செம டென்ஷன்ல இருக்கேன். நீ வேற இப்படி எல்லாம் பேசி இன்னும் என்னை கடுப்பேத்தாத. போ.. போய் ஆபீஸ்க்கு கிளம்பற வழியை பாரு.” என்று சொல்லிவிட்டு அவள் கையை தட்டிவிட்ட தினேஷ் அவனது சட்டை காலரை கண்ணாடியின் முன்னே நின்று அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தான்.



தொடர்ந்து தினேஷின் அடுத்தடுத்த செயல்களால் disappointஆன சுவாதி வேகமாக சென்று அவளது பீரோவில் இருந்த டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்டை எடுத்து வந்து அவன் முகத்தின் முன்னே நீட்டி “இங்க பாருங்க.. டாக்டர் கொடுத்த ரிப்போர்ட். இன்னும் நான் ஸ்கேன் மட்டும் தான் பண்ணல. அதுக்குத்தான் இன்னைக்கு வர சொல்லி இருக்காங்க. ஸ்கேன் பண்ணி பார்த்தா நம்ம குழந்தை எப்படி இருக்குன்னு தெரியும்.” என்றாள். வெடுக்கென அவள் கையில் இருந்து அந்த ரிப்போர்ட்டை பிடுங்கி அதை சிவந்த கண்களுடன் திறந்த தினேஷ் அதில் மிஸ்ஸஸ் சுவாதி தினேஷ் குமார் என்ற பெயரில் இருந்த அவளது pregnancy test reportஐ கண்டான். உடனே அவனது முகம் இறுகிவிட, அவனுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.



இப்படி ஒரு விஷயம் திடீரென நடக்கும் என அவன் கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்கவில்லை. இருப்பினும் அவனது அனுபவங்கள் பிரச்சனைகள் வரும்போது உடனே அதற்கான தீர்வைத் தான் யோசிக்க வேண்டும் என்று உடனே அவனுக்கு வலியுறுத்த, அந்த ரிப்போர்ட்டை தூக்கி கட்டிலில் வீசி எறிந்த தினேஷ் சுவாதியின் தோள்களை பற்றிக் கொண்டு “எவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு.. இத இவ்வளவு லேட்டா தான் வந்து சொல்லுவியா? சரி விடு, அதான் டாக்டர் உன்ன இன்னைக்கு வர சொல்லி இருக்காங்க இல்ல.. நம்ம போய் அவங்கள பாத்துட்டு வந்துடலாம். முடிஞ்சா இன்னைக்கே அபார்ஷன் பண்ணிடலாம். இத பத்தி வேற யார் கிட்டயாவது சொன்னியா?

முக்கியமா வீட்ல இருக்குறவங்களுக்கு இதை பத்தி தெரியக் கூடாது. நீ தெரியாம அவங்க கிட்ட இத பத்தி உளறி வச்சிருந்தா இப்பவே சொல்லிடு. பக்காவா பிளான் பண்ணி யாருக்கும் தெரியாம இதை அபார்ஷன் பண்ணிட்டு நீ கீழ விழுந்ததுனால அபார்ஷன் ஆயிடுச்சுன்னு பொய் சொல்லிடலாம்.” என்று மனசாட்சியே இல்லாமல் பேசினான் தினேஷ்.



நேற்று தான் அவனுக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்க போகும் சம்பள உயர்வை வைத்து வீடு வாங்க வேண்டும், தனது கார் டியூவை சீக்கிரம் கட்டிவிட வேண்டும் என்றெல்லாம் அவன் எத்தனையோ திட்டங்கள் வைத்திருக்க, அவர்களுக்கு பிறக்கப் போகும் இந்த குழந்தை அதற்கெல்லாம் தடையாக இருப்பதை அவன் துளியும் விரும்பவில்லை‌.



“நமக்கு குழந்தை பிறக்கப் போகுதுன்னு தெரிஞ்சா, நீங்க சந்தோஷப்படுவீங்கன்னு நினைச்சேன். எப்படி உங்களால மனசாட்சியே இல்லாம இன்னும் பூமிக்கு வராத நம்ம குழந்தையை கொல்ல சொல்ல முடியுது? நமக்கு பிறக்க போற பாவத்துக்கு அது பிறக்காமலேயே சாகனுமா?” என்று கோபமாக சுவாதி கத்தி கேட்க, அவள் கண்களில் இருந்து அருவி போல கொட்டியது கண்ணீர்.



கல்லுக்குள் ஈரம் என்பதைப் போல அவள் தனது குழந்தையை தான் என்னவோ கொலை செய்வதாக சொன்னதைக் கேட்டவுடன் தினேஷுக்கு கோபம் வந்துவிட, மீண்டும் அவளது தோள்களை இறுக்கப்பற்றி “நீ என்ன லூசா டி? நம்ம குழந்தைய கொல்லனும்னு நானே நினைப்பேனா? இது ஜஸ்ட் அபார்ஷன் அவ்ளோ தான். இப்ப என்னால ஒரு குழந்தைக்கு அப்பனாக முடியாது. புரியுதா உனக்கு? இன்னொரு 3, 4 வருஷம் போகட்டும். எனக்கு இன்னும் கொஞ்சம் சேலரி அதிகமாகும் போது, நான் வேற கம்பெனிக்கு ஷிப்ட் ஆகிடுறேன். அப்ப நம்ம மேரேஜ் பத்தி வெளிய தெரிஞ்சா ஒன்னும் பிரச்சனை இல்ல. அப்ப தான் மேரேஜ் ஆன மாதிரி கூட சீன் போட்டுக்கலாம். பட் இப்ப இந்த குழந்தை பிறக்கிறத என்னால அலோ பண்ண முடியாது.

நான் சொல்றது உனக்கு புரியுதா? இந்த குழந்தை நமக்கு வேண்டாம் சுவாதி. நான் தானே உன் ஹஸ்பண்ட்... எப்ப நமக்கு குழந்தை பொறக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும். நமக்கு தேவைப்படும்போது பெத்துக்கலாம். ஒன்னும் அவசரம் இல்ல. இன்னைக்கே நம்ம ஹாஸ்பிடலுக்கு போய் அபார்ஷன் பண்ணிடலாம்‌‌. நீ இரண்டு நாள் வீட்டில இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா கூட ஆபீஸ்க்கு வா. நான் உனக்கு சிக் லீவ் வாங்கி குடுக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு தனது கார் சாவியை தேடத் தொடங்கினான்.



அவன் பேசுய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளது இதயத்தை குத்தி கிளிக்கத் தொடங்கியது. கணவனுடன் வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதை அவளால் பொறுத்து செல்ல முடியும். ஆனால் தான் கருவுற்ற விஷயத்தை தெரிந்து கொண்ட நொடியில் இருந்தே சுவாதி தன்னை ஒரு தாயாக உணரத் தொடங்கி இருந்தாள். அதனால் அந்த சிசுவை இலக்க அவளுக்கு மனம் வரவில்லை. ஏன் இப்போது அந்த குழந்தைக்கு முன்பு தினேஷ் கூட அவளுக்கு முக்கியமாக தெரியவில்லை.



அதனால் தன் கண்ணீரை துடைத்துவிட்டு அவனை தீர்க்கமாக பார்த்த ஸ்வாதி “நான் இந்த குழந்தை எனக்கு வேணும்னு சொன்னா நீ என்ன பண்ணுவ?” என்று கோபமாக கேட்க, அவளை திரும்பி மேலும் கீழும் பார்த்த தினேஷ் ஒரு நொடி கூட யோசிக்காமல் “உன்ன டிவர்ஸ் பண்ணிடுவேன். என்னையும், என் கரியரையும் பத்தி யோசிக்க தெரியாத உன்ன மாதிரியான ஆளுக்கு என் வைஃபா இருக்க தகுதியே இல்ல சுவாதி. உனக்கு இந்த குழந்தை தான் வேணும்னா, உன் இஷ்டம் பெத்துக்கோ.

தொடரும்...

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-40
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.