CHAPTER-37

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
மீரா : ஒருவேள‌ அர்ஜுனுக்கு எல்லா ஞாப‌கோ வ‌ந்து, அவ‌ உதையாவாவே மாறிட்டா, நீ அர்ஜுன‌ வெறுத்திருவ‌யா?

ச‌ந்ரா சிறிது நேர‌ம் யோசித்துவிட்டு,

ச‌ந்ரா : என‌க்கு தெரிய‌ல‌ மீரா அக்கா. ஆனா ஒன்னு ம‌ட்டு சொல்றே, அர்ஜுன் உதையாவா மாற‌வே கூடாது. அது ம‌ட்டுந்தா என்னோட‌ ஆச‌.

அங்கு அர்ஜுன் யோசித்துக்கொண்டே இருந்தான்.

அர்ஜுன் : எப்பிடியாவ‌து என்னோட‌ வாழ்க்கையில‌ என்ன‌ ந‌ட‌ந்த‌துன்னு கூடிய‌ சீக்கிரோ நா க‌ண்டுப்பிடிக்க‌னு.

அப்போது ச‌ந்ரா ரூமுக்குள் வ‌ந்தாள். அர்ஜுன் ம‌ன‌திற்க்குள்,

அர்ஜுன் : (மனதிற்க்குள்) இத‌ ப‌த்தி என‌க்கே இன்னும் முழுசா தெரிய‌ல‌. தெரிஞ்ச‌துக்கு அப்றமா ச‌ந்ராகிட்ட‌ இத‌ ப‌த்தி சொல்லிக்க‌லா. இப்போதைக்கு சந்ராகிட்ட எதுவும் சொல்ல வேண்டா.

ச‌ந்ரா : அர்ஜுன் ! உன‌க்கு இப்போ எப்பிடி இருக்கு?

அர்ஜுன் : இப்போ ப‌ர‌வால்ல‌, நா ந‌ல்லா இருக்கே.

ச‌ந்ரா : நா உங்கிட்ட ஒரு விஷியோ கேக்க‌ட்டுமா?

அர்ஜுன் : இது என்ன‌ கேள்வி ஸ்வீட் ஹார்ட்? கேளு.

ச‌ந்ரா : உன‌க்கு எதாவ‌து வித்தியாசமா தோனுதா? அதாவ‌து, எதாவ‌து ஞாப‌கோ வ‌ந்த‌ மாதிரி, எதாவ‌து?

அர்ஜுன் : (ம‌ன‌திற்க்குள்) என்ன‌ இவ‌ எல்லா தெரிஞ்ச‌ மாதிரி கேக்குறா?

ச‌ந்ரா : என்ன‌ யோசிக்கிற‌ அர்ஜுன்? சொல்லு.

அர்ஜுன் : இல்லையே நா நார்மலாதா இருக்கே. ஏ திடீர்னு இப்பிடி கேக்குற‌?

ச‌ந்ரா : ஒன்னு இல்ல‌, டாக்ட‌ர் என்ன‌ சொன்னாங்க‌ன்னா, அப்ரேஷ‌ன் முடிஞ்ச‌தும் உன‌க்கு ப‌ழ‌செல்லா ம‌ற‌ந்திரும், இல்ல‌ன்னா நீ ம‌ற‌ந்துப்போன‌து எதாவ‌து உன‌க்கு ஞாப‌கோ வ‌ருன்னு சொன்னாங்க‌. அதா உன‌க்கு எதாவ‌து ஞாப‌கோ வ‌ந்த‌தான்னு கேட்டே.

அர்ஜுன் : இல்ல‌ ச‌ந்ரா. என‌க்கு அப்பிடி எதுவும் ஞாப‌கோ வ‌ர‌ல‌.

ச‌ந்ரா : செரி அர்ஜுன். நீ ரொம்ப‌ யோசிக்காத‌. ரெஸ்ட் எடுத்துக்கோ.

அர்ஜுன் : ம்ம்.

அர்ஜுன் ப‌டுத்துக்கொண்டான்.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) ந‌ல்ல‌வேள‌ அர்ஜுனுக்கு எதுவும் ஞாப‌கோ வ‌ர‌ல‌. ஈஷ்வ‌ரா ! அர்ஜுனுக்கு அவ‌னோட‌ பூர்வ‌ ஜென்மோ ஞாப‌கோ வ‌ராம பாத்துக்கோங்க‌. அர்ஜுன் எப்ப‌வும் உதையாவா மாற‌வேக்கூடாது.

இர‌வு வ‌ந்த‌து. அர்ஜுன் Sofaவில் ப‌டுக்க‌ த‌லகாணியையும் பெட் ஷீட்டையும் எடுத்துக்கொண்டு, அதை Sofaவில் வைத்துவிட்டு, பாத்ரூமுக்கு சென்றான். பிற‌கு அர்ஜுன் பாத்ரூமில் இருந்து வெளியே வ‌ந்து பார்த்தான். அதிர்ச்சியில் அப்ப‌டியே நின்றான். அர்ஜுன் அதிர்ச்சியில்,

அர்ஜுன் : நா பாக்குற‌து என்ன‌ க‌ன‌வா நெனவா?

அங்கு Sofaவில் இருந்த‌ பெட் ஷீட்டையும் த‌ல‌காணியையும் ச‌ந்ரா எடுத்து க‌ட்டிலில் அடுக்கிக்கொண்டிருந்தாள்.

அர்ஜுன் : பொன்டாட்டி ! என்ன‌ ப‌ண்ணிகிட்டிருக்க‌?

ச‌ந்ரா : நீ ஒட‌ம்பு செரியில்லாம‌ இருக்க‌, அத‌னால‌ நீ பெட்டுலையே ப‌டுத்துக்கோ.

அர்ஜுன் : ப‌ர‌வால்லையே ஸ்வீட் ஹார்ட்,, மொத‌ல் முறையா நீ என்க்கூட‌ பெட்ட ஷேர் ப‌ண்ற‌ன்னு சொல்ற‌. செரி வா தூங்க‌லா.

அர்ஜுன் வேக‌மாக‌ வ‌ந்து, க‌ட்டிலில் ப‌டுத்துக்கொண்டான்.


அர்ஜுன் : வா ச‌ந்ரா நீயும் வ‌ந்து ப‌டுத்துக்கோ. வா.

ச‌ந்ரா மெதுவாக‌ அர்ஜுன் அருகில் வ‌ந்தாள். அர்ஜுன் காத‌லுட‌ன் ச‌ந்ராவை பார்த்தான். ச‌ந்ரா அவ‌ன் அருகில் வ‌ந்து, அர்ஜுனை பார்த்து,

ச‌ந்ரா : ஓவர் கனவுக்கான வேண்டா.

என்று கூறிவிட்டு, அவ‌ளுடைய‌ பெட்டையும் த‌ல‌காணியையும் எடுத்துக்கொண்டு Sofaவுக்கு சென்றுவிட்டாள். அதை பார்த்த‌ அர்ஜுன்,

அர்ஜுன் : என்ன‌ பொன்டாட்டி இது? நீ எதுக்கு அங்க‌ போற‌?

ச‌ந்ரா : உன‌க்குதா ஒட‌ம்பு செரியில்ல‌. நீ அங்க‌யே ப‌டுத்துக்கோ. நா இங்க‌ ப‌டுத்துக்குறே. Good night.

அர்ஜுன் : ஸ்வீட் ஹார்ட் ! பொன்டாட்டி!

ச‌ந்ரா முக‌த்தை மூடி தூங்கிவிட்டாள்.

அர்ஜுன் : இவ‌ என்ன‌ இப்பிடி ப‌ண்ணீட்டா?

என்று கூறிவிட்டு அர்ஜுனும் தூங்கிவிட்டான். சிறிது நேர‌ம் க‌ழித்து, அர்ஜுனுக்கு ஒரு க‌ன‌வு வ‌ருகிற‌து. அதில் அவ‌னுடைய‌ பூர்வ‌ ஜென்மதில் க‌டைசியாக‌ ந‌ட‌ந்த‌து தெறிகிற‌து. அதில்,

உதையாவை அமிர்த்தா க‌த்தியால் குத்துவது தெறிகிறது.

உடனே தூக்க‌த்தில் இருந்து அர்ஜுன் அல‌ரி அடித்து எழுந்தான். அந்த‌ ச‌த்த‌த்தில் ச‌ந்ராவும் எழுந்து,

ச‌ந்ரா : அர்ஜுன் ! என்ன‌ ஆச்சு?

ச‌ந்ரா, அர்ஜுன் அருகில் வ‌ந்து அம‌ர்ந்து,

ச‌ந்ரா : என்ன‌ ஆச்சு அர்ஜுன்?

அர்ஜுன் : (ப‌த‌ட்ட‌த்துட‌ன்) என‌க்கு ஒரு கெட்ட‌ க‌ன‌வு. அதுல‌ என்ன யாரோ க‌த்தியால‌ குத்துனாங்க. திரும்ப திரும்ப குத்துனாங்க. அது ஒரு பொண்ணு.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) நா எத‌ நென‌ச்சு ப‌ய‌ந்த‌னோ, அது ந‌ட‌ந்திரிச்சு. அர்ஜுனுக்கு அவ‌னோட‌ பூர்வ‌ ஜென்மோ ஞாபகம் வர ஆர‌ம்பிக்கிது.

பிறகு சந்ரா அர்ஜுனை பார்த்து,

ச‌ந்ரா : அந்த‌ பொண்ணு யாரு? அவ‌ள‌ பாத்தியா?

அர்ஜுன் ந‌ன்றாக‌ யோசித்தான். ச‌ந்ரா மிகுந்த‌ ஆவ‌லாக‌ அர்ஜுனிட‌ம் ப‌திலை எதிர்ப்பாத்தாள்.

அர்ஜுன் : இல்ல‌ அவ‌ளோட‌ மொகோ செரியா தெரிய‌ல‌.

ச‌ந்ரா : செரி நீ அத‌ ப‌த்தி எதுவும் யோசிக்காத‌ அர்ஜுன். அது வெறு க‌ன‌வுதா. நீ தூங்கு.

என்று கூறிவிட்டு க‌ட்டிலில் இருந்து எழுந்தாள். அர்ஜுன் அவ‌ள் கையை பிடித்து,

அர்ஜுன் : (ப‌த‌ட்ட‌த்த்துட‌ன்) பிலீஸ் எங்க‌யும் போகாத‌. என்க்கூட‌வே இரு.

ச‌ந்ரா : செரி அர்ஜுன் நா எங்க‌யுமே போக‌ல‌. இங்க‌தா இருக்கே. நீ தூங்கு.

அர்ஜுன், ச‌ந்ராவின் ம‌டியிலேயே ப‌டுத்துக்கொண்டான்.

அப்ப‌டியே தூங்கிவிட்டான். ச‌ந்ரா அர்ஜுனை பார்த்துக்கொண்டே,

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) உன‌க்கு உன்னோட‌ பூர்வ‌ ஜென்மோ ஞாப‌கோ வ‌ராம‌ இருக்கிற‌துதா ந‌ல்ல‌து அர்ஜுன். அது ஞாப‌கோ வ‌ந்தா, ந‌ல்ல‌வ‌னா இருக்கிற‌ நீ கொடுர‌மான‌ கெட்ட‌வ‌னா மாறிருவ‌.









ச‌ந்ராவும் அர்ஜுன் மீது த‌லை வைத்து ப‌டுத்து தூங்கிவிட்டாள்.

இர‌வு விடிந்த‌து. அடுத்த‌ நாள் காலை, ச‌ந்ரா எழுந்து அர்ஜுனுக்கு Cofee கொண்டுவ‌ந்தாள்.

ச‌ந்ரா : அர்ஜுன் ! டைம் ஆயிரிச்சு எந்திரி.

அர்ஜுன் எழுந்து ச‌ந்ராவை பார்த்து,

அர்ஜுன் : Good morning....

ச‌ந்ரா : Good morning அர்ஜுன். எந்திரி.

அர்ஜுன் Cofeeயை வாங்கி குடித்துவிட்டு, ச‌ந்ராவை பார்த்தான்.

அர்ஜுன் : வெளிய‌ எங்கியாவ‌து போறியா? ரெடி ஆய் நிக்கிற‌?

ச‌ந்ரா : ஆமா அர்ஜுன். நா கோவிலுக்கு போற‌துக்காக‌ ரெடி ஆனே.

அர்ஜுன் : அப்பிடியா? ஏ இவ்ளோ காலைல‌?

ச‌ந்ரா : இவ்ளோ காலைல‌யா? டைம் என்ன‌ன்னு பாரு.

அர்ஜுன் டைம் பார்த்தான். ம‌ணி 10:00.

அர்ஜுன் : இவ்ளோ நேரோ ஏ என்ன‌ எழுப்ப‌ல‌?

ச‌ந்ரா : நீ ரொம்ப‌ அச‌ந்து தூங்கிட்டு இருந்த‌, அதோட‌ உன‌க்கு ஒட‌ம்புவேற‌ செரியில்ல‌. அதா நா உன்ன‌ தொந்த‌ர‌வு ப‌ண்ண‌வேண்டான்னு உன்ன‌ எழுப்ப‌ல‌.

அர்ஜுன் : 10:00 ம‌ணிக்கு எழுப்பியிருக்க‌, நா எப்பிடி ஆப்பீஸ் போற‌து?

ச‌ந்ரா : நீ இன்னு கொஞ்ச‌ நாளைக்கு ஆப்பீஸ் எல்லா போக‌க்கூடாது. வீட்டுலையே ரெஸ்ட் எடு.

அர்ஜுன் : என்ன‌? ஆப்பீஸ் போக‌க்கூடாதா?

ச‌ந்ரா : ஆமா. நீ போக‌க்கூடாது.

அர்ஜுன் : (அதிர்ச்சியாக‌) என்ன‌ சொல்ற‌ ச‌ந்ரா?

ச‌ந்ரா : போக‌க்கூடாதின்னா, போக‌க்கூடாது.

அதிர்ச்சியில் இருந்த‌ அர்ஜுன், திடீரென‌ சிரித்து,

அர்ஜுன் : அப்பாடா. ரொம்ப‌ ச‌ந்தோஷோ. இனி நாள் முழுக்க‌ உன்ன‌ பாத்துகிட்டே இருக்க‌லா.

இப்போது, ச‌ந்ரா அதிர்ச்சியானாள். அர்ஜுன் ச‌ந்ரா அருகில் வ‌ந்து,

அர்ஜுன் : என்ன‌ பொன்டாட்டி ஷாக் ஆய்ட்டியா? வீட்டுல‌ இருக்குறதுதா என‌க்கு ரொம்ப‌ சந்தோஷம். ஆப்பீஸ்ல அந்த‌ மீட்டிங், போன் கால்ஸ், இதெல்லா இல்லாம‌ நிம்ம‌தியா, ஒவ்வொரு நிமிஷ‌மு உன்ன‌ ம‌ட்டு பாத்திட்டே இருப்பே.

ச‌ந்ரா : நீ இப்பிடியே பேசிட்டு இரு. நா கோவிலுக்கு போறே.

ச‌ந்ரா அங்கிருந்து செல்லும்போது,

அர்ஜுன் : ச‌ந்ரா இரு நானு வ‌ர்றே.

ச‌ந்ரா : வேண்டா நீ ரெஸ்ட் எடு. நா போய்ட்டு சீக்கிர‌மா வ‌ந்த‌ர்றே.

அர்ஜுன் : Ok சீக்கிர‌மா வா. நா உன‌க்காக‌ காத்திட்டிருக்கே.

ச‌ந்ரா அங்கிருந்து சென்றாள். கோவிலுக்கு சென்றாள். அங்கு சிவ‌ப்பெருமானிட‌ம் ச‌ந்ரா,

ச‌ந்ரா : ஈஷ்வ‌ரா ! எதுக்காக‌ என‌க்கு இப்பிடி ஒரு சூழ்நில‌? இவ்ளோ ந‌ல்ல‌வனா இருக்கிற‌ இந்த‌ அர்ஜுன், ஏ போன‌ ஜென்ம‌த்துல‌ கெட்ட‌வ‌னா இருந்தா? அதுனால‌தா, அர்ஜுன் இப்போ கெட்ட‌வ‌னா மாற‌ப்போறா. த‌ய‌வு செஞ்சு அர்ஜுனுக்கு அவ‌ந்தா உதையான்னு தெரியாம‌ பாத்துக்கோங்க‌ ஈஷ்வ‌ரா. அவ‌ கெட்ட‌வ‌னா மாற‌க்கூடாது.

அங்கு சாமிஜி வ‌ந்தார். அந்த‌ குருஜி,

குருஜி : க‌வ‌லைப்ப‌டாதே ச‌ந்ரா.

ச‌ந்ரா : குருஜி நீங்க‌ளா?

குருஜி : என்னை நினைவிருக்கிற‌தா ச‌ந்ரா?

ச‌ந்ரா : இருக்கு குருஜி. நீங்க‌தா என்னோட‌ பூர்வ‌ ஜென்ம‌த்த‌ என‌க்கு உண‌ர்த்துனீங்க‌. அதோட‌ பூர்வ‌ ஜென்ம‌த்துல‌ நீங்க‌தா இந்த‌ கோவிலோட‌ குருஜி.

குருஜி : ப‌ர‌வாயில்லை ச‌ந்ரா, உன‌து பூர்வ‌ ஜென்ம‌ம் உன‌க்கு ஞாப‌க‌ம் வ‌ந்துவிட்ட‌து.

ச‌ந்ரா : ஆமா குருஜி. ஆனா என‌க்கு இப்போ இருக்கிற‌ ப‌ய‌த்த‌ ப‌த்தி உங்க‌ளுக்கு தெரிஞ்சிருக்குமில்ல‌?

குருஜி : அறிவேன் ச‌ந்ரா. அர்ஜுனுக்கு அவ‌ன்தான் உதையா என்று ஞாப‌க‌ம் வ‌ர‌க்கூடாது என்று நீ நினைக்கிறாய்.

ச‌ந்ரா : ஆமா குருஜி.

குருஜி : ஆனால் அவ‌னுக்கு ஒரு நாள் அது ஞாப‌க‌ம் வ‌ந்தே தீரும். அதுவே அந்த‌ சிவ‌னின் விருப்ப‌ம்.

ச‌ந்ரா : இல்ல‌ குருஜி. அப்பிடி ம‌ட்டு ந‌ட‌க்க‌ கூடாது. அவ‌னுக்கு ஞாப‌கோ வ‌ந்தா அப்றோ, அவ‌ உத‌யாவாவே மாறிருவா. அர்ஜுன் கெட்ட‌வ‌னாயிருவா.

குருஜி : நாம் நினைப்ப‌தே ந‌ட‌க்கும் என்றால், அந்த‌ இறைவ‌ன் எத‌ற்க்கு?

ச‌ந்ரா : என்ன‌ குருஜி சொல்றீங்க‌? எனக்கு புரியல. அர்ஜுனுக்கு ஞாபகம் வந்ததுக்கு அப்றோ, அவ கெட்டவனா மாறமாட்டானா? இல்ல மாறுவானா?

தொடரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-37
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.