Chapter-35

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
“ஏய்.. என்னடி பேச்சு பேசுற! அவரு பக்கத்துல இருக்காரா?” என்று அவள் அம்மா அவசரமான குரலில் கேட்க, “ஆமா.. ஆமா.. பக்கத்துல தான் தூங்கிட்டு இருக்காரு. நீ விடு, நான் பேசுறதெல்லாம் அவருக்கு கேட்காது. இடியே விழுந்தாலும் மனுஷன் அதையெல்லாம் கண்டுக்காம தூங்குறதுல தான் குறியா இருப்பாரு.” என்று எரிச்சலுடன் சொன்னாள் அவள். “அட பைத்தியக்காரி.. புருஷனை பக்கத்திலயே வச்சுக்கிட்டா இப்படி அவர பத்தி குறை சொல்லுவ? முதல்ல அந்த ரூம விட்டு வெளிய வா. அவரு தூங்குற மாதிரி நீ பேசுறதை கேட்டுட்டு இருந்தா என்ன பண்ணுவ? அப்புறம் இத வச்சு தேவையில்லாம உங்களுக்குள்ள சண்டை வரும்.” என்று தன் அம்மா சொன்னதால், ஃபோனை எடுத்துக் கொண்டு பால்கனி பக்கம் சென்ற சுவாதி வளர்பிறையில் கொஞ்சம் கொஞ்சமாக அழகாக வளர்ந்து கொண்டிருந்த பாதி நிலவை கண்டாள்.



அதை பார்த்தபடி அவள் அமைதியாகவே இருக்க, “என்ன.. வெளிய வந்தியா இல்லையா..??” என்று அவள் அம்மா அழுத்தி கேட்க, ம்ம்.. என்றாள் சுவாதி. “மாப்பிள்ளை உன் கிட்ட நல்லபடியா நடந்து கொள்கிறாரா? இப்ப உங்களுக்குள்ள எல்லாம் சரியா போயிட்டு இருக்கா? ஏதாவது முன்னேற்றம் இருக்கா.. இல்ல அன்னைக்கு மாதிரி தான் இன்னும் இருக்கீங்களா?” என்று அவள் அம்மா சூசகமாக கேட்க, தன் வாழ்க்கையை நினைத்து பார்த்த சுவாதிக்கு சிரிப்பு தான் வந்தது.



உண்மையில் தன் அம்மாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை. அவளது மனதிற்குள் ஆயிரம் சஞ்சலங்கள் இருந்தாலும், அவள் மனதோரம் ஏதோ ஒரு சந்தோஷமும் நிம்மதியும் இருந்தது. அதற்கு என்ன காரணம் என்று அவள் ஒரு நொடி யோசித்துப் பார்க்க, அவளுக்கு ஷங்கரின் சிரித்த முகம் தான் ஞாபகம் வந்தது. அது அவளது முகத்திலும் புன்னகையை வரவழைக்க, நடந்த அனைத்தையும் அந்த நொடி மறந்து போன ஸ்வாதி உற்சாகமான குரலில் “ம்ம்.. எல்லாம் நல்லா தான் மா போயிட்டு இருக்கு. புது இடம்.. புது வாழ்க்கை.. இங்க எல்லாமே புதுசா இருக்கு.

இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா நான் எல்லாத்துக்கும் பழக ஆரம்பிச்சிருக்கேன். வீட்டு வேலை எல்லாத்தையும் நான் தான் பாக்கிறேன். இருந்தாலும் இப்ப எல்லாம் என்னவோ அத செய்யும் போது கூட சந்தோஷமா தான் இருக்கு. நான் நினைச்ச மாதிரி எதிர்பார்க்கிற மாதிரி இந்த வாழ்க்கை இருக்கான்னு எனக்கு தெரியல. ஆனா எனக்கு இது புடிச்சிருக்கு.” என்று வானத்தைப் பார்த்தவாறு சொன்னாள் ஸ்வாதி.



அவள் குரலில் இருந்த சந்தோஷத்தை உணர்ந்த ஸ்வாதியின் அம்மா “எப்படியோ நீ நல்லா இருந்தா சரி. நான் போய் தூங்குறேன். எனக்கு தூக்கம் தூக்கமா வருது. அப்பப்ப எனக்கு ஃபோன் பண்ணு சரியா? நான் வைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட, அப்படியே அந்த நள்ளிரவு நேரத்தின் அமைதியான வானத்தைப் பார்த்து ரசித்த ஸ்வாதிக்கு அரை மணி நேரத்திற்கு மேல் அவள் அங்கே நின்று இருந்தாலும் கூட, அவள் மனம் இப்போது குஷியானதால் அவளுக்கு இருந்த கால் வலி கூட இல்லாமல் போனதைப் போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அதனால் சிரித்த முகமாக சென்று தனது அறையில் படுத்து உறங்கினாள்.


சில நாட்களுக்குப் பிறகு..


தினேஷ் தனது டீமில் உள்ளவர்களுடன் சேர்ந்து செய்த ப்ராஜெக்ட் சக்சஸ் ஆகி அவன் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு பெரிய அளவில் லாபம் ஈட்டி கொடுத்தது. அதனால் கம்பெனி சார்பாக அவனுக்கு பிரமோஷன் கொடுத்து அதையும், தங்களது ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்ததற்காக அதையும் சேர்த்து செலிப்ரேட் செய்வதற்காக அவர்களது ஆபிஸிலேயே ஒரு பார்ட்டி‌ அரேஞ்ச் செய்திருந்தார்கள். தினேஷுற்க்கு பிரமோஷன் கிடைத்து அவன் இப்போது மேனேஜர் ஆகிவிட்டதால், அவனது மேனேஜர் வேறு ஒரு பிரென்சிற்க்கு டிரான்ஸ்ஃபர் ஆகி சென்றுவிட்டார். அதனால் தினேஷும் அவனது குழுவில் இருந்தவர்களும் சந்தோஷமாக இருந்தார்கள்.


அந்த பார்ட்டி ஒரு வழக்கமான கார்ப்பரேட் பார்ட்டியாக இருக்க, டிஜே பிளே செய்த மியூசிக்கின் இசை அந்த இடம் முழுவதையும் அதிர வைத்துக் கொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் மார்டனாக ஆடை அணிந்து ஜோடி ஜோடியாக சேர்ந்து டான்ஸ் floorல் கையில் ஆல்கஹால் உடன் ஆடிக் கொண்டிருந்தார்கள். தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் பாராட்ட வேண்டும் என்று நினைத்த தினேஷ் மேடைக்கு சென்று ஸ்பாட் லைட்டுக்கு கீழே நின்று மைக்கில் முதலில் அந்த பார்ட்டியை ஆர்கனைஸ் செய்து, தனக்கு பிரமோஷன் வழங்கிய அவனது ஆபிஸில் வேலை பார்க்கும் முக்கியமான அதிகாரிகளுக்கு நன்றி சொன்னான்.


பின் “என் டீம் மெம்பர்ஸ் இல்லனா, இந்த சக்சஸ் கண்டிப்பா பாசிபிள் ஆகி இருக்காது. அவங்க எனக்காக டே அண்டு நைட் டைம் பாக்காம ஒவ்வொரு தடவை நான் சொல்ற மிஸ்டேகையும் கேட்டு கரெக்ட் பண்ணி கொடுத்து ஒர்க் பண்ணியிருக்காங்க. சோ அவங்க எல்லாருக்கும் இந்த டைம்ல நான் தேங்க்ஸ் சொல்லிக்க விரும்புறேன்.” என்று தினேஷ் தனது டீமில் உள்ளவர்களைப் பற்றி பெருமையாக பேச, அவன் டீமில் இருக்கும் 12 பேரும் கை தட்டி ஆரவாரம் செய்து அவனை உற்சாகப்படுத்தினார்கள். சந்தோஷமான முகத்துடன் தன் கணவனை பார்த்துக் கொண்டிருந்த சுவாதி ஆனந்த மிகுதியில் தன்னையும் மீறி அவனுக்காக விசில் அடித்தாள்.


அதை கவனித்த தினேஷ் லேசாக புன்னகைத்து விட்டு தன் டீமில் உள்ளவர்களை பார்த்தான். அவன் கண்கள் இறுதியாக யாழினியின் மீது நிற்க, “நான் ஸ்பெஷலா ஒருத்தங்களுக்கு தேங்க்ஸ் சொல்லியே ஆகணும். என் சக்சஸ்ல அவங்க எனக்கு back boneஆ இருந்தாங்க. மத்தவங்க எல்லாரையும் விட என் கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணி, இந்த ப்ராஜெக்டுக்காக அவங்க என் கூடவே இருந்து எல்லாமே பண்ணி கொடுத்தாங்க.” என்று தினேஷ் சொல்லிக்கொண்டு இருக்க, எப்போதும் அனைவருடனும் ஒரு லிமிட்ட் உடன் பேசும் தினேஷ் இப்படி யாரை பாராட்டுகிறான்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அனைவரும் அவனைப் பார்க்க, “அது வேற யாரும் இல்ல. நம்ம யாழினி தான். She is not only beautiful but also talented. சம்டைம்ஸ் அவங்க செய்ற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும், என்னையே impress பண்ற அளவுக்கு பெருசா இருந்திருக்கு. அவங்கள நான் தான் இன்டர்வியூ பண்ணேன்.

அன்னைக்கு இந்த சின்ன பொண்ணு கண்டிப்பா சீக்கிரம் எல்லாத்தையும் கத்துக்குவான்னு நான் நம்புனேன். இந்த இரண்டரை வருஷத்துல அவங்க என் கிட்ட இருந்து என்ன கத்துக்கிட்டாங்கன்னு எனக்கு தெரியல. ஆனா அவங்க கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன். Thank you so much யாழினி. எப்பயும் இதே மாதிரியே இருங்க. உங்க கூட சேர்ந்து நிறைய ப்ராஜெக்ட்ல ஒர்க் பண்ணனும் நான் ஆசைப்படுறேன்.” என்று அவளைப் பார்த்து வாயெல்லாம் பல்லாக சொன்னான்.



தினேஷ் சிரித்தே அந்த ஆபீஸில் உள்ள யாரும் கண்டதில்லை. இதில் அவன் டூத் பேஸ்ட் விளம்பரத்தில் வரும் மாடல் போல யாழினியை பார்த்து அழகாக புன்னகைப்பது, அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அவன் தன்னை அனைவரின் முன்னிலையிலும் பாராட்டி பேசியதால் யாழினிக்கு குளு குளுவென்று இருக்க, வேகமாக stageஐ நோக்கி நடந்து சென்று அவனை கட்டியணைத்து “தேங்க்ஸ் தினேஷ். அன்னைக்கு நீங்க மட்டும் இன்டர்வியூல என்ன செலக்ட் பண்ணலனா, என்னால இவ்வளவு தூரம் வந்திருக்கவே முடியாது. உங்க கிட்ட இருந்து தான் நான் எல்லாமே கத்துக்கிட்டேன். முக்கியமா உங்க professionalism எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள்.



தனது மனைவியின் வெற்றியை கண்டு சங்கர் பெருமிதத்தில் புன்னகைக்க, தினேஷுக்கு பிடிக்கும் என்பதற்காகவே யாழினி அணிவதைப்போல ஒரு மார்ட்டனான கருப்பு நிற sleeveless கவுணை அணிந்து பார்லருக்கு எல்லாம் சென்று தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்திருந்த சுவாதிக்கு தினேஷின் செயல்கள் எதுவும் பிடிக்கவில்லை. அவள் இந்த பார்ட்டிக்கு வந்து இவ்வளவு நேரமாகி இருந்தும் கூட, தினேஷ் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை. அவள் அழகாக இருப்பதாக சொல்லி ஒரு சின்ன காம்ப்ளிமென்ட் கூட கொடுக்கவில்லை. இப்போது அவள் கண்ட காட்சி வேறு அவளை இன்னும் எரிச்சல் படுத்த, “நான் இன்னைக்கு உங்களுக்கு சர்ப்ரைஸா அந்த கிஃப்ட்டை கொடுக்கலாம்ன்னு நினைத்தேன். நீங்க இந்த மாதிரி எல்லாம் எனக்காக எதுவும் பண்ண மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் தினேஷ். ஆனா என்ன பாராட்டி ஒரு நாலு வார்த்தை பேசி இருக்கலாம்ல்ல!

உங்களுக்கு நான் வீட்ல செய்யுற வேலையும் பெருசா தெரியாது. நான் ஆபீஸ்க்கு வந்து வேலை செய்றதும் பெருசா தெரியாது. அப்ப உங்க கண்ணுக்கு நான் எப்படி தான் தெரியுறேன்? எனக்கு அதுதான் புரிய மாட்டேங்குது. நான் தான் சரியான பைத்தியக்காரி. எப்பயும் உங்கள பத்தியே யோசிச்சுக்கிட்டு உங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேன். ஆனா நீங்க நமக்கு கல்யாணமாகி ஆறு மாசத்துக்கு மேல ஆகியும் என்ன ஒரு ஆளாவே மதிக்க மாட்டேங்கிறீங்கல்ல! ச்சே.. நீங்க இப்படி எல்லாம் பண்ணா, என்னால எப்படி உங்க கிட்ட அந்த சந்தோஷமான விஷயத்தை சொல்ல முடி
யும்?” என்று நினைத்து கண்கலங்கினாள்.

தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-35
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.