Chapter-31

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
காலைப் பொழுது அழகாக விடிந்தது.‌ சூரிய கதிர்கள் தனது முகத்தில் பட்டதால் பதறி அடித்துக் கொண்டு எழுந்த யாழினி “அடேய்.. டைம் ஆச்சு.. ஆபீஸ் போகணும். என்ன நீ இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க..?? என்னையும் எழுப்பாம விட்டிருக்க. டேய் எருமை எந்திரி டா. எந்திரிச்சு பாரு.. டைம் என்னன்னு.. 9க்கு‌‌ மேல ஆகுது.” என்று வேறு புறமாக திரும்பி படுத்திருந்த ஷங்கரின் தோள்களில் தட்டி அவனை எழுப்பினாள். தூக்கம் கலைந்த கடுப்புடன் திரும்பி அவளை பார்த்த சங்கர் “ஏய் லூசு இன்னைக்கு சண்டே. நீ வருவன்னு இன்னிக்கி உங்க அப்பனா ஆபீஸ் திறந்து வச்சிருக்கான்? கம்முனு தூங்கு டி. அப்புறமா எந்திரிச்சு போய் ஏதாவது ஆர்டர் பண்ணி வாங்கி சாப்பிட்டுக்கலாம்.” என்று அரைத்தூக்கத்தில் கத்தினான்.



அப்போதுதான் இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற ஞாபகம் அவளுக்கும் வந்தது. “சப்பா.. இன்னைக்கு சண்டேவா.. அப்ப நிம்மதியா தூங்கலாம். Weekly 5 days வொர்க் பண்ணா போதும்னு வேலையில சேர்த்திட்டு.. கடைசியில ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட்ன்னு எதையாவது கொடுத்து அத குறிப்பிட்ட டெட் லைன்க்குள்ள முடிக்கணும்னு உசுர வாங்கி கடைசியில நம்மளை சனிக்கிழமை கூட ஆபீஸ் போய் வேலை செய்யற மாதிரி வச்சுடுறானூங்க. இன்னைக்கு ஒரு நாள் தான் நமக்கு நல்லா தூங்குறதுக்கு டைம். அதையும் வேஸ்ட் பண்ண கூடாது.” என்று நினைத்த யாழினி இனி ஒரு நிமிடம் கூட தான் விழித்திருக்கக் கூடாது என்று உடனே தனது கை கால்களை சங்கர் என்னவோ பெரிய மீசை வைத்த டெடி பியர் பொம்மை போல அவன் மீது போட்டு கொண்டு அவனை இறுக்கி அணைத்தவாறு தன் கண்களை மூடி படுத்து அடுத்த பத்தாவது நொடியில் உறக்கத்தை தழுவினாள்‌.



அங்கே சுவாதியை அணைத்தவாறு தூக்கிக் கொண்டிருந்த தினேஷ் தன் கண்களைத் திறந்து தனது மார்பில் முகம் புதைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்த ‌ சுவாதியை பார்த்தான். நேற்று இருந்த டயர்டில் அவர்கள் இருவருமே அப்படியே ஆடைகள் இன்றி வெறும் போர்வையை மட்டும் போற்றிக் கொண்டு படுத்து உறங்கி இருந்தார்கள்‌. முதலில் அவளை எழுப்ப நினைத்தவன் “இல்ல வேண்டாம். இன்னைக்கு சண்டே தானே! மதியானம் வரைக்கும் கூட நல்லா தூங்கட்டும். ஒரேடியா லஞ்ச் டைமுக்கு இவ எந்திரிச்சா கூட போதும். வெளிய போய் சாப்பிட்டுக்கலாம்.” என்று என்னி அவளது தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் மெல்ல அவளை விட்டு விலகி தனது ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டு ரெப்ரெஷ் ஆவதற்காக வெளியே சென்றான்.



அவன் நேற்று இரவு லேட்டாக சாப்பிட்டு இருந்தாலும் கூட, நேத்து அவன் செய்த வேலையில் அவனது எனர்ஜி மொத்தமும் கரைந்து போயிருந்ததால் இப்போது செமையாக பசி எடுத்தது. அதனால் ஏதாவது சமைத்து சாப்பிடலாம் என்று நினைத்து கிச்சனுக்கு சென்றான் தினேஷ். அப்போது அவன் மனசாட்சி அவனிடம் “டேய் தினேஷ்.. நீ பாட்டுக்கு இங்க வேகமா கிளம்பி வந்து என்னடா பண்ண போற? உனக்கு தான் சமைக்கவே தெரியாதே!” என்று சொல்லி காரி துப்ப, “அட ஆமா.. சமைக்க தெரியாம என்ன சமைக்கிறது?” என்று யோசித்த தினேஷ் “எல்லாரும் சமைக்க தெரிஞ்சிட்டா சமைக்கிறாங்க? சும்மா சிம்பிளா ஏதாவது youtubeல பார்த்து சமைக்கலாம்.” என்று நினைத்து நேராக சென்று பிரிட்ஜின் கதவை திறந்தான்.



அங்கே இரண்டு முட்டைகளும் அரை பாக்கெட் பிரெட்டும் இருந்தது. அதை சந்தோஷமாக வெளியில் எடுத்த தினேஷ் “சூப்பர் இது ரெண்டுமே போதுமே!! இதை வச்சு நம்ம ஈஸியா பிரட் ஆம்லெட் செஞ்சிடலாம்.” என்று நினைத்து youtubeல் வீடியோ பார்த்து பிரட் ஆம்லெட் செய்தான். அது பேசாக கருகிவிட்டது. இருப்பினும் “பசிக்கும்போது அதெல்லாம் பார்க்க முடியுமா? இருக்கிறதை சாப்பிட வேண்டியதுதான்.” என்று நினைத்து அதை தட்டில் எடுத்துப் தட்டில் போட்டு வந்து சோஃபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தான். அதில் ஸ்போர்ட்ஸ் சேனலை தேடி வைத்து மற்ற மூவரும் நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதால் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து வால்யூமை குறைத்து வைத்து விட்டான்.



அப்படியே நேரம் செல்ல, தூங்கிக் கொண்டிருந்த மற்ற மூவரும் மதிய வேளையில் எழுந்து வெளியே வந்தார்கள். சுவாதியை பார்த்த தினேஷ் “வந்துட்டியா.. சூப்பர், நான் இவ்ளோ நேரம் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் பேபி. பசிக்குதுன்னு இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பிரட் ஆம்லெட் போட்டு சாப்பிட்டேன். இருந்தாலும் டீ குடிக்காம என்னமோ மாதிரி இருக்கு. போய் டீ போட்டுட்டு வா ப்ளீஸ்.” என்றான். அதை கவனித்த யாழினி “எனக்கும் டீ வேணும்.” என்று சொல்ல, சிரித்த முகமாக அவர்கள் அனைவரையும் பார்த்த சுவாதி “நான் எல்லாருக்குமே சேர்த்து போட்டுட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்றாள்.



ஷங்கரின் தோள்களில் சாய்ந்து கொண்டு சைடில் இருந்து அவனை அனைத்த யாழினி “நேத்து ஃபுல்லா பியூஸ் போன பல்பு மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு இருந்தா இவ. இன்னைக்கு பாரு அப்படியே பிரகாசமான குண்டு பல்பு மாதிரி இருக்கா. நேத்து நைட்டு இவங்களுக்குள்ள இருந்த எல்லா ப்ராப்ளமும் சால்வ் ஆகடுச்சு போல. நீ சொன்னது தான் கரெக்ட் பேபி. நம்ம நாலு பேரும் ஒரே வீட்ல இருந்தாலும், அவங்க பர்சனல் லைஃப்ல நம்ம தலையிடாம இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது.

இப்ப பாரு அவங்க பிரச்சனைய அவங்களே அவங்களுக்குள்ள பேசி சால்வ் பண்ணிட்டாங்க. நம்ம நடுவுல போய் ஏதாவது பேசி இருந்தா, மேபி அவங்க பிராப்ளம் இன்னும் கூட பெருசாகிருக்கலாம்.” என்று மெல்லிய குரலில் சொல்ல, தான் நேற்று சுவாதிக்கு புரியும்படி அவளிடம் அனைத்தையும் எடுத்து சொன்னதால் தான் அவள் மனம் மாறி தினேஷுடன் சுமுகமாக சென்று இருக்கிறாள் என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட சங்கர் “ஆமா, இனிமே எதுவா இருந்தாலும் அவளா உன் கிட்ட வந்து சொல்லாம நீ அவ கிட்ட எதுவும் கேட்காத. எவ்வளவுக்கு எவ்ளோ அவங்க சண்டை போடுறாங்களோ அவங்க ரிலேஷன்ஷிப் அவ்வளவு ஸ்ட்ரோங் ஆகும்.” என்றான்.



சில நிமிடங்களுக்கு பிறகு சுவாதி அனைவருக்கும் டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க, அதை ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்து குடித்த அனைவரும் லஞ்ச் சாப்பிட வெளியில் செல்லலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள். பின் அனைவரும் சென்று கிளம்பி தினேஷின் காரில் அருகில் உள்ள உயர்தர 5 நட்சத்திர ரெஸ்டாரன்ட்டிற்க்கு சென்றார்கள். தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்து உண்டு மகிழ்ந்தார்கள். அதற்கு யார் பணம் கொடுப்பது என்று வரும்போது, “எல்லாமே நம்ம நாலு பேரும் ஷேர் பண்ணி தானே சாப்பிட்டு இருக்கோம்.. சோ billஐயும் நம்ம ஷேர் பண்ணி பே பண்ணிடலாம்.” என்று யாழினி சொன்னதால் அதை நான்காக பிரித்து அவர்கள் நால்வரும் கட்டினார்கள்.



அவர்கள் அந்த ரெஸ்டாரண்டை விட்டு வெளியே வரும்போது “அப்படியே தியேட்டருக்கு போலாமா? நான் படம் பார்க்க வெளிய போய் ரொம்ப நாள் ஆகுது.” என்று சுவாதி சொன்னதால், “ஓகே அப்ப நேரா தியேட்டருக்கே போகலாம். Evening show startஆக இன்னும் டைம் இருக்கு. ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணிக்கலாம். சும்மா வீட்டுக்கு போய் நாலு செவுத்துக்குள்ள உட்கார்ந்து டிவி பாக்குறதுக்கு அங்க போறதே பெட்டர்.” என்றான் தினேஷ். அவர்களது முடிவை யாழினியும் ஷங்கரும் கூட ஆதரிக்க, நால்வரும் தினேஷின் காரில் ஏறி தியேட்டருக்கு சென்றார்கள்.



அவரவருக்கான சீட்டை கண்டுபிடித்து நால்வரும் ஒரே வரிசையில் அமர்ந்து கொள்ள, ஒரு ஆங்கில ரொமான்டிக் திரைப்படம் திரையில் ஓட தொடங்கியது. அவர்கள் நால்வருக்குமே நன்றாக ஆங்கிலம் தெரியும் என்பதால் அனைவரும் ஆர்வமான முகத்துடன் படத்தை பார்க்க தொடங்கினார்கள். அந்த திரைப்படம் நட்பிற்கும் காதலுக்கும் இடையில் உள்ள ஆழமான உறவைப் பற்றியும் உள்ளுக்குள் இருக்கும் காதலை உணராமல் ஹீரோ ஹீரோயின் இருவரும் தாங்கள் நண்பர்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் வாழ்வில் சில தவறான முடிவுகளை எடுப்பதால் அவர்களது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பது பற்றியும், இறுதியில் அவர்கள் தங்களுக்குள் இருக்கும் காதலை உணரும் போது கால தாமதமாகி அவர்களுக்கு வயதாகி விடுகிறது என்பது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

தொடரும்.‌..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-31
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.