Chapter 29

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
விக்ரம் பெரும் குழப்பத்தோடு தான் வண்டியை ஓட்டிக் கொண்டு அவனுடைய கிராமத்துக்கு பயணித்தான். “என் கூட ஒரு வாட்டி வந்தப்ப போயிருப்பானோ…. அப்ப தான் அவனோட டிரஸ் எல்லாம் சகதியா இருந்துது… அவனே உள்ள போயி எல்லாம் தேடினான்னு தானே அங்க வேலை செய்யுற பையன் சொன்னான்.. அதனால தான் அவன் ஷர்ட் அழுக்காகிருக்கனும்…. அன்னிக்கு அப்போ அவன் மெடிக்கல் திங்ஸ் வாங்க என் கூட வரல….. இது ஏன் என்கிட்ட சொல்லாம செஞ்சான் எனக்கு ஒண்ணுமே புரியலையே” என்று குழப்பத்துடன் வண்டியை ஓட்டினான்.

விக்ரம் முதலில் ஊருக்கு சென்று சரவணனை அழைத்துக் கொண்டு அவனுடைய வீட்டு மொட்டை மாடிக்கு சென்றான். “எதுக்குடா இப்படி அரக்க பறக்க என்னை இங்க கூட்டிட்டு வர… என்ன ஆச்சு உனக்கு… எல்லாம் நல்லா தானே போச்சு??? அவளை பத்திரமாக கூட்டிட்டு போய் விட்டுட்ட தானே??” என்று சரவணன் கேட்க,

“அதெல்லாம் விட்டுட்டேன் மச்சான்… ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்…. அவளோட காரை டிஸ்போஸ் பண்ணிட்டாங்க டா ஆக்ஸிடென்டகு அப்புறமா, அங்க ஏதாவது க்ளூ கிடைக்க வாய்ப்பு இருக்குனு அவளுடைய இன்சூரன்ஸ் டாக்குமென்ட் சர்வீஸ்க்கு விட்டது அதுல ஏதாவது துறுப்பு கிடைக்குமான்னு போனேன்… நானும் அங்க இன்சூரன்ஸ் டீடைல்ஸ் இதெல்லாம் வாங்கினதை விட ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா எல்லாருக்கும் முன்னாடியும் ஒருத்தர் போய் விசாரிச்சிருக்காரு…. அதுக்கு அப்புறமா ரெண்டு போலீஸ் விசாரிச்சு இருக்காங்க அதுல ஒன்னு பிரகாஷ் சார் மூலமா போனது இன்னோன்னு நான் ஹெல்ப் கேட்ட போலீஸ் மூலமா போனது…. இவங்களுக்கு எல்லாம் முன்னாடி போனது யார் தெரியுமா??” என்று விக்ரம் கேட்க, “எனக்கு எப்படிடா தெரியும்… யாருடா??” என்று சரவணன் கேட்க, “அபிலாஷ்” என்றான் விக்ரம்.

“அவனா!!!! அவன் எப்ப போனான்…. இங்க தானே சுத்திட்டு இருந்தான்” என்று குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் சரவணன் கேட்க, “மெடிக்கல் சர்ஜிகளில் திங்ஸ் வாங்கணும்ன்னு சொல்லி அவன் போய் சைன் போட்டா தான் கொடுப்பாங்கன்னு சொல்லி என் கூட ஒரு நாள் கிளம்பி வந்தான்ல அப்போ அங்க தான் போயிருக்கான்…. ஏன்னா திரும்பி அவன கூட்டிட்டு வரும் போது அவனோட டிரஸ் சகதியா இருந்துது… ஏன்னு கேட்டதுக்கு விழுந்துட்டேன்னு சொன்னான் நானும் அப்ப பெருசா கண்டுக்கல…. அவன், கார் டிஸ்போஸ் பண்ண இடத்துக்கு போய் எல்லா டீடைல்ஸும் கேட்டுட்டு காருக்குள்ள ஏதாவது இருந்துதான்னு எல்லாத்தையுமே விசாரிச்சிட்டு வந்திருக்கான் மச்சான்…. ஆனா, நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல அவன்” என்று விக்ரம் கூறினான்.

“எனக்கு என்னன்னா விசாரிச்சது கூட சரி ஓகே, அபர்ணாக்காக விசாரிச்சான் ஆனா, ஏன் அதை நம்ம கிட்ட மறைக்குறான்னு எனக்கு புரியலையே” என்று சரவணன் குழப்பத்தில் கேட்க, “எனக்கும் தெரியல டா…. இப்போதைக்கு அவன் கிட்ட எதுவும் காட்டிக்காத அவனே ஏதாவது சொன்னா சரி இல்லன்னா எதுவும் காட்டாத பார்க்கலாம்” என்று விக்ரம் கூறினான்.

“என்னமோ டா… புதுசு புதுசா பிரச்சனை வளருதே தவிர தீரமாட்டேங்குதே டா” என்று சரவணன் சலித்துக் கொள்ள, “இத பத்தி மூச்சு கூட விடாத மச்சான் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு” என்று விக்ரம் கூறினான்.

“அவனே சொல்லுவான் டா… எதாவது காரணம் இருக்கும்” என்று சரவணன் கூற, “உன்னால மட்டும் எப்படிடா இப்படி யோசிக்க முடியுது” என்று விக்ரம் சலித்துக் கொண்டான்.

“சரி அதெல்லாம் இருக்கட்டும் அவ கிட்ட ஏதாவது பேசுனியா??” என்று சரவணன் பேச்சை மாற்ற, “பேசினேன் மச்சான்…. ரொம்ப இல்ல கொஞ்சமா என்னை பத்தி பேசினேன்…. அவளும் அவளை பத்தி பேசினா அவ்வளவு தான்…. அதுக்குள்ள ஊருக்கு போயிட்டோம்… ஆனா….” என்று விக்ரம் தயக்கத்தில் இருக்க, “ஆனா என்னடா??? என்ன பண்ணி தொலச்ச???” என்று சரவணன் கேட்டான்.

“ஒன்னும் பண்ணல டா…. அவ சந்தோஷமா தான் இருந்தா… அவங்க அப்பா அம்மாவ பார்த்து பேசிட்டு எல்லாமே சிரிச்சுட்டு தான் இருந்தா… பிரகாஷ் சார் என்னை பார்த்து, “நீ என்னை பார்க்கணும்னு சொன்னல அதான் நான் இங்கேயே வந்துட்டேன்பா உன்னை பார்க்கறதுக்குன்னு” சொன்னதும் அவ மூஞ்சே மாறிடுச்சு டா…. அவகிட்ட நான் எடுத்து சொல்றதுக்கு கூட எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கல… அதுக்கப்புறம் சாப்பிட்டுட்டு அவ டயர்டா இருக்குன்னு அவ ரூமுக்கு போயிட்டா நானும் பிரகாஷ் சார் கிட்டயும் அவங்க அப்பா கிட்டயும் பேசிட்டு கிளம்பிட்டேன்” என்று விக்ரம் கூறினேன்.

“ஓ!!!! நீதான் அவ உனக்காகவே இருக்கணும்னு நினைக்கிறேன்னு நினைச்சா அவளும் அப்படித் தான் எதிர்பார்க்குறா போலயே உன்கிட்ட இருந்து…. அப்படி போகுதா கதை!!!” என்று சரவணன் கேலியாக கூற,

விக்ரம் லேசாக புன்னகைத்து, “தெரியல என்னால உறுதிப்படுத்த முடியல அவளோட உணர்வுகளை…. ஆனா, அவ திடீர்னு சோகம் ஆயிட்டா மூஞ்சி மாறிடுச்சு…. எனக்கு எப்படியாவது அவகிட்ட நான் அவள கூட்டிட்டு போறதுக்காக தான் வந்தேன்னு சொல்லணும்…. அது தான் முக்கியமான காரணம்னு அவளுக்கு புரிய வெக்கணும்…. ஆனா, எப்படி சொல்றதுன்னு தெரியல… அவ வர வரைக்கும் நான் காத்திருக்கணும்… ஆனா, அதுக்குள்ள அவ என்ன எல்லாம் யோசிச்சுருவாளோன்னு என் மண்டைக்குள்ள ஓடுது…. இது ஒரு பக்கம் ஓடுது, பிரகாஷ் சார் கிட்ட பேசினதெல்லாம் ஒரு பக்கம் ஓடுது… கடைசியா அபிலாஷ் இப்படி ஒரு விஷயம் மறச்சிருக்கான்னு ஓடுது…. மண்ட காயுது சரவணா” என்று விக்ரம் கூறினான்.

“அபியே சொல்லுவான் டா… அவன் மறைக்குறான்னா காரணம் இருக்கும்…நீ அத பத்தி விடு, என்ன பேசினீங்க?? பிரகாஷ் சார் என்ன சொன்னாரு?? சனாவோட அப்பா என்ன சொன்னாரு??” என்று சரவணன் கேட்க, அவர்கள் பேசிய அனைத்தும் கூறி முடித்தான் விக்ரம்.

“இதனால தான் வேலுமணிய பத்தி விவரம் கேட்டிருந்தான் போல விகாஷ் என் கிட்ட” சரவணன் கூற, “அப்படியா!!! இது எப்படா??” என்று விக்ரம் கேட்க, “ஆமா கேட்டிருந்தான் டா… அத பத்தி நானே உன்கிட்ட பேசனும்னு நினைச்சேன் டா… இவ்ளோ நாள் கழிச்சு தான் இவங்களுக்கு ஊட்டிக்கு போயிட்டு வந்தப்போ என்ன ஆச்சுன்னு சந்தேகமே வந்து இருக்கு டா…. அட்லீஸ்ட் இப்பயாவது சந்தேகம் வந்துதே, விசாரிக்கணும்னு தோணுச்சே அவங்களுக்கு” என்று சரவணன் கூறினான்.

“ம்ம்… அதையும் விசாரிப்போம்…. இந்தா டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்…. முதல்ல அவ சர்வீஸ் பண்ணத எல்லாத்தையும் செக் பண்ணனும்…. அந்த சர்வீஸ்ல என்னென்ன எல்லாம் பண்ணி இருக்காங்கனு நம்ம பார்த்தோம்னா தான் ஏதாவது நடந்திருக்குமா அப்படின்னு கண்டுபிடிக்க முடியும்” என்று விக்ரம் கூறினேன்.

“சரி ஒன்னும் பதறாத எல்லாம் நம்ம கண்டுபிடிக்கலாம்… அது போக அவளுக்கு ஞாபகம் வர வைக்கிறதுக்கு என்ன பண்ணனுமோ அதையும் பண்ணுவோம்…. எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வரும்னு நம்புவோம் டா” என்று சரவணன் கூற, “எனக்கு இன்னிக்கு போய் அவங்க கிட்ட பேசிட்டு வந்ததுக்கப்புறம் தான் மனச கொஞ்சம் லேசாச்சு… இவ்வளவு நாள் ரொம்ப கனமா இருந்துச்சு மச்சான்…. இப்ப ஒரு பக்கம் நம்பிக்கையும் இருக்கு, அவ மேல இந்த தப்பும் இருக்காதுன்னு” என்று விக்ரம் கூறவும், “அந்த நம்பிக்கையிலே இரு அவ்வளவு தானா…. எல்லாரும் சேர்ந்து ஒரே விஷயத்தை தானே கண்டுபிடிக்க போறோம்…. அதனால எல்லாம் சீக்கிரமாகவே நடக்கும் டா அந்த நம்பிக்கையிலே ஒரு தைரியமாவும் இரு” என்று சரவணன் கூறினான்.

“ம்ம்…. அவ என்ன எல்லாம் யோசிச்சிட்டு இருக்காளோ….. அது வேற எனக்கு ஒரு பக்கம் மண்டையில ஓடுது” என்று விக்ரம் பேசவும், சரவணனின் கைபேசி ஒலித்தது. “இந்த நேரத்தில யார்ரா உனக்கு மெசேஜ் பண்றது” என்று விக்ரம் கேட்க, “சனா தான் அனுப்பி இருக்கா…. அவ ரீச் ஆயிட்டேன்னு சொல்லி, நீ இங்க வந்துட்டியான்னு கேட்டு இருக்கா” என்று சரவணன் கூற, நிஜமாவா!!! என்று ஆச்சரியத்தில் விக்ரம் கேட்டான்.

“நம்பலன்னா நீயே பாரு” என்று சரவணன் கைபேசியை காட்ட விக்ரம் முகமெல்லாம் சந்தோசத்தில் பிரகாசித்தது. “எப்பா ஒரு மெசேஜ் தான பண்ணா அதுவும் நீ வந்துட்டியா இல்லயான்னு கேக்குறதுக்கு பண்ணா…. அதுக்கே மூஞ்சி எப்படி இருக்கு” என்று சரவணன் கேலி செய்ய, “இதெல்லாம் உனக்கு வந்தா தான் புரியும்” என்று விக்ரம் கூற, “சரி என் ஃபோனை குடுடா” என்று சரவணன் கேட்க, “கொஞ்ச நேரம் பார்த்துட்டு தரேன் டா” சலித்துக் கொண்டான் விக்ரம்.

“இவ்வளவு பண்றதுக்கு நீயே அவளுக்கு ஃபோன் பண்ணி பேசலாம்ல…. அவளும் உன்ன பத்தி கேக்குறா நீயும் அவளை பத்தி யோசிக்கிற” என்று சரவணன் கேட்க, “நான் எப்படி மச்சான் பேசுறது அவ உனக்கு நம்பர் குடுத்தா எனக்கு அப்படி இல்லல” என்று சரவணனிடம் விக்ரம் முறையிட, “உனக்கு நம்பர் வேற கொடுப்பான்னு எதிர்பார்க்கிறியா நீ திட்டுற திட்டுக்கெல்லாம்” என்று சரவணன் கேட்க, பதில் இல்லாமல் அமைதியாகி விட்டான் விக்ரம்.

“அதுவும் இல்லாம அவளே வந்து நம்பர் குடுத்து பேசுறதுக்குள்ள வயசாகிரும் டா…. நானே இப்படி எல்லாம் ஒரு பொண்ணோட நம்பரை அவ்வளவு ஈஸியா கொடுக்க மாட்டேன்…. நானே கொடுக்கிறேன்னு சொல்றேன்னா அவளுக்கும் அந்த இன்ட்ரஸ்ட் இருக்குடா…. வாய்ப்பு இருக்கும் போது பேசி டெவலப் பண்ற வழிய பாருடா” என்ற சரவணன் கூற, விக்ரம்க்கும் சனந்தாவிடம் பேச வேண்டும் என்ற ஆசை இருந்ததால் சரி என்று அவளின் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டான்.

“சரி நான் அவகிட்ட எதுவும் சொல்லல நீ நேராவே மெசேஜ் பண்ணிடு…. நீ வந்துட்டேன்னு மட்டும் நான் சொல்றேன்… இந்த டாக்குமெண்ட நான் கொண்டு போறேன்… நைட் எப்படியும் கொஞ்ச நேரம் முழிச்சிருப்பேன் அப்ப என்ன எல்லாம் விஷயம் கண்டுபிடிக்க முடியுமோ கண்டு பிடிச்சுட்டு அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்…. நீ எதையும் யோசிச்சிட்டு இருக்காத சீக்கிரம் படுத்துக்கோ எல்லாம் நல்ல முடிவுக்கு வரும்னு நம்புடா” என்று சரவணன் கூறி சென்றான்.

“என்ன இவ்வளவு நேரம் மெசேஜுக்கு ரிப்ளை பண்ணல… ஒரு வேலை தூங்கிட்டாரோ… சரவணன் அதுக்குள்ள தூங்க மாட்டாரே…. இந்நேரத்துக்கு விக்ரம் போயிருக்கணும் தானே???” என்று பல யோசனைகள் சனந்தாவின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்க, சரவணனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. அதை பார்த்த பிறகு ஹப்பாடா என்றிருந்தது அவளுக்கு.

சனந்தா மதியம் உணவருந்தி விட்டு உறங்கி மாலை ஆறு மணிக்கு மேல் எழுந்ததனால் இப்பொழுது அவளுக்கு உறக்கம் வராமல் உருண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அவளது கைபேசியில் வண்ணம் கிராமத்தில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க, அதில் ஒரு புகைப்படத்தில் விக்ரம் மற்றும் சரவணன் ஆற்றோரம் நின்று கொண்டிருக்கும் போது இயற்கையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பார்க்கவும், புகைப்படத்தை நன்றாக ஜூம் செய்து விக்ரமை பார்த்து ரசித்து கொண்டு இருக்க, அவளுடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.

“ஹாய்!! ஐ அம் விக்ரம்” என்ற செய்தியை பார்க்கவும் அவளுக்கு ஒரு பக்கம் ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்து இருந்தது. சிறிது நேரம் குறுஞ்செய்தியையே பார்த்துக் கொண்டே முகமெல்லாம் புன்னகையுடன், “ஹாய்!! சனந்தா ஹியர்” என்று அனுப்பினாள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 29
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.