அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை பார்த்த பிறகு அரசல் புறசலாக மற்றவர்கள் பேசுவதையும் வைத்து “யாழினி அவனை அவ friendன்னு சொல்லும்போதே எனக்கு தெரிஞ்சிருக்கணும். இப்ப எல்லாம் கையை மீறிப் போயிடுச்சு. என்ன பண்றது? நல்லவேளை சீரியஸா நான் அவளை லவ் பண்ணல. இல்லைன்னா கடைசியில எனக்கு தான் ஹர்ட் ஆயிருக்கும்.” என்று நினைத்து அவள் மனதில் தனக்காக இருந்த அத்தனை உணர்வுகளையும் வெளியே தூக்கி எறிந்துவிட்டு, அவளை தன்னுடன் வேலை பார்க்கும் சக எம்ப்ளாயி ஆக மட்டும் பார்க்க பழகிக் கொண்டான்.
இப்படி தினேஷ் யாழினியை பற்றி யோசித்துக் கொண்டிருக்க, அவள் தனது பிரசன்டேஷனை வெற்றிகரமாக முடித்து இருந்ததால் அது அனைவரையும் கவர்ந்த நிலையில் கை தட்டி மற்றவர்கள் அனைவரும் அவளை உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அந்த சத்தத்தால் நிகழ்காலத்திற்கு வந்த தினேஷ் “இதெல்லாம் நான் எதிர்பார்த்தது தான். உனக்கு நல்ல பியூச்சர் இருக்கு யாழினி. நீ என்ன பண்ணாலும் அது பெஸ்ட்டா தான் இருக்கும்.” என்று நினைத்து எழுந்து சென்று அவளை பாராட்டுவதற்காக அவளுடன் கை குலுக்கிவிட்டு “சூப்பர் யாழினி. நீங்க யாருன்னு அகைன் அண்ட் அகைன் எங்க எல்லாருக்கும் ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. உங்க கிட்ட இருந்து இன்னும் நான் நிறைய எதிர்பார்க்கிறேன்.” என்று மனதார பெருமையுடன் சொன்னான்.
இதுவரை தினேஷ் யாரையும் இப்படி பாராட்டியது இல்லை என்பதால், அனைவரும் அந்த காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். சங்கரும் தன் மனைவி அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒளிவிடும் நட்சத்திரமாக மேலே இருப்பதைக் கண்டு ரசித்தான். ஆனால் சுவாதி தான் “யார் கிட்ட கொடுத்தாலும் இந்த பிரசன்டேஷன நல்லா தான் பண்ணி இருப்பாங்க. இதுல நாங்க எல்லாரும் சேர்ந்து தான் வர்க் பண்ணி இருக்கோம். ஆனா அவ அதை தனியா பிரசண்ட் பண்ணிட்டா. அதுக்காக எல்லா கிரெடிட்சும் அவளுக்கு தானா?
அப்ப அவ கூட சேர்ந்து வேலை பார்த்து எல்லாத்தையும் ரெடி பண்ணி கொடுத்த நாங்க எல்லாம் இவன் கண்ணுக்கு எப்படி தெரியுறோம்? அது சரி.. எப்ப பாத்தாலும் இவன் எதுக்கு முக்கியமான விஷயங்கள் எல்லாத்தையும் யாழினியவே பண்ண சொல்றான்? அப்போ எங்களுக்கு எல்லாம் அதை பண்ற அளவுக்கு அறிவு இல்லையா? இதுக்கு முன்னாடி எல்லாம் சரி போனா போகட்டும்னு நான் எதையும் கேட்காம விட்டுட்டேன். ஆனா எங்களுக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் கூட, இவன் இப்படியே தான் இருக்கான்.
இன்னைக்கு இதை விடக் கூடாது சுவாதி. நம்மளை இவன் பாராட்டலைனா கூட பரவால்ல. எப்ப பாத்தாலும் குறை சொல்லி அவமானப்படுத்திக் கொண்டே இருக்கான். இப்ப இவன் யாழினி பெஸ்ட்ன்னு சொல்றது கூட எனக்கு என்னமோ இவன் என்னை வேஸ்ட்ன்னு சொல்லாம சொல்ற மாதிரி தான் இருக்கு. இவன் மனசுல என்ன தான் இருக்குன்னு இன்னைக்கு பேசி தெரிஞ்சுக்கணும்.” என்று நினைத்து தினேஷ் யாழினி இருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள்.
மீட்டிங் முடியவும் லஞ்ச் டைம் ஸ்டார்ட் ஆகவும். கரெக்டாக இருந்தது. அதனால் அனைவரும் அங்கே இருந்து நேராக கேண்டீன் ஏரியாவிற்கு சென்றுவிட, வாடிய முகத்துடன் அவர்களை பின் தொடர்ந்து சென்றாள் சுவாதி. தினேஷ் எப்போதும் அவனது கேபினில் தனியாகத் தான் சாப்பிடுவான். அதனால் இப்போதும் அவன் அங்கே சென்று விட, சங்கர், யாழினி, சுவாதி மூவரும் சாப்பிட டேபிளில் அமர்ந்தார்கள். தனது லஞ்ச் பாக்ஸை திறந்த யாழினி அதில் இருந்த சாதத்தை ஒரு வாய் வைத்த பிறகு “வாவ்.. சாம்பார் நல்லா இருக்கே.. என்ன டா அதிசயமா நல்லா சமைச்சிருக்க?” என்று அதை மென்றபடி கேட்க, “சுவாதி தான் சாம்பார் வெச்சா. நான் சும்மா பக்கத்துல இருந்து எல்லாத்தையும் பாத்துட்டேன். அவ்ளோ தான். ஆனா இருந்தாலும் இத்தனை நாள் என்னவோ நான் கேவலமா சமைச்ச மாதிரி ஒரேடியா பேசுற பாத்தியா நீ?” என்று அவளிடம் கேட்ட சங்கர் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
“ஏய்.. வழக்கமா வைக்கிறத விட இன்னிக்கி நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன்.. ட்டங்கு ஸ்லிப் ஆகி அப்படி சொல்லிட்டேன் பேபி. இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா? நமக்கே லஞ்ச் டைம் கொஞ்ச நேரம் தாண்டா. சீக்கிரம் சாப்பிடு. வேலை இருக்கு.” என்று கொஞ்சலாக சொன்ன யாழினி சங்கரின் தாடையை பிடித்து அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி அவனுக்கு ஊட்டி விட்டாள். அவள் கொடுத்த உணவை தன் வாயில் வாங்கிக் கொண்ட சங்கர் “எனக்கு உன் மேல கோபமே வராதுடி லூசு. இருந்தாலும் நான் சும்மா கோபப்பட்டா நீ என்ன பண்றன்னு பார்க்கலாம்னு நினைச்சேன். பரவால்ல மாமா மேல உனக்கு ஏதோ பாசம் இருக்கு. கோச்சிக்கிட்டு சாப்பிடாம இருந்தா ஊட்டி எல்லாம் விடுற..!! I like this change.” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.
இப்படியே தங்களுக்குள் பேசியபடி அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, வெறுமனே தனது வயிற்று பசிக்காக விருப்பமே இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சுவாதிக்கு அவர்கள் இருவரையும் பார்க்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இருப்பினும் யாழினி அவளது தோழி என்பதாலும் அவள் வாழ்வில் சந்தித்த அதனை துயரங்களையும் அவள் அருகில் இருந்து இவள் பார்த்திருக்கிறாள் என்பதாலும் “என்னமோ யாழினி நீ முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்டதுனாலையோ என்னமோ அந்த கடவுள் உனக்கு நல்ல லைஃப் கொடுத்திருக்கிறாரு. நீயும் சங்கரும் இப்படியே எப்பயும் சந்தோஷமா இருக்கணும். அட்லீஸ்ட் நீயாவது நல்லா இரு.” என்று நினைத்துக் கொண்டாள்.
சாப்பிட்டுக் கொண்டு இருந்த யாழினி “ம்ம்.. எனக்கு போதும். என்னமோ தெரியல.. ட்ராவல் பண்ணிட்டு இருந்தனால வாமிட் வர்ற மாதிரி இருக்கு. நீங்க பொறுமையா சாப்பிடுங்க. எனக்கு பெண்டிங் ஒர்க் இருக்கு. அதை முடிக்கிற வரைக்கும் எனக்கு சாப்பாடு கூட இறங்காது போல. நான் போறேன் பாய்.” என்று சொல்லிவிட்டு எழுந்து கை கழுவி விட்டு அங்கே இருந்து சென்று விட்டாள். இப்போது ஷங்கரும் ஸ்வாதியும் தனியாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஓரக் கண்ணால் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாதி “யாழினி கழுத்துல ஒரு நாள் கூட நீங்க கட்டுன தாலி இருந்து நான் பார்த்ததில்லை. ஆபீஸ்ல பிரச்சனை சோ போடாம இருக்கான்னு வச்சுக்கலாம்.
ஆனா, வீட்ல கூட அவ போடறது இல்லையே.. நீங்க அத பத்தி எதுவும் கேட்கலையா? யாழினிக்கு அவளுக்கு கல்யாணம் ஆனதை வெளிய சொல்றதுக்கு விருப்பம் இல்லாததுனால நீங்களும் யாருக்கும் தெரிய வேண்டாம்னு நினைச்சு போனா போகட்டும்னு விட்டுட்டீங்களா?” என்று கேட்டாள்.
அவள் கழுத்தில் தாலி இல்லாததை கவனித்து விட்டு தனக்குள் சிரித்து கொண்ட சங்கர் “என்ன ஆப்டர் மேரேஜ் தாலி மேட்டர்ல உனக்கும் தினேஷுக்கும் பிரச்சனையா?” என்று சரியாக கேட்க, அவளுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. “எப்படி நான் எதுவுமே சொல்லாம கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க?” என்று உடனே சுவாதி கேட்க, “தினேஷ் அப்படியே யாழினி மாதிரி. ஆண்ட் நீ என்ன மாதிரி. சோ யாழினி எப்படி யோசிக்கிறாளோ தினேஷும் அப்படித்தானே யோசிப்பாரு! உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜுன்னு நீ சொல்லும்போதே, உங்களுக்குள்ள செட்டாகுமானு நான் நெனச்சேன். பாத்தா கல்யாணம் ஆகி ரெண்டு நாள் கூட ஆகல.. அதுக்குள்ள சண்டை வந்துடுச்சு. காலைல உன் ஃபேஸ பார்த்தப்பவே உங்களுக்குள்ள பிரச்சனைன்னு புரிஞ்சது. இருந்தாலும் நீயா சொல்லாம எதுவும் நான் பேச கூடாதுன்னு அமைதியா இருந்துட்டேன்.” என்றான் ஷங்கர்.
“இவர் என்ன இந்த அளவுக்கு புரிஞ்சு வச்சிருக்காரா?” என்று யோசித்த சுவாதிக்கு “இவர் சொல்றது கரெக்டு தான். நானும் இவரும் ஒரே மாதிரி. அதான் இவர் பண்றது எல்லாமே எனக்கு புடிச்ச மாதிரி இருக்கு.” என்று நினைத்து கலங்கிய கண்களுடன் “எனக்கு என்ன சொல்றதுனே தெரியல சங்கர். நான் தினேஷ் தான் என் ஹஸ்பண்ட்ன்னு தெரிஞ்ச உடனே ஏதோ ஒரு ஆசைல ஆர்வக்கோளாறுல அவர் மேல ஃபீலிங்ஸ டெவலப் பண்ணிக்கிட்டேன். எங்க மேரேஜ்க்கு முன்னாடி கிடைச்ச கொஞ்ச கேப்லயும் ஆசையா அவரை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
அவரும் என்னை லவ் பண்றதா தான் சொல்றாரு. பட் அவர் பண்ற சில விஷயத்தை எல்லாம் பார்க்கும்போது எனக்கு அப்படி தோணல. அவரு என் கிட்ட ஆபீஸ்க்கு வரும்போது தாலியை மறைச்சுட்டு வான்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நானே ஏதாவது பண்ணி அதை மறைச்சிருப்பேன். ஆனா அதுக்கெல்லாம் கொஞ்சம் கூட டைம் கொடுக்காம என் கழுத்துல இருந்த தாலிய அவரே கழட்டி கீழ போட்டுட்டாரு. அத என்னால ஏத்துக்கவே முடியல. ஆனா அதை அவரால எப்படி செய்ய முடிந்ததுன்னு எனக்கு இப்ப வரைக்கும் புரிய மாட்டேங்குது.” என்று துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னாள் ஸ்வாதி.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
இப்படி தினேஷ் யாழினியை பற்றி யோசித்துக் கொண்டிருக்க, அவள் தனது பிரசன்டேஷனை வெற்றிகரமாக முடித்து இருந்ததால் அது அனைவரையும் கவர்ந்த நிலையில் கை தட்டி மற்றவர்கள் அனைவரும் அவளை உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அந்த சத்தத்தால் நிகழ்காலத்திற்கு வந்த தினேஷ் “இதெல்லாம் நான் எதிர்பார்த்தது தான். உனக்கு நல்ல பியூச்சர் இருக்கு யாழினி. நீ என்ன பண்ணாலும் அது பெஸ்ட்டா தான் இருக்கும்.” என்று நினைத்து எழுந்து சென்று அவளை பாராட்டுவதற்காக அவளுடன் கை குலுக்கிவிட்டு “சூப்பர் யாழினி. நீங்க யாருன்னு அகைன் அண்ட் அகைன் எங்க எல்லாருக்கும் ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. உங்க கிட்ட இருந்து இன்னும் நான் நிறைய எதிர்பார்க்கிறேன்.” என்று மனதார பெருமையுடன் சொன்னான்.
இதுவரை தினேஷ் யாரையும் இப்படி பாராட்டியது இல்லை என்பதால், அனைவரும் அந்த காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். சங்கரும் தன் மனைவி அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒளிவிடும் நட்சத்திரமாக மேலே இருப்பதைக் கண்டு ரசித்தான். ஆனால் சுவாதி தான் “யார் கிட்ட கொடுத்தாலும் இந்த பிரசன்டேஷன நல்லா தான் பண்ணி இருப்பாங்க. இதுல நாங்க எல்லாரும் சேர்ந்து தான் வர்க் பண்ணி இருக்கோம். ஆனா அவ அதை தனியா பிரசண்ட் பண்ணிட்டா. அதுக்காக எல்லா கிரெடிட்சும் அவளுக்கு தானா?
அப்ப அவ கூட சேர்ந்து வேலை பார்த்து எல்லாத்தையும் ரெடி பண்ணி கொடுத்த நாங்க எல்லாம் இவன் கண்ணுக்கு எப்படி தெரியுறோம்? அது சரி.. எப்ப பாத்தாலும் இவன் எதுக்கு முக்கியமான விஷயங்கள் எல்லாத்தையும் யாழினியவே பண்ண சொல்றான்? அப்போ எங்களுக்கு எல்லாம் அதை பண்ற அளவுக்கு அறிவு இல்லையா? இதுக்கு முன்னாடி எல்லாம் சரி போனா போகட்டும்னு நான் எதையும் கேட்காம விட்டுட்டேன். ஆனா எங்களுக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் கூட, இவன் இப்படியே தான் இருக்கான்.
இன்னைக்கு இதை விடக் கூடாது சுவாதி. நம்மளை இவன் பாராட்டலைனா கூட பரவால்ல. எப்ப பாத்தாலும் குறை சொல்லி அவமானப்படுத்திக் கொண்டே இருக்கான். இப்ப இவன் யாழினி பெஸ்ட்ன்னு சொல்றது கூட எனக்கு என்னமோ இவன் என்னை வேஸ்ட்ன்னு சொல்லாம சொல்ற மாதிரி தான் இருக்கு. இவன் மனசுல என்ன தான் இருக்குன்னு இன்னைக்கு பேசி தெரிஞ்சுக்கணும்.” என்று நினைத்து தினேஷ் யாழினி இருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள்.
மீட்டிங் முடியவும் லஞ்ச் டைம் ஸ்டார்ட் ஆகவும். கரெக்டாக இருந்தது. அதனால் அனைவரும் அங்கே இருந்து நேராக கேண்டீன் ஏரியாவிற்கு சென்றுவிட, வாடிய முகத்துடன் அவர்களை பின் தொடர்ந்து சென்றாள் சுவாதி. தினேஷ் எப்போதும் அவனது கேபினில் தனியாகத் தான் சாப்பிடுவான். அதனால் இப்போதும் அவன் அங்கே சென்று விட, சங்கர், யாழினி, சுவாதி மூவரும் சாப்பிட டேபிளில் அமர்ந்தார்கள். தனது லஞ்ச் பாக்ஸை திறந்த யாழினி அதில் இருந்த சாதத்தை ஒரு வாய் வைத்த பிறகு “வாவ்.. சாம்பார் நல்லா இருக்கே.. என்ன டா அதிசயமா நல்லா சமைச்சிருக்க?” என்று அதை மென்றபடி கேட்க, “சுவாதி தான் சாம்பார் வெச்சா. நான் சும்மா பக்கத்துல இருந்து எல்லாத்தையும் பாத்துட்டேன். அவ்ளோ தான். ஆனா இருந்தாலும் இத்தனை நாள் என்னவோ நான் கேவலமா சமைச்ச மாதிரி ஒரேடியா பேசுற பாத்தியா நீ?” என்று அவளிடம் கேட்ட சங்கர் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
“ஏய்.. வழக்கமா வைக்கிறத விட இன்னிக்கி நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன்.. ட்டங்கு ஸ்லிப் ஆகி அப்படி சொல்லிட்டேன் பேபி. இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா? நமக்கே லஞ்ச் டைம் கொஞ்ச நேரம் தாண்டா. சீக்கிரம் சாப்பிடு. வேலை இருக்கு.” என்று கொஞ்சலாக சொன்ன யாழினி சங்கரின் தாடையை பிடித்து அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி அவனுக்கு ஊட்டி விட்டாள். அவள் கொடுத்த உணவை தன் வாயில் வாங்கிக் கொண்ட சங்கர் “எனக்கு உன் மேல கோபமே வராதுடி லூசு. இருந்தாலும் நான் சும்மா கோபப்பட்டா நீ என்ன பண்றன்னு பார்க்கலாம்னு நினைச்சேன். பரவால்ல மாமா மேல உனக்கு ஏதோ பாசம் இருக்கு. கோச்சிக்கிட்டு சாப்பிடாம இருந்தா ஊட்டி எல்லாம் விடுற..!! I like this change.” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.
இப்படியே தங்களுக்குள் பேசியபடி அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, வெறுமனே தனது வயிற்று பசிக்காக விருப்பமே இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சுவாதிக்கு அவர்கள் இருவரையும் பார்க்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இருப்பினும் யாழினி அவளது தோழி என்பதாலும் அவள் வாழ்வில் சந்தித்த அதனை துயரங்களையும் அவள் அருகில் இருந்து இவள் பார்த்திருக்கிறாள் என்பதாலும் “என்னமோ யாழினி நீ முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்டதுனாலையோ என்னமோ அந்த கடவுள் உனக்கு நல்ல லைஃப் கொடுத்திருக்கிறாரு. நீயும் சங்கரும் இப்படியே எப்பயும் சந்தோஷமா இருக்கணும். அட்லீஸ்ட் நீயாவது நல்லா இரு.” என்று நினைத்துக் கொண்டாள்.
சாப்பிட்டுக் கொண்டு இருந்த யாழினி “ம்ம்.. எனக்கு போதும். என்னமோ தெரியல.. ட்ராவல் பண்ணிட்டு இருந்தனால வாமிட் வர்ற மாதிரி இருக்கு. நீங்க பொறுமையா சாப்பிடுங்க. எனக்கு பெண்டிங் ஒர்க் இருக்கு. அதை முடிக்கிற வரைக்கும் எனக்கு சாப்பாடு கூட இறங்காது போல. நான் போறேன் பாய்.” என்று சொல்லிவிட்டு எழுந்து கை கழுவி விட்டு அங்கே இருந்து சென்று விட்டாள். இப்போது ஷங்கரும் ஸ்வாதியும் தனியாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஓரக் கண்ணால் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாதி “யாழினி கழுத்துல ஒரு நாள் கூட நீங்க கட்டுன தாலி இருந்து நான் பார்த்ததில்லை. ஆபீஸ்ல பிரச்சனை சோ போடாம இருக்கான்னு வச்சுக்கலாம்.
ஆனா, வீட்ல கூட அவ போடறது இல்லையே.. நீங்க அத பத்தி எதுவும் கேட்கலையா? யாழினிக்கு அவளுக்கு கல்யாணம் ஆனதை வெளிய சொல்றதுக்கு விருப்பம் இல்லாததுனால நீங்களும் யாருக்கும் தெரிய வேண்டாம்னு நினைச்சு போனா போகட்டும்னு விட்டுட்டீங்களா?” என்று கேட்டாள்.
அவள் கழுத்தில் தாலி இல்லாததை கவனித்து விட்டு தனக்குள் சிரித்து கொண்ட சங்கர் “என்ன ஆப்டர் மேரேஜ் தாலி மேட்டர்ல உனக்கும் தினேஷுக்கும் பிரச்சனையா?” என்று சரியாக கேட்க, அவளுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. “எப்படி நான் எதுவுமே சொல்லாம கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க?” என்று உடனே சுவாதி கேட்க, “தினேஷ் அப்படியே யாழினி மாதிரி. ஆண்ட் நீ என்ன மாதிரி. சோ யாழினி எப்படி யோசிக்கிறாளோ தினேஷும் அப்படித்தானே யோசிப்பாரு! உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜுன்னு நீ சொல்லும்போதே, உங்களுக்குள்ள செட்டாகுமானு நான் நெனச்சேன். பாத்தா கல்யாணம் ஆகி ரெண்டு நாள் கூட ஆகல.. அதுக்குள்ள சண்டை வந்துடுச்சு. காலைல உன் ஃபேஸ பார்த்தப்பவே உங்களுக்குள்ள பிரச்சனைன்னு புரிஞ்சது. இருந்தாலும் நீயா சொல்லாம எதுவும் நான் பேச கூடாதுன்னு அமைதியா இருந்துட்டேன்.” என்றான் ஷங்கர்.
“இவர் என்ன இந்த அளவுக்கு புரிஞ்சு வச்சிருக்காரா?” என்று யோசித்த சுவாதிக்கு “இவர் சொல்றது கரெக்டு தான். நானும் இவரும் ஒரே மாதிரி. அதான் இவர் பண்றது எல்லாமே எனக்கு புடிச்ச மாதிரி இருக்கு.” என்று நினைத்து கலங்கிய கண்களுடன் “எனக்கு என்ன சொல்றதுனே தெரியல சங்கர். நான் தினேஷ் தான் என் ஹஸ்பண்ட்ன்னு தெரிஞ்ச உடனே ஏதோ ஒரு ஆசைல ஆர்வக்கோளாறுல அவர் மேல ஃபீலிங்ஸ டெவலப் பண்ணிக்கிட்டேன். எங்க மேரேஜ்க்கு முன்னாடி கிடைச்ச கொஞ்ச கேப்லயும் ஆசையா அவரை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
அவரும் என்னை லவ் பண்றதா தான் சொல்றாரு. பட் அவர் பண்ற சில விஷயத்தை எல்லாம் பார்க்கும்போது எனக்கு அப்படி தோணல. அவரு என் கிட்ட ஆபீஸ்க்கு வரும்போது தாலியை மறைச்சுட்டு வான்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, நானே ஏதாவது பண்ணி அதை மறைச்சிருப்பேன். ஆனா அதுக்கெல்லாம் கொஞ்சம் கூட டைம் கொடுக்காம என் கழுத்துல இருந்த தாலிய அவரே கழட்டி கீழ போட்டுட்டாரு. அத என்னால ஏத்துக்கவே முடியல. ஆனா அதை அவரால எப்படி செய்ய முடிந்ததுன்னு எனக்கு இப்ப வரைக்கும் புரிய மாட்டேங்குது.” என்று துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னாள் ஸ்வாதி.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-26
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-26
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.